Jump to content

நேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல்


Recommended Posts

பாகம் 17: மீள ஒழுங்கமைத்தல்

உறவினர் வீட்டில் இருந்து ஒரு பேஸ்மென்ட் வீட்டுக்குக் குடிபெயர்ந்தோம். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவது, தளபாடங்கள் வாங்குவது என காசு மேலும் கரைந்தது. அச்சமயத்தில், நான் ஒரு மரத் தளபாடங்கள் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அதுகுறித்து முன்பு ஒரு பதிவு போட்டதாக ஞாபகம். :rolleyes:

கனடாவுக்கு வந்து ஒரு நன்கு மாதங்கள் கழிந்திருக்கும். ஒரு நிறுவனதில் இருந்து தொலைபேசி அழைப்பு. பேசியவர் என்னைப் பற்றி விசாரித்து அறிந்து கொண்டார். இன்னொரு நாளில் பேசுவதாகக் கூறி வைத்துவிட்டார். ம்ற்றொரு நாளில் பேசிக்கொண்டிருக்கும்போது வீட்டில் ஃபியூஸ் போய் (Trip) அழைப்பு நின்றுவிட்டது. அதன்பிறகு அவரைப் பிடிக்க முடியவில்லை. :unsure:

எனது வேலைதேடும் அணுகுமுறையில் ஏதோ பிழையிருக்கிறது என்று தெரிந்தது. ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையில், பொறியியளாளர் அமைப்பில் இருந்து ஒரு கடிதம் வந்தது. எனது கல்வித்தகுதி ஏற்கனவே பரிசோதிக்கப்பட்டு விட்டது. எனது சிங்கப்பூர் வேலை அனுபவத்தையும் Reference மூலம் உறுதிப்படுத்திக்கொண்டு விட்டார்கள். இப்போது எனக்கு இரண்டு தெரிவுகள் தரப்பட்டிருந்தது. ஒன்று 3 தொழில்நுட்பப் பரீட்சைகள் எழுதுவது. அல்லது நேர்முகத் தேர்வுக்குச் செல்வது.

இவையள் என்ன சொல்லுறது.. நாங்கள் என்ன தேர்வு எழுதுவது என்று நேர்முகத்தேவை தெரிவு செய்து கடிதம் அனுப்பினேன். :wub:

மரவேலைக்குத் தொடர்ச்சியாகச் சென்றுகொண்டிருந்ததால் எனது துறையில் வேலைதேடும் ஆர்வம் படிப்படியாகக் குறையத் தொடங்கி விட்டிருந்தது. :unsure: ஒருநாள் எனது மனநிலை குறித்து மனைவியிடம் கூறினேன். நீங்கள் வேலைக்குப் போக வேண்டாம்; நான் மட்டும் போகிறேன். நீங்கள் வேலைக்கு மட்டும் முயற்சி செய்யுங்கோஎன்று சொன்னா. :D

நானும் சரியென்று வீட்டிலிருந்து வேலை தேட ஆரம்பித்தேன். மனைவி என்னை வைத்து கஞ்சி ஊத்தினா. :lol: (பகிடியாகச் சொன்னாலும், என் மனைவியின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் இன்று நான் பூச்சியம். :unsure: ) இப்பவும் பூச்சியம்தான் எண்டு யாரோ சொல்லுறது காதில் விழுகிறது. :lol:

அப்போது இணையத்தில் ஒரு கல்வி நிறுவனத்தின் விளம்பரம் கண்ணில் பட்டது. அவர்களிடம் AutoCAD, ஒன்ராரியோவின் கட்டட ஒழுங்கமைப்பு (Ontario Building Code) ஆகியவற்றை மூன்று மாதங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அதை முடித்தவுடன் அவர்களுக்குத் தெரிந்த பொறியியல் நிறுவனங்களில் Co-op அடிப்படையிலான வேலைக்கு நேர்முகத்தேர்வுக்கு அனுப்பப்படுவார்கள். :rolleyes:

அட.. இது பரவாயில்லையே என்று தோன்றியது. மனையாளிடம் பேசிவிட்டு, விண்ணப்பம் போட்டு வைத்தேன். மொத்தமாக $2800 கல்வித்தொகை. :unsure:

(தொடரும்.)

