Jump to content

நேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல்


Recommended Posts

கல்விக்கூடங்கள்.. வேலைத்தளங்கள்.. நேர்முகத்தேர்வு இல்லாமல் உள்ளே நுழைவது என்பது ஏறக்குறைய சாத்தியமில்லாத ஒன்று. :blink: நானும் சிலபல இடங்களுக்கு நேர்முகத்தேர்வுகளுக்குப் போயிருக்கிறேன். unsure.gif அவற்றில் இருந்து நான் பெற்றுக்கொண்ட படிப்பினைகளைப் பகிர்ந்துகொள்வதே இப்பதிவின் நோக்கம். unsure.gif

ஒண்டியாக டீ ஆத்த விடாமல் :D அவ்வப்போது உங்களது மேலான கருத்துக்களையும், உங்கள் நினைவுகளையும் பகிந்து கொள்ளவும். :lol:

பாகம் 1: தோல்வியே வெற்றியின் முதற்படி

எனது முதல் நேர்முகத்தேர்வு அனுபவம் பலகலைக்கழக அனுமதியின்போது நடந்தது. திருச்சியில் மண்டலப் பொறியியல் கல்லூரியில் எனக்கு அனுமதி கிடைத்து நேர்முகத்தேர்வுக்கு வருமாறு அழைத்திருந்தார்கள். நானும் அம்மாவும் போனோம்.

நேர்முகத்தேர்வில் என்ன கேட்பார்கள் என்று ஓரிருவரிடம் விசாரித்துப் பார்த்திருந்தேன். யாரிடமும் சரியான பதில் இருக்கவில்லை. (படிப்பினை 1: சரியான ஆட்களிடம் சகவாசம் வைத்திருக்க வேணும். :lol: )

ஒரு தயார்ப்படுத்தலும் இல்லாமலே நேர்முகத் தேவுக்குப் போனேன். எனதுமுறை வந்தது. உள்ளே சென்றால் அந்த அறையைப் பார்க்கவே எனக்குப் பிரமிப்பாக இருந்தது. ஏற்கனவே ஒரு தயார்ப்படுத்தலும் இல்லை. பிரமிப்பு வேறு.

கல்லூரியின் முதல்வர் சுருக்கமாக ஆங்கிலத்தில் ஆரம்பிக்கிறார். :(

முதல்வர்: கணக்கில் நூறு வாங்கியிருக்கிறீர்கள்.. ஆனால் பௌதீகவியலில் 75 வீதம் தான். உங்களுக்கு இரண்டு பாடத்தில் வாய்ப்புக்கள் தரலாம்.. ஒன்று இலத்திரனியல்/தொடர்பாடல் பொறியியல் கல்வி (Electronics & Communications Engineering). அல்லது பொதுவியல் பொறியியல் கல்வி (Civil Engineering). எது வேணும்?

எனக்கு சிவில் விருப்பமில்லை. காரணம் வேலை கிடைக்காது என்று நான் ஆலோசனை கேட்டவர்கள் பயமுறுத்தி வைத்திருந்தார்கள். இலத்திரனியல் / தொடர்பாடல் என்கிற பாடம் இருப்பதே எனக்கு அப்போதுதான் தெரியும். :lol: குழப்பம் அதிகமாகியது.

நான்: unsure.gifunsure.gifunsure.gif

முதல்வர்: mellow.gif

நான்: நீங்களே ஒன்றை தேர்ந்தெடுத்துச் சொல்லுங்கோ..! unsure.gif

முதல்வர்: சரி. சிவில் செய்யுங்கோ. நன்றி வணக்கம்..

வெளியே வருகிறேன். வேண்டாத பாடத்தைக் குடுத்துவிட்டார்களே என்று ஒரே கவலை. (படிப்பினை 2: வாயுள்ள பிள்ளையே பிழைக்கும். :wub: )

(தொடரும்.)

Link to comment
Share on other sites

  • Replies 346
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு

தொடருங்கள்

பலருக்கு உதவும் :icon_idea:

Link to comment
Share on other sites

நல்ல பதிவு

தொடருங்கள்

பலருக்கு உதவும் :icon_idea:

நன்றிகள் விசுகு அண்ணா.. முதல் போணியே நீங்கள்தான்..! :lol: தொடர்கிறேன்..! :D

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி. தொடருங்கள். ஏனையவர்களும் தங்கள் பயனுள்ள அனுபவங்களை பகிர்வார்கள்.

