Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் விறிட்ஜின் நிறம் என்ன? ... வெள்ளை தானே ?...

அப்போ ... பசு என்ன குடிக்கும் ?.

இந்தக் கேள்வியை ஐரோபிய மொழியில் மாற்றி பின்பு ஐரோபியரிடம் (பெரியவர்கள், குழைந்தகள்) கேளுங்கள்

அவர்கள் உடனடியாகக் தரும் முதல் பதிலைதான் கணக்கேடுக்க வேண்டும். அப்படிக் கிடைத்த பெரும்பான்மையான பதில் தான் சாதாரணமான பதில் !!

மேலும் விளக்கம் பின்பு தரப்படக்கூடும்?!

!!!! கவனம் கேள்வி மாற்றப்பட்டுள்ளது !!!உங்கள் கருத்திலும் அதை மாற்றத் தவறாதீர்கள், நன்றி

ex:

your fridge is white, isn't it? ...

OK ... so the cow drink ...?

ton frigo est blanc n'est pas? ...

d'accord ... alors qu'est qu'elle boit la vache ... ?

...

இந்தக் கேள்வியை பெரியவர்கள் , சிறியவர்கள் சிலரிடம் முயற்சி பண்ணிப்பார்த்தேன் ,

பால் என்று பதில் வந்தது. :(

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

உங்கள் விறிட்ஜின் நிறம் என்ன? ... வெள்ளை தானே ?...அப்போ ... பசு என்ன குடிக்கும் ?.

இந்தக் கேள்வியை பெரியவர்கள் , சிறியவர்கள் சிலரிடம் முயற்சி பண்ணிப்பார்த்தேன் ,

பால் என்று பதில் வந்தது. :rolleyes:

பால் சமூக ஓட்டத்துடன் செல்பவர்களின் பதில் (200 பேர்)

கஞ்சி, களனி அல்லது தண்னி சமூக ஓட்டத்திற்கு எதிராகச் செல்பவர்கள் ( அல்லது ஒரே இடத்தில் நிற்பவர்கள்) பதில் (9பேர் :unsure: உங்களுடன் 10 பேர்)

வ்றிட்ஜி (குளிர்சாதன பெட்டி), வெள்ளை நிறம், பசு (மாடு) என்ற சொற்களால்

எங்கள் சிந்தனை தற்போதைய சமூக வழக்கங்களுக் இனங்க வழிநடத்தப்பட்டிருக்க வேண்டும் ...? !

உங்கள் பங்களிப்பிற்கு நன்றி

Edited by ஜெகுமார்
Link to comment
Share on other sites

"கான மயிலாட கண்டிருந்த வான் கோழி தானும் அது வாகப் பாவித்து

பொல்லாச் சிறகு அடித்து ஆடினால் போலவெ கல்லாதான் கற்ற ... "

என்று யார் பாடினார் ?

Link to comment
Share on other sites

"கான மயிலாட கண்டிருந்த வான் கோழி தானும் அது வாகப் பாவித்து

பொல்லாச் சிறகு அடித்து ஆடினால் போலவெ கல்லாதான் கற்ற ... "

என்று யார் பாடினார் ?

ஒளவையார்.

Link to comment
Share on other sites

ஒளவையார்.

ஔவையார் தமிழ் நாட்டில் வாழ்ந்த பெண் புலவர். வள்ளல் அதியமான் அளித்த நெல்லிக்கனியை ஔவையார் உண்டு நீண்ட காலம் வாழ்ந்தார் எனச் சொல்லப்படுகின்றது. அவர் இயற்றிய பிற நூல்கள் கொன்றை வேந்தன், ஆத்தி சூடி, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை முதலியன.

கடவுள் வாழ்த்து

வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்

நோக்கு உண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு

துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு.

