Jump to content

நேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல்


Recommended Posts

பாகம் 17: மீள ஒழுங்கமைத்தல்

உறவினர் வீட்டில் இருந்து ஒரு பேஸ்மென்ட் வீட்டுக்குக் குடிபெயர்ந்தோம். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவது, தளபாடங்கள் வாங்குவது என காசு மேலும் கரைந்தது. அச்சமயத்தில், நான் ஒரு மரத் தளபாடங்கள் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அதுகுறித்து முன்பு ஒரு பதிவு போட்டதாக ஞாபகம். :rolleyes:

கனடாவுக்கு வந்து ஒரு நன்கு மாதங்கள் கழிந்திருக்கும். ஒரு நிறுவனதில் இருந்து தொலைபேசி அழைப்பு. பேசியவர் என்னைப் பற்றி விசாரித்து அறிந்து கொண்டார். இன்னொரு நாளில் பேசுவதாகக் கூறி வைத்துவிட்டார். ம்ற்றொரு நாளில் பேசிக்கொண்டிருக்கும்போது வீட்டில் ஃபியூஸ் போய் (Trip) அழைப்பு நின்றுவிட்டது. அதன்பிறகு அவரைப் பிடிக்க முடியவில்லை. :unsure:

எனது வேலைதேடும் அணுகுமுறையில் ஏதோ பிழையிருக்கிறது என்று தெரிந்தது. ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையில், பொறியியளாளர் அமைப்பில் இருந்து ஒரு கடிதம் வந்தது. எனது கல்வித்தகுதி ஏற்கனவே பரிசோதிக்கப்பட்டு விட்டது. எனது சிங்கப்பூர் வேலை அனுபவத்தையும் Reference மூலம் உறுதிப்படுத்திக்கொண்டு விட்டார்கள். இப்போது எனக்கு இரண்டு தெரிவுகள் தரப்பட்டிருந்தது. ஒன்று 3 தொழில்நுட்பப் பரீட்சைகள் எழுதுவது. அல்லது நேர்முகத் தேர்வுக்குச் செல்வது.

இவையள் என்ன சொல்லுறது.. நாங்கள் என்ன தேர்வு எழுதுவது என்று நேர்முகத்தேவை தெரிவு செய்து கடிதம் அனுப்பினேன். :wub:

மரவேலைக்குத் தொடர்ச்சியாகச் சென்றுகொண்டிருந்ததால் எனது துறையில் வேலைதேடும் ஆர்வம் படிப்படியாகக் குறையத் தொடங்கி விட்டிருந்தது. :unsure: ஒருநாள் எனது மனநிலை குறித்து மனைவியிடம் கூறினேன். நீங்கள் வேலைக்குப் போக வேண்டாம்; நான் மட்டும் போகிறேன். நீங்கள் வேலைக்கு மட்டும் முயற்சி செய்யுங்கோஎன்று சொன்னா. :D

நானும் சரியென்று வீட்டிலிருந்து வேலை தேட ஆரம்பித்தேன். மனைவி என்னை வைத்து கஞ்சி ஊத்தினா. :lol: (பகிடியாகச் சொன்னாலும், என் மனைவியின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் இன்று நான் பூச்சியம். :unsure: ) இப்பவும் பூச்சியம்தான் எண்டு யாரோ சொல்லுறது காதில் விழுகிறது. :lol:

அப்போது இணையத்தில் ஒரு கல்வி நிறுவனத்தின் விளம்பரம் கண்ணில் பட்டது. அவர்களிடம் AutoCAD, ஒன்ராரியோவின் கட்டட ஒழுங்கமைப்பு (Ontario Building Code) ஆகியவற்றை மூன்று மாதங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அதை முடித்தவுடன் அவர்களுக்குத் தெரிந்த பொறியியல் நிறுவனங்களில் Co-op அடிப்படையிலான வேலைக்கு நேர்முகத்தேர்வுக்கு அனுப்பப்படுவார்கள். :rolleyes:

அட.. இது பரவாயில்லையே என்று தோன்றியது. மனையாளிடம் பேசிவிட்டு, விண்ணப்பம் போட்டு வைத்தேன். மொத்தமாக $2800 கல்வித்தொகை. :unsure:

(தொடரும்.)

