Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

இன்fஇராரெட் தொழில்நுட்பம்(Infrared Technology):

remotecoi4.jpg

இது நீங்கள் பாவிக்கும் டீவி ரிமோட் கொன்ரோலில் பயன்படுத்தப்படுகின்றது. இதன் சிக்னல் செல்லக்கூடிய தூரம் பொதுவாக 50 அடிகளிற்கு குறைவாகவே அமைகின்றது. ரிமோட்டிற்கு ரிமோட் இந்த சிக்னலின் வீச்சு வித்தியாசப்படும். இங்கு டீவி அல்லது ரேடியோ விற்கும் ரிமோட்டிற்கும் இடையில் நேர்கோட்டில் சிக்னல் செல்லக்கூடியதாக இருக்க வேண்டும். இடையில் சுவர் போன்ற தடுப்புக்கள் இருக்கக்கூடாது. இல்லாவிடின் வேலை செய்யாது.

புளூதூத் தொழில்நுட்பம்(BlueTooth Technology):

bluetoothis7.jpg

இங்கு ரேடியோ சிக்னல் பயன்படுத்தப்படுகின்றது. எனவே இடையில் சுவர் தடுப்பு இருந்தால் கூட வேலை செய்யும். வழமையாக இதன் சிக்னல் வீச்சு எல்லை 30 அடிகளாகும். இதன் மூலம் நாம் பீ.டீ.ஏ(PDA - Personal Digital Assitant), மொபையில் போன், கம்பியூட்டர், வயரற்ற ஹெட்போன் போன்றவற்றுடன் தொடர்பை ஏற்படுத்த முடியும்.

இன்fஇராரெட் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் ஒரு குறிப்பிட்ட ரிமோட்டை ஒரு குறிப்பிட்ட டீவி அல்லது ரேடியோவுக்குத்தான் பயன்படுத்தமுடியும். ஆனால் புளூதூத் தொழில்நுட்பம் உள்ள ஒரு டிவைசை(கருவி/உபகரணம்) புளூதூத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் பல்வேறு டிவைசுகளுடன் தொடர்பை ஏற்படுத்தி பயன்படுத்த முடியும்!

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

1) Alfred Nobel எந்த நாட்டை சேர்ந்தவர்?

2) Alfred Nobel எத்தனையாம் ஆண்டு பிறந்தார்?

3) நோபல் பரிசு வழங்கும் நடைமுறை எந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்து?

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

1) Alfred Nobel எந்த நாட்டை சேர்ந்தவர்?

சுவீடிஸ்(Swedish)

2) Alfred Nobel எத்தனையாம் ஆண்டு பிறந்தார்?

21.10.1833

3) நோபல் பரிசு வழங்கும் நடைமுறை எந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்து?

1895ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது, முதல் 5தும் வழங்கப்பட்டது 1901, ஆறாவது 1969ல் வழங்கப்பட்டது.

சரியா????

Link to comment
Share on other sites

சரியான விடைகள் (தெளிவான பதில் பாராட்டுக்கள்)

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

1) தொலைக்காட்சி பெட்டியை கண்டுபிடித்தவர் யார்?

2) எத்தனையாம் ஆண்டு கண்டுபிடித்தார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) தொலைக்காட்சி பெட்டியை கண்டுபிடித்தவர் யார்?

Paul Nipkow

2) எத்தனையாம் ஆண்டு கண்டுபிடித்தார்?

1886

Link to comment
Share on other sites

1) தொலைக்காட்சியை கண்டுபிடித்தவர்: John Logie Baird.

2) கண்டுபிடித்த ஆண்டு: 26 - January - 1926

Note: Paul Nipkow என்பவர் தொலைக்காட்சியை உருவாக்குவதற்கு தேவையான அடிப்படை தொழில் நுட்பத்தை கண்டுபிடித்தார் ஆனால் அவரால் தொலைக்காட்சி உருவாக்கப்படவில்லை.

