Jump to content

நேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல்


Recommended Posts

இப்படி இருந்தும் எதற்காக உங்களை அவர்கள் வேலையில் சேர்த்தார்கள் என எண்ணுகிறீர்கள்? குறிப்பாக அந்த வெற்றிக்கான காரணங்கள் என்ன?

நீங்கள் உங்களை எப்படிக் காண்பிக்கிறீர்கள் என்பதில் பாதி தங்கியிருக்கிறது என நினைக்கிறேன்.. :unsure:

எல்லாம் தெரிந்த ஒருத்தனை வேலைக்கு எடுக்க வேண்டுமானால் தெரிந்தவர் எல்லோரும் ஓய்வு பெற்றவுடன் அந்த வேலையைச் செய்ய ஆளிராது. ஆக, வேலை தெரியாத ஆட்களையும் நிறுவனங்கள் வேலைக்கு எடுத்தாக வேண்டும்.. :rolleyes:

அவர்கள் எதிர்பார்ப்பது, என்னால் செய்யமுடியும் என்கிற உங்கள் உறுதியான வார்த்தைகளை.. அதற்காக ஓவர் பில்டப் குடுக்கக் கூடாது.. அதை நிருபிப்பதற்கு இதற்குமுன் எவ்வாறான சவால்கள் எழுந்தன.. அதை எப்படி சமாளித்தோம் என்று கூறி அவர்களின் கருத்தைக் கவரலாம்..

அந்த நேரத்தில் அப்படிக் கூறுவதற்கு என்னிடம் எதுவும் பெரிதாக இல்லை.. ஆனால் நான் செய்த புரொஜெக்டில் வடிவமைப்பு வேலை முழுவதையும் நானே செய்தேன்.. ஒரு வகுப்புத்தோழர் அறவே பங்கெடுக்கவில்லை (ஏதோ மண்டைப் பிழைமாதிரி வந்து ஊருக்குப் போய்விட்டார்..) மற்றையவர் பேராசிரியருடன் கலந்துரையாடுவது, பேப்பர் வேலைகள் செய்தார்.. அதைச் சொல்லி சமாளித்தேன்..

அதுமட்டுமில்லாமல், எனது சுயவேலை அனுபவத்தையும் சொல்லியிருந்தேன். பிறகு கேள்விப்பட்டேன் எனது முதல்தர கல்வித் தகைமை உதவியதாக.. அதுபோல அந்த நிறுவனத்தில் ஏற்கனவே ஒரு தமிழகத்தவர் வேலை செய்துகொண்டிருந்தார். அவர் எனது கல்லூரியின் தகைமையை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.. இப்படிப் பல காரணங்கள்..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 346
  • Created
  • Last Reply

வேலை கிடைப்பதில், நேர்முகப்பரீட்சையில், என்னென்ன தவறுகளை நீங்கள் செய்யவில்லை?

இங்கே சொல்லப்படும் 'கண்ணும் கண்ணும் கலப்பது' (eye contact) அங்கு முக்கியமாக இருந்ததா?

இங்கு பொதுவாக உறுதிப்படுத்தல் (reference check) செய்வார்கள், செய்தார்களா? ஏன் செய்யவில்லை?

Link to comment
Share on other sites

வேலை கிடைப்பதில், நேர்முகப்பரீட்சையில், என்னென்ன தவறுகளை நீங்கள் செய்யவில்லை?

இங்கே சொல்லப்படும் 'கண்ணும் கண்ணும் கலப்பது' (eye contact) அங்கு முக்கியமாக இருந்ததா?

இங்கு பொதுவாக உறுதிப்படுத்தல் (reference check) செய்வார்கள், செய்தார்களா? ஏன் செய்யவில்லை?

