Jump to content

நேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல்


Recommended Posts

கல்விக்கூடங்கள்.. வேலைத்தளங்கள்.. நேர்முகத்தேர்வு இல்லாமல் உள்ளே நுழைவது என்பது ஏறக்குறைய சாத்தியமில்லாத ஒன்று. :blink: நானும் சிலபல இடங்களுக்கு நேர்முகத்தேர்வுகளுக்குப் போயிருக்கிறேன். unsure.gif அவற்றில் இருந்து நான் பெற்றுக்கொண்ட படிப்பினைகளைப் பகிர்ந்துகொள்வதே இப்பதிவின் நோக்கம். unsure.gif

ஒண்டியாக டீ ஆத்த விடாமல் :D அவ்வப்போது உங்களது மேலான கருத்துக்களையும், உங்கள் நினைவுகளையும் பகிந்து கொள்ளவும். :lol:

பாகம் 1: தோல்வியே வெற்றியின் முதற்படி

எனது முதல் நேர்முகத்தேர்வு அனுபவம் பலகலைக்கழக அனுமதியின்போது நடந்தது. திருச்சியில் மண்டலப் பொறியியல் கல்லூரியில் எனக்கு அனுமதி கிடைத்து நேர்முகத்தேர்வுக்கு வருமாறு அழைத்திருந்தார்கள். நானும் அம்மாவும் போனோம்.

நேர்முகத்தேர்வில் என்ன கேட்பார்கள் என்று ஓரிருவரிடம் விசாரித்துப் பார்த்திருந்தேன். யாரிடமும் சரியான பதில் இருக்கவில்லை. (படிப்பினை 1: சரியான ஆட்களிடம் சகவாசம் வைத்திருக்க வேணும். :lol: )

ஒரு தயார்ப்படுத்தலும் இல்லாமலே நேர்முகத் தேவுக்குப் போனேன். எனதுமுறை வந்தது. உள்ளே சென்றால் அந்த அறையைப் பார்க்கவே எனக்குப் பிரமிப்பாக இருந்தது. ஏற்கனவே ஒரு தயார்ப்படுத்தலும் இல்லை. பிரமிப்பு வேறு.

கல்லூரியின் முதல்வர் சுருக்கமாக ஆங்கிலத்தில் ஆரம்பிக்கிறார். :(

முதல்வர்: கணக்கில் நூறு வாங்கியிருக்கிறீர்கள்.. ஆனால் பௌதீகவியலில் 75 வீதம் தான். உங்களுக்கு இரண்டு பாடத்தில் வாய்ப்புக்கள் தரலாம்.. ஒன்று இலத்திரனியல்/தொடர்பாடல் பொறியியல் கல்வி (Electronics & Communications Engineering). அல்லது பொதுவியல் பொறியியல் கல்வி (Civil Engineering). எது வேணும்?

எனக்கு சிவில் விருப்பமில்லை. காரணம் வேலை கிடைக்காது என்று நான் ஆலோசனை கேட்டவர்கள் பயமுறுத்தி வைத்திருந்தார்கள். இலத்திரனியல் / தொடர்பாடல் என்கிற பாடம் இருப்பதே எனக்கு அப்போதுதான் தெரியும். :lol: குழப்பம் அதிகமாகியது.

நான்: unsure.gifunsure.gifunsure.gif

முதல்வர்: mellow.gif

நான்: நீங்களே ஒன்றை தேர்ந்தெடுத்துச் சொல்லுங்கோ..! unsure.gif

முதல்வர்: சரி. சிவில் செய்யுங்கோ. நன்றி வணக்கம்..

வெளியே வருகிறேன். வேண்டாத பாடத்தைக் குடுத்துவிட்டார்களே என்று ஒரே கவலை. (படிப்பினை 2: வாயுள்ள பிள்ளையே பிழைக்கும். :wub: )

(தொடரும்.)

Link to comment
Share on other sites

  • Replies 346
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு

தொடருங்கள்

பலருக்கு உதவும் :icon_idea:

Link to comment
Share on other sites

நல்ல பதிவு

தொடருங்கள்

பலருக்கு உதவும் :icon_idea:

நன்றிகள் விசுகு அண்ணா.. முதல் போணியே நீங்கள்தான்..! :lol: தொடர்கிறேன்..! :D

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி. தொடருங்கள். ஏனையவர்களும் தங்கள் பயனுள்ள அனுபவங்களை பகிர்வார்கள்.

