Jump to content

நேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல்


Recommended Posts

கனிம சுரங்கங்களில் குறிப்பிட்ட கனிமங்களின் இருப்பினை எவ்வாறு உறுதி செய்கிறார்கள்? எந்தளவு இருக்கும் என்பதனை எதன் மூலம் அளவீடு செய்கிறார்கள்? இது உங்கள் வேலையுடன் தொடர்பு பட்ட கேள்வி இல்லை தெரிஞ்சு இருந்தால் சொல்லுங்க :D

கனிம சுரங்கங்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவை ?இதை கேட்பது தங்கம் ஆட்டையை போட இல்லை எழுதலாம் எண்டால் எழுதுங்க :lol:

கேள்வி கேட்பது எல்லாருக்கும் எளிது விடை எழுதுறதுக்கு நான் படுற பாடு இருக்கே எண்டு மனசு சொல்றது இங்க வரையும் கேட்குது :lol:

முதலில் நடப்பது ஆராய்தல் (Exploration). இதில் பல கட்டங்கள் உண்டு..

  • கனிமம் இருப்பதாக நீங்கல் நினைக்கும் பகுதிகளுக்குச் சென்று பாறைகளை ஆராய்தல். அல்லது ஹெலி மூலம் பறந்தபடியே தரவுகளைத் திரட்டுதல்.
  • இவற்றின்மூலம் கனிமம் இருப்பதாகக் கண்டுகொண்டால், ஆரம்பகட்ட துளையிடுதல் வேலைகளை மேற்கொள்ளுவார்கள். (Diamond Drilling Program)
  • துளையிடுதல்மூலம் திரட்டப்படும் மாதிரிகளை ஒரு நிலவியல் வல்லுனர் (Geologist) ஆராய்ந்து அறிக்கை கொடுப்பார். சாதகமான அளவு கனிமங்கள் இருந்தால் மேலும் துளைகள் இடுவார்கள்.
  • ஓரளவு கனிம அளவை எட்டியதும் அந்த நிலப்பகுதிக்கு சொந்தம் கொண்டாடுவார்கள் :D (Staking Claim). கனடாவில் கனிமவளச் சட்டம் தொழில் நிறுவனங்களுக்குச் சாதகமாக அமைக்கப்பட்டிருக்கிறது. பழங்குடிமக்களின் இடுகாட்டில் துளைகள் போட்டு இப்ப ஒரு பிரச்சினை நடந்துகொண்டிருக்கு. ஆதாரங்கள் இருந்தால் உங்களிடம் சொல்லிவிட்டு உங்கள் காணியிலேயே ஓட்டை போடுவார்கள். :D
  • சிறிய நிறுவனங்கள் வைத்திருக்கும் உரிமைகளை சற்றுப் பெரிய நிறுவனங்கள் வாங்கி மேலும் துளைகள் போட்டு ஆராய்ந்து எவ்வளவு உலோகங்களை நாங்கள் கொண்டிருக்கிறோம் என அறிக்கை தருவார்கள். பங்குச் சந்தைகளில் அவகளது பங்குகள் ஜிவ்வென்று எகிறும்.. :D CEO மார் நல்ல போனஸ் பார்ப்பார்கள்..
  • இவ்வாறு திரட்டப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு சாத்தியப்பாட்டுக்கான ஆராய்வுகளை மேற்கொள்வார்கள் (Feasibility studies). அதாவது அன்றைய சந்தை நிலவரப்படி எவ்வளவு பெறுமதியான வளங்கள் உள்ளன; அவற்றை எடுத்து விற்பதற்கு எவ்வளவு செலவாகும் என்பது போன்ற கணக்குவழக்குகள்.
  • சாதகமாக வந்தால் அந்த ஆதாரங்களை வங்கிகள், முதலீட்டாளர்களுக்கு வழங்கி காசைச் சேர்த்து கட்டுமானப் பணிகளை ஆரம்பிப்பார்கள்.

கனிமவளத்துறையில் பாதுகாப்பு என்று பார்த்தால் எண்பதுகளுடன் ஒப்பிடும்போது இப்ப நல்ல முன்னேற்றம். எண்பதுகளில் வருடத்திற்கு இத்தனைபேர் செத்தார்கள் என்று எண்ணுவார்களாம். :unsure: இப்போது பரவாயில்லை. எங்கள் நிறுவனத்தின் கடந்த பத்தாண்டுகளில் 3 பேர் இறந்திருக்கிறார்கள்.

