Jump to content

நேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல்


Recommended Posts

"அவருக்கு கிடையாது.. உங்களுக்கு விருப்பமானால் சொல்லுங்கள்.."

"சரி.. யோசித்துவிட்டுச் சொல்கிறேன்.." :unsure:

புலம்பெயர்ந்த இந்த தலைமுறை பலவிடயங்களில் தயக்கம் என்பதை விட அவதானமாக நிதானித்தே பல முடிவுகளை எடுக்கின்றது. புதியநாடு, கலாச்சாரம், மொழி என்பனவற்றுடன் பரம்பரையாக நாம் பெரிய பதவிகளை வகிக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம். அடுத்த தலைமுறை என்றால் உடனடியாகவே 'ஓம்' என கூறும்.

Link to comment
Share on other sites

  • Replies 346
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுயநலமும் தேவைதான். இல்லாவிட்டால் பணத்தில் குறியாக இருக்கும் மேற்குலகக் கம்பனிகள் நமது தலையில் மிளகாய் அரைத்துவிடுவார்கள். என்றாலும் நிறுவனங்களில் சிலரின் போக்கால் அதிகம் பாதிப்புவரும்போது திறமையைக் காட்ட அதிகம் தயங்கக்கூடாது. அதே வேளை உழைப்புக்குத் தகுந்த சன்மானத்தையும் கேட்டே வாங்கிடவேண்டும்!

இன்றுகூட ஒரு வேலை முகவரிடம் பேசும்போது இன்றைய பொருளாதார சூழலில் அதிகம் எதிர்பார்க்கக்கூடாது என்றார். அதற்கு நான் நிறுவனங்களுக்குத் தொண்டு செய்யும் வேலை தேடவில்லை என்று சொல்லிக் கதையை முடித்துவிட்டேன்!

பணத்தில், எல்லா நிறுவனங்களுமே... குறியாக இருக்கும் கிருபன்.

கடந்த, இரண்டு மாதங்களில் எங்களுடன் தொடர்பு வைத்திருந்த... 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த நிறுவனம் பூட்டப் பட்டது.

அது, பூட்டியவுடன்... அந்த வேலையை... தொடர்ந்து நடப்பதற்கு, எமது நிறுவனத்தை வற்புறுத்திக் கேட்டதன் பின்...

பெரும் பகுதியை..... வாங்கி விட்டார்கள். பழைய நிறுவனத்தில்... வேலை இழந்தவர் 780 ஆட்கள்.

நாம், வேலைக்கு சென்றால்.... உழைக்கும் ஒவ்வொரு நிமிடத்துக்கும், பணம் தரும் நிறுவனத்துக்கு... பலன் கிடைக்கும் வகையில்... வேலை செய்து எமது, திறமையை காட்டுவோம். அந்த இடத்தில்... ஒரு, தமிழனை பாவம் என்று... சேர்த்துவிட்டால், அடுத்த கிழமை உங்களுக்கு வினை பிடிக்கும். அது... எந்த ரூபத்தில் வரும் என்று சொல்வது கஷ்டம்.

கனக்க எழுத வேணும் போலை... இருக்குது.

சைட் டிஷ் தொடரும்..... :o:D

Link to comment
Share on other sites

அந்த இடத்தில்... ஒரு, தமிழனை பாவம் என்று... சேர்த்துவிட்டால், அடுத்த கிழமை உங்களுக்கு வினை பிடிக்கும். அது... எந்த ரூபத்தில் வரும் என்று சொல்வது கஷ்டம்.

கனக்க எழுத வேணும் போலை... இருக்குது.

சைட் டிஷ் தொடரும்..... :o:D

இதை நான் கான்னா பின்னா என வழி மொழிகிறேன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரும்பு வெட்டும் இடத்தில் (Fabrication shop) வேலை செய்தவர்கள், AutoCad இல் வரைபடம் வரைந்துகொண்டிருந்த Draftsperson இவர்கள்தான் இப்ப பெரிய இடங்களில் உள்லார்கள். இவர்களையே non-professionals என்று குறிப்பிட்டேன்.. இவர்களுக்கு யாருடைய தகுதிகளையும் பற்றி அக்கறை இல்லை.. கனடாவில் கனிமவளத்துறையின் சாபக்கேடு இது.. இப்போது கொஞ்சம் மாற்றம் வந்துகொண்டிருக்கிறது..

