Jump to content

நேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல்


Recommended Posts

கல்விக்கூடங்கள்.. வேலைத்தளங்கள்.. நேர்முகத்தேர்வு இல்லாமல் உள்ளே நுழைவது என்பது ஏறக்குறைய சாத்தியமில்லாத ஒன்று. :blink: நானும் சிலபல இடங்களுக்கு நேர்முகத்தேர்வுகளுக்குப் போயிருக்கிறேன். unsure.gif அவற்றில் இருந்து நான் பெற்றுக்கொண்ட படிப்பினைகளைப் பகிர்ந்துகொள்வதே இப்பதிவின் நோக்கம். unsure.gif

ஒண்டியாக டீ ஆத்த விடாமல் :D அவ்வப்போது உங்களது மேலான கருத்துக்களையும், உங்கள் நினைவுகளையும் பகிந்து கொள்ளவும். :lol:

பாகம் 1: தோல்வியே வெற்றியின் முதற்படி

எனது முதல் நேர்முகத்தேர்வு அனுபவம் பலகலைக்கழக அனுமதியின்போது நடந்தது. திருச்சியில் மண்டலப் பொறியியல் கல்லூரியில் எனக்கு அனுமதி கிடைத்து நேர்முகத்தேர்வுக்கு வருமாறு அழைத்திருந்தார்கள். நானும் அம்மாவும் போனோம்.

நேர்முகத்தேர்வில் என்ன கேட்பார்கள் என்று ஓரிருவரிடம் விசாரித்துப் பார்த்திருந்தேன். யாரிடமும் சரியான பதில் இருக்கவில்லை. (படிப்பினை 1: சரியான ஆட்களிடம் சகவாசம் வைத்திருக்க வேணும். :lol: )

ஒரு தயார்ப்படுத்தலும் இல்லாமலே நேர்முகத் தேவுக்குப் போனேன். எனதுமுறை வந்தது. உள்ளே சென்றால் அந்த அறையைப் பார்க்கவே எனக்குப் பிரமிப்பாக இருந்தது. ஏற்கனவே ஒரு தயார்ப்படுத்தலும் இல்லை. பிரமிப்பு வேறு.

கல்லூரியின் முதல்வர் சுருக்கமாக ஆங்கிலத்தில் ஆரம்பிக்கிறார். :(

முதல்வர்: கணக்கில் நூறு வாங்கியிருக்கிறீர்கள்.. ஆனால் பௌதீகவியலில் 75 வீதம் தான். உங்களுக்கு இரண்டு பாடத்தில் வாய்ப்புக்கள் தரலாம்.. ஒன்று இலத்திரனியல்/தொடர்பாடல் பொறியியல் கல்வி (Electronics & Communications Engineering). அல்லது பொதுவியல் பொறியியல் கல்வி (Civil Engineering). எது வேணும்?

எனக்கு சிவில் விருப்பமில்லை. காரணம் வேலை கிடைக்காது என்று நான் ஆலோசனை கேட்டவர்கள் பயமுறுத்தி வைத்திருந்தார்கள். இலத்திரனியல் / தொடர்பாடல் என்கிற பாடம் இருப்பதே எனக்கு அப்போதுதான் தெரியும். :lol: குழப்பம் அதிகமாகியது.

நான்: unsure.gifunsure.gifunsure.gif

முதல்வர்: mellow.gif

நான்: நீங்களே ஒன்றை தேர்ந்தெடுத்துச் சொல்லுங்கோ..! unsure.gif

முதல்வர்: சரி. சிவில் செய்யுங்கோ. நன்றி வணக்கம்..

வெளியே வருகிறேன். வேண்டாத பாடத்தைக் குடுத்துவிட்டார்களே என்று ஒரே கவலை. (படிப்பினை 2: வாயுள்ள பிள்ளையே பிழைக்கும். :wub: )

(தொடரும்.)

Link to comment
Share on other sites

  • Replies 346
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு

தொடருங்கள்

பலருக்கு உதவும் :icon_idea:

Link to comment
Share on other sites

நல்ல பதிவு

தொடருங்கள்

பலருக்கு உதவும் :icon_idea:

நன்றிகள் விசுகு அண்ணா.. முதல் போணியே நீங்கள்தான்..! :lol: தொடர்கிறேன்..! :D

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி. தொடருங்கள். ஏனையவர்களும் தங்கள் பயனுள்ள அனுபவங்களை பகிர்வார்கள்.

