Jump to content

நேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல்


Recommended Posts

இப்படி இருந்தும் எதற்காக உங்களை அவர்கள் வேலையில் சேர்த்தார்கள் என எண்ணுகிறீர்கள்? குறிப்பாக அந்த வெற்றிக்கான காரணங்கள் என்ன?

நீங்கள் உங்களை எப்படிக் காண்பிக்கிறீர்கள் என்பதில் பாதி தங்கியிருக்கிறது என நினைக்கிறேன்.. :unsure:

எல்லாம் தெரிந்த ஒருத்தனை வேலைக்கு எடுக்க வேண்டுமானால் தெரிந்தவர் எல்லோரும் ஓய்வு பெற்றவுடன் அந்த வேலையைச் செய்ய ஆளிராது. ஆக, வேலை தெரியாத ஆட்களையும் நிறுவனங்கள் வேலைக்கு எடுத்தாக வேண்டும்.. :rolleyes:

அவர்கள் எதிர்பார்ப்பது, என்னால் செய்யமுடியும் என்கிற உங்கள் உறுதியான வார்த்தைகளை.. அதற்காக ஓவர் பில்டப் குடுக்கக் கூடாது.. அதை நிருபிப்பதற்கு இதற்குமுன் எவ்வாறான சவால்கள் எழுந்தன.. அதை எப்படி சமாளித்தோம் என்று கூறி அவர்களின் கருத்தைக் கவரலாம்..

அந்த நேரத்தில் அப்படிக் கூறுவதற்கு என்னிடம் எதுவும் பெரிதாக இல்லை.. ஆனால் நான் செய்த புரொஜெக்டில் வடிவமைப்பு வேலை முழுவதையும் நானே செய்தேன்.. ஒரு வகுப்புத்தோழர் அறவே பங்கெடுக்கவில்லை (ஏதோ மண்டைப் பிழைமாதிரி வந்து ஊருக்குப் போய்விட்டார்..) மற்றையவர் பேராசிரியருடன் கலந்துரையாடுவது, பேப்பர் வேலைகள் செய்தார்.. அதைச் சொல்லி சமாளித்தேன்..

அதுமட்டுமில்லாமல், எனது சுயவேலை அனுபவத்தையும் சொல்லியிருந்தேன். பிறகு கேள்விப்பட்டேன் எனது முதல்தர கல்வித் தகைமை உதவியதாக.. அதுபோல அந்த நிறுவனத்தில் ஏற்கனவே ஒரு தமிழகத்தவர் வேலை செய்துகொண்டிருந்தார். அவர் எனது கல்லூரியின் தகைமையை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.. இப்படிப் பல காரணங்கள்..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 346
  • Created
  • Last Reply

வேலை கிடைப்பதில், நேர்முகப்பரீட்சையில், என்னென்ன தவறுகளை நீங்கள் செய்யவில்லை?

இங்கே சொல்லப்படும் 'கண்ணும் கண்ணும் கலப்பது' (eye contact) அங்கு முக்கியமாக இருந்ததா?

இங்கு பொதுவாக உறுதிப்படுத்தல் (reference check) செய்வார்கள், செய்தார்களா? ஏன் செய்யவில்லை?

Link to comment
Share on other sites

வேலை கிடைப்பதில், நேர்முகப்பரீட்சையில், என்னென்ன தவறுகளை நீங்கள் செய்யவில்லை?

இங்கே சொல்லப்படும் 'கண்ணும் கண்ணும் கலப்பது' (eye contact) அங்கு முக்கியமாக இருந்ததா?

இங்கு பொதுவாக உறுதிப்படுத்தல் (reference check) செய்வார்கள், செய்தார்களா? ஏன் செய்யவில்லை?

