Jump to content

நேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல்


Recommended Posts

இப்படி இருந்தும் எதற்காக உங்களை அவர்கள் வேலையில் சேர்த்தார்கள் என எண்ணுகிறீர்கள்? குறிப்பாக அந்த வெற்றிக்கான காரணங்கள் என்ன?

நீங்கள் உங்களை எப்படிக் காண்பிக்கிறீர்கள் என்பதில் பாதி தங்கியிருக்கிறது என நினைக்கிறேன்.. :unsure:

எல்லாம் தெரிந்த ஒருத்தனை வேலைக்கு எடுக்க வேண்டுமானால் தெரிந்தவர் எல்லோரும் ஓய்வு பெற்றவுடன் அந்த வேலையைச் செய்ய ஆளிராது. ஆக, வேலை தெரியாத ஆட்களையும் நிறுவனங்கள் வேலைக்கு எடுத்தாக வேண்டும்.. :rolleyes:

அவர்கள் எதிர்பார்ப்பது, என்னால் செய்யமுடியும் என்கிற உங்கள் உறுதியான வார்த்தைகளை.. அதற்காக ஓவர் பில்டப் குடுக்கக் கூடாது.. அதை நிருபிப்பதற்கு இதற்குமுன் எவ்வாறான சவால்கள் எழுந்தன.. அதை எப்படி சமாளித்தோம் என்று கூறி அவர்களின் கருத்தைக் கவரலாம்..

அந்த நேரத்தில் அப்படிக் கூறுவதற்கு என்னிடம் எதுவும் பெரிதாக இல்லை.. ஆனால் நான் செய்த புரொஜெக்டில் வடிவமைப்பு வேலை முழுவதையும் நானே செய்தேன்.. ஒரு வகுப்புத்தோழர் அறவே பங்கெடுக்கவில்லை (ஏதோ மண்டைப் பிழைமாதிரி வந்து ஊருக்குப் போய்விட்டார்..) மற்றையவர் பேராசிரியருடன் கலந்துரையாடுவது, பேப்பர் வேலைகள் செய்தார்.. அதைச் சொல்லி சமாளித்தேன்..

அதுமட்டுமில்லாமல், எனது சுயவேலை அனுபவத்தையும் சொல்லியிருந்தேன். பிறகு கேள்விப்பட்டேன் எனது முதல்தர கல்வித் தகைமை உதவியதாக.. அதுபோல அந்த நிறுவனத்தில் ஏற்கனவே ஒரு தமிழகத்தவர் வேலை செய்துகொண்டிருந்தார். அவர் எனது கல்லூரியின் தகைமையை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.. இப்படிப் பல காரணங்கள்..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 346
  • Created
  • Last Reply

வேலை கிடைப்பதில், நேர்முகப்பரீட்சையில், என்னென்ன தவறுகளை நீங்கள் செய்யவில்லை?

இங்கே சொல்லப்படும் 'கண்ணும் கண்ணும் கலப்பது' (eye contact) அங்கு முக்கியமாக இருந்ததா?

இங்கு பொதுவாக உறுதிப்படுத்தல் (reference check) செய்வார்கள், செய்தார்களா? ஏன் செய்யவில்லை?

Link to comment
Share on other sites

வேலை கிடைப்பதில், நேர்முகப்பரீட்சையில், என்னென்ன தவறுகளை நீங்கள் செய்யவில்லை?

இங்கே சொல்லப்படும் 'கண்ணும் கண்ணும் கலப்பது' (eye contact) அங்கு முக்கியமாக இருந்ததா?

இங்கு பொதுவாக உறுதிப்படுத்தல் (reference check) செய்வார்கள், செய்தார்களா? ஏன் செய்யவில்லை?

