Jump to content

மெல்ல மெல்ல புலிக்கொடி இனி..??


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போன இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளுளும் பிரான்சில் நடந்த இரு விசேசங்களில் ஒரு விடயம் முக்கிய இடத்தை பிடித்திருந்ததை கவனித்தேன். அதை இஙங்கு பதிகின்றேன்.

08ந்திகதி ஞாயிறு ஒரு சாமத்தியவீடு அங்கு நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னர் மண்டபத்தின் இரு பக்கங்களிலும் புலிக்கொடி பறக்கவிடப்பட்டு படங்ககள்வீடியோக்ககள் ஏடுக்கப்பட்ட பின்னரே நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. இதை ஒருவர் எனக்கு அறியத்தந்தார்.

நேற்று 15ந்திகதி ஞாயிறு ஒரு பிறந்ததினக்கொண்டாட்டத்திற்கு போயிருந்தேன். கொஞ்சம் தாமதமாக சென்றதால் அவசரமாக உள்ளிட்ட என்னை வரவேற்றது தலைவருடைய படத்துக்குப்பின்னால் இருநந்து விளையாடும் அந்தப்பிள்ளையின் படம்தான். இத்தனைக்கும்அவரது பெற்றோர் புலி ஆதரவாளர்களோ விசுவாசிகளோ கிடையாது ?த எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. காரணம் ஊருக்கு போவதற்காக பலரும் ஒழிந்து செய்யும் ஒரு விடயத்தை ஐநூறு பேரைக்கூட்டி அதிலும் பரிசில் கடை வைத்திருக்கும் ஒருவர் பகிரங்கமாக செய்வதென்பது ஆஆச்சசரியமான விடயம்.

மேடைகளில் ஊர்வலங்களில் புலிக்கொடியை விட்டுவிட்டு போராடவேணும் என தலைவர்கள் முடிவெடுக்க.........

அதை தங்கள் நிகழ்ச்சிகளில் முக்கியப்படுத்த மக்கள் தொடங்கிவிட்டார்களா..??

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

மேடைகளில் ஊர்வலங்களில் புலிக்கொடியை விட்டுவிட்டு போராடவேணும் என தலைவர்கள் முடிவெடுக்க.........

அதை தங்கள் நிகழ்ச்சிகளில் முக்கியப்படுத்த மக்கள் தொடங்கிவிட்டார்களா..??

ஆம் இது கூட எமக்கு பாரிய ஓர் வெற்றியென்றே நாம் கருதலாம், புலிக்கொடியை தவிருங்கள் ,திரும்பிப்பார்க்கமாட்டார்கள் ,\

என்றெல்லாம் யார் யார் எல்லாம் கூறினாலும், அல்லது,எழுதினாலும் மக்கள் என்ன நினைக்கிறார்களோ ,என்ன செய்கிறார்களோ

அதுதான் நிஜம் ,இது நமக்கு நல்ல ஒரு ஆரம்பமே என்று கருதலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெல்ல மெல்ல புலிக்கொடி மேலே பறக்கிறது.  விசுகு அந்த தமிழீழ ஆதரவாளர்களுக்கு எனது நன்றியை தெரிவியுங்கள். 

Situation Song? Why not?

Link to comment
Share on other sites

இந்த பழக்கம், வழக்கம் வளரட்டும், பரவட்டும்.

அத்துடன் மக்களுக்கும், மாவீரர்களுக்கும் அகவணக்கமும் செலுத்தலாம்.

இதை யாரும் பயங்கரவாதம் என்றோ இல்லை அரசியல் நடவடிக்கைகளுக்கு தடையாகும் என்றோ தடை போட முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு தான் அடம் பிடித்தாலும்

தமிழர்கள் புலிகள்

புலிகள் தமிழர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவ்வளவு தான் அடம் பிடித்தாலும்

தமிழர்கள் புலிகள்

புலிகள் தமிழர்கள்.