சிலர் நேர்முக தேர்வு வைப்பவர்களாக இருப்பார்கள். அவர்களும் எழுதட்டும் எவற்றை எதிர்பார்கிறார்கள் என்று.

நன்றி உங்கள் பகிர்வுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு போன வாரம் ஒரு நேர்முகத் தேர்வு நடந்தது. இன்னும் பல நடக்கவுள்ளது!

அதிகம் தயார்படுத்தல் இல்லாமல் போவதுதான் எனது பாணி (முடிந்தால் 1/2 கிளாஸ் சம்பையின் குடித்துவிட்டும் போகலாம்! :icon_mrgreen: )

கேட்கப்பட்ட கேள்வியில் ஒன்று!

பல ஆயிரக்கணக்கானவர்களிடம் தலா ஒருவருக்கு ஒரு நாணயம் வீதம் கொடுக்கப்பட்டு எல்லோரையும் தலை விழும்வரை நாணயத்தை சுழற்றுமாறு கேட்கப்பட்டது. அதாவது ஒருவர் எத்தனை தரம் வேண்டுமென்றாலும் தலை வரும் வரை முயற்சிக்கலாம். எல்லோரும் தலைகளைப் பெற்றபின்னர் சுழற்சிகளின் எண்ணிக்கையில் எத்தனை வீதம் தலை விழுந்திருக்கும்?

பதிலை விளக்கத்துடன் சொல்லவேண்டி வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிலை விளக்கத்துடன் சொல்லவேண்டி வந்தது.

பதில் சரி?

வேலை கிடைத்ததா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதில் சரி?

வேலை கிடைத்ததா???

இன்னும் தெரியாது. கிடைத்தாலும் தூரப் பிரச்சினை காரணமாக ஏற்பதில்லை என்று முடிவெடுத்திருக்கின்றேன்!

Link to comment
Share on other sites

பாகம் 2: தடைக்கல்லும் உனக்கொரு படிக்கட்டு

கல்லூரியில் சேர்ந்தபின் மன உளைச்சல் ஒருபுறம். நான் அந்தக் கல்லூரியில் சேர்ந்தது பலருக்கு நியூசாக இருந்தாலும் சிவில் படிப்பதால் கவலையடைந்த ஊரார் மறுபக்கம். laugh.gif ஒரே குழப்பமாக இருந்தது. இயந்திரவியல் பொறியியல் துறைக்கு (Mechanical Engineering) மாறும்படி எனக்கு ஊராரால் அறிவுறுத்தப்பட்டது. :D

சரி.. அதுக்கு மாறுவோம் என்று ஒரு விண்ணப்பத்தை அனுப்பி வைத்தேன். அதற்குப் பதில்கூட வரவில்லை. :D

முதலாம் ஆண்டு. சோதனைகளின் உச்சம். உயர்பள்ளியில் இருந்து பல்கலைக்கழகக் கல்வி எவ்வளவு மாறுபட்டது என்று விளங்க ஆரம்பித்தது. நான் கேள்விப்படாத விடயங்களையெல்லாம் படிப்பித்துக் கொண்டிருந்தார்கள். நான் அங்கு சேர்ந்ததே மிகவும் தாமதமாகத்தான். சேர்ந்து ஒரு வார இடைவெளியில் ஒரு பரீட்சை. :huh:

நான் தினமும் வீட்டில் இருந்து கல்லூரிக்குச் சென்று வருவேன். ஆனால் கிட்டத்தட்ட 90 வீதமான மாணவர்கள் அங்கே விடுதியில் தங்கிப் படிப்பவர்கள். எந்தப் புத்தகத்தை வாங்கவேண்டும்; சீனியர் மாணர்வர் ஆலோசனை போன்றவை அவர்களுக்குக் கிடைத்தது. நான் வீட்டுக்குப் போவதும் வருவதும், புட்டுச் சாப்பிடுவதும்தான்..! laugh.gif இதற்குள் பகிடிவதை (Ragging) வேறு..! unsure.gif

