Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

இன்fஇராரெட் தொழில்நுட்பம்(Infrared Technology):

remotecoi4.jpg

இது நீங்கள் பாவிக்கும் டீவி ரிமோட் கொன்ரோலில் பயன்படுத்தப்படுகின்றது. இதன் சிக்னல் செல்லக்கூடிய தூரம் பொதுவாக 50 அடிகளிற்கு குறைவாகவே அமைகின்றது. ரிமோட்டிற்கு ரிமோட் இந்த சிக்னலின் வீச்சு வித்தியாசப்படும். இங்கு டீவி அல்லது ரேடியோ விற்கும் ரிமோட்டிற்கும் இடையில் நேர்கோட்டில் சிக்னல் செல்லக்கூடியதாக இருக்க வேண்டும். இடையில் சுவர் போன்ற தடுப்புக்கள் இருக்கக்கூடாது. இல்லாவிடின் வேலை செய்யாது.

புளூதூத் தொழில்நுட்பம்(BlueTooth Technology):

bluetoothis7.jpg

இங்கு ரேடியோ சிக்னல் பயன்படுத்தப்படுகின்றது. எனவே இடையில் சுவர் தடுப்பு இருந்தால் கூட வேலை செய்யும். வழமையாக இதன் சிக்னல் வீச்சு எல்லை 30 அடிகளாகும். இதன் மூலம் நாம் பீ.டீ.ஏ(PDA - Personal Digital Assitant), மொபையில் போன், கம்பியூட்டர், வயரற்ற ஹெட்போன் போன்றவற்றுடன் தொடர்பை ஏற்படுத்த முடியும்.

இன்fஇராரெட் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் ஒரு குறிப்பிட்ட ரிமோட்டை ஒரு குறிப்பிட்ட டீவி அல்லது ரேடியோவுக்குத்தான் பயன்படுத்தமுடியும். ஆனால் புளூதூத் தொழில்நுட்பம் உள்ள ஒரு டிவைசை(கருவி/உபகரணம்) புளூதூத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் பல்வேறு டிவைசுகளுடன் தொடர்பை ஏற்படுத்தி பயன்படுத்த முடியும்!

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

1) Alfred Nobel எந்த நாட்டை சேர்ந்தவர்?

2) Alfred Nobel எத்தனையாம் ஆண்டு பிறந்தார்?

3) நோபல் பரிசு வழங்கும் நடைமுறை எந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்து?

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

1) Alfred Nobel எந்த நாட்டை சேர்ந்தவர்?

சுவீடிஸ்(Swedish)

2) Alfred Nobel எத்தனையாம் ஆண்டு பிறந்தார்?

21.10.1833

3) நோபல் பரிசு வழங்கும் நடைமுறை எந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்து?

1895ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது, முதல் 5தும் வழங்கப்பட்டது 1901, ஆறாவது 1969ல் வழங்கப்பட்டது.

சரியா????

Link to comment
Share on other sites

சரியான விடைகள் (தெளிவான பதில் பாராட்டுக்கள்)

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

1) தொலைக்காட்சி பெட்டியை கண்டுபிடித்தவர் யார்?

2) எத்தனையாம் ஆண்டு கண்டுபிடித்தார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) தொலைக்காட்சி பெட்டியை கண்டுபிடித்தவர் யார்?

Paul Nipkow

2) எத்தனையாம் ஆண்டு கண்டுபிடித்தார்?

1886

Link to comment
Share on other sites

1) தொலைக்காட்சியை கண்டுபிடித்தவர்: John Logie Baird.

2) கண்டுபிடித்த ஆண்டு: 26 - January - 1926

Note: Paul Nipkow என்பவர் தொலைக்காட்சியை உருவாக்குவதற்கு தேவையான அடிப்படை தொழில் நுட்பத்தை கண்டுபிடித்தார் ஆனால் அவரால் தொலைக்காட்சி உருவாக்கப்படவில்லை.