கண்ணும் கண்ணும் பார்ப்பது என்பதை நான் இன்றுதான் அறிகிறேன்.. :unsure:

நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை நீங்களே நம்பவேண்டும்.. அது உங்கள் உடல்மொழியில் (Body Language) வெளிப்படும்.. :rolleyes:

முதலிலேயே குறிப்பிட்டிருந்தேன்.. எனக்கு Microsoft office, AutoCad தெரியும் என்று Resume இல்போட்டிருந்ததாக.. ஆனால் அவற்றில் எனக்கு ஆற்றல் இருந்திருக்கவில்லை.. :D

ஆனால் என்னை நானே சமாதானம் (சப்பைக்கட்டு :D ) செய்து அதை ஒரு பொய் இல்லை என்பதுமாதிரி நம்பிக் கொண்டேன்.. எப்படி?

Microsoft word, Excel.. இரண்டையும் நண்பர்களின் வீட்டில் ஓரளவு பரீட்சயப் படுத்தி வைத்திருந்தேன்.. ஆக அது தெரியும்.. :D எவ்வளவு தெரியும் என்பதுதான் கேள்விக்குறி.. :lol:

கல்லூரியில் AutoCad இல் இரண்டுதடவை தடவியிருக்கிறேன்.. :D ஆக அதுவும் எனக்கு "தெரியும்" :D. ஆனால் எந்த அளவில் என்பதுதான் கேள்வி.. :lol:

ஆக, இந்த இரு விடயங்களையும் நான் முதலில் நம்புவேன்.. எவ்வளவு என்று கேட்டால் பெரிதாக இல்லை என்று உண்மையைச் சொல்வேன்.. அதனால் உடல்மொழி பாதிக்கப் படாது.. :rolleyes:

Link to comment
Share on other sites

.

என்ன துறை என்பதையும் பொறுத்தது அகூதா. சிலவற்றிற்கு inter personnel skills முக்கியம். சிலவற்றிற்கு tech skills முக்கியம்.

finance, sales , management என்பவற்றில் நிறைய people skill எதிர்பார்ப்பார்கள்.

Link to comment
Share on other sites

மற்றையது சிங்கப்பூரில் Reference Check என்பது இல்லை.. உங்கள் கல்விச்சான்றிதழ், அனுபவச் சான்றிதழ் மற்றும் இன்னபிற சான்றுகளையும் பரிசோதித்துவிட்டுத்தான் வேலை தருவார்கள்..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் இசை

Link to comment
Share on other sites

நேர்முகத் தேர்வுக்கள் பற்றித் தெரியாத சனமும் இங்கை இருக்கா. ஆண்டவா................... :lol:

Link to comment
Share on other sites

நேர்முகத் தேர்வுக்கள் பற்றித் தெரியாத சனமும் இங்கை இருக்கா. ஆண்டவா................... :lol:

உங்களின் அனுபவங்களையும் எடுத்து விடுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேர்முகத் தேர்வுக்கள் பற்றித் தெரியாத சனமும் இங்கை இருக்கா. ஆண்டவா................... :lol:

ஆமா தெரியாது.

அதை நாம் தெரிந்து கொள்வதில் தங்களுக்கு என் ன வியப்பு? :( :( :(

Link to comment
Share on other sites

சுமார் எட்டு வருசத்திற்கு முன்னர் பிரபல இரவு விடுதியான HAVANA CLUB வேலை செய்து கொண்டிருந்தேன் அப்பொழுது எனது மகளும் பிறந்திருந்த நேரம் தொடந்தும் இரவு விடுதியில் வேலை செய்து கொண்டிருக்க முடியாது என்று தீர்மானித்திருந்தேன் காரணம் இரவு 6 மணிக்கு வேலை தொடங்கினால் மறுநாள் காலை 5 மணிக்குத்தான் வேலை முடியும் அது மட்டுமல்ல அதி உயர் நாகரீகம் என்கிற அத்தனை விடயங்களும் நடந்தேறும் இடம் அரைகுறை ஆடைகளும் ஆடை அவிழ்ப்பு நடனங்களும் நடக்கும் இடம். எனவே அவை தனிப்பட்ட வாழ்க்கையும் பாதிக்கும் என்பதால் வேலையை மாற்ற திட்டமிட்டு பத்திரிகை விழம்பரமும் கொடுத்து விட்டு அதோடு நான் வேலை செய்யும் விடுதிக்கு பெரிய முதலாளிகள் பணக்காரர்கள் எல்லாரும் வந்து போவதால் தெரிந்தவர்களிடமும் வேலை தேடுவதாக சொல்லி வைத்திருந்தேன்

