Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் விறிட்ஜின் நிறம் என்ன? ... வெள்ளை தானே ?...

அப்போ ... பசு என்ன குடிக்கும் ?.

இந்தக் கேள்வியை ஐரோபிய மொழியில் மாற்றி பின்பு ஐரோபியரிடம் (பெரியவர்கள், குழைந்தகள்) கேளுங்கள்

அவர்கள் உடனடியாகக் தரும் முதல் பதிலைதான் கணக்கேடுக்க வேண்டும். அப்படிக் கிடைத்த பெரும்பான்மையான பதில் தான் சாதாரணமான பதில் !!

மேலும் விளக்கம் பின்பு தரப்படக்கூடும்?!

!!!! கவனம் கேள்வி மாற்றப்பட்டுள்ளது !!!உங்கள் கருத்திலும் அதை மாற்றத் தவறாதீர்கள், நன்றி

ex:

your fridge is white, isn't it? ...

OK ... so the cow drink ...?

ton frigo est blanc n'est pas? ...

d'accord ... alors qu'est qu'elle boit la vache ... ?

...

இந்தக் கேள்வியை பெரியவர்கள் , சிறியவர்கள் சிலரிடம் முயற்சி பண்ணிப்பார்த்தேன் ,

பால் என்று பதில் வந்தது. :(

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

உங்கள் விறிட்ஜின் நிறம் என்ன? ... வெள்ளை தானே ?...அப்போ ... பசு என்ன குடிக்கும் ?.

இந்தக் கேள்வியை பெரியவர்கள் , சிறியவர்கள் சிலரிடம் முயற்சி பண்ணிப்பார்த்தேன் ,

பால் என்று பதில் வந்தது. :rolleyes:

பால் சமூக ஓட்டத்துடன் செல்பவர்களின் பதில் (200 பேர்)

கஞ்சி, களனி அல்லது தண்னி சமூக ஓட்டத்திற்கு எதிராகச் செல்பவர்கள் ( அல்லது ஒரே இடத்தில் நிற்பவர்கள்) பதில் (9பேர் :unsure: உங்களுடன் 10 பேர்)

வ்றிட்ஜி (குளிர்சாதன பெட்டி), வெள்ளை நிறம், பசு (மாடு) என்ற சொற்களால்

எங்கள் சிந்தனை தற்போதைய சமூக வழக்கங்களுக் இனங்க வழிநடத்தப்பட்டிருக்க வேண்டும் ...? !

உங்கள் பங்களிப்பிற்கு நன்றி

Edited by ஜெகுமார்
Link to comment
Share on other sites

"கான மயிலாட கண்டிருந்த வான் கோழி தானும் அது வாகப் பாவித்து

பொல்லாச் சிறகு அடித்து ஆடினால் போலவெ கல்லாதான் கற்ற ... "

என்று யார் பாடினார் ?

Link to comment
Share on other sites

"கான மயிலாட கண்டிருந்த வான் கோழி தானும் அது வாகப் பாவித்து

பொல்லாச் சிறகு அடித்து ஆடினால் போலவெ கல்லாதான் கற்ற ... "

என்று யார் பாடினார் ?

ஒளவையார்.

Link to comment
Share on other sites

ஒளவையார்.

ஔவையார் தமிழ் நாட்டில் வாழ்ந்த பெண் புலவர். வள்ளல் அதியமான் அளித்த நெல்லிக்கனியை ஔவையார் உண்டு நீண்ட காலம் வாழ்ந்தார் எனச் சொல்லப்படுகின்றது. அவர் இயற்றிய பிற நூல்கள் கொன்றை வேந்தன், ஆத்தி சூடி, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை முதலியன.

கடவுள் வாழ்த்து

வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்

நோக்கு உண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு

துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு.

