Jump to content

நேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல்


Recommended Posts

நினைவு இருந்தால் நேர்முக தேர்வில் கேட்க பட்ட கேள்விகளையும் எழுதுங்க இசைகலைஞன்....

இன்னும் இரண்டொரு மாதங்களில் நானும் நேர்முக தேர்வுக்கு போகணும் என்ன கேள்வி கேட்பாங்க எதுமே தெரியா.. :wub: :wub:

முடிந்தவரை முயற்சிக்கிறேன் அபராஜிதன்..! :D

Link to comment
Share on other sites

  • Replies 346
  • Created
  • Last Reply

பதிவுக்கு நன்றிகள் ஈசன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை அண்ணா ஒன்று சொன்னால் கோவிக்க மாட்டீங்களா... :rolleyes: எல்லாத்தையும் ஒரே நாளில் எழுதி முடிச்சுட்டால் இந்தாங்கோ,சாப்பிடுங்கோ,சாப்பிடுங்கோ இனிமேல் கேக்காதீங்கோ என்ற மாதிரி இருக்கு..ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியாக எழுதினால் வாசித்து புரிந்து தேவையானவற்றை மனசில் வைச்சுக் கொள்ளலாம் இல்லையா..என் அறிவுக்கு எட்டியதை சொன்னேன். :)

Link to comment
Share on other sites

நல்ல ஒரு கருத்துப்பகிர்வு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல நினைவுகளைக் கிளறி விட்டிருக்கிறது. இலங்கையில் இருந்த போது நான் போன மூன்று நேர்முகத் தேர்வுகள்-மூன்று விதமான அனுபவங்கள்.

நே.மு. 1:

விலங்கு மருத்துவ பீடத்தில் படிப்பித்துக் கொண்டிருந்த போது பக்கத்தில் இருந்த விவசாய பீடத்தில் நான் கற்பித்துக் கொண்டிருந்த அதே பாடப் பரப்பில் உதவி விரிவுரையாளர் வேலைக்கு ஆள் தேடிக் கொண்டிருந்தார்கள். விலங்கு மருத்துவ பீடத்தினருக்கும் விவசாய பீடத்தினருக்கும் கடுமையான பனிப் போர் நடந்த காலம். "உன் ஏரியா, நீயும் விண்ணப்பி, நேர் முகப் பரீட்சைக்குக் கூப்பிடா விட்டால் ஒரு கை பார்த்து விடுவோம்" என எனக்குக் கொம்பு சீவி அனுப்பி வைத்தார்கள். நேர் முகப் பரீட்சையில் யாரைத் தேர்வு செய்யப் போகிறார்கள் என்பதும் எனக்கு முதலே தெரிந்த நிலையில் ஒரு அனுபவத்திற்காக இருக்கட்டும் என்று விண்ணப்பித்து நே. மு போனேன்.

கேள்வி: இலங்கையின் விவசாயக் கொள்கையை எப்போவாவது வாசித்திருக்கிறீரா?

நான்: :rolleyes:

கேள்வி: உமக்கு இந்த வேலை வேண்டுமா வேண்டாமா?

நான்: :icon_mrgreen:

இதற்குப் பிறகு கேட்டவை, நான் சொன்னவை எதுவும் எனக்கு நினைவில் இல்லை. நேர் முகம் செய்த குழுவில் இருந்த ஒரு செனட் உறுப்பினர் எனக்கு நடந்ததை அப்படியே வந்து எனது திணைக்களத் தலைவரிடம் சொல்லி விட்டார். "பயமுறுத்தி இருக்கிறாங்கள் உன்னை, மேல் முறையீடு செய்யலாமா? " என திரும்பவும் உசுப்பேத்தி ரணகளமாக்கப் பார்த்தாங்கள். நான் எஸ்கேப்! :D

நே.மு 2:

விலங்கு மருத்துவ பீடத்திலேயே உயிர் இரசாயனவியல் படிப்பிக்க விரிவுரையாளர் வெற்றிடம் வந்தது. தேர்வு செய்யப் படுபவர் உயிர் இரசாயனவியலோடு சேர்த்து "மீன் வளர்ப்பு, மீன் மருத்துவமும் " கற்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். இதன் காரணம், பீடாதிபதியின் தூரத்து உறவினர் ஒருவர் மீன் வளர்ப்பில் பட்டப் பிற்படிப்புப் படித்துக் கொண்டிருந்தார். இவருக்கு வேலை கொடுக்கத்தான் இந்த வெற்றிடம் என்று தெரிந்திருந்தாலும் உயிர் இரசாயனவியலில் எனக்குத் தகுதி இருந்ததால் முயற்சி செய்தேன்:

கேள்வி: உங்களுக்கு மீன் வளர்ப்பு , மீன் மருத்துவம் தெரியுமா?

நான்: இல்லை, ஆனால் கற்றுக் கொள்வேன். கடினமில்லை. அடிப்படை இருக்கிறது.

கேள்வி: மாணவர்களுக்கு மீன் வளர்ப்புப் படிப்பிக்க முடியுமா?

நான்: ஒரு 6 மாதத்தில் முடியும்.

கேள்வி: உங்களை வேலைக்குச் சேர்த்து அடுத்த நாளே படிப்பிக்க ஆரம்பிக்க வேண்டும், முடியுமா?

நான்: (சொல்ல நினைத்தது: அப்படியான ஒருவர் வெளியே காத்துக் கொண்டிருக்கிறார், நான் இப்பவே போய் அனுப்பி வைக்கவா? :D ) .இல்லை. முடியாது.

நே.மு 3:

மருத்துவ பீடத்தில் நுண்ணுயிரியல் கற்பிக்க வெற்றிடம் வந்தது. நுண்ணுயிரியலில் ஆய்வு செய்ய ஆர்வம் இருந்ததால் முயற்சி செய்தேன். கலாநிதிப் பட்டம் இல்லாமல் போன இருவரில் நான் ஒருவன். மிகுதி எல்லோரும் கலாநிதிப் பட்டம் முடிக்கிற நிலையில் வந்திருந்தார்கள். கலாநிதியாகி லண்டன் குயீன்ஸ் மருத்துவ மனையில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர், தமிழர், ஒரு பெரிய கட்டுச் சான்றிதழ்களோடு வந்திருந்தார். இறுதியில் அவரை விரிவுரையாளராகத் தேர்வு செய்தார்கள். ஒரு வருடம் மட்டுமே பணியாற்றிய இந்த "தேசப் பற்றாளர்" தன் பிள்ளைகளில் நலன் கருதி மீண்டும் லண்டனுக்கே போய் விட்டதாக பின்னர் அறிந்தேன். என்ன ஒரு வைக்கல் பட்டறை "பப்பி" என்று இப்பவும் அவரைப் பற்றி நினைப்பேன்! :rolleyes:

Link to comment
Share on other sites

உங்கள் நினைவு மீட்டலுக்கு நன்றிகள் ஜஸ்ரின்..! சுவாரசியமாக இருந்தது..! :D

நல்ல ஒரு கருத்துப்பகிர்வு

விற்பன்னர் சொல் கேளாதே என்பதே என் தாரக மந்திரமும்..! :rolleyes: இதனால் அலுவலகத்தில் பிரச்சினைகள் வருவதுண்டு..! :D

இசை அண்ணா ஒன்று சொன்னால் கோவிக்க மாட்டீங்களா... :rolleyes: எல்லாத்தையும் ஒரே நாளில் எழுதி முடிச்சுட்டால் இந்தாங்கோ,சாப்பிடுங்கோ,சாப்பிடுங்கோ இனிமேல் கேக்காதீங்கோ என்ற மாதிரி இருக்கு..ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியாக எழுதினால் வாசித்து புரிந்து தேவையானவற்றை மனசில் வைச்சுக் கொள்ளலாம் இல்லையா..என் அறிவுக்கு எட்டியதை சொன்னேன். :)

மேடம்.. விடுமுறை நாளில்தான் எழுத நேரம் கிடைக்குது.. வேலைநாட்களில் கடினம்..! :unsure:

Link to comment
Share on other sites

பாகம் 4: வெளிநாட்டு வேலை மோகம்

முதலாளிக்கு எனது டாவு மேற்றர் தெரியும். தன்னுடைய கதையையும் லேசாக அவிட்டுவிட்டார். இவர் ஒரு பெண்ணுக்கு ரியூஷன் எடுத்திருக்கிறார். இவர் ஒரு கிறிஸ்தவர். பெண் சைவம். தமிழகத்தில் அ என்றால் அரிவாள் தூக்கும் பரம்பரையைச் சேர்ந்தவர். :huh:

காதல் விவகாரம் அரசல் புரசலாகத் தெரிய வந்தவுடன் பெண்ணின் வீட்டில் தடுத்துவிட்டார்கள். இவரது வீட்டிலும் இவரை வற்புறுத்தி ஒரு திருமணத்தை நடத்தி வைத்துவிட்டார்களாம். பிடிக்காத திருமணத்தின் மூலமும் இவருக்கு ஒரு குழந்தையும் பிறந்துவிட்டது. :rolleyes:

நான் இவரிடம் வேலைக்குச் சேர்ந்த நேரத்திற்கு அண்ணளவாக இவரின் பழைய காதல் மீண்டும் துளிர் விட்டிருக்கிறது.

தான் காதலியுடன் புரூனை நாட்டிற்குப் போகப்போவதாகவும் என்னையும் அழைத்துக் கொள்வதாகவும் சொன்னார். நம்மதான் வெளிநாடு என்றால் வாயைப் பிளப்போமே.. :D அதுமட்டுமில்லாமல் என்னதான் டாவா இருந்தாலும் வெளிநாட்டு மாப்பிளை இல்லை என்றால் எங்கட ஊர் பெண்களுக்கு மரியாதை பாதிக்காது? :lol: அதனால் புரூனை செல்ல என் சம்மதத்தையும் தெரிவித்தேன்.

ஒருநாள் என்னை ஒரு ஹோட்டலில் அறையும், வாடகைக் காரும் பதிவு செய்யச் சொன்னார். நானும் செய்துவிட்டு அவரிடம் சாவிகளைக் கொடுத்தேன். பிறகு என்னை அழைத்துக்கொண்டு கரூர் சென்றார். அங்கே கட்டடத்தைக் கட்டும் சொந்தக்காரரிடம் தான் காலில் சிகிச்சை செய்வதற்காக சென்னை போவதாகவும், தான் வரும் வரையில் நான் தொழிலைப் பார்த்துக் கொள்வேன் என்றும் சொன்னார். அவர்களும் சம்மதம் தெரிவித்தார்கள்..! :huh:

அடுத்த நாளும் விடிந்தது. காதலர்கள் ஊரைவிட்டு எஸ்கேப். அரிவாள் கோஷ்டி ஆட்களைத் தேடித்திரிவதாகக் கேள்விப்பட்டேன். :unsure:

(தொடரும்.)

Link to comment
Share on other sites

எனது நண்பர் வட அமெரிக்காவில் வைத்தியராக மீள் படிப்பு படிக்க விண்ணப்பித்தபொழுது வழமையான பல படிவங்களுடன் 'நீர் ஏன் வைத்தியராக வர விரும்புகிறீர்?' (personal letter : Why do you want to become a doctor?) என கேட்டார்கள் (இது எல்லோரிடமும் கேட்கப்படுவது என எண்ணுகிறேன்). இதை எழுதிக்கொடுப்பதற்கு பல நூறு டாலர்களை கேட்பதும் உண்டு .