கண்ணும் கண்ணும் பார்ப்பது என்பதை நான் இன்றுதான் அறிகிறேன்.. :unsure:

நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை நீங்களே நம்பவேண்டும்.. அது உங்கள் உடல்மொழியில் (Body Language) வெளிப்படும்.. :rolleyes:

முதலிலேயே குறிப்பிட்டிருந்தேன்.. எனக்கு Microsoft office, AutoCad தெரியும் என்று Resume இல்போட்டிருந்ததாக.. ஆனால் அவற்றில் எனக்கு ஆற்றல் இருந்திருக்கவில்லை.. :D

ஆனால் என்னை நானே சமாதானம் (சப்பைக்கட்டு :D ) செய்து அதை ஒரு பொய் இல்லை என்பதுமாதிரி நம்பிக் கொண்டேன்.. எப்படி?

Microsoft word, Excel.. இரண்டையும் நண்பர்களின் வீட்டில் ஓரளவு பரீட்சயப் படுத்தி வைத்திருந்தேன்.. ஆக அது தெரியும்.. :D எவ்வளவு தெரியும் என்பதுதான் கேள்விக்குறி.. :lol:

கல்லூரியில் AutoCad இல் இரண்டுதடவை தடவியிருக்கிறேன்.. :D ஆக அதுவும் எனக்கு "தெரியும்" :D. ஆனால் எந்த அளவில் என்பதுதான் கேள்வி.. :lol:

ஆக, இந்த இரு விடயங்களையும் நான் முதலில் நம்புவேன்.. எவ்வளவு என்று கேட்டால் பெரிதாக இல்லை என்று உண்மையைச் சொல்வேன்.. அதனால் உடல்மொழி பாதிக்கப் படாது.. :rolleyes:

Link to comment
Share on other sites

.

என்ன துறை என்பதையும் பொறுத்தது அகூதா. சிலவற்றிற்கு inter personnel skills முக்கியம். சிலவற்றிற்கு tech skills முக்கியம்.

finance, sales , management என்பவற்றில் நிறைய people skill எதிர்பார்ப்பார்கள்.

Link to comment
Share on other sites

மற்றையது சிங்கப்பூரில் Reference Check என்பது இல்லை.. உங்கள் கல்விச்சான்றிதழ், அனுபவச் சான்றிதழ் மற்றும் இன்னபிற சான்றுகளையும் பரிசோதித்துவிட்டுத்தான் வேலை தருவார்கள்..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் இசை

Link to comment
Share on other sites

நேர்முகத் தேர்வுக்கள் பற்றித் தெரியாத சனமும் இங்கை இருக்கா. ஆண்டவா................... :lol:

Link to comment
Share on other sites

நேர்முகத் தேர்வுக்கள் பற்றித் தெரியாத சனமும் இங்கை இருக்கா. ஆண்டவா................... :lol:

உங்களின் அனுபவங்களையும் எடுத்து விடுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேர்முகத் தேர்வுக்கள் பற்றித் தெரியாத சனமும் இங்கை இருக்கா. ஆண்டவா................... :lol:

ஆமா தெரியாது.

அதை நாம் தெரிந்து கொள்வதில் தங்களுக்கு என் ன வியப்பு? :( :( :(

Link to comment
Share on other sites

சுமார் எட்டு வருசத்திற்கு முன்னர் பிரபல இரவு விடுதியான HAVANA CLUB வேலை செய்து கொண்டிருந்தேன் அப்பொழுது எனது மகளும் பிறந்திருந்த நேரம் தொடந்தும் இரவு விடுதியில் வேலை செய்து கொண்டிருக்க முடியாது என்று தீர்மானித்திருந்தேன் காரணம் இரவு 6 மணிக்கு வேலை தொடங்கினால் மறுநாள் காலை 5 மணிக்குத்தான் வேலை முடியும் அது மட்டுமல்ல அதி உயர் நாகரீகம் என்கிற அத்தனை விடயங்களும் நடந்தேறும் இடம் அரைகுறை ஆடைகளும் ஆடை அவிழ்ப்பு நடனங்களும் நடக்கும் இடம். எனவே அவை தனிப்பட்ட வாழ்க்கையும் பாதிக்கும் என்பதால் வேலையை மாற்ற திட்டமிட்டு பத்திரிகை விழம்பரமும் கொடுத்து விட்டு அதோடு நான் வேலை செய்யும் விடுதிக்கு பெரிய முதலாளிகள் பணக்காரர்கள் எல்லாரும் வந்து போவதால் தெரிந்தவர்களிடமும் வேலை தேடுவதாக சொல்லி வைத்திருந்தேன்