ஒன்றும் செய்ய முடியாது.  மரபணுவில் ஊறிவிட்டது. 

Link to comment
Share on other sites

தனிப்பட்ட நிகழ்ச்சியின் போது மாவீரருக்கு அஞ்சலி செலுத்தி புலிகொடியேற்றி நிகழ்ச்சியை நடாத்தினால் இளம் தலைமுறை மனதில் அது பதிவதுடன் அவர்கள் அதனைப் பின்பற்றவும் வாய்ப்பேற்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் எம் மண்ணுக்காகவும் எமக்காகவும் மரணித்த மாவீரர்களுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்திவிட்டு உங்கள் நிகழ்வுகளைத் தொடருங்கள்.

அதுவே எமக்குள் ஒரு ஆழமான உணர்வுகளைத் தூண்டிவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போன இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளுளும் பிரான்சில் நடந்த இரு விசேசங்களில் ஒரு விடயம் முக்கிய இடத்தை பிடித்திருந்ததை கவனித்தேன். அதை இஙங்கு பதிகின்றேன்.

08ந்திகதி ஞாயிறு ஒரு சாமத்தியவீடு அங்கு நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னர் மண்டபத்தின் இரு பக்கங்களிலும் புலிக்கொடி பறக்கவிடப்பட்டு படங்ககள்வீடியோக்ககள் ஏடுக்கப்பட்ட பின்னரே நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. இதை ஒருவர் எனக்கு அறியத்தந்தார்.

நேற்று 15ந்திகதி ஞாயிறு ஒரு பிறந்ததினக்கொண்டாட்டத்திற்கு போயிருந்தேன். கொஞ்சம் தாமதமாக சென்றதால் அவசரமாக உள்ளிட்ட என்னை வரவேற்றது தலைவருடைய படத்துக்குப்பின்னால் இருநந்து விளையாடும் அந்தப்பிள்ளையின் படம்தான். இத்தனைக்கும்அவரது பெற்றோர் புலி ஆதரவாளர்களோ விசுவாசிகளோ கிடையாது ?த எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. காரணம் ஊருக்கு போவதற்காக பலரும் ஒழிந்து செய்யும் ஒரு விடயத்தை ஐநூறு பேரைக்கூட்டி அதிலும் பரிசில் கடை வைத்திருக்கும் ஒருவர் பகிரங்கமாக செய்வதென்பது ஆஆச்சசரியமான விடயம்.

மேடைகளில் ஊர்வலங்களில் புலிக்கொடியை விட்டுவிட்டு போராடவேணும் என தலைவர்கள் முடிவெடுக்க.........

அதை தங்கள் நிகழ்ச்சிகளில் முக்கியப்படுத்த மக்கள் தொடங்கிவிட்டார்களா..??

விசுகர்!மன்னிக்கோணும் எனக்கென்னமோ உதுலை பெரிய டவுட்? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு தான் அடம் பிடித்தாலும்

தமிழர்கள் புலிகள்

புலிகள் தமிழர்கள்.

இதுதான் இனி உலகில் தமிழினம் இருக்கும் வரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போன இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளுளும் பிரான்சில் நடந்த இரு விசேசங்களில் ஒரு விடயம் முக்கிய இடத்தை பிடித்திருந்ததை கவனித்தேன். அதை இஙங்கு பதிகின்றேன்.

08ந்திகதி ஞாயிறு ஒரு சாமத்தியவீடு அங்கு நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னர் மண்டபத்தின் இரு பக்கங்களிலும் புலிக்கொடி பறக்கவிடப்பட்டு படங்ககள்வீடியோக்ககள் ஏடுக்கப்பட்ட பின்னரே நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. இதை ஒருவர் எனக்கு அறியத்தந்தார்.