நூல்

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி

'என்று தருங்கொல்?' என வேண்டா - நின்று

தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்

தலையாலே தான் தருதலால். 1

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்

கல்மேல் எழுத்துப் போல் காணுமே - அல்லாத

ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்

நீர் மேல் எழுத்துக்கு நேர். 2

இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால்

இன்னா அளவில் இனியவும் - இன்னாத

நாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே

ஆள் இல்லா மங்கைக்கு அழகு. 3

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்

நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு

சுட்டாலும் வெண்மை தரும். 4

அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி

எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த

உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்

பருவத்தால் அன்றிப் பழா. 5

உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்

பற்றலரைக் கண்டால் பணிவரோ? - கல்தூண்

பிளந்து இறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின்

தளர்ந்து வளையுமோ தான். 6

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற

நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்

தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்

குலத்து அளவே ஆகும் குணம். 7

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க

நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு

இணங்கி இருப்பதுவும் நன்று. 8

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற

தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தீயார்

குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு

இணங்கி இருப்பதுவும் தீது. 9

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை. 10

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்

விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்ட பேர்

ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி

ஏற்ற கருமம் செயல். 11

மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம்

உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது

மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்

உண்ணீரும் ஆகி விடும். 12

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்

அவையல்ல நல்ல மரங்கள் - சபை நடுவே

நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய

மாட்டாதவன் நன் மரம். 13

கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி

தானும் அதுவாகப் பாவித்து - தானும் தன்

பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே

கல்லாதான் கற்ற கவி. 14

- www.chennailibrary.com

ஔவயார் என்றுதான் பலர் கூறுகிறார்கள்,

ஆனால் அந்த வான் கோழி எனப்படும் பறவை ஐரோப்பியர்களால் (போர்துக்கேயரால்) தான் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. - மூதாதயர் எப்படி ஓலையில் எழுதினார்கள்...

im0902-08_turky.jpg

imag from www.mazhalaigal.com

சீமைக்கோழி (சீமை = ஐரோப்பா) என்றும் ஆங்கிலத்தில் டர்க்கி என்றும் வான்கோழியை அழைக்கின்றனர். பொதுவாக வான் கோழி 23 கிலோ எடைக் கொண்டது. ஆண் பறவையின் வால் பகுதி விசிறி போல அழகாக விரிந்து சுருங்கும், தன்மையுடையது. கழுத்து பகுதியில் தொங்கிக் கொண்டிருக்கும் பை போன்ற உறுப்பு இவற்றின் மனநிலைக்கு ஏற்றவாறு சிகப்பு, நீலம், வெள்ளை என நிறம் மாறும். இதன் குரல் கேட்க அருவருப்பாக இருக்கும். பெண் வான் கோழி சாம்பல் கலந்த வெளிர்ப் பச்சை நிறத்தில் 20 முதல் 30 முட்டைகள் வரை இட்டு அடைகாக்கும். ஒரே நேரத்தில் குஞ்சுகள் பொரித்து வெளிவருகின்றன. from www.hi2web.com-forum

கினி பறவை அல்லது கினி கோழி பேசன்ட்ஸ் வரிசையை சேர்ந்த குடும்பத்தில் உள்ள வான் கோழி மற்றும் மற்ற பறைவகள் வகையை சேர்ந்தது. பெரும்பாலும் இப்பறவைகள் ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது - a.hscripts.com

நெல்லிக்கனியை உண்டு நீண்ட காலம் வழலாம் என்று நம்ப முடியாது...

ஃ ஔவயார் அத்தப்பாட்டை பாடவில்லை என்றே நான் நம்புகிறேன் ...

(ஔவயார் கண்ட வான் கோழி சீமைகோழியல்ல என்று நிரூபிக்கப் படும்வரை)

... ? அது அப்படியிருக்க ... உங்கள் பதிலுக்கு நன்றி.

Edited by ஜெகுமார்
Link to comment
Share on other sites

அற்புதமான விளக்கம். வாசித்து பயன்பெறுங்கள் ஜெகுமார். :wub:

http://www.tamilauthors.com/01/74.html

அவ்வை யார்?

அவ்வையார் என்ற பெயரை அறியாத தமிழ் அறிந்த தமிழர்கள் அகிலத்தில் எங்குமே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு அவ்வைப்பாட்டியைப்பற்றிய கதைகள் தமிழ் மக்களுக்குப் பிள்ளைப் பராயத்திலேயே சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. ஆரம்ப வகுப்புப் பாடப் புத்தகங்களிலும் அவ்வையாரின் பாடல்கள் இடம்பெறுகின்றன.

...