அப்படி இதுவரை எதுவும் நடைபெறவில்லை.. என் மச்சம் அப்படி.. :D இன்னொருவன் திறமையானவனாக இருந்து வேலைகளைச் செய்தால் அவனுடன் போட்டியிடுவதே என் முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்தும். இருவருக்கும் அதுதான் நன்மை தருவதாக இருக்கும்..

மன்னிக்க வேண்டும் இசை அப்படி என்டால் அவர்களது உதவி இல்லாமல் தனியே பொறியியலாளாரால் மட்டும் சாதிக்க முடியுமா?

Link to comment
Share on other sites

புலம்பெயர்ந்த இந்த தலைமுறை பலவிடயங்களில் தயக்கம் என்பதை விட அவதானமாக நிதானித்தே பல முடிவுகளை எடுக்கின்றது. புதியநாடு, கலாச்சாரம், மொழி என்பனவற்றுடன் பரம்பரையாக நாம் பெரிய பதவிகளை வகிக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம். அடுத்த தலைமுறை என்றால் உடனடியாகவே 'ஓம்' என கூறும்.

இதில் தயக்கம் என்று எதுவும் இருக்கவில்லை.. :unsure:

ஏற்கனவே மற்றவரை அப்பதவியை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டிருந்தேன். :D மேலாளர் கேட்டதும் பாய்ந்தடித்து ஓமென்றிருந்தால் பின்னாளில் எனது பில்லுடனான அரசியல் பாதிப்புக்கு உள்ளாகும். அதனால்தான் வேண்டுமென்றே சில நாட்கள் எடுத்துக் கொண்டேன்.. :D

கனக்க எழுத வேணும் போலை... இருக்குது.

சைட் டிஷ் தொடரும்..... :o:D

உங்கள் சைட் டிஷ் பிடிச்சிருக்கு தமிழ்சிறி.. :wub: தொடர்ந்து எழுதுங்கோ.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"உங்களை மேற்பார்வையாளர் நிலைக்கு பதவி உயர்த்துவதாக இருக்கிறோம்.."

எனக்கு யோசனையாக இருந்தது. பில்லுக்கு தன்னை விட்டால் யாருக்கும் எதுவுமே தெரியாது என்கிற நினைப்பு.. இந்தியன் தாத்தாவுக்கு என்னைவிட பல வருடங்கள் வயது கூட.. இவர்களுடன் ஒரு ஜேர்மன்காரப் பெடியன்.. இந்த மூன்றையும் மேய்க்க வேண்டும்.. :unsure:

"என்னைவிட பில்லுக்கு அனுபவம் கூட அல்லவா.. அவரை ஏன் நீங்கள் பதவி உயர்த்தக் கூடாது??"

"அவருக்கு கிடையாது.. உங்களுக்கு விருப்பமானால் சொல்லுங்கள்.."

"சரி.. யோசித்துவிட்டுச் சொல்கிறேன்.." :unsure:

(தொடரும்.)

பலவேளைகளில் மௌனம் மிகவும் பெறுமதியானது. சும்மா இருக்க சம்பாதிக்கக்கூடியது. எனது அனுபவ உண்மை இது.

:icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

மன்னிக்க வேண்டும் இசை அப்படி என்டால் அவர்களது உதவி இல்லாமல் தனியே பொறியியலாளாரால் மட்டும் சாதிக்க முடியுமா?

முதலில் கனேடிய பொறியியலாளர் சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்..

“practice of professional engineering” means any act of planning, designing, composing, evaluating, advising, reporting, directing or supervising that requires the application of engineering principles and concerns the safeguarding of life, health, property, economic interests, the public welfare or the environment, or the managing of any such act; (“exercice de la profession d’ingénieur”)

பொறியியலாளர் வேலையை ஒரு பொறியியலாளர் மாத்திரமே செய்ய முடியும். பொறியியலாளர் வேலை என்னவெல்லாம் என்பதை மேலே உள்ள வரைமுறை விவரிக்கின்றது.