சிலர் நேர்முக தேர்வு வைப்பவர்களாக இருப்பார்கள். அவர்களும் எழுதட்டும் எவற்றை எதிர்பார்கிறார்கள் என்று.

நன்றி உங்கள் பகிர்வுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு போன வாரம் ஒரு நேர்முகத் தேர்வு நடந்தது. இன்னும் பல நடக்கவுள்ளது!

அதிகம் தயார்படுத்தல் இல்லாமல் போவதுதான் எனது பாணி (முடிந்தால் 1/2 கிளாஸ் சம்பையின் குடித்துவிட்டும் போகலாம்! :icon_mrgreen: )

கேட்கப்பட்ட கேள்வியில் ஒன்று!

பல ஆயிரக்கணக்கானவர்களிடம் தலா ஒருவருக்கு ஒரு நாணயம் வீதம் கொடுக்கப்பட்டு எல்லோரையும் தலை விழும்வரை நாணயத்தை சுழற்றுமாறு கேட்கப்பட்டது. அதாவது ஒருவர் எத்தனை தரம் வேண்டுமென்றாலும் தலை வரும் வரை முயற்சிக்கலாம். எல்லோரும் தலைகளைப் பெற்றபின்னர் சுழற்சிகளின் எண்ணிக்கையில் எத்தனை வீதம் தலை விழுந்திருக்கும்?

பதிலை விளக்கத்துடன் சொல்லவேண்டி வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிலை விளக்கத்துடன் சொல்லவேண்டி வந்தது.

பதில் சரி?

வேலை கிடைத்ததா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதில் சரி?

வேலை கிடைத்ததா???

இன்னும் தெரியாது. கிடைத்தாலும் தூரப் பிரச்சினை காரணமாக ஏற்பதில்லை என்று முடிவெடுத்திருக்கின்றேன்!

Link to comment
Share on other sites

பாகம் 2: தடைக்கல்லும் உனக்கொரு படிக்கட்டு

கல்லூரியில் சேர்ந்தபின் மன உளைச்சல் ஒருபுறம். நான் அந்தக் கல்லூரியில் சேர்ந்தது பலருக்கு நியூசாக இருந்தாலும் சிவில் படிப்பதால் கவலையடைந்த ஊரார் மறுபக்கம். laugh.gif ஒரே குழப்பமாக இருந்தது. இயந்திரவியல் பொறியியல் துறைக்கு (Mechanical Engineering) மாறும்படி எனக்கு ஊராரால் அறிவுறுத்தப்பட்டது. :D

சரி.. அதுக்கு மாறுவோம் என்று ஒரு விண்ணப்பத்தை அனுப்பி வைத்தேன். அதற்குப் பதில்கூட வரவில்லை. :D

முதலாம் ஆண்டு. சோதனைகளின் உச்சம். உயர்பள்ளியில் இருந்து பல்கலைக்கழகக் கல்வி எவ்வளவு மாறுபட்டது என்று விளங்க ஆரம்பித்தது. நான் கேள்விப்படாத விடயங்களையெல்லாம் படிப்பித்துக் கொண்டிருந்தார்கள். நான் அங்கு சேர்ந்ததே மிகவும் தாமதமாகத்தான். சேர்ந்து ஒரு வார இடைவெளியில் ஒரு பரீட்சை. :huh:

நான் தினமும் வீட்டில் இருந்து கல்லூரிக்குச் சென்று வருவேன். ஆனால் கிட்டத்தட்ட 90 வீதமான மாணவர்கள் அங்கே விடுதியில் தங்கிப் படிப்பவர்கள். எந்தப் புத்தகத்தை வாங்கவேண்டும்; சீனியர் மாணர்வர் ஆலோசனை போன்றவை அவர்களுக்குக் கிடைத்தது. நான் வீட்டுக்குப் போவதும் வருவதும், புட்டுச் சாப்பிடுவதும்தான்..! laugh.gif இதற்குள் பகிடிவதை (Ragging) வேறு..! unsure.gif

