Jump to content

அஞ்சலி-புஸ்பராஜாவுக்கு!


Recommended Posts

விடிந்தும் விடியாததொரு காலை

அம்மணமாய் கிடக்கும் என் சோதரி

உடலை என் மேலங்கி கொண்டு

போர்த்தி தரையில் அடித்து அழுதாலும்...

உமது இறப்புக்காகவும் இரங்குகிறேன்!

கல்லாகி போகாத மனிதனென்று

நாம்...............ஆனதால்...........

கல்லீரல் புற்று கணக்கு முடித்ததால்

உம்...அற்ப ஆயுள் சோகம் எண்ணி

மனசு - கனக்கிறோம்- ஆயினும்

எலும்பெங்கும் வலிக்கிறது!

அடி காயங்கள் ஆறுவதாய் இல்லை!

இன்றும் உம் தோழர் - எம்

அடிமடியில் தீ மூட்டுவதை

எப்பிடி மன்னிக்க? மறக்க?

வலிக்குது!

தேரோடும் வீதியில்

சேறள்ளி கொட்டிவிட்டு

கோயில் வாசல் அது வருகையில்

விடைபெறுகிறேன் ...

புலிதான் எல்லாமென்றொரு புராணமா?

கேவலம்... நீரல்ல...போய்விட்டீர்

இன்னும் உம் காலடி தொழுபவர்!

விடைபெற்ற மனிதா

நானறியா காலம் நீ

எமதெதிரிக்காய் போர் தொடுத்தாய்

மகிழ்ச்சி- நானறிந்த காலம்

எதிரி கால் கழுவியே வாழ்ந்தாயா?

ஊர் சொல்கிறதே!

உயிர் துடிக்கும் நேரத்தில்

எமக்கு தண்ணீர் கொடுக்காதே

என்று வாழ்ந்தாய் -!

ஓடி போனாய்- உனக்காய் கண்ணீர்

ஒரு மனிதனாய்-!

மானமுள்ள தமிழனாய் அல்ல!!! 8)

Link to comment
Share on other sites

ம்.......பார்த்தாச்சு வர்ணன்.என்னத்த சொல்ல வீட்டில விபரம் கேட்டா நிறைய கதை சொல்லுவினம் போல இருக்கு.இவரைப்போல நிறையப்பேருக்கு புத்தி தெளியாமல் இருக்கு.எப்ப தெளியுமோ...அண்மையில் கூட ஊரில(நீங்கள் வடமராட்சி என்று எங்கோ சொன்னதா ஞாபகம்.) ஒருவரை இவற்ற குறூப் ஆக்கள் சுட்டுப்போட்டினம்.சுட்டவர் தன்ர மனைவி பிள்ளையை பத்திரமா வேற ஊhருக்கு அனுப்பிப்போட்டு மனைவியின் ஊருக்குப்போய் சுட்டிருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வர்ணன் உங்கள் கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

விடிந்தும் விடியாததொரு காலை

அம்மணமாய் கிடக்கும் என் சோதரி

உடலை என் மேலங்கி கொண்டு

போர்த்தி தரையில் அடித்து அழுதாலும்...

உமது இறப்புக்காகவும் இரங்குகிறேன்!

******

வர்ணன் அழகான வரிகள்.. உண்மையை உங்கள் கவி வரியில் தந்து இருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

நானும் ஆனந்த விகடனில் இவரது பேட்டியை வாசித்தேன் ஆனால் யார் என்று எனக்கு தெரியவில்லை பழைய போராளிகளில் ஒருவராக இருப்பார் என நினைத்தேன்

வர்ணண் அண்ணா கவிதையில சொன்ன மாதிரி ஒரு சக மனிதனாக இம்மனிதனின் இறப்புக்கு எனது அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

உயிர் துடிக்கும் நேரத்தில்

எமக்கு தண்ணீர் கொடுக்காதே

என்று வாழ்ந்தாய் -!

ஓடி போனாய்- உனக்காய் கண்ணீர்

ஒரு மனிதனாய்-!

மானமுள்ள தமிழனாய் அல்ல!!!

8) 8) 8) 8)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.