Jump to content

நேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களுக்கு நன்றிகள் அபராஜிதன், சஜீவன். :D

டாவு மேற்றர் என்னெண்டால் :unsure: .. சிங்கப்பூர் போய் இரண்டு வருடம் கழித்து என்ன நடந்தது என்று பாருங்கோ.. :unsure:

"

:lol: :lol: :lol:

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • Replies 346
  • Created
  • Last Reply

ஒவ்வொரு பாகத்திற்கும் இடும் தலைப்பும் அவைக்கேற்ப நீங்கள் பிரித்து தொகுத்தளிப்பதும் நன்றாக உள்ளதுடன்

உங்கள் வெற்றிப்பயணத்தின் பல இரகசியங்கள் உங்கள் கடின உழைப்பே என்பதை காட்டுகின்றன.

Link to comment
Share on other sites

நீங்கள் அப்போது பயன்படுத்திய மென்பொருள்களின் பெயர்களையும் இப்போது பயன் படுத்தும் மென்பொருள்களின் பெயர்களையும்

எழுதலாம் எண்டால் எழுதுங்க..

சிங்கப்பூரில்..

  1. RAPT (Reinforced & Post-tensioning Design)
  2. ADAPT - PT
  3. ADAPT - Floor

இவை முதன்மையானவை. இவற்றுடன் SAFE, STAAD 3 போன்றவையும் இருந்தன. அவற்றை நான் பெரிதாக உபயோகிக்க வேண்டிய தேவை வரவில்லை.

கனடாவில் முன்பு..

  1. Shoring Suite

இப்போது..

  1. STAAD Pro
  2. TEDDS
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை எழுதுவது எனத் தெரியவில்லை.

பாவம் மனுசன் மிகவும் நொந்து தான்

வந்திருக்கின்றார். :lol::D

உழைப்பிற்கும் முயற்சிக்கும் என்றுமே காலம் கைகொடுக்கும்

என்பது உங்கள் எழுத்திலிருந்து தெரிகின்றது இசை

தொடருங்கள்

Link to comment
Share on other sites

பாகம் 14: அடுத்த கட்டம்

ஒரு நாள் என்னுடைய அதே பழைய மேலாளர் என்னிடம் வந்தார். "நீங்கள் முதுநிலைக் கல்வி பகுதி நேரமாகச் செய்ய வேண்டும் என்று சொன்னீர்களே.."

"இல்லை. இப்போதுள்ள சூழ்நிலையில் வேண்டாம் என்றிருக்கிறேன்."

மனதுக்குள், நீ என்ன சொல்வது நான் என்ன படிப்பது என்றுதான் ஓடியது. laugh.gif ஆனால் உண்மைக் காரணம் வேறு. நான் அப்போதே கனடாவுக்கான குடிநுழைவு அனுமதிக்கு விண்ணப்பித்து விட்டிருந்தேன். :rolleyes: கனடாவில் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் முழுநேரமாக முதுகலை செய்வது. பிறகு வேலை தேடுவது. இதுதான் திட்டம்.

கனடாவில் பொறியியலாளராக வேலை செய்வதற்கு என்ன தகுதிகள் வேணும் என்கிற ஆராய்ச்சியில் இறங்கினேன். இங்கே ஒவ்வொரு மாநிலத்திலும் பொறியியலாளர் அமைப்பு இருக்கின்றது. ஒன்ராரியோவில் (PEO - Professional Engineers Ontario). ஏதாவது ஒரு அமைப்பில் செயற்பாட்டு அனுமதி (Practicing License) பெற்றால் மட்டுமே இங்கே பொறியியலாளர் என எம்மை அழைப்பார்கள். "பொறியியலாளர்" என்கிற பதத்தை யாரும் எழுந்தமானமாக உபயோகித்துவிட முடியாது. அது சட்டப்படி குற்றமாகும். :rolleyes:

இவற்றையெல்லாம் அங்கிருந்தபடியே அறிந்து வைத்திருந்தேன். அங்கிருந்தே விண்ணப்பமும் போட்டேன். அவர்கள் என் கல்வித்தரம், மற்றும் வேலை அனுபவத்தை ஒரு கட்டம் வரை பரிசோதனைக்கு உட்படுத்தி அனுமதி விடயத்தை ஒரு கட்டம் வரை நகர்த்தினார்கள். அதன் பின், நான் கனடாவில் வந்திறங்கிய பின்னர்தான் மீதியைத் தொடரமுடியும் என்று சொன்னார்கள்.