கண்ணும் கண்ணும் பார்ப்பது என்பதை நான் இன்றுதான் அறிகிறேன்.. :unsure:

நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை நீங்களே நம்பவேண்டும்.. அது உங்கள் உடல்மொழியில் (Body Language) வெளிப்படும்.. :rolleyes:

முதலிலேயே குறிப்பிட்டிருந்தேன்.. எனக்கு Microsoft office, AutoCad தெரியும் என்று Resume இல்போட்டிருந்ததாக.. ஆனால் அவற்றில் எனக்கு ஆற்றல் இருந்திருக்கவில்லை.. :D

ஆனால் என்னை நானே சமாதானம் (சப்பைக்கட்டு :D ) செய்து அதை ஒரு பொய் இல்லை என்பதுமாதிரி நம்பிக் கொண்டேன்.. எப்படி?

Microsoft word, Excel.. இரண்டையும் நண்பர்களின் வீட்டில் ஓரளவு பரீட்சயப் படுத்தி வைத்திருந்தேன்.. ஆக அது தெரியும்.. :D எவ்வளவு தெரியும் என்பதுதான் கேள்விக்குறி.. :lol:

கல்லூரியில் AutoCad இல் இரண்டுதடவை தடவியிருக்கிறேன்.. :D ஆக அதுவும் எனக்கு "தெரியும்" :D. ஆனால் எந்த அளவில் என்பதுதான் கேள்வி.. :lol:

ஆக, இந்த இரு விடயங்களையும் நான் முதலில் நம்புவேன்.. எவ்வளவு என்று கேட்டால் பெரிதாக இல்லை என்று உண்மையைச் சொல்வேன்.. அதனால் உடல்மொழி பாதிக்கப் படாது.. :rolleyes:

Link to comment
Share on other sites

.

என்ன துறை என்பதையும் பொறுத்தது அகூதா. சிலவற்றிற்கு inter personnel skills முக்கியம். சிலவற்றிற்கு tech skills முக்கியம்.

finance, sales , management என்பவற்றில் நிறைய people skill எதிர்பார்ப்பார்கள்.

Link to comment
Share on other sites

மற்றையது சிங்கப்பூரில் Reference Check என்பது இல்லை.. உங்கள் கல்விச்சான்றிதழ், அனுபவச் சான்றிதழ் மற்றும் இன்னபிற சான்றுகளையும் பரிசோதித்துவிட்டுத்தான் வேலை தருவார்கள்..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் இசை

Link to comment
Share on other sites

நேர்முகத் தேர்வுக்கள் பற்றித் தெரியாத சனமும் இங்கை இருக்கா. ஆண்டவா................... :lol:

Link to comment
Share on other sites

நேர்முகத் தேர்வுக்கள் பற்றித் தெரியாத சனமும் இங்கை இருக்கா. ஆண்டவா................... :lol:

உங்களின் அனுபவங்களையும் எடுத்து விடுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேர்முகத் தேர்வுக்கள் பற்றித் தெரியாத சனமும் இங்கை இருக்கா. ஆண்டவா................... :lol:

ஆமா தெரியாது.

அதை நாம் தெரிந்து கொள்வதில் தங்களுக்கு என் ன வியப்பு? :( :( :(

Link to comment
Share on other sites

சுமார் எட்டு வருசத்திற்கு முன்னர் பிரபல இரவு விடுதியான HAVANA CLUB வேலை செய்து கொண்டிருந்தேன் அப்பொழுது எனது மகளும் பிறந்திருந்த நேரம் தொடந்தும் இரவு விடுதியில் வேலை செய்து கொண்டிருக்க முடியாது என்று தீர்மானித்திருந்தேன் காரணம் இரவு 6 மணிக்கு வேலை தொடங்கினால் மறுநாள் காலை 5 மணிக்குத்தான் வேலை முடியும் அது மட்டுமல்ல அதி உயர் நாகரீகம் என்கிற அத்தனை விடயங்களும் நடந்தேறும் இடம் அரைகுறை ஆடைகளும் ஆடை அவிழ்ப்பு நடனங்களும் நடக்கும் இடம். எனவே அவை தனிப்பட்ட வாழ்க்கையும் பாதிக்கும் என்பதால் வேலையை மாற்ற திட்டமிட்டு பத்திரிகை விழம்பரமும் கொடுத்து விட்டு அதோடு நான் வேலை செய்யும் விடுதிக்கு பெரிய முதலாளிகள் பணக்காரர்கள் எல்லாரும் வந்து போவதால் தெரிந்தவர்களிடமும் வேலை தேடுவதாக சொல்லி வைத்திருந்தேன்

