Jump to content

ஊருக்குப் போக விருப்பமில்லை - கவி 05 - "இந்தியத்தால் சிந்திய இரத்தம்"


Recommended Posts

220px-Parathan-2.JPGகப்டன். மொறிஸ் [செப்டம்பர் 12, 1969 - மே 1, 1989 ]

சின்னஞ்சிறு பாலகனாய்... முற்றும் அறியாத பிஞ்சாய் நான்,

நஞ்சு தரித்த எம் வீரரை... நட்புடனே பார்த்து நின்றேன்!

கிழமைகளில் சில நாளில் இனிமையாய் அவர்களுடன்,

எங்கள் வீட்டில் உணவுண்டு நன்றி சொல்லிச் செல்லும் வீரர்...

மறுமுறை வரும்போது ஒருவரேனும் குறைவார்... தேடுவேன்!!

"மொறிஸ்" என்று சொன்னால் ஊருக்கே தெரியும்!

அப்போது இந்தியனுக்கும் நன்றாய்த் தெரியும்!

வல்லரசுக் கனவான்களின் கனவுகளுக்கு,

அவன் விட்ட வேட்டுக்கள்தான் வேட்டுவைத்தன!

ஒரு வீரனின் பெயரைக்கேட்டே அஞ்சியது இந்தியம்!!

தலைவன் வழியில் நின்றவன்... தமிழருக்கு காவலன்!

இந்தப் பாலகன் கவிதைக்கும் அவன்தான் நாயகன்!

அவன் கருங்குழல் ஆயுதந்தனை வாங்கி...

முதன்முறையாய் சுமந்து பார்த்தான் !

ஆறு வயதிலும் அவனுக்கு ஆசை வந்தது!!

ஈழத்தில் தமிழ் இரத்தம் குடித்த இந்திய வல்லூறுகள்-இவன்

காலத்தில் இரைதேட வெளியே வரப்பயந்து,

பச்சைக் கோட்டைக்குள் பதுங்கியே கிடந்தனர்!

நேரெதிர் இயலாமல்... வீரனை விழுத்த,

சூழ்ச்சிகள் தேடினர் சூழ்ச்சிக்கார சூரர்கள்!!

பல தடவை முயன்று தோற்றுப்போனவர்களோடு,

தமிழினத்தின் சாபக்கேடாம்... துரோகமும் கூட்டுச்சேர்ந்தது!

துரோகம் காட்டிக்கொடுக்க... சுற்றிவளைத்த சூழ்ச்சி வலையில்,

பலநூறு துப்பாக்கி முனைகள் அவனை குறிபார்த்து நின்றன!

அஞ்சா நெஞ்சன் அவன்...! நேரெதிர் நின்றான் அஞ்சாமல்!!

துப்பாக்கிக் குண்டுகள் தடுமாறின... அவனைத் தொட முடியாமல்!

வீழ்த்தியே ஆகவேண்டும் என்ற வீணர்களின் வெறியாட்டத்தில்,

ஒரு நிகரற்ற வீரன்... தன்னிரு தோழரோடு... தாய்மண்ணில் சாய்ந்தான்!

அவர்கள் வீழ்ந்தும் அடங்காத கொலைவெறியில்.......................

அதை நினைத்தால் கலங்குது... கண்கள் இன்னும்! பதைக்குது நெஞ்சம்!!

நான் பார்த்துப் பழகிய ஒரு மாவீரனின் வீரமரணம்...

இன்னும் அழியாத நினைவாய் எனக்குள்... !

அறியாத வயசிலும் என் மனதில்... விதையாய் விழுந்தான்!

அவன் வரமாட்டான் என்று தெரிந்தும்...

அவனையே தேடிக்கொண்டிருந்தது... அந்த பிஞ்சு மனசு!!

அவன் கண்ட கனவு... அவனின் தாகம்,இலட்சியம் ஒரு நாளும் தோற்காது...!

விடிகின்ற ஈழத்தில் ....மீண்டும் பிறந்து தாய்மண்ணில் தவழ்வார்கள் வீரக்குழந்தைகள்!!

சிந்திய இரத்தத்தின் வரலாறுகள் தொடரும்...