நான் கனடாவுக்கு வந்து அவர்களுக்கு எனது தொழில்நுட்ப அறிவை நிருபிக்க வேண்டும். சிலருக்கு நேர்காணல், சிலருக்கு பரீட்சைகள் வைப்பார்கள்.

எல்லாம் முடிந்துவிட்டது. விசாவும் கைக்கு வந்துவிட்டது. என்னுடைய பதவி விலகல் கடிதத்தை நிறுவனத்தில் கொடுக்கிறேன். கடிதத்தைக் கொடுத்தால் அதன்பின்னர் நான்கு கிழமைகள் வேலை செய்ய வேண்டும்.

சில நாட்கள் அமைதி. :D ஒரு நாள் எனது நிர்வாக இயக்குநர் அழைக்கிறார்.

"ஏன் போகிறீர்கள்?" unsure.gif

" எனது குடும்ப்பத்தினர் அங்கே இருக்கிறார்கள். நான் அங்கே சென்று படிக்கவும் வேணும்." unsure.gif

"ஏன் இங்கேயே படிக்கலாமே? உங்களை NUS இல் எங்கள் செலவில படிப்பிக்க திட்டம் வைத்திருந்தோம்." unsure.gif

(பைசா பெயராது.. இதுக்குள்ளை இந்தக் கதையா என்று நினைத்துக்கொண்டேன். :D )

"இல்லை. எனக்கு விசா வந்துவிட்டது."

"உங்களை தொழில்நுட்ப மேலாளராக உயர்த்துவது என திட்டம் வைத்திருந்தோம்."

(ஆகா.. அடுத்த கதையை ஆரம்பிச்சிட்டான்யா.. :D)

"நான் விமானப் பதிவுகளையே செய்துவிட்டேன்." :rolleyes:

இன்னும் சில வழிகளில் முயன்று பார்த்தார். நான் அசைவதாக இல்லை. எனது நோக்கம் ஒரு தொழில் அறிவுடன் தேங்கிவிடக் கூடாது. பலதையும் கற்றால்தான் ஒரு உற்சாகம் இருக்கும், தன்னம்பிக்கையும் கூடுதலாகும். நான் எதற்கும் அசைவதாக இல்லை.

"சரி.. சென்று வாருங்கள். எங்களுடைய நல்வாழ்த்துக்கள்."

சில நாட்கள் கழித்து பிரான்சில் இருந்து மேலதிகாரி எங்கள் எங்கள் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அவரும், எனது நிர்வாக இயக்குனரும் எனது பகுதிக்கு வந்தார்கள். ஒரு பதக்கமும், நிறுவனத்திற்குச் சொந்தமான கழுத்துப் பட்டையும் பரிசளித்து நன்றி சொன்னார்கள். எனக்கு தலைகால் புரியவில்லை.. :D

தாங்கள் கனடாவில் ஒரு கிளை எப்படியும் திறப்போம் எனவும் அப்போது உங்கள் உதவி தேவைப்படும் எனவும் அந்த அதிகாரி கூறினார். :rolleyes:

சென்ற வருடம் மிசிசாகாவில் கடைதிறந்து போணியை ஆரம்பித்திருக்கிறார்கள். :wub:

(தொடரும்.)

Link to comment
Share on other sites

நல்ல நம்பிக்கையூட்டும் தொடர். முயற்சியுடையோர் இகழ்ச்சி அடைவதில்லை.

சிங்கப்பூரில் அப்போது இருபரிமாணம் தான்.. ஆனால் நான் பாவிக்க வேண்டிய தேவை வரவில்லை.. அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்..! :D

நீங்கள் கேட்கிற கேள்வியைப் பார்த்தால் நீங்களும் சிவிலுக்குள்ளை தடக்குப்பட்ட ஆள்போல தெரியுது??!! :rolleyes:

நான் சிவில் இல்லை. ஆனால் 'கட்டிடக் கல்வி' பயின்ற பொழுது வேலை அனுபவத்திற்காக (வேறு வேலை கிடைக்கவில்லை) நிலக்கீழ்ப் பாதை, சிறிய மேம்பாலம் கட்டும் திட்டமொன்றில் 'setting out' வேலையெல்லாம் செய்தேன்.