நேற்று 15ந்திகதி ஞாயிறு ஒரு பிறந்ததினக்கொண்டாட்டத்திற்கு போயிருந்தேன். கொஞ்சம் தாமதமாக சென்றதால் அவசரமாக உள்ளிட்ட என்னை வரவேற்றது தலைவருடைய படத்துக்குப்பின்னால் இருநந்து விளையாடும் அந்தப்பிள்ளையின் படம்தான். இத்தனைக்கும்அவரது பெற்றோர் புலி ஆதரவாளர்களோ விசுவாசிகளோ கிடையாது ?த எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. காரணம் ஊருக்கு போவதற்காக பலரும் ஒழிந்து செய்யும் ஒரு விடயத்தை ஐநூறு பேரைக்கூட்டி அதிலும் பரிசில் கடை வைத்திருக்கும் ஒருவர் பகிரங்கமாக செய்வதென்பது ஆஆச்சசரியமான விடயம்.

மேடைகளில் ஊர்வலங்களில் புலிக்கொடியை விட்டுவிட்டு போராடவேணும் என தலைவர்கள் முடிவெடுக்க.........

அதை தங்கள் நிகழ்ச்சிகளில் முக்கியப்படுத்த மக்கள் தொடங்கிவிட்டார்களா..??

இதை நான் மிகவும் கண்டிக்கிறேன்.

சாமத்தியவீடு என்பது பெண்ணை அலங்கரித்து அழகுபதுமையாக ஊர் உலகத்தின் முன்னால் உட்கார வைத்து எங்களுடைய பிள்ளை திருமண உறவுக்கு ஆயத்தமாகி விட்டாள் என்று அறிவிக்கும் ஒரு நிகழ்வு...நீங்கள் எல்லோரும் என்னதான் சடைந்து கதைத்தாலும் இந்த சடங்கை பெண்விடுதலையை ஊக்குவிக்கும் எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அப்படி இருக்கும்போது முழுமையாக பெண்களுக்கு விடுதலையை ஊக்குவித்த, பெண்களின் திறமைகளை பிரகாசிக்கவைத்த ஒரு விடுதலை இயக்கத்தின் கொடி ஒரு பெண்ணை ஒரு போகப் பொருளாக வெளிக்காட்டும் இடத்தில் ஏற்றப்பட்டதை பெண்ணாக அதே நேரம் இந்த தேசியத்தை நேசிக்கும் விடுதலை விரும்பியான என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

Link to comment
Share on other sites

பெண்களின் திறமைகளை பிரகாசிக்கவைத்த ஒரு விடுதலை இயக்கத்தின் கொடி ஒரு பெண்ணை ஒரு போகப் பொருளாக வெளிக்காட்டும் இடத்தில் ஏற்றப்பட்டதை பெண்ணாக அதே நேரம் இந்த தேசியத்தை நேசிக்கும் விடுதலை விரும்பியான என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தமிழர் அல்லாதோர்தான் புலிக்கொடியை எமது தேசியக் கொடியாகப் பார்க்காது விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடியாகப் பார்க்கிறார்கள்.

ஆனால் உங்களைப் போன்றவர்களிற்கே இன்னும் சரியான தெளிவு வரவில்லைப் போலுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் அல்லாதோர்தான் புலிக்கொடியை எமது தேசியக் கொடியாகப் பார்க்காது விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடியாகப் பார்க்கிறார்கள்.

ஆனால் உங்களைப் போன்றவர்களிற்கே இன்னும் சரியான தெளிவு வரவில்லைப் போலுள்ளது.

புலிக்கொடி தமிழர் கொடி அதில் எந்த மாற்றமும் இல்லை ஒவ்வொரு இடத்திலும் அதன் வடிவம் என்பது சின்னச் சின்ன மாறுபாடுடன் இருப்பது நீங்கள் அறியாத ஒன்றா? அங்கு ஏற்றப்பட்டது புலிக்கொடிதான் ஆனால் அங்கு ஏற்றப்பட்ட அந்தக் கொடிக்கென்று ஒரு தனித்துவம் உள்ளது. அந்தக் கொடியில் உள்ள புலியின் உருவம் எது,?காலங்காலமாக சோழர் கொடியில் பொறிக்கப்பட்டிருந்த புலியா அல்லது தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடியினில் பொறிக்கப்பட்டிருந்த புலியா?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு என்று தமிழர் வரலாற்றில் ஒரு தனித்துவம் இருக்கிறது.