பல துறைகளிலும் பொறியியலாளர்கள்தான் வடிவமைப்பில் ஈடுபடுவார்கள். வரைபவர்கள் பொறியியலாளர்களின் கட்டளைகளுக்கேற்ப வரைந்து கொடுப்பார்கள். கனிமவளத்துறையில் தலைகீழ்.. :blink:

இவர்கள் வரைந்து எல்லாவற்றையும் முடித்து விடுவார்கள். பிறகு அதை ஒரு பொறியியலாளரிடம் கொடுத்து முத்திரை குத்தச் சொல்வார்கள். அதில் பொறியியலாளருக்கு சம்மதம் இல்லாவிட்டாலும் சண்டைக்கு வருவார்கள். :D

ஆக, செய்வது இவர்கள்.. ஏதாவது பிழைத்தால் ஜெயிலுக்குப் போகப்போவது பொறியியலாளர்கள்.. :unsure:

Reason for Editing: எழுத்துப்பிழை

Link to comment
Share on other sites

பலவேளைகளில் மௌனம் மிகவும் பெறுமதியானது. சும்மா இருக்க சம்பாதிக்கக்கூடியது. எனது அனுபவ உண்மை இது.

:icon_idea: :icon_idea:

முக்கியமாக எமக்குத் தெரியாத துறைகளில் கால்பதிக்கும்போது தெரியாமல் ஏதையாவது சொல்லிவிடுவதிலும் பார்க்க அமைதியாக இருப்பது நல்லது.. :D

Link to comment
Share on other sites

இதில் தயக்கம் என்று எதுவும் இருக்கவில்லை.. :unsure:

ஏற்கனவே மற்றவரை அப்பதவியை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டிருந்தேன். :D மேலாளர் கேட்டதும் பாய்ந்தடித்து ஓமென்றிருந்தால் பின்னாளில் எனது பில்லுடனான அரசியல் பாதிப்புக்கு உள்ளாகும். அதனால்தான் வேண்டுமென்றே சில நாட்கள் எடுத்துக் கொண்டேன்.. :D

இடங்களுக்கு, நாடுகளுக்கு, கலாச்சரங்களுக்கு, நிறுவன அளவில் கூட இந்த அலுவலக அரசிளுகள் மாறும். ஆனால் பொதுவாக சந்தர்பங்களை ஒரு தன்னம்பிக்கையுடன் ஏற்கும்பொழுது அது அவரைச்சுற்றி ஒரு பலமான அரசியலை (பின்னர் திறமை, ஆளுமை...) உருவாக்க உதவும், CEO ஆக கூட வர இது தேவை :D

Link to comment
Share on other sites

இடங்களுக்கு, நாடுகளுக்கு, கலாச்சரங்களுக்கு, நிறுவன அளவில் கூட இந்த அலுவலக அரசிளுகள் மாறும். ஆனால் பொதுவாக சந்தர்பங்களை ஒரு தன்னம்பிக்கையுடன் ஏற்கும்பொழுது அது அவரைச்சுற்றி ஒரு பலமான அரசியலை (பின்னர் திறமை, ஆளுமை...) உருவாக்க உதவும், CEO ஆக கூட வர இது தேவை :D

நீங்கள் சொல்வதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.. இன்று கனிமவளத்துறையில் எனக்கு இருக்கும் அனுபவம் மூன்று வருடங்களுக்கு முன் (அப்பதவி வந்தபோது) இருந்ததா? - இல்லை.. :D

காரணம் என்ன?

கனிமவளத்துறை மிகவும் பரந்துபட்டது.. அதில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் 20 அல்லது 30 வருடங்களாக இருப்பவர்கள்.. இவர்களுடன் நான் வேலை செய்ய வேண்டும். என்னுடைய அப்போதைய அனுபவ வருடங்கள் 2. :D

ஒருவேளை காலப்போக்கில் நீங்கள் சொல்லும் மனப்பான்மை வரலாம்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த இடத்தில்... ஒரு, தமிழனை பாவம் என்று... சேர்த்துவிட்டால், அடுத்த கிழமை உங்களுக்கு வினை பிடிக்கும். அது... எந்த ரூபத்தில் வரும் என்று சொல்வது கஷ்டம்.