சிலர் நேர்முக தேர்வு வைப்பவர்களாக இருப்பார்கள். அவர்களும் எழுதட்டும் எவற்றை எதிர்பார்கிறார்கள் என்று.

நன்றி உங்கள் பகிர்வுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு போன வாரம் ஒரு நேர்முகத் தேர்வு நடந்தது. இன்னும் பல நடக்கவுள்ளது!

அதிகம் தயார்படுத்தல் இல்லாமல் போவதுதான் எனது பாணி (முடிந்தால் 1/2 கிளாஸ் சம்பையின் குடித்துவிட்டும் போகலாம்! :icon_mrgreen: )

கேட்கப்பட்ட கேள்வியில் ஒன்று!

பல ஆயிரக்கணக்கானவர்களிடம் தலா ஒருவருக்கு ஒரு நாணயம் வீதம் கொடுக்கப்பட்டு எல்லோரையும் தலை விழும்வரை நாணயத்தை சுழற்றுமாறு கேட்கப்பட்டது. அதாவது ஒருவர் எத்தனை தரம் வேண்டுமென்றாலும் தலை வரும் வரை முயற்சிக்கலாம். எல்லோரும் தலைகளைப் பெற்றபின்னர் சுழற்சிகளின் எண்ணிக்கையில் எத்தனை வீதம் தலை விழுந்திருக்கும்?

பதிலை விளக்கத்துடன் சொல்லவேண்டி வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிலை விளக்கத்துடன் சொல்லவேண்டி வந்தது.

பதில் சரி?

வேலை கிடைத்ததா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதில் சரி?

வேலை கிடைத்ததா???

இன்னும் தெரியாது. கிடைத்தாலும் தூரப் பிரச்சினை காரணமாக ஏற்பதில்லை என்று முடிவெடுத்திருக்கின்றேன்!

Link to comment
Share on other sites

பாகம் 2: தடைக்கல்லும் உனக்கொரு படிக்கட்டு

கல்லூரியில் சேர்ந்தபின் மன உளைச்சல் ஒருபுறம். நான் அந்தக் கல்லூரியில் சேர்ந்தது பலருக்கு நியூசாக இருந்தாலும் சிவில் படிப்பதால் கவலையடைந்த ஊரார் மறுபக்கம். laugh.gif ஒரே குழப்பமாக இருந்தது. இயந்திரவியல் பொறியியல் துறைக்கு (Mechanical Engineering) மாறும்படி எனக்கு ஊராரால் அறிவுறுத்தப்பட்டது. :D

சரி.. அதுக்கு மாறுவோம் என்று ஒரு விண்ணப்பத்தை அனுப்பி வைத்தேன். அதற்குப் பதில்கூட வரவில்லை. :D

முதலாம் ஆண்டு. சோதனைகளின் உச்சம். உயர்பள்ளியில் இருந்து பல்கலைக்கழகக் கல்வி எவ்வளவு மாறுபட்டது என்று விளங்க ஆரம்பித்தது. நான் கேள்விப்படாத விடயங்களையெல்லாம் படிப்பித்துக் கொண்டிருந்தார்கள். நான் அங்கு சேர்ந்ததே மிகவும் தாமதமாகத்தான். சேர்ந்து ஒரு வார இடைவெளியில் ஒரு பரீட்சை. :huh:

நான் தினமும் வீட்டில் இருந்து கல்லூரிக்குச் சென்று வருவேன். ஆனால் கிட்டத்தட்ட 90 வீதமான மாணவர்கள் அங்கே விடுதியில் தங்கிப் படிப்பவர்கள். எந்தப் புத்தகத்தை வாங்கவேண்டும்; சீனியர் மாணர்வர் ஆலோசனை போன்றவை அவர்களுக்குக் கிடைத்தது. நான் வீட்டுக்குப் போவதும் வருவதும், புட்டுச் சாப்பிடுவதும்தான்..! laugh.gif இதற்குள் பகிடிவதை (Ragging) வேறு..! unsure.gif

