Jump to content

ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த ஆரியர்கள் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மை


Recommended Posts

கொலை என்றால் வாள் எடுத்து அரிவாள் எடுத்து தலைகளை வெட்டிச் சாய்ப்பது பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் செய்வது என்று பொதுவாகப் பார்ப்பனர்கள் கொலை செய்வது பாவம் என்றும் அஞ்சுபவர்கள் என்றும் எண்ணுவது மக்கள் இயல்பு. ஆனால், பார்ப்பனர்கள் கொலை செய்யவும் தயங்காதவர்கள் சோழர் குல விளக்கு ராஜ ராஜசோழனின் உடன்பிறப்பு அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களே சோழர்களின் காலத்தில் பார்ப்பனர்கள் என்பது வரலாற்றுக் கல்வெட்டு காட்டும் உண்மை.

காவிரி வள நாடர், பொன்னி வள நாடர் என்றும் புகழ் விளங்க வாழ்ந்த மரபினர் சோழ மரபினர். இமய வரம்பினில் புலிக்கொடி ஏற்றி இசைபட வாழ்ந்தவர்கள். பாண்டியரைப் போல், சேரர் போல் பழம் பெரு மரபினர்.

செயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி இராச பாரம்பரியம் என்னும் தலைப்பில் சோழரின் மரபுப் பட்டியல் வாசிக்கிறது. விசயாலயச் சோழன் முதல் இராசேந்திரன் வரையிலான வாரிசுமுறையை வரிசைப்படுத்துகிறது, வகைப்படுத்துகிறது.

ஆரியத்தை வேரூன்றச் செய்த சோழ மரபிற்குக் குலக் கொழுந்தைக் கொலை செய்து பரிசளித்தது ஆரியம். பிரம்மதேயம் என்று பல்லவர் வழியில் பார்ப்பனர்களுக்குத் தானம் வழங்கிய சோழர்களுக்குப் பரிசாகப் பார்ப்பனியம் அளித்த கொடைதான் இளவரசர் ஆதித்த கரிகாலன் படுகொலை.

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் சங்க காலத்துக்குப் பின் சோழர் மரபைத் தொடங்கி வைத்தவன் விசயாலயச் சோழன். இவன் மார்பில் எண்ணற்ற விழுப்புண்கள் இவர்தம் வீரத்திற்குப் பதக்கங்களாகத் திகழ்வதாக சீறும் செவிற்றிரு மார்பு தொண்ணூறும்

ஆறும் படுத்தழும்பின் ஆழத்தோன் என்று குலோத்துங்க சோழனுலா கூறும். விசயாலயனுக்குப்பின் அவருடைய மகன் இராசகேசரி முதலாம் ஆதித்த கரிகாலன் பட்டத்திற்கு வந்தார். இவருடைய மறைவிற்குப் பின் இரு புதல்வர்களான முதற் பராந்தகன், கன்னர தேவனில், முதற் பராந்தகன் ஆட்சிக்கு வந்தார். மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி இவரைக் கலிங்கத்துப் பரணி குறிப்பிடும், இவ்வாறு:

ஈழ முத்தமிழ்க் கூடலூர் சிதைத்து இகழ் கடந்ததோர் இசை பரந்தும்

முதலாம் பராந்தகனின் மகன் இளவரசன் தக்கோலப் போரில் இறந்தான். எனவே, பராந்தகனின் இரண்டாவது மகன் கண்டராதித்தன் அரியணை ஏறினான். இவர் மனைவியே செம்பியன் மாதேவி. கண்டராதித்தனின் மகன் உத்தமசோழன். உத்தம சோழன் கண்டராதித்தன் இறந்தபோது இள வயதினன் ஆகையால் தம்பி அரிஞ்சயன்ஸ் அரியணை ஏறி ஆத்தூரில் நடந்த போரில் இறந்து விட்டான். இந்த அரிஞ்சயனுக்குப் பிறந்த சுந்தர சோழனின் மூத்த மகன் இரண்டாம் ஆதித்த கரிகாலன். இவருடைய தம்பிதான் அருள்மொழி என்ற இயற்பெயர் கொண்ட ராஜராஜன்.

