Jump to content

12வருடம் குழந்தைகளைப் பிரிந்து சிறையில் வாடும் இந்துமத குருவான தாயும் தந்தையும் கண்ணீர் குரல்


Recommended Posts

12வருடம் குழந்தைகளைப் பிரிந்து சிறையில் வாடும் இந்துமத குருவான தாயும் தந்தையும் கண்ணீர் குரல்

12வருடம் குழந்தைகளைப் பிரிந்து சிறையில் வாடும் இந்துமத குருவான தாயும் தந்தையும் கண்ணீர் குரல்

கடந்த 12வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரகுபதி சர்மாவும்(புதியமகசீன்சிறை) அவரது மனைவியும்(வெலிக்கடை பெண்கள் பிரிவு) சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இவ்விருவரும் 09.02.2000ம் ஆண்டு திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா அவர்கள் மீதான குண்டுத்தாக்குதலின் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டனர். 4ம்,6ம் மாடிகள் என இலங்கையின் கொடும் சித்திரவதை கூடங்கள் யாவிலும் வைத்து மிகவும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இவர்களுக்கு 3பிள்ளைகள். மூத்தமகன் இந்தியாவில் திருமணம் முடித்து வாழ்கிறார். ஆயினும் எவ்வித உதவிகளும் செய்ய முடியாத நிலமை அந்த மகனுக்கு. பெற்றோர்களை பயங்கரவாத தடுப்புச் சட்டம் சிறையில் அடைக்க மற்றைய 2பி;ள்ளைகளும் உறவினர்கள் யாரும் பொறுப்பேற்காத நிலமையில் மட்டக்களப்பு இராமகிருஸ்ணமிஷனில் வளர்ந்து வருகின்றனர். தாயும் தந்தையும் 2000ம் ஆண்டு கைது செய்யப்பட்ட நேரம் பெண்பிள்ளைக்கு 7வயது ஆண்பிள்ளைக்கு 5வயது. தற்போது அந்தப்பிள்ளைகள் உயர்தரத்தில் கற்றுக் கொண்டிருக்கின்றனர். குழந்தைப்பருவத்தில் கிடைக்க வேண்டிய தாயன்பும் தந்தையின் அன்பும் பெறாத துரதிஸ்டக் குழந்தைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சின்னஞ்சிறு வயதில் பெற்றோரைப் பிரிதல் என்பதன் வலியை அந்தக் குழந்தைகள் இன்றுவரையும் அனுபவித்து வருகின்றனர். தமது குழந்தைகள் சிறுவர் இல்லத்தில் வளர்வதனை உயிருடன் வாழ்கிற பெற்றோருக்கு எவ்வளவு வலியைத் தரும் என்பதனை உலகுவாழ் அம்மாக்களும் அப்பாக்களும் நிச்சயம் புரிந்து கொள்வார்கள். தங்கள் பிள்ளைகளைப் பார்ப்பது கூட 6மாதத்திற்கு ஒருமுறைதான். தற்போதைய நவீனங்களைத் தங்களது பிள்ளைகளும் அனுபவிக்க வேண்டுமென்ற அவா எங்கள் எல்லோரையும் போல இந்தப் பெற்றோருக்கும் உண்டு. ஆயினும் தொடர்ந்து சிறையில் இவர்கள் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது.

இரகுபதி சர்மாவின் மனைவி வசந்தி சர்மா தொடர் சித்திரவதைகள் உடற்தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு மனநிலை பாதிப்புற்று மருந்தோடு நோயாளியாக வெலிக்கடை பெண்கள் பிரிவு சிறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். வசந்தி சர்மா அண்மையில் சத்திரசிகிச்கையொன்று மேற்கொள்ளப்பட்ட நிலமையில் மிகுந்த துயரத்தோடு வாழ்கிறார்.

இவர்கள் இந்துமதகுருவாக இருப்பதனால் இவர்களால் மாமிசத்தையோ அல்லது ஒவ்வாத உணவுகளையோ உண்ண முடியாது தவிக்கின்றனர். சிறைச்சாலை உணவான சோறு சம்பல் அல்லது எப்போதாவது கிடைக்கிற மரக்கறிகளையுமே உண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

சிறையில் உடல் உளம் யாவும் பாதிப்புற்று தங்கள் விடுதலையின் நாளை எண்ணிக் கொண்டிருக்கிற இந்தத் தம்பதியினர் தமக்கான உலர் உணவுகள் தங்கள் அடிப்படைத் தேவைகளாக சவர்க்காரம் , பற்பசை போன்ற தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு புலம்பெயர் உறவுகளிடம் பண உதவியினை வேண்டி நேசக்கரத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கருணையுள்ளம் கொண்டவர்களே….!

இந்தத்தம்பதிகளுக்கு மாதம் ஆளுக்கு 5ஆயிரம் ரூபா உதவியினை வழங்கி இவர்களுக்கான சிறு நிம்மதியைக் கொடுங்கள் என நேசக்கரம் எல்லாரையும் வேண்டி நிற்கிறது.

1) பூசகராகத் தமது கடமைகளோடு நிற்காமல் ஏன் இந்தச் சிறைவாழ்வை இவர்கள் அனுபவிக்கிறார்கள் ?