ஒருவேளை நீங்கள் சோழமன்னனின் கொடியில் பொறிக்கப்பட்டிருக்கும் புலியை ஏற்றிவிட்டு சாமத்தியச்சபையைச் செய்திருந்தால் அதற்கு நான் ஒரு வார்த்தை பேசியிருக்கமாட்டேன்.... ஆனால் ஏற்றப்பட்டது தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியக் கொடியாக இருந்தால் அதனை என் உயிருள்ளவரை எதிர்ப்பேன்.

பெண்விடுதலையை பேச்சிலிருந்து செயலுக்கு மாற்றிய ஒரு கொடி மீண்டும் பெண்ணைப் போகப் பொருளாக காட்சிப்படுத்தும் இடத்தில் ஏற்றப்பட்டதை ஒருகாலமும் மன்னிக்கமுடியாது...

மதியுங்கள், தயவு செய்து மலினப்படுத்தாதீர்கள்

Link to comment
Share on other sites

பல பத்தாண்டுகளிற்கு முன்பு நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் இப்போது அப்படியல்ல. இந்த நிகழ்வு நடைபெற்று பல ஆண்டுகள் சென்ற பின்பே அந்தப் பெண்ணிற்கு திருமணம் நடைபெறுகிறது.

தமிழர்கள் தேவையற்ற ஒரு நிகழ்வை தமது பண்பாடகவே நினைத்து தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏன் இந்தச் சடங்கை நடாத்துகிறோம் என்ற தெளிவே இல்லாமல் இதனைச் செய்கிறார்கள்.

நீங்கள் குறிப்பிட்டது போல எந்தப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை போகப்பொருளாக உலகிற்கு காட்டமாட்டார்கள்.

இந்த நிகழ்வு அறியாமையாலேயே தொடர்கிறது.

உங்களைப் போன்றவர்கள் முயற்சித்தால் காலப்போக்கில் இது கைவிடப்படலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல பத்தாண்டுகளிற்கு முன்பு நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் இப்போது அப்படியல்ல. இந்த நிகழ்வு நடைபெற்று பல ஆண்டுகள் சென்ற பின்பே அந்தப் பெண்ணிற்கு திருமணம் நடைபெறுகிறது.

தமிழர்கள் தேவையற்ற ஒரு நிகழ்வை தமது பண்பாடகவே நினைத்து தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏன் இந்தச் சடங்கை நடாத்துகிறோம் என்ற தெளிவே இல்லாமல் இதனைச் செய்கிறார்கள்.

நீங்கள் குறிப்பிட்டது போல எந்தப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை போகப்பொருளாக உலகிற்கு காட்டமாட்டார்கள்.

இந்த நிகழ்வு அறியாமையாலேயே தொடர்கிறது.

உங்களைப் போன்றவர்கள் முயற்சித்தால் காலப்போக்கில் இது கைவிடப்படலாம்.

மின்னல்,

நான் இங்கு யாரோ சாமத்தியச்சபை நடாத்துகிறார்கள் அது பிழை என்று சொல்வதற்காக கருத்துப்பதிவிடவில்லை. எங்களுடைய உன்னதமான கொடி இத்தகைய இடத்தில் பயன்படுத்தப்பட்டதனால்தான்....

ஏனோ மற்றவர்களால் இது ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் என்னால் எந்தவித காரணங்கள் கற்பித்தும் இதனை ஏற்க முடியாது.

என்னவென்று நினைத்துவிட்டார்கள்?

