Jump to content

வன்னிக் காடுகளில் துலங்கும் எண்ணச் சிதறல்கள்!


Recommended Posts

மல்லாவி மத்திய கல்லூரியின் மயில்வாகனம் மண்டபம் அரங்கு நிறைந்த பார்வையாளர்களால் நிரம்பியிருந்தது. கண்களில் நீர் சொரிய உணர்ச்சிப் பெருக்கோடு மக்கள் குழுமியிருந்தனர். தன் மன உணர்வுகள் யாவற்றையும் ஒன்று திரட்டி விடுதலை வீரர்களின் பெருமையினையும், தியாகத்தினையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான் சுடரவன்.

kannum-kannum+01.jpg

"மானத்தின் திருநாள் கார்த்திகையே! மாவீரத்தின் பெரு நாள் கார்த்திகையே! கார்த்திகை மாதம் கறுப்பு. இந்த கார்த்திகை மாதம் நெருப்பு! கண்ணுக்குள்ளே வைத்துக் காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்! அந்த புண்ணியர் நெஞ்சிலே பூத்ததோர் கனவினை எண்ணத்திலே வளர்த்தோம்!" என மாவீரர் பெருமை சொல்லும் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவி வரிகளை தன் சிறப்புரைக்கு வலுச் சேர்க்கும் வகையில் உள்ளடக்கிப் பேசிக் கொண்டிருந்த சுடரவனின் கண்களின் பார்வையானது நெஞ்சிலே கொதித்துக் கொண்டிருந்த தீப்பிளம்பிற்குச் சத்தமிடாது விடை கொடுத்தவாறு ஓரிடத்தில் போய் நிலை கொண்டது.

குவியப் புள்ளிகளை ஒன்று திரட்டி கார் மேகக் குழல் வண்ணம் கொண்ட கண் இமைகளின் பார்வைப் புலனிற்கு வேகம் ஊட்டி பிருந்தாவின் மை விழியில் போய் சுடரவனின் மெய் விழிகள் இரண்டும் முட்டி மோதின. தன் ஆசை மச்சாளை இன்றைக்கு இவ் இடத்தில் சந்திப்பேன் என கனவிலும் கூட நினைக்காதவனாகத் தன் பார்வைப் புலன்களினூடே சொற்களைத் தொலைத்துத் தன் பேச்சினை முடித்தான்.மாவீரர்களின் பெற்றோர்களது மதிப்பளிப்பு நிகழ்வு நிறைவு பெற்றதும் ஓடோடிச் சென்று பிருந்தாவின் அருகிலே நிற்கலானான். அவள் உள்ளத்தின் உணர்வைப் புரிந்து கொண்டவனாக; "என்னை மன்னித்துக் கொள்ளும் பிருந்தா!" என அக்கம் பக்கம் யாராச்சும் பார்க்கிறார்களா எனப் பார்த்து விட்டு மெல்லிய ஸ்வரத்தில் மென்மையாய் உரைத்தான்.

"ஏன் உங்களுக்கு என் மேல அன்பு இல்லாத காரணத்தினால் தானே என்னையும் மதிக்காது, என் காதலையும் நேசிக்காது என்னிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லாது இயக்கத்திற்கு ஓடிப் போனனீங்க" எனச் சீழ் படிந்த புண்ணை மொய்த்து இரைச்சல் ஒலியெழுப்பும் கொசுப் போல காதினுள் சிணுங்கினாள். "இன்று மாலை லீவில வீட்டிற்கு வருவேன், கண்டிப்பாக உன்னைச் சந்திக்கனும், நிறைய விடயங்கள் பேசனும். கண்டிப்பாக வந்திடு" எனக் கூறிவிட்டு தற்காலிகமாகப் பிருந்தாவிடமிருந்து பிரிந்தான் சுடரவன்.

