Jump to content

நேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல்


Recommended Posts

பாகம் 17: மீள ஒழுங்கமைத்தல்

உறவினர் வீட்டில் இருந்து ஒரு பேஸ்மென்ட் வீட்டுக்குக் குடிபெயர்ந்தோம். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவது, தளபாடங்கள் வாங்குவது என காசு மேலும் கரைந்தது. அச்சமயத்தில், நான் ஒரு மரத் தளபாடங்கள் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அதுகுறித்து முன்பு ஒரு பதிவு போட்டதாக ஞாபகம். :rolleyes:

கனடாவுக்கு வந்து ஒரு நன்கு மாதங்கள் கழிந்திருக்கும். ஒரு நிறுவனதில் இருந்து தொலைபேசி அழைப்பு. பேசியவர் என்னைப் பற்றி விசாரித்து அறிந்து கொண்டார். இன்னொரு நாளில் பேசுவதாகக் கூறி வைத்துவிட்டார். ம்ற்றொரு நாளில் பேசிக்கொண்டிருக்கும்போது வீட்டில் ஃபியூஸ் போய் (Trip) அழைப்பு நின்றுவிட்டது. அதன்பிறகு அவரைப் பிடிக்க முடியவில்லை. :unsure:

எனது வேலைதேடும் அணுகுமுறையில் ஏதோ பிழையிருக்கிறது என்று தெரிந்தது. ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையில், பொறியியளாளர் அமைப்பில் இருந்து ஒரு கடிதம் வந்தது. எனது கல்வித்தகுதி ஏற்கனவே பரிசோதிக்கப்பட்டு விட்டது. எனது சிங்கப்பூர் வேலை அனுபவத்தையும் Reference மூலம் உறுதிப்படுத்திக்கொண்டு விட்டார்கள். இப்போது எனக்கு இரண்டு தெரிவுகள் தரப்பட்டிருந்தது. ஒன்று 3 தொழில்நுட்பப் பரீட்சைகள் எழுதுவது. அல்லது நேர்முகத் தேர்வுக்குச் செல்வது.

இவையள் என்ன சொல்லுறது.. நாங்கள் என்ன தேர்வு எழுதுவது என்று நேர்முகத்தேவை தெரிவு செய்து கடிதம் அனுப்பினேன். :wub:

மரவேலைக்குத் தொடர்ச்சியாகச் சென்றுகொண்டிருந்ததால் எனது துறையில் வேலைதேடும் ஆர்வம் படிப்படியாகக் குறையத் தொடங்கி விட்டிருந்தது. :unsure: ஒருநாள் எனது மனநிலை குறித்து மனைவியிடம் கூறினேன். நீங்கள் வேலைக்குப் போக வேண்டாம்; நான் மட்டும் போகிறேன். நீங்கள் வேலைக்கு மட்டும் முயற்சி செய்யுங்கோஎன்று சொன்னா. :D

நானும் சரியென்று வீட்டிலிருந்து வேலை தேட ஆரம்பித்தேன். மனைவி என்னை வைத்து கஞ்சி ஊத்தினா. :lol: (பகிடியாகச் சொன்னாலும், என் மனைவியின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் இன்று நான் பூச்சியம். :unsure: ) இப்பவும் பூச்சியம்தான் எண்டு யாரோ சொல்லுறது காதில் விழுகிறது. :lol:

அப்போது இணையத்தில் ஒரு கல்வி நிறுவனத்தின் விளம்பரம் கண்ணில் பட்டது. அவர்களிடம் AutoCAD, ஒன்ராரியோவின் கட்டட ஒழுங்கமைப்பு (Ontario Building Code) ஆகியவற்றை மூன்று மாதங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அதை முடித்தவுடன் அவர்களுக்குத் தெரிந்த பொறியியல் நிறுவனங்களில் Co-op அடிப்படையிலான வேலைக்கு நேர்முகத்தேர்வுக்கு அனுப்பப்படுவார்கள். :rolleyes:

அட.. இது பரவாயில்லையே என்று தோன்றியது. மனையாளிடம் பேசிவிட்டு, விண்ணப்பம் போட்டு வைத்தேன். மொத்தமாக $2800 கல்வித்தொகை. :unsure:

(தொடரும்.)