ஒரு செமஸ்ரரில் இடைவெளிவிட்டு 3 பரீட்சைகள் வைப்பார்கள். முதலாவதில் 25%; இரண்டாவதில் 25%; மூன்றாவதில் 50% இறுதிப் புள்ளிக்கு எடுப்பார்கள். ஏதாவது ஒன்றில் சொதப்பினாலும் இறுதிப் புள்ளிகள் அடிவாங்கிவிடும். unsure.gif

போய் ஒருகிழமையிலேயே தேர்வுகள் வந்ததால் பல ஒற்றை இலக்கப் புள்ளிகள் வாங்கி சாதனை படைத்தேன். :D இதற்குள் சிவில் படிக்கிறோமே என்கிற கவலையும். ஊரார் புராணங்கள் வேறு.

இறுதியாக அந்த செமஸ்ரரில் மூன்று பாடங்களில் தொப்பி.. unsure.gif வாழ்க்கையிலேயே அன்றுதான் படிப்பில் தோல்வியைச் சந்தித்தேன். unsure.gif

இரண்டாவது செமஸ்ரரில் சுதாரித்துக்கொண்டு எல்லாப் பாடங்களிலும் சித்தியடைந்தேன். பழைய மூன்றில் இரண்டை கிளியர் செய்தேன்.. :D ஆனால் மூன்றாவதை கிளியர் செய்ய முடியவில்லை. unsure.gif அந்தத் தேர்வு நடந்த அன்று பேரூந்து வேலைநிறுத்தம் நடந்ததால் போகமுடியவில்லை. :blink: மூன்றாவது செமஸ்ரரில் அதை கிளியர் செய்தேன்..! இன்னொருமுறை தொப்பி வாங்கியிருந்தேன் என்றால் அந்த வருடத்தை இன்னுமொருமுறை படிக்க விட்டிருப்பார்கள். laugh.gif

இரண்டாம் வருடத்தில் இருந்து சிவில் படிப்பு. செங்கல்லு, கருங்கல்லு என்று ஆரம்பித்தார்கள். :D இருக்கிற மன உளைச்சலும் கூடுற மாதிரி இருந்தது. laugh.gif அதற்கடுத்து வந்த பாடங்கள் சிவில் என்றால் என்ன என்கிற விளக்கத்தைத் தந்தது. ஓரளவு ஆர்வமும் வளர்ந்தது.

முதல் வருடப் படிப்பு என்பது பொதுப் பாடப் பரப்பு. எல்லோரும் ஒரே பாடங்களையே கற்பார்கள். அந்தப் புள்ளிகள் படிப்பை முடிக்கும்போது சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது..! ஆகையால் இறுதி வருடத்தை முடிக்கும்போது First Class Honours இல் முடித்தேன்..! :rolleyes: இனிமேல் வேலை தேட வேண்டும். :huh:

(தொடரும்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது இசைக்கலைஞன்,

தொடருங்கள் ...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் எப்போதும் பிரியோசனமான பகுதி...தொடருங்கோ..:)

Link to comment
Share on other sites

பகலவன், கிருபன், அபராஜிதன், தமிழரசு, யாயினி.. நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கும், உற்சாகத்திற்கும்..! :D

Link to comment
Share on other sites

நல்ல தொடர்...தொடருங்கள்....இடைக்கிடை என் நேர்முகத்தேர்வுகள் தொடர்பான சோகக் கதைகளையும் அவுத்து விடுறன்

Link to comment
Share on other sites

நன்றிகள், தொடரை ஆரம்பித்தமைக்கு. மிக்க நன்றிகள் புரியக்கூடிய எளிமையான விதத்தில் நாசூக்காக எழுதுவதற்கு.

பாகம் 1: தோல்வியே வெற்றியின் முதற்படி

வெளியே வருகிறேன். வேண்டாத பாடத்தைக் குடுத்துவிட்டார்களே என்று ஒரே கவலை. (படிப்பினை 2: வாயுள்ள பிள்ளையே பிழைக்கும். :wub: )(தொடரும்.)