தமிழர்கள் என்று வந்துவிட்டால் முடிவை மூளை எடுக்காது! இரக்கமுள்ள இதயம்தான் எடுக்கும்!!

உண்மையில் நண்பர்களுக்கு கடன் (வட்டியில்லாத) கொடுக்கும்போது அவர்கள் திருப்பித் தரக்கூடிய நிலையில் இருப்பார்களா என்று யோசிக்காமல் கொடுப்பதுபோல், தமிழர்கள் வேலை வேண்டுமென்றால் கேட்டால் அவர்களின் திறமைகளை, அரசியல்களை அதிகம் பார்க்காமல் உதவி செய்வதுதான் சக தமிழர்களின் பழக்கம். சிலவேளைகளில் இது வினையாகவும் முடியும் ஆபத்து உள்ளதுதான்.

தற்போது தமிழ் முதலாளிகள் சக தமிழர்களையே அட்டைபோல உறிஞ்சும் போக்கும் இருக்கின்றதுதானே.. காலப்போக்கில் தமிழர்கள் மேல் தமிழர்கள் இரக்கம் காட்டுவார்களா என்பது கேள்விக்குறிதான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் கனேடிய பொறியியலாளர் சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்..

“practice of professional engineering” means any act of planning, designing, composing, evaluating, advising, reporting, directing or supervising that requires the application of engineering principles and concerns the safeguarding of life, health, property, economic interests, the public welfare or the environment, or the managing of any such act; (“exercice de la profession d’ingénieur”)

பொறியியலாளர் வேலையை ஒரு பொறியியலாளர் மாத்திரமே செய்ய முடியும்.

ஆக, செய்வது இவர்கள்.. ஏதாவது பிழைத்தால் ஜெயிலுக்குப் போகப்போவது பொறியியலாளர்கள்.. :unsure:

நான் கனடா வந்திருந்தபோது

வேகப்பாதையால் போய்க்கொண்ருந்த போது விமான நிலையத்துக்கு அருககாமையீல் புதிதாக கொஞ்ச வேகப்பாதை சில கிலோ மீற்றர்களுக்கு போட்டிருந்தார்கள். அதன் வடிவமைப்பையும் சுற்று வட்டத்தையும் பார்த்துவிட்டு எப்போது போட்டார்கள் என்று நான் கேட்டபோது ஒரு பேரின்ப தகவலைச்சொன்னார்கள். ந்தப்பாதை கட்டப்பட்டு அது திறந்து விடுவததற்கான அனுமதிக்காக எனது அக்கா ஒருவரின் மகளின் கணவனின் அனுமதிக்காக அவரது அலுவலகத்தில் சில நாட்கள் இருந்ததாக. உண்மையில் பெருமையாக இருந்தது. உலகம் பூராகவும் எமது மக்களின் வளர்ச்சி. இசையையும் நான் அப்படித்தான் பபார்த்தேன். பார்க்கின்றேன்

(அவரும் இலங்கையில் பொறியியலாளராக வேலை செய்தவர்.)

.

Link to comment
Share on other sites

நான் கனடா வந்திருந்தபோது

வேகப்பாதையால் போய்க்கொண்ருந்த போது விமான நிலையத்துக்கு அருககாமையீல் புதிதாக கொஞ்ச வேகப்பாதை சில கிலோ மீற்றர்களுக்கு போட்டிருந்தார்கள். அதன் வடிவமைப்பையும் சுற்று வட்டத்தையும் பார்த்துவிட்டு எப்போது போட்டார்கள் என்று நான் கேட்டபோது ஒரு பேரின்ப தகவலைச்சொன்னார்கள். ந்தப்பாதை கட்டப்பட்டு அது திறந்து விடுவததற்கான அனுமதிக்காக எனது அக்கா ஒருவரின் மகளின் கணவனின் அனுமதிக்காக அவரது அலுவலகத்தில் சில நாட்கள் இருந்ததாக. உண்மையில் பெருமையாக இருந்தது. உலகம் பூராகவும் எமது மக்களின் வளர்ச்சி. இசையையும் நான் அப்படித்தான் பபார்த்தேன். பார்க்கின்றேன்

(அவரும் இலங்கையில் பொறியியலாளராக வேலை செய்தவர்.)