இவ்வாறான தொழில்வல்லுனர்கள் எவ்வாறு 'நேர்முகப்பரீட்சைக்கு முகம்கொடுப்பது' எனவும் கற்பிப்பார்கள். புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு இது பிரயோசனமான முதலீடே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இ.கலைஞன் பயனுள்ள பதிர்வு தொடருங்கள் அதற்கு முதல் உங்கள் டாவு விசயத்தையும் எழுதுங்கள் :lol: சுவாரசியமாக உள்ளது :D:icon_idea:

Link to comment
Share on other sites

இ.கலைஞன் பயனுள்ள பதிர்வு தொடருங்கள் அதற்கு முதல் உங்கள் டாவு விசயத்தையும் எழுதுங்கள் :lol: சுவாரசியமாக உள்ளது :D:icon_idea:

நான் உங்கட பேச்சைக் கேட்டு டாவு பற்றி எழுதுவனாம்.. :rolleyes: பிறகு எப்பாவாவது ஒன்றுகூடலில் சந்திக்கும்போது யாராவது போட்டுக் குடுப்பார்களாம்.. :D தேவையா? :lol:

Link to comment
Share on other sites

பாகம் 5: தொழிலாளியில் இருந்து முதலாளி

என் முதலாளி ஊரைவிட்டு ஓடியதும், அவருடன் இருந்த மற்ற ஊழியரும் இன்னொரு பக்கத்தால் ஓடிவிட்டார். :lol: இவர்கள் இருவரும் நல்ல தோஸ்துகள்.. பிடிபட்டால் அரிவாள் சனம் வெட்டியே கொன்றுபோடும் என்கிற பயம். :rolleyes:

அன்று என் வீட்டு வாசலில் யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டது.. போய்ப் பார்த்தால் இரண்டு அம்பாசிடர் கார்கள்.. வேட்டியை மடித்துக்கட்டியபடி சிலர் வாசலில் நின்றுகொண்டிருந்தார்கள். :unsure:

வெட்டு விழலாம் என்று தெரிந்தும் தைரியமாக எதுவும் தெரியாததுபோல அவர்களிடம் சென்று என்ன விசயம் என்று கேட்டேன். :unsure:

"விசயம் தெரியுமா?"

"ம்ம்ம்.. கேள்விப்பட்டேன்.. மிகவும் கவலையாகப் போய்விட்டது.."

"புள்ளையோட அம்மாவும் விசம் குடிச்சு போய்ச் சேர்ந்திடிச்சு.."

(எனக்கோ நிலைமையின் தீவிரம் அப்போதுதான் விளங்க ஆரம்பித்தது.. வந்தவர்கள் கண்களெல்லாம் சிவந்திருந்தது.. குடிவேறியில் இருந்தார்கள் :unsure: )

"கம்னாட்டிங்க எங்க போனாங்கன்னு தெரியுமா?"

" தெரியாது.. ஆனால் ஏதாவது தெரிஞ்சால் சொல்லுறன்.." :unsure:

"ம்ம்ம்.. சரி"

என் பதிலில் நம்பிக்கை கொண்டவர்களாக புறப்பட்டுச் சென்றார்கள். :unsure:

அடுத்தநாள்.. வழக்கம்போல் வேலைக்குச் சென்றேன்.. அங்கே கட்டட உரிமையாளர்களுக்கும் விவரம் தெரிந்திருந்தது. அவர்களுக்கோ வேலை நின்று போய்விடுமே என்கிற கவலை.. எனக்கு அரிவாள் வெட்டு விழுமோ என்கிற கவலை.. :lol:

உரிமையாளர்கள் தயங்கியபடி என்னிடம் வந்தார்கள்.

" நீங்கதான் இந்த வேலையை பார்த்துக்கிட்டிருக்கீங்க.. உங்ககிட்டயே இந்த புரொஜெக்டை ஒப்படைக்கலாம்னு இருக்கோம்.. முடிச்சுத் தருவீங்களா?"

கரும்பு தின்னக் கூலியா.. :icon_mrgreen:

இனிமேல் நானும் முதலாளிதான் முதலாளிதான்.. மனம் சொல்லியது..