ஒரு செமஸ்ரரில் இடைவெளிவிட்டு 3 பரீட்சைகள் வைப்பார்கள். முதலாவதில் 25%; இரண்டாவதில் 25%; மூன்றாவதில் 50% இறுதிப் புள்ளிக்கு எடுப்பார்கள். ஏதாவது ஒன்றில் சொதப்பினாலும் இறுதிப் புள்ளிகள் அடிவாங்கிவிடும். unsure.gif

போய் ஒருகிழமையிலேயே தேர்வுகள் வந்ததால் பல ஒற்றை இலக்கப் புள்ளிகள் வாங்கி சாதனை படைத்தேன். :D இதற்குள் சிவில் படிக்கிறோமே என்கிற கவலையும். ஊரார் புராணங்கள் வேறு.

இறுதியாக அந்த செமஸ்ரரில் மூன்று பாடங்களில் தொப்பி.. unsure.gif வாழ்க்கையிலேயே அன்றுதான் படிப்பில் தோல்வியைச் சந்தித்தேன். unsure.gif

இரண்டாவது செமஸ்ரரில் சுதாரித்துக்கொண்டு எல்லாப் பாடங்களிலும் சித்தியடைந்தேன். பழைய மூன்றில் இரண்டை கிளியர் செய்தேன்.. :D ஆனால் மூன்றாவதை கிளியர் செய்ய முடியவில்லை. unsure.gif அந்தத் தேர்வு நடந்த அன்று பேரூந்து வேலைநிறுத்தம் நடந்ததால் போகமுடியவில்லை. :blink: மூன்றாவது செமஸ்ரரில் அதை கிளியர் செய்தேன்..! இன்னொருமுறை தொப்பி வாங்கியிருந்தேன் என்றால் அந்த வருடத்தை இன்னுமொருமுறை படிக்க விட்டிருப்பார்கள். laugh.gif

இரண்டாம் வருடத்தில் இருந்து சிவில் படிப்பு. செங்கல்லு, கருங்கல்லு என்று ஆரம்பித்தார்கள். :D இருக்கிற மன உளைச்சலும் கூடுற மாதிரி இருந்தது. laugh.gif அதற்கடுத்து வந்த பாடங்கள் சிவில் என்றால் என்ன என்கிற விளக்கத்தைத் தந்தது. ஓரளவு ஆர்வமும் வளர்ந்தது.

முதல் வருடப் படிப்பு என்பது பொதுப் பாடப் பரப்பு. எல்லோரும் ஒரே பாடங்களையே கற்பார்கள். அந்தப் புள்ளிகள் படிப்பை முடிக்கும்போது சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது..! ஆகையால் இறுதி வருடத்தை முடிக்கும்போது First Class Honours இல் முடித்தேன்..! :rolleyes: இனிமேல் வேலை தேட வேண்டும். :huh:

(தொடரும்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது இசைக்கலைஞன்,

தொடருங்கள் ...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் எப்போதும் பிரியோசனமான பகுதி...தொடருங்கோ..:)

Link to comment
Share on other sites

பகலவன், கிருபன், அபராஜிதன், தமிழரசு, யாயினி.. நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கும், உற்சாகத்திற்கும்..! :D

Link to comment
Share on other sites

நல்ல தொடர்...தொடருங்கள்....இடைக்கிடை என் நேர்முகத்தேர்வுகள் தொடர்பான சோகக் கதைகளையும் அவுத்து விடுறன்

Link to comment
Share on other sites

நன்றிகள், தொடரை ஆரம்பித்தமைக்கு. மிக்க நன்றிகள் புரியக்கூடிய எளிமையான விதத்தில் நாசூக்காக எழுதுவதற்கு.

பாகம் 1: தோல்வியே வெற்றியின் முதற்படி

வெளியே வருகிறேன். வேண்டாத பாடத்தைக் குடுத்துவிட்டார்களே என்று ஒரே கவலை. (படிப்பினை 2: வாயுள்ள பிள்ளையே பிழைக்கும். :wub: )(தொடரும்.)