எத்தனை விடுதலை வேணாவாக்களின் சத்தியச் சாட்சி

ஒரு பிள்ளை மிகப்பெரும் சாதனை படைத்து அதற்கு ஒரு பாராட்டுவிழா நடாத்தும் இடத்தில் இதனை பறக்கவிடுதலே இந்தக் கொடிக்கான மதிப்பு.

ஒரு பெண்ணின் உடல் வளர்ச்சியான உதிரப்போக்கைக் கொண்டு நடாத்தப்படும் சடங்கிற்கு....

சீ....தூ...வெட்கங்கெட்ட மனிதர்களே

இனி பச்சையாக எழுதுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை

Link to comment
Share on other sites

பெண்விடுதலையை பேச்சிலிருந்து செயலுக்கு மாற்றிய ஒரு கொடி மீண்டும் பெண்ணைப் போகப் பொருளாக காட்சிப்படுத்தும் இடத்தில் ஏற்றப்பட்டதை ஒருகாலமும் மன்னிக்கமுடியாது...

பெண் விடுதலையை பேச்சிலிருந்து செயலுக்கு மாற்றிய அந்தக் கொடி கம்பீரமாக பறந்த அதன் தேசத்தில் பெண்ணைப் போகப் பொருளாக காட்சிப்படுத்தும் இந்த நிகழ்வு அவரவர் வசதிக்கேற்ப சிறப்பாகவே நடைபெற்றது.

கோவில்களில் வேள்வி செய்வது போன்ற சில நிகழ்வுகள் அங்கு தடைசெய்யப்பட்டிருந்தன. ஆனா இந்த நிகழ்வு தடைசெய்யப்படவில்லை.

வீட்டு விழாக்களில் தேசியக் கொடியேற்றும் பழக்கம் இருக்காமையால்தான் எமது தேசியக் கொடி அங்கே நடைபெற்ற நிகழ்வுகளில் ஏற்றப்படவில்லை. அப்படிப் பழக்கம் இருந்திருந்தால் நிச்சயம் அங்கும் அது நடந்திருக்கும்.

எமது வீட்டு நிகழ்வுகள் உட்பட அனைத்து நிகழ்வுகளிலும் எமது தேசியக் கொடியை வணங்கி தொடங்க வேண்டும் என்ற முறை ஏற்பட வேண்டும். இதன் தொடக்கமாக அந்த நிகழ்வில் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றியிருக்கிறார்களென நினைக்கிறேன். அவர்களிற்கு சாமத்திய வீடு என்பது திருமண நிகழ்வு போன்ற ஒரு சடங்காகவே தெரியும். தமது வீட்டில் நடக்கும் நல்ல நிகழ்விலேயெ தாம் புலிக்கொடியை ஏற்றுகிறோம் என எண்ணியே அதனைச் செய்திருப்பார்கள்.

அவர்களின் நோக்கு தேசியக் கொடியை இழிவு படுத்துவதோ அல்லது தமது மகளை போகப் பொருளாகக் காட்டுவதோ இல்லை.

Link to comment
Share on other sites

சோழர் :cholan-copy-200x300.jpg

சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலைத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது.

சோழர்களின் கொடி புலிக்கொடி.

www.Swisstamilsangam.blogspot.com/

Link to comment
Share on other sites

நான் இருக்கும் ஊரில் அதிகம் கலர் உள்ளவர்கள் இல்லை.. :D சில மாதங்களுக்கு முன் இலங்கையைச் சேர்ந்த ஒரு தம்பதியைச் சந்தித்தேன்.. :unsure:

கணவர் இந்திய வம்சாவழி.. கொழும்பில் பிறந்து சிங்களப் பள்ளியில் படித்தவர். மனைவி யாழில் ஏதோ ஒரு ஊர்.. அவருக்கே தெரியவில்லை.. நான்கு வயதில் இங்கே வந்துவிட்டாராம்.