அப்படித்தான் விடுதிக்கு வந்து போகும் ஒரு உணவு விடுதியின் முதலாளி பெண் ஒருவர் 55 வயதுகள் இருக்கும் தன்னுடைய உணவு விடுதிக்கு நடத்துனர் ஒருவர் தேவை தன்னை வந்து பார்க்க சொல்லியிருந்தார். அவர் ஏற்கனவே பழக்கமானவர் என்பதால் சாதாரணமாக என்னுடைய பயோடேட்டாவை மட்டும் தயார்பண்ணி எடுத்துக்கொண்டு போயிருந்தேன்.

அவர் என்னை நேர்முக தேர்விற்கு வரச்சொன்ன இடம் அவரது உணவு விடுதிக்கல்ல அவரது வீட்டிற்கு. என்னை வரவேற்றவர் கேள்விகளை தொடங்கினார்..

நீதான் உணவு விடுதியை பொறுப்பாக நடத்தவேண்டும் அதாவது ஒரு பணியாள் இல்லாவிட்டாலும் அந்த இடத்தை உடனடியாக நீதான் நிரப்ப வேண்டும்.

உனக்கு பிட்சா போடத் தெரியுமா??

ஒரு தடைவை பார்த்தால் செய்துவிடுவேன்.

சாண்விச் செய்ய வருமா??

ஒரு தடைவை பார்தால் செய்து விடுவேன்

உணவு பரிமாறத் தெரியுமா??

ஒரு தடைவை செய்து பார்த்தால் அடுத்த டைவை செய்து விடுவேன்.

என்னை எத்தனை தடைவை பார்த்திருக்கிறாய்

பலதடைவைகள்

அப்பொழுது ஏன் இன்னமும் எதுவுவே செய்யவில்லை???

பி.கு ..எனக்கு அந்த வேலை கிடைத்து விட்டிருந்தது. <_< <_<

Link to comment
Share on other sites

இசை தொடருங்கள்

547112_262920013801426_100002502872915_563735_161252234_n.jpg

Link to comment
Share on other sites

நன்றிகள் சாத்திரி அண்ணா உங்கள் அனுபவக் குறிப்பிற்கு.. :D தெரியாது என்று சொன்னாலும் வேலை கிடைக்கும் சந்தர்ப்பங்கள் உண்டு என்பதற்கு உங்கள் அனுபவம் ஒரு சான்று. உடல்மொழியும், Presentation உன் முக்கியம் என்பதை உணர்த்தியிருக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

பாகம் 12: வேலை கிடைத்தால் மட்டும் போதுமா?

திங்கட்கிழமை முதல்நாள் வேலை. எப்படியும் ஒரு கருணைக்காலம் (Grace Period) இருக்கும் என்று மனம் சொன்னது. ஆனால் அங்கு எவ்வாறு வேலை நடைபெறுகிறது என்பதில் எனக்கு ஒரு ஞானமும் இல்லை. :rolleyes:

தொடக்க நாளில் மரியாதை பரவாயில்லை. எல்லோருடனும் கதைப்பது; மதிய உணவு என்று நேரம் போனது. அங்கே இரண்டு மென்பொருட்களை உபயோகித்தார்கள். பஞ்சைத் தவிர வேறு மென்பொருட்களை நான் அப்போது அறிந்திருக்கவில்லை. :lol: அந்த மென்பொருள் உபயோகிப்பதற்கான இரு பெரிய புத்தகங்களைக் கொடுத்த அதைப் படித்துப் பரீட்சயப் படுத்தும்படி கேட்டிருந்தார்கள். unsure.gif

நானும் வாசிக்கிறேன்.. வாசிக்கிறேன்.. நித்திரைதான் வருது.. கணினியில் சென்று பயிற்சி செய்யலாம் என்றால் கணினியை இயக்குவதற்கே முதலில் எனக்குப் பயிற்சி தேவையாக இருந்தது. :D அங்கிருந்தவர்களிடம் கேட்டு ஒரு மாதிரி பரீட்சயப்படுத்திக் கொண்டிருந்தேன்.

