Jump to content

இன்னும் - ஜெயபாலன்


Recommended Posts

இன்னும்

வ.ஐ.ச.ஜெயபாலன்

இயற்க்கையின் மயானமாய் விரியும்

சென்னை நடுகற் காட்டில்

அணில்களின் ஒப்பாரியும்

பெருகிக் கொழுத்த காக்கைகளின் பாடலும்

நிறைகிற மாலைப் பொழுது.

இன்னும் பூந் தென்றல்

பெற்றோல் புகை அமுங்க கமழவது மகிழ்ச்சி..

இன்னும் வங்கக் கடலிருந்து

ஒரு தாய் ஆமை

சென்னையில் கரை எறுவது நம்பிக்கை... .

.

இன்னும் எஞ்சியிருந்த அணில்கள்

காகத்திடம் தங்கள்

கடைசிக் குஞ்சையும் இழக்கும் அச்சத்தில்

ஓலமிட்டுக் கொண்டிருக்கிற நாட்களில்

ஒரு கையாலாகாத கவிஞனாய் தவிக்கிறேன்.

காதல் இழப்புமட்டுமே சோகமல்ல என்பதை உணர்ந்தபடி..

மொட்டைக் கூரைகளில்

சுவர் நசித்த மரங்களில்

குப்பை மேடுகள் வளரும் தெருக்களில்

கோடா கோடிக் கருஞ் சிலந்திகளாய்

நூல் இறங்கி ஊர ஆரம்பிக்கிறது இருள்

கவிஞர்களுக்கு அரசவைகள் திறக்காத

நூற்றாண்டில்

ஒரு கனவிலாவது காணவேண்டும்.

சிட்டுக்குருவியின் வருகையை

Link to comment
Share on other sites

சோகத்தின் வரிகளும் அதற்கு வடித்த உவமையும் அருமை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எஞ்சியிருந்த அணில்கள்

காகத்திடம் தங்கள்

கடைசிக் குஞ்சையும் இழக்கும் அச்சத்தில்

ஓலமிட்டுக் கொண்டிருக்கிற நாட்களில்

ஒரு கையாலாகாத கவிஞனாய் தவிக்கிறேன்.

காதல் இழப்புமட்டுமே சோகமல்ல என்பதை உணர்ந்தபடி..

ஒவ்வொரு காலங்களிலும் ஒவ்வொரு இழப்புக்களின் வலிகள் மனதைப் பிழியும்...இளமைக்காலங்களில் பால்ய காலங்களின் இழப்பு பெரும் சோகமாய் மனதில் வழியும்....முதுமை இளமையைக் காலத்தையும்,பால்ய காலத்தையும் நினைத்து அழும்.."காதல் இழப்புமட்டுமே சோகமல்ல..."உண்மையான வரிகள் கவிஞரே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எஞ்சியிருந்த அணில்கள்

காகத்திடம் தங்கள்

கடைசிக் குஞ்சையும் இழக்கும் அச்சத்தில்

ஓலமிட்டுக் கொண்டிருக்கிற நாட்களில்

ஒரு கையாலாகாத கவிஞனாய் தவிக்கிறேன்.

இயலாமையை "சுரீர்" என்று உறைக்க வைக்கும் வரிகள்..

Link to comment
Share on other sites

காதல் இழப்புமட்டுமே சோகமல்ல என்பதை உணர்ந்தபடி..

ஒரு கனவிலாவது காணவேண்டும்.

சிட்டுக்குருவியின் வருகையை

Link to comment
Share on other sites

ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும், வலிகளையும் இழப்புக்களையும் மட்டுமே.... எம் எழுத்துக்களிலும் வரிக்கவேண்டிய துரதிஷ்டமானவர்களாகவே நாங்கள் இப்பொழுது இருக்கின்றோம்!

நிழல்போல பதியும் எழுத்துக்களை இரசிப்பவர்களுக்கு... நிழலுக்குரிய உயிரின் உண்மையான வலிகளை புரிந்துகொள்ள முடிவதில்லை.

இறுதியாக நான் எழுதிய "வயது வந்தவர்களுக்கு மட்டும்" என்ற கவிதையினை வாசிப்போரிற்கு.... இவன் திண்டு தினவெடுத்த கொழுப்பில எழுதியிருக்கிறான் எண்டு நிறையப்பேருக்கு யோசிக்கத் தோன்றியிருக்கும். ஆனால் "என்ன என்னத்துக்காகவோ" வாழ்க்கையையும் இளமையையும் தொலைத்துக்கொண்டிருக்கும் ஒரு கவிதையின் வலிகளை அதில் புரிந்துகொண்டிருக்க மாட்டார்கள்!

அவரவர்க்கு அவரவரின் வலிகள்...! :( இதுதான் இப்பொழுது எங்கும் உள்ள நிலைமை! ஒருவகையில் சிந்தித்தால்... அது அவர்களது தப்பு இல்லை என்றுகூடச் சொல்லலாம்!

கவிஞரே! எம் வலிகளை உணர்ந்துகொள்ளக்கூடிய பக்குவமானவர்கள் மிகக் குறைவு என்பதனை உணர்ந்தாலும்... எழுதிக்கொண்டே இருங்கள்!

அவர்களும் ஒருநாள் வலிகளை சந்திக்கும்போதுதான் அவரவர்க்கு அது புரியும்!

எல்லோருடைய வாழ்க்கையும் எப்பொழுதும் ஒரே மாதிரியே இருந்துவிடுவதில்லை என்பது நியமான நியதி!

மாறும் சூழ்நிலைகள் எல்லாவற்றையும் மாற்றியமைக்கும்!

வலிகளை ஆழமாக உணர்த்தி நிற்கும் கவிதை!

ஏதோ ஒரு சடுதியான நிகழ்வின் பாதிப்பு.... திரும்பவும், உங்களை வருத்தியிருக்கின்றது என நினைக்கின்றேன்!

தங்களின் மனவுணர்வுகளை கவிதை வரிகளாய் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றிகள் கவிஞரே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வலிகளோடு கவிதை அருமை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.