இறப்புக்களையும், காயங்களையும் குறைக்கும்படியாக வடிவமைக்க வேண்டியது பொறியியலாளர்களின் வேலை. :unsure: ஆனால் அதற்குள் வரைந்துகொண்டிருப்பவர்கள் தலையிட்டு குளப்படி செய்வார்கள்.. :lol:

Link to comment
Share on other sites

  • Replies 346
  • Created
  • Last Reply

இசை,

இந்த கனிமவளத்துறை சுற்று சூழலை பெரிதாக பாதிக்கும் என்பதால் உங்களைப்போன்ற அனுபவம் கொண்டவர்கள் :

- எவ்வாறு சூழல் மாசடைவதை தடுக்கலாம்

- யார் யார் விதிகளை மீறுகின்றார்கள் என அரசுக்கு கூறலாம்

- எவ்வாறு மீறாமல் விதிகளை மதிக்கலாம் என நிறுவனங்களுக்கு கூறலாம்

ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து இவ்வாறான வேலைகளை செய்யலாம்.

அகூதா..

இந்தத் துறையில் அதிக பணம் புழங்குகிறது. நிறுவனங்கள் கை ஓங்கியிருக்கிறது. நியூ பிறன்ஸ்விக் தொழிலாளர் அமைச்சகம் சொல்வதையே அங்கே உள்ள நிறுவனங்கள் கேட்பதில்லை. :rolleyes:

சட்டம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஆனால் அதை வளைத்து வைத்திருக்கிறார்கள். இவைகளை எடுத்துச் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். ஏதாவது ஒரு இறப்பு, காயம் நிகழ்ந்தால் மட்டுமே மாற்றுவார்கள். இங்கே பொறியியல்துறை என்பது reactive.. not proactive. :rolleyes:

Link to comment
Share on other sites

இசை நீங்க ஏன் BHP, RIO இல் வேலை செய்ய முயற்ச்சி செய்யக் கூடாது, நல்ல வருமானம்.

இங்கு >$200bn க்கு சுரங்க வேலைகள் வந்து கொண்டிருக்கிறது. யாராவது சிங்கபூரில் வேலை செய்துவிட்டு இங்கு வந்தால் இலகுவில் வேலை எடுக்கலாம்

பலர் UK, Canada, US, Irland, .. இல் இருந்து இங்கு வருகிறார்கள் (வேலை தேட www.seek.com.au).

போன வருடம் என நினைக்கிறேன்.. உந்தப்பக்கம் வருவதற்கு படிவங்கள் எல்லாம் எடுத்து வைத்து விசா மனுச் செய்வதற்கு ரெடி.. :unsure:

பிறகு அங்கே வந்து பொறியியலாளர் உரிமம் எடுத்து, அங்குள்ள சட்டதிட்டங்கள், Code எல்லாம் கற்று... விடிஞ்சிடும். :D அலுப்பில் விட்டிட்டன்.. :unsure:

அதுமட்டுமில்லாமல் கனேடிய உறவுகளின் தொடர்ச்சியான கோரிக்கைகள், உண்ணாவிரதம் இவற்றையும் சமாளிக்க வேண்டியதாக இருந்தது.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

அதுமட்டுமில்லாமல் கனேடிய உறவுகளின் தொடர்ச்சியான கோரிக்கைகள், உண்ணாவிரதம் இவற்றையும் சமாளிக்க வேண்டியதாக இருந்தது.. :lol:

:D :D

Link to comment
Share on other sites

உடையார்,

அதுமட்டுமில்லாமல், உங்கை வந்து வீக் டாய் (weekday), மண்டாய் (Monday) :D எண்டு சொல்லிப் பழகுறதுக்குள்ளை சீ எண்டு போயிடும்.. :lol:

Link to comment
Share on other sites

மைனிங்கைவிட (Mining) Oil&Gas இல் நல்ல வருமானம்

இங்கு Oil & Gas இல் இருமடங்கு ஊதியம் கொடுக்கிறார்கள். அங்கு உட்புகுவதுதான் கஷ்டமான விடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபராஜிதன் உங்களுக்கு தேவையான சந்தேகங்களை,

உரிமையுடன்..... இசைக்கலைஞனிடமோ. உடையாரிடமோ... கேளுங்கள். யாழின் நட்பு உறவே... அது தான் ராசா. :)

Link to comment
Share on other sites

அதுமட்டுமில்லாமல் கனேடிய உறவுகளின் தொடர்ச்சியான கோரிக்கைகள், உண்ணாவிரதம் இவற்றையும் சமாளிக்க வேண்டியதாக இருந்தது.. :lol:

இந்த அர்ஜுன்,நிழலி ஆட்களை உண்ணாவிரதத்தை கைவிடும் படி கேட்க ஏலாதோ?? :lol: :lol: :lol:

உடையார்,

அதுமட்டுமில்லாமல், உங்கை வந்து வீக் டாய் (weekday), மண்டாய் (Monday) :D எண்டு சொல்லிப் பழகுறதுக்குள்ளை சீ எண்டு போயிடும்.. :lol:

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலா அக்கா... சாகும் வரை உண்ணாவிரதம் இருந்ததாக அறிந்தேன்.