தோல்விகளைக்கண்டு துவழக்கூடாது என்பதையும் கிடைத்த சந்தர்ப்பங்களை வைத்து சாதனைகள் படைக்கலாம் என்பதையும் கூறியுள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

சனங்களுக்குப் பிரயோசனமான் தொடர். நன்றாக உள்ளது.

தொடருங்கள். :)

தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா

Link to comment
Share on other sites

எனக்கும் பல நேர் முகத்தேர்வு அனுபவங்கள் இருக்கு ஆனால் எழுதமுடியாது நீங்கள் தொடருங்கள். :lol: :lol:

Link to comment
Share on other sites

பாகம் 2: தடைக்கல்லும் உனக்கொரு படிக்கட்டு

கல்லூரியில் சேர்ந்தபின் மன உளைச்சல் ஒருபுறம். நான் அந்தக் கல்லூரியில் சேர்ந்தது பலருக்கு நியூசாக இருந்தாலும் சிவில் படிப்பதால் கவலையடைந்த ஊரார் மறுபக்கம். laugh.gif ஒரே குழப்பமாக இருந்தது. இயந்திரவியல் பொறியியல் துறைக்கு (Mechanical Engineering) மாறும்படி எனக்கு ஊராரால் அறிவுறுத்தப்பட்டது. :D

சரி.. அதுக்கு மாறுவோம் என்று ஒரு விண்ணப்பத்தை அனுப்பி வைத்தேன். அதற்குப் பதில்கூட வரவில்லை. :D

எமக்கு என்று ஒரு நாடு இல்லாமை, சிங்களத்தால் நடைமுறைப்படுத்தப்படும் தராதரப்படுத்தல் என்பன இவ்வாறான நெருக்கடிகளை எமக்கு தந்தவை. ஆனால் அவையே எமக்கு புதிய கதவுகளை திறந்தும் விட்டன.

இன்றும் பல மேற்குலக நாடுகளில் இரண்டாம் தலைமுறையினர் எதை என்னத்திற்காக உயர்கல்வி படிக்கின்றோம் என்பதில் தேவையான தெளிவில்லாமல் உள்ளனர். பலரும் பெற்றோரின் விருப்பத்திற்காக படிக்க செல்லுகிறார்கள்.

பகுதி பகுதியாக புள்ளிகள் சேர்க்கப்படும் முறை (25%, 25%, 50%) எம்மில் பலருக்கும் உயர்கல்வியிலேயே கிடைத்தது. ஆனால் புலம்பெயர் பிள்ளைகள் இவ்வாறான அணுகுமுறையை பள்ளிக்கூடத்திலேயே பார்க்கின்றபடியால் அவர்களுக்கு அது இலகுவானதாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை பிடிக்கவில்லை என்றாலும் ஒரு வருட இறுதியில் ஆர்வம் ஏற்படக்கூடிய அளவுக்கு இசைவாக்கம் பெற்றுவிட்டீர்கள்..

இதைத்தான் அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்களோ :D

Link to comment
Share on other sites

பாகம் 3: முதல் வேலை எனும் தடுப்புச் சுவர்

பலகலைக்கழகப் படிப்பு முடியும் நேரத்தில் எங்கள் கல்லூரிக்கு பெரிய நிறுவனங்களின் மேலாளர்கள் வருவார்கள்..! அங்கே பல நேர்முகத் தேர்வுகள் நடக்கும். அவற்றுக்கு விண்ணப்பங்கள் போடத் தேவையில்லை. நன்றாகப் படிக்கும் மாணவர்களை அவர்களே அழைத்து நேர்முகத் தேர்வு வைப்பார்கள்.

சிவில் துறையில் அப்போது யாருக்கும் வேலையே கிடைக்காது. இதை சீதனம் அதிகம் வாங்குவதற்கு (டிகிரி மாப்பிளை) உபயோகிப்பார்கள். :D அல்லது படிப்புக்கு சம்பந்தமில்லாத வேறு துறைகளுக்குப் போவார்கள்.