Link to comment
Share on other sites

  • Replies 346
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மனையாளிடம் பேசிவிட்டு, (தொடரும்.)

மனைவியே மந்திரி :icon_idea:

பல முறை நிரூபிக்கப்பட்டாலும் இன்னும் இதை பின் பற்ற முடியவில்லை.

வீழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை தொடர்கிறது. :(

Link to comment
Share on other sites

அப்போது இணையத்தில் ஒரு கல்வி நிறுவனத்தின் விளம்பரம் கண்ணில் பட்டது. அவர்களிடம் AutoCAD, ஒன்ராரியோவின் கட்டட ஒழுங்கமைப்பு (Ontario Building Code) ஆகியவற்றை மூன்று மாதங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அதை முடித்தவுடன் அவர்களுக்குத் தெரிந்த பொறியியல் நிறுவனங்களில் Co-op அடிப்படையிலான வேலைக்கு நேர்முகத்தேர்வுக்கு அனுப்பப்படுவார்கள். :rolleyes:

இவ்வாறான அணுகுமுறைகள் பொதுவாக நல்ல பயனைத்தரும்.

உதாரணத்திற்கு பொறியியல் துறைக்கு பெயர்போன வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் உள்ள கோஆப் திட்டங்கள் படிக்கும்பொழுதே

கடனை அடைக்கவும் வேலை வாய்ப்பை உறுதி செய்யவும் வழிசமைக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள பகிர்வு மேலும் தொடர்க. :D

Link to comment
Share on other sites

அருமை இசை அண்ணா. இண்டைக்குத்தான் கண்ணில தட்டுப் பட்டுது, உடனேயே வாசிச்சு முடிச்சிட்டன். குறிப்பா உங்கள் நகைச்சுவையான எழுத்து நடை அருமை. கண்டிப்பா பலருக்கு பிரயோசனமாக இருக்கும். எனக்கு கன professional interview போய் பழக்கமில்லை. முதலாவது போன நேர்முகத் தேர்விலேயே வேலை கிடைத்துவிட்டது. எனது அனுபவங்களையும் இன்னொரு திரியில் பதியும் யோசினையை தந்து விட்டீர்கள்.

Link to comment
Share on other sites

அம்மாடியோவ் இவ்வளவு பக்கமா கொஞ்சம் நிறுத்தி வையுங்கள் இசை அண்ணா நான் படிச்சு முடிக்கும்வரை... நல்ல தொடர் இசை அண்ணா தொடருங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கமான.. லொள்ளுடன், தொடர் நன்றாக உள்ளது இசை. :D

Link to comment
Share on other sites

ஆர்வத்துடன் கல்விக்குச் செலவழிக்கும் பணம், எதிர்கால நல்வாழ்விற்கான முதலீடு. முன்பு இரண்டு நாட்களில் ஒரு மென்பொருள் கற்பதற்காக எண்ணூறு பவுண்ட்கள் கட்டினேன். அந்த மென்பொருள் அறிவு நல்லதொரு தொழிலைப் பெற்றுத்தந்தது.

நேர்முகத் தேர்வு செய்பவர்களுக்கும், தாங்கள் சரியான நபரைத் தெரிவு செய்ய வேண்டுமே என்ற பயமிருக்கும். இதை முன்னைய வேலையில், நேர்முகத் தேர்விற்கான தொழிநுட்ப வசதிகளை நேர்முகத் தேர்வாளர்களுக்கு செய்து கொடுக்கும் பொழுது கண்டிருக்கிறேன்.

ஒருமுறை வேலைக்கு பிழையான ஒருவரை நேர்முகத் தேர்வாளர் தெரிவு செய்த பொழுது 'முக்காடு போட்டுட்டா இவனை interview செய்தனீர் ' என சக ஊழியர் அவரை ஏசினார். :lol:

நிரந்தர வேலைக்கும் (Permanent ), தற்காலிக வேலைகளுக்கும் (Contract) நடக்கும் நேர்முகத் தேர்வுகள் வேறு வேறாக இருக்கும். தற்காலிக வேலை செய்வதால் அடிக்கடி நேர்முகத் தேர்வுகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் (Hire and Fire) வேலைக்கு எடுப்பதால், அந்த வேலையை செய்வதற்கான தகுதி உங்களுக்கு உள்ளதா என்ற அடிப்படையிலே கேள்விகள் கேட்கப்படும். Where Do You See Yourself Two Years from Now? போன்ற கேள்விகள் கேட்கப்படுவதில்லை. ஒரு ஒருமுறை பெண் நேர்முகத் தேர்வாளர் இந்தக் கேள்வியைக் கேட்ட பொழுது, நான் சொல்ல வந்த பதிலை <_< நினைத்துச் சிரித்து விட்டேன்.