மேலதிக விபரங்களுக்கு:

http://en.wikipedia.org/wiki/John_Logie_Baird

http://en.wikipedia.org/wiki/Paul_Nipkow

http://en.wikipedia.org/wiki/Television#History

Link to comment
Share on other sites

அக்கா, X - ray என்பதற்கு மறுபெயர் தான் Roentgen ray. Roentgen என்பவர் X - ray இனை கண்டுபிடித்த காரணத்தால் X - ray இனை Roentgen ray என்று ஆரம்பத்தில் கூறிவந்தார்கள். எனது கேள்வி "X" என்பதற்கு அர்த்தம் என்ன என்பது தான். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

X-Ray கண்டுபிடித்த Conrad Roentgen க்கு கதிர்களைப்பற்றி எதுவும் தெரியாததால் Unknown அதை என்று குறிப்பதற்காக X ஐ பயன்படுத்தினார் என்று ஒரு இணையத்தளத்திலிருக்கு.சரியோ விடை?

Link to comment
Share on other sites

நாடுகளைச் சுற்றி

உலகத்தைப் பற்றிய பொதுவான பொருளாதார நடைமுறைகள் என்ன? உலகளாவிய அமைப்புகளில் உள்ள நாடுகள் எவை? அந்த அமைப்புகள் எந்த வகையில் உலக அரங்கில் பெயர் பெற்று திகழ்கின்றன என்ற விவரங்களை போட்டித் தேர்விற்குச் செல்லும் வேலை தேடும் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். நேர்காணலிலும் இந்த அமைப்புகள் சார்ந்த வினாக்கள் கேட்கப்படுகின்றன.

அந்த முறையில் பின்வரும் அமைப்புகள் எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதைப் பார்ப்போம்.

G-7 உலகத்தில் செல்வச் செழிப்புமிக்க முன்னணி நாடுகள் தங்களுக்குள் ஓர் அமைப்பை ஏற்படுத்திக் கொண்டன. அந்த அமைப்பு தற்போது ஜி8 என பெயர் மாற்றம் பெற்றுள்ளது.

G-8 உலகிலேயே பணக்கார நாடுகளின் அமைப்பாக ஜி8 திகழ்கிறது. ஜி7 ஆக 1997 வரை இருந்த போது இதில் உறுப்பினராக இருந்த நாடுகள் அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஜப்பான், ஜெர்மனி, பிரான்°, இங்கிலாந்து, இத்தாலி, கனடா ஆகியவை.

1997 ஜூன் 21 அன்று அமெரிக்காவின் டென்வர் நகரத்தில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் ரஷ்யா இதில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அதற்கு பிறகுதான் அதன் பெயர் ஜி8 என்று மாற்றியமைக்கப்பட்டது.

உலக நாடுகளின் பொருளியல் சார்ந்த பல்வேறு விஷயங்களையும், அரசியல் சிக்கல்களையும் இந்த குழு ஒவ்வோர் ஆண்டும் ஓரிடத்தில் கூடி விவாதிக்கும்.

இதற்கு முந்திய ஜி8 உச்சிமாநாடு ரஷ்யாவில் பீட்டர்°பெர்க் நகரில் 2006 ஜூலை 15-17 வரை நடைபெற்றது. இதில் உலகின் பல்வேறு நாடுகளில் ஏற்பட்டு வரும் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்கள் ஆகியவை ஆழமாக விவாதிக்கப்பட்டன.

இந்த ஜி8 அமைப்பில் உறுப்பினராக இல்லாவிட்டாலும், முன்னணி நாடுகள் அல்லது அண்டை நாடுகள் என்ற நிலையில் சீனா, இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, மெக்சிகோ, கசகசத்தான் ஆகிய நாடுகளும் இந்த உச்சி மாநாட்டிற்கு அழைக்கப்பட்டன. இந்தியாவின் சார்பில் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் இதில் கலந்து கொண்டார்.

G-15- என்பது வளரும் நாடுகளின் அமைப்பாகும். ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகள் குறிப்பாக பொருளியலில் வளரும் நாடுகளாக அடையாளப்படுத்தப்பட்ட நாடுகள் இதில் உறுப்பினராக உள்ளன. இந்த அமைப்பு 1990ம் ஆண்டில் மலேசியாவில் உருவாக்கப்பட்டது. தற்போது இந்த ஜி15 அமைப்பில் 18 நாடுகள் இடம் பெற்றுள்ளன.

