Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

1. மூர்ஸ் (Moore's) விதி என்றால் என்ன?

சரியான பதில் சொல்பவருக்கு ஒரு வைர நெக்லஸ் படம் பரிசாகத் தரப்படும். பலர் சரியான பதிலைச் சொன்னால் பரிசாக எதுவும் தரப்படமாட்டாது.

Link to comment
Share on other sites

மாப்பிள்ளை அண்ணா! விடையை சொல்லுங்கோ. எங்களுக்கு எங்கட தலைவிதி மட்டும் தான் ஞாபகம் இருக்கு மற்ற விதி எல்லாம் மறந்து போச்சு. :rolleyes:

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

கோர்டன் மூர்(Gordon Moore) என்பவர் கம்பியூட்டர் சிப்ஸ்(Computer Chips) செய்யும் உலகின் மிகப்பெரிய பிரபல இன்டெல்(Intel) நிறுவனத்தின் உருவாக்குனர்(Founder). இவர் 1965ம் ஆண்டு ஒரு கன அங்குலம் பரப்பளவு இன்டிகிறேட்டட் சேர்க்கிட்களில்(Integrated Circuits) உள்ள ட்ரான்ஸ்ஸிஸ்டர்களின்(Transistors) எண்ணிக்கை ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் இரண்டு மடங்காகின்றது என்ற தனது இந்த அவதானிப்பை வெளியிட்டார். (the number of transistors per square inch on integrated circuits had doubled every year since the integrated circuit was invented. Moore predicted that this trend would continue for the foreseeable future). இவரது இந்த அவதானிப்பு இன்றுவரை உண்மையாக இருக்கின்றது. இவ் அவதானிப்பே மூர்ஸ் விதியென உலகில் கம்பியூட்டர் விஞ்ஞானத்தில் பிரபலமாகப் பேசப்படுகின்றது. இதைப்பற்றி விளக்கமாக அறிவத்ற்கு இங்கே கிளிக்குங்கள் => மூர்ஸ் விதி

எனது அடுத்த கேள்வி டிரான்ஸ்டிட்டெரை(Transistor) கண்டுபிடித்தது யார்? இவர்களிற்கு எத்தனையாம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது?

Link to comment
Share on other sites

முதலாவது கேள்விக்கான விடை :- மூன்று பௌதீகவியலாளர்களின் கூட்டு முயற்சியால் Transistor கண்டுபிடிக்கப்பட்டது

அவர்களின் பெயர் விபரம்:-

1) John Bardeen

2) Walter Brattain

3) William Shockley

இரண்டாவது கேள்விக்கான விடை :- நோபல் பரிசு பெற்ற ஆண்டு - 1956

மாப்பிள்ளை அண்ணா! சரியா?? :icon_idea:

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

வினோ, சரியான விடை. வாழ்த்துக்கள்! இது பொதுஅறிவுச் சோதனைகளில் வழமையாகக் கேட்கப்படும் முக்கியமான கேள்விகளில் ஒன்று!

Link to comment
Share on other sites

1) கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

2) அவர் எந்த நாட்டில் பிறந்தார்?

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

2) அவர் எந்த நாட்டில் பிறந்தார்?

Konrad Zuse

germany

Link to comment
Share on other sites

முதலாவது கேள்விக்கான விடை

"Alan Turing "

இரண்டாவது கேள்விக்கான விடை

இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகரில்

இந்த விடை சரியா?

Link to comment
Share on other sites

சுட்டி, கறுப்பி அக்கா இருவரும் கூறிய பெயர் தவறு.

இங்கிலாந்து நாட்டவர், லண்டனில் பிறந்தவர் என்பது சரி.

நாளைக்கு விடை சொல்லுகிறேன் அதுவரை முயற்சிக்கவும்.

Link to comment
Share on other sites

சரியான விடை:- கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - Charles Babbage (1791-1871) London, England.

Note:-

நவீன கணினி விஞ்ஞான உலகின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - Alan Turing (1912-1954) London, England.

1936 ஆம் ஆண்டு உலகின் முதல் program-controlled computer இனை உருவாக்கியவர் - Konrad Zuse (1910-1995) Germany.