சிங்களப் பள்ளியில் படித்தவருடன் பேசியபோது அரசியலும் வந்துவிட்டது.. கொழும்பில் தற்கொலைக் குண்டுகள் வெடித்ததால் பேஜாராகி விட்டது என்றார்.. சிங்களவரும், தமிழரும் இணைந்துவாழ சிங்கள இளைய தலைமுறையினர் முயற்சிப்பதாக புகழ்ந்து தள்ளினார்.. :D புலிகளையும் சாடையாக ஒரு பிடி பிடித்தார்.. நான் அமத்தி வாசித்ததால் அவருக்கு என்னில் குழப்பம்.. :D

வீட்டைப் பார்க்க வேண்டும் என்று அறைக்குள் எல்லாம் சென்று பார்த்தார்கள்.. அறைக்குள் ஒரு தமிழீழக்கொடி இருக்கு.. :rolleyes: அதற்குப்பிறகு அரசியல் பேசவில்லை.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நாட்களில், சாமத்திய சடங்கு நடத்த வேண்டிய தேவை ஒன்று இருந்தது! பெண்கள் வீட்டிற்குள், வளர்ந்ததால், தங்கள் வீட்டில் ஒரு பெண் திருமண வயதிற்கு வந்துவிட்டாள் என்று விளம்பரப் படுத்துவதற்காக அது நடத்தப் பட்டது! இப்போது பெண்கள் வெளியில் போவதால்,இதற்கான தேவை அற்றுப் போய் விட்டது எனினும், சிலர் தங்கள் அந்தஸ்தைக் காட்டுவதற்காக, இப்படியான சடங்குகளைச் செய்கின்றார்கள்! இது இவர்களது தனிப்பட்ட விருப்பம் எனினும், வசதியில்லாதவர்களும் தங்கள் பணத்தையும் நேரத்தையும் வீணாக்குவது கவலைக்குரியதே!

தேசியக் கொடிக்கு, ஒரு தனி மரியாதையுண்டு. அதன் பின் பல தியாகங்களும், இலட்சியங்களும் மறைந்துள்ளன!

சாமத்திய வீட்டிலோ, அல்லது தனிப்பட்ட சடங்குகளிலோ, இதை ஏற்றுவது இதனை அவமதிக்கும் செயல் என்றே கருதுகின்றேன்!

இதையும் சிலர், என்ன காரணங்களுக்காகச்,சாமத்தியச் சடங்கைச் செய்கின்றார்களோ, அதே காரணங்களுக்காகவே, கொடியையும் காட்டுகின்றார்கள்!

ஒரு சிங்களவன், தனது கலியாண வீட்டில் சிங்கக் கொடியை, வாசலில் கட்டியதை நான் கண்டதில்லை!

Link to comment
Share on other sites

இனிமேல் சாமத்தியவீடு எல்லாம் தேவையில்லை.. :unsure: பையன்களே டேட்டா பேஸ் வச்சு பிள்ளை சாமத்தியப்பட்ட உடனே லவட்டிக்கொண்டு போறாங்கள்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் விடுதலையை பேச்சிலிருந்து செயலுக்கு மாற்றிய அந்தக் கொடி கம்பீரமாக பறந்த அதன் தேசத்தில் பெண்ணைப் போகப் பொருளாக காட்சிப்படுத்தும் இந்த நிகழ்வு அவரவர் வசதிக்கேற்ப சிறப்பாகவே நடைபெற்றது.

கோவில்களில் வேள்வி செய்வது போன்ற சில நிகழ்வுகள் அங்கு தடைசெய்யப்பட்டிருந்தன. ஆனா இந்த நிகழ்வு தடைசெய்யப்படவில்லை.

வீட்டு விழாக்களில் தேசியக் கொடியேற்றும் பழக்கம் இருக்காமையால்தான் எமது தேசியக் கொடி அங்கே நடைபெற்ற நிகழ்வுகளில் ஏற்றப்படவில்லை. அப்படிப் பழக்கம் இருந்திருந்தால் நிச்சயம் அங்கும் அது நடந்திருக்கும்.