இந்த மென்பொருளை முன்பு வேலையில் பலகாலம் பாவித்திருக்கிறேன். இப்பொழுது நான்கு பரிமாணங்கள் பழகுவதற்கு முயற்சிக்கிறேன். அதற்கேற்ற வேலை வந்து அம்பிடுதில்லை

Link to comment
Share on other sites

பலருக்கு பயனளிக்க கூடிய நல்லதொரு ஆக்கத்திற்கு நன்றிகள் இசை அண்ணா. எழுத்துநடையும் சம்பவங்களை சொல்லும் விதமும் வாசிப்பதற்கு மிகவும் சுவார்சியமாக இருக்கிறது. தொடர்ந்து பல ஆக்கங்களையும் அனுபவங்களையும் யாழில் எதிர்பார்க்கின்றோம்.

அதுசரி Best Buy ல் என்ன வாங்குவது என்று யோசித்து வைத்துவிட்டீர்களா இசை அண்ணா?

:) நிட்சயம் சித்திரை மாத யாழ் பொற்கிளி பரிசு இந்த பதிவுக்குத்தான் :D

Link to comment
Share on other sites

சிங்கப்பூரில்..

  1. RAPT (Reinforced & Post-tensioning Design)
  2. ADAPT - PT
  3. ADAPT - Floor

இவை முதன்மையானவை. இவற்றுடன் SAFE, STAAD 3 போன்றவையும் இருந்தன. அவற்றை நான் பெரிதாக உபயோகிக்க வேண்டிய தேவை வரவில்லை.

கனடாவில் முன்பு..

  1. Shoring Suite

இப்போது..

  1. STAAD Pro
  2. TEDDS

நன்றிகள்

உங்கள் அனுபவத்திலிருந்து construction site வேலை பார்க்க போகும் ஒருவரிடம்(site engineer site supervisor ) எப்பிடியான கேள்விகள் கேட்பார்கள் நேர்முக தேர்வில்?

ஆரையும் நேர்முகத்தேர்வு கண்ட அனுபவம் இருக்குதா

ஒசி எண்டால் பொலிடோலையும் குடிப்பம் எல்லோ :lol:

Link to comment
Share on other sites

நன்றிகள்

உங்கள் அனுபவத்திலிருந்து construction site வேலை பார்க்க போகும் ஒருவரிடம்(site engineer site supervisor ) எப்பிடியான கேள்விகள் கேட்பார்கள் நேர்முக தேர்வில்?

ஆரையும் நேர்முகத்தேர்வு கண்ட அனுபவம் இருக்குதா

ஒசி எண்டால் பொலிடோலையும் குடிப்பம் எல்லோ :lol:

பொறியியலாளர் தேர்வுக்கு நேர்முகத்தேர்வு செய்த அனுபவம் உண்டு. ஆனால் Site Engineer வேலைக்கு ஆளெடுத்த அனுபவமில்லை.

எந்த நாட்டில் என்பதும், உங்கள் வேலை அனுபவம் என்பதையும் பொறுத்து கேள்விகள் மாறுபடும்.

பின்வரும் கேள்விகளை மேலை நாடுகளில் எதிர்பார்க்கலாம்.. :D

  • Tell us about yourself! :lol:
  • How would you ensure Health and Safety at a job site?
  • Tell us about a difficult situation that you were in and how you resolved it.
  • Have you done reporting?
  • Have you ever written site procedures?
  • etc..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலை தேடி எடுப்பது எவ்வளவு கடினமோ அதைவிட கடினமானது இருக்கும்வேலையை விடுவது.

அப்படியொரு அனுபவம் எனக்கும் ஏற்பட்டது.

தொடருங்கள் இசை.

நம்ம கதையை அப்புறம் பார்க்கலாம்.

பிரான்சிலும் 3 வருட பொறியியலாளர் படிப்பு முடிந்தது அனுமதிப்பத்திரம் கொடுப்பார்கள். ஆனால் அத்துடன் அவர் பொறியியலாளர் என அழைக்கப்படமாட்டார். அதன்பின் படிப்பும் வேலையுமாக 2 வருடம் முடிக்கணும். அல்லது MASTER செய்யணும் அதன் பின்பே பொறியியலாளராவார். ஆனால் பிரித்தானியாவில் 3 வருடப்படிப்பு முடித்து அனுமதி கிடைத்ததும் அவர் பொறியியலாளராவார்.

Link to comment
Share on other sites

நல்லதொரு விடயம் டங்குவார்!