அவை வருமாறு அல்ஜிரியா, அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா, எகிப்து, இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், ஜமைக்கா, கென்யா, மலேசியா, மெக்சிகோ, நைஜிரியா, பெரு, செனகல், வெனிசுலா, யுகோ°லேவியா, ஜிம்பாபே.

ழு-20-இந்த அமைப்பு ஜி8-ன் நீட்சி என்று சொல்லலாம். இது புதிதாக ஏற்படுத்தப்பட்டது. ஏற்கனவே ஜி8ல் உறுப்பினராக உள்ள 8 நாடுகளையும் உள்ளிட்டு மொத்தம் 20 நாடுகள் இதில் பங்கு வகிக்கின்றன. உலகத்தின் முக்கியமான பொருளியல் சிக்கல்களைப் பற்றி விவாதித்து உலகப் பொருளாதாரத்தை வழிநடத்த இந்த அமைப்பு தன்னுடைய ஆலோசனைகளைத் தருகிறது.

வேகமாக வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரத்தின் வலிமையைக் கருத்தில் கொண்டு இந்தியா இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த 2001-நவம்பர் மாதத்தில் கனடாவில் ஓடோவா நகரில் இந்த ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. பயங்கரவாதத்திற்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தீர்மானத்தை இது முன்மொழிந்தது. ஏனென்றால் பல நாடுகள் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்து தங்களுடைய எதிரி நாடுகளை திண்டாட வைக்கும் நோக்கத்தில் செயல்படுகின்றன. அவற்றைத் தடுத்து பயங்கரவாத அமைப்புகளின் சொத்துக்களை முடக்கம் செய்ய வேண்டுமென்று இந்த ஜி20 அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியது.

புதுதில்லியில் 2005 மார்ச் 18-19 ஆகிய நாள்களில் ஜி20 நாடுகளின் மாநாடு நடைபெற்றது. அப்போது ஜி20 அமைப்பில் 21வது உறுப்பினராக உருகுவே சேர்த்துக் கொள்ளப்பட்டது.

GROUP OF 77: ஜி77 என்பது கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் அமைப்பாகும். 3ம் உலக நாடுகளை உள்ளடக்கிய இந்த அமைப்பு 1964ல் ஏற்படுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகளின் அவையின் ஆதரவு பெற்ற இந்த அமைப்பு வளரும் நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. ஜி77 அமைப்பில் தற்போது மொத்தம் 130 வளரும் நாடுகள் உள்ளன. ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்க நாடுகள் இதில் பங்கு பெற்றுள்ளன. கடைசியாக இதில் சேர்த்துக் கொள்ளப்பட்ட நாடு தென்னாப்பிரிக்கா. 1994 ஜூன் மாதத்தில் தென்னாப்பிரிக்கா இதில் சேர்க்கப்பட்டது.

இதுபோன்று பல அமைப்புகள் மற்றும் அவற்றின் பணிகளைப் பற்றி தெரிந்துக் கொண்டு அவ்வப்போது அவற்றின் செயல்பாடுகளை அறிந்து கொண்டேமென்றால் வங்கிப் பணிகள், ரயில்வே, ஆயுள் காப்பீடு போன்ற துறைகளுக்கான அதிகாரி பதவிகளுக்கு நேர்காணலின் போது இந்த விவரங்கள் உங்களுக்கு கைக் கொடுக்கும். பன்னாட்டு உறவுகளைப் பற்றியும் பொருளாதார நிலையில் மேற்கொள்ளப்படும் பல நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தங்கள் பற்றியும் அறிந்துக் கொள்வது அவசியம். இவற்றின் மூலம் நம் நாட்டைப் பற்றியும் அதனுடைய வளர்ச்சி நிலைகளைப் பற்றியும் அறிந்துக் கொண்டு போட்டித் தேர்வுகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரே!

இந்தப்பகுதியில் நீங்கள் பொது அறிவு சம்பந்தமாய் கேள்விகள் கேட்கும் போட்டிப்பகுதியாகும்.

Link to comment
Share on other sites

01) Leonardo Da Vinci எந்த நாட்டை சேர்ந்தவர்?