சில பெண்கள், ரீ குலிக்கவும் ஆசைப் பட்டார்களாம்.

Link to comment
Share on other sites

வளாகத்தின்ர வேலி ஓரமாய் போய் நின்று கற்களை வெளியே எறிய முடியாதா? :icon_mrgreen:

:lol: :lol: :lol:

கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட உறவுகளுக்கு நன்றிகள்..! :D

:lol:

வெளியேயும் நிறையக் கல் இருக்கு.. :D சாம்பிளுக்கு ஒண்டை அடுத்த முறைக்கு எடுத்துக்கொண்டு வாறன்.. :unsure:

வளாகத்திற்குள் போனால், கிட்னியில் உள்ள கற்களைக் கூட வெளிய எறிய விடுவாங்களோ என்பது சந்தேகம்... :D

Link to comment
Share on other sites

பாகம் 31: நேர்முகத் தேர்வாளர்

ரொராண்டோவில் வேலை செய்யும்போதுதான் முதன்முதலில் இரண்டு வேலைக்குறிப்புகள் என்னிடம் தரப்பட்டது. அவற்றைப் பரிசீலித்துவிட்டு ஒருவரை பரிந்துரைக்குமாறு ரிம் என்னிடம் கேட்டிருந்தார். வரைதல் கலைஞர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற இருந்தது.

ஒருவர் அமெரிக்காவில் கணக்காளராக இருந்துவிட்டு, இங்கே வந்து AutoCAD படித்துவிட்டு வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். மற்றையவர் இங்கே வடிவமைப்பில் (Diploma in Architecture) படிப்பை அப்போதுதான் முடித்திருந்த ஒரு பஞ்சாபிப் பெண்.. unsure.gif யாரைப் பரிந்துரைப்பது என்பதில் பெரும் போராட்டமாக இருந்தது.. :lol:

கடைசியில் தாய்க்குலத்திற்கு மதிப்பு வழங்கப்பட்டது. :icon_mrgreen: கணக்காளரைக் காட்டிலும் எங்கள்துறை சற்றுத் தெரிந்தவர் என்றால் நல்லதுதானே.. :D

தற்போது வேலை செய்யும் நிறுவனத்தில் நேரடியாக நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பு மூன்று வருடங்களுக்கு முன் கிட்டியது. அப்போது நான் ஒரு முதுநிலை பொறியியலாளர் மட்டுமே.. unsure.gif

நாங்கள் எப்படி சுழியோடினோம் என்பது தெரிந்திருந்ததால் நேர்முகத்தேர்வு சுவாரசியமாக இருந்தது. :D முதலில் ஒரு ஆபிரிக்க நாட்டில் இருந்து வந்த கறுப்பர். நேர்முகத்தேர்வுக் குழுவில் மூன்றுபேர் இருந்தோம்.

அவர் ஏதோ முப்பரிமாணத்தில் வடிவமைத்ததாகச் சொல்லிக்கொண்டிருந்தார்.. ஓரிரு குறுக்குக் கேள்விகள் கேட்டபோது பதில் சரியாக வரவில்லை. அவரை தேர்வு செய்யவில்லை.

அடுத்ததாக இந்தியன் தாத்தா.. :D இவர் இருபது சொச்ச வருடங்கள் இந்தியாவில் வேலை செய்தவர் என்ற உடனேயே எனக்கு சந்தேகம் வர ஆரம்பித்துவிட்டது. unsure.gif நாங்களும் இந்தியாவில் வேலை செய்தனாங்கள் அல்லோ.. :D

நேர்முகத்தேர்வை பரவாயில்லாமல் செய்தார். தேர்வு முடிந்த பிறகு தனியாக எனது மேற்பார்வையாளர் என்னுடைய கருத்தைக் கூறுமாறு கேட்டார். எனக்கென்றால் பெரிய நம்பிக்கை இல்லை. அதை அவரிடம் சொன்னேன். ஆனால் அவருக்குப் பிடித்திருந்தது.. unsure.gif

இந்தியன் தாத்தா சேர்க்கப்பட்டுவிட்டார்.. :D

(தொடரும்.)