ஒரு செமஸ்ரரில் இடைவெளிவிட்டு 3 பரீட்சைகள் வைப்பார்கள். முதலாவதில் 25%; இரண்டாவதில் 25%; மூன்றாவதில் 50% இறுதிப் புள்ளிக்கு எடுப்பார்கள். ஏதாவது ஒன்றில் சொதப்பினாலும் இறுதிப் புள்ளிகள் அடிவாங்கிவிடும். unsure.gif

போய் ஒருகிழமையிலேயே தேர்வுகள் வந்ததால் பல ஒற்றை இலக்கப் புள்ளிகள் வாங்கி சாதனை படைத்தேன். :D இதற்குள் சிவில் படிக்கிறோமே என்கிற கவலையும். ஊரார் புராணங்கள் வேறு.

இறுதியாக அந்த செமஸ்ரரில் மூன்று பாடங்களில் தொப்பி.. unsure.gif வாழ்க்கையிலேயே அன்றுதான் படிப்பில் தோல்வியைச் சந்தித்தேன். unsure.gif

இரண்டாவது செமஸ்ரரில் சுதாரித்துக்கொண்டு எல்லாப் பாடங்களிலும் சித்தியடைந்தேன். பழைய மூன்றில் இரண்டை கிளியர் செய்தேன்.. :D ஆனால் மூன்றாவதை கிளியர் செய்ய முடியவில்லை. unsure.gif அந்தத் தேர்வு நடந்த அன்று பேரூந்து வேலைநிறுத்தம் நடந்ததால் போகமுடியவில்லை. :blink: மூன்றாவது செமஸ்ரரில் அதை கிளியர் செய்தேன்..! இன்னொருமுறை தொப்பி வாங்கியிருந்தேன் என்றால் அந்த வருடத்தை இன்னுமொருமுறை படிக்க விட்டிருப்பார்கள். laugh.gif

இரண்டாம் வருடத்தில் இருந்து சிவில் படிப்பு. செங்கல்லு, கருங்கல்லு என்று ஆரம்பித்தார்கள். :D இருக்கிற மன உளைச்சலும் கூடுற மாதிரி இருந்தது. laugh.gif அதற்கடுத்து வந்த பாடங்கள் சிவில் என்றால் என்ன என்கிற விளக்கத்தைத் தந்தது. ஓரளவு ஆர்வமும் வளர்ந்தது.

முதல் வருடப் படிப்பு என்பது பொதுப் பாடப் பரப்பு. எல்லோரும் ஒரே பாடங்களையே கற்பார்கள். அந்தப் புள்ளிகள் படிப்பை முடிக்கும்போது சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது..! ஆகையால் இறுதி வருடத்தை முடிக்கும்போது First Class Honours இல் முடித்தேன்..! :rolleyes: இனிமேல் வேலை தேட வேண்டும். :huh:

(தொடரும்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது இசைக்கலைஞன்,

தொடருங்கள் ...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் எப்போதும் பிரியோசனமான பகுதி...தொடருங்கோ..:)

Link to comment
Share on other sites

பகலவன், கிருபன், அபராஜிதன், தமிழரசு, யாயினி.. நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கும், உற்சாகத்திற்கும்..! :D

Link to comment
Share on other sites

நல்ல தொடர்...தொடருங்கள்....இடைக்கிடை என் நேர்முகத்தேர்வுகள் தொடர்பான சோகக் கதைகளையும் அவுத்து விடுறன்

Link to comment
Share on other sites

நன்றிகள், தொடரை ஆரம்பித்தமைக்கு. மிக்க நன்றிகள் புரியக்கூடிய எளிமையான விதத்தில் நாசூக்காக எழுதுவதற்கு.

பாகம் 1: தோல்வியே வெற்றியின் முதற்படி

வெளியே வருகிறேன். வேண்டாத பாடத்தைக் குடுத்துவிட்டார்களே என்று ஒரே கவலை. (படிப்பினை 2: வாயுள்ள பிள்ளையே பிழைக்கும். :wub: )(தொடரும்.)

