Jump to content

நாம் கேட்பது வீடல்ல நாடு இதை இந்திய புரிந்து கொள்ளவேண்டும் – காசியானந்தன். (Video in)


Recommended Posts

தேசியத்தலைவர் அவர்களின் நெஞ்சத்தில் இடம்பிடித்தவர் தலைவர் அவர்களால் மரியாதைக்குரியவராக பார்க்கப்படுபவர் பழ.நொடுமாறன் அவர்கள் என்று பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் நூல் வெளியீட்டு நிகழ்வில் உரை நிகழ்த்திய உணர்ச்சி கவிஞர் காசியனந்தன் தெரிவித்துள்ளார்.

பழ. நெடுமாறன் அவர்கள் இந்திரா காந்தி அம்மையார் அவர்களால் அவரது மூத்தமகன் என்று பாராட்டப்பட்டவர்,விடுதலைப்போருடன் தொடர்புடைய ஒரு தலைவி தன்னுடைய மூத்தமகன் என்று அழைத்த பழ.நெடுமாறன் அவர்களால் எழுதப்பட்ட பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் நூல் இன்று வெளியிடப்படுகின்றது இந்திராகாந்தி அம்மையார் இருந்திருந்தால் இன்று தமிழீழம் இருந்திருக்க வாய்ப்புக்கள் உள்ளதை இந்த நூலில் நெடுமாறன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்இந்திராகாந்தி அவர்கள் மறைந்த நேரத்தில் யாழ்ப்பாணத்தில் கறுப்பு கொடியினை பறக்கவிடுவதற்காக இரண்டு விடுதலைப்புலிகள் கொடிக்கம்பத்தில் ஏறியபோது சிங்கள வெறியர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டார்கள் அப்போது யாழ்ப்பாணமக்கள் குமுறி அழுதார்கள் அவ்வாறு இந்திர காந்திஅவர்களின் இழப்பு அன்று தமிழ்மக்கள் மத்தியில் காணப்பட்டது.

இன்று ஜ.நாவின் மனிதஉரிமைக்குழு வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒரு நிறைவான அறிக்கை அல்ல ஆனாலும் அமெரிக்கா உலக அரங்கில் முதல் முதல் தமிழர்களின் அந்த மண்ணில் நிகழ்த நிகழ்வினை குறித்த ஒரு கருத்தினை முதல் முதல்ஓங்கி ஒலித்ததால் அது உலக அரங்கில் தமிழர்களின் போர்முனைக்கு ஒரு தொடக்கமாக எங்கோ கதவை தட்டுகின்ற நிகழ்வாக இருப்பதால் நாங்கள்அதனை வரவேற்கின்றோம் ஆனாலும் அது முழுமையான அறிக்கை அல்லஅதற்கு முன்னர் ஜ.நா அறிக்கை குழு வெளியிட்ட அறிக்கையிலும் இனஅழிப்பு என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை இந்த அறிக்கையிலும் அவ்வாறு இல்லை மனிதஉரிமை மீறல் என்று தான்குறிப்பிட்டுள்ளார்கள் அமெரிக்காவின் இந்த தீர்மானம் ஒருசிறிய தொடக்கம் போல தமிழர்களுக்கு பட்டாலும் அதில் பெரிய குறைபாடுகள் காணப்படுகின்றன.எதிர்காலத்தில் அமெரிக்கா தன்னுடைய இந்த கருத்தினை மாற்றிக்கொள்ளும் காலம் வரும் இந்த தீர்மானத்தில் பாரிய கொடுமை காணப்படுகின்றது இலங்கைத்தீவில் வடக்குகிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயகம் என்று சொல்லப்படுகின்றது தமிழர்வாழும் நிலப்பரப்பு ஒருதாயகம் அந்த தாயகம் தான் வடக்கு கிழக்கு ஆனால் அமெரிக்காவின் இந்த அறிக்கையில் வடக்கு என்று சுருக்கி சொல்லப்பட்டிருக்கின்றது இது ஒரு பாரிய கொடுமை றாஜீவ்காந்தி உடன்படிக்கையில்கூட தமிழர்தாயகம் என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது.