பல்வேறு காலகட்டங்களில் பலர் கணினியின் தந்தை என்று அழைக்கப்பட்டுள்ளனர் இப்படி கணினியின் தந்தை என்று அழைக்கப்பட்டவர்களில் மிகவும் மூத்தவர் அதாவது பழமை வாய்ந்தவர் 1623 ஆம் ஆண்டு Automatic Calculator இனை கண்டுபிடித்த Wilhelm Schickard (1592 - 1635) ஆவார். சுருக்கமாக சொன்னால் கணினிக்கு தந்தைமார் பலர் . ஆனால் கணினியின் தந்தை யார் என்ற கேள்விக்கு சரியான விடை Charles Babbage (1791-1871) என்பது தான்.

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

சந்திரனில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட (Soft Landing)

1)முதலாவது ஆளில்லாத விண்கலத்தின் பெயர் என்ன?

2)அந்த விண்கலத்தை அனுப்பிய நாடு எது?

3)எத்தனையாம் ஆண்டு தரையிறக்கப்பட்டது?

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1)முதலாவது ஆளில்லாத விண்கலத்தின் பெயர் என்ன?

ஸ்புட்னிக் I

2)அந்த விண்கலத்தை அனுப்பிய நாடு எது?

ரஷ்யா

3)எத்தனையாம் ஆண்டு தரையிறக்கப்பட்டது?

1957 ஆம் ஆண்டு

Link to comment
Share on other sites

1)முதலாவது ஆளில்லாத விண்கலத்தின் பெயர் என்ன?

ஸ்புட்னிக் I

2)அந்த விண்கலத்தை அனுப்பிய நாடு எது?

ரஷ்யா

3)எத்தனையாம் ஆண்டு தரையிறக்கப்பட்டது?

1957 ஆம் ஆண்டு

ஸ்புட்னிக் - I ( Sputnik - I) என்பது தவறான விடை.

ஸ்புட்னிக் - I ( Sputnik - I) விண்கலம் சந்திரனுக்கு அனுப்பப்படவில்லை. அது விண்வெளியின் Atmosphere இனை ஆய்வு செய்வதற்காக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் விண்கலம். 04 - October - 1957 அன்று விண்வெளிக்கு ஏவப்பட்ட ஸ்புட்னிக் - I ( Sputnik - I) விண்கலம் 3 கிழமைகள் விண்வெளியின் Atmosphere பற்றிய தகவல்களை Russia விஞ்ஞானிகளுக்கு அனுப்பியது பின்னர் அதில் பொருத்தப்பட்டிருந்த மின்கலம் பழுதடைந்த காரணத்தால் அது செயலிழந்தது.

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

முயற்சி செய்து பாருங்கள். முடியாவிடின் நாளை காலை விடையினை சொல்கிறேன்.

Link to comment
Share on other sites

1) சந்திரனில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட (Soft Landing) முதலாவது ஆளில்லாத விண்கலத்தின் பெயர் என்ன? Luna - 9

