Jump to content

கொண்டைக் கடலைச் சுண்டல்


Recommended Posts

பெரும்பாலும் கடலை/ பயறு வகைகளை சமைப்பது என்றால், ஊரில் முதல் நாளே தண்ணீரில் நன்கு ஊறவைத்து அடுத்த நாள் அதனை நன்கு அவித்துத் தான் சாப்பிட்டோம்... ஆனால், இங்கே அவற்றை அவித்து பேணிகளில் அடைத்து வாங்கக் கூடியதாக இருக்கிறது. இவற்றை மிக்கக் குறுகிய நேரத்திற்குள் சமைக்கவும் முடிகிறது.

கொண்டைக் கடலைச் சுண்டல்

april_008.jpg

தேவையான பொருட்கள்:

கொண்டைக் கடலை- 500g

வெங்காயம் சிறு துண்டுகளாக வெட்டியது-1

பச்சை/ செத்தல் மிகளாய்-2

கருவேப்பிலை/ கறிவேப்பிலை-10

கொத்தமல்லி இலை நன்கு அரிந்தது- தேவைக்கேற்ப

இஞ்சி உள்ளி நன்கு அரைத்தது- 1 தேக்கரண்டி

கடுகு- 1/2 தேக்கரண்டி

சின்னச் சீரகம்- 1/2 தேக்கரண்டி

மிளகாய்த் தூள்- 1/2 தேக்கரண்டி

உப்பு- தேவைகேற்ப

தேசிக்காய்ப் புளி- தேவைகேற்ப

எண்ணெய்- 3 மேசைக் கரண்டி

செய்முறை:

1) சூடான சட்டியில், சிறிதாக வெட்டியா வெங்காயத்தை எண்ணியில் போட்டு தாழிக்கவும்.

2) அதனோடு உப்பு, கருவேப்பிலை, மிளகாய், கடுகு, சீரகம், இஞ்சி, உள்ளி இவற்றையும் கலந்தது 1 நிமிடம் குறைந்த வெப்பத்தில் விட்டு தாழிக்கவும்.

3) கொண்டைக் கடலையை கலவையுடன் சேர்த்து 2 நிமிடங்கள் மிதமான வெப்பத்தில் கலந்து இறக்கவும்.

4) இறுதியில், தேசிக்காய்ப் புளி, மல்லி இலை இவற்றைச் சேர்க்கவும்.

(ஊரில் அம்மா செய்யும் போது தேங்காய்த் துண்டுகளும் சேர்த்து செய்வதுண்டு... இங்கே தேங்காய்த் துண்டுகள் தவிர்க்கப்பட்டுள்ளது... :()

Link to comment
Share on other sites

குட்டி அண்ணா இஞ்சி மணம் ஒரு மாதிரி இருக்காதா அதுவும் கடலைக்கு.. இணைப்பிற்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி,

கொண்டைக்கடலை அல்லது கொண்டல் கடலை எது சரியான பதம்?

Link to comment
Share on other sites

குட்டி அண்ணா இஞ்சி மணம் ஒரு மாதிரி இருக்காதா அதுவும் கடலைக்கு.. இணைப்பிற்கு நன்றி

பொதுவாக கடலை வகைகள் வாவுப் பதார்த்தமாக இருப்பதால், உள்ளி-இஞ்சி சேர்ப்பது வழமை. நன்கு அரைத்த பின்பு தானே சிறிதளவு போடும் படி குறிப்பிட்டு உள்ளேன், நன்றாகத்தான் இருந்தது. உள்ளி மணத்தை விட இஞ்சி மணம் பறவாய் இல்லை...