நூல்

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி

'என்று தருங்கொல்?' என வேண்டா - நின்று

தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்

தலையாலே தான் தருதலால். 1

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்

கல்மேல் எழுத்துப் போல் காணுமே - அல்லாத

ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்

நீர் மேல் எழுத்துக்கு நேர். 2

இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால்

இன்னா அளவில் இனியவும் - இன்னாத

நாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே

ஆள் இல்லா மங்கைக்கு அழகு. 3

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்

நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு

சுட்டாலும் வெண்மை தரும். 4

அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி

எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த

உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்

பருவத்தால் அன்றிப் பழா. 5

உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்

பற்றலரைக் கண்டால் பணிவரோ? - கல்தூண்

பிளந்து இறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின்

தளர்ந்து வளையுமோ தான். 6

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற

நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்

தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்

குலத்து அளவே ஆகும் குணம். 7

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க

நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு

இணங்கி இருப்பதுவும் நன்று. 8

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற

தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தீயார்

குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு

இணங்கி இருப்பதுவும் தீது. 9

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை. 10

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்

விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்ட பேர்

ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி

ஏற்ற கருமம் செயல். 11

மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம்

உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது

மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்

உண்ணீரும் ஆகி விடும். 12

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்

அவையல்ல நல்ல மரங்கள் - சபை நடுவே

நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய

மாட்டாதவன் நன் மரம். 13

கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி

தானும் அதுவாகப் பாவித்து - தானும் தன்

பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே

கல்லாதான் கற்ற கவி. 14

- www.chennailibrary.com

ஔவயார் என்றுதான் பலர் கூறுகிறார்கள்,

ஆனால் அந்த வான் கோழி எனப்படும் பறவை ஐரோப்பியர்களால் (போர்துக்கேயரால்) தான் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. - மூதாதயர் எப்படி ஓலையில் எழுதினார்கள்...

im0902-08_turky.jpg

imag from www.mazhalaigal.com

சீமைக்கோழி (சீமை = ஐரோப்பா) என்றும் ஆங்கிலத்தில் டர்க்கி என்றும் வான்கோழியை அழைக்கின்றனர். பொதுவாக வான் கோழி 23 கிலோ எடைக் கொண்டது. ஆண் பறவையின் வால் பகுதி விசிறி போல அழகாக விரிந்து சுருங்கும், தன்மையுடையது. கழுத்து பகுதியில் தொங்கிக் கொண்டிருக்கும் பை போன்ற உறுப்பு இவற்றின் மனநிலைக்கு ஏற்றவாறு சிகப்பு, நீலம், வெள்ளை என நிறம் மாறும். இதன் குரல் கேட்க அருவருப்பாக இருக்கும். பெண் வான் கோழி சாம்பல் கலந்த வெளிர்ப் பச்சை நிறத்தில் 20 முதல் 30 முட்டைகள் வரை இட்டு அடைகாக்கும். ஒரே நேரத்தில் குஞ்சுகள் பொரித்து வெளிவருகின்றன. from www.hi2web.com-forum

கினி பறவை அல்லது கினி கோழி பேசன்ட்ஸ் வரிசையை சேர்ந்த குடும்பத்தில் உள்ள வான் கோழி மற்றும் மற்ற பறைவகள் வகையை சேர்ந்தது. பெரும்பாலும் இப்பறவைகள் ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது - a.hscripts.com

நெல்லிக்கனியை உண்டு நீண்ட காலம் வழலாம் என்று நம்ப முடியாது...

ஃ ஔவயார் அத்தப்பாட்டை பாடவில்லை என்றே நான் நம்புகிறேன் ...

(ஔவயார் கண்ட வான் கோழி சீமைகோழியல்ல என்று நிரூபிக்கப் படும்வரை)

... ? அது அப்படியிருக்க ... உங்கள் பதிலுக்கு நன்றி.

Edited by ஜெகுமார்
Link to comment
Share on other sites

அற்புதமான விளக்கம். வாசித்து பயன்பெறுங்கள் ஜெகுமார். :wub:

http://www.tamilauthors.com/01/74.html

அவ்வை யார்?

அவ்வையார் என்ற பெயரை அறியாத தமிழ் அறிந்த தமிழர்கள் அகிலத்தில் எங்குமே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு அவ்வைப்பாட்டியைப்பற்றிய கதைகள் தமிழ் மக்களுக்குப் பிள்ளைப் பராயத்திலேயே சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. ஆரம்ப வகுப்புப் பாடப் புத்தகங்களிலும் அவ்வையாரின் பாடல்கள் இடம்பெறுகின்றன.