Link to comment
Share on other sites

வளாகத்திற்குள் போனால், கிட்னியில் உள்ள கற்களைக் கூட வெளிய எறிய விடுவாங்களோ என்பது சந்தேகம்... :D

இப்பதான் கட்டிக்கொண்டிருக்கிறம் எண்டபடியால், வளாகத்துக்கு உள்ளேயிருந்தே எடுத்துக்கொண்டு வந்த ஆக்களும் இருக்கினம். :D ஆனால் நான் எடுக்க விருபவில்லை.. மானம் போனால் போனதுதான்.. :unsure:

ஆனால் நான் தமிழனல்லவா.. :D அங்கே வேலை செய்யும் ரிச்சட்டிடம் ஒவ்வொரு முறையும் கேட்பேன்.. எங்கள் அலுவலகத்துக்கு வரும்போது கொண்டுவரும்படி.. அவரும் டிமிக்கி விடுகிறார்.. :D

இப்போது அங்கே தரைப்பகுதியில் இருந்து தங்கம் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு நாளைக்கு 6 கிலோ எடுக்கிறார்களாம். :rolleyes: இனிமேல் கல்லில கையே வைக்க முடியாது.. :lol:

இங்கே ரிமின்ஸ் எனும் இடத்தில் தங்கச் சுரங்கங்கள் உண்டு.. அங்கே வேலை செய்துவிட்டு தொழிலாளர் குளிக்க வேண்டும்.. குளித்த தண்ணீரை வடிகட்டி அதிலும் தங்கத்தை எடுக்கிறார்கள்.. :rolleyes:

Link to comment
Share on other sites

வளாகத்திற்குள் போனால், கிட்னியில் உள்ள கற்களைக் கூட வெளிய எறிய விடுவாங்களோ என்பது சந்தேகம்... :D

அப்ப நம்ம டங்குவார் சட்னிதான். :D

Link to comment
Share on other sites

பாகம் 32: எதிர்பார்ப்புகள்

பதவி உயர்வு பெற்றதில் இருந்து அநேகமாக ஒரு பத்து பேரை நேர்முகத்தேர்வு செய்திருப்பேன். ஆனால் தேர்வு செய்யக்கூடியதாக இருந்தது ஒரு சீனரை மட்டுமே.. திறமையிருப்பவர்களுக்கு நான் இருக்கும் ஊர்ப்பக்கம் வர பெரிதாக விருப்பமில்லை.. வர விரும்புபவர்களுக்கு பெரிதாகத் திறமையில்லை.. :unsure:

நேர்முகத்தேர்வு செய்யும் முன்னரே வேலைக் குறிப்பைப் பார்த்து என்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொள்வேன். இந்தியன் தாத்தாவைச் சேர்த்து பின்னாளில் அவர் வேலையை விட்டுச் செல்லும்வரையில் பெரும்பாடாகி விட்டது.. :unsure: அதனால் ஆள் எடுக்காவிட்டாலும் பரவாயில்லை.. பிழையான ஆட்களை எடுத்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்..

சில முக்கியமான தகுதிகள் பொதுவில் எதிர்பார்க்கப்படும்.

  • அடிப்படை தொழில்நுட்பப் புலமை (எங்கேயெல்லாம் முன்பு வேலை செய்திருக்கிறார்கள்; எவ்வளவு காலம் என்பதை வைத்து இதை ஒரு அளவுக்குக் கணித்துவிடலாம்.)
  • மற்றவர்களுடன் இணைந்து வேலை செய்யும் தன்மை. (இதை நேர்முகத்தேர்வில் கொக்கி போட்டுத்தான் அறியவேண்டும். :lol: )
  • தொடர்பாடல் திறமைகள்.. (இதையும் நேர்முகத்தேர்விலோ அல்லது அதற்கு முந்திய தொலைபேசி மூலமான உரையாடலிலோ தெரிந்துகொள்ளலாம்.)
  • ஊர் மாறி வருவார்களா என்கிற கேள்வி..

வேலைக்குறிப்புகள் மேற்குலக நாடுகளில் எவ்வளவு முக்கியமானவை என்பது இதிலிருந்து விளங்கக்கூடியதாக இருக்கும். அதை வாசிக்கும்போதே அது உங்கள் சரித்திரத்தை சுருக்கமாகச் சொல்வதுபோன்று வடிவமைக்க வேண்டும். :unsure:

நான் நேர்முகத்தேர்வு செய்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படைத் தொழில்நுட்ப அறிவு குறைந்து காணப்பட்டது. பலரும் ஈரான், எகிப்து வெளிநாடுகளில் இருந்து வந்து வேலை தேடுபவர்கள். சீனர்களுக்கோ மொழிப்பிரச்சினை..