2) அந்த விண்கலத்தை அனுப்பிய நாடு எது? Russia

3) எத்தனையாம் ஆண்டு தரையிறக்கப்பட்டது? 03 - February - 1966

சந்திரன் பற்றிய ஆராட்சிகள் ஆரம்பித்த காலப்பகுதியில் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட விண்கலங்கள் சந்திரனில் தரையிறக்கப்படவில்லை மாறாக அந்த விண்கலம் சந்திரன் மீது மோதவிடப்பட்டது (Crash Landing). பல விதமான விஞ்ஞான ஆய்வு உபகரணங்கள், கமராக்கள் பொருத்தப்பட்ட விண்கலமானது சந்திரனை படம் பிடித்து கட்டளை மையத்துக்கு அனுப்பியவாறு சென்று சந்திரனில் மோதி அழிந்துவிடும். விண்கலமானது சந்திரனில் மோதும் இறுதி நொடிகளில் கட்டளை மையத்துக்கு அனுப்பிய படங்களில் சந்திரனின் மேற்பரப்பு, தரைத்தோற்றம் போன்றவற்றை அவதானித்த விஞ்ஞானிகள் அவற்றை பதிவு செய்து பின்னர் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இவ்வாறு மேற்பரப்பை படம் பிடித்தவாறு சென்று சந்திரனில் மோதுவதற்காக 02 - January - 1959 முதன் முதலில் ரஷியாவினால் அனுப்பப்பட்ட Luna - I (Lunik - I) விண்கலம் நேரக்கணிப்பு பிழைத்தமையால் சந்திரனில் மோதாமல் சந்திரனை தாண்டி சென்றுவிட்டது. அதனை தொடர்ந்து 12 - September - 1959 அனுப்பப்பட்ட Luna - II (Lunik - II) விண்கலம் கமராக்கள் உற்பட 391 Kg விஞ்ஞான உபகரணங்களை சுமந்து சென்று வெற்றிகரமாக சந்திரனில் மோதியது (Crash Landing). அதன்போது படங்கள் உற்பட சந்திரனின் Atmosphere சம்மந்தமான தகவல்களையும் கட்டளை மையத்துக்கு அனுப்பியது.

Note:- சந்திரனை சென்றடைந்த முதல் ஆளில்லாத விண்கலம் (Crash Landing) Luna - II (Lunik - II) - 12 - September - 1959.

இதன் பின்னர் விஞ்ஞானத்தில் ஏற்ப்பட்ட வளர்ச்சியினால் சந்திரனில் தரையிறங்கக்கூடிய ஆளில்லாத விண்கலத்தினை வடிவமைத்து அனுப்பிய ரஷியா விஞ்ஞானிகள் பல தடவைகள் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்தனர் ஆனால் அவர்களின் விடா முயற்சியால் 03 - February - 1966 அன்று ஆளில்லாத விண்கலமான Luna - 9 முதன் முதலாக சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கியது (Soft Landing).

Link to comment
Share on other sites

1) விண்வெளிக்கு பயணித்த முதல் மனிதன் யார்?

2) அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?

3) அவர் எத்தனையாம் ஆண்டு விண்வெளிக்கு பயணித்தார்?

4) விண்வெளிக்கு பயணித்த முதல் பெண் யார்?

5) அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?

6) அவர் எத்தனையாம் ஆண்டு விண்வெளிக்கு பயணித்தார்?

Link to comment
Share on other sites

1) விண்வெளிக்கு பயணித்த முதல் மனிதன் யார்?

Major Yuri Alexeyevich Gagarin

விண்கலத்தின் பெயர் - Vostok

2) அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?

ரஷ்யா

3) அவர் எத்தனையாம் ஆண்டு விண்வெளிக்கு பயணித்தார்?

12 - 04 - 1961

4) விண்வெளிக்கு பயணித்த முதல் பெண் யார்?

Lieutenant Valentina Tereshkova

விண்கலத்தின் பெயர் - Vostok - VI

5) அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?

ரஷ்யா

6) அவர் எத்தனையாம் ஆண்டு விண்வெளிக்கு பயணித்தார்?

16 - 06 - 1963

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

1) யாழ் பொது நூலகம் எத்த ஆண்டில் திறந்துவைக்கப்பட்டது?

2) யாழ் பொது நூலகம் யாரால் திறந்துவைக்கப்பட்டது?

3) யாழ் பொது நூலகம் எந்த ஆண்டில் எரியூட்டப்பட்டது?

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) யாழ் பொது நூலகம் எத்த ஆண்டில் திறந்துவைக்கப்பட்டது?

11.10.1959இல்

2) யாழ் பொது நூலகம் யாரால் திறந்துவைக்கப்பட்டது?

முன்னால் யாழ் மேயர். அ.த.துரையப்பா

3) யாழ் பொது நூலகம் எந்த ஆண்டில் எரியூட்டப்பட்டது?

05.31.1981 ல்

Link to comment
Share on other sites

சரியான விடைகள்

குறிப்பு:- 31-05-1981 நள்ளிரவு 12 மணிக்கு பின் நூலகம் எரிக்கப்பட்டமையால் எரிக்கப்பட்ட திகதி 01-06-1981 என்று தான் கருதப்படுகின்றது.