...

ஆனால் அவ்வையார் என்ற பெயரில் பல்வேறு பெண்புலவர்கள் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்துள்ளதாக செய்திகள் கிடைக்கின்றன. அவ்வையார் என்ற பெயரில் தமிழ்வளர்த்த புலவர்கள் மூவர் என்று ஆராய்ச்சி முடிவுகள் ஆதாரப்படுத்துகின்றன. அவ்வையார் என்ற பெயரில் சங்ககாலத்தில் ஒரு பெண்புலவர் வாழ்ந்தமைக்குச் சான்றுகள் கிடைக்கின்றன. அவருக்குப் பின் யாராவது ஒரு பெண் கவிதைகள் பாடி, புலவராகத் திகழ்ந்தபோது அவரை அவ்வையார் என்றபெயரால் மக்கள் அழைத்திருக்கக்கூடும்....

-

உங்கள் இனைப்பிற்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வை யார்?

அவ்வையார் என்ற பெயரை அறியாத தமிழ் அறிந்த தமிழர்கள் அகிலத்தில் எங்குமே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு அவ்வைப்பாட்டியைப்பற்றிய கதைகள் தமிழ் மக்களுக்குப் பிள்ளைப் பராயத்திலேயே சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. ஆரம்ப வகுப்புப் பாடப் புத்தகங்களிலும் அவ்வையாரின் பாடல்கள் இடம்பெறுகின்றன.

...

ஆனால் அவ்வையார் என்ற பெயரில் பல்வேறு பெண்புலவர்கள் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்துள்ளதாக செய்திகள் கிடைக்கின்றன. அவ்வையார் என்ற பெயரில் தமிழ்வளர்த்த புலவர்கள் மூவர் என்று ஆராய்ச்சி முடிவுகள் ஆதாரப்படுத்துகின்றன. அவ்வையார் என்ற பெயரில் சங்ககாலத்தில் ஒரு பெண்புலவர் வாழ்ந்தமைக்குச் சான்றுகள் கிடைக்கின்றன. அவருக்குப் பின் யாராவது ஒரு பெண் கவிதைகள் பாடி, புலவராகத் திகழ்ந்தபோது அவரை அவ்வையார் என்றபெயரால் மக்கள் அழைத்திருக்கக்கூடும்....

----

Then

ஔவயார் அத்தப்பாட்டை பாடவில்லை என்றே நான் நம்புகிறேன்

Now

அவ்வை யார்? :wub::D

ஔவயார்

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%94%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

அவ்வை யார்?

auvai.jpgAuvayar.jpg250px-Statue_of_Avvaiyar.jpg

எனக்கு தெரிந்த ஔவையார் என்றால் கே.பி. சுந்தராம்பாள் தான். :lol:

Suntharambal.jpg

சென்று வா மகனே சென்று வா

அறிவை வென்று வா மகனே வென்று வா

கன்று தாயை விட்டு சென்றபின்னும்

கன்று தாயை விட்டு சென்றபின்னும்

அது நின்ற பூமி தன்னை மறப்பதில்லை

சென்று வா மகனே சென்று வா

அறிவை வென்று வா மகனே வென்று வா

அறிவுலகம் உன்னை அழைக்கின்றது

ஏதும் அறியாஅதவன் என்றே நினைக்கின்றது

அரண்மனை வாசல் திறக்கின்றது

அரண்மனை வாசல் திறக்கின்றாது

அங்கே ஆணவம் புன்னகை புரிகின்றது

சென்று வா மகனே சென்று வா

அறிவை வென்று வா மகனே வென்று வா

உண்மையை சொல்வதற்கு படிப்பதற்கு

எல்லாம் உணர்ந்தவர் போல் நடிக்கும் நடிப்பெதற்கு

கண்கண்ட காட்சிகளுக்கு விளக்கெதற்கு – நெஞ்சில்

கள்ளமில்லாதவற்கு பயமெதற்கு

சென்று வா மகனே சென்று வா

அறிவை வென்று வா மகனே வென்று வா

நீ இருக்கும் இடத்தில் நானிருப்பேன்

உன் நிழலிலும் பொருளாக குடியிருப்பேன்

தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை – இந்த

தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை

எந்த சபையிலும் உனக்கு நடுக்கமில்லை

சென்று வா மகனே சென்று வா

அறிவை வென்று வா மகனே வென்று வா

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

...