சரி, உங்களுக்கு இஞ்சி பிடிக்காவிட்டால் தவிர்த்துக் கொள்ளுங்கோ (முடிந்தால் ஜிஞ்சர் பீர் நல்லது ஒரு கிளாஸ் எடுங்கோ) :)

Link to comment
Share on other sites

பொதுவாக கடலை வகைகள் வாவுப் பதார்த்தமாக இருப்பதால், உள்ளி-இஞ்சி சேர்ப்பது வழமை. நன்கு அரைத்த பின்பு தானே சிறிதளவு போடும் படி குறிப்பிட்டு உள்ளேன், நன்றாகத்தான் இருந்தது. உள்ளி மணத்தை விட இஞ்சி மணம் பறவாய் இல்லை...

சரி, உங்களுக்கு இஞ்சி பிடிக்காவிட்டால் தவிர்த்துக் கொள்ளுங்கோ (முடிந்தால் ஜிஞ்சர் பீர் நல்லது ஒரு கிளாஸ் எடுங்கோ) :)

எனக்கு இஞ்சி பிடிப்பதில்லை இஞ்சியை பார்த்ததுமே வாமிற் எடுக்கத்தொடங்கி விடுவன்.. இஞ்சி என்று எழுதியிருந்தாலே தொடவே மாட்டேன்..

Link to comment
Share on other sites

குட்டி,

கொண்டைக்கடலை அல்லது கொண்டல் கடலை எது சரியான பதம்?

அக்கா, ஊரில் கொண்டைக் கடலை என்று தான் சொல்லிக் கேள்விப் பட்டுள்ளேன்.. ஒரு வேளை இது பேச்சு வழக்காக கூட இருக்கலாம் என்று இணையத்தில் தேடினேன்..

http://ta.wikipedia....i/கொண்டைக்_கடலை

எனக்கு இஞ்சி பிடிப்பதில்லை இஞ்சியை பார்த்ததுமே வாமிற் எடுக்கத்தொடங்கி விடுவன்.. இஞ்சி என்று எழுதியிருந்தாலே தொடவே மாட்டேன்..

இஞ்சி சேர்த்துப் பாருங்க, வாமிட் வாராது சுஜி... :lol:

சரி சரி நீங்கள் இஞ்சியைத் தவிர்த்து செய்து பாருங்கள்.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கடலை விருப்பம் செய்தால் கணக்க சாப்பிட்டு விடுவேன்...கணக்க சாப்பிடுவது கூடாது என சொல்கிறார்கள்...ரின்னில் வரும் கடலையை விட ஊற போட்டு செய்யும் கடலை தான் சுவை கூட அத்தோட தேங்காய் சொட்டுப் போட்டால் அந்த மாதிரி இருக்கும் சொல்லி வேலையில்லை...கறுப்பியும் கொஞ்ச காலத்திற்கு முந்தி சுவையான செய்முறையில் கடலை செய்வது எப்படி என கேட்டதாக ஞாபகம் அதற்கு பிறகு ஆள் யாழுக்கு வாறதையே குறைச்சிட்டார் :lol:

Link to comment
Share on other sites

எனக்கு கடலை விருப்பம் செய்தால் கணக்க சாப்பிட்டு விடுவேன்...கணக்க சாப்பிடுவது கூடாது என சொல்கிறார்கள்...ரின்னில் வரும் கடலையை விட ஊற போட்டு செய்யும் கடலை தான் சுவை கூட அத்தோட தேங்காய் சொட்டுப் போட்டால் அந்த மாதிரி இருக்கும் சொல்லி வேலையில்லை...கறுப்பியும் கொஞ்ச காலத்திற்கு முந்தி சுவையான செய்முறையில் கடலை செய்வது எப்படி என கேட்டதாக ஞாபகம் அதற்கு பிறகு ஆள் யாழுக்கு வாறதையே குறைச்சிட்டார் :lol:

ரதி எதையும் அளவோடு சாப்பிட்டால் பிரச்சனை குறைவு... ^_^

நீங்கள் சொல்வது போல் தேங்காய்ச் சொட்டு சேர்த்தல் நன்றாகத் தான் இருக்கும்! :)