Link to comment
Share on other sites

எங்க நம்மட கேள்விக்கு யாராவது சரியான பதிலை சொல்லுங்க பார்க்கலாம்.

Bluetoothற்கும் Infrared தொழில்நுட்பத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் எவை?

Edited by மாப்பிளை
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பு மக்கள் செல்லமாக OGF  என அழைக்கும் இவ்விடத்தில் - எல்லாமுமே விலைதான்.  டிசைனர் வகைகள் வெளிநாட்டு விலையிலும், உணவு/உள்ளூர் பொருட்கள் வெளியில் விற்பதை விட இரு மடங்கு விலையிலும் இருந்ததாக நினைவு. 
    • 🤣 விட்டா தூக்கி கொண்டு போய் கோம்பையன் மணலில் வச்சிடுவியள் போல கிடக்கு🤣. இல்லை…காலமாகிய அம்மாவின் பென்சன் கணக்கு உண்மையில் மூடப்பட்டுவிட்டதை உறுதி செய்யச் சென்றேன். 
    • ஆறு பெண்கள் கலந்து கொண்டார்கள் என்று எழுதினால் குறைந்தா போய்விடும்
    • மட்டக்களப்பு: நிலப்பயன்பாடும் – சனத்தொகை வளர்ச்சியும் March 27, 2024 — அழகு குணசீலன் — மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற நிலத்தட்டுப்பாடு, குறைந்தளவான நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்கள் செறிவை -அடர்த்தியை அதிகரித்திருக்கிறது. இது வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களுக்கும், வரையறுக்கப்படாத அல்லது கட்டுப்படுத்த முடியாத மக்கள் தேவைக்கும் இடையிலான சமநிலைத்தளம்பல். இந்த நிலையானது தேசிய இயற்கை வளங்களை – நீண்ட காலமாக சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப முகாமைத்துவம் செய்யத்தவறியதன் விளைவு. மனித சக்திக்கு அப்பாற்பட்டு இயற்கை வளங்களை அதிகரிக்கமுடியாத ஜதார்த்தத்தில், மனித சமூகம் தான் சார்ந்த சமூக, பொருளாதார வாழ்வியல் பண்புகளில் காலத்திற்கு ஏற்ப ஒரு நெகிழ்ச்சி போக்கை கைக்கொள்வதன் மூலமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது இந்த பிரச்சினையை பின் போடமுடியும். இதற்கான கொள்கைவகுப்பு, அரசியல் நிர்வாக முகாமைத்துவம் மட்டக்களப்பில் இருக்கவில்லை. காலத்திற்கு ஏற்ற சமூக, பொருளாதார வாழ்வியல் பண்பியல் மாற்றத்தில் மட்டக்களப்பின் இன,மத, கலாச்சார, பண்பாட்டு பாரம்பரியங்கள் நெகிழ்ச்சியற்ற இறுக்கமான போக்கை கொண்டிருப்பது நிலநெருக்கடியை மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. மட்டக்களப்பின் சமூகக்கட்டமைப்பு சார்ந்த பொருளாதார வாழ்வியலில் பிரதான பொருளாதார நடவடிக்கைகளாக விவசாயம், மீன்பிடி, வியாபாரம் உள்ள நிலையில் மக்கள் அதற்கு பொருத்தமான இடத்தை பொருளாதார வாழ்வியல் சார்ந்து தெரிவு செய்கிறார்கள். இது மானியசமூதாயம் முதலான வரலாற்று போக்கு. கடற்றொழிலாளர்களை எவ்வாறு வயல்வெளிகளில் குடியேற்ற முடியாதோ அவ்வாறு நகரம்சார் வியாபார சமூகம் ஒன்றை கடற்கரைகளிலும், விவசாயம்சார் நிலங்களிலும் குடியேற்ற முடியாது. அதே வேளை மறுபக்கத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு சேவைகள் துறையில் பெரும் வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலமான வேலைவாய்ப்புகள் காரணமாக மக்கள் நகரம்சார்ந்து வாழவேண்டிய பொருளாதார கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வர்த்தக சமூகம் ஒன்று நுகர்வோர் இல்லாத அல்லது குறைவாக உள்ள நிலையில் எவ்வாறு வியாபாரம் செய்ய முடியும். விவசாயம், மீன்பிடி