நீண்ட காலத்திற்குப் பின் மனைவியைப் போற்றி புகழ்ந்து வந்ததொரு தொடர்.

:D

திருத்தியமைக்கான காரணம்: தடித்த எழுத்திலுள்ள வசனம் சேர்க்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

கருத்துக்களைப் பகிர்ந்து ஊக்கமளித்த விசுகு அண்ணா, அகூதா, நிலாமதி அக்கா, தும்பளையான், சுஜி, தமிழ்சிறி, தப்பிலி.. உங்களுக்கு எனது நன்றிகள்..! :D

Link to comment
Share on other sites

பாகம் 18: குறைபாடுகள் களைதல்

சிங்கப்பூரில் AutoCAD "தெரியும்" :D என்று சொன்னாலும் அங்கே அதை உபயோகிக்கவேண்டிய தேவை வரவில்லை.. அதற்கென வல்லுனர்கள் இருந்தார்கள். அதனால் பிரச்சினைகள் இல்லாது போய்விட்டது. ஆனால் எனக்கு அதைக் கற்கவேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது.

அதேபோல கணினி அறிவு கம்மியாக :D இருந்த கவலையும் அப்போது இருந்தது. அதனால் $400 கட்டி விசுவல் பேசிக் (Visual Basic) சிங்கப்பூரில் கற்றுக்கொண்டேன். :D பிறகு புத்தகங்களையும் வாங்கி அதைப் படித்து, சிம் லிம் சதுக்கத்தில் $5 க்கு விசுவல் பேசிக் இறுவட்டு வாங்கி நிறுவி வைத்துக்கொண்டேன். வேலையால் வீட்டிற்கு வந்தபிறகு மென்பொருள் எழுத ஆரம்பித்துவிடுவேன். :wub: பிறகு எனது மென்பொருளை எங்கள் நிறுவனத்தில் உள்ள வரைதல் வல்லுனர்களை உபயோகிக்கக் கொடுத்தேன்.

எனக்கு ஆங்கிலம் தெரியாது என்று யாராவது சொன்னால் பிரெஞ்சும் தெரியும் என்று காட்ட வேண்டும் என்பதுதான் என் பொலிசி. :D

ஆனால் நான் சிங்கப்பூரில் AutoCAD வகுப்புகளுக்குச் செல்லவில்லை. அவர்கள் வரையும்போது பின்னால் நின்று கட்டளைகள் வழங்கிக்கொண்டிருப்பேன். :D அதனால் அவர்கள் எப்படி வரைகிறார்கள் என்பதில் ஒரு அறிவு இருந்தது. ஆனால் தேர்ச்சி இருக்கவில்லை.

கனடாவில் சிவில் பொறியியலாளர் என்றால் AutoCAD தெரிந்திருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இதிலே பம்மாத்து விட முடியாது என்பது எனக்குத் தெரியும். அதனால் எனது வேலைக்குறிப்புகளில் AutoCAD தெரியுமென்று போடவில்லை. சின்னப்பையன்கள் ஏமாத்தி விளையாடலாம். ஒரு நிலைக்கு வந்துவிட்டால் ஏமாற்று, பம்மாத்துகளைக் குறைத்துவிட வேண்டும். நான் கனடாவில் மூன்று மாதங்கள் படிக்கச் சென்றதற்கு இது ஒரு முக்கிய காரணம். unsure.gif

இவ்வாறு நான் படிக்கத் தயாராகும் வேளையில் பொறியியல் அமைப்பில் இருந்து நேர்முகத்தேர்வுக்கு வரும்படி கேட்டார்கள். ரொராண்டோவில் இருந்த அவர்களது அலுவலகத்திற்கு அந்த நாளில் சென்றேன். எனக்கு சிங்கப்பூர் நிறுவனம் பரிசாக வழங்கிய அந்தக் கழுத்துப்பட்டியை அணிந்து சென்றேன். அதில் எனக்கொரு பெருமை. :D தன்னம்பிக்கையும் நிறைய வரும்.