இந்த இடத்தில் ஈழத்தமிழரைப் பற்றிச் சொல்லியாக வேண்டும்.. :rolleyes:

(தொடரும்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 32: எதிர்பார்ப்புகள்

இந்த இடத்தில் ஈழத்தமிழரைப் பற்றிச் சொல்லியாக வேண்டும்.. :rolleyes:

(தொடரும்.)

இனித்தான் திரி சூடு பிடிக்கப்போகின்றது :D

Link to comment
Share on other sites

பாகம் 33: தமிழரால் பெருமை

என்னதான் சொன்னாலும், தொழில்துறையில் எனக்குப் பெருமை மட்டுமே தேடித்தந்திருக்கிறார்கள் என் ஈழ தேசத்தவர்கள். :D நம்மை நாமே கிண்டல் செய்வது வழமை இதே யாழ்களத்தில்.. ஆனால் எனக்கு சில ஆச்சரியமான அனுபவங்களும் ஏற்பட்டிருக்கின்றன. :rolleyes:

மூன்று வருடங்களுக்கு முன் நியூபிறன்ஸ்விக் மாகாணத்தில் ஒரு கிழமை தங்கியிருக்கவேண்டி வந்தது. அப்போது வேலை நிமிர்த்தமாக பிரித்தானியாவில் இருந்து வந்திருந்த ஒரு பொறியியலாளரைச் சந்தித்தேன். நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது எனது பூர்வீகம் பற்றிக் கேட்டார். நான் சொல்லி முடித்தபிறகு கேட்டார் அதெப்படி உங்கள் இனத்தில் மட்டும் பலரும் பொறியியலாளர்கள் அல்லது மருத்துவர்களாக இருக்கிறார்கள் என. :D

இதுதான் சந்தர்ப்பம் என எங்கள் நாட்டில் எங்கள் சமூகம் பற்றியும், இயற்கை வளம் குறைந்த நிலையில் படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும், அதை எப்படி ஆட்சியாளர்கள் தட்டிப்பறித்தார்கள் என்பதையும், அகதிகளாக ஓடவேண்டிய நிலையையும் சுருக்கமாகக் குறிப்பிட்டேன். unsure.gif பியர் குடித்துக் கொண்டு கேட்டதால் அவரும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார்.. :lol:

அதேபோல போனமாதம் எங்கள் தாய் நிறுவனத்தின் (Parent Company) புதிய CEO பிரித்தானியாவில் இருந்து வந்திருந்தார். இந்த நிறுவனம் உலகம் முழுவதும் பல கிளைகளைக் கொண்டது. பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்.

என் அறைக்கு வந்ததுமே கைகுலுக்கிவிட்டுக் கேட்டார்..

"நீங்கள் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவரா?"

(யார் இவருக்குச் சொல்லியிருப்பார்கள் என்கிற சிந்தனை எனக்குள் ஓடியது unsure.gif ).

"ஆம்.. உங்களுக்கு எப்படித் தெரியும்?" unsure.gif

"உங்கள் பெயரைவைத்தே கண்டுபிடித்துவிட்டேன்.." :wub:

எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. 'பிரித்தானியாவில் தமிழர் கலக்குகிறார்கள்தான்.. ஒத்துக்கிறேன்' :D என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.. :lol:

நான் சிங்கப்பூரில் இருந்து விடைபெறும்போது எனது மேலாளர் என்னிடம் கேட்டது இப்போது நினைவுக்கு வருகிறது. 'உங்கள் நாட்டில் இருந்து வந்த வேறு யாராவது வேலை தேடுகிறார்களா?' என்று கேட்டிருந்தார். :wub: ஏதோ நம்மால் முடிந்த சேவை.. :D

(தொடரும்.)

Link to comment
Share on other sites

நல்ல பதிவு.

எல்லாம் தமிழர்களின் கடும் உழைப்பிற்கு கிடைத்த சன்மானம். கூலியோ, மேலேயோ முன்னுக்கு வரவேண்டும் என்ற வெறி உள்ளது.

எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. 'பிரித்தானியாவில் தமிழர் கலக்குகிறார்கள்தான்.. ஒத்துக்கிறேன்' :D என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.. :lol:

இப்பவாவது ஒத்துக் கொண்டதிற்கு நன்றி. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 33: தமிழரால் பெருமை

நான் சிங்கப்பூரில் இருந்து விடைபெறும்போது எனது மேலாளர் என்னிடம் கேட்டது இப்போது நினைவுக்கு வருகிறது. 'உங்கள் நாட்டில் இருந்து வந்த வேறு யாராவது வேலை தேடுகிறார்களா?' என்று கேட்டிருந்தார். :wub: ஏதோ நம்மால் முடிந்த சேவை.. :D

(தொடரும்.)

உயர்ந்த மனிதனாகி விட்டீர்கள் :rolleyes: 

Link to comment
Share on other sites

நல்ல பதிவு.

எல்லாம் தமிழர்களின் கடும் உழைப்பிற்கு கிடைத்த சன்மானம். கூலியோ, மேலேயோ முன்னுக்கு வரவேண்டும் என்ற வெறி உள்ளது.

இப்பவாவது ஒத்துக் கொண்டதிற்கு நன்றி. :lol:

இதுக்காக தலைக்கனம் பிடித்து ஆட வேண்டாம்.. :lol: உங்கள் சேவை தொடரட்டும்.. :D

உயர்ந்த மனிதனாகி விட்டீர்கள் :rolleyes:

தமிழனாகிவிட்டேன்.. :rolleyes: கருத்துக்கு நன்றிகள் வாத்தியார்.. :D

Link to comment
Share on other sites

இதுக்காக தலைக்கனம் பிடித்து ஆட வேண்டாம்.. :lol: உங்கள் சேவை தொடரட்டும்.. :D

சும்மா பகிடிக்கித்தான் சொன்னேன். நொந்து கிடக்கிறோம். பிரித்தானியா என்றாலே எல்லோரும் போட்டுக் கும்முகிறார்கள். :lol:

Link to comment
Share on other sites

பாகம் 34: கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் :lol:

எனது தொழிலில் நான் இதுவரை கற்றுக்கொண்டதை இறுதிப் பகுதியாக இப்போது எழுதுகிறேன்.

மாணவர்கள்:

சின்னவயதில் விளையாடினால், வயது போகும்போது கஷ்டம். சின்ன வயதில் கஷ்டப்பட்டால் பின்னாளில் கவலைகள் குறைவு. படிப்பில் உங்கள் பெறுபேறுகள் உயர்ந்த அளவில் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம். unsure.gif

நான் பல்கலைக்கழகத்தில் படித்தபோது அதிக புள்ளிகள் எடுப்பது நல்லதல்ல என்று சில மாணவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். :rolleyes: ஏனென்றால் அதிக புள்ளிகள் எடுப்பவர்களை நேர்முகத்தேர்வில் வேலைக்கு எடுக்க மாட்டார்களாம். ஏனென்றால் மேற்படிப்பு என்று ஓடிவிடுவார்களாம்.. :lol: இதையெல்லாம் நான் கேட்டிருந்தால் இப்போது எப்படி இருந்திருப்பேனோ தெரியாது. ஆனால் சிங்கப்பூரில் எனது முதல் வேலை கிடைக்கக் காரணம் நான் முதல் தரத்தில் சித்தியடைந்திருந்ததே..

இளநிலை ஊழியர்கள்:

கேட்டுத் தெரிந்துகொள்வதை என்றுமே அவமானமாக நினைக்காதீர்கள்.. வேடங்கள் போடவேண்டாம். தெரியாமல் இருப்பது ஒன்றும் புதிதல்ல.. :D நீங்கள் மனம் திறந்து எனக்கு விளங்கவில்லை என்று சொல்லும்போது முதுநிலை ஊழியர்கள் சொல்லித்தருவார்கள்..

குறுகிய காலத்தில் எவ்வளவு கற்கமுடியுமோ அவ்வளவையும் கற்றுக் கொள்ளுங்கள்.. 'ஏன்' என்ற கேள்வியை எப்பவுமே உங்களுக்குள் கேட்டபடி இருக்க வேண்டும்.. :rolleyes:

அதுபோல, சக ஊழியர்களிடமும், நிர்வாகத்திடமும் என்றும் நட்புடன் இருங்கள். பிரச்சினை வரும் பட்சத்தில், வேறு வேலை பார்த்துச் சென்றுவிடுதல் நல்லது.