Link to comment
Share on other sites

  • Replies 346
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மனையாளிடம் பேசிவிட்டு, (தொடரும்.)

மனைவியே மந்திரி :icon_idea:

பல முறை நிரூபிக்கப்பட்டாலும் இன்னும் இதை பின் பற்ற முடியவில்லை.

வீழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை தொடர்கிறது. :(

Link to comment
Share on other sites

அப்போது இணையத்தில் ஒரு கல்வி நிறுவனத்தின் விளம்பரம் கண்ணில் பட்டது. அவர்களிடம் AutoCAD, ஒன்ராரியோவின் கட்டட ஒழுங்கமைப்பு (Ontario Building Code) ஆகியவற்றை மூன்று மாதங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அதை முடித்தவுடன் அவர்களுக்குத் தெரிந்த பொறியியல் நிறுவனங்களில் Co-op அடிப்படையிலான வேலைக்கு நேர்முகத்தேர்வுக்கு அனுப்பப்படுவார்கள். :rolleyes:

இவ்வாறான அணுகுமுறைகள் பொதுவாக நல்ல பயனைத்தரும்.

உதாரணத்திற்கு பொறியியல் துறைக்கு பெயர்போன வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் உள்ள கோஆப் திட்டங்கள் படிக்கும்பொழுதே

கடனை அடைக்கவும் வேலை வாய்ப்பை உறுதி செய்யவும் வழிசமைக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள பகிர்வு மேலும் தொடர்க. :D

Link to comment
Share on other sites

அருமை இசை அண்ணா. இண்டைக்குத்தான் கண்ணில தட்டுப் பட்டுது, உடனேயே வாசிச்சு முடிச்சிட்டன். குறிப்பா உங்கள் நகைச்சுவையான எழுத்து நடை அருமை. கண்டிப்பா பலருக்கு பிரயோசனமாக இருக்கும். எனக்கு கன professional interview போய் பழக்கமில்லை. முதலாவது போன நேர்முகத் தேர்விலேயே வேலை கிடைத்துவிட்டது. எனது அனுபவங்களையும் இன்னொரு திரியில் பதியும் யோசினையை தந்து விட்டீர்கள்.

Link to comment
Share on other sites

அம்மாடியோவ் இவ்வளவு பக்கமா கொஞ்சம் நிறுத்தி வையுங்கள் இசை அண்ணா நான் படிச்சு முடிக்கும்வரை... நல்ல தொடர் இசை அண்ணா தொடருங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கமான.. லொள்ளுடன், தொடர் நன்றாக உள்ளது இசை. :D

Link to comment
Share on other sites

ஆர்வத்துடன் கல்விக்குச் செலவழிக்கும் பணம், எதிர்கால நல்வாழ்விற்கான முதலீடு. முன்பு இரண்டு நாட்களில் ஒரு மென்பொருள் கற்பதற்காக எண்ணூறு பவுண்ட்கள் கட்டினேன். அந்த மென்பொருள் அறிவு நல்லதொரு தொழிலைப் பெற்றுத்தந்தது.

நேர்முகத் தேர்வு செய்பவர்களுக்கும், தாங்கள் சரியான நபரைத் தெரிவு செய்ய வேண்டுமே என்ற பயமிருக்கும். இதை முன்னைய வேலையில், நேர்முகத் தேர்விற்கான தொழிநுட்ப வசதிகளை நேர்முகத் தேர்வாளர்களுக்கு செய்து கொடுக்கும் பொழுது கண்டிருக்கிறேன்.

ஒருமுறை வேலைக்கு பிழையான ஒருவரை நேர்முகத் தேர்வாளர் தெரிவு செய்த பொழுது 'முக்காடு போட்டுட்டா இவனை interview செய்தனீர் ' என சக ஊழியர் அவரை ஏசினார். :lol:

நிரந்தர வேலைக்கும் (Permanent ), தற்காலிக வேலைகளுக்கும் (Contract) நடக்கும் நேர்முகத் தேர்வுகள் வேறு வேறாக இருக்கும். தற்காலிக வேலை செய்வதால் அடிக்கடி நேர்முகத் தேர்வுகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் (Hire and Fire) வேலைக்கு எடுப்பதால், அந்த வேலையை செய்வதற்கான தகுதி உங்களுக்கு உள்ளதா என்ற அடிப்படையிலே கேள்விகள் கேட்கப்படும். Where Do You See Yourself Two Years from Now? போன்ற கேள்விகள் கேட்கப்படுவதில்லை. ஒரு ஒருமுறை பெண் நேர்முகத் தேர்வாளர் இந்தக் கேள்வியைக் கேட்ட பொழுது, நான் சொல்ல வந்த பதிலை <_< நினைத்துச் சிரித்து விட்டேன்.