அப்படித்தான் விடுதிக்கு வந்து போகும் ஒரு உணவு விடுதியின் முதலாளி பெண் ஒருவர் 55 வயதுகள் இருக்கும் தன்னுடைய உணவு விடுதிக்கு நடத்துனர் ஒருவர் தேவை தன்னை வந்து பார்க்க சொல்லியிருந்தார். அவர் ஏற்கனவே பழக்கமானவர் என்பதால் சாதாரணமாக என்னுடைய பயோடேட்டாவை மட்டும் தயார்பண்ணி எடுத்துக்கொண்டு போயிருந்தேன்.

அவர் என்னை நேர்முக தேர்விற்கு வரச்சொன்ன இடம் அவரது உணவு விடுதிக்கல்ல அவரது வீட்டிற்கு. என்னை வரவேற்றவர் கேள்விகளை தொடங்கினார்..

நீதான் உணவு விடுதியை பொறுப்பாக நடத்தவேண்டும் அதாவது ஒரு பணியாள் இல்லாவிட்டாலும் அந்த இடத்தை உடனடியாக நீதான் நிரப்ப வேண்டும்.

உனக்கு பிட்சா போடத் தெரியுமா??

ஒரு தடைவை பார்த்தால் செய்துவிடுவேன்.

சாண்விச் செய்ய வருமா??

ஒரு தடைவை பார்தால் செய்து விடுவேன்

உணவு பரிமாறத் தெரியுமா??

ஒரு தடைவை செய்து பார்த்தால் அடுத்த டைவை செய்து விடுவேன்.

என்னை எத்தனை தடைவை பார்த்திருக்கிறாய்

பலதடைவைகள்

அப்பொழுது ஏன் இன்னமும் எதுவுவே செய்யவில்லை???

பி.கு ..எனக்கு அந்த வேலை கிடைத்து விட்டிருந்தது. <_< <_<

Link to comment
Share on other sites

இசை தொடருங்கள்

547112_262920013801426_100002502872915_563735_161252234_n.jpg

Link to comment
Share on other sites

நன்றிகள் சாத்திரி அண்ணா உங்கள் அனுபவக் குறிப்பிற்கு.. :D தெரியாது என்று சொன்னாலும் வேலை கிடைக்கும் சந்தர்ப்பங்கள் உண்டு என்பதற்கு உங்கள் அனுபவம் ஒரு சான்று. உடல்மொழியும், Presentation உன் முக்கியம் என்பதை உணர்த்தியிருக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

பாகம் 12: வேலை கிடைத்தால் மட்டும் போதுமா?

திங்கட்கிழமை முதல்நாள் வேலை. எப்படியும் ஒரு கருணைக்காலம் (Grace Period) இருக்கும் என்று மனம் சொன்னது. ஆனால் அங்கு எவ்வாறு வேலை நடைபெறுகிறது என்பதில் எனக்கு ஒரு ஞானமும் இல்லை. :rolleyes:

தொடக்க நாளில் மரியாதை பரவாயில்லை. எல்லோருடனும் கதைப்பது; மதிய உணவு என்று நேரம் போனது. அங்கே இரண்டு மென்பொருட்களை உபயோகித்தார்கள். பஞ்சைத் தவிர வேறு மென்பொருட்களை நான் அப்போது அறிந்திருக்கவில்லை. :lol: அந்த மென்பொருள் உபயோகிப்பதற்கான இரு பெரிய புத்தகங்களைக் கொடுத்த அதைப் படித்துப் பரீட்சயப் படுத்தும்படி கேட்டிருந்தார்கள். unsure.gif

நானும் வாசிக்கிறேன்.. வாசிக்கிறேன்.. நித்திரைதான் வருது.. கணினியில் சென்று பயிற்சி செய்யலாம் என்றால் கணினியை இயக்குவதற்கே முதலில் எனக்குப் பயிற்சி தேவையாக இருந்தது. :D அங்கிருந்தவர்களிடம் கேட்டு ஒரு மாதிரி பரீட்சயப்படுத்திக் கொண்டிருந்தேன்.