L&T கட்டுமான நிறுவனம் மற்றும் வேறொரு நிறுவனம் சிவில் மாணவர் நேர்முகத் தேர்வுக்கு வந்தார்கள்..! எங்கள் வகுப்பில் முதல் இரண்டு நிலையில் இருந்த மாணவர்களுக்கு வேலை கிடைத்தது. எங்களுக்கெல்லாம் அழைப்பே இல்லை..! laugh.gif

வேலை கிடைத்தவர்களுக்கு ஆரம்பச் சம்பளமே 6000 ரூபாயாம்.. எல்லோரும் வாரைப் பிளந்தார்கள். :D

பல மாணவர்கள் இறுதி வருடத்தில் TOEFL, GRE போன்ற பரீட்சைகளை எழுதி வெற்றிபெற்று அமெரிக்கா செல்லக் காத்திருந்தார்கள். இதில் ஒரு வேலையை வாங்கிய நாதாரியும் காத்திருந்தது. :rolleyes: அதாவது வேலையை வாங்கி ஒரு ஆறு மாதம் செய்துவிட்டு அமெரிக்கா போய்விடுவாராம். இதனால் இன்னும் ஒரு மாணவனுக்கு வாய்ப்பு பறிபோனது. unsure.gif

சரி.. முதல் வேலைக்கு என்ன செய்வது? எனக்கு கட்டட வடிவமைப்பில் நல்ல விருப்பம். வடிவமைப்பு என்றால் Architecture அல்ல. Structural Design.. :rolleyes:

பல்கலைக் கழகப் படிப்பை முடித்துவிட்டு சிலமாதங்கள் TOEFL, GRE படித்தேன்..! :huh: இதற்குள் ஒரு டாவு வேறு. :wub:

TOEFL, GRE இல் சித்தியடைந்திருந்தாலும் பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அப்போது ரொராண்டோ பல்கலைக்கழகத்திற்கு மனு போட்டிருந்தேன். விசாவுக்கு சொத்துக் கணக்கு காட்ட வேண்டும் என்று ஏதோ ஒரு பிரச்சினை முளைத்தது. நாங்கள்தான் வெத்துவேட்டாச்சே.. :D இதற்குள் டாவுப் பிரச்சினை பலமடங்காகி வாழ்க்கை பெரும்பாடாகிவிட்டது.. unsure.gif

வெளிநாட்டு முயற்சியை விட்டுவிட்டு, உள்ளூரில் வேலை தேடலாம் என்று யோசித்தேன். எங்கள் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி ஒரு பொறியியலாளர் அலுவலகம் வைத்திருந்தார். அவரிடம் போனேன். என்னை அவர் ஏற்கனவே பார்த்திருக்கிறார். மண்டலப் பொறியியல் கல்லூரியில் படித்தவன் என்கிற ஒரு தகுதியை வைத்து எனக்கு வேலை தரச் சம்மதித்தார். :rolleyes:

அவரிடம் இன்னொருவரும் வேலை செய்தார். நாங்கள் மூன்றுபேர்தான் கம்பனி.. :D எனக்கு சம்பளம் 1000 ரூபாய்..! laugh.gif

வேலை அனுபவம் முக்கியம் என்பதை அரசல் புரசலாக அறிந்து வைத்திருந்ததால் சம்பளம் குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. திருச்சியில் இருந்து கரூருக்கு ஒவ்வொரு நாளும் போய்வர வேண்டும். unsure.gif ஆறுமணித்தியாலங்கள் பயணத்திலேயே கழியும்.

பள்ளிக்கூடமும், கடைத்தொகுதியும் கட்டப்பட்டுக்கொண்டிருந்தது. வரைபடங்களுக்கேற்ப, கொங்கிரீட் வடிவமைப்பு செய்வது, அத்திவாரங்கள் வடிவமைப்பது எனது வேலை. :D

அந்த வேலையின் முழுப் பொறுப்பும் என்னுடையது. வடிவமைப்பது, பொருட்கள் கொள்வனவு செய்வது, வேலையாட்களுக்கு சம்பளம் கொடுப்பது, கட்டிய கட்டடங்களைப் பரிசோதனை செய்வது என்று பல வேலைகள். இருந்தாலும் பல அனுபவங்களைப் பெற்றுத்தந்தது.