பிரபாகரன் ஒரு ஈடுஇணையற்ற தலைவன் என்மீதுஅவர் வைத்திருப்பது பாசம் ஆனால் நெடுமாறன் அவர்கள்மீது வைத்திருப்பது மரியாதை தலைவர் அவர்கள் நெஞ்சத்தில் நெடுமாறன் அவர்கள் இடம்பிடித்திருக்கின்றார் என்பது எனக்கு நீண்ட நெடுங்காலமாக தெரியும்,நெடுமாறன் அவர்கள் மீது தலைவர் அவர்கள் மிகப்பெரிய உயர்வான எண்ணத்தை கொண்டுள்ளார். ஆகவே தமிழர்களது வரலாறு படைத்தவர் எங்கள் தலைவர் அவர்கள் துப்பாக்கி ஏந்திய பெண் என்ற வரலாற்றை பிரபாகரன் அவர்கள்தான் படைத்தார் அது தமிழர்களின் வரலாற்றில் பெரிய வரலாறு சேரன்,சோழன்,பாண்டியனிடம் படைகள் இருந்தான ஆனால் தமிழருக்கு வான்படையினை தலைவர் அவர்கள்தான் படைத்தார்அது வரலாறு அதனை யாரும் மறக்கமுடியாது,உலகவிடுதலையாளரின் வரலாற்றில் முதல் முதல் போராளியின் கழுத்தில் நஞ்சை கட்டியவர் தலைவர்அவர்கள் ஒருபோராளியின் சாவுக்கு அஞ்சாக அந்த உறுதியினை நிலைநாட்டியவர் எங்கள் தலைவர் அவர்கள்,

உலக விடுதலைப்போராளிகளுடைய வரலாற்றில் ஒவ்வொரு நாடுகளின் உதவியுடன் தான் களத்தில் நின்றார்கள் அதனை இந்த நுலில் மிகச்சிறப்பாக சொல்லுகின்றார்.வியட்நாம் போராளிகள் களத்தில் நின்றார்கள் என்றால் சீனா,ரஸ்யநாடுகளின் ஆதரவுடன் தான் களத்தில் நின்றார்கள்,பாலஸ்தீனம் களத்தில் நின்றது என்றால் அதனை சுற்றிஉள்ள அரபுநாடுகளின் உதவியுடன் தான் அவர்கள் களத்தில் நின்றார்கள்,நேதாஜி களத்தில் இறங்கினார் என்றால் அதற்கு ஜெர்மனி இத்தாலி போன்ற நாடுகளின் உதவி இருந்தது, ஆனால் எந்த நாட்டின் எந்த அரசின் உதவி இல்லை என்றாலும் விடுதலைப்போராளி தன்னுடைய விடுதலை உணர்வினை கொச்சைப்படுத்த மாட்டான் தனித்து களத்தில் நின்று விடுதலைப்போராட்ட வரலாற்றினை நிகழ்த்திகாட்டிய ஈடு இணையற்ற போராளியாக தலைவர் அவர்களை பாக்கின்றோனம் என்றும் எதற்கும் வளைந்ததில்லை அப்படி ஒரு தலைவர் அப்படிப்பட்ட அற்புதமான தலைவர் அவர்களை பற்றிய பல செய்திகளை இந்த நூலில் நெடுமாறன் அவர்கள் எழுதியுள்ளார்உலகில் உள்ள அத்தனை விடுதலையாளர்களுக்கும் வழிகாட்டியாக இந்த நூல் இருக்கின்றது இது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இந்த கருத்துக்கள் உலகம் எங்கும் பரவவேண்டும்,தலைவர் அவர்கள் ஆயுதத்தினை மட்டும் வைத்திருந்தவர் அல்ல அவரிடம் அறிவு,ஆற்றல், கருத்துவலிமை,அவர் உருவாக்கிய போராளிகளிடமும் அதே கருத்து வலிமைகொண்ட போராளிகளாக உருவாக்கும் திறமையினை கொண்டவர் எங்கள் தலைவர் இப்படிப்பட்ட விடுதலைப்பேராட்டம் தொடர்பான புதிய புதிய தகவல்களை கருத்துக்களை கொண்ட நூலாக இந்த நூல் காணப்படுகின்றது.தலைவர் அவர்கள் உண்மையில் பல நிலைகளில் ஈடுஇணையற்ற இயக்கத்தை உருவாக்கினார் அவர் படைத்த வரலாறு யாரும் படைக்கவில்லை அவர் உருவாக்கிய வீரர்களை போல் உலகத்தில் அந்த வீரர்களுக்கு இணையான வீரர்கள் இல்லை .