மேலதிக விபரங்களுக்கு:

http://en.wikipedia.org/wiki/John_Logie_Baird

http://en.wikipedia.org/wiki/Paul_Nipkow

http://en.wikipedia.org/wiki/Television#History

Link to comment
Share on other sites

அக்கா, X - ray என்பதற்கு மறுபெயர் தான் Roentgen ray. Roentgen என்பவர் X - ray இனை கண்டுபிடித்த காரணத்தால் X - ray இனை Roentgen ray என்று ஆரம்பத்தில் கூறிவந்தார்கள். எனது கேள்வி "X" என்பதற்கு அர்த்தம் என்ன என்பது தான். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

X-Ray கண்டுபிடித்த Conrad Roentgen க்கு கதிர்களைப்பற்றி எதுவும் தெரியாததால் Unknown அதை என்று குறிப்பதற்காக X ஐ பயன்படுத்தினார் என்று ஒரு இணையத்தளத்திலிருக்கு.சரியோ விடை?

Link to comment
Share on other sites

நாடுகளைச் சுற்றி

உலகத்தைப் பற்றிய பொதுவான பொருளாதார நடைமுறைகள் என்ன? உலகளாவிய அமைப்புகளில் உள்ள நாடுகள் எவை? அந்த அமைப்புகள் எந்த வகையில் உலக அரங்கில் பெயர் பெற்று திகழ்கின்றன என்ற விவரங்களை போட்டித் தேர்விற்குச் செல்லும் வேலை தேடும் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். நேர்காணலிலும் இந்த அமைப்புகள் சார்ந்த வினாக்கள் கேட்கப்படுகின்றன.

அந்த முறையில் பின்வரும் அமைப்புகள் எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதைப் பார்ப்போம்.

G-7 உலகத்தில் செல்வச் செழிப்புமிக்க முன்னணி நாடுகள் தங்களுக்குள் ஓர் அமைப்பை ஏற்படுத்திக் கொண்டன. அந்த அமைப்பு தற்போது ஜி8 என பெயர் மாற்றம் பெற்றுள்ளது.

G-8 உலகிலேயே பணக்கார நாடுகளின் அமைப்பாக ஜி8 திகழ்கிறது. ஜி7 ஆக 1997 வரை இருந்த போது இதில் உறுப்பினராக இருந்த நாடுகள் அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஜப்பான், ஜெர்மனி, பிரான்°, இங்கிலாந்து, இத்தாலி, கனடா ஆகியவை.

1997 ஜூன் 21 அன்று அமெரிக்காவின் டென்வர் நகரத்தில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் ரஷ்யா இதில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அதற்கு பிறகுதான் அதன் பெயர் ஜி8 என்று மாற்றியமைக்கப்பட்டது.

உலக நாடுகளின் பொருளியல் சார்ந்த பல்வேறு விஷயங்களையும், அரசியல் சிக்கல்களையும் இந்த குழு ஒவ்வோர் ஆண்டும் ஓரிடத்தில் கூடி விவாதிக்கும்.

இதற்கு முந்திய ஜி8 உச்சிமாநாடு ரஷ்யாவில் பீட்டர்°பெர்க் நகரில் 2006 ஜூலை 15-17 வரை நடைபெற்றது. இதில் உலகின் பல்வேறு நாடுகளில் ஏற்பட்டு வரும் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்கள் ஆகியவை ஆழமாக விவாதிக்கப்பட்டன.

இந்த ஜி8 அமைப்பில் உறுப்பினராக இல்லாவிட்டாலும், முன்னணி நாடுகள் அல்லது அண்டை நாடுகள் என்ற நிலையில் சீனா, இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, மெக்சிகோ, கசகசத்தான் ஆகிய நாடுகளும் இந்த உச்சி மாநாட்டிற்கு அழைக்கப்பட்டன. இந்தியாவின் சார்பில் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் இதில் கலந்து கொண்டார்.

G-15- என்பது வளரும் நாடுகளின் அமைப்பாகும். ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகள் குறிப்பாக பொருளியலில் வளரும் நாடுகளாக அடையாளப்படுத்தப்பட்ட நாடுகள் இதில் உறுப்பினராக உள்ளன. இந்த அமைப்பு 1990ம் ஆண்டில் மலேசியாவில் உருவாக்கப்பட்டது. தற்போது இந்த ஜி15 அமைப்பில் 18 நாடுகள் இடம் பெற்றுள்ளன.