நேர்முகத் தேர்வுக்கு பழைய வேலை அனுபவத்திற்கான வரைபடங்கள் இருந்தால் எடுத்துவரச் சொல்லியிருந்தார்கள்.

நேர்முகத்தேர்வில் எனது துறையில் வல்லுனர்கள் இரண்டுபேர். ஒரு காரியதரிசி. இன்னுமொரு ஊழியர் எனது ஆங்கில உரையாடல் திறமையைக் குறிப்பெடுக்க. unsure.gif

எனது வேலை அனுபவங்களை விளக்குமாறு கேட்டார்கள்.

"Tell us about yourself!" :lol:

உள்ளதிலேயே சிக்கலான ஒரு வேலைத்திட்டத்தின் வரைபடங்களை எடுத்துச் சென்றிருந்தேன். அவற்றைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கவும், யாரும் ஏதும் கேள்வி கேட்பதாகக் காணோம். அவர்களுக்கு நான் ஒரு வாத்தியார் போலவும், அவர்கள் இதை எப்பிடி செய்தீர்கள், அதை எப்பிடி செய்தீர்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். :D

இவர்களுக்கு என் துறையில் அனுபவமில்லை என்பது பிறகுதான் விளங்கியது. ஏனென்றால் நான் செய்த தொழில்நுட்பம் அமெரிக்காவில் பிரபலம். கனடாவில் முப்பது ஆண்டுகளுக்கு முன் அதை அப்போதிருந்த அறிவுடன் பாவித்து, துருப்பிடிக்கும் பிரச்சினையால் கைவிட்டுவிட்டார்கள். unsure.gif

இறுதியில், அத்திவாரம் வடிவமைப்பது பற்றி இரண்டு கேள்வி கேட்டுவிட்டு முடித்துவிட்டார்கள்.

ஒரு சில வாரங்களில் நான் சித்தியடைந்துவிட்டதாகவும், Engineering Law and Ethics ஆகிய இரண்டு தேர்வுகளை எழுத அனுமதி வந்தது. இதை பொறியியலாளராகப் போகும் அனைவரும் எழுத வேண்டும். இவற்றிலும் சித்தியடைந்து, குறைந்தபட்சம் ஒரு வருடம் ஒரு பொறியியலாளரின் மேற்பார்வையின்கீழ் வேலை செய்துவிட்டேன் என்றால் பொறியியலாளர் உரிமம் கிடைத்துவிடும்.

ஆனால் இன்னொரு பொறியியலாளரின் கீழ் வேலை செய்யவேண்டுமென்றால் முதலில் வேலையை எடுக்க வேண்டும். அதற்கு பொறியியலாளர் உரிமம் வேண்டும் என்கிறார்கள். Catch 22 நிலைமை. unsure.gif

சரி. முதலில் AutoCAD படிப்போம் என வகுப்புகளுக்குச் செல்ல ஆரம்பித்தேன். மனைவி தொடர்ந்தும் கஞ்சி ஊத்தினா. :D

(தொடரும்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை இப்படி ஒரு மனைவி கிடைக்க நீங்கள் கொடுத்து வைச்சனீங்கள்.சுமார் எவ்வளவு காலத்திற்கு உங்கள் மனைவி உங்களை வைத்து சாப்பாடு போட்டார்?...அதற்கு பதிலாக தற்போது உங்கள் மனைவியை இருத்தி வைச்சு சாப்பாடு போடுறீங்களா :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை இப்படி ஒரு மனைவி கிடைக்க நீங்கள் கொடுத்து வைச்சனீங்கள்.சுமார் எவ்வளவு காலத்திற்கு உங்கள் மனைவி உங்களை வைத்து சாப்பாடு போட்டார்?...அதற்கு பதிலாக தற்போது உங்கள் மனைவியை இருத்தி வைச்சு சாப்பாடு போடுறீங்களா :lol:

ரதியின் எதிர்காலத்துக்கான முக்கிய கேள்வி இது?