Link to comment
Share on other sites

  • Replies 346
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மனையாளிடம் பேசிவிட்டு, (தொடரும்.)

மனைவியே மந்திரி :icon_idea:

பல முறை நிரூபிக்கப்பட்டாலும் இன்னும் இதை பின் பற்ற முடியவில்லை.

வீழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை தொடர்கிறது. :(

Link to comment
Share on other sites

அப்போது இணையத்தில் ஒரு கல்வி நிறுவனத்தின் விளம்பரம் கண்ணில் பட்டது. அவர்களிடம் AutoCAD, ஒன்ராரியோவின் கட்டட ஒழுங்கமைப்பு (Ontario Building Code) ஆகியவற்றை மூன்று மாதங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அதை முடித்தவுடன் அவர்களுக்குத் தெரிந்த பொறியியல் நிறுவனங்களில் Co-op அடிப்படையிலான வேலைக்கு நேர்முகத்தேர்வுக்கு அனுப்பப்படுவார்கள். :rolleyes:

இவ்வாறான அணுகுமுறைகள் பொதுவாக நல்ல பயனைத்தரும்.

உதாரணத்திற்கு பொறியியல் துறைக்கு பெயர்போன வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் உள்ள கோஆப் திட்டங்கள் படிக்கும்பொழுதே

கடனை அடைக்கவும் வேலை வாய்ப்பை உறுதி செய்யவும் வழிசமைக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள பகிர்வு மேலும் தொடர்க. :D

Link to comment
Share on other sites

அருமை இசை அண்ணா. இண்டைக்குத்தான் கண்ணில தட்டுப் பட்டுது, உடனேயே வாசிச்சு முடிச்சிட்டன். குறிப்பா உங்கள் நகைச்சுவையான எழுத்து நடை அருமை. கண்டிப்பா பலருக்கு பிரயோசனமாக இருக்கும். எனக்கு கன professional interview போய் பழக்கமில்லை. முதலாவது போன நேர்முகத் தேர்விலேயே வேலை கிடைத்துவிட்டது. எனது அனுபவங்களையும் இன்னொரு திரியில் பதியும் யோசினையை தந்து விட்டீர்கள்.

Link to comment
Share on other sites

அம்மாடியோவ் இவ்வளவு பக்கமா கொஞ்சம் நிறுத்தி வையுங்கள் இசை அண்ணா நான் படிச்சு முடிக்கும்வரை... நல்ல தொடர் இசை அண்ணா தொடருங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கமான.. லொள்ளுடன், தொடர் நன்றாக உள்ளது இசை. :D

Link to comment
Share on other sites

ஆர்வத்துடன் கல்விக்குச் செலவழிக்கும் பணம், எதிர்கால நல்வாழ்விற்கான முதலீடு. முன்பு இரண்டு நாட்களில் ஒரு மென்பொருள் கற்பதற்காக எண்ணூறு பவுண்ட்கள் கட்டினேன். அந்த மென்பொருள் அறிவு நல்லதொரு தொழிலைப் பெற்றுத்தந்தது.

நேர்முகத் தேர்வு செய்பவர்களுக்கும், தாங்கள் சரியான நபரைத் தெரிவு செய்ய வேண்டுமே என்ற பயமிருக்கும். இதை முன்னைய வேலையில், நேர்முகத் தேர்விற்கான தொழிநுட்ப வசதிகளை நேர்முகத் தேர்வாளர்களுக்கு செய்து கொடுக்கும் பொழுது கண்டிருக்கிறேன்.

ஒருமுறை வேலைக்கு பிழையான ஒருவரை நேர்முகத் தேர்வாளர் தெரிவு செய்த பொழுது 'முக்காடு போட்டுட்டா இவனை interview செய்தனீர் ' என சக ஊழியர் அவரை ஏசினார். :lol:

நிரந்தர வேலைக்கும் (Permanent ), தற்காலிக வேலைகளுக்கும் (Contract) நடக்கும் நேர்முகத் தேர்வுகள் வேறு வேறாக இருக்கும். தற்காலிக வேலை செய்வதால் அடிக்கடி நேர்முகத் தேர்வுகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் (Hire and Fire) வேலைக்கு எடுப்பதால், அந்த வேலையை செய்வதற்கான தகுதி உங்களுக்கு உள்ளதா என்ற அடிப்படையிலே கேள்விகள் கேட்கப்படும். Where Do You See Yourself Two Years from Now? போன்ற கேள்விகள் கேட்கப்படுவதில்லை. ஒரு ஒருமுறை பெண் நேர்முகத் தேர்வாளர் இந்தக் கேள்வியைக் கேட்ட பொழுது, நான் சொல்ல வந்த பதிலை <_< நினைத்துச் சிரித்து விட்டேன்.

