Jump to content

என் மகன் நல்லவன்


Recommended Posts

முதியோர் இல்லத்து முதியவரின் முற்றிய வலிகள்...!!!

தவமிருந்துதான் பெற்றோம்

உன்னை,

தடுமாறி வாழ்கை நடத்தியபோதும்

தனித்தன்மையாய் வளர்த்தோம்,

உன் எச்சில் பட்ட

என் கண்ணங்கள்

இன்னும் குளிருதாடா..!மகனே...

உன் மழலை புன்னகையை

பிச்சை கேட்டு

பல நாட்கள் உன்னிடம்

மண்டியிட்டிருக்கிறேன் ,

என் செல்ல மகனே...,

உன் பால் வாசத்தில்

என் பாசம் உணர்ந்தேன்,

நீ கடித்து காயபடுத்திய

என் கன்னத்து தழும்பை

இன்னமும் முத்தமிடுகிறாள்

உன் அம்மா...!

என் கிழிந்த வேட்டியை

மறைத்து,மடித்து கட்டி

வேட்டி வாங்கும்

பணத்தில் வாங்கியதுதான்

உன் வெள்ளி பாலாடை...!

என் அன்பு மகனே..!

முதல் முறை

நீ பள்ளி செல்லும்போது

உன்னை மருத்துவனாகதான்

பார்த்தேன் இந்த பாவி..,

கல்லூரி செல்லும்போது

கர்வத்தோடு பார்த்தேன்...,

மணக்கோலத்தில் உன்னை

பார்த்தபோதுதான்,

உயிருடன் மோட்சமான

முதல் மனிதனானேன்..,

என் கடமை முடிந்தது

என் அன்பு மகனே...!

ஓர் இரவு,

வீட்டில் படுத்துவிட்டு

விழித்து பார்த்தால்,

நானும் உன் தாயும்

கிடந்தது

"முதியோர் இல்ல" வாசலில்...,

பேர பிள்ளைகள்

உதைக்க காத்திருந்த

மார்பில்,

நீ உதைத்ததெப்படி..?

என் செல்ல மகனே..!

என் மகன் இப்படி ஆனதெப்படி..?

உன் தாய்

கொடுத்த பால்

விஷமானதெப்படி..?

என் மேல் சிந்திய

உன் எச்சில்

அமிலம் ஆனதெப்படி..?

போதும் மகனே போதும்..!

உயிரை கொல்பவன் மட்டும்

கொலைகாரன் அல்ல...

உணர்வை கொல்பவனும்தான்..,

நீ கொலைகாரன் ஆனதெப்படி...?

நீ செய்ததை

என் உடல் தாங்கும்...

என் உள்ளம் தாங்காது..

நான் தாங்குவேன்

உன் தாய்

தாங்கமாட்டாள்...!

பாலூட்டியவளாயிற்றே...!!!

மகனே..!

வாரம் ஒருமுறை

என் பேரப்பிள்ளைகளை

கூட்டி வா..,

இவர்கள்தான் "தாத்தா பாட்டி"என்று

அறிமுகம் செய்,

"தாத்தா பாட்டி சாமிகிட்ட போய்டாங்க",

என்று கூறி எங்களை

உயிரோடு எரிக்காதே...!

எங்கள் நிலை பார்த்து

உன் பிள்ளைகள்

வளர்ந்தால்தான்,

நீ எங்கள் நிலைக்கு

வராமல் இருப்பாய்..!!!

நீ மிகவும் நல்லவன்

என் செல்ல மகனே..!!!

அனாதையாக எங்களை

விட்டுவிடாமல்,

முதியோர் இல்லத்தில்...

சேர்த்தாயே...!!!

நன்றி மகனே

என் மகன் நல்லவன்...!!!

- இளையபாரதி

via face book

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அதற்கு முதற் கட்டத்திலுள்ளவன்.

எனவே நம்பிக்கையே வாழ்க்கை.

கடமையைச்செய்வோம். பதில் காலம் தான் சொல்லணும்.

ஆனால் இந்தக்கவிதையை நான் படிக்க விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப் பட்ட... பிள்ளைகளை வளர்ப்பதை விட...

10 தென்ன மரத்துக்கு, தண்ணீர் விட்டிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப் பட்ட... பிள்ளைகளை வளர்ப்பதை விட...

10 தென்ன மரத்துக்கு, தண்ணீர் விட்டிருக்கலாம்.

அதை எப்படி கண்டு கொள்வது சிறி?

எல்லோரும் பாசத்தோடும் நம்பிக்கையோடும் ஆசையுடனுமே ஊட்டி வளர்க்கின்றனர்.

அதில் ஒன்று இரண்டு இப்படி வருவதற்காக அந்த சந்ததியையே வெறுத்து ஒதுக்கமுடியுமா?