பதில் உடன் தாருங்கள் இசை??? :lol::D :D

Link to comment
Share on other sites

ஆனால் இன்னொரு பொறியியலாளரின் கீழ் வேலை செய்யவேண்டுமென்றால் முதலில் வேலையை எடுக்க வேண்டும். அதற்கு பொறியியலாளர் உரிமம் வேண்டும் என்கிறார்கள். Catch 22 நிலைமை. unsure.gif

இந்த கட்ச் 22 என்பது வேலை தேடுவதில் உட்பட பல இடங்களில் வாழ்க்கைக்கு சவாலாக உள்ள விடயம்.

பொதுவாக மேலே இன்னொரு உறவு குறிப்பிட்டது போன்று ' அனுபவம் இருந்தால் தான் வேலை, வேலை இருந்தால் தான் அனுபவம் கிடைக்கும்' (கோழியா இல்லை முட்டையா... :D ).

பொதுவாக இவ்வாறான பிரச்சனையை தீர்க்க ஒன்றில் வேலை அனுபத்துடன் கூடிய கல்வி இல்லை சம்பளம் இல்லாத / சம்பளம் குறைந்த வேலைகள் கைகொடுக்கும். இதற்கும் எம்மவர்கள் எம்மவர்களுக்கு உதவ வேண்டும், தமது நிறுவனத்தில் வேலைகளை இளையோருக்கு கொடுக்கவேண்டும், தெரிந்த இடங்களில் சேர்த்து தூக்கிவிடவேண்டும்.

Link to comment
Share on other sites

இசை இப்படி ஒரு மனைவி கிடைக்க நீங்கள் கொடுத்து வைச்சனீங்கள்.சுமார் எவ்வளவு காலத்திற்கு உங்கள் மனைவி உங்களை வைத்து சாப்பாடு போட்டார்?...அதற்கு பதிலாக தற்போது உங்கள் மனைவியை இருத்தி வைச்சு சாப்பாடு போடுறீங்களா :lol:

ரதியின் எதிர்காலத்துக்கான முக்கிய கேள்வி இது?

பதில் உடன் தாருங்கள் இசை??? :lol::D :D

மனிசிமார் பொல்லாத ஆட்கள்.. :D புருசனை கொஞ்சம் முன்னுக்குத் தள்லிவிட்டால் தாங்கள் ஜாலியா இருக்கலாம் எண்டு அவைக்குத் தெரியும்.. :lol:

2005 இல இருந்து ஆள் வேலைக்குப் போறேல்ல.. :wub:

கருத்துக்கு நன்றிகள் அகூதா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிசிமார் பொல்லாத ஆட்கள்.. :Dபுருசனை கொஞ்சம் முன்னுக்குத் தள்லிவிட்டால் தாங்கள் ஜாலியா இருக்கலாம் எண்டு அவைக்குத் தெரியும்.. :lol:

2005 இல இருந்து ஆள் வேலைக்குப் போறேல்ல.. :wub:

கருத்துக்கு நன்றிகள் அகூதா..

எல்லாவீட்டிலும் இதேநிலைதான்.

ஆனாலும் நான்தான் வீட்டில முடிபுகளை எடுக்கிறனான்.....??? :lol::D :D

Link to comment
Share on other sites

எனக்கு சிங்கப்பூர் நிறுவனம் பரிசாக வழங்கிய அந்தக் கழுத்துப்பட்டியை அணிந்து சென்றேன். அதில் எனக்கொரு பெருமை. :D தன்னம்பிக்கையும் நிறைய வரும்.

giggling.gifஎனகு தூகு கயிறுதானபா இருகு அணிவதகு giggling.gif

கடவுள் நம்பிகை நிறைய வரும்

Link to comment
Share on other sites

கருத்துக்கு நன்றிகள் குண்டன். :D

Link to comment
Share on other sites

பாகம் 19: இருகோடுகள் தத்துவம்

கனடாவுக்கு வந்து அப்போது ஆறுமாதங்களாகிவிட்டது. நான் படிக்கச் செல்வதும் வருவதுமாக இருந்தேன். அச்சமயத்தில் கொண்டுவந்த காசை எப்படிப் பாதுகாப்பது என்று சிந்தனையாக இருந்தது. அப்போது ஒரு வீடுவிற்பனை முகவருடன் பேசிக்கொண்டிருந்தபோது வீடு வாங்கலாமே என்றார். unsure.gif