அங்கே மென்பொருளுக்கான லைசென்ஸ் குறைவாக இருந்ததால், அந்தக் கணினிகள் பொதுவாக வைக்கப்பட்டிருக்கும். ஏற்கனவே நான்கு வடிவமைப்பாளர்கள் இருந்தார்கள். ஆனால் மூன்று கணினிகள்தான். இதில் நான் எங்கேபோய் பயிற்சி செய்வது. சிதம்பரசக்கரத்தைப் பேய்பார்த்த கதைதான்.

ஒரு இரண்டு கிழமைகள் கடந்திருக்கும்.. :unsure: அங்கிருந்த தொழில்நுட்ப மேலாளருக்கு என்னில் குறைபாடுகள் தெரிய ஆரம்பித்துவிட்டது. என்னிடம் இரண்டு பெரிய வேலைத்திட்டத்தைக் கொடுத்துவிட்டார். அதாவது இதைச் செய்து காட்டுங்கள்.. இல்லாவிட்டால் வீட்டுக்கு அனுப்புவோம் என்பது போன்ற சமிக்கை. :unsure:

முதலாவது வேலைத்திட்டம் ஒரு நான்கு அடுக்குகள் கொண்ட தொழிற்சாலை. கனதியான பாரங்கள் சுமக்குமாறு அதன் தளம் வடிவமைக்கப்பட வேண்டும். அதற்குரிய ஒப்பந்தத்தொகை, பொருட்களின் அளவுகள் ஏற்கனவே நிர்ணயமாகிவிட்டது. அந்தத் தொகைக்குள் வடிவமைப்பை முடிக்க வேண்டும். :unsure:

இரண்டாவது வேலைத்திட்டம், ஏற்கனவே இருக்கும் நிலக்கீழ் சுரங்கப் பாதை (subway அல்லது tube அல்லது Mass Rail Transit) யின் மேலாக நீரைக் காவிச்செல்லும் கொங்கிரீட்டிலான அமைப்பு. அதன் பாரம் சுரங்கத்தின் மேல் இறங்காதவாறு வடிவமைக்க வேண்டும்.இதற்குமேலாக நிலமட்டத்தில் பெருந்தெருவும் இருக்கிறது. அதன் பாரத்தையும் இந்த நீர்க்காவி சமாளிக்க வேண்டும். இதுதான் என்னுடைய இரண்டாவது புரொஜெக்ட். :D கணினியையே தடவிக்கொண்டிருந்த எனக்கு அது தேவைதான்.. :lol:

நான் இரண்டாம் மாதத்தில் இந்த இரண்டு வேலைத்திட்டங்களையும் முடித்துவிடுவேன் என எதிர்பார்த்தார்கள். ஆனால் மூன்று மாதங்கள் ஆகியும் என்னால் முடிக்க முடியவில்லை. ஏதாவது பிழை சொல்லிக்கொண்டே இருந்தார்கள். :unsure:

மூன்றுமாதங்கள் அவதானிப்புக் காலம் (Probationary period). என்னை வேலையில் இருந்து நீக்குவது குறித்து அந்த தமிழகத்து ஊழியருடன் என் மேலாளர் பேசிக்கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. :unsure:

(தொடரும்.)

Link to comment
Share on other sites

பாகம் 13: முயற்சி திருவினை ஆக்கும்.