நீண்ட காலத்திற்குப் பின் மனைவியைப் போற்றி புகழ்ந்து வந்ததொரு தொடர்.

:D

திருத்தியமைக்கான காரணம்: தடித்த எழுத்திலுள்ள வசனம் சேர்க்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

கருத்துக்களைப் பகிர்ந்து ஊக்கமளித்த விசுகு அண்ணா, அகூதா, நிலாமதி அக்கா, தும்பளையான், சுஜி, தமிழ்சிறி, தப்பிலி.. உங்களுக்கு எனது நன்றிகள்..! :D

Link to comment
Share on other sites

பாகம் 18: குறைபாடுகள் களைதல்

சிங்கப்பூரில் AutoCAD "தெரியும்" :D என்று சொன்னாலும் அங்கே அதை உபயோகிக்கவேண்டிய தேவை வரவில்லை.. அதற்கென வல்லுனர்கள் இருந்தார்கள். அதனால் பிரச்சினைகள் இல்லாது போய்விட்டது. ஆனால் எனக்கு அதைக் கற்கவேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது.

அதேபோல கணினி அறிவு கம்மியாக :D இருந்த கவலையும் அப்போது இருந்தது. அதனால் $400 கட்டி விசுவல் பேசிக் (Visual Basic) சிங்கப்பூரில் கற்றுக்கொண்டேன். :D பிறகு புத்தகங்களையும் வாங்கி அதைப் படித்து, சிம் லிம் சதுக்கத்தில் $5 க்கு விசுவல் பேசிக் இறுவட்டு வாங்கி நிறுவி வைத்துக்கொண்டேன். வேலையால் வீட்டிற்கு வந்தபிறகு மென்பொருள் எழுத ஆரம்பித்துவிடுவேன். :wub: பிறகு எனது மென்பொருளை எங்கள் நிறுவனத்தில் உள்ள வரைதல் வல்லுனர்களை உபயோகிக்கக் கொடுத்தேன்.

எனக்கு ஆங்கிலம் தெரியாது என்று யாராவது சொன்னால் பிரெஞ்சும் தெரியும் என்று காட்ட வேண்டும் என்பதுதான் என் பொலிசி. :D

ஆனால் நான் சிங்கப்பூரில் AutoCAD வகுப்புகளுக்குச் செல்லவில்லை. அவர்கள் வரையும்போது பின்னால் நின்று கட்டளைகள் வழங்கிக்கொண்டிருப்பேன். :D அதனால் அவர்கள் எப்படி வரைகிறார்கள் என்பதில் ஒரு அறிவு இருந்தது. ஆனால் தேர்ச்சி இருக்கவில்லை.

கனடாவில் சிவில் பொறியியலாளர் என்றால் AutoCAD தெரிந்திருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இதிலே பம்மாத்து விட முடியாது என்பது எனக்குத் தெரியும். அதனால் எனது வேலைக்குறிப்புகளில் AutoCAD தெரியுமென்று போடவில்லை. சின்னப்பையன்கள் ஏமாத்தி விளையாடலாம். ஒரு நிலைக்கு வந்துவிட்டால் ஏமாற்று, பம்மாத்துகளைக் குறைத்துவிட வேண்டும். நான் கனடாவில் மூன்று மாதங்கள் படிக்கச் சென்றதற்கு இது ஒரு முக்கிய காரணம். unsure.gif

இவ்வாறு நான் படிக்கத் தயாராகும் வேளையில் பொறியியல் அமைப்பில் இருந்து நேர்முகத்தேர்வுக்கு வரும்படி கேட்டார்கள். ரொராண்டோவில் இருந்த அவர்களது அலுவலகத்திற்கு அந்த நாளில் சென்றேன். எனக்கு சிங்கப்பூர் நிறுவனம் பரிசாக வழங்கிய அந்தக் கழுத்துப்பட்டியை அணிந்து சென்றேன். அதில் எனக்கொரு பெருமை. :D தன்னம்பிக்கையும் நிறைய வரும்.