எமது வீட்டு நிகழ்வுகள் உட்பட அனைத்து நிகழ்வுகளிலும் எமது தேசியக் கொடியை வணங்கி தொடங்க வேண்டும் என்ற முறை ஏற்பட வேண்டும். இதன் தொடக்கமாக அந்த நிகழ்வில் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றியிருக்கிறார்களென நினைக்கிறேன். அவர்களிற்கு சாமத்திய வீடு என்பது திருமண நிகழ்வு போன்ற ஒரு சடங்காகவே தெரியும். தமது வீட்டில் நடக்கும் நல்ல நிகழ்விலேயெ தாம் புலிக்கொடியை ஏற்றுகிறோம் என எண்ணியே அதனைச் செய்திருப்பார்கள்.

அவர்களின் நோக்கு தேசியக் கொடியை இழிவு படுத்துவதோ அல்லது தமது மகளை போகப் பொருளாகக் காட்டுவதோ இல்லை.

எல்லோர் வீட்டிலும் அவர்கள் வீட்டு அலமாரியின் மேல் இந்தத் தேசியக் கொடி இருக்கிறது. அவரவர் வீட்டு விழாவில் அக்கொடியும் பங்குபற்றிக் கொண்டுதான் இருக்கிறது. இங்கு நான் மற்றவர்களை இழிவுபடுத்த வரவில்லை தேசியக் கொடியை அதன் மதிப்புடன் பாவனைப்படுத்துங்கள் என்றுதான் கூற முனைகின்றேன்.

பெண்விடுதலையை செயல்படுத்திய அந்த நாட்டில் இந்த நிகழ்வு காலகாலமாக நடந்துவரும் ஒரு நிகழ்வு அதற்கு முழுமையான ஆதரவை வழங்கியதாக சரித்திரம் இல்லை அதற்கு நல்ல உதாரணமாக ஒரு பாடல் 'நிலவில் புதிய கவிதை எழுத" என்ற பாடல் இடம்பெற்ற அதே இறுவட்டில் "நிறைகுடத்தை ஏந்திக் கொண்டு" என்ற பாடலும் கலைபண்பாட்டுக்கழகத்தால் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. தற்சமயம் என்னால் அப்பாடலை இங்கு இணைக்க முடியவில்லை யாராவது அப்பாடலை இணைத்து விடுங்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல பத்தாண்டுகளிற்கு முன்பு நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் இப்போது அப்படியல்ல. இந்த நிகழ்வு நடைபெற்று பல ஆண்டுகள் சென்ற பின்பே அந்தப் பெண்ணிற்கு திருமணம் நடைபெறுகிறது.

தமிழர்கள் தேவையற்ற ஒரு நிகழ்வை தமது பண்பாடகவே நினைத்து தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏன் இந்தச் சடங்கை நடாத்துகிறோம் என்ற தெளிவே இல்லாமல் இதனைச் செய்கிறார்கள்.

நீங்கள் குறிப்பிட்டது போல எந்தப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை போகப்பொருளாக உலகிற்கு காட்டமாட்டார்கள்.

இந்த நிகழ்வு அறியாமையாலேயே தொடர்கிறது.

உங்களைப் போன்றவர்கள் முயற்சித்தால் காலப்போக்கில் இது கைவிடப்படலாம்.

உண்மை.  தமிழ் நாடு சினிமாவை கொப்பி அடித்து திருமண சடங்கு, பிள்ளைதாச்சி சடங்கெல்லாம் செய்து காப்பெல்லாம் நொறுக்கி தள்ளுகிறார்கள்.  வரனின் தட்சிணை கூட பெண்ணின் அப்பனின் தலையில் கட்டபட்டது. 

நானும் சாமத்திய வீட்டுக்கு எதிர் தான் ஆனால் இந்த கொடி டிரென்ட் வளரவேண்டும் என்று தான் ஆதரிக்கிறேன் இங்கு.