...

அதுதான் தமிழ்: உபயோகிக்க முடியாத தரவுகள், தமிழ் சினிமாக்களைப் போல ...

அப்போ சரியான பதில் ?

யாரோ ஒருவர் பாடடினார் என்பதும் அவர் ஒரு தமிழர் என்பதும் உண்மையிலும் உண்மை .

பொய்யிலும் பொய், மயில் ஆடக் கண்ட வான் கோழி தானும் சிறகை விரித்து ஆடியது, என்பதாம்.

உண்மை என்னவென்றால் , வான் கோழியை கண்ட மயில் , அது ஒரு புது நாட்டுப் பெண் மயில் என்று காதல் கொண்டு தந்திர நடனமடியது ! ஆனால் வான் கோழியோ தற்பாது காப்புத் தண்டவம் மாடத் தயாராகியது !
:)

அது அப்படி இருக்க...

ஜனநாயக அமைப்பின் பாரிய குறைபாடு என்ன ?

Edited by ஜெகுமார்
Link to comment
Share on other sites

உண்மையில் சினிமா கேள்விகள் கொண்டுவர கூடாது என்று தான் நினைத்து இருந்தேன். ஆனால் நம்மில் பலர் இசை பிரியர்கள் என்ற வகையில் இந்த கேள்வியை கேட்கலாம் என நினைக்கிறேன்.

இளையராஜாவின் குழுவில் உள்ள கீ போட்(key board) வாசிப்பவர் குடிபோதையில் இருந்ததால் அன்று 11 வயது பையன் கீ போட் (key board) வாசிக்க இசைஞானியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சிறுவனின் பெயர் என்ன? இசையமைக்கப்பட்ட தமிழ்படம் என்ன?

Link to comment
Share on other sites

[quote name='ஜெகுமார்' date='03 December 2009 - 11:11 AM' timestamp='1259856669'

ஜனநாயக அமைப்பின் பாரிய குறைபாடு என்ன ?

1.2 லட்சம் வாக்காளர்கள் உள்ள ஒரு தொகுதியில் 40 வாக்கை (கள்ள வாக்காக பெற்றவரும்)அமைச்சராக முடியும். உ+ம்: டக்ளஸ் தேவானந்தா.

2.ஒரு தொகுதியில் வென்ற வேட்பாளர் அதிகூடிய வாக்கை பெற்று வெற்றி கொள்கிறார் என்போம். ஆனால் மறுபக்கம் பார்த்தால் அவருக்கு எதிராக வாக்களித்தவர்களின் வீதம் அதிகம். எப்படி அதிகப்படியான வாக்கால் என்ற சனநாயக சொற்பதம் அநியாயம் ஆகி விடாதா? இது ஆசிய நாடுகளுக்கும் பொருந்தும். மேலைதேய நாடுகளுக்கும் பொருந்த்தும்.

3.

சில மக்கள் தமது வாக்களிக்கவில்லை எனில் அதுவும் ஜனநாயக ரீதியில் அம்மக்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்றே அர்த்தம். அதாவது தமது கோரிக்கைகளை யாராலும் நிறைவேற்ற முடியவில்லை என்பதேயாகும்.இவர்களின் வீதம் மிக அதிகமாக இருந்தால் கூட எந்த ஜனநாயக நாடுகளும் இவர்களை கண்டு கொள்வதில்லை? இது தான் ஜனநாயகத்தின் மிக பெரிய ஓட்டை.தமது ஓட்டையை நிவாரணம் செய்ய கொமியீனிச பூச்சாண்டி காட்டுவது அல்லது பயங்கரவாதம் என பூச்சாண்டி காட்டுவது தான் காலத்தின் நியதியா?

4.எப்படி பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆக ஏழைகள் தொடர்ந்தும் ஏழைகளாவே இருக்கிறார்கள். ?இது அமெரிக்காவுக்கும் பொருந்தும் இந்தியாவுக்கும் பொருந்தும்.