.

MTO வில் அல்லது City of Toronto வில் ஒரு பெரும்புள்ளி இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.. :unsure: அவரா? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கலாம் இசை

அங்குள்ள பதவி முறைகள் தெரியாததால் அவை பற்றி பெரிதாக பேசவில்லை.

தங்களுக்கு தேவை என்றால் பயன்படுத்திக்கொள்ளுங்கள் . பெயர் விபரங்கள் தருகின்றேன்.

Link to comment
Share on other sites

கனடாவில் வேலை அரசியலில் ஹாக்கி, காலநிலை இரண்டும் முக்கிய இடங்களை பிடிப்பவை. இரண்டையும் காலையில் செய்தித்தாள்களில் / வானொலியில் அறிந்து சென்று அங்கே இவைபற்றி சம்பாசணை செய்வது நண்பர்களை உருவாக்க (அது வேலையில் கைகொடுக்கும்) உதவும்.

Link to comment
Share on other sites

பாகம் 28: எனது முதல் வேலைத்திட்டம் (Project)

மேலாளர் எனது புதிய பதவிக்கான மாதிரி ஒப்பந்தந்தைக் கையில் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். அதை வீட்டிற்குக் கொண்டு சென்று படித்துப் பார்த்தேன்.. சில வரிகள் கேள்விக்குரியனவாக இருந்தன. unsure.gif

எனது வழிகாட்டலின்கீழ் வேலை செய்பவர்களின் வேலைகளுக்கும் நான் பொறுப்பு என்பதாக இருந்தது. பொறியியலாளர் நிலையில் இல்லாதவர்களை மேய்க்கலாம்.. ஆனால் ஏற்கனவே பொறியியலாளராக இருப்பவர் ஏதாவது பிழைவிட்டால் அதற்கு நான் எப்படிப் பொறுப்பாளராக முடியும் என்கிற கேள்வி வந்தது. unsure.gif

மேலாளரிடம் பேசியபோது, அவர்களது வேலையை மேற்பார்வை செய்து பிழைகளை குறைக்கவேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார்.. கடினமான நிலை.. இன்னொரு பொறியியலாளரின் வேலையில் தலையிடுவது சங்கடமானது. மேலாளர்களே ஒதுங்கித்தான் இருப்பார்கள்.. unsure.gif

சரி.. என்னதான் நடக்கும்.. நடக்கட்டுமே என்று பதவியை ஏற்றுக்கொண்டேன்.. :rolleyes: வேலை விடுப்பில் இருந்த பொறியியலாளரிடம் இருந்தும் வாழ்த்து மின்னஞ்சல் வந்தது.. வேறு சில மேலாளர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்..! unsure.gif

இப்போது புதிய வேலைத்திட்டம் ஒன்று வந்தது. கனடாவிலேயே முதல்முறையாக ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்துதருவதாகச் சொல்லி வேலையை எடுத்திருந்தோம். வேறு யாரும் செய்வதற்கு இல்லை. இந்தியன் தாத்தா தன்னுடைய வேலைத்திட்டத்தில் பிசியாக இருந்தார். :D இயற்கையாகவே நான் எடுத்துச் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. :unsure:

இந்த வேலைத்திட்டத்தின் பல வேலைகளுள் இரண்டு கட்டடப் பணிகளும் அடங்கும். ஒன்று ஏற்கனவே இருந்த இரும்பினாலான கட்டடத்தை உயர்த்துதல்; பெருப்பித்தல்.. இரண்டாவது கொங்கிரீட் வடிவமைப்பு..