என்பனவும் இன்று தன்னிறைவு பொருளாதார நடவடிக்கைகளாக இல்லாமல் வர்த்தக நோக்கிலான சந்தை பொருளாதாரமாக மாறிவிட்டன. அத்துடன் சமூகவளர்சிக்கு ஏற்ப சமூகசேவைகள் கல்வி, வைத்தியம், போக்குவரத்து மற்றும் நுகர்வு என்பனவற்றின் சமகால, எதிர்கால தேவைகருதி மக்கள் அவை இலகுவாகவும், தரமாகவும், தாராளமாகவும் கிடைக்கக்கூடிய இடங்களை வாழ்வதற்கு தெரிவு செய்கின்றனர். இந்த நிலை சனத்தொகை அடர்த்தியை குறிப்பிட்ட பகுதிக்குள் அதிகரிக்க காரணமாகின்றது . மக்கள் இயல்பாகவே சமூக , பொருளாதார வசதி வாய்ப்புகள் குறைந்த இடங்களில் வாழவும் ஆர்வம் காட்டுவதில்லை. இவை எல்லாம் அரசியல் பேசுகின்ற காரணங்களை விடவும் முக்கியமானவை. அரசியல் தனக்கு தேவையானதை பேசுகிறது. மக்கள் தமக்கு தேவையானதை, பொருத்தமானதை, வசதியானதை, விருப்பமானதை செய்கிறார்கள். மக்களுக்கு வழிகாட்ட முடியாத அரசியல்வரட்சி  குறுக்கு வழிகளை நாடுகிறது.  மட்டக்களப்பு மாவட்டத்தின் 346 கிராமசேவகர் பிரிவுகளில் 49 கிராமசேவகர் பிரிவுகள் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நான்கு பிரதேச செயலகங்களுக்குள் உட்பட்டவை. மிகுதி 297 கிராமசேவகர் பிரிவுகள் தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட பத்து பிரதேச செயலகங்களுக்குள் அடங்குகின்றன. இதன் விகிதாசாரம் 6:1. மட்டக்களப்பு மாவட்டத்தின் 965 கிராமங்கள் இந்த  346 கிராமசேவகர் பிரிவுகளுக்குள் பங்கிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 65 கிராமங்களை முஸ்லீம் கிராமங்கள் என்று அடையாளப்படுத்தினாலும் 900 கிராமங்கள் தமிழ், சிங்கள கிராமங்கள். இதன் விகிதாசாரம் ஏறக்குறைய 15:1. இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலப்பயன்பாட்டு பாணி. மாவட்டத்தின் மொத்த 2,854 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் காட்டுவள நிலங்கள் 40 வீதம். விவசாயநிலங்கள் 37 வீதம். ஆக, 75 வீதத்திற்கும் அதிகமான  நிலங்கள் இந்த இரண்டு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் எஞ்சி இருப்பது 25 வீதத்திற்கும் குறைவான நிலப்பரப்பு மட்டுமே.  இந்த 25 வீதத்தில் பயன்பாடின்றி அல்லது பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற தரிசு நிலங்களாக உள்ள நிலப்பரப்பு 6வீதம். நீர்நிலைகள் 5வீதம், சதுப்பு நிலங்கள் 2வீதம்,  வீட்டு வசதி, வீட்டு தோட்டங்களுக்கான நிலம் 5வீதம். ஆக, இன்னும் விவசாயம் செய்யக்கூடிய, பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படாத நிலப்பரப்பு 5 வீதம் மட்டுமே உள்ளது. மேலும் விவசாய நிலங்கள் 37 வீதம் தனியாருக்கு சொந்தமானவை என்பதும், 40 வீதமான வனபரிபாலன, வனவிலங்கு புகலிட பாதுகாப்பு நிலங்கள்  அரச நிலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாவட்டம் கொண்டுள்ள 120 கிலோமீட்டர் நீளமான கடற்கரையானது, கடற்கரையோர, சுற்றாடல் பாதுகாப்பு, உல்லாசப்பிரயாணத்துறை விருத்திக்கானது. உள்நாட்டு நீர்நிலைகளைப் பொறுத்தமட்டில் குளங்கள், வாவிகள், ஆறுகள்,தோணாக்கள்…. என்று 342 நீர்நிலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த 342 இல் பத்துக்கும் குறைவான சிறிய நீர்நிலைகளே நான்கு முஸ்லீம் பிரதேச செயலகப் பிரிவிலும் உள்ளன. மிகுதி 330 க்கும் அதிகமானவை தமிழ்மக்களின் விவசாயவாழ்விடங்களுக்கு