கடலைவகைகளை சரியாக ஊற வைக்காமல்/அவிக்காமல் சாப்பிட்டால் அதில் நச்சுத்தன்மை ஊறுமென கேள்விப் பட்டுள்ளேன்.

red kidney beans ல் நச்சுத் தன்மை அதிகம் இருப்பது என்பது உண்மை..

http://www.foodrefer...npoisoning.html

கறுப்பி இப்போ இதைவிட திறமான கடலை போடுவார்... ச்சீ!!! சாப்பிடுவார்... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி குட்டி,

நான் நினைக்கின்றேன் இஞ்சி உள்ளி ஆகியவற்றை தவிர்த்து செய்யலாம்.

1636993768_7695cd3e1f.jpg

கரம் மசாலா போட்டு செய்தது இதுவும் மிகவும் சுவையாக இருக்கும். :)

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி குட்டி,

நான் நினைக்கின்றேன் இஞ்சி உள்ளி ஆகியவற்றை தவிர்த்து செய்யலாம்.

1636993768_7695cd3e1f.jpg

கரம் மசாலா போட்டு செய்தது இதுவும் மிகவும் சுவையாக இருக்கும். :)

கருத்துக்கு நன்றி தமிழரசு :)

Link to comment
Share on other sites

எனக்கு இஞ்சி பிடிப்பதில்லை இஞ்சியை பார்த்ததுமே வாமிற் எடுக்கத்தொடங்கி விடுவன்.. இஞ்சி என்று எழுதியிருந்தாலே தொடவே மாட்டேன்..

இஞ்சி குரங்குக்குத்தானே பிடிக்காது??!! :unsure: உங்களுக்கு ஏன்??!! :D

Link to comment
Share on other sites

இஞ்சி குரங்குக்குத்தானே பிடிக்காது??!! :unsure: உங்களுக்கு ஏன்??!! :D

நீங்களே சொல்லிவிட்டீர்கள் அண்ணா குரங்குக்குத்தான் இஞ்சி பிடிக்காது என்று அப்புறம் என்ன கேள்வி வேண்டி இருக்கு..:icon_mrgreen::icon_mrgreen:

Link to comment
Share on other sites

குட்டி

butter beans (தமிழ் தெரியவில்லை) உம் சுண்டலுக்கு நன்றாக இருக்கும். அவித்ததை அல்லது ரின்னில் வருவதை கொட்டி உடனடியாக இறக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

இஞ்சி குரங்குக்குத்தானே பிடிக்காது??!! :unsure: உங்களுக்கு ஏன்??!! :D

நீங்களே சொல்லிவிட்டீர்கள் அண்ணா குரங்குக்குத்தான் இஞ்சி பிடிக்காது என்று அப்புறம் என்ன கேள்வி வேண்டி இருக்கு.. :icon_mrgreen::icon_mrgreen:

பாசப் பறவைகளின் ரவுசு தாங்க முடியலடா சாமி... :lol: :D

குட்டி

butter beans (தமிழ் தெரியவில்லை) உம் சுண்டலுக்கு நன்றாக இருக்கும். அவித்ததை அல்லது ரின்னில் வருவதை கொட்டி உடனடியாக இறக்க வேண்டும்.

இன்று வரை butter beans ல் செய்து பார்க்கவில்லை, நேரம் கிடைக்கும் போது செய்து பார்த்து சொல்லுகிறேன், உங்கள் கருத்திற்கும் நன்றி தப்பிலி! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கடலை எண்டால் நல்ல விருப்பம்...அதுவும் புட்டும் கடலையுமெண்டால் சொல்லி வேலையில்லை.....கடலைவகையளை முதல் அவியல்தண்ணியை ஊற்றிவிட்டு இரண்டாம்தரம் புதிதாகதண்ணீர்விட்டு நன்றாக அவித்து சமைக்க வேண்டும்.பின் விளைவுகள் முன்விளைவுகள் வராது.குட்டியருக்கு கடலையெண்டால் விருப்பமோ? :D

Link to comment
Share on other sites

குட்டி,கடலை செய்முறைக்கு நன்றி.கோயில்களில் தரும் கடலையின் சுவையே தனி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமான வெள்ளிக்கிழமை மாலை நேரங்களில் கொண்டல் கடலை சுண்டல் வீட்டில் செய்வார்கள்.