தமிழகத்து நண்பர் எப்படியோ பேசி ஒருவாறு நிகழவிருந்த வரலாற்றுத் தவறைத் தடுத்துவிட்டார்..! :D நான்கு மாதங்கள் பார்ப்பதென முடிவெடுத்திருக்கிறார்கள். இது பின்னாளில் எனக்குத் தெரியவந்தது. இத்தருணத்தில் அந்த நண்பருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். :rolleyes:

இது சரிவராது என்று எனக்கு விளங்க ஆரம்பித்தது. ஐந்து மணிக்கு வேலை முடியும் என்றால் ஏழுமணிவரை நின்று வேலையைக் கற்க முயற்சி செய்தேன்..! :unsure: ஏட்டுக்கல்வி என்பது ஒரு அளவுவரைதான். உண்மையான வேலை என்பது வேறுபல நுணுக்கங்களைக் கொண்டது. இன்று நான் ஒரு நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அன்று அவர்கள் என்னை நீச்சல்குளத்தின் ஆழமான பகுதியில் தள்ளிவிட்டதுதான் காரணம். :rolleyes:

அங்கிருந்த புத்தகங்களைப் படித்து மென்பொருளில் இருந்த குறைபாடுகளைக் கண்டுபிடித்து ஒரு நிலைமைக்கு வர ஒரு ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. நாலாவது மாதத்தின்பின் என் செயற்பாடுகளில் தென்பட்ட முன்னேற்றங்களை அடுத்து என்னை நிரந்தரமாக்கி விட்டார்கள். :D

அந்தக் காலகட்டத்தில் எனக்கு ஏற்பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. குதிரைப் பந்தயத்தில் நொண்டிக்குதிரைபோல் நான் ஓடிக்கொண்டிருந்தேன். இடையில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இலங்கைக்குத் திரும்பிவிடலாமா என்றும் யோசித்ததுண்டு. :rolleyes:

பிற்பாடு ஒரு முடிவுக்கு வந்தேன். இந்த நிறுவனத்தில் இருப்பவர்களுக்கு நான் யார் என்பதை தெரியப்படுத்த வேண்டும். என்னை வேண்டாம் என்றவர்கள் போகாதே என்று தடுக்க வேண்டும். இதுதான் லட்சியம். :rolleyes:

ஒரு வருடம் கழிகின்றது. ஓரளவு சூட்சுமங்களைப் புரிந்துகொண்டுவிட்டேன். வேலைக்குப் பாதிப்பில்லை. பகுதிநேரமாக முதுகலைப் பட்டம் பெறுவது அப்போது நடந்துகொண்டிருந்தது. நானும் எனது நிறுவனத்தில் கேட்டுப் பார்த்தேன். ஏற்கனவே ஒரு சீனப் பெண் அந்த அனுமதியைப் பெற்றுவிட்டதாகவும் இரண்டுபேரை அனுப்ப இயலாது என்றும் சொல்லிவிட்டார்கள். கறள் நம்பர் 2. :D

இரண்டு வருடங்கள் கழிந்துவிட்டன. நான் இப்போது தேர்ந்துவிட்டேன். அப்போது பொருளாதார மந்தநிலை நிலவியது. எங்கள் நிறுவனத்தில் சொல்லிக்கொள்ளும்படி வேலையில்லை. ஆனால் மில்லியன் டொலர்கள் பெறுமானமுள்ள ஒப்பந்தங்கள் எப்படியோ என்னால் பெற்றுவிடக்கூடியதாக இருந்தது. வடிவமைப்பில் நெளிவு சுளிவுகளை அறிந்து சிக்கனமான தொகையைவேலைத்திட்டங்களுக்கு சமர்ப்பிப்பேன். அதே தொகைக்குள் திட்டங்களையும் முடிப்பேன். மேலாளர்களுக்கு என்மீது நல்ல மதிப்பு வந்துவிட்டது. அடிக்கடி பல்லைக் காட்டுவார்கள். :D

அச்சமயத்தில் அங்கு வேலைபார்த்துக்கொண்டிருந்த ஒரு சீனியர் வடிவமைப்பாளருக்கும் நிறுவனத்திற்கும் பிரச்சினை வந்துவிட்டது. அவரால் வேலைகள் எடுத்துத்தர முடியவில்லை. அவரை நிறுவனத்தை விட்டு அனுப்பிவிட்டார்கள். அவர் இடத்திற்கு என்னை சீனியராக தரம் உயர்த்தினார்கள்..! கட்டடங்கள், பாலங்கள் என்று பல விடயங்களைக் கற்றுத் தேர்ந்தேன்.