02) அவர் எத்தனையாம் ஆண்டு பிறந்தார்?

03) அவர் Mona Lisa ஓவியத்தை வரைவதற்கு எத்தனை ஆண்டுகள் செலவு செய்தார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

01) Leonardo Da Vinci எந்த நாட்டை சேர்ந்தவர்?

இத்தாலியில் வின்சி என்ற இடம்

02) அவர் எத்தனையாம் ஆண்டு பிறந்தார்?

15.04.1452

03) அவர் Mona Lisa ஓவியத்தை வரைவதற்கு எத்தனை ஆண்டுகள் செலவு செய்தார்?

4 ஆண்டுகள் (1503-1506 வரை)

Link to comment
Share on other sites

இருபத்து ஐந்தாவது ஆண்டு திருமண நிறைவு விழாவை Silver Anniversary என்று அழைப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

கேள்வி: பின்வரும் திருமண ஆண்டு நிறைவு விழாக்களை (Wedding Anniversary) எப்படி அழைப்பார்கள் என்பதை கூறுக?

01) முதலாம் ஆண்டு நிறைவு விழா

02) இரண்டாம் ஆண்டு நிறைவு விழா

03) மூன்றாம் ஆண்டு நிறைவு விழா

04) நான்காம் ஆண்டு நிறைவு விழா

05) ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா

06) ஆறாம் ஆண்டு நிறைவு விழா

07) ஏழாம் ஆண்டு நிறைவு விழா

08) எட்டாம் ஆண்டு நிறைவு விழா

09) ஒன்பதாம் ஆண்டு நிறைவு விழா

10) பத்தாம் ஆண்டு நிறைவு விழா

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

01) முதலாம் ஆண்டு நிறைவு விழா

paper anniversary

02) இரண்டாம் ஆண்டு நிறைவு விழா

cotton anniversary

03) மூன்றாம் ஆண்டு நிறைவு விழா

leather anniversary

04) நான்காம் ஆண்டு நிறைவு விழா

linen anniversary

05) ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா

wood anniversary

06) ஆறாம் ஆண்டு நிறைவு விழா

iron anniversary

07) ஏழாம் ஆண்டு நிறைவு விழா

wool anniversary

08) எட்டாம் ஆண்டு நிறைவு விழா

bronze anniversary

09) ஒன்பதாம் ஆண்டு நிறைவு விழா

copper anniversary

10) பத்தாம் ஆண்டு நிறைவு விழா

tin (or aluminium) anniversary

Link to comment
Share on other sites

உங்களுடைய விடைகள் சரியானவை (அமெரிக்கர்களின் நடை முறை படி)

1st - Cotton (British) --- Paper (American)

2nd - Paper (British) --- Cotton (American)

3rd - Leather (British) --- Leather (American)

4th - Fruit, Flowers (British) --- Linen, Silk (American)

5th - Wood (British) --- Wood (American)

6th - Sugar (British) --- Iron (American)

7th - Wool, Copper Wool (British) --- Copper (American)

8th - Bronze, Pottery (British) --- Bronze (American)

9th - Pottery, Willow (British) --- Pottery (American)

10th - Tin (British) --- Tin, Aluminium (American)

Link to comment
Share on other sites

01) 11 Oscar விருதுகளை வென்ற மூன்று திரைப்படங்களின் பெயர்களை கூறுக?

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

01) 11 Oscar விருதுகளை வென்ற மூன்று திரைப்படங்களின் பெயர்களை கூறுக?

Ben Hur, Titanic, Lord of the rings

Link to comment
Share on other sites

சரியான விடை.

01) ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது செயலாளர் நாயகம் யார்?

02) அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?

03) அவர் எத்தனையாம் ஆண்டு செயலாளர் நாயகம் ஆக தெரிவு செய்யப்பட்டார்? :huh::huh:

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

01) ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது செயலாளர் நாயகம் யார்?

Lie Trygve

02) அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?

Norway

03) அவர் எத்தனையாம் ஆண்டு செயலாளர் நாயகம் ஆக தெரிவு செய்யப்பட்டார்?

1946-1952

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.