ஆனால் அவ்வையார் என்ற பெயரில் பல்வேறு பெண்புலவர்கள் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்துள்ளதாக செய்திகள் கிடைக்கின்றன. அவ்வையார் என்ற பெயரில் தமிழ்வளர்த்த புலவர்கள் மூவர் என்று ஆராய்ச்சி முடிவுகள் ஆதாரப்படுத்துகின்றன. அவ்வையார் என்ற பெயரில் சங்ககாலத்தில் ஒரு பெண்புலவர் வாழ்ந்தமைக்குச் சான்றுகள் கிடைக்கின்றன. அவருக்குப் பின் யாராவது ஒரு பெண் கவிதைகள் பாடி, புலவராகத் திகழ்ந்தபோது அவரை அவ்வையார் என்றபெயரால் மக்கள் அழைத்திருக்கக்கூடும்....

-

உங்கள் இனைப்பிற்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வை யார்?

அவ்வையார் என்ற பெயரை அறியாத தமிழ் அறிந்த தமிழர்கள் அகிலத்தில் எங்குமே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு அவ்வைப்பாட்டியைப்பற்றிய கதைகள் தமிழ் மக்களுக்குப் பிள்ளைப் பராயத்திலேயே சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. ஆரம்ப வகுப்புப் பாடப் புத்தகங்களிலும் அவ்வையாரின் பாடல்கள் இடம்பெறுகின்றன.

...

ஆனால் அவ்வையார் என்ற பெயரில் பல்வேறு பெண்புலவர்கள் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்துள்ளதாக செய்திகள் கிடைக்கின்றன. அவ்வையார் என்ற பெயரில் தமிழ்வளர்த்த புலவர்கள் மூவர் என்று ஆராய்ச்சி முடிவுகள் ஆதாரப்படுத்துகின்றன. அவ்வையார் என்ற பெயரில் சங்ககாலத்தில் ஒரு பெண்புலவர் வாழ்ந்தமைக்குச் சான்றுகள் கிடைக்கின்றன. அவருக்குப் பின் யாராவது ஒரு பெண் கவிதைகள் பாடி, புலவராகத் திகழ்ந்தபோது அவரை அவ்வையார் என்றபெயரால் மக்கள் அழைத்திருக்கக்கூடும்....

----

Then

ஔவயார் அத்தப்பாட்டை பாடவில்லை என்றே நான் நம்புகிறேன்

Now

அவ்வை யார்? :wub::D

ஔவயார்

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%94%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

அவ்வை யார்?

auvai.jpgAuvayar.jpg250px-Statue_of_Avvaiyar.jpg

எனக்கு தெரிந்த ஔவையார் என்றால் கே.பி. சுந்தராம்பாள் தான். :lol:

Suntharambal.jpg

சென்று வா மகனே சென்று வா

அறிவை வென்று வா மகனே வென்று வா

கன்று தாயை விட்டு சென்றபின்னும்

கன்று தாயை விட்டு சென்றபின்னும்

அது நின்ற பூமி தன்னை மறப்பதில்லை

சென்று வா மகனே சென்று வா

அறிவை வென்று வா மகனே வென்று வா

அறிவுலகம் உன்னை அழைக்கின்றது

ஏதும் அறியாஅதவன் என்றே நினைக்கின்றது

அரண்மனை வாசல் திறக்கின்றது

அரண்மனை வாசல் திறக்கின்றாது

அங்கே ஆணவம் புன்னகை புரிகின்றது

சென்று வா மகனே சென்று வா

அறிவை வென்று வா மகனே வென்று வா

உண்மையை சொல்வதற்கு படிப்பதற்கு

எல்லாம் உணர்ந்தவர் போல் நடிக்கும் நடிப்பெதற்கு

கண்கண்ட காட்சிகளுக்கு விளக்கெதற்கு – நெஞ்சில்

கள்ளமில்லாதவற்கு பயமெதற்கு

சென்று வா மகனே சென்று வா

அறிவை வென்று வா மகனே வென்று வா

நீ இருக்கும் இடத்தில் நானிருப்பேன்

உன் நிழலிலும் பொருளாக குடியிருப்பேன்

தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை – இந்த

தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை

எந்த சபையிலும் உனக்கு நடுக்கமில்லை

சென்று வா மகனே சென்று வா

அறிவை வென்று வா மகனே வென்று வா

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

...

...

