Jump to content

நேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல்


Recommended Posts

நினைவு இருந்தால் நேர்முக தேர்வில் கேட்க பட்ட கேள்விகளையும் எழுதுங்க இசைகலைஞன்....

இன்னும் இரண்டொரு மாதங்களில் நானும் நேர்முக தேர்வுக்கு போகணும் என்ன கேள்வி கேட்பாங்க எதுமே தெரியா.. :wub: :wub:

முடிந்தவரை முயற்சிக்கிறேன் அபராஜிதன்..! :D

Link to comment
Share on other sites

  • Replies 346
  • Created
  • Last Reply

பதிவுக்கு நன்றிகள் ஈசன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை அண்ணா ஒன்று சொன்னால் கோவிக்க மாட்டீங்களா... :rolleyes: எல்லாத்தையும் ஒரே நாளில் எழுதி முடிச்சுட்டால் இந்தாங்கோ,சாப்பிடுங்கோ,சாப்பிடுங்கோ இனிமேல் கேக்காதீங்கோ என்ற மாதிரி இருக்கு..ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியாக எழுதினால் வாசித்து புரிந்து தேவையானவற்றை மனசில் வைச்சுக் கொள்ளலாம் இல்லையா..என் அறிவுக்கு எட்டியதை சொன்னேன். :)

Link to comment
Share on other sites

நல்ல ஒரு கருத்துப்பகிர்வு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல நினைவுகளைக் கிளறி விட்டிருக்கிறது. இலங்கையில் இருந்த போது நான் போன மூன்று நேர்முகத் தேர்வுகள்-மூன்று விதமான அனுபவங்கள்.

நே.மு. 1:

விலங்கு மருத்துவ பீடத்தில் படிப்பித்துக் கொண்டிருந்த போது பக்கத்தில் இருந்த விவசாய பீடத்தில் நான் கற்பித்துக் கொண்டிருந்த அதே பாடப் பரப்பில் உதவி விரிவுரையாளர் வேலைக்கு ஆள் தேடிக் கொண்டிருந்தார்கள். விலங்கு மருத்துவ பீடத்தினருக்கும் விவசாய பீடத்தினருக்கும் கடுமையான பனிப் போர் நடந்த காலம். "உன் ஏரியா, நீயும் விண்ணப்பி, நேர் முகப் பரீட்சைக்குக் கூப்பிடா விட்டால் ஒரு கை பார்த்து விடுவோம்" என எனக்குக் கொம்பு சீவி அனுப்பி வைத்தார்கள். நேர் முகப் பரீட்சையில் யாரைத் தேர்வு செய்யப் போகிறார்கள் என்பதும் எனக்கு முதலே தெரிந்த நிலையில் ஒரு அனுபவத்திற்காக இருக்கட்டும் என்று விண்ணப்பித்து நே. மு போனேன்.

கேள்வி: இலங்கையின் விவசாயக் கொள்கையை எப்போவாவது வாசித்திருக்கிறீரா?

நான்: :rolleyes:

கேள்வி: உமக்கு இந்த வேலை வேண்டுமா வேண்டாமா?

நான்: :icon_mrgreen:

இதற்குப் பிறகு கேட்டவை, நான் சொன்னவை எதுவும் எனக்கு நினைவில் இல்லை. நேர் முகம் செய்த குழுவில் இருந்த ஒரு செனட் உறுப்பினர் எனக்கு நடந்ததை அப்படியே வந்து எனது திணைக்களத் தலைவரிடம் சொல்லி விட்டார். "பயமுறுத்தி இருக்கிறாங்கள் உன்னை, மேல் முறையீடு செய்யலாமா? " என திரும்பவும் உசுப்பேத்தி ரணகளமாக்கப் பார்த்தாங்கள். நான் எஸ்கேப்! :D

நே.மு 2:

விலங்கு மருத்துவ பீடத்திலேயே உயிர் இரசாயனவியல் படிப்பிக்க விரிவுரையாளர் வெற்றிடம் வந்தது. தேர்வு செய்யப் படுபவர் உயிர் இரசாயனவியலோடு சேர்த்து "மீன் வளர்ப்பு, மீன் மருத்துவமும் " கற்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். இதன் காரணம், பீடாதிபதியின் தூரத்து உறவினர் ஒருவர் மீன் வளர்ப்பில் பட்டப் பிற்படிப்புப் படித்துக் கொண்டிருந்தார். இவருக்கு வேலை கொடுக்கத்தான் இந்த வெற்றிடம் என்று தெரிந்திருந்தாலும் உயிர் இரசாயனவியலில் எனக்குத் தகுதி இருந்ததால் முயற்சி செய்தேன்:

கேள்வி: உங்களுக்கு மீன் வளர்ப்பு , மீன் மருத்துவம் தெரியுமா?

நான்: இல்லை, ஆனால் கற்றுக் கொள்வேன். கடினமில்லை. அடிப்படை இருக்கிறது.

கேள்வி: மாணவர்களுக்கு மீன் வளர்ப்புப் படிப்பிக்க முடியுமா?

நான்: ஒரு 6 மாதத்தில் முடியும்.

கேள்வி: உங்களை வேலைக்குச் சேர்த்து அடுத்த நாளே படிப்பிக்க ஆரம்பிக்க வேண்டும், முடியுமா?

நான்: (சொல்ல நினைத்தது: அப்படியான ஒருவர் வெளியே காத்துக் கொண்டிருக்கிறார், நான் இப்பவே போய் அனுப்பி வைக்கவா? :D ) .இல்லை. முடியாது.

நே.மு 3:

மருத்துவ பீடத்தில் நுண்ணுயிரியல் கற்பிக்க வெற்றிடம் வந்தது. நுண்ணுயிரியலில் ஆய்வு செய்ய ஆர்வம் இருந்ததால் முயற்சி செய்தேன். கலாநிதிப் பட்டம் இல்லாமல் போன இருவரில் நான் ஒருவன். மிகுதி எல்லோரும் கலாநிதிப் பட்டம் முடிக்கிற நிலையில் வந்திருந்தார்கள். கலாநிதியாகி லண்டன் குயீன்ஸ் மருத்துவ மனையில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர், தமிழர், ஒரு பெரிய கட்டுச் சான்றிதழ்களோடு வந்திருந்தார். இறுதியில் அவரை விரிவுரையாளராகத் தேர்வு செய்தார்கள். ஒரு வருடம் மட்டுமே பணியாற்றிய இந்த "தேசப் பற்றாளர்" தன் பிள்ளைகளில் நலன் கருதி மீண்டும் லண்டனுக்கே போய் விட்டதாக பின்னர் அறிந்தேன். என்ன ஒரு வைக்கல் பட்டறை "பப்பி" என்று இப்பவும் அவரைப் பற்றி நினைப்பேன்! :rolleyes:

Link to comment
Share on other sites

உங்கள் நினைவு மீட்டலுக்கு நன்றிகள் ஜஸ்ரின்..! சுவாரசியமாக இருந்தது..! :D

நல்ல ஒரு கருத்துப்பகிர்வு

விற்பன்னர் சொல் கேளாதே என்பதே என் தாரக மந்திரமும்..! :rolleyes: இதனால் அலுவலகத்தில் பிரச்சினைகள் வருவதுண்டு..! :D

இசை அண்ணா ஒன்று சொன்னால் கோவிக்க மாட்டீங்களா... :rolleyes: எல்லாத்தையும் ஒரே நாளில் எழுதி முடிச்சுட்டால் இந்தாங்கோ,சாப்பிடுங்கோ,சாப்பிடுங்கோ இனிமேல் கேக்காதீங்கோ என்ற மாதிரி இருக்கு..ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியாக எழுதினால் வாசித்து புரிந்து தேவையானவற்றை மனசில் வைச்சுக் கொள்ளலாம் இல்லையா..என் அறிவுக்கு எட்டியதை சொன்னேன். :)

மேடம்.. விடுமுறை நாளில்தான் எழுத நேரம் கிடைக்குது.. வேலைநாட்களில் கடினம்..! :unsure:

Link to comment
Share on other sites

பாகம் 4: வெளிநாட்டு வேலை மோகம்

முதலாளிக்கு எனது டாவு மேற்றர் தெரியும். தன்னுடைய கதையையும் லேசாக அவிட்டுவிட்டார். இவர் ஒரு பெண்ணுக்கு ரியூஷன் எடுத்திருக்கிறார். இவர் ஒரு கிறிஸ்தவர். பெண் சைவம். தமிழகத்தில் அ என்றால் அரிவாள் தூக்கும் பரம்பரையைச் சேர்ந்தவர். :huh:

காதல் விவகாரம் அரசல் புரசலாகத் தெரிய வந்தவுடன் பெண்ணின் வீட்டில் தடுத்துவிட்டார்கள். இவரது வீட்டிலும் இவரை வற்புறுத்தி ஒரு திருமணத்தை நடத்தி வைத்துவிட்டார்களாம். பிடிக்காத திருமணத்தின் மூலமும் இவருக்கு ஒரு குழந்தையும் பிறந்துவிட்டது. :rolleyes:

நான் இவரிடம் வேலைக்குச் சேர்ந்த நேரத்திற்கு அண்ணளவாக இவரின் பழைய காதல் மீண்டும் துளிர் விட்டிருக்கிறது.

தான் காதலியுடன் புரூனை நாட்டிற்குப் போகப்போவதாகவும் என்னையும் அழைத்துக் கொள்வதாகவும் சொன்னார். நம்மதான் வெளிநாடு என்றால் வாயைப் பிளப்போமே.. :D அதுமட்டுமில்லாமல் என்னதான் டாவா இருந்தாலும் வெளிநாட்டு மாப்பிளை இல்லை என்றால் எங்கட ஊர் பெண்களுக்கு மரியாதை பாதிக்காது? :lol: அதனால் புரூனை செல்ல என் சம்மதத்தையும் தெரிவித்தேன்.

ஒருநாள் என்னை ஒரு ஹோட்டலில் அறையும், வாடகைக் காரும் பதிவு செய்யச் சொன்னார். நானும் செய்துவிட்டு அவரிடம் சாவிகளைக் கொடுத்தேன். பிறகு என்னை அழைத்துக்கொண்டு கரூர் சென்றார். அங்கே கட்டடத்தைக் கட்டும் சொந்தக்காரரிடம் தான் காலில் சிகிச்சை செய்வதற்காக சென்னை போவதாகவும், தான் வரும் வரையில் நான் தொழிலைப் பார்த்துக் கொள்வேன் என்றும் சொன்னார். அவர்களும் சம்மதம் தெரிவித்தார்கள்..! :huh:

அடுத்த நாளும் விடிந்தது. காதலர்கள் ஊரைவிட்டு எஸ்கேப். அரிவாள் கோஷ்டி ஆட்களைத் தேடித்திரிவதாகக் கேள்விப்பட்டேன். :unsure:

(தொடரும்.)

Link to comment
Share on other sites

எனது நண்பர் வட அமெரிக்காவில் வைத்தியராக மீள் படிப்பு படிக்க விண்ணப்பித்தபொழுது வழமையான பல படிவங்களுடன் 'நீர் ஏன் வைத்தியராக வர விரும்புகிறீர்?' (personal letter : Why do you want to become a doctor?) என கேட்டார்கள் (இது எல்லோரிடமும் கேட்கப்படுவது என எண்ணுகிறேன்). இதை எழுதிக்கொடுப்பதற்கு பல நூறு டாலர்களை கேட்பதும் உண்டு .