நேர்முகத் தேர்வுக்கு பழைய வேலை அனுபவத்திற்கான வரைபடங்கள் இருந்தால் எடுத்துவரச் சொல்லியிருந்தார்கள்.

நேர்முகத்தேர்வில் எனது துறையில் வல்லுனர்கள் இரண்டுபேர். ஒரு காரியதரிசி. இன்னுமொரு ஊழியர் எனது ஆங்கில உரையாடல் திறமையைக் குறிப்பெடுக்க. unsure.gif

எனது வேலை அனுபவங்களை விளக்குமாறு கேட்டார்கள்.

"Tell us about yourself!" :lol:

உள்ளதிலேயே சிக்கலான ஒரு வேலைத்திட்டத்தின் வரைபடங்களை எடுத்துச் சென்றிருந்தேன். அவற்றைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கவும், யாரும் ஏதும் கேள்வி கேட்பதாகக் காணோம். அவர்களுக்கு நான் ஒரு வாத்தியார் போலவும், அவர்கள் இதை எப்பிடி செய்தீர்கள், அதை எப்பிடி செய்தீர்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். :D

இவர்களுக்கு என் துறையில் அனுபவமில்லை என்பது பிறகுதான் விளங்கியது. ஏனென்றால் நான் செய்த தொழில்நுட்பம் அமெரிக்காவில் பிரபலம். கனடாவில் முப்பது ஆண்டுகளுக்கு முன் அதை அப்போதிருந்த அறிவுடன் பாவித்து, துருப்பிடிக்கும் பிரச்சினையால் கைவிட்டுவிட்டார்கள். unsure.gif

இறுதியில், அத்திவாரம் வடிவமைப்பது பற்றி இரண்டு கேள்வி கேட்டுவிட்டு முடித்துவிட்டார்கள்.

ஒரு சில வாரங்களில் நான் சித்தியடைந்துவிட்டதாகவும், Engineering Law and Ethics ஆகிய இரண்டு தேர்வுகளை எழுத அனுமதி வந்தது. இதை பொறியியலாளராகப் போகும் அனைவரும் எழுத வேண்டும். இவற்றிலும் சித்தியடைந்து, குறைந்தபட்சம் ஒரு வருடம் ஒரு பொறியியலாளரின் மேற்பார்வையின்கீழ் வேலை செய்துவிட்டேன் என்றால் பொறியியலாளர் உரிமம் கிடைத்துவிடும்.

ஆனால் இன்னொரு பொறியியலாளரின் கீழ் வேலை செய்யவேண்டுமென்றால் முதலில் வேலையை எடுக்க வேண்டும். அதற்கு பொறியியலாளர் உரிமம் வேண்டும் என்கிறார்கள். Catch 22 நிலைமை. unsure.gif

சரி. முதலில் AutoCAD படிப்போம் என வகுப்புகளுக்குச் செல்ல ஆரம்பித்தேன். மனைவி தொடர்ந்தும் கஞ்சி ஊத்தினா. :D

(தொடரும்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை இப்படி ஒரு மனைவி கிடைக்க நீங்கள் கொடுத்து வைச்சனீங்கள்.சுமார் எவ்வளவு காலத்திற்கு உங்கள் மனைவி உங்களை வைத்து சாப்பாடு போட்டார்?...அதற்கு பதிலாக தற்போது உங்கள் மனைவியை இருத்தி வைச்சு சாப்பாடு போடுறீங்களா :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை இப்படி ஒரு மனைவி கிடைக்க நீங்கள் கொடுத்து வைச்சனீங்கள்.சுமார் எவ்வளவு காலத்திற்கு உங்கள் மனைவி உங்களை வைத்து சாப்பாடு போட்டார்?...அதற்கு பதிலாக தற்போது உங்கள் மனைவியை இருத்தி வைச்சு சாப்பாடு போடுறீங்களா :lol:

ரதியின் எதிர்காலத்துக்கான முக்கிய கேள்வி இது?