Link to comment
Share on other sites

11 வயது பையன் கீ போட் (key board) வாசிக்க இசைஞானியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சிறுவனின் பெயர் என்ன? இசையமைக்கப்பட்ட தமிழ்படம் என்ன?

ஏ. ஆர். ரஹ்மான், அன்னக்கிளி படத்திற்காக.

Link to comment
Share on other sites

...

2.ஒரு தொகுதியில் வென்ற வேட்பாளர் அதிகூடிய வாக்கை பெற்று வெற்றி கொள்கிறார் என்போம். ஆனால் மறுபக்கம் பார்த்தால் அவருக்கு எதிராக வாக்களித்தவர்களின் வீதம் அதிகம். எப்படி அதிகப்படியான வாக்கால் என்ற சனநாயக சொற்பதம் அநியாயம் ஆகி விடாதா? இது ஆசிய நாடுகளுக்கும் பொருந்தும். மேலைதேய நாடுகளுக்கும் பொருந்த்தும்.

...

உங்கள் 2 ஆவது பதிலை விளங்கிக் கொள்வது சிறிது சிரமமாக இருந்தாலும், நீங்கள் சொல்லவந்தது சரியான பதிலை அணுகுவதாக உள்ளது ... ஃ nunavilan !! உங்களுக்கு எங்கள் அனைவரது பாராட்டுகள் ... :wub::(:):D :D ... ...

ஜனநாயக அமைப்பின் பாரிய குறைபாடு !

எப்போதும்

பெரும்பான்மை (சில வேளைகளில் 50.1% மாத்திரமே !) சிறுபான்மையை (அனேகமாக 49% தத்திற்கும் மேல் !!)

(5, 10 வருடங்கள் !) நசுக்குவதாகும்

bien dit, beau dit, et tout dit !

Edited by ஜெகுமார்
Link to comment
Share on other sites

ஏ. ஆர். ரஹ்மான், அன்னக்கிளி படத்திற்காக.

மல்லிகை வாசம் ஏ ஆர் ரகுமான் என்பது சரி. படம் மூடுபனி. நன்றி.

http://www.youtube.com/watch?v=vtU4i0KBqag

Link to comment
Share on other sites

1930 - 2006 வரை நடைபெற்ற 18 உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில் 7 நாடுகள் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளன. அவற்றுள் 6 நாடுகள் ஒருமுறையேனும் தமது சொந்த மண்ணில் வைத்துக் கைப்பற்றியுள்ளன. இதுவரை தனது சொந்த மண்ணில் வைத்து உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றாத அந்த மற்ற ஒரு நாடு எது?

  1. ஆர்ஜென்டீனா
  2. இங்கிலாந்து
  3. இத்தாலி
  4. உருகுவே
  5. பிரான்ஸ்
  6. பிரேஸில்
  7. ஜேர்மனி (1954 - 1990 காலங்களில் மேற்கு-ஜேர்மனி)
Edited by ராசராசன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1930 - 2006 வரை நடைபெற்ற 18 உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில் 7 நாடுகள் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிள்ளன. அவற்றுள் 6 நாடுகள் ஒருமுறையேனும் தமது சொந்த மண்ணில் வைத்துக் கைப்பற்றிள்ளன. இதுவரை தனது சொந்த மண்ணில் வைத்து உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றாத அந்த மற்ற ஒரு நாடு எது?

  1. ஆர்ஜென்டீனா
  2. இங்கிலாந்து
  3. இத்தாலி
  4. உருகுவே
  5. பிரான்ஸ்
  6. பிரேஸில்
  7. ஜேர்மனி (1954 - 1990 காலங்களில் மேற்கு-ஜேர்மனி)

இங்கிலாந்து

  • Like 1
  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

உருகுவே

Link to comment
Share on other sites

1930 - 2006 வரை நடைபெற்ற 18 உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில் 7 நாடுகள் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளன. அவற்றுள் 6 நாடுகள் ஒருமுறையேனும் தமது சொந்த மண்ணில் வைத்துக் கைப்பற்றியுள்ளன. இதுவரை தனது சொந்த மண்ணில் வைத்து உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றாத அந்த மற்ற ஒரு நாடு எது?