தோல்விகளைக்கண்டு துவழக்கூடாது என்பதையும் கிடைத்த சந்தர்ப்பங்களை வைத்து சாதனைகள் படைக்கலாம் என்பதையும் கூறியுள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

சனங்களுக்குப் பிரயோசனமான் தொடர். நன்றாக உள்ளது.

தொடருங்கள். :)

தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா

Link to comment
Share on other sites

எனக்கும் பல நேர் முகத்தேர்வு அனுபவங்கள் இருக்கு ஆனால் எழுதமுடியாது நீங்கள் தொடருங்கள். :lol: :lol:

Link to comment
Share on other sites

பாகம் 2: தடைக்கல்லும் உனக்கொரு படிக்கட்டு

கல்லூரியில் சேர்ந்தபின் மன உளைச்சல் ஒருபுறம். நான் அந்தக் கல்லூரியில் சேர்ந்தது பலருக்கு நியூசாக இருந்தாலும் சிவில் படிப்பதால் கவலையடைந்த ஊரார் மறுபக்கம். laugh.gif ஒரே குழப்பமாக இருந்தது. இயந்திரவியல் பொறியியல் துறைக்கு (Mechanical Engineering) மாறும்படி எனக்கு ஊராரால் அறிவுறுத்தப்பட்டது. :D

சரி.. அதுக்கு மாறுவோம் என்று ஒரு விண்ணப்பத்தை அனுப்பி வைத்தேன். அதற்குப் பதில்கூட வரவில்லை. :D

எமக்கு என்று ஒரு நாடு இல்லாமை, சிங்களத்தால் நடைமுறைப்படுத்தப்படும் தராதரப்படுத்தல் என்பன இவ்வாறான நெருக்கடிகளை எமக்கு தந்தவை. ஆனால் அவையே எமக்கு புதிய கதவுகளை திறந்தும் விட்டன.

இன்றும் பல மேற்குலக நாடுகளில் இரண்டாம் தலைமுறையினர் எதை என்னத்திற்காக உயர்கல்வி படிக்கின்றோம் என்பதில் தேவையான தெளிவில்லாமல் உள்ளனர். பலரும் பெற்றோரின் விருப்பத்திற்காக படிக்க செல்லுகிறார்கள்.

பகுதி பகுதியாக புள்ளிகள் சேர்க்கப்படும் முறை (25%, 25%, 50%) எம்மில் பலருக்கும் உயர்கல்வியிலேயே கிடைத்தது. ஆனால் புலம்பெயர் பிள்ளைகள் இவ்வாறான அணுகுமுறையை பள்ளிக்கூடத்திலேயே பார்க்கின்றபடியால் அவர்களுக்கு அது இலகுவானதாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை பிடிக்கவில்லை என்றாலும் ஒரு வருட இறுதியில் ஆர்வம் ஏற்படக்கூடிய அளவுக்கு இசைவாக்கம் பெற்றுவிட்டீர்கள்..

இதைத்தான் அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்களோ :D

Link to comment
Share on other sites

பாகம் 3: முதல் வேலை எனும் தடுப்புச் சுவர்

பலகலைக்கழகப் படிப்பு முடியும் நேரத்தில் எங்கள் கல்லூரிக்கு பெரிய நிறுவனங்களின் மேலாளர்கள் வருவார்கள்..! அங்கே பல நேர்முகத் தேர்வுகள் நடக்கும். அவற்றுக்கு விண்ணப்பங்கள் போடத் தேவையில்லை. நன்றாகப் படிக்கும் மாணவர்களை அவர்களே அழைத்து நேர்முகத் தேர்வு வைப்பார்கள்.

சிவில் துறையில் அப்போது யாருக்கும் வேலையே கிடைக்காது. இதை சீதனம் அதிகம் வாங்குவதற்கு (டிகிரி மாப்பிளை) உபயோகிப்பார்கள். :D அல்லது படிப்புக்கு சம்பந்தமில்லாத வேறு துறைகளுக்குப் போவார்கள்.