அதுதான் தமிழ்: உபயோகிக்க முடியாத தரவுகள், தமிழ் சினிமாக்களைப் போல ...

அப்போ சரியான பதில் ?

யாரோ ஒருவர் பாடடினார் என்பதும் அவர் ஒரு தமிழர் என்பதும் உண்மையிலும் உண்மை .

பொய்யிலும் பொய், மயில் ஆடக் கண்ட வான் கோழி தானும் சிறகை விரித்து ஆடியது, என்பதாம்.

உண்மை என்னவென்றால் , வான் கோழியை கண்ட மயில் , அது ஒரு புது நாட்டுப் பெண் மயில் என்று காதல் கொண்டு தந்திர நடனமடியது ! ஆனால் வான் கோழியோ தற்பாது காப்புத் தண்டவம் மாடத் தயாராகியது !
:)

அது அப்படி இருக்க...

ஜனநாயக அமைப்பின் பாரிய குறைபாடு என்ன ?

Edited by ஜெகுமார்
Link to comment
Share on other sites

உண்மையில் சினிமா கேள்விகள் கொண்டுவர கூடாது என்று தான் நினைத்து இருந்தேன். ஆனால் நம்மில் பலர் இசை பிரியர்கள் என்ற வகையில் இந்த கேள்வியை கேட்கலாம் என நினைக்கிறேன்.

இளையராஜாவின் குழுவில் உள்ள கீ போட்(key board) வாசிப்பவர் குடிபோதையில் இருந்ததால் அன்று 11 வயது பையன் கீ போட் (key board) வாசிக்க இசைஞானியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சிறுவனின் பெயர் என்ன? இசையமைக்கப்பட்ட தமிழ்படம் என்ன?

Link to comment
Share on other sites

[quote name='ஜெகுமார்' date='03 December 2009 - 11:11 AM' timestamp='1259856669'

ஜனநாயக அமைப்பின் பாரிய குறைபாடு என்ன ?

1.2 லட்சம் வாக்காளர்கள் உள்ள ஒரு தொகுதியில் 40 வாக்கை (கள்ள வாக்காக பெற்றவரும்)அமைச்சராக முடியும். உ+ம்: டக்ளஸ் தேவானந்தா.

2.ஒரு தொகுதியில் வென்ற வேட்பாளர் அதிகூடிய வாக்கை பெற்று வெற்றி கொள்கிறார் என்போம். ஆனால் மறுபக்கம் பார்த்தால் அவருக்கு எதிராக வாக்களித்தவர்களின் வீதம் அதிகம். எப்படி அதிகப்படியான வாக்கால் என்ற சனநாயக சொற்பதம் அநியாயம் ஆகி விடாதா? இது ஆசிய நாடுகளுக்கும் பொருந்தும். மேலைதேய நாடுகளுக்கும் பொருந்த்தும்.

3.

சில மக்கள் தமது வாக்களிக்கவில்லை எனில் அதுவும் ஜனநாயக ரீதியில் அம்மக்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்றே அர்த்தம். அதாவது தமது கோரிக்கைகளை யாராலும் நிறைவேற்ற முடியவில்லை என்பதேயாகும்.இவர்களின் வீதம் மிக அதிகமாக இருந்தால் கூட எந்த ஜனநாயக நாடுகளும் இவர்களை கண்டு கொள்வதில்லை? இது தான் ஜனநாயகத்தின் மிக பெரிய ஓட்டை.தமது ஓட்டையை நிவாரணம் செய்ய கொமியீனிச பூச்சாண்டி காட்டுவது அல்லது பயங்கரவாதம் என பூச்சாண்டி காட்டுவது தான் காலத்தின் நியதியா?

4.எப்படி பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆக ஏழைகள் தொடர்ந்தும் ஏழைகளாவே இருக்கிறார்கள். ?இது அமெரிக்காவுக்கும் பொருந்தும் இந்தியாவுக்கும் பொருந்தும்.

Link to comment
Share on other sites

11 வயது பையன் கீ போட் (key board) வாசிக்க இசைஞானியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சிறுவனின் பெயர் என்ன? இசையமைக்கப்பட்ட தமிழ்படம் என்ன?

ஏ. ஆர். ரஹ்மான், அன்னக்கிளி படத்திற்காக.

Link to comment
Share on other sites

...