அப்படித்தான் விடுதிக்கு வந்து போகும் ஒரு உணவு விடுதியின் முதலாளி பெண் ஒருவர் 55 வயதுகள் இருக்கும் தன்னுடைய உணவு விடுதிக்கு நடத்துனர் ஒருவர் தேவை தன்னை வந்து பார்க்க சொல்லியிருந்தார். அவர் ஏற்கனவே பழக்கமானவர் என்பதால் சாதாரணமாக என்னுடைய பயோடேட்டாவை மட்டும் தயார்பண்ணி எடுத்துக்கொண்டு போயிருந்தேன்.

அவர் என்னை நேர்முக தேர்விற்கு வரச்சொன்ன இடம் அவரது உணவு விடுதிக்கல்ல அவரது வீட்டிற்கு. என்னை வரவேற்றவர் கேள்விகளை தொடங்கினார்..

நீதான் உணவு விடுதியை பொறுப்பாக நடத்தவேண்டும் அதாவது ஒரு பணியாள் இல்லாவிட்டாலும் அந்த இடத்தை உடனடியாக நீதான் நிரப்ப வேண்டும்.

உனக்கு பிட்சா போடத் தெரியுமா??

ஒரு தடைவை பார்த்தால் செய்துவிடுவேன்.

சாண்விச் செய்ய வருமா??

ஒரு தடைவை பார்தால் செய்து விடுவேன்

உணவு பரிமாறத் தெரியுமா??

ஒரு தடைவை செய்து பார்த்தால் அடுத்த டைவை செய்து விடுவேன்.

என்னை எத்தனை தடைவை பார்த்திருக்கிறாய்

பலதடைவைகள்

அப்பொழுது ஏன் இன்னமும் எதுவுவே செய்யவில்லை???

பி.கு ..எனக்கு அந்த வேலை கிடைத்து விட்டிருந்தது. <_< <_<

Link to comment
Share on other sites

இசை தொடருங்கள்

547112_262920013801426_100002502872915_563735_161252234_n.jpg

Link to comment
Share on other sites

நன்றிகள் சாத்திரி அண்ணா உங்கள் அனுபவக் குறிப்பிற்கு.. :D தெரியாது என்று சொன்னாலும் வேலை கிடைக்கும் சந்தர்ப்பங்கள் உண்டு என்பதற்கு உங்கள் அனுபவம் ஒரு சான்று. உடல்மொழியும், Presentation உன் முக்கியம் என்பதை உணர்த்தியிருக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

பாகம் 12: வேலை கிடைத்தால் மட்டும் போதுமா?

திங்கட்கிழமை முதல்நாள் வேலை. எப்படியும் ஒரு கருணைக்காலம் (Grace Period) இருக்கும் என்று மனம் சொன்னது. ஆனால் அங்கு எவ்வாறு வேலை நடைபெறுகிறது என்பதில் எனக்கு ஒரு ஞானமும் இல்லை. :rolleyes:

தொடக்க நாளில் மரியாதை பரவாயில்லை. எல்லோருடனும் கதைப்பது; மதிய உணவு என்று நேரம் போனது. அங்கே இரண்டு மென்பொருட்களை உபயோகித்தார்கள். பஞ்சைத் தவிர வேறு மென்பொருட்களை நான் அப்போது அறிந்திருக்கவில்லை. :lol: அந்த மென்பொருள் உபயோகிப்பதற்கான இரு பெரிய புத்தகங்களைக் கொடுத்த அதைப் படித்துப் பரீட்சயப் படுத்தும்படி கேட்டிருந்தார்கள். unsure.gif

நானும் வாசிக்கிறேன்.. வாசிக்கிறேன்.. நித்திரைதான் வருது.. கணினியில் சென்று பயிற்சி செய்யலாம் என்றால் கணினியை இயக்குவதற்கே முதலில் எனக்குப் பயிற்சி தேவையாக இருந்தது. :D அங்கிருந்தவர்களிடம் கேட்டு ஒரு மாதிரி பரீட்சயப்படுத்திக் கொண்டிருந்தேன்.