தோல்விகளைக்கண்டு துவழக்கூடாது என்பதையும் கிடைத்த சந்தர்ப்பங்களை வைத்து சாதனைகள் படைக்கலாம் என்பதையும் கூறியுள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

சனங்களுக்குப் பிரயோசனமான் தொடர். நன்றாக உள்ளது.

தொடருங்கள். :)

தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா

Link to comment
Share on other sites

எனக்கும் பல நேர் முகத்தேர்வு அனுபவங்கள் இருக்கு ஆனால் எழுதமுடியாது நீங்கள் தொடருங்கள். :lol: :lol:

Link to comment
Share on other sites

பாகம் 2: தடைக்கல்லும் உனக்கொரு படிக்கட்டு

கல்லூரியில் சேர்ந்தபின் மன உளைச்சல் ஒருபுறம். நான் அந்தக் கல்லூரியில் சேர்ந்தது பலருக்கு நியூசாக இருந்தாலும் சிவில் படிப்பதால் கவலையடைந்த ஊரார் மறுபக்கம். laugh.gif ஒரே குழப்பமாக இருந்தது. இயந்திரவியல் பொறியியல் துறைக்கு (Mechanical Engineering) மாறும்படி எனக்கு ஊராரால் அறிவுறுத்தப்பட்டது. :D

சரி.. அதுக்கு மாறுவோம் என்று ஒரு விண்ணப்பத்தை அனுப்பி வைத்தேன். அதற்குப் பதில்கூட வரவில்லை. :D

எமக்கு என்று ஒரு நாடு இல்லாமை, சிங்களத்தால் நடைமுறைப்படுத்தப்படும் தராதரப்படுத்தல் என்பன இவ்வாறான நெருக்கடிகளை எமக்கு தந்தவை. ஆனால் அவையே எமக்கு புதிய கதவுகளை திறந்தும் விட்டன.

இன்றும் பல மேற்குலக நாடுகளில் இரண்டாம் தலைமுறையினர் எதை என்னத்திற்காக உயர்கல்வி படிக்கின்றோம் என்பதில் தேவையான தெளிவில்லாமல் உள்ளனர். பலரும் பெற்றோரின் விருப்பத்திற்காக படிக்க செல்லுகிறார்கள்.

பகுதி பகுதியாக புள்ளிகள் சேர்க்கப்படும் முறை (25%, 25%, 50%) எம்மில் பலருக்கும் உயர்கல்வியிலேயே கிடைத்தது. ஆனால் புலம்பெயர் பிள்ளைகள் இவ்வாறான அணுகுமுறையை பள்ளிக்கூடத்திலேயே பார்க்கின்றபடியால் அவர்களுக்கு அது இலகுவானதாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை பிடிக்கவில்லை என்றாலும் ஒரு வருட இறுதியில் ஆர்வம் ஏற்படக்கூடிய அளவுக்கு இசைவாக்கம் பெற்றுவிட்டீர்கள்..

இதைத்தான் அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்களோ :D

Link to comment
Share on other sites

பாகம் 3: முதல் வேலை எனும் தடுப்புச் சுவர்

பலகலைக்கழகப் படிப்பு முடியும் நேரத்தில் எங்கள் கல்லூரிக்கு பெரிய நிறுவனங்களின் மேலாளர்கள் வருவார்கள்..! அங்கே பல நேர்முகத் தேர்வுகள் நடக்கும். அவற்றுக்கு விண்ணப்பங்கள் போடத் தேவையில்லை. நன்றாகப் படிக்கும் மாணவர்களை அவர்களே அழைத்து நேர்முகத் தேர்வு வைப்பார்கள்.

சிவில் துறையில் அப்போது யாருக்கும் வேலையே கிடைக்காது. இதை சீதனம் அதிகம் வாங்குவதற்கு (டிகிரி மாப்பிளை) உபயோகிப்பார்கள். :D அல்லது படிப்புக்கு சம்பந்தமில்லாத வேறு துறைகளுக்குப் போவார்கள்.