2.ஒரு தொகுதியில் வென்ற வேட்பாளர் அதிகூடிய வாக்கை பெற்று வெற்றி கொள்கிறார் என்போம். ஆனால் மறுபக்கம் பார்த்தால் அவருக்கு எதிராக வாக்களித்தவர்களின் வீதம் அதிகம். எப்படி அதிகப்படியான வாக்கால் என்ற சனநாயக சொற்பதம் அநியாயம் ஆகி விடாதா? இது ஆசிய நாடுகளுக்கும் பொருந்தும். மேலைதேய நாடுகளுக்கும் பொருந்த்தும்.

...

உங்கள் 2 ஆவது பதிலை விளங்கிக் கொள்வது சிறிது சிரமமாக இருந்தாலும், நீங்கள் சொல்லவந்தது சரியான பதிலை அணுகுவதாக உள்ளது ... ஃ nunavilan !! உங்களுக்கு எங்கள் அனைவரது பாராட்டுகள் ... :wub::(:):D :D ... ...

ஜனநாயக அமைப்பின் பாரிய குறைபாடு !

எப்போதும்

பெரும்பான்மை (சில வேளைகளில் 50.1% மாத்திரமே !) சிறுபான்மையை (அனேகமாக 49% தத்திற்கும் மேல் !!)

(5, 10 வருடங்கள் !) நசுக்குவதாகும்

bien dit, beau dit, et tout dit !

Edited by ஜெகுமார்
Link to comment
Share on other sites

ஏ. ஆர். ரஹ்மான், அன்னக்கிளி படத்திற்காக.

மல்லிகை வாசம் ஏ ஆர் ரகுமான் என்பது சரி. படம் மூடுபனி. நன்றி.

http://www.youtube.com/watch?v=vtU4i0KBqag

Link to comment
Share on other sites

1930 - 2006 வரை நடைபெற்ற 18 உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில் 7 நாடுகள் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளன. அவற்றுள் 6 நாடுகள் ஒருமுறையேனும் தமது சொந்த மண்ணில் வைத்துக் கைப்பற்றியுள்ளன. இதுவரை தனது சொந்த மண்ணில் வைத்து உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றாத அந்த மற்ற ஒரு நாடு எது?

  1. ஆர்ஜென்டீனா
  2. இங்கிலாந்து
  3. இத்தாலி
  4. உருகுவே
  5. பிரான்ஸ்
  6. பிரேஸில்
  7. ஜேர்மனி (1954 - 1990 காலங்களில் மேற்கு-ஜேர்மனி)
Edited by ராசராசன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1930 - 2006 வரை நடைபெற்ற 18 உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில் 7 நாடுகள் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிள்ளன. அவற்றுள் 6 நாடுகள் ஒருமுறையேனும் தமது சொந்த மண்ணில் வைத்துக் கைப்பற்றிள்ளன. இதுவரை தனது சொந்த மண்ணில் வைத்து உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றாத அந்த மற்ற ஒரு நாடு எது?

  1. ஆர்ஜென்டீனா
  2. இங்கிலாந்து
  3. இத்தாலி
  4. உருகுவே
  5. பிரான்ஸ்
  6. பிரேஸில்
  7. ஜேர்மனி (1954 - 1990 காலங்களில் மேற்கு-ஜேர்மனி)

இங்கிலாந்து

  • Like 1
  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

உருகுவே

Link to comment
Share on other sites

1930 - 2006 வரை நடைபெற்ற 18 உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில் 7 நாடுகள் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளன. அவற்றுள் 6 நாடுகள் ஒருமுறையேனும் தமது சொந்த மண்ணில் வைத்துக் கைப்பற்றியுள்ளன. இதுவரை தனது சொந்த மண்ணில் வைத்து உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றாத அந்த மற்ற ஒரு நாடு எது?

பிறேசில்

பிரேஸில் என்பது சரியான விடை. பாராட்டுக்கள் நுணா. :D

ரதி, தமிழ் சிறி உங்கள் முயற்சிக்கும் எனது பாராட்டுக்கள். :)


இத்தாலி 4 தடவை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கின்றது (1934, 1938, 1982, 2006). இதில் 1934 இல் 2வது உலகக் கிண்ணப் போட்டி இத்தாலியில் நடைபெற்றது.