அங்கே மென்பொருளுக்கான லைசென்ஸ் குறைவாக இருந்ததால், அந்தக் கணினிகள் பொதுவாக வைக்கப்பட்டிருக்கும். ஏற்கனவே நான்கு வடிவமைப்பாளர்கள் இருந்தார்கள். ஆனால் மூன்று கணினிகள்தான். இதில் நான் எங்கேபோய் பயிற்சி செய்வது. சிதம்பரசக்கரத்தைப் பேய்பார்த்த கதைதான்.

ஒரு இரண்டு கிழமைகள் கடந்திருக்கும்.. :unsure: அங்கிருந்த தொழில்நுட்ப மேலாளருக்கு என்னில் குறைபாடுகள் தெரிய ஆரம்பித்துவிட்டது. என்னிடம் இரண்டு பெரிய வேலைத்திட்டத்தைக் கொடுத்துவிட்டார். அதாவது இதைச் செய்து காட்டுங்கள்.. இல்லாவிட்டால் வீட்டுக்கு அனுப்புவோம் என்பது போன்ற சமிக்கை. :unsure:

முதலாவது வேலைத்திட்டம் ஒரு நான்கு அடுக்குகள் கொண்ட தொழிற்சாலை. கனதியான பாரங்கள் சுமக்குமாறு அதன் தளம் வடிவமைக்கப்பட வேண்டும். அதற்குரிய ஒப்பந்தத்தொகை, பொருட்களின் அளவுகள் ஏற்கனவே நிர்ணயமாகிவிட்டது. அந்தத் தொகைக்குள் வடிவமைப்பை முடிக்க வேண்டும். :unsure:

இரண்டாவது வேலைத்திட்டம், ஏற்கனவே இருக்கும் நிலக்கீழ் சுரங்கப் பாதை (subway அல்லது tube அல்லது Mass Rail Transit) யின் மேலாக நீரைக் காவிச்செல்லும் கொங்கிரீட்டிலான அமைப்பு. அதன் பாரம் சுரங்கத்தின் மேல் இறங்காதவாறு வடிவமைக்க வேண்டும்.இதற்குமேலாக நிலமட்டத்தில் பெருந்தெருவும் இருக்கிறது. அதன் பாரத்தையும் இந்த நீர்க்காவி சமாளிக்க வேண்டும். இதுதான் என்னுடைய இரண்டாவது புரொஜெக்ட். :D கணினியையே தடவிக்கொண்டிருந்த எனக்கு அது தேவைதான்.. :lol:

நான் இரண்டாம் மாதத்தில் இந்த இரண்டு வேலைத்திட்டங்களையும் முடித்துவிடுவேன் என எதிர்பார்த்தார்கள். ஆனால் மூன்று மாதங்கள் ஆகியும் என்னால் முடிக்க முடியவில்லை. ஏதாவது பிழை சொல்லிக்கொண்டே இருந்தார்கள். :unsure:

மூன்றுமாதங்கள் அவதானிப்புக் காலம் (Probationary period). என்னை வேலையில் இருந்து நீக்குவது குறித்து அந்த தமிழகத்து ஊழியருடன் என் மேலாளர் பேசிக்கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. :unsure:

(தொடரும்.)

Link to comment
Share on other sites

பாகம் 13: முயற்சி திருவினை ஆக்கும்.