நன்றி கலந்த பாராட்டுக்கள்! :)

நேர்முகத் தேர்வுகள் என்று ஆரம்பித்தாலும்... அவரவர் தம் தொழில்துறைசார் அனுபவ பகிர்வுகளாக நகர்வது ஆக்கபூர்வமான ஒன்றாக அமைந்திருக்கின்றது.

தொடருங்கள்!

என் வேலைசார்ந்த அனுபவங்களையும் பகிர ஆசைதான்.

யாழில் என் தொழில்சார்ந்த ரீதியாக யாழ் உறவுகளுக்கு உதவக்கூடிய வகையில் ஒரு திரியை ஆரம்பிக்க வேண்டும் என பல சந்தர்ப்பங்களில் யோசித்தாலும்... "ஏதோ ஒன்று என்னைத் தடுக்கும்!"

(அந்தத் திரியினை ஆரம்பிக்கும் போது இதற்கான காரணத்தினை சொல்கின்றேனே! :rolleyes::) )

சூழ்நிலைகள் அமைவாகும்போது...நிச்சயமாக, தொழில்நுட்பப் பகுதியில்... யாழ் உறவுகள் அனைவருக்கும் பெரிதும் உதவும் வகையில், ஒரு ஆக்கபூர்வமான திரியினை ஆரம்பிப்பேன்!

நன்றி!

Link to comment
Share on other sites

பாகம் 15: கடினமான முடிவுகள்

சிங்கப்பூரில் நானும் மனைவியும் நிரந்தர வதிவிட உரிமை (Permanent Resident Status) பெற்றவர்களாக இருந்தோம். இவ்வாறானவர்களுக்கு நாங்கள் வேலை செய்யும் நிறுவனங்கள் சம்பளத்தில் 16% தொகையை மேலதிகமாக கணக்கிட்டு ஒரு கணக்கில் சேமிப்பார்கள். சம்பளத்தில் 20 வீதத்தைப் பிடித்து அதனுடன் சேர்ப்பார்கள். ஆக 36% உங்கள் Provident Fund இல் சேரும். இந்தப்பணத்தை ஓய்வுபெறும்போது பெற்றுக்கொள்ளலாம். அல்லது வீடுவாங்குவதற்கு உபயோகிக்கலாம்.

எனக்கும் ஒரு தொகை சேர்ந்திருந்தது. அதை எடுக்க வேண்டுமென்றால் நிரந்தர உரிமையை இழக்க வேண்டும்.

குடிவரவுத்துறைக்குச் சென்றோம். நிரந்தரவாசி உரிமையைக் கைவிடப் போகிறேன் என்றேன். அட்டைகளை வாங்கி இரண்டாக வெட்டி ஒரு பொலித்தின் பையில் போட்டு வைத்துக்கொண்டார்கள். :wub: கடவுச்சீட்டில் ஒரு மாத விசா குத்தித் தந்தார்கள். :D

நான் நிரந்தர உரிமையைக் கைவிட்டதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. கனடாவில் என்ன நடக்குமோ தெரியாது. ஆனால் சிங்கப்பூர் அட்டையையும் வைத்திருந்தால் இங்கே சரியான வாய்ப்பு அமையாவிட்டால் திரும்பவும் சிங்கப்பூர் போகச் சொல்லும் மனம். அதனால் பல்லைக் கடித்துக்கொண்டு அப்படியொரு கடினமான முடிவை எடுக்கவேண்டி வந்தது. :unsure:

காசை எடுத்துக்கொண்டு இலங்கை இந்தியா என்று போய் பிறகு கனடா வந்து சேர்ந்தோம்.

"Welcome to Canada!" என்று வரவேற்றார்கள். :D

கனடாவில் அன்றுமுதல் நிரந்தர வதிவிட உரிமை. முதல் சில கிழமைகள் பலவிதமான மட்டைகளைப் பெறுவதிலேயே காலம் போனது. சிங்கப்பூரில் இருந்து மாத்தையா வந்திருக்கிறார் என்று உறவுக்காரர்கள் இடையே ஒரு மரியாதை. :lol:

இங்கு எனது வேலை சம்பந்தமாக எப்படி அணுக வேண்டும் என எனக்குத் தெரிந்தவர்கள் மூலம் யாராவது சம்பந்தப்பட்டவர்களுடன் பேச முயன்றேன். முன்பு பொறியியலாளராக வேறு இடங்களில் வேலை செய்தவர்களெல்லாம் இங்கே வங்கி ஊழியராகவும், காப்புரிமை முகவராகவும் வேலை செய்துகொண்டிருந்தார்கள். :unsure:

ஒருவரிடம் பேச சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அவரோ எனக்கெல்லாம் வேலை கிடைக்காது என்று அடித்துச் சொல்லிவிட்டார். எனக்கோ தலை சுற்ற ஆரம்பித்தது. :unsure:

(தொடரும்.)