L&T கட்டுமான நிறுவனம் மற்றும் வேறொரு நிறுவனம் சிவில் மாணவர் நேர்முகத் தேர்வுக்கு வந்தார்கள்..! எங்கள் வகுப்பில் முதல் இரண்டு நிலையில் இருந்த மாணவர்களுக்கு வேலை கிடைத்தது. எங்களுக்கெல்லாம் அழைப்பே இல்லை..! laugh.gif

வேலை கிடைத்தவர்களுக்கு ஆரம்பச் சம்பளமே 6000 ரூபாயாம்.. எல்லோரும் வாரைப் பிளந்தார்கள். :D

பல மாணவர்கள் இறுதி வருடத்தில் TOEFL, GRE போன்ற பரீட்சைகளை எழுதி வெற்றிபெற்று அமெரிக்கா செல்லக் காத்திருந்தார்கள். இதில் ஒரு வேலையை வாங்கிய நாதாரியும் காத்திருந்தது. :rolleyes: அதாவது வேலையை வாங்கி ஒரு ஆறு மாதம் செய்துவிட்டு அமெரிக்கா போய்விடுவாராம். இதனால் இன்னும் ஒரு மாணவனுக்கு வாய்ப்பு பறிபோனது. unsure.gif

சரி.. முதல் வேலைக்கு என்ன செய்வது? எனக்கு கட்டட வடிவமைப்பில் நல்ல விருப்பம். வடிவமைப்பு என்றால் Architecture அல்ல. Structural Design.. :rolleyes:

பல்கலைக் கழகப் படிப்பை முடித்துவிட்டு சிலமாதங்கள் TOEFL, GRE படித்தேன்..! :huh: இதற்குள் ஒரு டாவு வேறு. :wub:

TOEFL, GRE இல் சித்தியடைந்திருந்தாலும் பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அப்போது ரொராண்டோ பல்கலைக்கழகத்திற்கு மனு போட்டிருந்தேன். விசாவுக்கு சொத்துக் கணக்கு காட்ட வேண்டும் என்று ஏதோ ஒரு பிரச்சினை முளைத்தது. நாங்கள்தான் வெத்துவேட்டாச்சே.. :D இதற்குள் டாவுப் பிரச்சினை பலமடங்காகி வாழ்க்கை பெரும்பாடாகிவிட்டது.. unsure.gif

வெளிநாட்டு முயற்சியை விட்டுவிட்டு, உள்ளூரில் வேலை தேடலாம் என்று யோசித்தேன். எங்கள் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி ஒரு பொறியியலாளர் அலுவலகம் வைத்திருந்தார். அவரிடம் போனேன். என்னை அவர் ஏற்கனவே பார்த்திருக்கிறார். மண்டலப் பொறியியல் கல்லூரியில் படித்தவன் என்கிற ஒரு தகுதியை வைத்து எனக்கு வேலை தரச் சம்மதித்தார். :rolleyes:

அவரிடம் இன்னொருவரும் வேலை செய்தார். நாங்கள் மூன்றுபேர்தான் கம்பனி.. :D எனக்கு சம்பளம் 1000 ரூபாய்..! laugh.gif

வேலை அனுபவம் முக்கியம் என்பதை அரசல் புரசலாக அறிந்து வைத்திருந்ததால் சம்பளம் குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. திருச்சியில் இருந்து கரூருக்கு ஒவ்வொரு நாளும் போய்வர வேண்டும். unsure.gif ஆறுமணித்தியாலங்கள் பயணத்திலேயே கழியும்.

பள்ளிக்கூடமும், கடைத்தொகுதியும் கட்டப்பட்டுக்கொண்டிருந்தது. வரைபடங்களுக்கேற்ப, கொங்கிரீட் வடிவமைப்பு செய்வது, அத்திவாரங்கள் வடிவமைப்பது எனது வேலை. :D

அந்த வேலையின் முழுப் பொறுப்பும் என்னுடையது. வடிவமைப்பது, பொருட்கள் கொள்வனவு செய்வது, வேலையாட்களுக்கு சம்பளம் கொடுப்பது, கட்டிய கட்டடங்களைப் பரிசோதனை செய்வது என்று பல வேலைகள். இருந்தாலும் பல அனுபவங்களைப் பெற்றுத்தந்தது.