உட்பட்டவை. அதிகமானவை விவசாய உற்பத்தி, மீன்பிடி, கால்நடை வளர்ப்போடு தொடர்பு பட்டவை. பட்டிருப்பு தொகுதி முற்று முழுதாகவும், மட்டக்களப்பு தொகுதியின் மேற்குகரை விவசாய உற்பத்தி பெருநிலப்பரப்பில்  99 வீதமும் வரலாற்று காலம் முதல் தமிழர் வாழ்விடங்கள். அதேபோன்று எழுவான்கரையில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களை சார்ந்த நிலப்பரப்பில் முஸ்லீம் மக்களும், ஏனைய எழுவான் பகுதிகளை தமிழ்மக்களும் சேர்ந்து நிர்வகித்தும், வாழ்ந்தும் வருகின்றனர். குறிப்பாக மண்முனை, கோறளை, ஏறாவூர் பற்றுக்களில் பல பண்டைய சிறிய முஸ்லீம் கிராமங்கள் அங்கும், இங்கும் சிதறிக்கிடக்கின்றன.  இதில்  மன்னம்பிட்டி பிரதேச தமிழ், முஸ்லீம் பாரம்பரிய கிராமங்களும் அடங்கும். இந்த சிதறல் மன்னம்பிட்டி பிரதேசம் பொலனறுவை மாவட்டத்துடன் இணைக்கப்படும் வரை மகாவலி வரை நீண்டுகிடந்தது. அதே போன்று 1961 இல் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஒருபகுதி அந்தமாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. உண்மையில் மட்டக்களப்பு மாவட்டம் தனது பூர்விக நிலப்பரப்பில் ஒரு பகுதியை வடமேற்காகவும், தெற்காகவும் இழந்து நிற்கிறது.  மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகை வளர்ச்சியை உற்று நோக்குகையில் பொதுவாக காணிப்பிரச்சினையை ஒரு பொதுவான காரணமாக கொள்ள முடியாது. ஆனால் சில தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் இது ஒரு சிறப்பு பிரச்சினை என்பதையும் மறுப்பதற்கில்லை. கடந்த நான்கு தசாப்தங்களை நோக்கினால் 1981 இல் 2,37,787 ஆக இருந்த தமிழர் சனத்தொகை 2012 இல் 3,82,300 ஆக அதிகரித்துள்ளது. இது சுமார் 1,50,000 பேரினால் அதிகரித்துள்ளது.  1981 இல் முஸ்லீம்களின் சனத்தொகை 78,829 இல் இருந்து 2012 இல் 1,33,844 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 50,00 பேரினால் அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சராசரி சனத்தொகை வளர்ச்சி ஏறக்குறைய ஒரு வீதமாக இருக்கின்ற நிலையில் இதை காணிநெருக்கடிக்கான முக்கிய காரணமாக சமகாலத்தில் கொள்ள முடியாது. இதனால் தான் வாழ்வியல் முறை, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற சமூக, பொருளாதார காரணிகள் முக்கியம் பெறுகின்றன. இந்த வளர்ச்சிக்கு-தேவைக்கு சமாந்தரமாக காணி, வீடமைப்பு வசதிகள், சனத்தொகை செறிவை ஐதாக்குவதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் தேசிய, மாகாண, மாவட்ட மட்டத்தில் செய்யப்படவில்லை. தமிழ்ஆயத அமைப்புக்களின் வன்முறையினால் வாழ்விடங்களை விட்டுவெளியே முஸ்லீம் மக்கள்  விரும்பினால் அந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும். குறிப்பாக பாவற்கொடிச்சேனை, உறுகாமம் போன்றவற்றை குறிப்பிடலாம்.  அதேபோல் புல்லுமலை, தியாவட்டவான், புனானை போன்ற பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களும் விரும்பினால் மீள்குடியேற வாய்ப்பளிக்கப்படவேண்டும். இங்கு இவர்கள் தங்கள் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்கான விதிவிலக்கான நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டியது அவசியம். இதற்கான வழிவகைகளை அரசியல் ஊடாகத்தேடாது “எங்கள் பங்கைத்தானே கேட்கிறோம்” என்பதால் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. முஸ்லீம் தலைமைகள் “பங்கு” என்று எதைக் கருதுகிறார்கள்? மட்டக்களப்பு மாவட்ட மொத்த நிலப்பரப்பில், சனத்தொகை விகிதாசாரத்திற்குரியதா? இல்லை பாவனைக்குரியதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலப்பரப்பில் ஒரு பங்கா?  