ராஜராஜனின் அண்ணன் இரண்டாம் ஆதித்த கரிகாலன் தொடர்ந்து கொலை செய்யப்படாமல் ஆட்சியில் இருந்திருந்தால் சோழர் வரலாற்றில் ராஜராஜன் என்ற பெயரே இடம் பெறாமல் போயிருக்கும்.

இந்தக் கரிகாலனின் படுகொலையைச் செய்தவர்கள் யார் எனும் வரலாற்று உண்மை மறைக்கப் பெற்றிருக்கிறது.

அந்தச் செய்திகளை மறைக்கப்பட்டவற்றை அறியும் முன்னர் அடுத்து நிகழ்வுற்றவற்றை முன்னர்க் காண்போம்.

மகன் படுகொலையானதால் மன்னன் சுந்தரசோழன் நிலை குலைந்தார். காஞ்சியிலிருந்த பொன்னாலான அரண்மனை மாளிகையில் உயிர் துறந்தமையால், பொன் மாளிகை துஞ்சிய தேவர் ஆனார்

இராசராசசோழன் தந்தை இறந்ததும், தனயன் இல்லாது படுகொலையானதுமான சூழலில் பதவியைத்தான் ஏற்காது. உத்தமசோழனை அரியணை ஏறும்படி இசைவளித்து, பதினாறு ஆண்டுகளுக்குப்பின் உத்தமசோழன் மாண்ட பின்னர் சோழப் பேராசனானார்.

இந்த வரலாற்றுச் செய்தியைக் கோவையாக நமக்கு அளித்த வரலாற்று அறிஞர் வரலாற்றுக் களஞ்சியம் பேராசிரியர் ப. நீலகண்ட சாஸ்திரி தம்முடைய சோழர் வரலாறு எனும் ஆராய்ச்சி நூலில் ஓர் உண்மையை மறைத்துவிட்டார்.

உடையார்குடி கல்வெட்டில் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த பார்ப்பனர்கள் பெயர்ப் பட்டியல் தெளிவாக இருக்கிறது. இராசராசசோழனுக்கு முன் அரியணையேறிய உத்தமசோழனே கொலைச் சதியில் பங்கு கொண்டவர் என்றும் கூறிச் சென்று விட்டார்.

ஆனால், உத்தம சோழனுக்கு ஆதித்த கரிகாலன் கொலையில் பங்கு இருந்திருக்க வேண்டும் என்று கூறத்தக்க நேரடியான அல்லது மறைமுகமான ஆதாரம் ஏதுமில்லை என்பதோடு, நீலகண்ட சாஸ்திரியும் சுட்டிக் காட்டவில்லை.

உடையார்குடி கல்வெட்டு நீலகண்ட சாஸ்திரி அறியாமல் இருந்திருக்கலாம் என்று சமாதானமும் கூற முடியவில்லை. உடையார்குடிக் கல்வெட்டு யார் யார் கொலைகாரர்கள் என்று பெயரையே கூறுகிறது. அதைக் குறிப்பிடாமல் நீலகண்ட சாஸ்திரி,

சுந்தர சோழனின் கடைசி நாட்கள் இல்லத்தில் ஏற்பட்ட துன்ப நிகழ்ச்சியால் பாதிப்பிற்குள்ளாயிற்று. உடையார்குடி கல்வெட்டு ஸ்ரீ வீரநாராயணச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் அரசனின் ஆணையின் பேரில், பாண்டியன் முடித் தலை கொண்ட கரிகாற் சோழனின் கொலைச் சதியில் பங்கேற்றவர்களின் சிலரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கச் சொல்லி ஆணையிட்டதன் பேரில் மேற்கொண்ட நடவடிக்கைகளைக் குறிப்பிடுகிறார் என்று மட்டும் கூறுகிறார்.

Sundara Chola’s last days appear to have been eroded by a domestic trajedy. As seen from UdaiyarKudi grant dated in the II year of Raja Raja (577of 1977) Records the measures taken by the sabha of sri viranarayana saturvedi mangalam under order from the king for the confiscation and sale of the properties of some persons who were liable for the treason as they had murdered karikal chola who took the head of the Pandya.

கொலை செய்தவர்கள் பார்ப்பனர்கள் அவர்கள் பெயர்கள் இவை என்பவையெல்லாம் குறிப்பிடாமல் சில ஆட்கள் (Some Persons) என்று மழுப்பிச் செல்கிறார் இந்தக் கற்றறிந்து வரலாற்றில் துறைபோகிய பேராசிரியர்.