எங்களுக்கும் பேஸ்மென்ரில் இருக்கப்பிடிக்கவில்லை. என் படிப்பு முடிந்து எங்காவது நேர்முகத் தேர்வுக்குப் போகும் ஒரு சந்தர்ப்பம் வந்தால் எப்படியும் வேலை வாங்கிவிடலாம் என்று ஒரு நம்பிக்கை இருந்தது. இன்னும் ஒரு மாதம் தாக்குப்பிடித்தால் போதும். :unsure:

சரி என்று அந்த வருடம் கிறிஸ்மஸ் சமயத்தில் வீடுவாங்கி குடிபோனோம். வேலை இல்லாவிட்டால் என்ன.. அதைவிட இது பெரிய பிரச்சினை.. அவ்வளவுதான்..! :lol:

2004 ஜனவரியில் படிப்பை முடித்ததும் ஒரு நேர்முகத்தேர்வுக்கு ஒழுங்கு செய்து எனக்குத் தெரிவித்தார்கள். எனக்குத்தான் எந்த வேலையென்றாலும் சரிதானே.. ஒரு வருடம் எப்படியாவது தாக்குப்பிடித்துவிட்டால் போதும். :unsure:

நேர்முகத்தேர்வுக்குச் சென்றேன்.

ஒரு சிறிய நிறுவனம். மொத்தமே முன்றுபேர்தான். :lol: ஒரு பொறியியலாளர். அவருடைய கூட்டாளி. ஒரு வரைதல் வல்லுனர். இவர்கள் மூவருமே சேர்பியா நாட்டைச் சேர்ந்தவர்கள். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் கனடாவுக்கு வந்திருந்தார்கள்.

பொறியியலாளருக்கு தொழில்நுட்ப ரீதியில் பெரிதாக ஒன்றும் தெரியாது. வீடு திருத்தம் செய்யும் வடிவமைப்புகள் செய்வார். ஒரு பொருட்களஞ்சியம் கட்டப்பட்டுக்கொண்டிருந்தது. அவரது நண்பி ஒருத்தியைக் கொண்டு டிசைன் வேலைகளைச் செய்து வாங்கி தான் முத்திரை பதித்து தன்னுடைய வேலைமாதிரி காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தார். :D

நேர்முகத்தேர்வில் அதிகம் கேள்விகள் இல்லை. என்ன செய்தீர்கள் என்று கேட்டார். உள்ளதைச் சொன்னேன். தொழில்நுட்பரீதியில் ஒன்றும் கேட்கவில்லை.

கோ ஆப் அடிப்படையில் வேலை கொடுத்தார். மாதம் போக்குவரத்துச் செலவுக்கு $500 தருவார். மூன்று மாதங்களில் இன்னொரு வேலை ஒப்பந்தம் கிடைக்கும் எனவும் அப்போது நிரந்தரம் ஆக்குவதாகவும் கூறினார். இந்தப்பக்கம் வீட்டு அடமானப் பணத்தையும் கட்ட வேண்டி இருந்தது. :unsure:

அவரிடம் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். வீடு திருத்த வேலைகள்தான் பெரும்பாலும். வார விடுமுறைகளில் பொறியியலாளர் அனுமதிப் பத்திரத்திற்கான இறுதித் தேர்வுக்காகப் படிக்க ஆரம்பித்தேன்.

மூன்று மாதங்கள் கழிந்திருக்கும். இவர் என்னை நிரந்தரமாக்கும் பேச்சு வரவில்லை. ஒருநாள் என்னமாதிரி என்று கேட்டேன். நினைச்ச வேலை ஒப்பந்தம் கிடைக்கவில்லை என்றும், தான் கனடாவுக்கு வந்த புதிதில் ஒருவரிடம் ஒரு வருடகாலம் ஓசியில் வேலை செய்து கொடுத்ததாகவும் கூறினார். அடப்பாவி.. நான் மோட்கேஜ் அல்லோ கட்டிக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன். :unsure:

நான் வேறு இடங்களுக்கு விண்ணப்பிக்கப் போகிறேன், அதற்கு Reference தரமுடியுமா என்று கேட்டேன். சரி என்றார்.