மாலை நேரம். யானைகள் கூட்டமாக வந்து கொத்தம்பியா குளத்தில் நீர் அருந்தி விட்டுச் ஓசைப் படாமல் மெதுவாகச் செல்லும் நேரம். பாலியாற்றுப் பாலப் பக்கம் ஆள் அரவமற்று கூட்டம் குறையத் தொடங்கும் இளம் மாலைப் பொழுது. இளையவர் - காதலர்கள் என தம் மனம் விட்டு மகிழ்ச்சி பொங்கிடப் பேசி மகிழ்வதற்கேற்ற இனிய பொழுதாய் இயற்கைச் சூழல் இசைந்திருக்கும் வேளையில் சுடரவன் பிருந்தாவின் வருகைக்காய் காத்திருந்தான்."நிலவு வந்து பொழியும் நேரம் நீ வரவில்லை.நான் நீண்ட நேரம் காத்திருந்தேன் பதில் தரவில்லை" எனப் பாடிக் கொண்டிருக்கனும் போல அவனுக்குத் தோன்றியது.

Kaththiruppu+01.jpg

பாடியவாறு இருந்தான். தன் பார்வைப் புலனுக்குள் எங்காவது ஓர் திசையிலிருந்து பிருந்தா ஒட்டிக் கொள்கிறாளா என ஏக்கம் கொண்டு காத்திருந்தான். லுமாலா சைக்கிளின் பெடலில் மெதுவாக கால்களை ஒட்டி வைத்து இறுக்கி மிதித்து, கூந்தலோ காற்றினில் ஆட்டம் காண அவனை நாடி வந்தாள். அழுகையுடன் பேச்சினை ஆரம்பித்தாள். "பிருந்தா ஏன் அழுறீங்க? நான் என்ன வேணுமென்றே செய்தனான்? காலத்தின் கட்டாயம் இப்படி என்னையும் ஓர் போராளியாக ஆக்கி விட்டது. உங்க கூட முதல் நாள் மாலை பேசி விட்டு உங்களுக்கு சொல்லாது இயக்கத்திற்கு போனது என்னோட தவறு என்று நீங்க நினைச்சால் நான் என்ன செய்ய முடியும்? எனக்கு இப்பவும் உங்கள் மேல காதல் இருக்கு. ஆனாலும் தாயகத்தின் மேலான காதல் குறையவில்லை.

என்றைக்கு ஓர் நாள் எங்களின் நிலம் விடிகிறதோ! அப்போது நானும் மகிழ்ச்சிக் கடலில் உங்களைத் தேடி வந்து என்னோட அம்மா அப்பா - அதான் உங்க அத்தை மாமாவிடம் பேசி உன்னைத் திருமணம் செய்வேன் எனச் சிரித்தபடி சொன்னான். அவளோ வேதனையில் துடித்தாள். வன்னியில் வளம் நிறை சோலைகளில் சுடரவனும் தானும் சுக ராகம் பாடி மகிழ்வதாக கண்ட கனவுகள்; அவனுடன் வாழ்ந்து தன் அன்னை மண்ணில் மகிழ்ந்திருப்பதாக கட்டிய கோட்டைகள் யாவும் உடைந்து விடுமோ என அஞ்சினாள். திடீரென ஓர் சொல் அம்பினைத் தொடுத்தாள். "அப்போ நீங்க சண்டைக்கெல்லாம் போக மாட்டீங்க இல்லே?”

சுடரவன் மனதுக்குள் ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு "நான் சண்டைக்குப் போற ஆளா? உமக்கு என்னோட மூஞ்சியைப் பார்த்துமா தெரியலை?" எனக் கேலி செய்தான். இருவரும் தம் மீது காதல் எனும் நெருப்பு பற்றிக் கொண்டதைப் பகிர்ந்து கொண்டார்கள் போது இருந்த மன நிலையினை மீட்டிப் பார்த்தார்கள். செஞ்சோலைப் படுகொலைகளும், பச்சிளம் குழந்தைகள் உடல் துடி துடித்து இறந்த நிகழ்வுகளும் தன்னையும் போராட்டக் களத்தில் பங்கெடுக்க வேண்டும் எனும் உணர்விற்கு உந்துதலாய் அமைந்ததாக வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டிருந்தான் சுடரவன். பொழுது இருட்டிக் கொண்டிருந்தது. மாலைக் கருக்கல் நீங்கி இரவுப் பொழுதினை இயற்கை அன்னை அணைத்துக் கொள்ளும் நேரத்தில் சுடரவனை விட்டுப் பிரிய மனமில்லாதவளாக இறுதியாக ஒரேயொரு கேள்வியினைச் சின்னக் குழந்தை போன்று செல்லமாய் கேட்டாள் பிருந்தா.