ஒரு ஒன்றரை ஆண்டுகள் வேலை செய்திருப்பேன். ஒரு நாள் நிறுவனத்தின் முதலாளி மெதுவாக ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார். unsure.gif

(தொடரும்.)

Link to comment
Share on other sites

நினைவு இருந்தால் நேர்முக தேர்வில் கேட்க பட்ட கேள்விகளையும் எழுதுங்க இசைகலைஞன்....

இன்னும் இரண்டொரு மாதங்களில் நானும் நேர்முக தேர்வுக்கு போகணும் என்ன கேள்வி கேட்பாங்க எதுமே தெரியா.. :wub: :wub:

Link to comment
Share on other sites

.

அருமை இசை. தொடருங்கள்.. :)

இசையின் எழுத்தை நன்றாக ரசிக்கலாம். ( நம்மட கழுத்தில பிளேடை வைக்காதவரை ) :) :) :)

என்னோடு பல்கலையில் படித்த சகமாணவன் ஒருவன் கணனி மென்பொருள் எழுதும் வேலைக்கு நேர்முகப்பரீட்சைக்குப் போனான்.(பல்கலை முடிந்த கையோடு)

அவர்: கணனி மூலம் என்னென்ன செயலாம் ?

இவன்: கூட்டல் கழித்தல் பெருக்கல் போன்ற கணக்குகளைச் செய்யலாம்.

அவர்: அதை ஒரு கல்குலேட்டர் மூலமே செய்யலாம். கணனி எதற்கு ?

இவன்: :huh: :huh: :huh:

(இவன் நம்ம ஃபிரெண்டு எண்டா யோசிங்க நம்மள பற்றி..)

இவனைப் பகிடிவதையின் போது சீனியர்கள் ஆங்கிலப் பாடல் ஒன்றை பாடும் படி கேட்டார்கள். இவன் பாடிய பாடல்..

ஹூ இஸ் தட் பிளக் ஷீப்.. ? அது யார் ? யார் ?

இன்னொன்று பாடடா என்றார்கள்.

ஐ வோன்டு பி எ ரிச் மேன்..

ஐ வோன்டு பி எ ரிச் மேன்..

Link to comment
Share on other sites

கருத்துக்களுக்கும், ஆதரவிற்கும் நன்றிகள் நிழலி, தப்பிலி, சாத்திரி அண்ணா, தமிழச்சி, வல்வை அக்கா :D

Link to comment
Share on other sites

வேலை அனுபவம் முக்கியம் என்பதை அரசல் புரசலாக அறிந்து வைத்திருந்ததால் சம்பளம் குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. திருச்சியில் இருந்து கரூருக்கு ஒவ்வொரு நாளும் போய்வர வேண்டும்.unsure.gif ஆறுமணித்தியாலங்கள் பயணத்திலேயே கழியும்.

1000 ரூபாய்கள் சம்பளத்திற்காக நிறையவே உழைத்துள்ளீர்கள். அதுவே பின்னால் வந்த வெற்றிகளுக்கு அடிக்கல் :D

பல மாணவர்கள் இறுதி வருடத்தில் TOEFL, GRE போன்ற பரீட்சைகளை எழுதி வெற்றிபெற்று அமெரிக்கா செல்லக் காத்திருந்தார்கள்.

TSE என்ற பேச்சுவாக்கு ஆங்கிலமும் பல வேலைகளுக்கு முக்கியமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கேள்வி கேட்பாங்க எதுமே தெரியா..

எந்தத் துறை என்றாலும் ஒரு சில சாதாரண கேள்விகள் கேட்கப்படும்

1) என்ன வேலை செய்ய விருப்பம்? (விண்ணப்பித்த வேலை என்பது சரியான பதிலாக இருக்கவேண்டிய அவசியமில்லை!)

2) நீண்ட காலத் திட்டம் என்ன?

3) [முன் அனுபவம் இருந்தால்] வேலையில்/வாழ்க்கையில் சந்தித்த சவால் என்ன? அதை எப்படி எதிர்கொண்டீர்கள்?

4) [முன் அனுபவம் இருந்தால்] வேலையில் ஏதாவது தவறு விட்டீர்களா? (இல்லை என்பது பிழையான விடை!)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.