ஆதித்த கரிகாலன் கொலையுண்டு, சுந்தர சோழனும் மாண்டு, பதினாறு ஆண்டுகள் உத்தம சோழனும் ஆண்டு அவனும் மாண்டு, அதன்பின் ஆட்சிக்கு வந்த இரண்டாம் ஆண்டில் இந்த நடவடிக்கையை ராஜராஜன் மேற்கொண்டதற்குக் காரணம், வலிமைமிக்க சதிகாரர்களைத் தண்டிக்கத் தடை ஏதோ இருந்தது என்றும், அத்தடை உத்தமசோழனே என்றும் கொலைப் பழியை முழுமையாக உத்தமசோழன்மீது போடுகிறார்.

எவ்வித நேரடி ஆதாரமுமில்லாமல், அவர் அவிழ்த்துவிடும் புதிய கற்பனை வரிகள் இவை.

It seems impossibe under the circumstance to acquit Uthama Chola of a part in the consbiracy that resulted in the final murder of the heir apparent. He formed a party of his own and brought about the murder of Aditya II and having done so he forrced the hands of sundara Chola to make him his heir apparent and as there was no help for it sundara chola had to... என்றோ கொலை செய்த பார்ப்பனக் கொலையாளிகளை வரலாற்றிலிருந்து மறைத்திட மேலும், மேலும் நீலகண்ட சாஸ்திரியார் கற்பனை செய்து கொண்டே செல்கிறார் என்றுதான் நமக்குத் தோன்றுகிறது.

ஆதித்ய கரிகாலனின் மறைவிற்குப்பின் அருள்மொழிவர்மன் (லெய்டன் பட்டயமே இராஜராஜன் என்ற பெயரைக் கூறுகிறது) குடிமக்களால் அரியணை ஏறும்படி வேண்டிக் கொள்ளப் பெற்றாலும், உத்தமசோழனே அரியணை ஏற அவா கொண்டமையால் இராஜராஜன் அவர்கள் வேண்டுகோளை ஏற்கவில்லை. இதி-லிருந்து சுந்தரசோழன் இறந்தபின் வாரிசுச் சிக்கல் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று சாஸ்திரியார் கற்பனை செய்கிறார்.

ஆனால், லெய்டன் பட்டயம் அவ்வாறெல்லாம் சிக்கல் ஏதும் குறிப்பிடாமல் மதுராந்தகன் என்ற உத்தமசோழன் ஆதித்யனின் மறைவிற்குப்பின் நேரடியாகவே பதவி ஏற்றதாகக் கூறுகிறது.

உத்தமசோழன் பதவியேற்க ஒப்புக் கொண்ட இராஜராஜன், உத்தம சோழனுக்குப்பின் தாமே பதவிக்கு வர வேண்டுமேயல்லாமல் உத்தம சோழனின் வாரிசு யாரும் உரிமை கொண்டாடக் கூடாது என்று கூறி விட்டார் என்றும் நீலகண்ட சாஸ்திரி கூறுகிறார்.

இவ்வாறு இராஜராஜன் பதவியை உத்தம சோழனுக்கு விட்டுக் கொடுத்ததற்குக் காரணம் உள்நாட்டுப் போர்கள் ஏற்படாது தடுக்கவே என்றும் கூறுகிறார். இவ்வாறு தம் கற்பனையை அவிழ்த்து விடும் நீலகண்ட சாஸ்திரியார் தம் கற்பனைக் கருத்தை வலியுறுத்த சோழர்களின் காலத்துத் திருவாலங் காட்டுப் பட்டயத்தில் வடமொழியில் அமைந்து உள்ள 69 வரி வரியைச் சுட்டிக் காட்டினார்.

தென் இந்தியச் சாசனங்கள் (S11) தொகுதி மூன்றில் 205ஆம் எண் கொண்ட திருவாலங்காட்டுப் பட்டயத்தில் காணப்படும் வரிகளை ஆராய்ந்து பார்த்தால் எந்த இடத்திலும் உத்தமச் சோழன் கொலைக்குக் காரணமானவர் என்றோ அவருக்குப் பங்கிருந்தது என்றோ கூறத்தக்க சான்றுகளே இல்லை.