முதுநிலை ஊழியர்கள்:

இந்த நிலைக்கு வந்தவுடன் நீங்கள் மற்றவர்களுக்குச் சொல்லித்தரும் பக்குவத்தில் இருக்க வேண்டும். நீங்கள் சின்ன விடயங்களை மற்றவர்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளும்போது உங்கள் புலமை கூடும். ஆனால் உங்களைப் பற்றிய அபிப்பிராயம் சக ஊழியர் மத்தியில் குறையும்.. :rolleyes:

உங்கள் நிறுவனத்தின் வெற்றியே உங்கள் வெற்றி. உங்களின் தகைமை நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதில் தங்கியிருக்கவில்லை.. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதிலேயே உள்ளது.

மேற்பார்வையாளர்கள்:

உங்களின் கீழ் வேலை செய்பவர்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுங்கள். ஆனால் அவர்கள் செய்யும் வேலைக்கு பொறுப்புக் கூறல் அவர்களிடமே உள்ளது என்பதை அடிக்கடி அவர்களுக்கு நினைவுபடுத்துங்கள்.

ஒவ்வொரு ஊழியரின் கைவண்ணமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். உங்கள் கைவண்ணத்தை அவர்கள் வேலையில் திணிக்காதீர்கள். unsure.gif அது உங்கள் முகத்தை அடுத்தவரின் குழந்தையில் காண நினைக்கும் மனநிலைக்கு ஒப்பானதாகும்.. :lol: அதுமட்டுமல்லாமல், உற்சாகம் இழந்தநிலையில் அவர்கள் வேறுவேலை தேட ஆரம்பித்துவிடுவார்கள்.. unsure.gif

அன்பான தமிழ் உறவுகளே.. :D இந்த ஒரு மாதமாக என்னுடைய அறுவையை மிகப் பொறுமையுடன் சகித்துக்கொண்ட உங்கள் மன உறுதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். :lol: பிறிதொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம்..! :D

நன்றி. வணக்கம்.

(முற்றும்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 34: கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் :lol:

எனது தொழிலில் நான் இதுவரை கற்றுக்கொண்டதை இறுதிப் பகுதியாக இப்போது எழுதுகிறேன்.

மாணவர்கள்:

சின்னவயதில் விளையாடினால், வயது போகும்போது கஷ்டம். சின்ன வயதில் கஷ்டப்பட்டால் பின்னாளில் கவலைகள் குறைவு. படிப்பில் உங்கள் பெறுபேறுகள் உயர்ந்த அளவில் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம். unsure.gif

இது தான் இன்று நான் எனது பிள்ளைகளுக்கு சொல்லும் அறிவுரை

மேற்பார்வையாளர்கள்:

உங்களின் கீழ் வேலை செய்பவர்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுங்கள். ஆனால் அவர்கள் செய்யும் வேலைக்கு பொறுப்புக் கூறல் அவர்களிடமே உள்ளது என்பதை அடிக்கடி அவர்களுக்கு நினைவுபடுத்துங்கள்.

ஒவ்வொரு ஊழியரின் கைவண்ணமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். உங்கள் கைவண்ணத்தை அவர்கள் வேலையில் திணிக்காதீர்கள். unsure.gif அது உங்கள் முகத்தை அடுத்தவரின் குழந்தையில் காண நினைக்கும் மனநிலைக்கு ஒப்பானதாகும்.. :lol: அதுமட்டுமல்லாமல், உற்சாகம் இழந்தநிலையில் அவர்கள் வேறுவேலை தேட ஆரம்பித்துவிடுவார்கள்.. unsure.gif

என்னுடன் அல்லது என்னிடம் வேலை செய்தவர்கள் வேறு இடங்களிலோ அல்லது வேறு ஆட்களுடனோ வேலை செய்வது மிக கடினம். அந்தளவுக்கு சுதந்திரம இருக்கும். ஆனால் செய்ய வேண்டிய வேலைகளை அவர்களை ஏவாமல் நானே தொடங்கிவிடுவேன். அவர்கள் பின் தொடர்வர். பின்னர் மெல்ல மெல்ல என்னை விலத்தி தேவையானவற்றை அவர்களே செய்து முடிப்பர். இதுவும் ஒரு தந்திரமே.

அன்பான தமிழ் உறவுகளே.. :Dஇந்த ஒரு மாதமாக என்னுடைய அறுவையை மிகப் பொறுமையுடன் சகித்துக்கொண்ட உங்கள் மன உறுதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். :lol: பிறிதொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம்..! :D

அவசரமாக முடித்துவிட்டது போல் தெரிகிறது. இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம். பயன்பெற.

நன்றி. வணக்கம்.