முதல் கொங்கிரீட் வடிவமைப்பில் தவறுதலான முடிவுகளை எடுத்து பெயரைக் கெடுத்துக் கொண்டதால் வீம்புக்கென்று இதை கொங்கிரீட்டில் செய்து தருவதாகச் சொல்லி வேலையை எடுத்திருந்தார்கள் மேலாளர்கள். இதிலே தோல்வி என்பது ஒரு தெரிவு அல்ல.. :unsure:

அப்போது நல்ல வேளையாக, ஒரு நல்ல வரைதல் வல்லுனர் எங்கள் நிறுவனத்தில் சேர்ந்திருந்தார். மிகவும் திறமையானவர். வேறு பல இடங்களிலும் வேலை செய்துவிட்டு வந்ததனால் பொறியியலாளர்கள் மீது நல்ல மதிப்பு வைத்திருந்தவர். தன்னுடைய எல்லைகளை நன்கு அறிந்தவர். :unsure:

என்னுடைய வடிவமைப்பை அவரைக்கொண்டு வரைந்து கொண்டேன். கட்டடம் கட்டப்படும் இடத்தில் இருக்கும் ரிச்சர்ட் என்பவருடன் நல்ல பழக்கம் இருந்தது. அவரின் தேவைகளை அறிந்து அதற்கேற்றாற்போல் திட்டத்தை மெருகேற்றினோம். :unsure:

எல்லாம் ஓரளவுக்கு முடிந்திருந்த சமயத்தில், ஓய்வுபெறும் நிலையில் இருந்த இன்னொரு வரைதல்காரர் வந்து சேர்ந்தார். 30 வருடங்களாக இதிலேயே குப்பை கொட்டியவர். எங்கள் வேலையைப் பார்த்ததும் இது ஏற்கனவே தாங்கள் செய்தது போல இல்லையே என்று உப தலைவரிடம் (Vice President) வத்தி வைத்துவிட்டார். :unsure:

இந்த உப தலைவர் பொறியியலாளர் அல்ல.. அவரும் முந்தி வரைந்து கொண்டிருந்தவர்தான். ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். சிக்கல் வரப்போவதை மனம் உணர ஆரம்பித்தது. :unsure:

(தொடரும்.)

Reason for Editing: எழுத்துப்பிழை

Link to comment
Share on other sites

இங்கும் பல இடங்களில் அனுபவமுள்ள திறமையான வரைகலைஞர்கள் வடிவமைப்பை தாங்களே செய்வார்கள். இறுதி வடிவத்தை பொறியியலாளர் / முகாமைத்துவம் சரிபார்த்து திருத்தங்கள் செய்வார்கள். அத்துடன் ஒரு திட்டம் (Project ) நடக்கும் போது ஒவ்வொரு கட்டத்திலும் அடிக்கடி அந்தத் திட்ட வடிவமைப்பு முன்னேற்றக் கூட்டம் (Design development meetting ) நடக்கும். அதில் குறை நிறைகளை அலசி ஆராய்ந்து திருத்தங்கள் செய்யப்படும்.

ஒவ்வொரு திட்டமும் (Project ) முடிந்த பின், அதில் இருந்து கற்றுக் கொண்ட / விட்ட பிழைகளை (Lessons Learned Meeting ) அலசி ஆராய்வோம். இதனால் பல 'அலுவலக அரசியல்' விளையாட்டுகளைக் தவிர்க்கக் கூடியதாக உள்ளது.

Link to comment
Share on other sites

இங்கும் பல இடங்களில் அனுபவமுள்ள திறமையான வரைகலைஞர்கள் வடிவமைப்பை தாங்களே செய்வார்கள். இறுதி வடிவத்தை பொறியியலாளர் / முகாமைத்துவம் சரிபார்த்து திருத்தங்கள் செய்வார்கள். அத்துடன் ஒரு திட்டம் (Project ) நடக்கும் போது ஒவ்வொரு கட்டத்திலும் அடிக்கடி அந்தத் திட்ட வடிவமைப்பு முன்னேற்றக் கூட்டம் (Design development meetting ) நடக்கும். அதில் குறை நிறைகளை அலசி ஆராய்ந்து திருத்தங்கள் செய்யப்படும்.