L&T கட்டுமான நிறுவனம் மற்றும் வேறொரு நிறுவனம் சிவில் மாணவர் நேர்முகத் தேர்வுக்கு வந்தார்கள்..! எங்கள் வகுப்பில் முதல் இரண்டு நிலையில் இருந்த மாணவர்களுக்கு வேலை கிடைத்தது. எங்களுக்கெல்லாம் அழைப்பே இல்லை..! laugh.gif

வேலை கிடைத்தவர்களுக்கு ஆரம்பச் சம்பளமே 6000 ரூபாயாம்.. எல்லோரும் வாரைப் பிளந்தார்கள். :D

பல மாணவர்கள் இறுதி வருடத்தில் TOEFL, GRE போன்ற பரீட்சைகளை எழுதி வெற்றிபெற்று அமெரிக்கா செல்லக் காத்திருந்தார்கள். இதில் ஒரு வேலையை வாங்கிய நாதாரியும் காத்திருந்தது. :rolleyes: அதாவது வேலையை வாங்கி ஒரு ஆறு மாதம் செய்துவிட்டு அமெரிக்கா போய்விடுவாராம். இதனால் இன்னும் ஒரு மாணவனுக்கு வாய்ப்பு பறிபோனது. unsure.gif

சரி.. முதல் வேலைக்கு என்ன செய்வது? எனக்கு கட்டட வடிவமைப்பில் நல்ல விருப்பம். வடிவமைப்பு என்றால் Architecture அல்ல. Structural Design.. :rolleyes:

பல்கலைக் கழகப் படிப்பை முடித்துவிட்டு சிலமாதங்கள் TOEFL, GRE படித்தேன்..! :huh: இதற்குள் ஒரு டாவு வேறு. :wub:

TOEFL, GRE இல் சித்தியடைந்திருந்தாலும் பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அப்போது ரொராண்டோ பல்கலைக்கழகத்திற்கு மனு போட்டிருந்தேன். விசாவுக்கு சொத்துக் கணக்கு காட்ட வேண்டும் என்று ஏதோ ஒரு பிரச்சினை முளைத்தது. நாங்கள்தான் வெத்துவேட்டாச்சே.. :D இதற்குள் டாவுப் பிரச்சினை பலமடங்காகி வாழ்க்கை பெரும்பாடாகிவிட்டது.. unsure.gif

வெளிநாட்டு முயற்சியை விட்டுவிட்டு, உள்ளூரில் வேலை தேடலாம் என்று யோசித்தேன். எங்கள் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி ஒரு பொறியியலாளர் அலுவலகம் வைத்திருந்தார். அவரிடம் போனேன். என்னை அவர் ஏற்கனவே பார்த்திருக்கிறார். மண்டலப் பொறியியல் கல்லூரியில் படித்தவன் என்கிற ஒரு தகுதியை வைத்து எனக்கு வேலை தரச் சம்மதித்தார். :rolleyes:

அவரிடம் இன்னொருவரும் வேலை செய்தார். நாங்கள் மூன்றுபேர்தான் கம்பனி.. :D எனக்கு சம்பளம் 1000 ரூபாய்..! laugh.gif

வேலை அனுபவம் முக்கியம் என்பதை அரசல் புரசலாக அறிந்து வைத்திருந்ததால் சம்பளம் குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. திருச்சியில் இருந்து கரூருக்கு ஒவ்வொரு நாளும் போய்வர வேண்டும். unsure.gif ஆறுமணித்தியாலங்கள் பயணத்திலேயே கழியும்.

பள்ளிக்கூடமும், கடைத்தொகுதியும் கட்டப்பட்டுக்கொண்டிருந்தது. வரைபடங்களுக்கேற்ப, கொங்கிரீட் வடிவமைப்பு செய்வது, அத்திவாரங்கள் வடிவமைப்பது எனது வேலை. :D

அந்த வேலையின் முழுப் பொறுப்பும் என்னுடையது. வடிவமைப்பது, பொருட்கள் கொள்வனவு செய்வது, வேலையாட்களுக்கு சம்பளம் கொடுப்பது, கட்டிய கட்டடங்களைப் பரிசோதனை செய்வது என்று பல வேலைகள். இருந்தாலும் பல அனுபவங்களைப் பெற்றுத்தந்தது.