திருவாலங்காட்டுப் பட்டய வரிகளைக் கீழே காண்போம். அவை உள்நாட்டுப் போர் ஏற்படும் சூழலையோ, உத்தம சோழனுக்குப்பின் தாம்தான் அரசராக வருவோம் என்று இராஜராஜன் வலியுறுத்தியதாகத் தெரிவிக்கவில்லை. மாறாக இராஜராஜனுக்கு உத்தம சோழன் இளவரசு பட்டம் கட்டிய செய்தியே காணப்படவில்லை. திருவாலங்காட்டுப் பட்டயத்திலும், லெய்டன் பட்டயத்திலும் உத்தம சோழனின் மகன் மதுராந்தக கண்டராதித்தன் என்பவன் பெயர் காணப்படவில்லை. சோழர் அரியணையில் ஏறும்படி குடிமக்கள் வேண்டிய போதிலும் வலிமையான கலியுகத்தின் கண்களைக் குருடாக்கும் இருளை ஒழித்திட, அரச நடவடிக்கையின் உண்மை நிலையை உணர்ந்த அருள்மொழி வர்மன் தனக்கு அரியணை வேண்டுமென்று தன் மனத்தால் கூடக் கருதாமல் தன் சிற்றப்பா தன் அரியணைமீது கொண்டுள்ள ஆசையைப் புரிந்து விட்டுக் கொடுத்தார்.

அவர் உடலில் காணப்படும் அடையாளங்களாகக் கொண்டு மூன்று உலகங்களையும் காப்பவரான தாமரைக் கண்ணனான திருமால் இவ்வுலகில் அவதரித்துள்ளார் அருள்மொழிவர்மன் வடிவில் என உணர்ந்து மதுராந்தகன் தமது வாரிசாக முடி சூட்டித் தாம் இவ்வுலகை ஆளும் பொறுப்புச் சுமையை ஏற்றார்.

ஆனால், உத்தமச் சோழனை நீலகண்ட சாஸ்திரி சுயநலமி என்றும், பக்தியும் நேர்மையும் நிரம்பிய தாய் தந்தையருக்கும் பிறந்த முறை பிறழ்ந்து ஆசை உடையவர் என்றும், தன்னலமே பெரிதெனக் கருதியவர் என்றும் குறை கூறுகிறார். பார்ப்பனர்களுக்குக் கொலைச் சதியில் இருக்கும் பங்கைத் திசை திருப்பவே நீலகண்ட சாஸ்திரி இம்முயற்சி மேற்கொண்டு உள்ளாரோ என்று அய்யுற வேண்டி உள்ளது.

ஏ.வி. சுப்பிரமணிய அய்யர், பண்டைய தக்காணம் எனும் நூலில் பக் 243இல், இராஜராஜனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டுகையில், மதுராந்தகன் என்ற உத்தமசோழரின் மகனுக்கு மூன்று வயதாக இருக்கலாம் என்கிறார்.

பேராசிரியர் சதாசிவ பண்டாரத்தார் நீலகண்ட சாஸ்திரியாருக்கு மூன்று மறுப்புகளைக் கூறுகிறார்.

முதல் மறுப்பு:

உத்தம சோழனுக்கு அக்கொடுஞ்செயலில் தொடர்பு இருந்திருப்பின் ஆதித்த கரிகாலனின் தம்பியும், குடிகளால் அன்று பாராட்டிப் போற்றப் பெற்றவனும், பெரிய வீரனுமாகிய இராசராசசோழன் அரியணையைக் கைப்பற்றி தானே ஆட்சி புரியத் தொடங்குவானேயன்றி அதனை அவ்வுத்தம் சோழன் பெற்று அரசாள உடன்பட்டு தான் பதுங்கிக் கொண்டிருக்க மாட்டார்.

இரண்டாம் மறுப்பு:

திருவாலங் காட்டுச் செப்பேடு இராஜராஜன் தன் சிறிய தந்தையாகிய உத்தம சோழனுக்கு நாட்டை ஆட்சி புரிவதில் விருப்பமுள்ள வரையில் அதனை மனத்தால்கூட தாம் விரும்புவதில்லை என்றுதன் குடிகளிடம் கூறினார் என்று கூறுவதிலிருந்து தன் அண்ணன் உத்தம சோழனால் கொல்லப்பட்டிருந்தால் அவர்பால் இவ்வளவு அன்பும், மதிப்பும் இராசராசர் வைத்திருக்க மாட்டார் என்பது தெளிவு என்று கூறுகிறார்.