இவ்வாறான தொழில்வல்லுனர்கள் எவ்வாறு 'நேர்முகப்பரீட்சைக்கு முகம்கொடுப்பது' எனவும் கற்பிப்பார்கள். புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு இது பிரயோசனமான முதலீடே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இ.கலைஞன் பயனுள்ள பதிர்வு தொடருங்கள் அதற்கு முதல் உங்கள் டாவு விசயத்தையும் எழுதுங்கள் :lol: சுவாரசியமாக உள்ளது :D:icon_idea:

Link to comment
Share on other sites

இ.கலைஞன் பயனுள்ள பதிர்வு தொடருங்கள் அதற்கு முதல் உங்கள் டாவு விசயத்தையும் எழுதுங்கள் :lol: சுவாரசியமாக உள்ளது :D:icon_idea:

நான் உங்கட பேச்சைக் கேட்டு டாவு பற்றி எழுதுவனாம்.. :rolleyes: பிறகு எப்பாவாவது ஒன்றுகூடலில் சந்திக்கும்போது யாராவது போட்டுக் குடுப்பார்களாம்.. :D தேவையா? :lol:

Link to comment
Share on other sites

பாகம் 5: தொழிலாளியில் இருந்து முதலாளி

என் முதலாளி ஊரைவிட்டு ஓடியதும், அவருடன் இருந்த மற்ற ஊழியரும் இன்னொரு பக்கத்தால் ஓடிவிட்டார். :lol: இவர்கள் இருவரும் நல்ல தோஸ்துகள்.. பிடிபட்டால் அரிவாள் சனம் வெட்டியே கொன்றுபோடும் என்கிற பயம். :rolleyes:

அன்று என் வீட்டு வாசலில் யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டது.. போய்ப் பார்த்தால் இரண்டு அம்பாசிடர் கார்கள்.. வேட்டியை மடித்துக்கட்டியபடி சிலர் வாசலில் நின்றுகொண்டிருந்தார்கள். :unsure:

வெட்டு விழலாம் என்று தெரிந்தும் தைரியமாக எதுவும் தெரியாததுபோல அவர்களிடம் சென்று என்ன விசயம் என்று கேட்டேன். :unsure:

"விசயம் தெரியுமா?"

"ம்ம்ம்.. கேள்விப்பட்டேன்.. மிகவும் கவலையாகப் போய்விட்டது.."

"புள்ளையோட அம்மாவும் விசம் குடிச்சு போய்ச் சேர்ந்திடிச்சு.."

(எனக்கோ நிலைமையின் தீவிரம் அப்போதுதான் விளங்க ஆரம்பித்தது.. வந்தவர்கள் கண்களெல்லாம் சிவந்திருந்தது.. குடிவேறியில் இருந்தார்கள் :unsure: )

"கம்னாட்டிங்க எங்க போனாங்கன்னு தெரியுமா?"

" தெரியாது.. ஆனால் ஏதாவது தெரிஞ்சால் சொல்லுறன்.." :unsure:

"ம்ம்ம்.. சரி"

என் பதிலில் நம்பிக்கை கொண்டவர்களாக புறப்பட்டுச் சென்றார்கள். :unsure:

அடுத்தநாள்.. வழக்கம்போல் வேலைக்குச் சென்றேன்.. அங்கே கட்டட உரிமையாளர்களுக்கும் விவரம் தெரிந்திருந்தது. அவர்களுக்கோ வேலை நின்று போய்விடுமே என்கிற கவலை.. எனக்கு அரிவாள் வெட்டு விழுமோ என்கிற கவலை.. :lol:

உரிமையாளர்கள் தயங்கியபடி என்னிடம் வந்தார்கள்.

" நீங்கதான் இந்த வேலையை பார்த்துக்கிட்டிருக்கீங்க.. உங்ககிட்டயே இந்த புரொஜெக்டை ஒப்படைக்கலாம்னு இருக்கோம்.. முடிச்சுத் தருவீங்களா?"

கரும்பு தின்னக் கூலியா.. :icon_mrgreen:

இனிமேல் நானும் முதலாளிதான் முதலாளிதான்.. மனம் சொல்லியது..