தற்போது தமிழர் தாயகத்தில் மிகக்கொடுமையான நிலமை சிங்களக்குடியேற்றம் இன்னும் 10 ஆண்டுகள் தமிழீழத்தில் சிங்கள குடியேற்றம் தொடர்ந்து நிகழுமானால் அதற்கு பிறகு தமிழீழம் என்ற தாயகம் இருக்காது ஆகவேதான் தொடக்கத்தில் இருந்து தாயக கொள்கையினை தலைவர் அவர்கள் வலியுறுத்திவருகின்றார் என்பதை இந்த நூல் எடுத்துக்காட்டுகின்றது கடந்த மூன்று ஆண்டுகளில் சிங்களவர் அடிக்கும் கொலைவெறி கூத்து கொஞ்சநஞ்சமல்ல தலைவர் அவர்கள் ஆயுதத்துடன் களத்தில் நின்ற 2009 வரையான 33 ஆண்டுகள் அதற்கு பிறகு இந்த மூன்று ஆண்டுகள் சிங்களவர்கள் தமிழீழத்தில் போடும் ஆட்டம் கொஞ்சநஞ்சமல்ல சிங்களக்குடியேற்றம் மிக கொடுமையாக தாயக மண்ணில் நடந்தேறிக்கொண்டிருக்கின்றது இங்கு ஜம்பதாயிரம் வீடுகள்கட்டிக்கொடுப்பதாக சொல்கின்றார்கள் நாங்கள் ஈழத்தில் கேட்பது வீடு அல்ல நாடு அதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் நாங்கள் சிங்களவர்களுக்கு எதிராக எந்த கேடும் நினைத்ததில்லை தமிழர்மண்ணைதுலைத்துகட்டுங்கள் என்று சிங்களவர்கள் தான் சொல்கின்றார்கள் இவ்வாறு தான் தற்போதைய ஈழத்தின் நிலமை காணப்படுகின்றது தமிழகத்தில் தமிழகஅரசும் ஈழத்தமிழர் விடயத்தில் துணையாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்

பழ நெடுமாறன் அவர்களின் இந்த நூலினை படித்தால் எதிர்காலத்தில் இந்தியஅரசின் வழிகாட்டிகளாக இருப்பவர்கள் கூட அவர்களிடம் மாற்றம் வருவதற்கு இந்த நூல் பெரியளவில் அமைகிறது அறிவூட்டும் நூலாக இந்தநூல் அமைகிறது சீண்டிப்பாக்கும் நூலாக அல்ல வாசிப்பவர்களை தொட்டுஉலுக்கும் நூலாக காணப்படுகின்றது இந்தநூல் ஒரு அரும்பெரும்நூல் இதுவரை வெளிவந்த ஈழத்தமிழர்களின் வரலாற்று பொறித்த நூலில் இந்த நூல் முதன்மையானது இதனை அனைவரும் வாங்கி படியுங்கள் என்று பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் நூல் வெளியீட்டு நிகழ்வில் தலைமை உரை நிகழ்த்திய உணர்ச்சி கவிஞர் காசியானந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

http://thaaitamil.com/?p=15671

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான புத்தகங்களுக்கு, யாழ் களத்தின் முகப்பில் விளம்பரம் கொடுக்க வேணும்.

Link to comment
Share on other sites

என்ன தான் கூறினாலும் விடுதலைப்புலிகள் அமைப்பில் அன்று தொடக்கம் இன்று வரை இருந்த ஒருவராலே முழுமையான விளக்கங்களுடன் நூல் அமைக்க முடியும்.

மற்றையோர் எழுதும் நூல் நிறைகளை விட குறைகளையே அதிகம் கொண்டிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் கூறினாலும் விடுதலைப்புலிகள் அமைப்பில் அன்று தொடக்கம் இன்று வரை இருந்த ஒருவராலே முழுமையான விளக்கங்களுடன் நூல் அமைக்க முடியும்.

மற்றையோர் எழுதும் நூல் நிறைகளை விட குறைகளையே அதிகம் கொண்டிருக்கும்.

30 வருட போராட்டத்தில்... எத்தனை பரிணாம வளர்ச்சி இருக்கும்.