அவை வருமாறு அல்ஜிரியா, அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா, எகிப்து, இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், ஜமைக்கா, கென்யா, மலேசியா, மெக்சிகோ, நைஜிரியா, பெரு, செனகல், வெனிசுலா, யுகோ°லேவியா, ஜிம்பாபே.

ழு-20-இந்த அமைப்பு ஜி8-ன் நீட்சி என்று சொல்லலாம். இது புதிதாக ஏற்படுத்தப்பட்டது. ஏற்கனவே ஜி8ல் உறுப்பினராக உள்ள 8 நாடுகளையும் உள்ளிட்டு மொத்தம் 20 நாடுகள் இதில் பங்கு வகிக்கின்றன. உலகத்தின் முக்கியமான பொருளியல் சிக்கல்களைப் பற்றி விவாதித்து உலகப் பொருளாதாரத்தை வழிநடத்த இந்த அமைப்பு தன்னுடைய ஆலோசனைகளைத் தருகிறது.

வேகமாக வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரத்தின் வலிமையைக் கருத்தில் கொண்டு இந்தியா இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த 2001-நவம்பர் மாதத்தில் கனடாவில் ஓடோவா நகரில் இந்த ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. பயங்கரவாதத்திற்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தீர்மானத்தை இது முன்மொழிந்தது. ஏனென்றால் பல நாடுகள் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்து தங்களுடைய எதிரி நாடுகளை திண்டாட வைக்கும் நோக்கத்தில் செயல்படுகின்றன. அவற்றைத் தடுத்து பயங்கரவாத அமைப்புகளின் சொத்துக்களை முடக்கம் செய்ய வேண்டுமென்று இந்த ஜி20 அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியது.

புதுதில்லியில் 2005 மார்ச் 18-19 ஆகிய நாள்களில் ஜி20 நாடுகளின் மாநாடு நடைபெற்றது. அப்போது ஜி20 அமைப்பில் 21வது உறுப்பினராக உருகுவே சேர்த்துக் கொள்ளப்பட்டது.

GROUP OF 77: ஜி77 என்பது கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் அமைப்பாகும். 3ம் உலக நாடுகளை உள்ளடக்கிய இந்த அமைப்பு 1964ல் ஏற்படுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகளின் அவையின் ஆதரவு பெற்ற இந்த அமைப்பு வளரும் நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. ஜி77 அமைப்பில் தற்போது மொத்தம் 130 வளரும் நாடுகள் உள்ளன. ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்க நாடுகள் இதில் பங்கு பெற்றுள்ளன. கடைசியாக இதில் சேர்த்துக் கொள்ளப்பட்ட நாடு தென்னாப்பிரிக்கா. 1994 ஜூன் மாதத்தில் தென்னாப்பிரிக்கா இதில் சேர்க்கப்பட்டது.

இதுபோன்று பல அமைப்புகள் மற்றும் அவற்றின் பணிகளைப் பற்றி தெரிந்துக் கொண்டு அவ்வப்போது அவற்றின் செயல்பாடுகளை அறிந்து கொண்டேமென்றால் வங்கிப் பணிகள், ரயில்வே, ஆயுள் காப்பீடு போன்ற துறைகளுக்கான அதிகாரி பதவிகளுக்கு நேர்காணலின் போது இந்த விவரங்கள் உங்களுக்கு கைக் கொடுக்கும். பன்னாட்டு உறவுகளைப் பற்றியும் பொருளாதார நிலையில் மேற்கொள்ளப்படும் பல நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தங்கள் பற்றியும் அறிந்துக் கொள்வது அவசியம். இவற்றின் மூலம் நம் நாட்டைப் பற்றியும் அதனுடைய வளர்ச்சி நிலைகளைப் பற்றியும் அறிந்துக் கொண்டு போட்டித் தேர்வுகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரே!

இந்தப்பகுதியில் நீங்கள் பொது அறிவு சம்பந்தமாய் கேள்விகள் கேட்கும் போட்டிப்பகுதியாகும்.

Link to comment
Share on other sites

01) Leonardo Da Vinci எந்த நாட்டை சேர்ந்தவர்?

