Jump to content

எனது கற்பனை


Recommended Posts

எனது கற்பனை

மலர்ந்தது மலர்ந்தது தமிழ் ஈழம்

தமிழ் மக்களின் மனதில் தனி ஈழம்

முத்தென முத்தெனப் பிறந்தது

அலை கத்திடும் கடலில் பிறக்கவில்லை

செத்திடச் செத்திடப் பல உயிர்கள் அங்கே

சினமாய்ப் பிறந்தது தமிழ் ஈழம்

கொடியினில் கொடியினில் புூக்கவில்லை

கொடுந்தீ என்னும் போரில் பிறந்தது தமிழ் ஈழம்

துணையெனத் துணையென நாம் கண்ட

பல சொந்தங்கள் எமைப் பிரிந்திடவே

பலமாய்ப் பிறந்தது தமிழ் ஈழம்

அரிதென அரிதெனப் பலர் சொன்னார்

அதுவும் இன்று உருவாச்சு

அரியணை அரியணை ஏறியது

ஐ. நா சபையில் அமர்ந்திடவே

துணையெனத் துணையென நாம் கண்ட

துணைகள் மீண்டும் திரும்பாது

துணையெனத் துணையெனத் தானிருப்பாள்

என்றும் என்றும் எம் தமிழ் அன்னை.

உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் பரணி "எனது கற்பனை" அல்ல நியம் நன்றாக இருக்கிறது. மேலும் மேலும் சிறப்பான கவிதைகளை யாழில் படைக்க வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

துணையெனத் துணையென நாம் கண்ட

துணைகள் மீண்டும் திரும்பாது

துணையெனத் துணையெனத் தானிருப்பாள்

என்றும் என்றும் எம் தமிழ் அன்னை.

உங்கள் கற்பனையில் வந்த அனைத்து வரிகளும் நன்றாக இருக்கு பரணி ... வாழ்த்துக்கள் ... தொடர்ந்து எழுதுங்கள்..! :P

Link to comment
Share on other sites

கவிதனும் அனிதாவும் எனக்குத் தந்த ஊக்கத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

நேரம் கிடைக்கும் போது கவிதை எழுத முயற்ச்சிக்கின்றேன்.

உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் ஆமா உங்கட பெயரை தமிழில எப்படி சொல்லுறது. நீங்கள் கற்பனை என்று சொன்னது கற்பனை அல்ல நிஜம். நன்றாக உள்ளது வாழ்த்துக்கள். தொடர்ந்து தாங்க

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் பரணி "எனது கற்பனை" அல்ல நியம் நன்றாக இருக்கிறது. மேலும் மேலும் சிறப்பான கவிதைகளை யாழில் படைக்க வாழ்த்துக்கள்

பரணியா? :roll: :roll: :roll: என்ன குழப்புறீங்க?

புயல் உங்க கற்பனை நல்லா இருக்கு. நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பா கவிதை சுப்பர் இன்னும் தொடர வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

எப்போ வருவாய்.

நான் நானாக இல்லை என உணர்ந்த நான்

ஏனென நினைத்த போது தான்

உன்னைக் கண்ட நினைவும் வந்தது

உன்னைக் கண்ட பின்னே உன்னிடம்

என்னை விட்டு வந்தது என் நினைவில் வந்தது

உன் தாள் தரை தன்னில் பட்டால்

தளும்பு வந்திடும் என்றெண்ணி

தரையில் மலர்கள் விரித்து வைத்தேன்

மலர் மேல் உன் பாதம் பட்டுக் கன்றியதால்

நானே உனக்குத் தரையானேன்

தென்றலை வென்ற உன்னை

தென்றல் தொடவும் விரும்பாத நான்

தென்றலுக்கும் புூக்களால் வேலியிட்டு வைத்தேன்

புூக்களின் நறு மணத்தில் நீ திணறியதால்

காற்றுக்கும் காவல் போட்டு வைத்தேன்

காற்றையும் கடந்து மதியவள் உன்னைத் தொட்டதால்

என் மதி கொண்டு நீ உள்ள நாள் முழுவதும்

அம்மதியையும் அமாவாசையாக்கி வைத்தேன்

முத்தமிழின் மூன்றாம் தமிழே

என் வீடு தேடி நீ எப்போ வருவாய்.

உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்.

Link to comment
Share on other sites

கவிதை நல்லாயிருக்கு புயல் உங்கட முன்றாம் தமிழ் உங்கட வீடுதேடி வர வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2 கவிதையும் நல்லா இருக்கு புயல்....இன்னும் தொடர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.