Link to comment
Share on other sites

பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது பெற்றோரின் கடமை. அதேபோல் தமது பெற்றோரை வயதான காலத்தில் கவனித்துக் கொள்வது பிள்ளைகளின் கடமை.

பல பெற்றோர்கள் பிளைகள் தமது கடமையைச் சரியாகச் செய்வார்கள் என்று எதிர்பார்த்து இப்படியாக ஏமாற்றப்படுகின்றனர்.

எதிர்காலத்தில் பொருளாதார ரீதியாக பெற்றோர்கள் தம்மைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதை எப்படி கண்டு கொள்வது சிறி?

எல்லோரும் பாசத்தோடும் நம்பிக்கையோடும் ஆசையுடனுமே ஊட்டி வளர்க்கின்றனர்.

அதில் ஒன்று இரண்டு இப்படி வருவதற்காக அந்த சந்ததியையே வெறுத்து ஒதுக்கமுடியுமா?

பெற்றோரில் தான் குறை சொல்ல, அந்தக் கருத்து எழதப் பட்டது விசுகு.

எனது, முதல் மகன் பிறந்த போது...

அப்பா ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில்...

நீ... இவ்வளவு நாளும், எனக்காகவும்.. உனக்காகவும் வாழ்ந்தாய்.

இனி... நீ.. உனது, இன்பத்தை... துறந்து பேரனுக்காக வாழ்.

அந்த சொல், எனக்கு... மருந்தாக அமைந்தது. :)

Link to comment
Share on other sites

பெற்றோரை உன் தலையில் வைத்து சுமக்க வேண்டாம்

அவர்கள் தங்குவதற்கு உன் வீட்டில் ஒரு குறு அறை கொடு

அவர்கள் பாதம் தழுவி சேவைகள் செய்ய வேண்டாம்

உன் பாதத்தால் அவர்களை எட்டி உதைக்காமல் இரு

பூஜை அறையில் வைத்து பூஜைகள் செய்ய வேண்டாம்

அவர்கள் கல்லறை செல்லும் வரையேனும் அடுத்தவர்--

கால்களில் விழ விடாமல் பார்த்துக்கொள் அது போதும்

கிழிந்த துணிகளில் ஒன்றுகூடவா உன் வீட்டில் இல்லை

உன்னை பெற்ற கடனுக்காய் அவர்கள் மானம் காக்க

அவர்களுக்காய் தனியே ஒரு பானை சோறு வேண்டாம்

உன் வீட்டில் தினமும் கொதிக்கும் உலையில் ஒரு குவளை

அரிசி அதிகம் சேர்.. அதுகூடவா இடக்கூடாது?

படித்ததில் பிடித்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பெற்றோர் கூட மகனைக் குறை சொல்லேல்ல மருமகளைத் தான் குறை சொல்கிறார்கள்...மகனை ஒழுங்காய் வளர்த்தால் அவர் ஏன் மனைவி சொல் கேட்டு பெற்றோரை முதியோர் இல்லம் அனுப்புகிறார்...ஆண்பிள்ளைகளை தாய் கண்ட‌ கட்டுப்பாட்டுக்குள் வைத்து வளர்க்கிறது.எப்பவும் யாரையும் சார்ந்து வளர்ந்த ஆண் திருமணம் முடித்ததும் மனைவியின்ட‌ சொல் கேட்கிறது...ஆண்கள் சுயமாய் முடிவெடுத்தால் ஏன் இந்த பிர‌ச்சனை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுப் பாடாக... மகனை, வளர்த்தாலும்....

தலையணை மந்திரம், எல்லாவற்றையும், புறந்தள்ளி விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது பெற்றோரின் கடமை. அதேபோல் தமது பெற்றோரை வயதான காலத்தில் கவனித்துக் கொள்வது பிள்ளைகளின் கடமை.

பல பெற்றோர்கள் பிளைகள் தமது கடமையைச் சரியாகச் செய்வார்கள் என்று எதிர்பார்த்து இப்படியாக ஏமாற்றப்படுகின்றனர்.

எதிர்காலத்தில் பொருளாதார ரீதியாக பெற்றோர்கள் தம்மைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

கடமையைச் செய் பலனை எதிர்பாராதே ! என்பது போல அவரவர் கடமையை செய்யவேண்டும்.

இணையவன் அண்ணா சொன்னது போல எதிர்காலத்துக்கு தேவையானவற்றை சேமித்து வைத்தால் யாரிலும் தங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை, அதை விட ஒரு வேளை அப்ப பிள்ளைகள் உறவுகள் வந்தாலும் வருவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டுப் பாடாக... மகனை, வளர்த்தாலும்....

தலையணை மந்திரம், எல்லாவற்றையும், புறந்தள்ளி விடும்.