நீண்ட காலத்திற்குப் பின் மனைவியைப் போற்றி புகழ்ந்து வந்ததொரு தொடர்.

:D

திருத்தியமைக்கான காரணம்: தடித்த எழுத்திலுள்ள வசனம் சேர்க்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

கருத்துக்களைப் பகிர்ந்து ஊக்கமளித்த விசுகு அண்ணா, அகூதா, நிலாமதி அக்கா, தும்பளையான், சுஜி, தமிழ்சிறி, தப்பிலி.. உங்களுக்கு எனது நன்றிகள்..! :D

Link to comment
Share on other sites

பாகம் 18: குறைபாடுகள் களைதல்

சிங்கப்பூரில் AutoCAD "தெரியும்" :D என்று சொன்னாலும் அங்கே அதை உபயோகிக்கவேண்டிய தேவை வரவில்லை.. அதற்கென வல்லுனர்கள் இருந்தார்கள். அதனால் பிரச்சினைகள் இல்லாது போய்விட்டது. ஆனால் எனக்கு அதைக் கற்கவேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது.

அதேபோல கணினி அறிவு கம்மியாக :D இருந்த கவலையும் அப்போது இருந்தது. அதனால் $400 கட்டி விசுவல் பேசிக் (Visual Basic) சிங்கப்பூரில் கற்றுக்கொண்டேன். :D பிறகு புத்தகங்களையும் வாங்கி அதைப் படித்து, சிம் லிம் சதுக்கத்தில் $5 க்கு விசுவல் பேசிக் இறுவட்டு வாங்கி நிறுவி வைத்துக்கொண்டேன். வேலையால் வீட்டிற்கு வந்தபிறகு மென்பொருள் எழுத ஆரம்பித்துவிடுவேன். :wub: பிறகு எனது மென்பொருளை எங்கள் நிறுவனத்தில் உள்ள வரைதல் வல்லுனர்களை உபயோகிக்கக் கொடுத்தேன்.

எனக்கு ஆங்கிலம் தெரியாது என்று யாராவது சொன்னால் பிரெஞ்சும் தெரியும் என்று காட்ட வேண்டும் என்பதுதான் என் பொலிசி. :D

ஆனால் நான் சிங்கப்பூரில் AutoCAD வகுப்புகளுக்குச் செல்லவில்லை. அவர்கள் வரையும்போது பின்னால் நின்று கட்டளைகள் வழங்கிக்கொண்டிருப்பேன். :D அதனால் அவர்கள் எப்படி வரைகிறார்கள் என்பதில் ஒரு அறிவு இருந்தது. ஆனால் தேர்ச்சி இருக்கவில்லை.

கனடாவில் சிவில் பொறியியலாளர் என்றால் AutoCAD தெரிந்திருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இதிலே பம்மாத்து விட முடியாது என்பது எனக்குத் தெரியும். அதனால் எனது வேலைக்குறிப்புகளில் AutoCAD தெரியுமென்று போடவில்லை. சின்னப்பையன்கள் ஏமாத்தி விளையாடலாம். ஒரு நிலைக்கு வந்துவிட்டால் ஏமாற்று, பம்மாத்துகளைக் குறைத்துவிட வேண்டும். நான் கனடாவில் மூன்று மாதங்கள் படிக்கச் சென்றதற்கு இது ஒரு முக்கிய காரணம். unsure.gif

இவ்வாறு நான் படிக்கத் தயாராகும் வேளையில் பொறியியல் அமைப்பில் இருந்து நேர்முகத்தேர்வுக்கு வரும்படி கேட்டார்கள். ரொராண்டோவில் இருந்த அவர்களது அலுவலகத்திற்கு அந்த நாளில் சென்றேன். எனக்கு சிங்கப்பூர் நிறுவனம் பரிசாக வழங்கிய அந்தக் கழுத்துப்பட்டியை அணிந்து சென்றேன். அதில் எனக்கொரு பெருமை. :D தன்னம்பிக்கையும் நிறைய வரும்.