ஜேர்மனி 3 தடவை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கின்றது (1954, 1974, 1990). இதில் 1974 இல் 10வது உலகக் கிண்ணப் போட்டி ஜேர்மனியில் நடைபெற்றது.

ஆர்ஜென்டீனா 2 தடவை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கின்றது (1978, 1986). இதில் 1978 இல் 11வது உலகக் கிண்ணப் போட்டி ஆர்ஜென்டீனாவில் நடைபெற்றது.

உருகுவே 2 தடவை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கின்றது (1930, 1950). இதில் 1930 இல் 1வது உலகக் கிண்ணப் போட்டி உருகுவேயில் நடைபெற்றது.

பிரான்ஸ் 1 தடவை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கின்றது (1998). இதில் 1998 இல் 16வது உலகக் கிண்ணப் போட்டி பிரான்ஸில் நடைபெற்றது.

இங்கிலாந்து 1 தடவை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கின்றது (1966). இதில் 1966 இல் 8வது உலகக் கிண்ணப் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது.

பிரேஸில் 5 தடவை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கின்றது (1958, 1962, 1970, 1994, 2002). இதில் எந்த ஒரு கிண்ணமும் பிரேஸிலில் வைத்து வெல்லப்படவில்லை.

  • 1958 - சுவீடன் (6வது உலகக் கிண்ணப் போட்டி)
  • 1962 - சிலி (7வது உலகக் கிண்ணப் போட்டி)
  • 1970 - மெக்ஸிக்கோ (9வது உலகக் கிண்ணப் போட்டி
  • 1994 - அமெரிக்கா (15வது உலகக் கிண்ணப் போட்டி)
  • 2002 - தென்கொரியா/ஜப்பான் (17வது உலகக் கிண்ணப் போட்டி)

1942 மற்றும் 1946 ஆண்டுகளில் 2வது உலகப் போர் காரணமாக உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் ரத்துச்செய்யப்பட்டன.

  • Like 2
Link to comment
Share on other sites

எத்தனை பாகை வெப்பநிலையில் சென்டிகிரேட் (Centigrade) மற்றும் பரனைட் (Fahrenheit) அளவீடுகளில் ஒரே வாசிப்பு காட்டப்படும்?

  • Like 1
Link to comment
Share on other sites

எத்தனை பாகை வெப்பநிலையில் சென்டிகிரேட் (Centigrade) மற்றும் பரனைட் (Fahrenheit) அளவீடுகளில் ஒரே வாசிப்பு காட்டப்படும்?

பரனைட்திலிருந்து சென்டிகிரேட்க்கு மாற்றும் போது

(-40பாகைF - 32பாகை)x 5/9

-72 )x 5/9

=-40பாகைC

சென்டிகிரேட்டிலிருந்து பரனைட்க்குக் மாற்றும் போது

(-40பாகைC x 9/5)+32

-72 + 32

=-40பாகைF

ஃ-40பாகை வெப்பநிலையில் சென்டிகிரேட்(Centigrade) மற்றும் பரனைட்(Fahrenheit) அளவீடுகளில் ஒரே வாசிப்பு காட்டப்படும்.

Edited by குட்டி
Link to comment
Share on other sites

(-40°) என்பது சரியான விடை. பாராட்டுக்கள் குட்டி. :(

(-40°C) = (-40°F)

வெறும் பாராட்டு மட்டுமா ராசராசன்? ஒரு பாலப்பப் பாசல் அனுப்பி இருந்தால் நல்லா இருந்து இருக்கும்...

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
    • தேர்தல் வருகின்றது என்பதற்காகவா.............🙃.........சரத் வீரசேகர உட்பட இன்னும் பலர் தொடர்ச்சியாக இப்படியான கருத்துகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றார்களே. நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன். தேர்தல் முடிந்த பின், இவருக்கு ஒரு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் திட்டமும் இருக்கலாம். அமெரிக்கா, இந்தியா, இலங்கை - இந்த மூன்று இடங்களில் இருந்து வரும் அரசியல் செய்திகள் ஒரே மாதிரியே இருக்கின்றன......😀
    • ஸ்கன்டினேவிய நாடுகளில் மத ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்தும் புட்டினின் முயற்சியாக இருக்குமோ?  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.