பதில் உடன் தாருங்கள் இசை??? :lol::D :D

Link to comment
Share on other sites

ஆனால் இன்னொரு பொறியியலாளரின் கீழ் வேலை செய்யவேண்டுமென்றால் முதலில் வேலையை எடுக்க வேண்டும். அதற்கு பொறியியலாளர் உரிமம் வேண்டும் என்கிறார்கள். Catch 22 நிலைமை. unsure.gif

இந்த கட்ச் 22 என்பது வேலை தேடுவதில் உட்பட பல இடங்களில் வாழ்க்கைக்கு சவாலாக உள்ள விடயம்.

பொதுவாக மேலே இன்னொரு உறவு குறிப்பிட்டது போன்று ' அனுபவம் இருந்தால் தான் வேலை, வேலை இருந்தால் தான் அனுபவம் கிடைக்கும்' (கோழியா இல்லை முட்டையா... :D ).

பொதுவாக இவ்வாறான பிரச்சனையை தீர்க்க ஒன்றில் வேலை அனுபத்துடன் கூடிய கல்வி இல்லை சம்பளம் இல்லாத / சம்பளம் குறைந்த வேலைகள் கைகொடுக்கும். இதற்கும் எம்மவர்கள் எம்மவர்களுக்கு உதவ வேண்டும், தமது நிறுவனத்தில் வேலைகளை இளையோருக்கு கொடுக்கவேண்டும், தெரிந்த இடங்களில் சேர்த்து தூக்கிவிடவேண்டும்.

Link to comment
Share on other sites

இசை இப்படி ஒரு மனைவி கிடைக்க நீங்கள் கொடுத்து வைச்சனீங்கள்.சுமார் எவ்வளவு காலத்திற்கு உங்கள் மனைவி உங்களை வைத்து சாப்பாடு போட்டார்?...அதற்கு பதிலாக தற்போது உங்கள் மனைவியை இருத்தி வைச்சு சாப்பாடு போடுறீங்களா :lol:

ரதியின் எதிர்காலத்துக்கான முக்கிய கேள்வி இது?

பதில் உடன் தாருங்கள் இசை??? :lol::D :D

மனிசிமார் பொல்லாத ஆட்கள்.. :D புருசனை கொஞ்சம் முன்னுக்குத் தள்லிவிட்டால் தாங்கள் ஜாலியா இருக்கலாம் எண்டு அவைக்குத் தெரியும்.. :lol:

2005 இல இருந்து ஆள் வேலைக்குப் போறேல்ல.. :wub:

கருத்துக்கு நன்றிகள் அகூதா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிசிமார் பொல்லாத ஆட்கள்.. :Dபுருசனை கொஞ்சம் முன்னுக்குத் தள்லிவிட்டால் தாங்கள் ஜாலியா இருக்கலாம் எண்டு அவைக்குத் தெரியும்.. :lol:

2005 இல இருந்து ஆள் வேலைக்குப் போறேல்ல.. :wub:

கருத்துக்கு நன்றிகள் அகூதா..

எல்லாவீட்டிலும் இதேநிலைதான்.

ஆனாலும் நான்தான் வீட்டில முடிபுகளை எடுக்கிறனான்.....??? :lol::D :D

Link to comment
Share on other sites

எனக்கு சிங்கப்பூர் நிறுவனம் பரிசாக வழங்கிய அந்தக் கழுத்துப்பட்டியை அணிந்து சென்றேன். அதில் எனக்கொரு பெருமை. :D தன்னம்பிக்கையும் நிறைய வரும்.

giggling.gifஎனகு தூகு கயிறுதானபா இருகு அணிவதகு giggling.gif

கடவுள் நம்பிகை நிறைய வரும்

Link to comment
Share on other sites

கருத்துக்கு நன்றிகள் குண்டன். :D

Link to comment
Share on other sites

பாகம் 19: இருகோடுகள் தத்துவம்

கனடாவுக்கு வந்து அப்போது ஆறுமாதங்களாகிவிட்டது. நான் படிக்கச் செல்வதும் வருவதுமாக இருந்தேன். அச்சமயத்தில் கொண்டுவந்த காசை எப்படிப் பாதுகாப்பது என்று சிந்தனையாக இருந்தது. அப்போது ஒரு வீடுவிற்பனை முகவருடன் பேசிக்கொண்டிருந்தபோது வீடு வாங்கலாமே என்றார். unsure.gif