2) 7வயதிலும் 5வயதிலும் இருந்த தங்கள் பிஞ்சுக் குழந்தைகளைப் பிரிந்தது யாருக்காக ?

3) மனநலம் பாதிக்கப்பட்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டும் சிறையில் ஏன் இவர்கள் தண்டிக்கப்பட்டுக்

கொண்டிருக்கிறார்கள் ?

புலத்து தமிழ் உறவுகளே இந்தத் தாய்க்கும் தந்தைக்கும் உங்கள் நேசக்கரங்களைக் கொடுத்து உதவுங்கள்.

உதவ விரும்புவோர் நேரடியாகவே உங்கள் உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும்.

ரகுபதி சர்மா அவர்கள் எழுதிய கண்ணீர் கடிதம்:-

1-1.jpg

2.jpg

3-1.jpg

4-1.jpg

இவர்களுக்கு நேசக்கரம் கொடுக்க தொடர்புகளுக்கு :-

உதவ விரும்புவோர் நேரடியாகவே தொடர்பு கொண்டு உங்கள் உதவியை வழங்கலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் :-

விபரங்களைப் பெற்றுக் கொள்ள :-

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

Link to comment
Share on other sites

7 வருடங்களிற்கு முன்னர் ஜயரம்மா மனநிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட காலங்களில் அவரை வெளியில் விடுவித்திருக்கலாம் ஆனால் அன்று அவரிற்கு யாரும் உதவ முன்வரவில்லை. :(

Link to comment
Share on other sites

7 வருடங்களிற்கு முன்னர் ஜயரம்மா மனநிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட காலங்களில் அவரை வெளியில் விடுவித்திருக்கலாம் ஆனால் அன்று அவரிற்கு யாரும் உதவ முன்வரவில்லை. :(

இப்போது 12வருடங்கள் கழிந்த நிலமையில் மிகுந்து உடற்தாக்கங்களுடன் இருவரும் அவதிப்படுகிறார்கள். சட்ட உதவிக்கும் யாரும் உதவியில்லை. மாந்த அடிப்படைத் தேவைகளையேனும் பூர்த்தி செய்யக் கேட்டு இறஞ்சுகிறார்கள். இவ்வுதவியையேனும் செய்தால் அது பேருதவியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

உதவி பெற்ற ரகுபதி சர்மாவின் நன்றிகள்

12வருடகாலமமாக சிறையில் அவலப்படுகிற ரகுபதி சர்மாவும் அவரது மனைவிக்குமான மாதாந்த உதவியை நேசக்கரம் மூலம் உதவி கோரியிருந்தனர். அவர்களது வேண்டுதலையேற்று பெயர் குறிப்பிட விரும்பாத உறவு ஒருவர் 350€ மேலும் பிரித்தானியாவிலிருந்து நவரட்ணம் நரேந்திரன் என்பவர் 50€ உதவியிருந்தனர். மொத்தமாக இவ்விருவரது உதவியும் இலங்கை ரூபா 64500ரூபா கிடைத்திருந்தது. இவ்வுதவியிலிருந்து ரகுபதி சர்மா அவர்களுக்கு 6மாதங்களுக்கான உதவியாக 60ஆயிரம் ரூபாவினை வழங்கியுள்ளோம். மீதி 4500ரூபாவினையும் ஜனகன் என்ற கைதியின் குழந்தையின் 3மாதங்களுக்கான கல்விச்செலவிற்கும் வழங்கியுள்ளோம்.

ஆறுமாதங்களின் பின்னர் ரகுபதி சர்மா அவர்களது குடும்பத்திற்கான தொடர்ந்த உதவியினை பிரித்தானியாவிலிருந்து பூரணி அவர்கள் உதவ முன்வந்துள்ளார். உதவியவர்களுக்கும் தொடர்ந்து உதவவுள்ளவர்களுக்கும் நேசக்கரம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

ரகுபதி சர்மா அவர்கள் எழுதிய நன்றிக்கடிதம் :-

Sharma-hindu-priest-1.jpg

Sharma-hindu-priest-2.jpg

Sharma-hindu-priest-3.jpg

Sharma-hindu-priest-4.jpg

தொடர்புபட்ட செய்தி இணைப்பு :-

http://tamilnews24.com/nesakkaram/ta/?p=1415

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பூரணி றொகானுக்கு ரகுபதி சர்மாவின் நன்றி

மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரகுபதி சர்மா அவர்களுக்கு பிரித்தானியாவிலிருந்து திரு திருமதி. றொகான் பூரணி குடும்பம் முன்வந்து வழங்கிய உதவிக்கு ருகுபதி சர்மா எழுதிய நன்றிக்கடிதம். திரு.திருமதி. ரகுபதி சர்மா குடும்பத்திற்கு தொடர்ந்து உதவ முன்வந்த பூரணிக்கும் றொகனுக்கும் எங்கள் இதயம் நிறைந்த நன்றிகள்.

Sharma-to-poorani-letter-1.jpg

Sharma-to-poorani-letter-2.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
    • டொனால்ட் ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில்  மிக  கவனமாக இருக்கின்றார்கள். அதற்கு எந்த விலையும் கொடுக்க தயாராக  எதிர் தரப்பினர் இருக்கின்றார்கள்.
    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.