அங்கே மென்பொருளுக்கான லைசென்ஸ் குறைவாக இருந்ததால், அந்தக் கணினிகள் பொதுவாக வைக்கப்பட்டிருக்கும். ஏற்கனவே நான்கு வடிவமைப்பாளர்கள் இருந்தார்கள். ஆனால் மூன்று கணினிகள்தான். இதில் நான் எங்கேபோய் பயிற்சி செய்வது. சிதம்பரசக்கரத்தைப் பேய்பார்த்த கதைதான்.

ஒரு இரண்டு கிழமைகள் கடந்திருக்கும்.. :unsure: அங்கிருந்த தொழில்நுட்ப மேலாளருக்கு என்னில் குறைபாடுகள் தெரிய ஆரம்பித்துவிட்டது. என்னிடம் இரண்டு பெரிய வேலைத்திட்டத்தைக் கொடுத்துவிட்டார். அதாவது இதைச் செய்து காட்டுங்கள்.. இல்லாவிட்டால் வீட்டுக்கு அனுப்புவோம் என்பது போன்ற சமிக்கை. :unsure:

முதலாவது வேலைத்திட்டம் ஒரு நான்கு அடுக்குகள் கொண்ட தொழிற்சாலை. கனதியான பாரங்கள் சுமக்குமாறு அதன் தளம் வடிவமைக்கப்பட வேண்டும். அதற்குரிய ஒப்பந்தத்தொகை, பொருட்களின் அளவுகள் ஏற்கனவே நிர்ணயமாகிவிட்டது. அந்தத் தொகைக்குள் வடிவமைப்பை முடிக்க வேண்டும். :unsure:

இரண்டாவது வேலைத்திட்டம், ஏற்கனவே இருக்கும் நிலக்கீழ் சுரங்கப் பாதை (subway அல்லது tube அல்லது Mass Rail Transit) யின் மேலாக நீரைக் காவிச்செல்லும் கொங்கிரீட்டிலான அமைப்பு. அதன் பாரம் சுரங்கத்தின் மேல் இறங்காதவாறு வடிவமைக்க வேண்டும்.இதற்குமேலாக நிலமட்டத்தில் பெருந்தெருவும் இருக்கிறது. அதன் பாரத்தையும் இந்த நீர்க்காவி சமாளிக்க வேண்டும். இதுதான் என்னுடைய இரண்டாவது புரொஜெக்ட். :D கணினியையே தடவிக்கொண்டிருந்த எனக்கு அது தேவைதான்.. :lol:

நான் இரண்டாம் மாதத்தில் இந்த இரண்டு வேலைத்திட்டங்களையும் முடித்துவிடுவேன் என எதிர்பார்த்தார்கள். ஆனால் மூன்று மாதங்கள் ஆகியும் என்னால் முடிக்க முடியவில்லை. ஏதாவது பிழை சொல்லிக்கொண்டே இருந்தார்கள். :unsure:

மூன்றுமாதங்கள் அவதானிப்புக் காலம் (Probationary period). என்னை வேலையில் இருந்து நீக்குவது குறித்து அந்த தமிழகத்து ஊழியருடன் என் மேலாளர் பேசிக்கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. :unsure:

(தொடரும்.)

Link to comment
Share on other sites

பாகம் 13: முயற்சி திருவினை ஆக்கும்.