அதில் ஆரம்பித்தவர் 25 வயதில் ஆரம்பித்தால் இன்று 55 வயதை தாண்டியிருப்பார்.

எதுவும், ஒப்புக் கொள்ளக் கூடிய கதையாக கூறுங்கள்.

Link to comment
Share on other sites

30 வருட போராட்டத்தில்... எத்தனை பரிணாம வளர்ச்சி இருக்கும்.

அதில் ஆரம்பித்தவர் 25 வயதில் ஆரம்பித்தால் இன்று 55 வயதை தாண்டியிருப்பார்.

எதுவும், ஒப்புக் கொள்ளக் கூடிய கதையாக கூறுங்கள்.

55 வயதை தாண்டியவர் இன்னும் உயிருடன் இருப்பின் அவரால் எழுத முடியும், இல்லாவிட்டால் அன்றைய காலகட்டத்தை ஒருவரும் இன்றைய காலகட்டத்தை இன்னொருவரும் எழுதலாம். அல்லது 3 ஆக பிரித்தும் எழுதலாம்.

ஆனால் ஈழப்போராட்டத்தில் பங்கு பற்றியவராலேயே முழுவதும் உண்மைத்தன்மையுடன் எழுத முடியும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தில் இருந்தவர்கள் எழுதுவதைத்தான் தற்போது பார்க்கின்றோமே.............. :( :( :( :(

Link to comment
Share on other sites

போராட்டத்தில் இருந்தவர்கள் எழுதுவதைத்தான் தற்போது பார்க்கின்றோமே.............. :( :( :( :(

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவரை, இன்று வரை அவர்களுக்காக, எம்மக்களுக்காக வாழ்பவரை குறிப்பிடுகிறேன். வேறு அமைப்பில் இருந்தவரையோ/ விரட்டப்பட்டோ அல்லது விட்டிட்டு ஓடி வந்தோ அவர்களுக்கெதிராக எழுதுபவர்களையோ குறிப்பிடவில்லை.

அனைவரும் எழுதட்டும். அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்தவர்களும் அரசியல் அறிஞர்களும் அவற்றிலிருந்து தெரிவு செய்வார்கள் உண்மை புத்தகத்தை. அவை வரலாறை பறைசாற்றும் முக்கிய புத்தகமாக பேணப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்திலேயே... விடுதலைப் புலிகள்....

விமானம் வைத்திருந்தார்கள்,

கடல் படை வைத்திருந்தார்கள்,

அழகிய அரசியல் கட்டமைப்பு வைத்திருந்தார்கள்.

இன்று, அந்த மண்ணில் திடீர், திடிரென புத்த விகாரயை அகற்ற எந்த ஒட்டுக்குழுவுக்கும் திராணி உள்ளதா?

Link to comment
Share on other sites

இப்புத்தகத்தை எழுதிய பழ நெடுமாறன் ஐயா அவர்களும் அப்புத்தகம் பற்றி உரை நிகழ்த்திய காசி ஆனந்தன் ஐயா அவர்களும் எமது போராட்ட வரலாற்றுடனும் தலைவர் அவர்களுடனும் நிறைய தொடர்புடையவர்கள் என்பது தெரியும். எனவே எமக்கு தெரியாத பல விடயங்கள் அப்புத்தகத்தின் மூலம் தெரியவரலாம்.

எனவே அப்புத்தகத்தில் என்ன உள்ளது என வாசித்து அறிந்தபின்பே கருத்து சொல்வது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்புத்தகத்தை எழுதிய பழ நெடுமாறன் ஐயா அவர்களும் அப்புத்தகம் பற்றி உரை நிகழ்த்திய காசி ஆனந்தன் ஐயா அவர்களும் எமது போராட்ட வரலாற்றுடனும் தலைவர் அவர்களுடனும் நிறைய தொடர்புடையவர்கள் என்பது தெரியும். எனவே எமக்கு தெரியாத பல விடயங்கள் அப்புத்தகத்தின் மூலம் தெரியவரலாம்.

எனவே அப்புத்தகத்தில் என்ன உள்ளது என வாசித்து அறிந்தபின்பே கருத்து சொல்வது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

நன்றி.

சேவல் கூவி சூரியன் எழுவதில்லை.

சூரியன் எழும்பும் போது தான்... சேவல் கூவும்.