"சரி." :wub:

(தொடரும்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கே எழுதி முடித்துவிடுங்கள் இசை.. காத்திருக்க நேரமில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:) சூப்பரா இருக்கு இசை அண்ணா உங்கள் அனுபவம்....எனக்கும் ஒரு காமடி அனுபவம் இருக்கு...இதை வாசிக்க அதை எழுத்து எண்டு மனம் உசுப்புது..ஆனால் சீரியசாக போகும் உங்கள் திரிக்குள் காமடியப் புகுத்தி திரியை திசை திருப்ப வேண்டாம் எண்டு கையைக் கட்டிக்கிறேன்..தொடருங்கள் இசை அண்ணா....
Link to comment
Share on other sites

பாகம் 6: கைமேல் பணம்

இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். வாழ்வில் சந்தர்ப்பங்கள் என்பவை ஒவ்வொருவருக்கும் ஏதாவதொரு வடிவில் வரும். அவற்றைப் பயன்படுத்தி உங்கள் நிலையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதே வெற்றியின் ரகசியம். தயக்கம் வந்தால் பிறகு எந்த முடிவு எடுக்கும்போதும் ஒரு மயக்கநிலை தோன்றும். :rolleyes:

பல்கலைக்கழகப் படிப்பு முடித்து ஒன்றரைவருட வேலை அனுபவத்துடன் முதலாளியாகிவிட்டேன். பழைய ஒப்பந்தக்காரர்களைக் கொண்டு மீதமுள்ள கட்டட வேலைகளை ஆரம்பித்தேன். ஒவ்வொரு கிழமையும் சம்பள நாள் வரும்போது கட்டட உரிமையாளரிடம் சென்று பொருட்கள் மற்றும் சம்பளம் ஆகியவற்றுக்கு தோராயமாக ஒரு காசோலை வாங்கி வருவேன். ஆனால் அவற்றுக்குள் எனக்கான சம்பளமும் புதைந்திருக்கும். :wub: அவர்களிடம் சொல்லமாட்டேன்.

சொன்னால், நீங்க அப்புறமா வாங்கிக்குங்க சார்.. என்று முடித்துவிடுவார்கள். கடைசிவரை பொறுத்தால் அவர்களிடமும் பணம் இருக்காது. இது என் பழைய முதலாளி சொல்லித் தந்தது. :wub: சம்பளங்கள் போக, சர்வ சாதாரணமாக இரண்டு பொக்கற்றிலும் தலா பத்தாயிரம் வீட்டுக்கு கொண்டு வருவேன்..! :icon_mrgreen:

ஒரு ஆறு மாதங்கள் கழிந்திருக்கும்.. பழைய முதலாளியுடன் வேலை செய்தவர் திடீரென்று கட்டட வேலைத்தளத்தில் தோன்றினார். நான் வேலையை நடத்திக் காசு பார்ப்பதை அறிந்துகொண்ட அவர் தன்னையும் பங்குதாரராகச் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்..

ஆளைப் பார்த்தால் மூஞ்சையெல்லாம் காயம் பட்ட தழும்புகள்.. ஓடிப்போன இவர் கடைசியில் அளிவாள் கோஷ்டியிடம் பிடிபட்டுவிட்டார்.. :lol: ஒரு ஹோட்டல் அறை எடுத்த அதற்குள் இவரை அடைத்து வைத்து நல்லா மொங்கியிருக்கிறார்கள்..! :unsure:

எனக்கோ இவரைச் சேர்க்க மனமில்லை. எனக்கு வெளிநாடு போகும் திட்டம் இருக்கு.. அதனால் எல்லாவற்றையும் விட்டுவிடப் போகிறேன் என்று சொல்லிவிட்டேன்.. எனது பதிலில் அதிருப்தி கொண்டவராகச் சென்றுவிட்டார்.

அது முடிந்த சில நாட்களில், எங்கேயிருந்தோ முளைத்த ஒரு ஒப்பந்தக்காரன் (அவனை நான் பயன்படுத்தியதே இல்லை.) நான் கட்டட வேலைக்குப் பாவித்த பலகைகள் தனக்குச் சொந்தம் என ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான்..! :unsure:

நான் பாவித்த பலகைகளை என் பழைய முதலாளி தனக்கு விற்றுவிட்டதாகவும், நான் அவற்றைப் பயன்படுத்துவிட்டதால் 72,000 ரூபாய்கள் அவனுக்கு வாடகையாகத்தரவேண்டும் என்றும் மிரட்டினான். :unsure:

ஒருதடவை நான் எனது நண்பர்களுடன் கிரிக்கட் விளையாடிக்கொண்டிருந்த நேரம், மைதானத்திற்கு அடியாட்களுடன் வந்து ஒரே களேபரமாகி விட்டது..! நண்பர் ஒருவருக்கு அடிவிழாத குறை.. ஓடித்தப்பிவிட்டார். :unsure:

என்னை அவனது மோட்டார் சைக்கிளில் ஏறுமாறு மிரட்டினான்.. நாங்கதான் வீரப் பரம்பரையாச்சே.. ஏறிப் போனேன். ஓரிடத்தில் வைத்து காசு கேட்டு மிரட்டினான். தற்போதைக்கு இல்லை.. பிறகு பார்க்கலாம் என்று சமாளிபிக்கேஷன் செய்து ஒருவழியாக சேதாரம் எதுவுமின்றி திரும்பி வந்தேன்.. :D

(தொடரும்.)

Link to comment
Share on other sites

நன்றாக உள்ளது இந்தப் பதிவு, தொடர்ந்து எழுதுங்கள். இந்த மாதக் கடைசியில் இந்தத் திரி இடம்பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை... வாழ்த்துக்கள்!!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது இந்தப் பதிவு, தொடர்ந்து எழுதுங்கள். இந்த மாதக் கடைசியில் இந்தத் திரி இடம்பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை... வாழ்த்துக்கள்!!! :)

இசையா கொக்கா?

குறி இருக்கு? கொக்கின் கழுத்து மீது....?? :lol::icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளைப் பார்த்தால் மூஞ்சையெல்லாம் காயம் பட்ட தழும்புகள்.. ஓடிப்போன இவர் கடைசியில் அளிவாள் கோஷ்டியிடம் பிடிபட்டுவிட்டார்.. :lol: ஒரு ஹோட்டல் அறை எடுத்த அதற்குள் இவரை அடைத்து வைத்து நல்லா மொங்கியிருக்கிறார்கள்..! :unsure:

இதைத் தான் "ரூம் போட்டு அடிக்கிறது" என்பார்களோ? நல்ல ஐடியா! :lol:

Link to comment
Share on other sites

... புலம்பெயர் வாழ்வில் இந்த வேலை தேடும் படலமும், நேர்முக பரீட்சைகளும் எம் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தவை! .. எனக்கு 2001ல் இருந்து 2005வரை கல்லில் நாருரித்த நிலைதான் வேலை தேடும் படலமும், நேர்முகப்பரீட்சைகளும்! ... கை கூடி வரும் 3 வாரங்களிலும் போகும், மூன்று மாதங்களிலும் போகும் ... இறுதியாக எறும்பூர கற்குவியும் என்பது போல் ... முயற்சி பலனை தந்தது ...முயற்சி என்பது பட்ட அனுபவங்களினூடானது! ... தொடருங்கள்!

Link to comment
Share on other sites

:) சூப்பரா இருக்கு இசை அண்ணா உங்கள் அனுபவம்....எனக்கும் ஒரு காமடி அனுபவம் இருக்கு...இதை வாசிக்க அதை எழுத்து எண்டு மனம் உசுப்புது..ஆனால் சீரியசாக போகும் உங்கள் திரிக்குள் காமடியப் புகுத்தி திரியை திசை திருப்ப வேண்டாம் எண்டு கையைக் கட்டிக்கிறேன்..தொடருங்கள் இசை அண்ணா....

சுபேஸ்.. நீளமான அனுபவமா இருந்தால் தனித்திரியில் தொடங்குங்கோ.. :D ஒற்றைப்பதிவா இருந்தால் இங்கேயே பதியுங்கோ..! :rolleyes:

நன்றாக உள்ளது இந்தப் பதிவு, தொடர்ந்து எழுதுங்கள். இந்த மாதக் கடைசியில் இந்தத் திரி இடம்பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை... வாழ்த்துக்கள்!!! :)

ஓ.. அப்பிடி ஒரு மேட்டர் இருக்கில்லே.. :rolleyes: நன்றிகள்..! :D

Link to comment
Share on other sites

நன்றிகள் நெல்லையண்னை உங்கள் கருத்துக்கு.. :D

இசையா கொக்கா?