Link to comment
Share on other sites

சில சமயங்களில் எடுக்கப்படும் தீர்க்கமான முடிவுகள்தான்.... வாழ்க்கையை மாற்றியமைக்கும்! + / - :)

Link to comment
Share on other sites

ஒருவரிடம் பேச சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அவரோ எனக்கெல்லாம் வேலை கிடைக்காது என்று //அடித்துச் சொல்லிவிட்டார். எனக்கோ தலை சுற்ற ஆரம்பித்தது. :unsure:

இதில் நாம் வல்லவர்கள் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டாவை கல்யாணம் முடித்த கதை சொல்லவேயில்லை :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரிடம் பேச சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அவரோ எனக்கெல்லாம் வேலை கிடைக்காது என்று அடித்துச் சொல்லிவிட்டார். எனக்கோ தலை சுற்ற ஆரம்பித்தது. :unsure:

ஆர்வம் உள்ள எவரும் எத்தகைய இடைஞ்சல்களையும் பின்தள்ளி முன்னுக்கு வரமுடியும். வேலை கிடைக்காது என்று சொல்லைப் பாவிப்பவர் ஒன்றில் தனக்குப் பிடித்த வேலையைத் தேடிக் களைத்து "எட்டாப் பழம் புளிக்கும்" என்ற நிலைக்கு வந்தவராக இருக்கலாம், இல்லையேல் உங்களது திறமைகளைக் கவனித்து நீங்கள் தன்னைவிட முன்னுக்கு வந்துவிடக்கூடும் என்ற சாதாரண சராசரி சிந்தனையைக் கொண்டவராக இருக்கலாம்.

உங்களுக்கு தலை சுற்றி இருக்காது இசை! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

டாவை கல்யாணம் முடித்த கதை சொல்லவேயில்லை :D

தலைப்புக்கு சம்பந்தம் இல்லாததால் நீக்கப்பட்டது..! :lol:

ஆர்வம் உள்ள எவரும் எத்தகைய இடைஞ்சல்களையும் பின்தள்ளி முன்னுக்கு வரமுடியும். வேலை கிடைக்காது என்று சொல்லைப் பாவிப்பவர் ஒன்றில் தனக்குப் பிடித்த வேலையைத் தேடிக் களைத்து "எட்டாப் பழம் புளிக்கும்" என்ற நிலைக்கு வந்தவராக இருக்கலாம், இல்லையேல் உங்களது திறமைகளைக் கவனித்து நீங்கள் தன்னைவிட முன்னுக்கு வந்துவிடக்கூடும் என்ற சாதாரண சராசரி சிந்தனையைக் கொண்டவராக இருக்கலாம்.

உங்களுக்கு தலை சுற்றி இருக்காது இசை! :icon_mrgreen:

கிருபன், அவரிடம் பேசிய சமயத்தில் ஒரு இருபது வேலை விண்ணப்பங்களாவது போட்டிருப்பேன். ஒருவரும் அழைக்கவில்லை. சிங்கப்பூரில் ஒன்பதாவது நாளே வேலை எடுத்த எனக்கு குழப்பம் வருமா வராதா? :D

Link to comment
Share on other sites

பாகம் 16: ஆழ்வாரில் இருந்து ஆண்டி :D

மூன்று மாதங்கள் கழிந்திருக்கும். அனுப்பிய விண்ணப்பங்களுக்கு நன்றிக்கடிதம் மட்டும் ஒரே ஒரு நிறுவனத்தில் இருந்து வந்திருந்தது. வேறு ஒரு முன்னேற்றமும் இல்லை. கொண்டு வந்த பணம் கரைந்து கொண்டிருக்கிறது.