Kannum+kannum.jpg

"அப்போ எப்ப நீங்க மீண்டும் போறீங்க என்று கேட்டாள்?" அவன் மௌனமாய் சில விநாடிகள் தலை தாழ்ந்து விட்டு பதிலுரைத்தான்.

"இப்போது வன்னிக் களமுனை நிலமை உங்களுக்குத் தெரியும் தானே. அவர்கள் எப்போது அழைத்தாலும் தான் போக வேண்டும்" எனக் கூறி கண்களிலிருந்து நீர் துளிகள் எட்டிப் பார்க்கையில் விடை பெற்று வீடு வந்து சேர்ந்தான். அடுத்த சந்திப்பில் சுடரவனைக் கண்டு சுகம் விசாரிக்க முடியலையே எனும் ஏக்கம் மனதை வாட்ட தவித்துக் கொண்டிருந்தாள் பிருந்தா. சில மாதங்களின் பின்னர் ஒரு நாள் காலை புலிகளின் குரல் வானொலியின் செய்தி அறிக்கையினைத் தொடர்ந்து இடம் பெற்ற வீரச் சாவு அறிவித்தலைக் கேட்டு அதிர்ச்சியுற்றாள். வீட்டுக் கதவினைத் தாழ் போட்டு விட்டு விம்மி அழுதாள்.

காலத்தின் கட்டளைக்கு அமைவாக களப் பணியில் தன் காதலன் உயிர் துறந்து விட்டானே எனும் சேதி மனதை வாட்ட கொஞ்ச நாள் வாடிப் போயிருந்தாள். சில தினங்களின் பின் அவளது ஊரான யோகபுரத்திற்குப் பரப்புரைக்காகப் போராளிகள் சிலர் வந்திருந்தார்கள். மக்களோடு மக்களாக அவளும் போய் நின்றாள். அப்போது கவிஞர் புதுவை இரத்தினதுரையின் "தாய் நிலத்தை காதலிக்கும் தளிர்கள் இருக்கும் வரை, பாய் விரித்து எம் தேசம் படுக்காது" எனும் கவிதையினைக் கேட்டும் மனம் இரங்காதவளாக, ஆட்சேர்ப்பிற்காக போராளிகள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் பிரச்சாரத்தினால் கூட ஆட் கொள்ளப்படதாவளாக அவன் நினைவில் மூழ்கியிருந்தாள். சுடரவன் இல்லாத வேளையில் தாய் நிலத்தின் மீது பற்றுக் கொள்ள வேண்டிய காதலோ, நீங்கா இடமாய் நெஞ்சில் நிழலாடும் காதலன் மீது இன்னமும் ஒட்டிக் கொண்டிருந்தது.

நாட்கள் நகர்ந்தன. காலவோட்ட மாற்றத்தில் வன்னி மண் தன் வாசலினுள் நுழைந்த பகை வீரர்களை விருப்பமின்றி வெறுப்புடன் உள் வாங்கிக் கொண்டிருந்தது.பல தடவை புலிகள் ஆட்சேர்ப்பு நிகழ்த்துகையிலும் மௌனமாய் இருந்தவள் தன் பெற்றோரை எறிகணை வீச்சில் பலி கொடுத்த பின்னரும் ஆதரவுக் கரம் நீட்ட யாருமே இல்லாதவளாக தனித்திருந்தாள். போராட்டத்தில் இணைய மனமின்றி இறுமாப்போடு இருந்தாள். புலிகள் வசமிருந்த பிரதேசங்கள் யாவும் இராணுவத்தினர் வசம் வீழ்ச்சியுற்றதைக் கண்ணுற்றுக் கூனிக் குறுகிப் போனாள். மக்களோடு மக்களாக தன்னையும் பாதுகாக்கும் நோக்கில் இராணுவத்தினரின் சொற் கேட்டு இராணுவக் கட்டுப் பாட்டுப் பக்கத்திற்குள் நடந்தாள்.