தமிழகத்து நண்பர் எப்படியோ பேசி ஒருவாறு நிகழவிருந்த வரலாற்றுத் தவறைத் தடுத்துவிட்டார்..! :D நான்கு மாதங்கள் பார்ப்பதென முடிவெடுத்திருக்கிறார்கள். இது பின்னாளில் எனக்குத் தெரியவந்தது. இத்தருணத்தில் அந்த நண்பருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். :rolleyes:

இது சரிவராது என்று எனக்கு விளங்க ஆரம்பித்தது. ஐந்து மணிக்கு வேலை முடியும் என்றால் ஏழுமணிவரை நின்று வேலையைக் கற்க முயற்சி செய்தேன்..! :unsure: ஏட்டுக்கல்வி என்பது ஒரு அளவுவரைதான். உண்மையான வேலை என்பது வேறுபல நுணுக்கங்களைக் கொண்டது. இன்று நான் ஒரு நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அன்று அவர்கள் என்னை நீச்சல்குளத்தின் ஆழமான பகுதியில் தள்ளிவிட்டதுதான் காரணம். :rolleyes:

அங்கிருந்த புத்தகங்களைப் படித்து மென்பொருளில் இருந்த குறைபாடுகளைக் கண்டுபிடித்து ஒரு நிலைமைக்கு வர ஒரு ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. நாலாவது மாதத்தின்பின் என் செயற்பாடுகளில் தென்பட்ட முன்னேற்றங்களை அடுத்து என்னை நிரந்தரமாக்கி விட்டார்கள். :D

அந்தக் காலகட்டத்தில் எனக்கு ஏற்பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. குதிரைப் பந்தயத்தில் நொண்டிக்குதிரைபோல் நான் ஓடிக்கொண்டிருந்தேன். இடையில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இலங்கைக்குத் திரும்பிவிடலாமா என்றும் யோசித்ததுண்டு. :rolleyes:

பிற்பாடு ஒரு முடிவுக்கு வந்தேன். இந்த நிறுவனத்தில் இருப்பவர்களுக்கு நான் யார் என்பதை தெரியப்படுத்த வேண்டும். என்னை வேண்டாம் என்றவர்கள் போகாதே என்று தடுக்க வேண்டும். இதுதான் லட்சியம். :rolleyes:

ஒரு வருடம் கழிகின்றது. ஓரளவு சூட்சுமங்களைப் புரிந்துகொண்டுவிட்டேன். வேலைக்குப் பாதிப்பில்லை. பகுதிநேரமாக முதுகலைப் பட்டம் பெறுவது அப்போது நடந்துகொண்டிருந்தது. நானும் எனது நிறுவனத்தில் கேட்டுப் பார்த்தேன். ஏற்கனவே ஒரு சீனப் பெண் அந்த அனுமதியைப் பெற்றுவிட்டதாகவும் இரண்டுபேரை அனுப்ப இயலாது என்றும் சொல்லிவிட்டார்கள். கறள் நம்பர் 2. :D

இரண்டு வருடங்கள் கழிந்துவிட்டன. நான் இப்போது தேர்ந்துவிட்டேன். அப்போது பொருளாதார மந்தநிலை நிலவியது. எங்கள் நிறுவனத்தில் சொல்லிக்கொள்ளும்படி வேலையில்லை. ஆனால் மில்லியன் டொலர்கள் பெறுமானமுள்ள ஒப்பந்தங்கள் எப்படியோ என்னால் பெற்றுவிடக்கூடியதாக இருந்தது. வடிவமைப்பில் நெளிவு சுளிவுகளை அறிந்து சிக்கனமான தொகையைவேலைத்திட்டங்களுக்கு சமர்ப்பிப்பேன். அதே தொகைக்குள் திட்டங்களையும் முடிப்பேன். மேலாளர்களுக்கு என்மீது நல்ல மதிப்பு வந்துவிட்டது. அடிக்கடி பல்லைக் காட்டுவார்கள். :D

அச்சமயத்தில் அங்கு வேலைபார்த்துக்கொண்டிருந்த ஒரு சீனியர் வடிவமைப்பாளருக்கும் நிறுவனத்திற்கும் பிரச்சினை வந்துவிட்டது. அவரால் வேலைகள் எடுத்துத்தர முடியவில்லை. அவரை நிறுவனத்தை விட்டு அனுப்பிவிட்டார்கள். அவர் இடத்திற்கு என்னை சீனியராக தரம் உயர்த்தினார்கள்..! கட்டடங்கள், பாலங்கள் என்று பல விடயங்களைக் கற்றுத் தேர்ந்தேன்.