இதன் முன்னைய பதிவுகளைப் பார்க்க:

ஊருக்குப் போக விருப்பமில்லை !!! - கவிமுகம்

http://www.yarl.com/...56

ஊருக்குப் போக விருப்பமில்லை - "ஒபரேஷன் லிபரேஷன் ஆரம்பம்" (கவி-01)

http://www.yarl.com/...88

ஊருக்குப் போக விருப்பமில்லை !!! - வடமராட்சி மண்ணில் வந்திறங்கிய விஜயர்கள்! (கவி - 02)

http://www.yarl.com/...21

ஊருக்குப் போக விருப்பமில்லை - உலகையே அதிரவைத்த கறுப்பு வீரன்! (கவி-03)

http://www.yarl.com/...61

ஊருக்குப் போக விருப்பமில்லை - "ஈழக் காற்றில்...இந்திய நாற்றம்" (கவி-04)

http://www.yarl.com/...showtopic=95896

திருத்தத்திற்கான காரணம்:

முன்னைய பதிவுகளின் இணைப்புக்கள் செயற்படாதமையினால் அவை மாத்திரம் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. தற்பொழுது அவை செயற்படக்கூடியவாறு இருக்கும் என நம்புகின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத் துயரங்களையும், ஏக்கங்களையும் தாங்கி வரும், உங்கள் கவிதை வலிக்கின்றது!

நன்றிகள், கவிதை!

Link to comment
Share on other sites

" பல தடவை முயன்று தோற்றுப்போனவர்களோடு,

தமிழினத்தின் சாபக்கேடாம்... துரோகமும் கூட்டுச்சேர்ந்தது!

துரோகம் காட்டிக்கொடுக்க... சுற்றிவளைத்த சூழ்ச்சி வலையில்,

பலநூறு துப்பாக்கி முனைகள் அவனை குறிபார்த்து நின்றன!

அஞ்சா நெஞ்சன் அவன்...! நேரெதிர் நின்றான் அஞ்சாமல்!! "

இலங்கையின் சுதந்திரம் தொட்டு இன்றுவரை துரோகத்தனம்தான் ஆட்சி செய்தது என்பது கசப்பான உண்மை . வாழ்த்துக்கள் கவிதை இந்தவரிகளுக்காக...............

Link to comment
Share on other sites

தாயகத் துயரங்களையும், ஏக்கங்களையும் தாங்கி வரும், உங்கள் கவிதை வலிக்கின்றது!

நன்றிகள், கவிதை!

வலிகளைத்தான் பெரும்பாலும் அனுபவித்தோம். ஆனாலும் அந்த மண்ணின் ஞாபகங்களில் மனவெளிகள் நிறைந்துபோகின்றன.

வலித்தாலும் எதையும் தாங்கும் வலிமையையும் கொடுத்திருக்கு அந்த மண் எமக்கு!

நன்றி புங்கையூரன்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு எத்தனை வயசென்று தெரியுது :D மற்றப் படி உங்கள் கவிதையை விமர்சிக்கும் தகுதி எனக்கில்லை[கவிதை எழுதத் தெரிந்தால் தானே கவிதை விமர்சிக்கலாம்.]பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

" பல தடவை முயன்று தோற்றுப்போனவர்களோடு,

தமிழினத்தின் சாபக்கேடாம்... துரோகமும் கூட்டுச்சேர்ந்தது!

துரோகம் காட்டிக்கொடுக்க... சுற்றிவளைத்த சூழ்ச்சி வலையில்,

பலநூறு துப்பாக்கி முனைகள் அவனை குறிபார்த்து நின்றன!

அஞ்சா நெஞ்சன் அவன்...! நேரெதிர் நின்றான் அஞ்சாமல்!! "

இலங்கையின் சுதந்திரம் தொட்டு இன்றுவரை துரோகத்தனம்தான் ஆட்சி செய்தது என்பது கசப்பான உண்மை . வாழ்த்துக்கள் கவிதை இந்தவரிகளுக்காக...............

கோ... கூட இருந்து குழிபறிக்கிற துரோகத்தனம் எங்கள் இனத்துக்கே ஒரு தொடரும் சாபக்கேடு. இது காலங்காலமாக தொடரும் நிலைமை.

