Jump to content

யாழ் இணையம் - 8ஆவது அகவை


Recommended Posts

யாழ் இணையம் - 8 ஆவது அகவை

யாழ் கள உறவுகள் அனைவருக்கும் வணக்கங்கள்...

வருகிற 30ம் நாள் மார்ச் மாதம் அன்று யாழ் இணையம் தனது 8 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கிறது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் திகதி அன்று யாழ் இணையம் தொடங்கப்பட்டது. இன்று அது வளர்ந்து ஒரு பெரும் தளமாக - பல பார்வையாளர்களைக் கொண்ட தளமாக உயர்ந்து நிற்கிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கு ஈடுகொடுத்தும், தமிழ் சமூகத்தின் தேவைகளுக்கு முகம்கொடுத்தும் "யாழ் இணையம்" தன்னை வளப்படுத்திக்கொண்டுள்ளது. அந்த வகையில் பல்வேறு முயற்சிகளை யாழ் இணையம் முன்னெடுத்தது: யாழ் முற்றம் இணைய சஞ்சிகை, விம்பகம், மின்னஞ்சல் சேவை, வாழ்த்து அட்டை, ஒலிபரப்பு, ஒளிபரப்பு, கருத்துக்களம், அரட்டை அறை, வலைப்பதிவு என பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தது. CGI Script, Javascript, PHP Script, ASP Script என பல்வேறு இணையமொழிகளையும் பரீட்சித்துப் பார்த்தது. பாமினி எழுத்துரு, tscii எழுத்துரு, dynamic எழுத்துரு, Unicode எழுத்துரு என தமிழ் எழுத்துருக்களின் தொழில்நுட்பங்களோடும் கைகோர்த்துக்கொண்டது.

பல்வேறு தரப்பினரையும் தன் வசம் ஈர்த்துக்கொண்டு தனக்கே உரிய தனித்துவத்துடன் யாழ் இணையம் வளர்ச்சி கொண்டது. இணையத்தில் நீண்டு பல காலம் தொடர்கிற/இயங்குகிற இணையத்தளங்களில் யாழ் இணையமும் ஒன்று என்பதை யாராலும் மறுக்க முடியாது. தமிழிலே எழுதி விவாதிக்கக் கூடிய - பலர் பங்குகொள்கிற - பலர் பார்வையிடுகிற - ஈழத் தமிழ் இணையத்தளம் எது என்று கேள்வி எழுப்பினால், யாழ் இணையம் என்கிற பெயரைத் தவிர வேறு ஒரு பெயரை யாரால் கூற முடியும்?

யாழ் கருத்துக்களம்: யாழ் இணையத்தின் முயற்சிகளில் ஒன்று தான் இந்த யாழ் கருத்துக்களம். புலம்பெயர்ந்த மூத்த தலைமுறை, இன்றைய தலைமுறை என கைகோர்க்கிற இடம் இது. எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கமிக்கிற இடமும் இதுதான். மாணவர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், பல்வேறு துறைசார்ந்தவர்களும் கூடுகிற இடமும் இதுதான். புதியவர்கள் நம்பிக்கையோடு எழுதப் பழகுகிற பயிற்சிக் கூடமும் இதுதான். தமிழில் மூர்க்கமாக விவாதிக்கவும், நட்போடு பழகிடவும், செல்லமாகச் சண்டைகள் போடவும், ஊடல் கொள்ளவும், தேடல் கொள்ளவும், பாடல் போடவும், கவிதை படிக்கவும், தொழில்நுட்ப உதவி கேட்கவும் ஒரு இடம் உண்டென்றால் - அது யாழ் கருத்துக்களம் தான்.

பல நண்பர்களை உள்வாங்கியது யாழ் இணையம். அதேபோல் சிலரின் எதிர்ப்புகளுக்கும் உள்ளானது. சிலநேரங்கள் ஊடுருவல் செய்யப்பட்டு தளம் செயலிழக்கச் செய்யப்பட்டது. இவற்றையெல்லாம் தாண்டி ஒளிர்கிறது இன்றும் உங்கள் முன்.

இணையம் பயன்படுத்துகிற பெரும்பாலான ஈழத்தமிழர்களுக்கு "யாழ் இணையம்" கேள்விப்பட்ட தளமாக இருக்கிறது. இவர்களில் பலருடைய கணினிகளில் தொடக்கப்பக்கமாக உள்ளது. இவர்களில் பலர் ஒவ்வொருநாளும் பலதடவைகள் யாழ் இணையத்தை பார்வையிடுபவர்களாக இருக்கிறார்கள். குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது பார்ப்பவர்களும் இவர்களில் உண்டு. பல இணையத்தளங்களது முயற்சிகளுக்கு யாழ் இணையம் தனது பங்களிப்பை தாராளமாகச் செய்துள்ளது. பல தமிழ் ஊடகங்களும் யாழ் இணையத்தை பார்வையிடுகின்றன. அவற்றோடு யாழ் இணையம் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையாகவும் இருக்கிறது. தாயகத்திலிருந்தும் யாழ் இணையம் பார்வையிடப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும், தமிழ்த் தேசியத்துக்கும் துணைநிற்பதோடு அதுசார்ந்த கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரவேற்கிறது. அந்தவகையில் விடுதலைக்காய் விதையான மாவீரர்க்கும், மக்களுக்கும் தனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது.

யாழ் இணையம் என்கிற இந்த மிகச் சிறப்பான இணையத்தளத்தை உருவாக்கி, அதை நெறிப்படுத்தி வருகிறவர் யார்? மோகன் என்கிற ஒரு தனிமனிதன். எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல், விளம்பரங்களும் இல்லாமல் - எவருடைய பணஉதவியும் இல்லாமல் - தனது பணத்தை செலவிட்டு இந்தத் தளத்தை நிர்வகிக்கிறார். தனது குடும்பம், வேலை, பிற வேலைகள் என பலவற்றுக்கு மத்தியிலும், நேர நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்தும் இத்தளத்தை முன்னெடுத்துச் செல்கிறார்.

இன்னும் இன்னும் நிறையவே சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இனி நான் சொல்வதைக் காட்டிலும், யாழ் இணையம் பற்றி ஏனைய கள உறுப்பினர்கள் தமது கருத்துக்களை தெரிவிப்பது சிறப்பாக இருக்கும்.

யாழ் இணையத்தின் 8 அகவையை முன்னிட்டு யாழில் பல சிறப்புத் தலைப்புக்கள் தொடங்கப்படவுள்ளன - போட்டிகள் இடம்பெற உள்ளன. எனவே அனைவரும் பங்குகொள்ளுங்கள்.

தலைப்புகள்:

யாழ் இணையத்துக்கு உங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க

யாழ் இணையம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது?

யாழ் இணையம் - 8ஆவது அகவை - வாழ்த்துக்கவிதைகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.