(தொடரும்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எதோ எனக்கு சம்பந்தம இல்லாத பகுதி என்டு நினைத்து இதுக்குள்ள வராமல் இருந்துட்டன்.வந்து பாத்தால் இசையின எழுத்து நடையில் மயங்கி ஒரே மூச்சில் எல்லாத்தையும் வாசித்து முடித்து விட்டேன். அது சரி அந்த டாவுக்கு என்ன நடந்தது. ஒரு சின்ன ஆர்வம்தான். :lol:

Link to comment
Share on other sites

கருத்துக்களுக்கு நன்றிகள் அபராஜிதன், சஜீவன். :D

டாவு மேற்றர் என்னெண்டால் :unsure: .. சிங்கப்பூர் போய் இரண்டு வருடம் கழித்து என்ன நடந்தது என்று பாருங்கோ.. :unsure:

"

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயய்யோ இப்படியா நடந்திச்சு.....ரொம்பப் பாவமா இருக்கு :D :D :lol:

Link to comment
Share on other sites

:D :D :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை கேட்கிறேன் என்று கோபப்படக்கூடாது...இப்படி அழுதழுது கட்டி பிறகு எப்படி இப்போது ஒரு பொண்ணுக்கு அப்பாவாக?..... வழியில்லை என்று அழுது ஓய்ஞ்சுபோய் உங்களை நீங்களே தேத்திக்கிட்டீங்களா? :D

Link to comment
Share on other sites

இசை கேட்கிறேன் என்று கோபப்படக்கூடாது...இப்படி அழுதழுது கட்டி பிறகு எப்படி இப்போது ஒரு பொண்ணுக்கு அப்பாவாக?..... வழியில்லை என்று அழுது ஓய்ஞ்சுபோய் உங்களை நீங்களே தேத்திக்கிட்டீங்களா? :D

சீ.. அது சும்மா பகிடிக்கு.. :D உண்மையில் கந்தர்வ மணம் செய்தேன்..! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

கருத்துக்களுக்கு நன்றிகள் அபராஜிதன், சஜீவன். :D

டாவு மேற்றர் என்னெண்டால் :unsure: .. சிங்கப்பூர் போய் இரண்டு வருடம் கழித்து என்ன நடந்தது என்று பாருங்கோ.. :unsure:

"

:lol: :lol: :lol:

இசை இரண்டு கையாலும் தலையை சொறியும் காட்சியை கற்பனை செய்து பார்த்த போது...

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

பாகம் 13: முயற்சி திருவினை ஆக்கும்.

அங்கிருந்த புத்தகங்களைப் படித்து மென்பொருளில் இருந்த குறைபாடுகளைக் கண்டுபிடித்து ஒரு நிலைமைக்கு வர ஒரு ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. நாலாவது மாதத்தின்பின் என் செயற்பாடுகளில் தென்பட்ட முன்னேற்றங்களை அடுத்து என்னை நிரந்தரமாக்கி விட்டார்கள். :D

வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப உலகில் பல்கலைக்கழகங்களில் கற்கவேண்டியது : 'எவ்வாறு புத்தகங்களை இல்லை கணனியில் விடயங்களை வேலைக்கு ஏற்றவாறு அறியக்கூடிய இயலுமை'.

Link to comment
Share on other sites

நீங்கள் அப்போது பயன்படுத்திய மென்பொருள்களின் பெயர்களையும் இப்போது பயன் படுத்தும் மென்பொருள்களின் பெயர்களையும்

எழுதலாம் எண்டால் எழுதுங்க..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.