இதுவரை... இஞ்சி, உள்ளி போட்டு செய்யவில்லை. அடுத்தமுறை அதையும் போட்டு செய்து பார்ப்போம்.

இணைப்பிற்கு நன்றி குட்டி.

Link to comment
Share on other sites

எனக்கு கடலை எண்டால் நல்ல விருப்பம்...அதுவும் புட்டும் கடலையுமெண்டால் சொல்லி வேலையில்லை.....கடலைவகையளை முதல் அவியல்தண்ணியை ஊற்றிவிட்டு இரண்டாம்தரம் புதிதாகதண்ணீர்விட்டு நன்றாக அவித்து சமைக்க வேண்டும்.பின் விளைவுகள் முன்விளைவுகள் வராது.குட்டியருக்கு கடலையெண்டால் விருப்பமோ? :D

ஊரில் இருக்கும் போது பின்னேரப் பொழுதில் தேநீரோடு அம்மா செய்வதுண்டு... ஆரம்பத்தில் தினமும் கேட்டுச் சாப்பிடுவோம் :wub: எங்கட வீட்டில attached பாத்ரூம் இருந்ததால அடிக்கடி அம்மா கடலை செய்வதை குறைச்சிட்டா... :lol::D

உங்கள் கருத்திற்கும் நன்றி கு.சா அண்ணா :)

Link to comment
Share on other sites

குட்டி,கடலை செய்முறைக்கு நன்றி.கோயில்களில் தரும் கடலையின் சுவையே தனி.

உண்மை தான் நுணா... எமது குடும்ப நண்பர்கள் நவராத்திரி 9 நாளும் அவர்கள் வீட்டில் உள்ள சிறிய கோவிலில் பூசை செய்வார்கள். பின்னேரம் இரண்டு மணியில் இருந்தே அக்கம் பக்கத்தில் இருக்கும் அன்டிமார் எல்லாரும் வந்து எல்லாவிதாமா பலகாரங்களும் செய்வார்கள் பூசை முடிய அதனைப் பகிர்ந்து எல்லார் வீட்டிற்கும் அனுப்புவார்கள்.. அதில் எனக்கு கடலையும், மோதகமும் தான் பிடிக்கும்... அதன் ருசியே தனி! :wub: ஒரு தடவை அந்த அன்டி பிள்ளையார் மோதகம் என்று ஒன்று எனக்கென்று தந்தவ.... :D உங்கள் கருத்திற்கும் நன்றி நுணா! :)

அநேகமான வெள்ளிக்கிழமை மாலை நேரங்களில் கொண்டல் கடலை சுண்டல் வீட்டில் செய்வார்கள்.

இதுவரை... இஞ்சி, உள்ளி போட்டு செய்யவில்லை. அடுத்தமுறை அதையும் போட்டு செய்து பார்ப்போம்.

இணைப்பிற்கு நன்றி குட்டி.

நானும் வேறு இடங்களில் கடலை சாப்பிடுள்ளேன், இஞ்சி உள்ளி இருந்ததாகத் தெரியவில்லை... ஆனால் இங்கட இம்சை தாங்க இல்லாமல் தான் அம்மா இஞ்சி உள்ளி சேர்த்தாவோ தெரியாது... நன்றாக அரைத்துப் போடவேண்டும், அப்போது தான் கடிபடாது...உங்கள் கருத்திற்கும் நன்றி சிறி அண்ணா! :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.