எங்களுக்கும் பேஸ்மென்ரில் இருக்கப்பிடிக்கவில்லை. என் படிப்பு முடிந்து எங்காவது நேர்முகத் தேர்வுக்குப் போகும் ஒரு சந்தர்ப்பம் வந்தால் எப்படியும் வேலை வாங்கிவிடலாம் என்று ஒரு நம்பிக்கை இருந்தது. இன்னும் ஒரு மாதம் தாக்குப்பிடித்தால் போதும். :unsure:

சரி என்று அந்த வருடம் கிறிஸ்மஸ் சமயத்தில் வீடுவாங்கி குடிபோனோம். வேலை இல்லாவிட்டால் என்ன.. அதைவிட இது பெரிய பிரச்சினை.. அவ்வளவுதான்..! :lol:

2004 ஜனவரியில் படிப்பை முடித்ததும் ஒரு நேர்முகத்தேர்வுக்கு ஒழுங்கு செய்து எனக்குத் தெரிவித்தார்கள். எனக்குத்தான் எந்த வேலையென்றாலும் சரிதானே.. ஒரு வருடம் எப்படியாவது தாக்குப்பிடித்துவிட்டால் போதும். :unsure:

நேர்முகத்தேர்வுக்குச் சென்றேன்.

ஒரு சிறிய நிறுவனம். மொத்தமே முன்றுபேர்தான். :lol: ஒரு பொறியியலாளர். அவருடைய கூட்டாளி. ஒரு வரைதல் வல்லுனர். இவர்கள் மூவருமே சேர்பியா நாட்டைச் சேர்ந்தவர்கள். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் கனடாவுக்கு வந்திருந்தார்கள்.

பொறியியலாளருக்கு தொழில்நுட்ப ரீதியில் பெரிதாக ஒன்றும் தெரியாது. வீடு திருத்தம் செய்யும் வடிவமைப்புகள் செய்வார். ஒரு பொருட்களஞ்சியம் கட்டப்பட்டுக்கொண்டிருந்தது. அவரது நண்பி ஒருத்தியைக் கொண்டு டிசைன் வேலைகளைச் செய்து வாங்கி தான் முத்திரை பதித்து தன்னுடைய வேலைமாதிரி காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தார். :D

நேர்முகத்தேர்வில் அதிகம் கேள்விகள் இல்லை. என்ன செய்தீர்கள் என்று கேட்டார். உள்ளதைச் சொன்னேன். தொழில்நுட்பரீதியில் ஒன்றும் கேட்கவில்லை.

கோ ஆப் அடிப்படையில் வேலை கொடுத்தார். மாதம் போக்குவரத்துச் செலவுக்கு $500 தருவார். மூன்று மாதங்களில் இன்னொரு வேலை ஒப்பந்தம் கிடைக்கும் எனவும் அப்போது நிரந்தரம் ஆக்குவதாகவும் கூறினார். இந்தப்பக்கம் வீட்டு அடமானப் பணத்தையும் கட்ட வேண்டி இருந்தது. :unsure:

அவரிடம் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். வீடு திருத்த வேலைகள்தான் பெரும்பாலும். வார விடுமுறைகளில் பொறியியலாளர் அனுமதிப் பத்திரத்திற்கான இறுதித் தேர்வுக்காகப் படிக்க ஆரம்பித்தேன்.

மூன்று மாதங்கள் கழிந்திருக்கும். இவர் என்னை நிரந்தரமாக்கும் பேச்சு வரவில்லை. ஒருநாள் என்னமாதிரி என்று கேட்டேன். நினைச்ச வேலை ஒப்பந்தம் கிடைக்கவில்லை என்றும், தான் கனடாவுக்கு வந்த புதிதில் ஒருவரிடம் ஒரு வருடகாலம் ஓசியில் வேலை செய்து கொடுத்ததாகவும் கூறினார். அடப்பாவி.. நான் மோட்கேஜ் அல்லோ கட்டிக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன். :unsure:

நான் வேறு இடங்களுக்கு விண்ணப்பிக்கப் போகிறேன், அதற்கு Reference தரமுடியுமா என்று கேட்டேன். சரி என்றார்.