தமிழகத்து நண்பர் எப்படியோ பேசி ஒருவாறு நிகழவிருந்த வரலாற்றுத் தவறைத் தடுத்துவிட்டார்..! :D நான்கு மாதங்கள் பார்ப்பதென முடிவெடுத்திருக்கிறார்கள். இது பின்னாளில் எனக்குத் தெரியவந்தது. இத்தருணத்தில் அந்த நண்பருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். :rolleyes:

இது சரிவராது என்று எனக்கு விளங்க ஆரம்பித்தது. ஐந்து மணிக்கு வேலை முடியும் என்றால் ஏழுமணிவரை நின்று வேலையைக் கற்க முயற்சி செய்தேன்..! :unsure: ஏட்டுக்கல்வி என்பது ஒரு அளவுவரைதான். உண்மையான வேலை என்பது வேறுபல நுணுக்கங்களைக் கொண்டது. இன்று நான் ஒரு நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அன்று அவர்கள் என்னை நீச்சல்குளத்தின் ஆழமான பகுதியில் தள்ளிவிட்டதுதான் காரணம். :rolleyes:

அங்கிருந்த புத்தகங்களைப் படித்து மென்பொருளில் இருந்த குறைபாடுகளைக் கண்டுபிடித்து ஒரு நிலைமைக்கு வர ஒரு ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. நாலாவது மாதத்தின்பின் என் செயற்பாடுகளில் தென்பட்ட முன்னேற்றங்களை அடுத்து என்னை நிரந்தரமாக்கி விட்டார்கள். :D

அந்தக் காலகட்டத்தில் எனக்கு ஏற்பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. குதிரைப் பந்தயத்தில் நொண்டிக்குதிரைபோல் நான் ஓடிக்கொண்டிருந்தேன். இடையில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இலங்கைக்குத் திரும்பிவிடலாமா என்றும் யோசித்ததுண்டு. :rolleyes:

பிற்பாடு ஒரு முடிவுக்கு வந்தேன். இந்த நிறுவனத்தில் இருப்பவர்களுக்கு நான் யார் என்பதை தெரியப்படுத்த வேண்டும். என்னை வேண்டாம் என்றவர்கள் போகாதே என்று தடுக்க வேண்டும். இதுதான் லட்சியம். :rolleyes:

ஒரு வருடம் கழிகின்றது. ஓரளவு சூட்சுமங்களைப் புரிந்துகொண்டுவிட்டேன். வேலைக்குப் பாதிப்பில்லை. பகுதிநேரமாக முதுகலைப் பட்டம் பெறுவது அப்போது நடந்துகொண்டிருந்தது. நானும் எனது நிறுவனத்தில் கேட்டுப் பார்த்தேன். ஏற்கனவே ஒரு சீனப் பெண் அந்த அனுமதியைப் பெற்றுவிட்டதாகவும் இரண்டுபேரை அனுப்ப இயலாது என்றும் சொல்லிவிட்டார்கள். கறள் நம்பர் 2. :D

இரண்டு வருடங்கள் கழிந்துவிட்டன. நான் இப்போது தேர்ந்துவிட்டேன். அப்போது பொருளாதார மந்தநிலை நிலவியது. எங்கள் நிறுவனத்தில் சொல்லிக்கொள்ளும்படி வேலையில்லை. ஆனால் மில்லியன் டொலர்கள் பெறுமானமுள்ள ஒப்பந்தங்கள் எப்படியோ என்னால் பெற்றுவிடக்கூடியதாக இருந்தது. வடிவமைப்பில் நெளிவு சுளிவுகளை அறிந்து சிக்கனமான தொகையைவேலைத்திட்டங்களுக்கு சமர்ப்பிப்பேன். அதே தொகைக்குள் திட்டங்களையும் முடிப்பேன். மேலாளர்களுக்கு என்மீது நல்ல மதிப்பு வந்துவிட்டது. அடிக்கடி பல்லைக் காட்டுவார்கள். :D

அச்சமயத்தில் அங்கு வேலைபார்த்துக்கொண்டிருந்த ஒரு சீனியர் வடிவமைப்பாளருக்கும் நிறுவனத்திற்கும் பிரச்சினை வந்துவிட்டது. அவரால் வேலைகள் எடுத்துத்தர முடியவில்லை. அவரை நிறுவனத்தை விட்டு அனுப்பிவிட்டார்கள். அவர் இடத்திற்கு என்னை சீனியராக தரம் உயர்த்தினார்கள்..! கட்டடங்கள், பாலங்கள் என்று பல விடயங்களைக் கற்றுத் தேர்ந்தேன்.