"சரி." :wub:

(தொடரும்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கே எழுதி முடித்துவிடுங்கள் இசை.. காத்திருக்க நேரமில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:) சூப்பரா இருக்கு இசை அண்ணா உங்கள் அனுபவம்....எனக்கும் ஒரு காமடி அனுபவம் இருக்கு...இதை வாசிக்க அதை எழுத்து எண்டு மனம் உசுப்புது..ஆனால் சீரியசாக போகும் உங்கள் திரிக்குள் காமடியப் புகுத்தி திரியை திசை திருப்ப வேண்டாம் எண்டு கையைக் கட்டிக்கிறேன்..தொடருங்கள் இசை அண்ணா....
Link to comment
Share on other sites

பாகம் 6: கைமேல் பணம்

இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். வாழ்வில் சந்தர்ப்பங்கள் என்பவை ஒவ்வொருவருக்கும் ஏதாவதொரு வடிவில் வரும். அவற்றைப் பயன்படுத்தி உங்கள் நிலையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதே வெற்றியின் ரகசியம். தயக்கம் வந்தால் பிறகு எந்த முடிவு எடுக்கும்போதும் ஒரு மயக்கநிலை தோன்றும். :rolleyes:

பல்கலைக்கழகப் படிப்பு முடித்து ஒன்றரைவருட வேலை அனுபவத்துடன் முதலாளியாகிவிட்டேன். பழைய ஒப்பந்தக்காரர்களைக் கொண்டு மீதமுள்ள கட்டட வேலைகளை ஆரம்பித்தேன். ஒவ்வொரு கிழமையும் சம்பள நாள் வரும்போது கட்டட உரிமையாளரிடம் சென்று பொருட்கள் மற்றும் சம்பளம் ஆகியவற்றுக்கு தோராயமாக ஒரு காசோலை வாங்கி வருவேன். ஆனால் அவற்றுக்குள் எனக்கான சம்பளமும் புதைந்திருக்கும். :wub: அவர்களிடம் சொல்லமாட்டேன்.

சொன்னால், நீங்க அப்புறமா வாங்கிக்குங்க சார்.. என்று முடித்துவிடுவார்கள். கடைசிவரை பொறுத்தால் அவர்களிடமும் பணம் இருக்காது. இது என் பழைய முதலாளி சொல்லித் தந்தது. :wub: சம்பளங்கள் போக, சர்வ சாதாரணமாக இரண்டு பொக்கற்றிலும் தலா பத்தாயிரம் வீட்டுக்கு கொண்டு வருவேன்..! :icon_mrgreen:

ஒரு ஆறு மாதங்கள் கழிந்திருக்கும்.. பழைய முதலாளியுடன் வேலை செய்தவர் திடீரென்று கட்டட வேலைத்தளத்தில் தோன்றினார். நான் வேலையை நடத்திக் காசு பார்ப்பதை அறிந்துகொண்ட அவர் தன்னையும் பங்குதாரராகச் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்..

ஆளைப் பார்த்தால் மூஞ்சையெல்லாம் காயம் பட்ட தழும்புகள்.. ஓடிப்போன இவர் கடைசியில் அளிவாள் கோஷ்டியிடம் பிடிபட்டுவிட்டார்.. :lol: ஒரு ஹோட்டல் அறை எடுத்த அதற்குள் இவரை அடைத்து வைத்து நல்லா மொங்கியிருக்கிறார்கள்..! :unsure:

எனக்கோ இவரைச் சேர்க்க மனமில்லை. எனக்கு வெளிநாடு போகும் திட்டம் இருக்கு.. அதனால் எல்லாவற்றையும் விட்டுவிடப் போகிறேன் என்று சொல்லிவிட்டேன்.. எனது பதிலில் அதிருப்தி கொண்டவராகச் சென்றுவிட்டார்.

அது முடிந்த சில நாட்களில், எங்கேயிருந்தோ முளைத்த ஒரு ஒப்பந்தக்காரன் (அவனை நான் பயன்படுத்தியதே இல்லை.) நான் கட்டட வேலைக்குப் பாவித்த பலகைகள் தனக்குச் சொந்தம் என ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான்..! :unsure:

நான் பாவித்த பலகைகளை என் பழைய முதலாளி தனக்கு விற்றுவிட்டதாகவும், நான் அவற்றைப் பயன்படுத்துவிட்டதால் 72,000 ரூபாய்கள் அவனுக்கு வாடகையாகத்தரவேண்டும் என்றும் மிரட்டினான். :unsure:

ஒருதடவை நான் எனது நண்பர்களுடன் கிரிக்கட் விளையாடிக்கொண்டிருந்த நேரம், மைதானத்திற்கு அடியாட்களுடன் வந்து ஒரே களேபரமாகி விட்டது..! நண்பர் ஒருவருக்கு அடிவிழாத குறை.. ஓடித்தப்பிவிட்டார். :unsure:

என்னை அவனது மோட்டார் சைக்கிளில் ஏறுமாறு மிரட்டினான்.. நாங்கதான் வீரப் பரம்பரையாச்சே.. ஏறிப் போனேன். ஓரிடத்தில் வைத்து காசு கேட்டு மிரட்டினான். தற்போதைக்கு இல்லை.. பிறகு பார்க்கலாம் என்று சமாளிபிக்கேஷன் செய்து ஒருவழியாக சேதாரம் எதுவுமின்றி திரும்பி வந்தேன்.. :D

(தொடரும்.)

Link to comment
Share on other sites

நன்றாக உள்ளது இந்தப் பதிவு, தொடர்ந்து எழுதுங்கள். இந்த மாதக் கடைசியில் இந்தத் திரி இடம்பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை... வாழ்த்துக்கள்!!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது இந்தப் பதிவு, தொடர்ந்து எழுதுங்கள். இந்த மாதக் கடைசியில் இந்தத் திரி இடம்பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை... வாழ்த்துக்கள்!!! :)

இசையா கொக்கா?

குறி இருக்கு? கொக்கின் கழுத்து மீது....?? :lol::icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளைப் பார்த்தால் மூஞ்சையெல்லாம் காயம் பட்ட தழும்புகள்.. ஓடிப்போன இவர் கடைசியில் அளிவாள் கோஷ்டியிடம் பிடிபட்டுவிட்டார்.. :lol: ஒரு ஹோட்டல் அறை எடுத்த அதற்குள் இவரை அடைத்து வைத்து நல்லா மொங்கியிருக்கிறார்கள்..! :unsure:

இதைத் தான் "ரூம் போட்டு அடிக்கிறது" என்பார்களோ? நல்ல ஐடியா! :lol:

Link to comment
Share on other sites

... புலம்பெயர் வாழ்வில் இந்த வேலை தேடும் படலமும், நேர்முக பரீட்சைகளும் எம் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தவை! .. எனக்கு 2001ல் இருந்து 2005வரை கல்லில் நாருரித்த நிலைதான் வேலை தேடும் படலமும், நேர்முகப்பரீட்சைகளும்! ... கை கூடி வரும் 3 வாரங்களிலும் போகும், மூன்று மாதங்களிலும் போகும் ... இறுதியாக எறும்பூர கற்குவியும் என்பது போல் ... முயற்சி பலனை தந்தது ...முயற்சி என்பது பட்ட அனுபவங்களினூடானது! ... தொடருங்கள்!

Link to comment
Share on other sites

:) சூப்பரா இருக்கு இசை அண்ணா உங்கள் அனுபவம்....எனக்கும் ஒரு காமடி அனுபவம் இருக்கு...இதை வாசிக்க அதை எழுத்து எண்டு மனம் உசுப்புது..ஆனால் சீரியசாக போகும் உங்கள் திரிக்குள் காமடியப் புகுத்தி திரியை திசை திருப்ப வேண்டாம் எண்டு கையைக் கட்டிக்கிறேன்..தொடருங்கள் இசை அண்ணா....

சுபேஸ்.. நீளமான அனுபவமா இருந்தால் தனித்திரியில் தொடங்குங்கோ.. :D ஒற்றைப்பதிவா இருந்தால் இங்கேயே பதியுங்கோ..! :rolleyes:

நன்றாக உள்ளது இந்தப் பதிவு, தொடர்ந்து எழுதுங்கள். இந்த மாதக் கடைசியில் இந்தத் திரி இடம்பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை... வாழ்த்துக்கள்!!! :)

ஓ.. அப்பிடி ஒரு மேட்டர் இருக்கில்லே.. :rolleyes: நன்றிகள்..! :D

Link to comment
Share on other sites

நன்றிகள் நெல்லையண்னை உங்கள் கருத்துக்கு.. :D

இசையா கொக்கா?