மாறுமா என்பது சந்தேகமே?

உண்மையான துரோகத்தனத்தினை ஏனென்றும் கேட்கமாட்டார்கள்... ஆனால் நல்லது செய்ய நினைப்பவர்களுக்கு துரோகப்பட்டம் கொடுக்கத் தயங்க மாட்டார்கள்.

இதுதான் இன்றைய நிலைமை. :(

நன்றி கோ :)

Link to comment
Share on other sites

உங்களுக்கு எத்தனை வயசென்று தெரியுது :D மற்றப் படி உங்கள் கவிதையை விமர்சிக்கும் தகுதி எனக்கில்லை[கவிதை எழுதத் தெரிந்தால் தானே கவிதை விமர்சிக்கலாம்.]பாராட்டுக்கள்

ரதியக்கா! பாராட்டுக்களுக்கு மிக்க நன்றிகள்! :)

நான் இப்பொழுதுதான் கவிதையெழுத முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன்.

நான் கற்றுக்கொள்ள வேண்டியவை இன்னும் நிறையவே இருக்கின்றது.

யாழில் உள்ள பலபேரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நிறைய விடயங்கள் இன்னும் இருக்கின்றது.

நான் உங்களுக்குத் தம்பிதானே அக்கா! என் வயசைத்தான் வெளிப்படையாக யாழில் என் சுயவிபரப் பகுதியில் குறிப்பிட்டிருக்கின்றேனே!

நன்றி ரதி அக்கா! :)

Link to comment
Share on other sites

அவன் கண்ட கனவு... அவனின் தாகம்,இலட்சியம் ஒரு நாளும் தோற்காது...!

விடிகின்ற ஈழத்தில் ....மீண்டும் பிறந்து தாய்மண்ணில் தவழ்வார்கள் வீரக்குழந்தைகள்!!

இந்த நம்பிக்கை தான் தமிழர்களை ஆறுதல் கொள்ள வைத்திருக்கிறது கவிதை. நீங்கள் எழுதியிருக்கும் ஒவ்வொரு வரிகளும் வலிகளாய் மனதை தைக்கின்றது. உண்மைகள் கூடவே கலங்க வைக்கின்றன. நன்றிகள் கவிதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை உங்கள் முன்னைய இணைப்புக்களை கிளிக்கினால் page not found என்று வருகிறது கவனியுங்கள்

Link to comment
Share on other sites

அவன் கண்ட கனவு... அவனின் தாகம்,இலட்சியம் ஒரு நாளும் தோற்காது...!

விடிகின்ற ஈழத்தில் ....மீண்டும் பிறந்து தாய்மண்ணில் தவழ்வார்கள் வீரக்குழந்தைகள்!!

இந்த நம்பிக்கை தான் தமிழர்களை ஆறுதல் கொள்ள வைத்திருக்கிறது கவிதை. நீங்கள் எழுதியிருக்கும் ஒவ்வொரு வரிகளும் வலிகளாய் மனதை தைக்கின்றது. உண்மைகள் கூடவே கலங்க வைக்கின்றன. நன்றிகள் கவிதை.

மீண்டு வந்ததில் மிக்க சந்தோசம்! நன்றி கல்கி!

எம் மாவீரர்களின் தியாகங்கள் என்றைக்கும் எதனாலும் தோற்றுப்போகாது! அதன்மேல் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருப்பவன் நான்!

அவர்களின் தாயகக் கனவு நிறைவேறும்!

எம் மக்களின் அவலங்கள் எல்லாம் தூர ஓடிப்போகும்!

இது என்றாவது ஒரு நாளேனும் நடந்தே தீரும்!

Link to comment
Share on other sites

கவிதை உங்கள் முன்னைய இணைப்புக்களை கிளிக்கினால் page not found என்று வருகிறது கவனியுங்கள்

என்னால் முடிந்தளவுக்கு என் இணைப்புக்களை மாற்றியமைத்துள்ளேன்.

இப்பொழுது அந்த இணைப்புக்களை சொடுக்கிப் பாருங்கள்! சரியாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்!

அறியத் தந்தமைக்கு மிக்க நன்றிகள் அக்கா! :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.