Srilanka+Final+War.jpg

அவமானம், வெட்கம், கண் முன்னே நிகழ்ந்த அவலங்கள் யாவும் அவன் நினைப்பிற்குப் பதிலாக மனத் திரையில் நிழலாடிக் கொண்டிருக்கையில் தனக்கு அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதைக் கூட அறியாதவளாக நடக்கத் தொடங்கினாள். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் உள்ள அகதி முகாமினுள் செல்வதற்காக மக்களோடு மக்களாக நின்றவளின் அருகே இராணுவ வீரன் ஒருவன் வந்து கொச்சைத் தமிழில் சொன்னான் "ஒயா லக்ஸன நங்கி. ( நீங்க ரொம்ப அழகனா தங்கை) எனச் சொல்லி நேரே போகுமாறு சைகை காட்டினான். பிருந்தா சுற்றிவர கறுப்பு நிறத் துணி கொண்டு (படங்கு) கொண்டு அடைக்கப்பட்ட கூடாரத்தினுள் நுழைந்தாள்.

அவள் மனம் மீண்டும் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் "தாய் நிலத்தை காதலிக்கும் தளிர்கள் இருக்கும் வரை! பாய் விரித்து எம் தேசம் படுக்காது" எனும் வரிகளை அசை போடத் தொடங்கியது. கவிஞர்களும் கவிதைகளும் காலத்தால் அழிவதில்லை!

http://www.thamilnat...-post_3619.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை..மனதை நெருடிய பதிவு...

"தாய் நிலத்தை காதலிக்கும் தளிர்கள் இருக்கும் வரை! பாய் விரித்து எம் தேசம் படுக்காது"

Link to comment
Share on other sites

அருமை..மனதை நெருடிய பதிவு...

"தாய் நிலத்தை காதலிக்கும் தளிர்கள் இருக்கும் வரை! பாய் விரித்து எம் தேசம் படுக்காது"

தங்களின் இனிய கருத்திற்கு நன்றி நண்பரே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சன்ரைசர்ஸ் அணி ப‌ல‌ ஜ‌பிஎல்ல‌ சுத‌ப்பின‌து.................இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகின‌ம்.................வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ருக்கு ஒரு விளையாட்டில் விளையாட‌ வாய்ப்பு கிடைச்ச‌து அதுக்கு பிற‌க்கு கூப்பில‌ உக்க‌ரா வைச்சிட்டின‌ம்...................ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ம‌ற்றும் ஒரு நாள் தொட‌ர் ரெஸ் விளையாட்டி நிலைத்து நின்று ஆட‌க் கூடிய‌ இள‌ம் வீர‌ர்🙏🥰....................................    
    • வ‌ங்கிளாதேஸ்ச‌ சொந்த‌ ம‌ண்ணில் வெல்வ‌து க‌டின‌ம் ஆனால் 20 ஓவ‌ர் தொட‌ரில் இல‌ங்கை வெற்றி ஒரு நாள் தொட‌ரில் வ‌ங்க‌ளாதேஸ் வெற்றி 5நாள் தொட‌ரில் இல‌ங்கை அமோக‌ வெற்றி....................... இப்ப‌ எல்லாம் 5 நாள் விளையாட்டு சீக்கிர‌ம் முடிந்து விடுது  விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிய‌னும் என்றால் ம‌ழை வ‌ந்தால் தான் இல்லையேன் ஏதோ ஒரு அணி வெல்லும் இதே 20வ‌ருட‌த்தை முன்னோக்கி பார்த்தா நிறைய‌ விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடியும்.....................20 ஓவ‌ர் வ‌ந்தாப் பிற‌க்கு ஜ‌ந்து நாள் விளையாட்டை கூட‌ 20ஓவ‌ர் விளையாட்டு போல் அடிச்சு ஆடுகின‌ம்😁.................................
    • சுனில் ந‌ர‌ன் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகிறார்🙏🥰.......................
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் மிஸ்ர‌ர் க‌ட்ட‌த்துரை🙏🥰...........................
    • 😔 ம்ம்ம்ம் குதிரையை குளம் வரை கூட்டிப்போகலாம், நீரை அதுதான் குடிக்க வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.