நேர்முகத் தேர்வுக்கு பழைய வேலை அனுபவத்திற்கான வரைபடங்கள் இருந்தால் எடுத்துவரச் சொல்லியிருந்தார்கள்.

நேர்முகத்தேர்வில் எனது துறையில் வல்லுனர்கள் இரண்டுபேர். ஒரு காரியதரிசி. இன்னுமொரு ஊழியர் எனது ஆங்கில உரையாடல் திறமையைக் குறிப்பெடுக்க. unsure.gif

எனது வேலை அனுபவங்களை விளக்குமாறு கேட்டார்கள்.

"Tell us about yourself!" :lol:

உள்ளதிலேயே சிக்கலான ஒரு வேலைத்திட்டத்தின் வரைபடங்களை எடுத்துச் சென்றிருந்தேன். அவற்றைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கவும், யாரும் ஏதும் கேள்வி கேட்பதாகக் காணோம். அவர்களுக்கு நான் ஒரு வாத்தியார் போலவும், அவர்கள் இதை எப்பிடி செய்தீர்கள், அதை எப்பிடி செய்தீர்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். :D

இவர்களுக்கு என் துறையில் அனுபவமில்லை என்பது பிறகுதான் விளங்கியது. ஏனென்றால் நான் செய்த தொழில்நுட்பம் அமெரிக்காவில் பிரபலம். கனடாவில் முப்பது ஆண்டுகளுக்கு முன் அதை அப்போதிருந்த அறிவுடன் பாவித்து, துருப்பிடிக்கும் பிரச்சினையால் கைவிட்டுவிட்டார்கள். unsure.gif

இறுதியில், அத்திவாரம் வடிவமைப்பது பற்றி இரண்டு கேள்வி கேட்டுவிட்டு முடித்துவிட்டார்கள்.

ஒரு சில வாரங்களில் நான் சித்தியடைந்துவிட்டதாகவும், Engineering Law and Ethics ஆகிய இரண்டு தேர்வுகளை எழுத அனுமதி வந்தது. இதை பொறியியலாளராகப் போகும் அனைவரும் எழுத வேண்டும். இவற்றிலும் சித்தியடைந்து, குறைந்தபட்சம் ஒரு வருடம் ஒரு பொறியியலாளரின் மேற்பார்வையின்கீழ் வேலை செய்துவிட்டேன் என்றால் பொறியியலாளர் உரிமம் கிடைத்துவிடும்.

ஆனால் இன்னொரு பொறியியலாளரின் கீழ் வேலை செய்யவேண்டுமென்றால் முதலில் வேலையை எடுக்க வேண்டும். அதற்கு பொறியியலாளர் உரிமம் வேண்டும் என்கிறார்கள். Catch 22 நிலைமை. unsure.gif

சரி. முதலில் AutoCAD படிப்போம் என வகுப்புகளுக்குச் செல்ல ஆரம்பித்தேன். மனைவி தொடர்ந்தும் கஞ்சி ஊத்தினா. :D

(தொடரும்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை இப்படி ஒரு மனைவி கிடைக்க நீங்கள் கொடுத்து வைச்சனீங்கள்.சுமார் எவ்வளவு காலத்திற்கு உங்கள் மனைவி உங்களை வைத்து சாப்பாடு போட்டார்?...அதற்கு பதிலாக தற்போது உங்கள் மனைவியை இருத்தி வைச்சு சாப்பாடு போடுறீங்களா :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை இப்படி ஒரு மனைவி கிடைக்க நீங்கள் கொடுத்து வைச்சனீங்கள்.சுமார் எவ்வளவு காலத்திற்கு உங்கள் மனைவி உங்களை வைத்து சாப்பாடு போட்டார்?...அதற்கு பதிலாக தற்போது உங்கள் மனைவியை இருத்தி வைச்சு சாப்பாடு போடுறீங்களா :lol:

ரதியின் எதிர்காலத்துக்கான முக்கிய கேள்வி இது?