குறி இருக்கு? கொக்கின் கழுத்து மீது....?? :lol::icon_idea: :icon_idea:

விசுகு அண்ணை.. இப்பிடி யோசிச்செல்லாம் எழுதேல்லை.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை, தொடருங்கள்!

வாசிக்க நன்றாக இருக்கின்றது!

உங்கள் அனுபவங்கள், எங்களுக்கு ஒரு வழிகாட்டலாக இருக்கும்!

Link to comment
Share on other sites

பாகம் 7: பொருளாதார இழப்புகள்

மிரட்டல் படலத்தைத் தொடர்ந்து பஞ்சாயத்து பேசி பிரச்சினையைத் தீர்ப்பது என்று முடிவானது. உள்ளூரில் இருந்த ஒரு திமுக புள்ளிதான் பஞ்சாயத்து பார்ப்பார் எனச் சொன்னார்கள். :D

இரு தரப்பும் பேசினோம். எனக்கு சார்பாக ஒரு நில உரிமையாளரும், என்னுடன் பங்குதாரனாக விரும்பியரும் இருந்தார்கள். பலகை விற்றதற்கான ஆதாரத்தை நான் கேட்டேன். என்னுடைய பங்குதாரனாக விரும்பியவன் முதலில் பலகையை இவன் வாங்கவே இல்லை என்று அடித்துச் சொல்லியிருந்தான். பஞ்சாயத்து பேசும்போது தனக்கு அதைப் பற்றித் தெரியாது என்று காலைவாரிவிட்டான். :unsure:

அடப்பாவி முதுகில் குத்திவிட்டானே என்று நொந்துகொண்டு 32,000 ரூபாய்கள் அவனுக்கு கொடுப்பது என ஒத்துக்கொண்டேன். பஞ்சாயத்துப் பேசிய திமுக புள்ளிக்கு 10000 ரூபாய்கள். :rolleyes:

இதற்கிடையே வெளிநாடு போகவென்று ஒரு ஏஜெண்டுக்கு ஒரு லட்சம் கொடுத்து அவனும் டிமிக்கி கொடுத்துவிட்டான்.. ஆக இப்போது ஒரு லட்சத்துக்கு மேல் கடன். :unsure:

இந்தியா போதுமடா சாமி என்ற நிலைக்கு வந்துவிட்டேன்.. ஒரு நண்பனின் அண்ணன் சிங்கையில் இருந்தார். இப்பவும் இருக்கிறார்.. :rolleyes: அவரிடம் அங்குள்ள வேலைவாய்ப்பு பற்றிப் பேசினேன்.. சிவிலுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டெனத் தெரிவித்தார்.. :unsure:

சரி.. செலவோடு செலவு.. நெக்ஸ்ட் ஸ்ரொப்.. சிங்கப்பூர் என்று முடிவு செய்தேன்.. :lol:

குறிப்பு: சில விடயங்கள் தலைப்புக்கு சம்பந்தமில்லாததுபோல் தோன்றும். ஆனால் எந்த மனநிலையில் சில வேலைகளை எடுத்துச் செய்யவேண்டி வந்தது என்பதை விளக்க இவை தேவை என நினைக்கிறேன்..! :D

(தொடரும்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தம்பிமார்! நான் இஞ்சை ஜேர்மனிக்கு வந்த புதிசிலை........எனக்கு வந்த நேர்முகதேர்வுகளையும்,நான் இப்ப மற்ரவைக்கு வைக்கிற நேர்முகதேர்வையும் இஞ்சை எழுதலாமோ? கொஞ்சம் பட்டிக்காடாய் இருக்கும்......ஏனெண்டால்.......அண்டா குண்டா அகப்பை...கோப்பை...கிளீனிங் எண்ட சொல்லுகள் வரும்..... அதுதான் யோசிக்கிறன் :rolleyes::(