இதற்குள் வாகன ஓட்டுநர் உரிமத்திற்கான G1 மற்றும் G2 தேர்வுகளில் சித்தியடைந்துவிட்டேன். ஒரு பழைய கம்றி காரையும் வாங்கிக் கொண்டேன். :D

எனது வேலைக்குறிப்பை Human Resources Development Canada (HRDC) க்கு எடுத்துச் சென்று திருத்தம் செய்யுமாறு கேட்டேன். அவர்கள் எழுத்து அளவைக் கூட்டு, இங்கே இடைவெளி விடு என்று ஆலோசனைகள் தந்தார்கள். :D

விளம்பரங்களில் வடிவமைப்புப் பொறியியலாளர்களுக்கு அநேகமாக இப்படித்தான் கேட்கப்பட்டிருக்கும். ... the applicant must be a Licensed Professional Engineer or be eligible to be registered as a Professional Engineer in Ontario. (அதாவது ஒன்ராரியோவில் ஏற்கனவே பொறியியலாளராக இருப்பவர்கள் அல்லது அவ்வாறு பதிந்துகொள்ளக்கூடிய தகைமையைக் கொண்டவர்கள்..)

நாம்தான் தகைமையைக் கொண்டவராச்சே.. :lol: அந்த வேலைகளுக்கு விண்ணப்பம் செய்வேன்.. ஒரு ஈ காக்கா கூட திரும்பிப் பார்க்காது.. :D

சில நிறுவனங்களுக்கு தொலைபேசியில் பேசிப் பார்த்தேன். உள்ளே மேலாளர்களிடம் இணைப்புக் கொடுக்கமாட்டார்கள். நேரிலே சென்று வேலைக்குறிப்பைக் கொடுத்துப் பார்த்தேன். வாசலிலேயே வைத்து வாங்கிக்கொண்டு அனுப்பிவிடுவார்கள். :unsure:

என்னுடைய நிலைமையைக் கண்ட உறவினர்கள் எனக்கு ஆலோசனைகளை அள்ளி வழங்கத் தயாரானார்கள் :D

இப்படி இருந்தால் சரிவராது. ஏதாவது தொழிற்சாலை உத்தியோகத்துக்குப் போகும்படி ஆலோசனைகள் வந்தன. ஒரு வேலை முகவரிடம் போனேன். எஞ்சினியர் வேலைக்குறிப்பைக் கொடுக்கிறேன். அடுத்தநாள் வேலை.

காலை ஏழுமணிக்கு வேலையிடத்தில் நிற்கிறேன். என்ன வேலை என்று தெரியாது. ஒரு பெரிய இயந்திரத்தின் முன் கொண்டு சென்று நிறுத்தினார்கள். அதிலிருந்து சாரை சாரையாக அலுமினியத்திலான பாகங்கள் வந்து விழுந்தன. அவற்றை எடுத்து ஒரு பெரிய கூடைக்குள் அடுக்க வேண்டும். இயந்திரம் நிற்கும் இடைவெளியில் தரையைக் கூட்டவேண்டும். :D சிங்கப்பூரில் முதலாளியிடம் பிகு பண்ணிவிட்டு வந்தவர் நான்கே மாதங்களில் கார் பாகங்கள் உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனத்தில் சாதாரண தொழிலாளி. :wub:

பழைய நினைவுகள் எல்லாம் வந்து போனது. எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆகிட்டேன்..??!! :D

(தொடரும்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலோ சிங்கப்பூரிலோ நீங்கள் இளவரசர் ஆனாலும் கனடாவுக்கு அருவரி தானே?? :lol::icon_idea:

ஆனால் இந்த வேதனையை நானுமம் அனுபவித்துள்ளேன்

அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் அதன் வீச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், அவரிடம் பேசிய சமயத்தில் ஒரு இருபது வேலை விண்ணப்பங்களாவது போட்டிருப்பேன். ஒருவரும் அழைக்கவில்லை. சிங்கப்பூரில் ஒன்பதாவது நாளே வேலை எடுத்த எனக்கு குழப்பம் வருமா வராதா? :D

Licensed Professional Engineer இல்லாமல் இருந்தது அழைப்புக்கள் வராமைக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.. அது உங்களுக்கு தெரிந்திருக்கும்தானே.

