சென்னை விமான நிலைய விரிவாக்கம்!
சென்னை விமான நிலைய விரிவாக்கம் பணிக்கு சுமார் 151 ஏக்கர் நிலத்தை விமான போக்குவரத்து ஆணையம் கையகப்படுத்த உள்ளது. கொளப்பாக்கம், மணப்பாக்கம், செயின்ட் தாமஸ் மவுண்ட், கவுல் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து ஆணைய அதிகாரி கூறியுள்ளார். கையகப்படுத்தும் பகுதிகளில் விமான நிறுத்துமிடங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், தரை இறங்கும் இடத்தை உணர்த்தும் ஒளி விமிகள், வாகன நிறுத்தும் பாதைகள், வடிகால் வசதிகள் உள்ளிட்டவை உருவாக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
இதற்கான நிலத்தை ஒதுக்கும் பணி மாநில அரசிடம் கேட்டுள்ளதாகவும், இன்னும் ஒருசில மாதங்களில் நிலம் கிடைத்தவுடன் கட்டுமான பணி தொடங்கும் எனவும் அதிகாரி தெரிவித்துள்ளார். பெரும்பாலும் அரசு நிலங்களையை கையகப்படுத்த உள்ளதாகவும், இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாதிகள் அதிகளவில் பாதிக்கபட மாட்டார்கள் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
Proposed expansion:
இணைய செய்திகள்