:icon_idea: :icon_idea: :icon_idea:

(முற்றும்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு தலைப்பையும், வாசிக்க ஆர்வமாக எழுதிய இசைக்கலைஞனுக்கு பாராட்டுக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றீ அண்ணா பயனுள்ள பதிவு வாசித்து பயன் பெற்றேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/ மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?   தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறந்துகொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார்கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.  இந்நிலையில் நம் மின்னம்பலம் 40 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் வட சென்னை மக்களின்  மனதை வென்றவர் யார்? வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அமுதினி போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வடசென்னை மக்களவைத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருவொற்றியூர்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்,  பெரம்பூர், கொளத்தூர்,  திருவிக நகர்(தனி) மற்றும்ராயபுரம் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 45% வாக்குகளைப் பெற்று  இரண்டாவது முறையாக வடசென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார்.  பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 19% வாக்குகளைப் பெறுகிறார்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி 6% வாக்குகளைப் பெற்றுள்ளார்.   1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… வடசென்னை தொகுதியில் இந்த முறையும் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/political-news/dmk-candidate-kalanidhi-veerasamy-is-leading-in-north-chennai-constituency-for-the-second-time-by-getting-45-votes-minnambalam-mega-survey-north-chennai/   மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு? Apr 14, 2024 09:00AM  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..?  என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி யாருக்கு? திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ்சசிகாந்த் செந்தில் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் பொன்.பாலகணபதி போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.ஜெகதீஷ் சந்தர் போட்டியிடுகிறார். கள நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூவிருந்தவல்லி (தனி), ஆவடி மற்றும்மாதவரம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்... காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 49% வாக்குகளைப் பெற்று திருவள்ளூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி 19% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்தெரிவித்தன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, திருவள்ளூர் தொகுதியில் இந்த முறை காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-candidate-sasikanth-senthil-won-in-thiruvallur-constituency-admk-bjp-are-in-next-places/   மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்? Apr 14, 2024 10:00AM IST ஷேர் செய்ய :    2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரக்கோணம் தொகுதியின் அரியணை ஏறப் போவது யார்  என்ற கேள்விக்கு பதில் தேடி,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில்  சிட்டிங் எம்.பி.யான ஜெகத்ரட்சகன் மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்சியா நஸ்ரின்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?  மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  அரக்கோணம் (தனி),  திருத்தணி, சோளிங்கர்,  காட்பாடி,  இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 48% வாக்குகளைப் பெற்று மீண்டும் அரக்கோணம் தொகுதி மக்களின் பிரதிநிதியாகிறார்.  அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் 24% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, அரக்கோணம் தொகுதியின் எம்.பி. என்ற அரியணையில் மீண்டும் அமர ஆயத்தமாகிறார் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-arakkonam-constituency-dmk-jagatratchagan-wins-with-48-percentage-vote/   மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி? Apr 14, 2024 11:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம், மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் வட தமிழகத்தின் கிராமப்புறங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில்மலையரசன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமகசார்பில் இரா.தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆ.ஜெகதீசன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டியிருப்பதாகதகவல்கள் வருகிற நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயதுவரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண்என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ரிஷிவந்தியம்,  சங்கராபுரம்,  கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி),  ஆத்தூர் (தனி) மற்றும் ஏற்காடு (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் மலையரசன் 42% வாக்குகளைப் பெற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 37% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் இரா.தேவதாஸ் உடையார் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெகதீசன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மலைகள் நிறைந்த கள்ளக்குறிச்சியில் திமுகவின் மலையரசனே மலையேறுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-malayarasan-is-leading-in-kallakurichi-constituency-with-42-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு? Apr 14, 2024 13:00PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இதில் அரசியல் திருப்புமுனைகளுக்கு சொந்த பூமியான மலைக்கோட்டையாம் திருச்சி  தொகுதி முக்கியமானது. திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கருப்பையா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்போட்டியிடுகிறார். மதிமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிற நிலையில்…  களத்தின் இறுதிகட்ட நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருச்சி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருச்சிராப்பள்ளி (கிழக்கு),  திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருவரங்கம், திருவெறும்பூர்,  கந்தர்வக்கோட்டை (தனி) மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   மதிமுக வேட்பாளர் துரை வைகோ 44% வாக்குகளைப் பெற்று திருச்சி தொகுதியில் முந்துகிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருச்சி தொகுதியில் இந்த முறை துரை வைகோவின் தீப்பெட்டியே ஒளிர்கிறது.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-mdmk-candidate-won-at-trichy-and-admk-ammk-placed-next/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.