சிறிதுகாலம் அங்கே வேலை செய்ததால் எனக்கு சில உண்மைகள் விளங்கியிருந்தது. பொறியியலாளர் வேலை அல்லது அதற்குத் தகுதியானவர் என்று கேட்டிருந்தால் பொறியியலாளர் உரிமம் இல்லாதவர்கள் அந்தப் பக்கம் திரும்பியும் பார்க்கக் கூடாது. unsure.gif வடிவமைப்பாளர் (Structural Designer) என்று விண்ணப்பிக்க வேண்டும். வெளிநாடுகளில் site engineer வேலை செய்துவிட்டு வந்தவர்கள் Site Technician வேலைக்கு ஆரம்பத்தில் விண்ணப்பித்தால் வேலை கிடைப்பதில் கஷ்டம் இருக்காது.

இதை அறிந்துகொண்டதால் எனது வேலைக்குறிப்பில் மாற்றம் செய்து நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தேன். இரண்டுபேர் அழைத்தார்கள். :rolleyes:

ஒரு சிறு தவறு.. திருத்திவிட ஆளில்லாத காரணத்தால் பெரும் அலைச்சலில் கொண்டுபோய் விட்டிருந்தது. :unsure:

(தொடரும்.)

Link to comment
Share on other sites

இந்தப்பகுதியில் ஒரு மிகமுக்கியமான கருத்தை கூறியுள்ளீர்கள். அதாவது வெளிநாட்டு தகமைகளை எவ்வாறு குறிப்பிட்டு வேலைகளுக்கு முயற்சிக்கவேண்டும் வேண்டும் என.

பாகம் 19: இருகோடுகள் தத்துவம்

இல்லாதவர்கள் அந்தப் பக்கம் திரும்பியும் பார்க்கக் கூடாது. unsure.gif வடிவமைப்பாளர் (Structural Designer) என்று விண்ணப்பிக்க வேண்டும். வெளிநாடுகளில் site engineer வேலை செய்துவிட்டு வந்தவர்கள் Site Technician வேலைக்கு ஆரம்பத்தில் விண்ணப்பித்தால் வேலை கிடைப்பதில் கஷ்டம் இருக்காது.

இதை அறிந்துகொண்டதால் எனது வேலைக்குறிப்பில் மாற்றம் செய்து நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தேன். இரண்டுபேர் அழைத்தார்கள். :rolleyes:

Link to comment
Share on other sites

கருத்துக்கு நன்றிகள் அகூதா.. வேலை தேடுபவர்களிடம் பேசும்போதெல்லாம் இதை தவறாது கேட்டு விசாரிப்பேன்.

Link to comment
Share on other sites

பாகம் 20: திசைமாறிய காற்று

பலவிதமான பிரச்சினைகளிலும் உழன்றுகொண்டிருந்த எனக்கு அது ஒரு திருப்புமுனையான காலம். ஒருநாள் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எடுத்தால் யாரோ ஒரு நிறுவனத்தில் இருந்திலிருந்து அழைத்தார்கள். வாகனம் ஓட்டிக்கொண்டிருந்த என்னால் அவர்களின் நிறுவனத்தின் பெயரை சரியாகப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. பிறகு அழையுங்கள் என்று சொல்லவும் மனம் வரவில்லை. ஏற்கனவே ட்ரிப் போன விடயம் மாதிரி திரும்பவும் அழைப்பு வராமலும் போகலாம். unsure.gif

நிறுவனத்தின் பெயரை திரும்பத் திரும்பக் கேட்டாலும், என்னடா இது என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். மிகவும் விலைமலிவான :D செல் தொலைபேசி வாங்கியிருந்ததால் நம்பர் கூட விழாது. :D

அவர்கள் சொன்ன இலக்கத்தை மனதில் ஓரளவு இருத்திக்கொண்டு அவசரமாக வீடு சென்றேன். அவர்களின் நிறுவனத்தின் முதல் பாதிப் பெயர் மனதில் நின்றது. இணையத்தில் தேடி, ஒருவழியாகக் கண்டுபிடித்துவிட்டேன்.. :D

திரும்ப ஒரு அழைப்பை மேற்கொண்டு, நேர்முகத்தேர்வுக்கான நாளைக் குறித்துக்கொண்டேன். இவ்வளவுக்கும் அந்த நிறுவனத்திற்கு நான் விண்ணப்பித்த ஞாபகமே இல்லை. unsure.gif