அல்லது தமிழ்த்தரப்பு வன்முறையினால் இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியேறுவதா? அல்லது தவறான வழியில் தனிநபர் காணிகள் எடுக்கப்பட்டிருந்தால் அதுவா?  அல்லது நீங்கள் பங்கு என்று குறிப்பிடுவது மலையும், காடும், கடலும் கொண்ட நிலப்பரப்பில் ஒரு பங்கா?   இந்த கேள்விகளுக்கு ஒரு பதில் இருந்தால் அதில் இருந்து நகரமுடியும். அவ்வாறு இல்லாமல் நஸீர் அகமட்டின் வார்த்தைகளை மீள உச்சரிப்பதாலோ, அவரின் மொத்த சனத்தொகை அடிப்படையிலான காணிப்பங்கீட்டை கோருவதனாலோ இதற்கு தீர்வு காண முடியாது. கல்முனை தமிழ் பிரதேச தரம் உயர்வுக்கு ஹரிஷ் போடுகின்ற தடைகளை முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் பயங்கரவாதம் என்று சொல்லலாமா…..?    https://arangamnews.com/?p=10587  
    • திருக்கோவில் வைத்தியசாலைக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது. March 28, 2024 (கனகராசா சரவணன்) திருக்கோவில் மரதன் ஓடிய 16 வயது மாணவன் உயிரிழந்தது தொடர்பாக  வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்தியசாலைக்கு தேசம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக தலைமறைவாகி வந்த மேலும் 4 பேர் புதன்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கடந்த திங்கட்கிழமை (11) ம் திகதி திருக்கோவில் மெதடிஸ்த மாகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியை முன்னிட்டு இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய திருக்கோவில் 3 ம் பிரிவு துரையப்பா வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஜெயக்குமார் விதுர்ஜன்; என்ற மாணவன் மயங்கிவீழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச் சம்பவத்தையடுத்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் கவலையீனமாக குறித்த மாணவன் உயிரிழந்தார் என குற்றம்சாட்டு தெரிவித்து வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று திரண்ட பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட் நிலையில் வைத்தியசாலை மீது கல்வீச்சு தாக்குதல் நடாத்தியதில் கட்டிடத்தின் பல யன்னல் கண்ணாடிகள் உடைந்து தேசமடைந்ததுடன் வைத்தியசாலை பெயர்  பலகையை உடைத்து சேதப்படுத்தியதையடுத்தினர். இதனையடுத்து வைத்தியசாலைக்கு சேதம் விளைவித்த 35  பேரை இனங்கண்டு கொண்ட பொலிசார் பெண் ஒருவர் உட்பட 6 பேரை கடந்த 22ம் திகதி வெள்ளிக்கிழமை (22) கைது செய்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவர்களை எதிர்வரும் 4ம் திகதி வரையுமான 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் இதனை தொடர்ந்து தலைமறைவாகிவந்த 4 பேரை சம்பவதினமான இன்று கைது செய்துள்ளதையடுத்து இதவரை பெண் ஒருவர் உட்பட 11 பேரை கைது செய்துள்ளதாகவும் ஏனைய தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.   https://www.supeedsam.com/198438/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.