(தொடரும்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எதோ எனக்கு சம்பந்தம இல்லாத பகுதி என்டு நினைத்து இதுக்குள்ள வராமல் இருந்துட்டன்.வந்து பாத்தால் இசையின எழுத்து நடையில் மயங்கி ஒரே மூச்சில் எல்லாத்தையும் வாசித்து முடித்து விட்டேன். அது சரி அந்த டாவுக்கு என்ன நடந்தது. ஒரு சின்ன ஆர்வம்தான். :lol:

Link to comment
Share on other sites

கருத்துக்களுக்கு நன்றிகள் அபராஜிதன், சஜீவன். :D

டாவு மேற்றர் என்னெண்டால் :unsure: .. சிங்கப்பூர் போய் இரண்டு வருடம் கழித்து என்ன நடந்தது என்று பாருங்கோ.. :unsure:

"

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயய்யோ இப்படியா நடந்திச்சு.....ரொம்பப் பாவமா இருக்கு :D :D :lol:

Link to comment
Share on other sites

:D :D :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை கேட்கிறேன் என்று கோபப்படக்கூடாது...இப்படி அழுதழுது கட்டி பிறகு எப்படி இப்போது ஒரு பொண்ணுக்கு அப்பாவாக?..... வழியில்லை என்று அழுது ஓய்ஞ்சுபோய் உங்களை நீங்களே தேத்திக்கிட்டீங்களா? :D

Link to comment
Share on other sites

இசை கேட்கிறேன் என்று கோபப்படக்கூடாது...இப்படி அழுதழுது கட்டி பிறகு எப்படி இப்போது ஒரு பொண்ணுக்கு அப்பாவாக?..... வழியில்லை என்று அழுது ஓய்ஞ்சுபோய் உங்களை நீங்களே தேத்திக்கிட்டீங்களா? :D

சீ.. அது சும்மா பகிடிக்கு.. :D உண்மையில் கந்தர்வ மணம் செய்தேன்..! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

கருத்துக்களுக்கு நன்றிகள் அபராஜிதன், சஜீவன். :D

டாவு மேற்றர் என்னெண்டால் :unsure: .. சிங்கப்பூர் போய் இரண்டு வருடம் கழித்து என்ன நடந்தது என்று பாருங்கோ.. :unsure:

"

:lol: :lol: :lol:

இசை இரண்டு கையாலும் தலையை சொறியும் காட்சியை கற்பனை செய்து பார்த்த போது...

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

பாகம் 13: முயற்சி திருவினை ஆக்கும்.

அங்கிருந்த புத்தகங்களைப் படித்து மென்பொருளில் இருந்த குறைபாடுகளைக் கண்டுபிடித்து ஒரு நிலைமைக்கு வர ஒரு ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. நாலாவது மாதத்தின்பின் என் செயற்பாடுகளில் தென்பட்ட முன்னேற்றங்களை அடுத்து என்னை நிரந்தரமாக்கி விட்டார்கள். :D

வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப உலகில் பல்கலைக்கழகங்களில் கற்கவேண்டியது : 'எவ்வாறு புத்தகங்களை இல்லை கணனியில் விடயங்களை வேலைக்கு ஏற்றவாறு அறியக்கூடிய இயலுமை'.

Link to comment
Share on other sites

நீங்கள் அப்போது பயன்படுத்திய மென்பொருள்களின் பெயர்களையும் இப்போது பயன் படுத்தும் மென்பொருள்களின் பெயர்களையும்

எழுதலாம் எண்டால் எழுதுங்க..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.