பதில் உடன் தாருங்கள் இசை??? :lol::D :D

Link to comment
Share on other sites

ஆனால் இன்னொரு பொறியியலாளரின் கீழ் வேலை செய்யவேண்டுமென்றால் முதலில் வேலையை எடுக்க வேண்டும். அதற்கு பொறியியலாளர் உரிமம் வேண்டும் என்கிறார்கள். Catch 22 நிலைமை. unsure.gif

இந்த கட்ச் 22 என்பது வேலை தேடுவதில் உட்பட பல இடங்களில் வாழ்க்கைக்கு சவாலாக உள்ள விடயம்.

பொதுவாக மேலே இன்னொரு உறவு குறிப்பிட்டது போன்று ' அனுபவம் இருந்தால் தான் வேலை, வேலை இருந்தால் தான் அனுபவம் கிடைக்கும்' (கோழியா இல்லை முட்டையா... :D ).

பொதுவாக இவ்வாறான பிரச்சனையை தீர்க்க ஒன்றில் வேலை அனுபத்துடன் கூடிய கல்வி இல்லை சம்பளம் இல்லாத / சம்பளம் குறைந்த வேலைகள் கைகொடுக்கும். இதற்கும் எம்மவர்கள் எம்மவர்களுக்கு உதவ வேண்டும், தமது நிறுவனத்தில் வேலைகளை இளையோருக்கு கொடுக்கவேண்டும், தெரிந்த இடங்களில் சேர்த்து தூக்கிவிடவேண்டும்.

Link to comment
Share on other sites

இசை இப்படி ஒரு மனைவி கிடைக்க நீங்கள் கொடுத்து வைச்சனீங்கள்.சுமார் எவ்வளவு காலத்திற்கு உங்கள் மனைவி உங்களை வைத்து சாப்பாடு போட்டார்?...அதற்கு பதிலாக தற்போது உங்கள் மனைவியை இருத்தி வைச்சு சாப்பாடு போடுறீங்களா :lol:

ரதியின் எதிர்காலத்துக்கான முக்கிய கேள்வி இது?

பதில் உடன் தாருங்கள் இசை??? :lol::D :D

மனிசிமார் பொல்லாத ஆட்கள்.. :D புருசனை கொஞ்சம் முன்னுக்குத் தள்லிவிட்டால் தாங்கள் ஜாலியா இருக்கலாம் எண்டு அவைக்குத் தெரியும்.. :lol:

2005 இல இருந்து ஆள் வேலைக்குப் போறேல்ல.. :wub:

கருத்துக்கு நன்றிகள் அகூதா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிசிமார் பொல்லாத ஆட்கள்.. :Dபுருசனை கொஞ்சம் முன்னுக்குத் தள்லிவிட்டால் தாங்கள் ஜாலியா இருக்கலாம் எண்டு அவைக்குத் தெரியும்.. :lol:

2005 இல இருந்து ஆள் வேலைக்குப் போறேல்ல.. :wub:

கருத்துக்கு நன்றிகள் அகூதா..

எல்லாவீட்டிலும் இதேநிலைதான்.

ஆனாலும் நான்தான் வீட்டில முடிபுகளை எடுக்கிறனான்.....??? :lol::D :D

Link to comment
Share on other sites

எனக்கு சிங்கப்பூர் நிறுவனம் பரிசாக வழங்கிய அந்தக் கழுத்துப்பட்டியை அணிந்து சென்றேன். அதில் எனக்கொரு பெருமை. :D தன்னம்பிக்கையும் நிறைய வரும்.

giggling.gifஎனகு தூகு கயிறுதானபா இருகு அணிவதகு giggling.gif

கடவுள் நம்பிகை நிறைய வரும்

Link to comment
Share on other sites

கருத்துக்கு நன்றிகள் குண்டன். :D

Link to comment
Share on other sites

பாகம் 19: இருகோடுகள் தத்துவம்

கனடாவுக்கு வந்து அப்போது ஆறுமாதங்களாகிவிட்டது. நான் படிக்கச் செல்வதும் வருவதுமாக இருந்தேன். அச்சமயத்தில் கொண்டுவந்த காசை எப்படிப் பாதுகாப்பது என்று சிந்தனையாக இருந்தது. அப்போது ஒரு வீடுவிற்பனை முகவருடன் பேசிக்கொண்டிருந்தபோது வீடு வாங்கலாமே என்றார். unsure.gif