02) அவர் எத்தனையாம் ஆண்டு பிறந்தார்?

03) அவர் Mona Lisa ஓவியத்தை வரைவதற்கு எத்தனை ஆண்டுகள் செலவு செய்தார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

01) Leonardo Da Vinci எந்த நாட்டை சேர்ந்தவர்?

இத்தாலியில் வின்சி என்ற இடம்

02) அவர் எத்தனையாம் ஆண்டு பிறந்தார்?

15.04.1452

03) அவர் Mona Lisa ஓவியத்தை வரைவதற்கு எத்தனை ஆண்டுகள் செலவு செய்தார்?

4 ஆண்டுகள் (1503-1506 வரை)

Link to comment
Share on other sites

இருபத்து ஐந்தாவது ஆண்டு திருமண நிறைவு விழாவை Silver Anniversary என்று அழைப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

கேள்வி: பின்வரும் திருமண ஆண்டு நிறைவு விழாக்களை (Wedding Anniversary) எப்படி அழைப்பார்கள் என்பதை கூறுக?

01) முதலாம் ஆண்டு நிறைவு விழா

02) இரண்டாம் ஆண்டு நிறைவு விழா

03) மூன்றாம் ஆண்டு நிறைவு விழா

04) நான்காம் ஆண்டு நிறைவு விழா

05) ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா

06) ஆறாம் ஆண்டு நிறைவு விழா

07) ஏழாம் ஆண்டு நிறைவு விழா

08) எட்டாம் ஆண்டு நிறைவு விழா

09) ஒன்பதாம் ஆண்டு நிறைவு விழா

10) பத்தாம் ஆண்டு நிறைவு விழா

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

01) முதலாம் ஆண்டு நிறைவு விழா

paper anniversary

02) இரண்டாம் ஆண்டு நிறைவு விழா

cotton anniversary

03) மூன்றாம் ஆண்டு நிறைவு விழா

leather anniversary

04) நான்காம் ஆண்டு நிறைவு விழா

linen anniversary

05) ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா

wood anniversary

06) ஆறாம் ஆண்டு நிறைவு விழா

iron anniversary

07) ஏழாம் ஆண்டு நிறைவு விழா

wool anniversary

08) எட்டாம் ஆண்டு நிறைவு விழா

bronze anniversary

09) ஒன்பதாம் ஆண்டு நிறைவு விழா

copper anniversary

10) பத்தாம் ஆண்டு நிறைவு விழா

tin (or aluminium) anniversary

Link to comment
Share on other sites

உங்களுடைய விடைகள் சரியானவை (அமெரிக்கர்களின் நடை முறை படி)

1st - Cotton (British) --- Paper (American)

2nd - Paper (British) --- Cotton (American)

3rd - Leather (British) --- Leather (American)

4th - Fruit, Flowers (British) --- Linen, Silk (American)

5th - Wood (British) --- Wood (American)

6th - Sugar (British) --- Iron (American)

7th - Wool, Copper Wool (British) --- Copper (American)

8th - Bronze, Pottery (British) --- Bronze (American)

9th - Pottery, Willow (British) --- Pottery (American)

10th - Tin (British) --- Tin, Aluminium (American)

Link to comment
Share on other sites

01) 11 Oscar விருதுகளை வென்ற மூன்று திரைப்படங்களின் பெயர்களை கூறுக?

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

01) 11 Oscar விருதுகளை வென்ற மூன்று திரைப்படங்களின் பெயர்களை கூறுக?

Ben Hur, Titanic, Lord of the rings

Link to comment
Share on other sites

சரியான விடை.

01) ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது செயலாளர் நாயகம் யார்?

02) அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?

03) அவர் எத்தனையாம் ஆண்டு செயலாளர் நாயகம் ஆக தெரிவு செய்யப்பட்டார்? :huh::huh:

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

01) ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது செயலாளர் நாயகம் யார்?

Lie Trygve

02) அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?

Norway

03) அவர் எத்தனையாம் ஆண்டு செயலாளர் நாயகம் ஆக தெரிவு செய்யப்பட்டார்?

1946-1952

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.