குறி இருக்கு? கொக்கின் கழுத்து மீது....?? :lol::icon_idea: :icon_idea:

விசுகு அண்ணை.. இப்பிடி யோசிச்செல்லாம் எழுதேல்லை.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை, தொடருங்கள்!

வாசிக்க நன்றாக இருக்கின்றது!

உங்கள் அனுபவங்கள், எங்களுக்கு ஒரு வழிகாட்டலாக இருக்கும்!

Link to comment
Share on other sites

பாகம் 7: பொருளாதார இழப்புகள்

மிரட்டல் படலத்தைத் தொடர்ந்து பஞ்சாயத்து பேசி பிரச்சினையைத் தீர்ப்பது என்று முடிவானது. உள்ளூரில் இருந்த ஒரு திமுக புள்ளிதான் பஞ்சாயத்து பார்ப்பார் எனச் சொன்னார்கள். :D

இரு தரப்பும் பேசினோம். எனக்கு சார்பாக ஒரு நில உரிமையாளரும், என்னுடன் பங்குதாரனாக விரும்பியரும் இருந்தார்கள். பலகை விற்றதற்கான ஆதாரத்தை நான் கேட்டேன். என்னுடைய பங்குதாரனாக விரும்பியவன் முதலில் பலகையை இவன் வாங்கவே இல்லை என்று அடித்துச் சொல்லியிருந்தான். பஞ்சாயத்து பேசும்போது தனக்கு அதைப் பற்றித் தெரியாது என்று காலைவாரிவிட்டான். :unsure:

அடப்பாவி முதுகில் குத்திவிட்டானே என்று நொந்துகொண்டு 32,000 ரூபாய்கள் அவனுக்கு கொடுப்பது என ஒத்துக்கொண்டேன். பஞ்சாயத்துப் பேசிய திமுக புள்ளிக்கு 10000 ரூபாய்கள். :rolleyes:

இதற்கிடையே வெளிநாடு போகவென்று ஒரு ஏஜெண்டுக்கு ஒரு லட்சம் கொடுத்து அவனும் டிமிக்கி கொடுத்துவிட்டான்.. ஆக இப்போது ஒரு லட்சத்துக்கு மேல் கடன். :unsure:

இந்தியா போதுமடா சாமி என்ற நிலைக்கு வந்துவிட்டேன்.. ஒரு நண்பனின் அண்ணன் சிங்கையில் இருந்தார். இப்பவும் இருக்கிறார்.. :rolleyes: அவரிடம் அங்குள்ள வேலைவாய்ப்பு பற்றிப் பேசினேன்.. சிவிலுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டெனத் தெரிவித்தார்.. :unsure:

சரி.. செலவோடு செலவு.. நெக்ஸ்ட் ஸ்ரொப்.. சிங்கப்பூர் என்று முடிவு செய்தேன்.. :lol:

குறிப்பு: சில விடயங்கள் தலைப்புக்கு சம்பந்தமில்லாததுபோல் தோன்றும். ஆனால் எந்த மனநிலையில் சில வேலைகளை எடுத்துச் செய்யவேண்டி வந்தது என்பதை விளக்க இவை தேவை என நினைக்கிறேன்..! :D

(தொடரும்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தம்பிமார்! நான் இஞ்சை ஜேர்மனிக்கு வந்த புதிசிலை........எனக்கு வந்த நேர்முகதேர்வுகளையும்,நான் இப்ப மற்ரவைக்கு வைக்கிற நேர்முகதேர்வையும் இஞ்சை எழுதலாமோ? கொஞ்சம் பட்டிக்காடாய் இருக்கும்......ஏனெண்டால்.......அண்டா குண்டா அகப்பை...கோப்பை...கிளீனிங் எண்ட சொல்லுகள் வரும்..... அதுதான் யோசிக்கிறன் :rolleyes::(

