Jump to content

புத்தளம் கடல் பகுதியில் டோராப் படகு வெடித்துச் சிதறியது!


Recommended Posts

புத்தளம் கடல் பகுதியில் டோராப் படகு வெடித்துச் சிதறியது!

[சனிக்கிழமை, 25 மார்ச் 2006, 17:19 ஈழம்] [கொழும்பு நிருபர்]

புத்தளம் கற்பிட்டி கடல் பகுதியில் சிறிலங்கா கடற்படையினரின் டோராப் படகொன்று இன்று சனிக்கிழமை வெடித்துச் சிதறி நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் 8 கடற்படையினரைக் காணவில்லை என்றும் 10 கடற்படையினர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்கள் என்றும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலதிக விவரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

http://www.eelampage.com/?cn=25049

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபாஷ்!! நல்ல செய்தி!!! தொடர வேண்டும்!!!!

Link to comment
Share on other sites

Tamil rebels 'blow themselves up'

http://news.bbc.co.uk/2/hi/south_asia/4845004.stm

Eight Sri Lankan sailors presumed dead in Tamil Tiger Suicide blast

http://www.turkishpress.com/news.asp?id=114979

Sri Lanka sailors feared dead in rebel sea blast - Navy

http://in.today.reuters.com/news/newsArtic...&archived=False

Tamil rebels blow up boat to avoid capture

http://www.iol.co.za/index.php?set_id=1&cl...43288901195B264

Six suspected Tamil Tigers killed in boat blast off western Sri Lanka, military says

http://english.ohmynews.com/ArticleView/ar...281630&rel_no=1

Link to comment
Share on other sites

புலிகள் தாக்குவில்லை. ஆனால் தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் நோக்கிலேயே தமது படகை வெடிக்க வைத்துள்ளதாக சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் பிபிசி தமிழ் ஓசையிட்டம் தெரிவித்து உள்ளாரே

Link to comment
Share on other sites

மீன்பிடி படகு வெடித்ததில் சோதனையிட முயன்ற கடற்படையினர் 8 பேரைக் காணவில்லை

20060211165536lankanavyboat203.jpg

இலங்கையின் வடக்கே மன்னாருக்கும் கற்பிட்டிக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் குதிரமலை என்னுமிடத்தில் மீன்பிடி இழுவைப் படகொன்றைக் கண்ட அதிவேக டோரா படகில் சென்ற கடற்படையினர் அதனைச் சோதனையிட முயன்றபோது அந்தப் படகு வெடித்துச் சிதறியதில் கடற்படையினர் 8 பேர் காணாமல் போயிருப்பதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளனர்.

கடற்படையின் படகிலிருந்த எஞ்சிய 11 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மீன்பிடி இழுவைப்படகும். கடற்படையின் டோரா படகும் கடலில் மூழ்கிவிட்டதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வெடித்துச் சிதறிய மீன்பிடி படகில் 6 பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மதியம் நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

- பீபீசி தமிழ்

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

கல்பிட்டி கடலில் 8 கடற்படையினரை காணவில்லை; 11 பேர் காயங்களுடன் மீட்பு 6 புலிகள் உயிரிழந்ததாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவிப்பு

doora.jpg

கற்பிட்டி குதிரைமலை கடற்பரப்பில் நேற்று மாலை றோலர் மீன்பிடிப்படகு ஒன்றை கடற்படையின் டோறா பீரங்கிப்படகு அண்மித்ததையடுத்து அந்த மீன்பிடிப்படகு வெடித்துச் சிதறியதாகவும், இதனால் கடற்படையின் டோறாப் படகும் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாகவும

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடற்பிட்டி கடலில் டோறா வெடித்துச் சிதறியது - எட்டு கடற்படையினரைக் காணவில்லை

புத்தளம் மாவட்டம் கற்பிட்டிக் கடற்பரப்பில் சிறீலங்கா கடற் படைக்குச் சொந்தமான டோறா பீரங்கிப் படகு ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது. இந்தப் படகில் பயணித்த எட்டுக் கடற் படையினர் காணாமல் போயு ள்ளதாக சிறீலங்கா கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குதிரைமலைக் கடற்பரப்பில் இன்று பிற்பகல் 3 மணிக்கு கடல் ரோந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறீலங்கா கடற்படையினரின் படகொன்று வெடித்துச் சேதமடைந்ததுடன் இதில் 19 கடற்படையினர் படகில் இருந்ததாகவும் 11 கடற்படையினர் உயிருடன் மீட்க்கப்பட்டதாகவும் ஏனைய 8 கடற்படையினரது நிலை இதுவரை தெரியவில்லை.

கரையில் இருந்து பல கடல்மைல் து}ரத்திற்கு அப்பால் இச்சம்பவம் நடைபெற்றதாகவும் மன்னாரில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்து சிறீலங்கா படைத்தரப்பு தகவல் வெளியிடுகையில், சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை கடற்படைப் படகு நெருங்கிச் சென்றபோது, ஆறுபேரைக் கொண்ட அந்தப் படகு வெடித்துச் சிதறியதாகவும், இதனால் கடற்படையின் டோறா படகு பாரிய சேதமடைந்துள்ளது. இதில் பயணித்த 11 கடற்படையினர் மீட்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வழமை போன்று விடுதலைப் புலிகளே இத்தாக்குதலை நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடற்படையின் இந்த குற்றச்சாட்டை விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளனர்.

செய்தி: சங்கதி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • இந்தியாவுக்கு பிற‌க்கு சுத‌ந்திர‌ம் கிடைச்ச‌ நாடு Slovenia அந்த‌ நாட்டின் முன்னேற்ற‌ம் வாழ்த்தும் ப‌டி இருக்கு..................ப‌ல‌ விளையாட்டில் அவ‌ங்க‌ள் திற‌மைசாலிக‌ள்.................ப‌ல‌ நோய்க‌ளுக்கான‌ ம‌ருந்து க‌ண்டு பிடிப்ப‌தில் Slovenia திற‌மையான‌ நாடு................ ம‌னித‌க் க‌ழிவை ம‌னித‌னே அள்ளுவ‌து உண்மையில் அருவ‌ருக்க‌ த‌க்க‌து இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ இந்த‌ நூற்றாண்டில் ம‌னித‌க் க‌ழிவை சுத்த‌ம் செய்ய‌ எவ‌ள‌வோ வ‌ச‌திய‌ க‌ண்டு பிடித்து விட்டார்க‌ள்..............2018க‌ளில் தாயிலாந்தில் ம‌னித‌க் க‌ழிவு  வெளியில் வ‌ர‌ அந்த‌ அர‌சாங்க‌ள் ஒரு நாளில் இய‌ந்திர‌த்தை வைத்து எல்லாத்தையும் ச‌ரி செய்து விட்டார்க‌ள்................ஆனால் இந்தியாவில்? ஆம் நினைவு இருக்கு க‌ட‌லில் கொட்டிய‌ எண்ணைய‌ வாளி வைச்சு அள்ளினார்க‌ள் இது தான் மோடியின் டியிட்ட‌ல் இந்தியா கிலின் இந்தியா.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.