சிறிதுகாலம் அங்கே வேலை செய்ததால் எனக்கு சில உண்மைகள் விளங்கியிருந்தது. பொறியியலாளர் வேலை அல்லது அதற்குத் தகுதியானவர் என்று கேட்டிருந்தால் பொறியியலாளர் உரிமம் இல்லாதவர்கள் அந்தப் பக்கம் திரும்பியும் பார்க்கக் கூடாது. unsure.gif வடிவமைப்பாளர் (Structural Designer) என்று விண்ணப்பிக்க வேண்டும். வெளிநாடுகளில் site engineer வேலை செய்துவிட்டு வந்தவர்கள் Site Technician வேலைக்கு ஆரம்பத்தில் விண்ணப்பித்தால் வேலை கிடைப்பதில் கஷ்டம் இருக்காது.

இதை அறிந்துகொண்டதால் எனது வேலைக்குறிப்பில் மாற்றம் செய்து நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தேன். இரண்டுபேர் அழைத்தார்கள். :rolleyes:

ஒரு சிறு தவறு.. திருத்திவிட ஆளில்லாத காரணத்தால் பெரும் அலைச்சலில் கொண்டுபோய் விட்டிருந்தது. :unsure:

(தொடரும்.)

Link to comment
Share on other sites

இந்தப்பகுதியில் ஒரு மிகமுக்கியமான கருத்தை கூறியுள்ளீர்கள். அதாவது வெளிநாட்டு தகமைகளை எவ்வாறு குறிப்பிட்டு வேலைகளுக்கு முயற்சிக்கவேண்டும் வேண்டும் என.

பாகம் 19: இருகோடுகள் தத்துவம்

இல்லாதவர்கள் அந்தப் பக்கம் திரும்பியும் பார்க்கக் கூடாது. unsure.gif வடிவமைப்பாளர் (Structural Designer) என்று விண்ணப்பிக்க வேண்டும். வெளிநாடுகளில் site engineer வேலை செய்துவிட்டு வந்தவர்கள் Site Technician வேலைக்கு ஆரம்பத்தில் விண்ணப்பித்தால் வேலை கிடைப்பதில் கஷ்டம் இருக்காது.

இதை அறிந்துகொண்டதால் எனது வேலைக்குறிப்பில் மாற்றம் செய்து நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தேன். இரண்டுபேர் அழைத்தார்கள். :rolleyes:

Link to comment
Share on other sites

கருத்துக்கு நன்றிகள் அகூதா.. வேலை தேடுபவர்களிடம் பேசும்போதெல்லாம் இதை தவறாது கேட்டு விசாரிப்பேன்.

Link to comment
Share on other sites

பாகம் 20: திசைமாறிய காற்று

பலவிதமான பிரச்சினைகளிலும் உழன்றுகொண்டிருந்த எனக்கு அது ஒரு திருப்புமுனையான காலம். ஒருநாள் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எடுத்தால் யாரோ ஒரு நிறுவனத்தில் இருந்திலிருந்து அழைத்தார்கள். வாகனம் ஓட்டிக்கொண்டிருந்த என்னால் அவர்களின் நிறுவனத்தின் பெயரை சரியாகப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. பிறகு அழையுங்கள் என்று சொல்லவும் மனம் வரவில்லை. ஏற்கனவே ட்ரிப் போன விடயம் மாதிரி திரும்பவும் அழைப்பு வராமலும் போகலாம். unsure.gif

நிறுவனத்தின் பெயரை திரும்பத் திரும்பக் கேட்டாலும், என்னடா இது என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். மிகவும் விலைமலிவான :D செல் தொலைபேசி வாங்கியிருந்ததால் நம்பர் கூட விழாது. :D

அவர்கள் சொன்ன இலக்கத்தை மனதில் ஓரளவு இருத்திக்கொண்டு அவசரமாக வீடு சென்றேன். அவர்களின் நிறுவனத்தின் முதல் பாதிப் பெயர் மனதில் நின்றது. இணையத்தில் தேடி, ஒருவழியாகக் கண்டுபிடித்துவிட்டேன்.. :D

திரும்ப ஒரு அழைப்பை மேற்கொண்டு, நேர்முகத்தேர்வுக்கான நாளைக் குறித்துக்கொண்டேன். இவ்வளவுக்கும் அந்த நிறுவனத்திற்கு நான் விண்ணப்பித்த ஞாபகமே இல்லை. unsure.gif