வேலைக்குறிப்பு ஒன்றைப் பொதுவாக 9 அல்லது 12 செக்கன்களில் process செய்வார்கள். எனவே பார்த்தவுடன் பிடித்துப் போகுமளவிற்கு தகுந்த மாதிரியான தனித்துவமான ஒன்றை முதல் 5-10 வரிகளுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் (முதல் பார்வையிலே எல்லோரையும் கவர்ந்திழுக்கும் காந்தம் இருக்கவேண்டும் :wub: )

மேலும் வேலைக்குறிப்பின் நோக்கம் வேலையைப் பெற்றுக்கொள்வதல்ல, நேர்முக உரையாடலுக்கான அழைப்பைப் பெறுவதே. நேர்முக உரையாடலில்தான் வேலையைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இறங்கி offer ஐ வெல்லவேண்டும். Offer கிடைத்த பின்னர்தான் சம்பளம், கொடுப்பனவுகளைப் பற்றிய பேரம் பேசலில் இறங்கவேண்டும். இப்படியான எளிய வழிமுறைகளைத்தான் நான் கைக்கொள்வது வழமை..

Link to comment
Share on other sites

சில நிறுவனங்களுக்கு தொலைபேசியில் பேசிப் பார்த்தேன். உள்ளே மேலாளர்களிடம் இணைப்புக் கொடுக்கமாட்டார்கள். நேரிலே சென்று வேலைக்குறிப்பைக் கொடுத்துப் பார்த்தேன். வாசலிலேயே வைத்து வாங்கிக்கொண்டு அனுப்பிவிடுவார்கள். :unsure:

வேலை இருக்கோ இல்லையோ கனடாவில் வேலை அனுபவம் உள்ளதா என்ற கேள்வியையும் கேட்டுவிடுவார்கள்.இலங்கை, இந்தியா போன்ற இடங்களில் பொறியியல் துறை முடித்து கனடா வந்த நண்பர்கள் பலருக்கு இந்தக்கதி நடந்துள்ளது.ஒரு சிலரை தவிரை எனையோர் வேறு துறைகளில் மிக குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

மிக சுவாரஸ்யமாக இருக்கின்றது உங்களது வேலை தேடும் படலம் .

நேர்முக பரீட்சை என்று Professional job ஒன்றிற்கும் போனதில்லை ,எல்லாம் படிக்கும் நேரங்களில் போன odd jobs களுக்கு தான் ,லண்டன் வந்த இறங்கிய அடுத்த நாளே Harrow இல் இருக்கும் Gas station இல் வேலை கேட்க சொல்லி அத்தான் கொண்டுபோய் இறக்கிவிட்டார் ,அவன் கேட்டது எதுவுமே எனக்கு விளங்கவில்லை ஆனால் அத்தானிடம் வந்து அங்கு இப்போ வேலை இல்லையாம் என்றுவிட்டேன்,

பின் இருவருடங்கள் St johnswood gas station இல் (Lords cricket ground இற்கு முன் )குப்பை கொட்டினேன்

Link to comment
Share on other sites

Licensed Professional Engineer இல்லாமல் இருந்தது அழைப்புக்கள் வராமைக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.. அது உங்களுக்கு தெரிந்திருக்கும்தானே.

வேலைக்குறிப்பு ஒன்றைப் பொதுவாக 9 அல்லது 12 செக்கன்களில் process செய்வார்கள். எனவே பார்த்தவுடன் பிடித்துப் போகுமளவிற்கு தகுந்த மாதிரியான தனித்துவமான ஒன்றை முதல் 5-10 வரிகளுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் (முதல் பார்வையிலே எல்லோரையும் கவர்ந்திழுக்கும் காந்தம் இருக்கவேண்டும் :wub: )

மேலும் வேலைக்குறிப்பின் நோக்கம் வேலையைப் பெற்றுக்கொள்வதல்ல, நேர்முக உரையாடலுக்கான அழைப்பைப் பெறுவதே. நேர்முக உரையாடலில்தான் வேலையைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இறங்கி offer ஐ வெல்லவேண்டும். Offer கிடைத்த பின்னர்தான் சம்பளம், கொடுப்பனவுகளைப் பற்றிய பேரம் பேசலில் இறங்கவேண்டும். இப்படியான எளிய வழிமுறைகளைத்தான் நான் கைக்கொள்வது வழமை..

வேலைக்கு அழைக்காத காரணங்களை அடுத்துவரும் பகுதிகளில் எழுதுகிறேன்..! :D

விசுகு அண்ணா, நுணா, அர்ஜுன் அண்ணா.. உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்..! முன்னர் கருத்துக்களைப் பகிர்ந்த நண்பர்களுக்கும் நன்றிகள்..! :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.