மூன்றாம் மறுப்பு:

சாஸ்திரி கூறுவதை ஏற்க இயலாமைக்கு இன்றுமொரு கருத்து உள்ளது. உத்தமசோழன், ஆதித்த கரிகாலனைக் கொலை செய்திருந்தால் அல்லது அக்கொலையில் பங்கேற்றிருந்தால் குடிமக்கள் ஆதரவும் அரசியல் அலுவலர் துணையும் ஆட்சி நடத்த அவருக்குக் கிடைத்திருக்காது. உள்நாட்டில் அமைதியும் வளமும் நிரம்பியிருந்தது.

குழப்பம் ஏதுமின்றி சிறிதுமின்றி பதினாறு ஆண்டுகள் ஆட்சி அமைதி-யாக நடைபெற்றது என்பதற்குக் கல்வெட்டுகள் சான்று கூறுகின்றன.

திருவாலங்காட்டுப்பட்டயம் ஆதித்யர் தம் தலைநகரில் பாண்டிய அரசனின் தலையாகிய வெற்றித் தூணைச் சேர்த்தபின் விண்ணுலகம் காணும் அவாவில் மறைந்தார் என்று கூறுகிறார். உத்தம சோழனின் ஆட்சி உத்தமமான ஆட்சியாக அமைந்தது என்பதனை தென்னிந்தியத் தொகுதி பட்டயங்கள் 128,142,143,145,151 ஆகியன கச்சிபெட்டு, திருமலபுரம், திருவொற்றியூர், கோனேரிராசபுரம் முதலிய இடங்களில் அமைந்துள்ள ஆதி புரீசுவரர்கோவில், பிச்சாள் கோவில் முதலியவற்றிற்குத் தங்கம் வழங்கினான், முரசு, சாமரம் வழங்கினான் எனும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பார்ப்பனர்கள்

சோழர் காலத்திற்குமுன் வேதப் பார்ப்பனர்களுக்குக் கோவில் வழிபாட்டில் எவ்விதப் பங்கும் வகிக்கவில்லை. ஏனென்றால் சென்னை அருங்காட்சிய 128ஆம் என்னுடைய சென்னைப்பட்டயம் உத்தம சோழன் கச்சிப்பேடு எனும் ஊரில் பிறப்பித்த ஆணை ஒன்றின் வாயிலாக நமக்குப் புதிய செய்தி கிடைக்கிறது.

பார்ப்பனர்களை எப்போது நியமிக்க வேண்டும் என்று உத்தம சோழன் ஆணையிடுகிறான் பாருங்கள். புனிதமான ஆலயங்களில் வழிபாடு நிகழ்ச்சிகள், முறைகளைக் கடமைகளை நன்கு உணர்ந்தவர் இந்தப் புனித ஆலயத்திற்குக் கிடைக்கவில்லையெனில், ஒரு பார்ப்பனர், வேதங்களில் நன்கு தேர்ந்தவர் மட்டும் வழிபாடு நிகழ்த்த நியமிக்கலாம் பார்ப்பனர்கள் ஆலயங்களில் எப்படி நுழைந்தார்கள் என்று எடுத்துக்காட்ட (SII.VoL III No.128 ð‚.164-_265)

(தென்னிந்தியத் தொகுதி பட்டயங்கள் தொகுதி 111, எண் 125, பக் 164 -_ 265) இனி ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் பார்ப்பனர்கள்; அதனை நீலகண்ட சாஸ்திரி கூறாமல் மறைத்துவிட்டார் என்று கூறியதற்கு உரிய ஆதாரத்தைக் காண்போம். சிதம்பரம் வட்டத்தைச் சார்ந்த காட்டுமன்னார் கோவிலுக்கு அருகில் உள்ள உடையார்குடியில் காணப்படும் கல்வெட்டே சான்றாகும்.

ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் சோமன், இருமுடிச்சோழ பிரமாதிராஜன், மலையனூரானான ரேவதாசக் கிரமவித்தன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன் ஆகிய நான்கு பார்ப்பனர்கள் கொலையைப் பஞ்சமாபாதகங்களில் ஒன்று என்று வகுத்தவர்கள்.