நேர்முகத்தேர்வு நாள். எனக்குப் பிடித்தமான அதே கழுத்துப்பட்டியை மீண்டும் அணிந்து சென்றேன்.. :D

ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு வெள்ளையர் மட்டும் என்னை நேர்முகத்தேர்வு செய்யக் காத்திருந்தார். unsure.gif வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு நேர்முகத்தேர்வு ஆரம்பமானது. unsure.gif

"Tell me about yourself!" :lol:

இந்த இடத்தில்தான் உங்கள் மொழிப்புலமையும், சீராகத் தொடுத்துச் சொல்லும் திறமையும் வெளிப்படவேண்டும். அதிகம் கேள்விகள் அவர்கள் இடையில் கேட்க ஆரம்பித்தார்கள் என்றால் உங்கள் கதைசொல்லும் ஆற்றலில் குறை உள்ளது என்று அர்த்தம். :D

இதில் சிரிப்பென்னவென்றால் என்ன வேலைக்கு நான் போகப்போகிறேன் என்று எனக்குத் தெரியாது. :D அவர்களது இணையத்தளத்தில் நில ஆராய்ச்சி மற்றும் சுற்றுப்புறச் சூழல் (Geotechnical & Environmental) சம்பந்தமானது என்று போட்டிருந்தார்கள். எனக்கோ இந்தத் துறைகளில் அனுபவம் இல்லை. unsure.gif

என் கதையைச் சொல்லி முடித்ததும் Shoring & Excavation, Caissons, soldier piles என்று வார்த்தைகளை அள்ளிவீசிக் கொண்டிருந்தார். எனக்கெண்டால் சிதம்பரசக்கரத்தைப் பேய் பார்த்தமாதிரி இருந்தது. நானும் ஓரளவு தெரிந்ததுபோல் தலையாட்டிக் கொண்டிருந்தேன். :wub:

நான் என்னைப் பற்றி சொன்னபோது அதிலிருந்து என்னுடைய சில விசேட தகைமைகளை அவர் அறிந்துகொண்டிருந்தார். எனது தற்போதைய வேலை குறித்துக் கேட்டார். நான் $500 க்கு வேலை செய்த கதையைச் சொன்னேன். :D உங்களை இந்த அளவுக்கு ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதைத் தன்னால் நம்பமுடியவில்லை என்று சொல்லி வருத்தப்பட்டார். :blink:

நேர்முகத்தேர்வு முடிந்தது. அநேகமாக வேலை கிடைக்கும்போல் இருந்தது. ஆனால் எனக்குப் பின்னால் இன்னொருவர் நேர்முகத்தேர்வுக்குக் காத்திருந்தார். unsure.gif

ஒருவாரம் கழிந்திருக்கும். எனக்கு வேலை வழங்குவதற்கான அவர்களது விருப்பக்கடிதத்தை அனுப்பியிருந்தார்கள். சம்பளம் அப்ப இருந்த நிலைமைக்குப் பரவாயில்லை. ஆனால் அதைவிட முக்கியம் கனடாவில் ஒருவருடம் வேலை அனுபவம் பெற வேண்டும். unsure.gif

(தொடரும்.)

Link to comment
Share on other sites

மிகவும் விலைமலிவான :D செல் தொலைபேசி வாங்கியிருந்ததால் நம்பர் கூட விழாது. :D

பூனையக்கண்டவன் புலியைக்கண்டேன் என சொல்லும் காலத்தில் யதார்த்தமாக வாழ்ந்துள்ளீர்கள், உயர்ந்துள்ளீர்கள் அதை மறுக்காமல் வெளியே சொல்லுகிறீர்கள்.

Link to comment
Share on other sites

பூனையக்கண்டவன் புலியைக்கண்டேன் என சொல்லும் காலத்தில் யதார்த்தமாக வாழ்ந்துள்ளீர்கள், உயர்ந்துள்ளீர்கள் அதை மறுக்காமல் வெளியே சொல்லுகிறீர்கள்.

பெயரும் புகழும் வெறும் பகட்டால் அல்லாது செயற்திறனால் வந்ததாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.. :unsure:

Link to comment
Share on other sites

வற்றலோ தொற்ரலோ வாய்ப்புகள் கூடிய, முதல் வரும் வேலையை அமுக்குவது நல்லது. அதைத்தான் நீங்கள் செய்துள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.