ஒரு ஒன்றரை ஆண்டுகள் வேலை செய்திருப்பேன். ஒரு நாள் நிறுவனத்தின் முதலாளி மெதுவாக ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார். unsure.gif

(தொடரும்.)

Link to comment
Share on other sites

நினைவு இருந்தால் நேர்முக தேர்வில் கேட்க பட்ட கேள்விகளையும் எழுதுங்க இசைகலைஞன்....

இன்னும் இரண்டொரு மாதங்களில் நானும் நேர்முக தேர்வுக்கு போகணும் என்ன கேள்வி கேட்பாங்க எதுமே தெரியா.. :wub: :wub:

Link to comment
Share on other sites

.

அருமை இசை. தொடருங்கள்.. :)

இசையின் எழுத்தை நன்றாக ரசிக்கலாம். ( நம்மட கழுத்தில பிளேடை வைக்காதவரை ) :) :) :)

என்னோடு பல்கலையில் படித்த சகமாணவன் ஒருவன் கணனி மென்பொருள் எழுதும் வேலைக்கு நேர்முகப்பரீட்சைக்குப் போனான்.(பல்கலை முடிந்த கையோடு)

அவர்: கணனி மூலம் என்னென்ன செயலாம் ?

இவன்: கூட்டல் கழித்தல் பெருக்கல் போன்ற கணக்குகளைச் செய்யலாம்.

அவர்: அதை ஒரு கல்குலேட்டர் மூலமே செய்யலாம். கணனி எதற்கு ?

இவன்: :huh: :huh: :huh:

(இவன் நம்ம ஃபிரெண்டு எண்டா யோசிங்க நம்மள பற்றி..)

இவனைப் பகிடிவதையின் போது சீனியர்கள் ஆங்கிலப் பாடல் ஒன்றை பாடும் படி கேட்டார்கள். இவன் பாடிய பாடல்..

ஹூ இஸ் தட் பிளக் ஷீப்.. ? அது யார் ? யார் ?

இன்னொன்று பாடடா என்றார்கள்.

ஐ வோன்டு பி எ ரிச் மேன்..

ஐ வோன்டு பி எ ரிச் மேன்..

Link to comment
Share on other sites

கருத்துக்களுக்கும், ஆதரவிற்கும் நன்றிகள் நிழலி, தப்பிலி, சாத்திரி அண்ணா, தமிழச்சி, வல்வை அக்கா :D

Link to comment
Share on other sites

வேலை அனுபவம் முக்கியம் என்பதை அரசல் புரசலாக அறிந்து வைத்திருந்ததால் சம்பளம் குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. திருச்சியில் இருந்து கரூருக்கு ஒவ்வொரு நாளும் போய்வர வேண்டும்.unsure.gif ஆறுமணித்தியாலங்கள் பயணத்திலேயே கழியும்.

1000 ரூபாய்கள் சம்பளத்திற்காக நிறையவே உழைத்துள்ளீர்கள். அதுவே பின்னால் வந்த வெற்றிகளுக்கு அடிக்கல் :D

பல மாணவர்கள் இறுதி வருடத்தில் TOEFL, GRE போன்ற பரீட்சைகளை எழுதி வெற்றிபெற்று அமெரிக்கா செல்லக் காத்திருந்தார்கள்.

TSE என்ற பேச்சுவாக்கு ஆங்கிலமும் பல வேலைகளுக்கு முக்கியமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கேள்வி கேட்பாங்க எதுமே தெரியா..

எந்தத் துறை என்றாலும் ஒரு சில சாதாரண கேள்விகள் கேட்கப்படும்

1) என்ன வேலை செய்ய விருப்பம்? (விண்ணப்பித்த வேலை என்பது சரியான பதிலாக இருக்கவேண்டிய அவசியமில்லை!)

2) நீண்ட காலத் திட்டம் என்ன?

3) [முன் அனுபவம் இருந்தால்] வேலையில்/வாழ்க்கையில் சந்தித்த சவால் என்ன? அதை எப்படி எதிர்கொண்டீர்கள்?

4) [முன் அனுபவம் இருந்தால்] வேலையில் ஏதாவது தவறு விட்டீர்களா? (இல்லை என்பது பிழையான விடை!)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.