எங்களுக்கும் பேஸ்மென்ரில் இருக்கப்பிடிக்கவில்லை. என் படிப்பு முடிந்து எங்காவது நேர்முகத் தேர்வுக்குப் போகும் ஒரு சந்தர்ப்பம் வந்தால் எப்படியும் வேலை வாங்கிவிடலாம் என்று ஒரு நம்பிக்கை இருந்தது. இன்னும் ஒரு மாதம் தாக்குப்பிடித்தால் போதும். :unsure:

சரி என்று அந்த வருடம் கிறிஸ்மஸ் சமயத்தில் வீடுவாங்கி குடிபோனோம். வேலை இல்லாவிட்டால் என்ன.. அதைவிட இது பெரிய பிரச்சினை.. அவ்வளவுதான்..! :lol:

2004 ஜனவரியில் படிப்பை முடித்ததும் ஒரு நேர்முகத்தேர்வுக்கு ஒழுங்கு செய்து எனக்குத் தெரிவித்தார்கள். எனக்குத்தான் எந்த வேலையென்றாலும் சரிதானே.. ஒரு வருடம் எப்படியாவது தாக்குப்பிடித்துவிட்டால் போதும். :unsure:

நேர்முகத்தேர்வுக்குச் சென்றேன்.

ஒரு சிறிய நிறுவனம். மொத்தமே முன்றுபேர்தான். :lol: ஒரு பொறியியலாளர். அவருடைய கூட்டாளி. ஒரு வரைதல் வல்லுனர். இவர்கள் மூவருமே சேர்பியா நாட்டைச் சேர்ந்தவர்கள். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் கனடாவுக்கு வந்திருந்தார்கள்.

பொறியியலாளருக்கு தொழில்நுட்ப ரீதியில் பெரிதாக ஒன்றும் தெரியாது. வீடு திருத்தம் செய்யும் வடிவமைப்புகள் செய்வார். ஒரு பொருட்களஞ்சியம் கட்டப்பட்டுக்கொண்டிருந்தது. அவரது நண்பி ஒருத்தியைக் கொண்டு டிசைன் வேலைகளைச் செய்து வாங்கி தான் முத்திரை பதித்து தன்னுடைய வேலைமாதிரி காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தார். :D

நேர்முகத்தேர்வில் அதிகம் கேள்விகள் இல்லை. என்ன செய்தீர்கள் என்று கேட்டார். உள்ளதைச் சொன்னேன். தொழில்நுட்பரீதியில் ஒன்றும் கேட்கவில்லை.

கோ ஆப் அடிப்படையில் வேலை கொடுத்தார். மாதம் போக்குவரத்துச் செலவுக்கு $500 தருவார். மூன்று மாதங்களில் இன்னொரு வேலை ஒப்பந்தம் கிடைக்கும் எனவும் அப்போது நிரந்தரம் ஆக்குவதாகவும் கூறினார். இந்தப்பக்கம் வீட்டு அடமானப் பணத்தையும் கட்ட வேண்டி இருந்தது. :unsure:

அவரிடம் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். வீடு திருத்த வேலைகள்தான் பெரும்பாலும். வார விடுமுறைகளில் பொறியியலாளர் அனுமதிப் பத்திரத்திற்கான இறுதித் தேர்வுக்காகப் படிக்க ஆரம்பித்தேன்.

மூன்று மாதங்கள் கழிந்திருக்கும். இவர் என்னை நிரந்தரமாக்கும் பேச்சு வரவில்லை. ஒருநாள் என்னமாதிரி என்று கேட்டேன். நினைச்ச வேலை ஒப்பந்தம் கிடைக்கவில்லை என்றும், தான் கனடாவுக்கு வந்த புதிதில் ஒருவரிடம் ஒரு வருடகாலம் ஓசியில் வேலை செய்து கொடுத்ததாகவும் கூறினார். அடப்பாவி.. நான் மோட்கேஜ் அல்லோ கட்டிக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன். :unsure:

நான் வேறு இடங்களுக்கு விண்ணப்பிக்கப் போகிறேன், அதற்கு Reference தரமுடியுமா என்று கேட்டேன். சரி என்றார்.