ஒவ்வொரு திட்டமும் (Project ) முடிந்த பின், அதில் இருந்து கற்றுக் கொண்ட / விட்ட பிழைகளை (Lessons Learned Meeting ) அலசி ஆராய்வோம். இதனால் பல 'அலுவலக அரசியல்' விளையாட்டுகளைக் தவிர்க்கக் கூடியதாக உள்ளது.

இங்கிலாந்தில் பொறியியல் துறை ஒழுங்கமைக்கப்பட்டதல்ல.. அதாவது It's not a regulated profession.

வட அமெரிக்காவிலோ, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலோ இது ஒழுங்கமைக்கப்பட்டது. அதாவது சட்டத்தால் கட்டுப்படுத்தப்பட்டது.. இதை மீறியவர் சட்டத்தை மீறியவர் ஆவார்.

உதாரணத்துக்கு, மருத்துவத்துறையை எடுத்துக் கொள்வோம். இது பல நாடுகளிலும் சட்டத்தால் கட்டுப்படுத்தப்பட்டது.

ஒரு சர்க்கரை வியாதி உள்ளவர் வந்து மருத்துவரைப் பார்க்கிறார் என வைத்துக்கொள்வோம். நோயாளியின் நிலையை ஒவ்வொருமுறையும் கணித்து மருந்துகளைப் பரிந்துரை செய்வார். மருந்துக்கடையில் உள்ளவர் இதைச் செய்யலாமா? :D

இதே போலத்தான் இங்கே நடப்பதும். வரைகலைஞர்கள் முந்தைய வேலைத்திட்டங்களைப் பிரதி பண்ணி வேலைகளை 90% முடித்துவிடுவார்கள். பிறகு எங்களிடம் வரும்போது மாற்றங்களை மேற்கொள்ளவேண்டி வருகிறது. இல்லாவிட்டால் போனால் போகுது என்று மனமில்லாமல் விலத்திப்போக வேண்டி வருகிறது.

நிர்ணயித்த தொகையைவிட கட்டமைப்பு மீறிவிட்டாலோ, அல்லது பாதுகாப்பில் குறை வந்தாலோ பொறியியலாளரின் தலைதான் சிக்கலுக்கு உள்ளாகும்.. :unsure: இது எப்படியென்றால் கம்பவுண்டர் மருந்து கொடுத்ததுக்கு மருத்துவர் ஜெயிலுக்குப் போன கதை.. :blink:

கனடாவில் நிலைபெற்றுவிட்ட பெரிய நிறுவனங்களில் நடப்பது என்னவென்றால் பொறியியல் முடித்துவிட்ட மாணவர்கள் பயிற்சியாளர்களாக (Engineer-in-training) சேர்வார்கள். அவர்கள் ஏற்கனவே உள்ள பொறியியலாளரின் மேற்பார்வையின்கீழ் வேலைசெய்து வரைகலைஞர்களைக் கொண்டு வரைந்து கொள்வார்கள். பொறியியலாளர் ஆலோசனைகளை வழங்கி, இறுதியில் சோதனை செய்து முத்திரை குத்துவார். :unsure:

இதுவே சரியான முறை ஆகும்..

Link to comment
Share on other sites

இங்கு வரைகலைஞர்கள் வடிவமைத்தாலும் பொறியியலாளர்களால் திரும்பத் திரும்ப வடிவமைப்பு மாற்றப்பட்டு, கடைசியில் முகாமைத்துவத்தால் பரிசீலிக்கப்பட வேண்டும். இதில் இருப்பவர்கள் வரைகலைஞர்கள் அல்ல. Chartered (?) முடித்தவர்களே இருப்பார்கள். இறுதியான வடிவத்தில் இந்த இந்த 'மூன்று கில்லாடிகளின் கையெழுத்துப் பெறப்படும்.

ஏதும் பிழைத்தால் கடைசியாக கையொப்பம் இட்டவர்களின் தலையிலிலேயே எல்லாம் போய்ச் சேரும்.

