Jump to content

நாமெல்லாம் நல்ல மனிதர்களே..!


Recommended Posts

நாமெல்லாம் நல்ல மனிதர்களே..!

நக்கலும் நளினமுமல்ல

நாள் நடப்புச்சொல்கின்றேன்

நாமெல்லாம் நல்ல மனிதர்களே..!

முட்கம்பி வேலிகளில்

ஊஞ்சலிடும் முல்லைகள்

ரிப்பன்களோடு சேர்ந்து

நெய்துவிட்ட தாவணியோடு

சில்வண்டு இரையும்

இசையில்

மூன்று நாள் உணவை இரைமீட்கும்

கட்டுண்ட கால்நடைகளாய்

கனவுகள் தொலைத்து...

tamils.jpg

தலைப்பிள்ளை தொலைத்து

தாரமும் தொலைத்து

தலையணை தொலைத்து

உறக்கமும் தொலைத்து

உண்ணாதுறங்கும் உயிரற்ற உயிர்நாடிகள்..

ஆறு பேருக்கு அரைக்கொத்து அவியல்

அதில்தான் மூன்று வேளை பங்கு

மிஞ்சினால் அடுத்தநாள் பழங்கஞ்சி

பழகிப்போச்சு இது ரொம்ப நாளா..

தொழில் இன்று தொழில் தேடல்

கனவின்று கனவுகாண உறக்கம்

நனவின்று உசிராச்சும் நிலைச்சிடுச்சே

உணவின்று பிள்ளைங்களுக்கு கொடுத்து மிஞ்சினால்

இன்றைய சாதனை ஓடுபோட வழியில்ல ஆனா

தலா ரெண்டு ஒட்டு போட்டாச்சு

ஒய்யாரப்பேச்சுகள் தான் ஒரு பயனும் கிடைச்சதாயில்ல.

ஆனை விலை கேட்ட நாம வெத்தில விலை பேசுறம்

sri-lanka-tamil-camps.jpg

கொழும்பு பயணம்

கோடைகால விடுமுறைக்கல்ல

கொள்ளிவைக்க பெத்த புள்ள கம்பிக்கு அந்தப்பக்கம்

உசிரோட இருக்கான்னு எட்டி பார்க்க

அயலுக்கும் உறவுக்கும்

அண்ணனுக்கும் அத்தைக்கும்

மாமனுக்கும் மச்சினனுக்கும்

ஒன்றுவிட்ட அண்ணைமயனுக்கும்

ஒரே நாளில் திவசப்படையல்..

ஏதுண்டு இவர்களுக்கு அதனால்தான்

ஏதிலார் இவர் அவர் நாட்டிலேயே.!

இத்துணையும் அங்கு நடக்க

இங்கு மானாட மயிலாட

மங்கை மாருதி போலாட

கொழும்பு நகர் விடுதிகளில் களியாட்டம்

அத்தனையும் உளுந்து வித்த அப்பன் காசில்

யாழுக்கு பதினோருமுறை படையெடுப்பு

கூடவே நோலிமிட் உடைஎடுப்பு

மயில் நோட்டு மலிஞ்சு போச்சு

மனுசர் மனம் மெலிஞ்சு போச்சு

வயிற்றுப்பசிக்கு ஒரு வழி இல்லை

பலர்க்கு வாய்மொழிக்கு முன்னூறு கோடியில் ஆராய்ச்சி விழா.

சிந்தனைகள் பலிக்குதாம் அந்தப்பக்கம்

நிந்தனைகள் மட்டும் திணிக்குதாம் இந்தப்பக்கம்.

இத்தனையும் செய்துவிட்ட,

செய்யக்கண்டுவிட்ட நாம் நல்ல மனிதர்களே..

என்றும் நல்ல மனிதர்களே..

இருப்பம் இப்படியே...!

-Ashwin win (28-08-2010)-

Link to comment
Share on other sites

பாராட்டுகள்..

Link to comment
Share on other sites

பாராட்டுகள்..

இது என்னுடைய கவிதை அல்ல. Ashwin win இனது. கீழே பெயர் குறிபிட்டுள்ளேன். பாராட்டுகள் Ashwin win க்கு போய் சேரட்டும்.

Link to comment
Share on other sites

இது என்னுடைய கவிதை அல்ல. Ashwin win இனது. கீழே பெயர் குறிபிட்டுள்ளேன். பாராட்டுகள் Ashwin win க்கு போய் சேரட்டும்.

அப்படியே ஆகட்டும் காதல் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா பாலைவனத்திலும், ஒரு நாள் மழை வரும், என்பது போல நம்பிக்கையைத் தவிர வேறெதுவும் எம்மிடம் இல்லை!

கானல் நீரைக் கூடக் கடும் மழையாகக் காட்டுகின்றன, எம்முள் வாழும் புல்லுருவிகள்!

ஆனாலும், வானம் கருக்கட்டுகின்றது, காதல்!

இணைப்புக்கு நன்றிகள்!

Link to comment
Share on other sites

சகாரா பாலைவனத்திலும், ஒரு நாள் மழை வரும், என்பது போல நம்பிக்கையைத் தவிர வேறெதுவும் எம்மிடம் இல்லை!

கானல் நீரைக் கூடக் கடும் மழையாகக் காட்டுகின்றன, எம்முள் வாழும் புல்லுருவிகள்!

ஆனாலும், வானம் கருக்கட்டுகின்றது, காதல்!

இணைப்புக்கு நன்றிகள்!

நன்றி உங்கள் கருத்துக்கு.

நம்பிக்கை நிறைவேற பல நாட்செல்லும் - அதற்குள்

முட்கம்பி வேலிக்குள் இருப்பவர்களின் வாழ்க்கை முடிந்து விடும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.