Link to comment
Share on other sites

இப்புத்தகத்தை எழுதிய பழ நெடுமாறன் ஐயா அவர்களும் அப்புத்தகம் பற்றி உரை நிகழ்த்திய காசி ஆனந்தன் ஐயா அவர்களும் எமது போராட்ட வரலாற்றுடனும் தலைவர் அவர்களுடனும் நிறைய தொடர்புடையவர்கள் என்பது தெரியும். எனவே எமக்கு தெரியாத பல விடயங்கள் அப்புத்தகத்தின் மூலம் தெரியவரலாம்.

எனவே அப்புத்தகத்தில் என்ன உள்ளது என வாசித்து அறிந்தபின்பே கருத்து சொல்வது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

நன்றி.

இது ஓர் முழுமையான புத்தகமாக இருக்காது என்று கூறினேனே தவிர இந்த புத்தக வெளியீட்டை நானும் வரவேற்கிறேன்.

இங்கு பக்கசார்பற்ற, தற்புகழ்ச்சியற்ற கருத்துகளை எதிர்பார்க்கிறோம்....

இதில் வரும் நிறை குறைகளை ஆராய்வதன் மூலம் எதிர்காலத்தில் சிறந்ததொரு புத்தகத்தின் உருவாக்கத்தில் இதன் பங்களிப்பும் இருக்கும் என்று நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

எமது போராட்ட வரலாறுகள் பற்றிய பதிவுகளாக மிகவும் குறைந்தளவு நூல்களே வந்துள்ளன. குறிப்பிடும்படியாக கூறகூடியவை நான் அறிந்தவரை சுதந்திர வேட்கை (The will of freedom), போரும் சமாதானமும் (War and peace - 2004), The politics of dublicity - 2000 போன்றவற்றை கூறலாம்.

இவை தவிர போராளிகளாலும் சில புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன (இவை வரலாற்றின் ஒரு சிறு பகுதியையே கூறுபவையாக இருக்கும்).

பல நீண்ட இடைவெளிக்குப்பின்னர் வெளிவரும் இந்த நூலை நாம் நிச்சயமாக ஊக்குவிக்க வேண்டும். இன்றேல் மிக்க அரிதாக வரும் இவ்வாறான நூல்களும் வெளிவராமலே போய்விடும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி"     "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி தனக்கு தானே நிகரென கூக்குரலிட்டு இருபது இருபத்திமூன்றை எட்டி உதைத்து தன்மை அழகியென எமக்கு காட்டுகிறாள் !"   "அருகே வந்து எம்மை ஆரத்தழுவி தன் இதழால் முத்தம் பகிர்ந்து கருத்த வானில் புத்தாண்டு தொடக்கத்தில் தலை காட்டும் விண்மீண் தானாம் !"   "சற்றும் சலிப்புத்தரா அழகிய கண்ணுடனும் பெருத்த மார்புடனும் நீண்ட கழுத்துடனும் அற்புத ஒளிவீசும் தளிர் மேனியுடனும் . பெட்டி பாம்பாக்கி கண்டவரையும் மயக்குகிறாள் !"   "ஏற்றம் கொண்ட அழகிய பிட்டத்துடனும் பெரிய பட்டை சுற்றிய இடையுடனும் நெற்றி பொட்டும் குளிர் கன்னத்துடனும் பெண்டு வந்து போதை அள்ளிவீசுகிறாள் !"   "தன்தழுவலில் எம் இதயத்தை கவர்ந்து இருபது இருபத்திமூன்றை குறை கூறி பொன்னாய் வாழ்வை மீட்டு தருவேனென்று இறுமாப்புடன் எமக்கு சத்தியம் செய்கிறாள் !"   "என்றென்றும் பெருமையுடன் நிலைத்து வாழ இன்பம் பொங்கி ஒற்றுமை ஓங்க தன் நலமற்ற தலைவர்கள் தந்து இருளை நீக்கி ஒளியைத் தருவாளாம் !"   "மானிடர் செழிக்க மலரும் ஆண்டே நம்பிக்கை விதைத்து பேதம் ஒழித்து பனி விலத்தி துணிவு தந்து எம்மை காத்து அருள் புரியாயோ !"   "கூனிக் குறுகி நொடிந்த தமிழனுக்கு தும்பையும் கயிறாக்கி பிடித்து எழும்ப இனி ஒருதெம்பு அள்ளிக் கொடுவென எம் உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]             
    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.