ஒரு ஒன்றரை ஆண்டுகள் வேலை செய்திருப்பேன். ஒரு நாள் நிறுவனத்தின் முதலாளி மெதுவாக ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார். unsure.gif

(தொடரும்.)

Link to comment
Share on other sites

நினைவு இருந்தால் நேர்முக தேர்வில் கேட்க பட்ட கேள்விகளையும் எழுதுங்க இசைகலைஞன்....

இன்னும் இரண்டொரு மாதங்களில் நானும் நேர்முக தேர்வுக்கு போகணும் என்ன கேள்வி கேட்பாங்க எதுமே தெரியா.. :wub: :wub:

Link to comment
Share on other sites

.

அருமை இசை. தொடருங்கள்.. :)

இசையின் எழுத்தை நன்றாக ரசிக்கலாம். ( நம்மட கழுத்தில பிளேடை வைக்காதவரை ) :) :) :)

என்னோடு பல்கலையில் படித்த சகமாணவன் ஒருவன் கணனி மென்பொருள் எழுதும் வேலைக்கு நேர்முகப்பரீட்சைக்குப் போனான்.(பல்கலை முடிந்த கையோடு)

அவர்: கணனி மூலம் என்னென்ன செயலாம் ?

இவன்: கூட்டல் கழித்தல் பெருக்கல் போன்ற கணக்குகளைச் செய்யலாம்.

அவர்: அதை ஒரு கல்குலேட்டர் மூலமே செய்யலாம். கணனி எதற்கு ?

இவன்: :huh: :huh: :huh:

(இவன் நம்ம ஃபிரெண்டு எண்டா யோசிங்க நம்மள பற்றி..)

இவனைப் பகிடிவதையின் போது சீனியர்கள் ஆங்கிலப் பாடல் ஒன்றை பாடும் படி கேட்டார்கள். இவன் பாடிய பாடல்..

ஹூ இஸ் தட் பிளக் ஷீப்.. ? அது யார் ? யார் ?

இன்னொன்று பாடடா என்றார்கள்.

ஐ வோன்டு பி எ ரிச் மேன்..

ஐ வோன்டு பி எ ரிச் மேன்..

Link to comment
Share on other sites

கருத்துக்களுக்கும், ஆதரவிற்கும் நன்றிகள் நிழலி, தப்பிலி, சாத்திரி அண்ணா, தமிழச்சி, வல்வை அக்கா :D

Link to comment
Share on other sites

வேலை அனுபவம் முக்கியம் என்பதை அரசல் புரசலாக அறிந்து வைத்திருந்ததால் சம்பளம் குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. திருச்சியில் இருந்து கரூருக்கு ஒவ்வொரு நாளும் போய்வர வேண்டும்.unsure.gif ஆறுமணித்தியாலங்கள் பயணத்திலேயே கழியும்.

1000 ரூபாய்கள் சம்பளத்திற்காக நிறையவே உழைத்துள்ளீர்கள். அதுவே பின்னால் வந்த வெற்றிகளுக்கு அடிக்கல் :D

பல மாணவர்கள் இறுதி வருடத்தில் TOEFL, GRE போன்ற பரீட்சைகளை எழுதி வெற்றிபெற்று அமெரிக்கா செல்லக் காத்திருந்தார்கள்.

TSE என்ற பேச்சுவாக்கு ஆங்கிலமும் பல வேலைகளுக்கு முக்கியமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கேள்வி கேட்பாங்க எதுமே தெரியா..

எந்தத் துறை என்றாலும் ஒரு சில சாதாரண கேள்விகள் கேட்கப்படும்

1) என்ன வேலை செய்ய விருப்பம்? (விண்ணப்பித்த வேலை என்பது சரியான பதிலாக இருக்கவேண்டிய அவசியமில்லை!)

2) நீண்ட காலத் திட்டம் என்ன?

3) [முன் அனுபவம் இருந்தால்] வேலையில்/வாழ்க்கையில் சந்தித்த சவால் என்ன? அதை எப்படி எதிர்கொண்டீர்கள்?

4) [முன் அனுபவம் இருந்தால்] வேலையில் ஏதாவது தவறு விட்டீர்களா? (இல்லை என்பது பிழையான விடை!)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.