(தொடரும்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எதோ எனக்கு சம்பந்தம இல்லாத பகுதி என்டு நினைத்து இதுக்குள்ள வராமல் இருந்துட்டன்.வந்து பாத்தால் இசையின எழுத்து நடையில் மயங்கி ஒரே மூச்சில் எல்லாத்தையும் வாசித்து முடித்து விட்டேன். அது சரி அந்த டாவுக்கு என்ன நடந்தது. ஒரு சின்ன ஆர்வம்தான். :lol:

Link to comment
Share on other sites

கருத்துக்களுக்கு நன்றிகள் அபராஜிதன், சஜீவன். :D

டாவு மேற்றர் என்னெண்டால் :unsure: .. சிங்கப்பூர் போய் இரண்டு வருடம் கழித்து என்ன நடந்தது என்று பாருங்கோ.. :unsure:

"

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயய்யோ இப்படியா நடந்திச்சு.....ரொம்பப் பாவமா இருக்கு :D :D :lol:

Link to comment
Share on other sites

:D :D :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை கேட்கிறேன் என்று கோபப்படக்கூடாது...இப்படி அழுதழுது கட்டி பிறகு எப்படி இப்போது ஒரு பொண்ணுக்கு அப்பாவாக?..... வழியில்லை என்று அழுது ஓய்ஞ்சுபோய் உங்களை நீங்களே தேத்திக்கிட்டீங்களா? :D

Link to comment
Share on other sites

இசை கேட்கிறேன் என்று கோபப்படக்கூடாது...இப்படி அழுதழுது கட்டி பிறகு எப்படி இப்போது ஒரு பொண்ணுக்கு அப்பாவாக?..... வழியில்லை என்று அழுது ஓய்ஞ்சுபோய் உங்களை நீங்களே தேத்திக்கிட்டீங்களா? :D

சீ.. அது சும்மா பகிடிக்கு.. :D உண்மையில் கந்தர்வ மணம் செய்தேன்..! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

கருத்துக்களுக்கு நன்றிகள் அபராஜிதன், சஜீவன். :D

டாவு மேற்றர் என்னெண்டால் :unsure: .. சிங்கப்பூர் போய் இரண்டு வருடம் கழித்து என்ன நடந்தது என்று பாருங்கோ.. :unsure:

"

:lol: :lol: :lol:

இசை இரண்டு கையாலும் தலையை சொறியும் காட்சியை கற்பனை செய்து பார்த்த போது...

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

பாகம் 13: முயற்சி திருவினை ஆக்கும்.

அங்கிருந்த புத்தகங்களைப் படித்து மென்பொருளில் இருந்த குறைபாடுகளைக் கண்டுபிடித்து ஒரு நிலைமைக்கு வர ஒரு ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. நாலாவது மாதத்தின்பின் என் செயற்பாடுகளில் தென்பட்ட முன்னேற்றங்களை அடுத்து என்னை நிரந்தரமாக்கி விட்டார்கள். :D

வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப உலகில் பல்கலைக்கழகங்களில் கற்கவேண்டியது : 'எவ்வாறு புத்தகங்களை இல்லை கணனியில் விடயங்களை வேலைக்கு ஏற்றவாறு அறியக்கூடிய இயலுமை'.

Link to comment
Share on other sites

நீங்கள் அப்போது பயன்படுத்திய மென்பொருள்களின் பெயர்களையும் இப்போது பயன் படுத்தும் மென்பொருள்களின் பெயர்களையும்

எழுதலாம் எண்டால் எழுதுங்க..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.