அறுபது வயது ஹீரோ பதினாறில் சமைந்த பிஞ்சை பற்றி காமத்துடன் பாடுவதற்கு ஏன் சென்சார் குழு அனுமதிக்கிறது?

குழுவில் பெண்களும் இருப்பார்களே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் இந்தக் கொடி டிரென்ட் வளரவேண்டும் என்றே ஆசைப்படுகிறேன் , நம் இப்போதைய தேவை சமூக சீர்திருத்தம் அல்ல, ஒற்றுமையும், நாட்டுப்பற்றும், முதலில் புலிக்கொடி எல்லா இடங்களிலும் பறக்கட்டும், கொடியை பறக்கவிட்டால் பிரச்சினை வரும் என்ற பயம் போய்விட்டால் மக்களுக்கு அதன் மீது மதிப்பு தானாகவே வந்து விடும், புலிக்கொடி பறக்க விடுவதை ஊக்குவித்து நம்முடைய நிகழ்சிகள் அனைத்திலும் பயன்படுத்த வேண்டும், அதை விடுத்து இப்படி ஆரம்பத்திலேயே குறை சொன்னால் மக்களுக்கு ஆர்வம் குறைந்து விடும்,

இப்படி சொல்வதால் நான் அந்த சடங்கை நம்புகிறேன் என்று பொருளல்ல, நானும் இது போன்ற நிகழ்வுகளை கடுமையாக எதிர்ப்பவன் தான் , என்ன செய்வது ஒன்றை இழந்தால்தானே மற்றொன்றை பெற முடியும், பரவலாக அனைவரும் பயன் படுத்த ஆரம்பித்த பின் நாம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம், கொடி பறக்க ஆரம்பித்தால் நம் மீது உள்ள பிம்பம் மற்ற இனத்தவர் மத்தியில் மாறும், நமக்குள்ளும் ஒற்றுமையும் வளரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து, இதில் இணைக்கப் பட்டிருக்கும் பாட்டை ஒரு முறை கேட்ட பின்பு, கொடி பற்றிய உங்கள் கருத்தைப் மீள் பரிசீலனை செய்யுங்கள்!

ஒரு மாவீரர் விழாவில், இந்தக் கொடி ஏற்றப் பட்ட போது, எமக்குப் பாதுகாப்புக்காக நின்றிருந்த, அவுஸ் போலீஸ்காரர்கள், 'அட்டேன்ஷன்' நிலைக்கு உடனே மாறியதை அவதானித்தேன்! ஏன் அவர்கள் அவ்வாறு செய்தார்கள் என, எனக்குத் தெரியாது! ஆனால் அதை அவதானித்த எம்மவரும், உடனே அந்த நிலைக்கு மாறினார்கள்! மிகவும் பெருமையாக இருந்தது!

குறிப்பு: சகோதரி சகாறாவும் இதை இணைத்துள்ளார்! பின்பு தான் அவதானித்தேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடி பற்றிய சர்ச்சைக்காக இதை இங்கு பதியவில்லை. கொடி மறக்கப்பட்டு விடுமோ என்ற ஆதங்கத்தில் மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தத்தையே இங்கு எழுதினேன். இந்த சாமத்திய வீட்டுக்கு நான் போகவில்லை. இருப்பினும் என்ன நிகழ்வாயினும் நாம் யார் எமது அடையாளம் எது ? என்பன சம்பந்தமான இந்த முயற்சிகளை எப்படி பார்க்கின்றீர்கள் என்பதே எனது கேள்வி?

கொடியையே மறந்துவிட்டு கொடி பற்றிய கோட்டைகளை வைத்திருப்பதனால் என்ன பலன்???

எனது தனிப்பட்ட கருத்து என்னவெனில் இது போன்ற நிகழ்வுகளை தாயகத்தில் இராணுவ அழுத்தங்கள் மற்றும் மிரட்டல்கள் இன்றி அனுமதிப்பின் அங்கும் இதையே செய்வர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.