Link to comment
Share on other sites

பாகம் 8: ஜோய்ஃபுல் சிங்கப்பூர்

ஏற்கனவே கடன்.. மேலும் கொஞ்சம் கடனை வாங்கிக்கொண்டு :lol: சிங்கப்பூர் பயணமானேன். இலங்கைக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு சிங்கையில் நுழைவு விசா தருவார்கள். என்ன சொல்ல வேண்டும் என்பதை நண்பனின் அண்ணன் சொல்லித் தந்தார். :rolleyes: எதற்காக வருகிறீர்கள் என்று கேட்கும்போது social visit என்று சொல்ல வேண்டும். வழக்கமாக இரண்டு கிழமை விசா தருவார்கள். எப்படியாவது நான்கு கிழமை வாங்கப் பாருங்கள் என்று சொல்லியிருந்தார். :unsure:

இந்தியாவில் அதுவரையில் 11 வருடங்கள் மொத்தமாகக் குப்பை கொட்டியிருந்தேன். அதனால் வெளியேறும்போது Exit visa என்று ஒன்று வாங்க வேண்டும். ஒருவழியாக அதையும் எடுத்துவிட்டேன். சிறு வயதிலேயே இலங்கையை விட்டு வெளியேறியதால் இலங்கை அடையாள அட்டையும் இல்லை. ஒருவேளை சிங்கை விடயம் பிழைத்தால் திரும்பி இந்தியாவுக்குள் வரமுடியாது. :unsure: இலங்கைதான் போகவேண்டும். அடையாள அட்டையே இல்லாமல் இலங்கை போனால் என்ன நிலைமை என்று நினைத்துப் பார்க்கவே நடுக்கமா இருந்தது. :unsure:

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சிங்கைக்கான விமானத்தில் ஏறுகிறேன். ஒருவிதத்தில் பிரச்சினைகளை விட்டு வெளியேறுகிறேன் என்கிற நிம்மதி. இன்னொருவிதத்தில் எதிர்காலம் பற்றிய நிச்சயமற்ற தன்மை.

சிங்கையில் இறங்கி ஒரு சிங்கப்பூர் குடிவரவு அதிகாரியின் முன் நிற்கிறேன்.

"எதற்காக சிங்கப்பூர் வருகிறீர்கள்?"

(மனதுக்குள்.. வேறை வழியே இல்லாமல்தான் என்று சொல்ல நினைத்தாலும் :D) "Social visit."

" சரி.. இரண்டு கிழமைகள் தருகிறேன்."

" நான்கு கிழமைகள் தர முடியுமா?"

"ஏன்"

(வேலை தேடப்போறன் என்றா சொல்லமுடியும்?? :lol: )

"இல்லை.. மலேசியாவில் ஒரு திருமணத்திற்கும் செல்ல வேண்டும்.." தயங்கியபடியே இழுத்தேன். :D

" சரி மூன்று கிழமைகள் தாறன். அது போதும்"

அப்பாடா வந்தவரை லாபம் என்று விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து, வாடகைக் கார் பிடித்து நண்பர்கள் இருக்கும் வீட்டைச் சென்றடைந்தேன். :unsure:

(தொடரும்.)

Link to comment
Share on other sites

வணக்கம் தம்பிமார்! நான் இஞ்சை ஜேர்மனிக்கு வந்த புதிசிலை........எனக்கு வந்த நேர்முகதேர்வுகளையும்,நான் இப்ப மற்ரவைக்கு வைக்கிற நேர்முகதேர்வையும் இஞ்சை எழுதலாமோ? கொஞ்சம் பட்டிக்காடாய் இருக்கும்......ஏனெண்டால்.......அண்டா குண்டா அகப்பை...கோப்பை...கிளீனிங் எண்ட சொல்லுகள் வரும்..... அதுதான் யோசிக்கிறன் :rolleyes::(

குமாரசாமியண்ணை.. :D

பலவிதமான அனுபவப் பகிர்வையும் மேற்கொள்வதுதானே இந்தத் திரியின் நோக்கம்..! :rolleyes: உங்கள் பகிர்வையும் எடுத்துவிடுங்கோ.. :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.