சிறிதுகாலம் அங்கே வேலை செய்ததால் எனக்கு சில உண்மைகள் விளங்கியிருந்தது. பொறியியலாளர் வேலை அல்லது அதற்குத் தகுதியானவர் என்று கேட்டிருந்தால் பொறியியலாளர் உரிமம் இல்லாதவர்கள் அந்தப் பக்கம் திரும்பியும் பார்க்கக் கூடாது. unsure.gif வடிவமைப்பாளர் (Structural Designer) என்று விண்ணப்பிக்க வேண்டும். வெளிநாடுகளில் site engineer வேலை செய்துவிட்டு வந்தவர்கள் Site Technician வேலைக்கு ஆரம்பத்தில் விண்ணப்பித்தால் வேலை கிடைப்பதில் கஷ்டம் இருக்காது.

இதை அறிந்துகொண்டதால் எனது வேலைக்குறிப்பில் மாற்றம் செய்து நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தேன். இரண்டுபேர் அழைத்தார்கள். :rolleyes:

ஒரு சிறு தவறு.. திருத்திவிட ஆளில்லாத காரணத்தால் பெரும் அலைச்சலில் கொண்டுபோய் விட்டிருந்தது. :unsure:

(தொடரும்.)

Link to comment
Share on other sites

இந்தப்பகுதியில் ஒரு மிகமுக்கியமான கருத்தை கூறியுள்ளீர்கள். அதாவது வெளிநாட்டு தகமைகளை எவ்வாறு குறிப்பிட்டு வேலைகளுக்கு முயற்சிக்கவேண்டும் வேண்டும் என.

பாகம் 19: இருகோடுகள் தத்துவம்

இல்லாதவர்கள் அந்தப் பக்கம் திரும்பியும் பார்க்கக் கூடாது. unsure.gif வடிவமைப்பாளர் (Structural Designer) என்று விண்ணப்பிக்க வேண்டும். வெளிநாடுகளில் site engineer வேலை செய்துவிட்டு வந்தவர்கள் Site Technician வேலைக்கு ஆரம்பத்தில் விண்ணப்பித்தால் வேலை கிடைப்பதில் கஷ்டம் இருக்காது.

இதை அறிந்துகொண்டதால் எனது வேலைக்குறிப்பில் மாற்றம் செய்து நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தேன். இரண்டுபேர் அழைத்தார்கள். :rolleyes:

Link to comment
Share on other sites

கருத்துக்கு நன்றிகள் அகூதா.. வேலை தேடுபவர்களிடம் பேசும்போதெல்லாம் இதை தவறாது கேட்டு விசாரிப்பேன்.

Link to comment
Share on other sites

பாகம் 20: திசைமாறிய காற்று

பலவிதமான பிரச்சினைகளிலும் உழன்றுகொண்டிருந்த எனக்கு அது ஒரு திருப்புமுனையான காலம். ஒருநாள் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எடுத்தால் யாரோ ஒரு நிறுவனத்தில் இருந்திலிருந்து அழைத்தார்கள். வாகனம் ஓட்டிக்கொண்டிருந்த என்னால் அவர்களின் நிறுவனத்தின் பெயரை சரியாகப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. பிறகு அழையுங்கள் என்று சொல்லவும் மனம் வரவில்லை. ஏற்கனவே ட்ரிப் போன விடயம் மாதிரி திரும்பவும் அழைப்பு வராமலும் போகலாம். unsure.gif

நிறுவனத்தின் பெயரை திரும்பத் திரும்பக் கேட்டாலும், என்னடா இது என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். மிகவும் விலைமலிவான :D செல் தொலைபேசி வாங்கியிருந்ததால் நம்பர் கூட விழாது. :D

அவர்கள் சொன்ன இலக்கத்தை மனதில் ஓரளவு இருத்திக்கொண்டு அவசரமாக வீடு சென்றேன். அவர்களின் நிறுவனத்தின் முதல் பாதிப் பெயர் மனதில் நின்றது. இணையத்தில் தேடி, ஒருவழியாகக் கண்டுபிடித்துவிட்டேன்.. :D

திரும்ப ஒரு அழைப்பை மேற்கொண்டு, நேர்முகத்தேர்வுக்கான நாளைக் குறித்துக்கொண்டேன். இவ்வளவுக்கும் அந்த நிறுவனத்திற்கு நான் விண்ணப்பித்த ஞாபகமே இல்லை. unsure.gif