Link to comment
Share on other sites

பாகம் 8: ஜோய்ஃபுல் சிங்கப்பூர்

ஏற்கனவே கடன்.. மேலும் கொஞ்சம் கடனை வாங்கிக்கொண்டு :lol: சிங்கப்பூர் பயணமானேன். இலங்கைக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு சிங்கையில் நுழைவு விசா தருவார்கள். என்ன சொல்ல வேண்டும் என்பதை நண்பனின் அண்ணன் சொல்லித் தந்தார். :rolleyes: எதற்காக வருகிறீர்கள் என்று கேட்கும்போது social visit என்று சொல்ல வேண்டும். வழக்கமாக இரண்டு கிழமை விசா தருவார்கள். எப்படியாவது நான்கு கிழமை வாங்கப் பாருங்கள் என்று சொல்லியிருந்தார். :unsure:

இந்தியாவில் அதுவரையில் 11 வருடங்கள் மொத்தமாகக் குப்பை கொட்டியிருந்தேன். அதனால் வெளியேறும்போது Exit visa என்று ஒன்று வாங்க வேண்டும். ஒருவழியாக அதையும் எடுத்துவிட்டேன். சிறு வயதிலேயே இலங்கையை விட்டு வெளியேறியதால் இலங்கை அடையாள அட்டையும் இல்லை. ஒருவேளை சிங்கை விடயம் பிழைத்தால் திரும்பி இந்தியாவுக்குள் வரமுடியாது. :unsure: இலங்கைதான் போகவேண்டும். அடையாள அட்டையே இல்லாமல் இலங்கை போனால் என்ன நிலைமை என்று நினைத்துப் பார்க்கவே நடுக்கமா இருந்தது. :unsure:

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சிங்கைக்கான விமானத்தில் ஏறுகிறேன். ஒருவிதத்தில் பிரச்சினைகளை விட்டு வெளியேறுகிறேன் என்கிற நிம்மதி. இன்னொருவிதத்தில் எதிர்காலம் பற்றிய நிச்சயமற்ற தன்மை.

சிங்கையில் இறங்கி ஒரு சிங்கப்பூர் குடிவரவு அதிகாரியின் முன் நிற்கிறேன்.

"எதற்காக சிங்கப்பூர் வருகிறீர்கள்?"

(மனதுக்குள்.. வேறை வழியே இல்லாமல்தான் என்று சொல்ல நினைத்தாலும் :D) "Social visit."

" சரி.. இரண்டு கிழமைகள் தருகிறேன்."

" நான்கு கிழமைகள் தர முடியுமா?"

"ஏன்"

(வேலை தேடப்போறன் என்றா சொல்லமுடியும்?? :lol: )

"இல்லை.. மலேசியாவில் ஒரு திருமணத்திற்கும் செல்ல வேண்டும்.." தயங்கியபடியே இழுத்தேன். :D

" சரி மூன்று கிழமைகள் தாறன். அது போதும்"

அப்பாடா வந்தவரை லாபம் என்று விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து, வாடகைக் கார் பிடித்து நண்பர்கள் இருக்கும் வீட்டைச் சென்றடைந்தேன். :unsure:

(தொடரும்.)

Link to comment
Share on other sites

வணக்கம் தம்பிமார்! நான் இஞ்சை ஜேர்மனிக்கு வந்த புதிசிலை........எனக்கு வந்த நேர்முகதேர்வுகளையும்,நான் இப்ப மற்ரவைக்கு வைக்கிற நேர்முகதேர்வையும் இஞ்சை எழுதலாமோ? கொஞ்சம் பட்டிக்காடாய் இருக்கும்......ஏனெண்டால்.......அண்டா குண்டா அகப்பை...கோப்பை...கிளீனிங் எண்ட சொல்லுகள் வரும்..... அதுதான் யோசிக்கிறன் :rolleyes::(

குமாரசாமியண்ணை.. :D

பலவிதமான அனுபவப் பகிர்வையும் மேற்கொள்வதுதானே இந்தத் திரியின் நோக்கம்..! :rolleyes: உங்கள் பகிர்வையும் எடுத்துவிடுங்கோ.. :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.