சிறி அண்ணா,

பிள்ளைகளைக்கவனிக்காத,பிள்ளைகள் சொல்வதை கேட்காமல் பணம்பிடுங்கும் இயந்திரமாய் பார்க்கும் பெற்றோர்களை என்ன செய்ய சிறி அண்ணை? :unsure:

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி அபராஜிதன். உணர்ந்து எழுதப்பட்டிருக்கும் வலிகள் மனதினை ரணமாக்குகின்றன. பெற்றவர்களை உதறித்தள்ளி எறிந்துவிட்டு அவன் சந்தோசமாய் வாழலாம் என நினைப்பது, கேவலமான வாழ்க்கையை மட்டுந்தான்... அவனுக்கு விட்டுச்செல்லும்.

எம்மை பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றவர்களை மறப்போமாயின்... எம் வாழ்க்கையே அர்த்தமில்லாத அந்தத்தில்தான் முடியும்! :(

ந்தக் கவிதையை எழுதிய உறவின் பெயரையும் (தெரிந்திருந்தால்) கீழே இணையுங்கள் அபராஜிதன். நன்றி! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணா,

பிள்ளைகளைக்கவனிக்காத,பிள்ளைகள் சொல்வதை கேட்காமல் பணம்பிடுங்கும் இயந்திரமாய் பார்க்கும் பெற்றோர்களை என்ன செய்ய சிறி அண்ணை? :unsure:

இதுவும் உண்மை தான்..

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி அபராஜிதன். உணர்ந்து எழுதப்பட்டிருக்கும் வலிகள் மனதினை ரணமாக்குகின்றன. பெற்றவர்களை உதறித்தள்ளி எறிந்துவிட்டு அவன் சந்தோசமாய் வாழலாம் என நினைப்பது, கேவலமான வாழ்க்கையை மட்டுந்தான்... அவனுக்கு விட்டுச்செல்லும்.

எம்மை பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றவர்களை மறப்போமாயின்... எம் வாழ்க்கையே அர்த்தமில்லாத அந்தத்தில்தான் முடியும்! :(

இன்தக் கவிதையை எழுதிய உறவின் பெயரையும் (தெரிந்திருந்தால்) கீழே இணையுங்கள் அபராஜிதன். நன்றி! :)

மன்னிக்கணும் கவிதை மறந்திட்டன் இணைக்க- இளையபாரதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுப் பாடாக... மகனை, வளர்த்தாலும்....

தலையணை மந்திரம், எல்லாவற்றையும், புறந்தள்ளி விடும்.

சிறி அண்ணா,

பிள்ளைகளைக்கவனிக்காத,பிள்ளைகள் சொல்வதை கேட்காமல் பணம்பிடுங்கும் இயந்திரமாய் பார்க்கும் பெற்றோர்களை என்ன செய்ய சிறி அண்ணை? :unsure:

இது தான்... என்னால், செய்ய முடியும்.

முன்பு, நான் உங்களுடன் வாழ்ந்த போது, பார்க்காத... சாப்பிடாத வாழ்வு இனி.. வாழப் போகின்றீர்கள்? என்று கேளுங்கள் ஜீவா.

எனது வாழ்வுக்கு, அத்திவாரம் போடவும் பணம் தேவை... என்று, சொல்லுங்கள் ஜீவா.

அவர்கள், புரிந்து கொள்வார்கள்.

Link to comment
Share on other sites

பாவம் இந்தத் தந்தை. :(

தனிப்பட்ட முறையில்

கடமையைச் செய் பலனை எதிர்பாராதே.

எனது பெற்றோருக்கு கடமையைச் செய்திருக்கிறேன்.எனது வித்துக்களுக்கான கடமையை ஆசையுடன் செய்கிறேன். யாரிடமும் இருந்து ஒன்றையும் எதிர்பார்க்கவில்லை. சொந்தக் காலிலே நிற்கப் பார்க்கிறேன்.

ஏதும் கிடைத்தால் அது போனஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தான்... என்னால், செய்ய முடியும்.

முன்பு, நான் உங்களுடன் வாழ்ந்த போது, பார்க்காத... சாப்பிடாத வாழ்வு இனி.. வாழப் போகின்றீர்கள்? என்று கேளுங்கள் ஜீவா.

எனது வாழ்வுக்கு, அத்திவாரம் போடவும் பணம் தேவை... என்று, சொல்லுங்கள் ஜீவா.

அவர்கள், புரிந்து கொள்வார்கள்.

நன்றி அண்ணா,

இருந்தும் பணம் பிரச்சனை இல்லை ஆனால் குடும்பத்தில் ஒரு சில முக்கிய முடிவுகள் தனிப்பட,சகோதரங்கள் பற்றி எடுக்கும் போது பிள்ளைகளின் சொல்லை கேட்காது,தவறு என்று பிள்ளைகள் சொல்லியும் கேட்காத பெற்றோரும் இருக்கிறார்கள் தானே?