நேர்முகத்தேர்வு நாள். எனக்குப் பிடித்தமான அதே கழுத்துப்பட்டியை மீண்டும் அணிந்து சென்றேன்.. :D

ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு வெள்ளையர் மட்டும் என்னை நேர்முகத்தேர்வு செய்யக் காத்திருந்தார். unsure.gif வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு நேர்முகத்தேர்வு ஆரம்பமானது. unsure.gif

"Tell me about yourself!" :lol:

இந்த இடத்தில்தான் உங்கள் மொழிப்புலமையும், சீராகத் தொடுத்துச் சொல்லும் திறமையும் வெளிப்படவேண்டும். அதிகம் கேள்விகள் அவர்கள் இடையில் கேட்க ஆரம்பித்தார்கள் என்றால் உங்கள் கதைசொல்லும் ஆற்றலில் குறை உள்ளது என்று அர்த்தம். :D

இதில் சிரிப்பென்னவென்றால் என்ன வேலைக்கு நான் போகப்போகிறேன் என்று எனக்குத் தெரியாது. :D அவர்களது இணையத்தளத்தில் நில ஆராய்ச்சி மற்றும் சுற்றுப்புறச் சூழல் (Geotechnical & Environmental) சம்பந்தமானது என்று போட்டிருந்தார்கள். எனக்கோ இந்தத் துறைகளில் அனுபவம் இல்லை. unsure.gif

என் கதையைச் சொல்லி முடித்ததும் Shoring & Excavation, Caissons, soldier piles என்று வார்த்தைகளை அள்ளிவீசிக் கொண்டிருந்தார். எனக்கெண்டால் சிதம்பரசக்கரத்தைப் பேய் பார்த்தமாதிரி இருந்தது. நானும் ஓரளவு தெரிந்ததுபோல் தலையாட்டிக் கொண்டிருந்தேன். :wub:

நான் என்னைப் பற்றி சொன்னபோது அதிலிருந்து என்னுடைய சில விசேட தகைமைகளை அவர் அறிந்துகொண்டிருந்தார். எனது தற்போதைய வேலை குறித்துக் கேட்டார். நான் $500 க்கு வேலை செய்த கதையைச் சொன்னேன். :D உங்களை இந்த அளவுக்கு ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதைத் தன்னால் நம்பமுடியவில்லை என்று சொல்லி வருத்தப்பட்டார். :blink:

நேர்முகத்தேர்வு முடிந்தது. அநேகமாக வேலை கிடைக்கும்போல் இருந்தது. ஆனால் எனக்குப் பின்னால் இன்னொருவர் நேர்முகத்தேர்வுக்குக் காத்திருந்தார். unsure.gif

ஒருவாரம் கழிந்திருக்கும். எனக்கு வேலை வழங்குவதற்கான அவர்களது விருப்பக்கடிதத்தை அனுப்பியிருந்தார்கள். சம்பளம் அப்ப இருந்த நிலைமைக்குப் பரவாயில்லை. ஆனால் அதைவிட முக்கியம் கனடாவில் ஒருவருடம் வேலை அனுபவம் பெற வேண்டும். unsure.gif

(தொடரும்.)

Link to comment
Share on other sites

மிகவும் விலைமலிவான :D செல் தொலைபேசி வாங்கியிருந்ததால் நம்பர் கூட விழாது. :D

பூனையக்கண்டவன் புலியைக்கண்டேன் என சொல்லும் காலத்தில் யதார்த்தமாக வாழ்ந்துள்ளீர்கள், உயர்ந்துள்ளீர்கள் அதை மறுக்காமல் வெளியே சொல்லுகிறீர்கள்.

Link to comment
Share on other sites

பூனையக்கண்டவன் புலியைக்கண்டேன் என சொல்லும் காலத்தில் யதார்த்தமாக வாழ்ந்துள்ளீர்கள், உயர்ந்துள்ளீர்கள் அதை மறுக்காமல் வெளியே சொல்லுகிறீர்கள்.

பெயரும் புகழும் வெறும் பகட்டால் அல்லாது செயற்திறனால் வந்ததாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.. :unsure:

Link to comment
Share on other sites

வற்றலோ தொற்ரலோ வாய்ப்புகள் கூடிய, முதல் வரும் வேலையை அமுக்குவது நல்லது. அதைத்தான் நீங்கள் செய்துள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.