ஏன் கனடாவில் பொறியியல் துறையில் 'தடியெடுத்தவன் எல்லாம் தண்டாலன்' எனும் நிலையை உருவாக்கியுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

இங்கு வரைகலைஞர்கள் வடிவமைத்தாலும் பொறியியலாளர்களால் திரும்பத் திரும்ப வடிவமைப்பு மாற்றப்பட்டு, கடைசியில் முகாமைத்துவத்தால் பரிசீலிக்கப்பட வேண்டும். இதில் இருப்பவர்கள் வரைகலைஞர்கள் அல்ல. Chartered (?) முடித்தவர்களே இருப்பார்கள். இறுதியான வடிவத்தில் இந்த இந்த 'மூன்று கில்லாடிகளின் கையெழுத்துப் பெறப்படும்.

ஏதும் பிழைத்தால் கடைசியாக கையொப்பம் இட்டவர்களின் தலையிலிலேயே எல்லாம் போய்ச் சேரும்.

ஏன் கனடாவில் பொறியியல் துறையில் 'தடியெடுத்தவன் எல்லாம் தண்டாலன்' எனும் நிலையை உருவாக்கியுள்ளார்கள்.

எனக்குத் தெரிந்து கனிமவளத்துறையில்தான் இப்படி நடந்துகொண்டிருக்கிறது.. மற்றத்துறைகள் சரியாகத்தான் இருக்கு.. :unsure:

பணம் புழங்கும் துறைகளில்தான் வெள்ளைகள் இருப்பார்கள்.. ஆனால் இங்கே பல வெள்ளைகள் படிப்பைக் குழப்பியவர்கள்.. அவர்கள் பிறகு AutoCad மாதிரி எதையாவது முடித்து உள்ளே வந்து மேலாளர்கள் ஆகிவிடுவார்கள்.. வேறு துறைகளுக்குப் போவதில்லை.. :rolleyes:

இப்போது நிலைமையைக் கொஞ்சம் மாத்தியிருக்கிறம்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசைக்கலைஞ்ஞன் அண்ணா நான் உங்கள் தொடரை விடாமல் வாசித்து வருகின்றேன்.என்னைப் போல மாணவருக்கு உங்களது தொடர் பயனுள்ளதாக இருக்குது.மிக்க நன்றீ அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இந்த கிழமை எழுத்தை குறைச்சு போட்டிங்கள்?

Link to comment
Share on other sites

இசைக்கலைஞ்ஞன் அண்ணா நான் உங்கள் தொடரை விடாமல் வாசித்து வருகின்றேன்.என்னைப் போல மாணவருக்கு உங்களது தொடர் பயனுள்ளதாக இருக்குது.மிக்க நன்றீ அண்ணா

உங்கள் கருத்துக்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள் கோகுலன்..! :D

என்ன இந்த கிழமை எழுத்தை குறைச்சு போட்டிங்கள்?

என்னையா இது.. மூச்சைப் பிடிச்சுக்கொண்டு எழுதித் தள்ளுறன்.. இதுவும் காணாது எண்டுறீங்கள்.. :unsure:

BBQ வோடை மினக்கெடுகிறார் போல. :)

இங்கை இப்பவும் சிங்கிள் டிஜிட்தான்.. :D:blink:

Link to comment
Share on other sites

இசை அண்ணா, தொடர் சிறப்பாகப் போகிறது. இங்கு மேலாளரை வடிவாக கையுக்குள்ள போட்டு வச்சிருந்தால் கன விஷயங்கள் செய்யலாம். நான் ஒவ்வொரு முறையும் வெளிநாடு போய் வரும்போதும் ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது வாங்கி வந்து குடுத்து விடுவேன். புகைப் பிடிப்பவர்கள், தண்ணிப்பாட்டிகளுக்கு எண்டே duty free யில் வாங்கி வருவேன். அத்துடன் வேலை செய்யும் பெண்களுக்கு perfume, எனது மேலாளருக்கு சிறந்த தர தேயிலை எல்லாம் ஒவ்வொரு வருடமும் கொடுத்து விடுவேன். அவர்களும் நான் கேக்க வைக்காமல் சம்பளத்தை வருடாவருடம் கூட்டுவார்கள். இடைக்கிடை கிம்பளமும் கிடைக்கும் :lol: .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.