நேர்முகத்தேர்வு நாள். எனக்குப் பிடித்தமான அதே கழுத்துப்பட்டியை மீண்டும் அணிந்து சென்றேன்.. :D

ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு வெள்ளையர் மட்டும் என்னை நேர்முகத்தேர்வு செய்யக் காத்திருந்தார். unsure.gif வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு நேர்முகத்தேர்வு ஆரம்பமானது. unsure.gif

"Tell me about yourself!" :lol:

இந்த இடத்தில்தான் உங்கள் மொழிப்புலமையும், சீராகத் தொடுத்துச் சொல்லும் திறமையும் வெளிப்படவேண்டும். அதிகம் கேள்விகள் அவர்கள் இடையில் கேட்க ஆரம்பித்தார்கள் என்றால் உங்கள் கதைசொல்லும் ஆற்றலில் குறை உள்ளது என்று அர்த்தம். :D

இதில் சிரிப்பென்னவென்றால் என்ன வேலைக்கு நான் போகப்போகிறேன் என்று எனக்குத் தெரியாது. :D அவர்களது இணையத்தளத்தில் நில ஆராய்ச்சி மற்றும் சுற்றுப்புறச் சூழல் (Geotechnical & Environmental) சம்பந்தமானது என்று போட்டிருந்தார்கள். எனக்கோ இந்தத் துறைகளில் அனுபவம் இல்லை. unsure.gif

என் கதையைச் சொல்லி முடித்ததும் Shoring & Excavation, Caissons, soldier piles என்று வார்த்தைகளை அள்ளிவீசிக் கொண்டிருந்தார். எனக்கெண்டால் சிதம்பரசக்கரத்தைப் பேய் பார்த்தமாதிரி இருந்தது. நானும் ஓரளவு தெரிந்ததுபோல் தலையாட்டிக் கொண்டிருந்தேன். :wub:

நான் என்னைப் பற்றி சொன்னபோது அதிலிருந்து என்னுடைய சில விசேட தகைமைகளை அவர் அறிந்துகொண்டிருந்தார். எனது தற்போதைய வேலை குறித்துக் கேட்டார். நான் $500 க்கு வேலை செய்த கதையைச் சொன்னேன். :D உங்களை இந்த அளவுக்கு ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதைத் தன்னால் நம்பமுடியவில்லை என்று சொல்லி வருத்தப்பட்டார். :blink:

நேர்முகத்தேர்வு முடிந்தது. அநேகமாக வேலை கிடைக்கும்போல் இருந்தது. ஆனால் எனக்குப் பின்னால் இன்னொருவர் நேர்முகத்தேர்வுக்குக் காத்திருந்தார். unsure.gif

ஒருவாரம் கழிந்திருக்கும். எனக்கு வேலை வழங்குவதற்கான அவர்களது விருப்பக்கடிதத்தை அனுப்பியிருந்தார்கள். சம்பளம் அப்ப இருந்த நிலைமைக்குப் பரவாயில்லை. ஆனால் அதைவிட முக்கியம் கனடாவில் ஒருவருடம் வேலை அனுபவம் பெற வேண்டும். unsure.gif

(தொடரும்.)

Link to comment
Share on other sites

மிகவும் விலைமலிவான :D செல் தொலைபேசி வாங்கியிருந்ததால் நம்பர் கூட விழாது. :D

பூனையக்கண்டவன் புலியைக்கண்டேன் என சொல்லும் காலத்தில் யதார்த்தமாக வாழ்ந்துள்ளீர்கள், உயர்ந்துள்ளீர்கள் அதை மறுக்காமல் வெளியே சொல்லுகிறீர்கள்.

Link to comment
Share on other sites

பூனையக்கண்டவன் புலியைக்கண்டேன் என சொல்லும் காலத்தில் யதார்த்தமாக வாழ்ந்துள்ளீர்கள், உயர்ந்துள்ளீர்கள் அதை மறுக்காமல் வெளியே சொல்லுகிறீர்கள்.

பெயரும் புகழும் வெறும் பகட்டால் அல்லாது செயற்திறனால் வந்ததாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.. :unsure:

Link to comment
Share on other sites

வற்றலோ தொற்ரலோ வாய்ப்புகள் கூடிய, முதல் வரும் வேலையை அமுக்குவது நல்லது. அதைத்தான் நீங்கள் செய்துள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.