எல்லாரிலும் எல்லாவிதமாயும் இருக்கிறார்களே அண்ணா?

Link to comment
Share on other sites

வழமையாக நான் இணைப்புக்களுக்கு பச்சை குத்துவதில்லை. ஆனால் இளையபாரதியின் இந்த வரிகளுக்காகவும், கனமான கவிவரிகளை காவி வந்த உங்களுக்காகவும் ஒரு பச்சை! :)

கவிவரிகளை படைத்தவரின் பெயரை இணைத்தமைக்கு மிக்க நன்றி அபராஜிதன்! :)

Link to comment
Share on other sites

நன்றி அண்ணா,

இருந்தும் பணம் பிரச்சனை இல்லை ஆனால் குடும்பத்தில் ஒரு சில முக்கிய முடிவுகள் தனிப்பட,சகோதரங்கள் பற்றி எடுக்கும் போது பிள்ளைகளின் சொல்லை கேட்காது,தவறு என்று பிள்ளைகள் சொல்லியும் கேட்காத பெற்றோரும் இருக்கிறார்கள் தானே?

எல்லாரிலும் எல்லாவிதமாயும் இருக்கிறார்களே அண்ணா?

ஏன் இல்லை? வீட்டுக்கு வீடு வாசல்படி!

பெற்றோர் பிள்ளைகளை பெத்து வளர்த்துவிட்டோம், பிள்ளைகள் எமக்குத் தமது கடமைகளைச் செய்கிறார்கள்/ செய்யவேண்டும் என நினைகிறார்கள் அதே நேரம், ஒரு பிரச்சனைக்கு இந்த எடுங்கோ அல்லது இப்படி செய்தால் எப்படி இருக்கும் என்று நாம் எமது ஆலோசனைகளை முன்வைத்தால் அது தமது தனிப்பட்ட சுதந்திரந்தில் தலையிடுவதாக நினைகிறார்கள் அதனால் அவற்றை கலந்தாலோசிக்கக் கூட முயற்சிப்பதில்லை. அவர்களது பார்வையில் அவர்களுக்கு அது நியாயமாகப்படலாம்... பிள்ளைகளின் பார்வையில் அது அவர்களை தனிமைப்படுத்துவதாகவே நினைக்கத் தோன்றுகிறது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணா,

இருந்தும் பணம் பிரச்சனை இல்லை ஆனால் குடும்பத்தில் ஒரு சில முக்கிய முடிவுகள் தனிப்பட,சகோதரங்கள் பற்றி எடுக்கும் போது பிள்ளைகளின் சொல்லை கேட்காது,தவறு என்று பிள்ளைகள் சொல்லியும் கேட்காத பெற்றோரும் இருக்கிறார்கள் தானே?

எல்லாரிலும் எல்லாவிதமாயும் இருக்கிறார்களே அண்ணா?

சகோதரர்களின் அழுத்தம் ஒன்று இல்லாமல்....

பெற்றோர் தனிப்பட, ஒரு சார்பாக முடிவு எடுக்க மாட்டார்கள்.

அவர்களுக்கு, எங்கோ... ஒரு அழுத்தம், மறைமுகமாக பிரயோகிக்கப் பட்டுள்ளது.

அந்த, நிலையில்... பெற்றோர், மெல்லவும் முடியாமால்... விழுங்கவும் முடியாமல்.. தவிப்பார்கள்.

அது, அவர்களை விரைவில் மரணத்தில்.... தள்ளிவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபராஜிதன், நான் ஒரு சிங்களக் கவிதையை ஆங்கிலத்தில் இணைக்கிறேன்! தவறெனில் மன்னிக்கவும்!

Badagini wela mama giya kala puthuge geta

Manala vii dekak dunnay mallakata

Gando nogando kiyala situni mata

Manalada puthe kiri dunne mama numbata?

ஒரு தாய் தனக்குப் பசியெடுத்த போது, உரிமையுடன் தனது மகன் வீட்டுக்குப் போகின்றாள்.

அப்போது மகன், இரண்டு சுண்டு நெல்லை அளந்து ஒரு உமலில் போட்டுத் தாயிடம் கொடுக்கின்றான்.

அது தாயின் தேவைக்குப் போதாமல் இருந்தது!

அப்போது அவள் ஆதங்கத்தில், தனது மகனிடம் கேட்கிறாள் ' மகனே, நீ சிறு குழந்தையாய் பசியில் அழுத போது, உனக்கு அளந்தா பால் புகட்டினேன்!'

இந்த விதத்தில் தான் இப்போது, பிள்ளைகள் பெற்றோரைப் பார்க்கின்றார்கள்! இணைப்புக்கு நன்றிகள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.