பிறேசில்

பிரேஸில் என்பது சரியான விடை. பாராட்டுக்கள் நுணா. :D

ரதி, தமிழ் சிறி உங்கள் முயற்சிக்கும் எனது பாராட்டுக்கள். :)


இத்தாலி 4 தடவை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கின்றது (1934, 1938, 1982, 2006). இதில் 1934 இல் 2வது உலகக் கிண்ணப் போட்டி இத்தாலியில் நடைபெற்றது.

ஜேர்மனி 3 தடவை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கின்றது (1954, 1974, 1990). இதில் 1974 இல் 10வது உலகக் கிண்ணப் போட்டி ஜேர்மனியில் நடைபெற்றது.

ஆர்ஜென்டீனா 2 தடவை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கின்றது (1978, 1986). இதில் 1978 இல் 11வது உலகக் கிண்ணப் போட்டி ஆர்ஜென்டீனாவில் நடைபெற்றது.

உருகுவே 2 தடவை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கின்றது (1930, 1950). இதில் 1930 இல் 1வது உலகக் கிண்ணப் போட்டி உருகுவேயில் நடைபெற்றது.

பிரான்ஸ் 1 தடவை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கின்றது (1998). இதில் 1998 இல் 16வது உலகக் கிண்ணப் போட்டி பிரான்ஸில் நடைபெற்றது.

இங்கிலாந்து 1 தடவை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கின்றது (1966). இதில் 1966 இல் 8வது உலகக் கிண்ணப் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது.

பிரேஸில் 5 தடவை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கின்றது (1958, 1962, 1970, 1994, 2002). இதில் எந்த ஒரு கிண்ணமும் பிரேஸிலில் வைத்து வெல்லப்படவில்லை.

  • 1958 - சுவீடன் (6வது உலகக் கிண்ணப் போட்டி)
  • 1962 - சிலி (7வது உலகக் கிண்ணப் போட்டி)
  • 1970 - மெக்ஸிக்கோ (9வது உலகக் கிண்ணப் போட்டி
  • 1994 - அமெரிக்கா (15வது உலகக் கிண்ணப் போட்டி)
  • 2002 - தென்கொரியா/ஜப்பான் (17வது உலகக் கிண்ணப் போட்டி)

1942 மற்றும் 1946 ஆண்டுகளில் 2வது உலகப் போர் காரணமாக உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் ரத்துச்செய்யப்பட்டன.

  • Like 2
Link to comment
Share on other sites

எத்தனை பாகை வெப்பநிலையில் சென்டிகிரேட் (Centigrade) மற்றும் பரனைட் (Fahrenheit) அளவீடுகளில் ஒரே வாசிப்பு காட்டப்படும்?

  • Like 1
Link to comment
Share on other sites

எத்தனை பாகை வெப்பநிலையில் சென்டிகிரேட் (Centigrade) மற்றும் பரனைட் (Fahrenheit) அளவீடுகளில் ஒரே வாசிப்பு காட்டப்படும்?

பரனைட்திலிருந்து சென்டிகிரேட்க்கு மாற்றும் போது

(-40பாகைF - 32பாகை)x 5/9

-72 )x 5/9

=-40பாகைC

சென்டிகிரேட்டிலிருந்து பரனைட்க்குக் மாற்றும் போது

(-40பாகைC x 9/5)+32

-72 + 32

=-40பாகைF

ஃ-40பாகை வெப்பநிலையில் சென்டிகிரேட்(Centigrade) மற்றும் பரனைட்(Fahrenheit) அளவீடுகளில் ஒரே வாசிப்பு காட்டப்படும்.

Edited by குட்டி
Link to comment
Share on other sites

(-40°) என்பது சரியான விடை. பாராட்டுக்கள் குட்டி. :(

(-40°C) = (-40°F)

வெறும் பாராட்டு மட்டுமா ராசராசன்? ஒரு பாலப்பப் பாசல் அனுப்பி இருந்தால் நல்லா இருந்து இருக்கும்...

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.