பஞ்சவன் பிரமாதிராஜன், இருமுடி சோழ வீர மாதிராஜன் எனும் உயர்ந்த பட்டங்கள் பெற்றவர்கள். அரசாங்கப் பணியில் இருந்த பார்ப்பனர்கள் பஞ்சவன் பிரமாதிராசன் பாண்டிய நாட்டு அரசியல் அலுவலர். இவர்கள் கொலை செய்யக் காரணம் இருக்கக் காரணம் இருக்க வேண்டும் அல்லவா?

கொலைக்குக் காரணம் அரசியல். பாண்டிநாட்டு அலுவலர் பஞ்சவன் பிரமாதிராஜன் எனும் பார்ப்பனன் தூண்டுதலால் பாண்டுநாட்டுப் பகைவர் தூண்டுதலே காரணம்.

எக்காரணம் பறறியோ உட்பகை கொண்டிருந்த இரண்டு அரசியல் அதிகாரிக்கும் அவர்களின் உடன்பிறந்தவர் இருவரும் ஒருங்கு சேர்ந்து ஆதித்த கரிகாலனை வஞ்சகமாகக் கொன்று விட்டனர் என்று சதாசிவ பண்டாரத்தார் கூறுகிறார். ஆயினும் உண்மைக் காரணம் ஏதும் தெரியவில்லை.

இனி ஒரு வினா பாக்கியுள்ளது உத்தமசோழன் ஆட்சியில் இக்கொலைகாரர்களுக்குத் தண்டனை விதிக்கப்படாமல், இராஜராஜன் காலத்தில் தண்டனை வழங்கப் பெற்றதே ஏன் எனும் கேள்விதான் அது.

இன்றுபோல் அன்று சதியை விரைந்து கண்டுபிடிக்க வாய்ப்பு இல்லாமல், கொலையாளியைக் கண்டறிவது, தண்டனை வழங்குவது ஆகியவற்றில் சில ஆண்டுகள் கழிந்திருக்க வேண்டும். அதற்குள் உத்தமசோழன் ஆட்சி முடிவெய்தியிருக்கலாம். அதனால் அடுத்து வந்த இராஜராஜன் ஆட்சியில் எஞ்சியோருக்குத் தண்டனை விதிக்கும்படி நேர்ந்தவை இயல்பே.

மேலும் உத்தமசோழன் ஒருவருக்குத் தண்டனை வழங்கவில்லை என்று எவ்வாறு கூற முடியும் என்று பண்டாரத்தார் வினா பொருத்தமாக எழுப்புகிறார்.

பார்ப்பனர்கள் மேலோர் உயர்ஜாதிக்காரர்கள உயர்பதவி வகித்தவர்களாயிற்றே, அவர்கள் கொலை செய்யும் அளவிற்குத் துணிச்சல் உடையவர்களாக இருப்பார்களோ என்றுகூட சிலர் கேட்கலாம்.

ஆனால் அக்கால வரலாற்றுச் சான்றுகள் பார்ப்பனர்கள் கொலை, கொள்ளை, திருட்டு ஆகியவற்றில் கைதேர்ந்தவர்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.

பார்ப்பனர்கள் ஓதல், ஓதுவித்தல் தொழிலைச் செய்து ஒதுங்கிவிடாமல் பழி பாவங்களைப் போதித்து விட்டு அவற்றைச் செய்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.

பாண்டிய மண்டலத்தில் வாமலபட்டன் என்ற பார்ப்பான் சக்தியானவன் என்றும், பார்ப்பானால் கொலை செய்யப்பட்டான் என்பதை ஆதாரத்தோடு, இக்கட்டுரையாளர் எழுதிய பாண்டியர் ஆட்சி முறை நூலில் பக்.86-_இல் காணலாம். அய்ந்து பார்ப்பனர்களும், சில வெள்ளாளர்களும் சேர்ந்து ஆயுதம் ஏந்திப் பார்ப்பனர்கள் சிலரைக் கொலை செய்தது. காதுகளை வெட்டியது, பார்ப்பனப் பெண்களை இழிவு செய்தது ஆகிய செய்திகளும் கல்வெட்டுகளில் உள்ளன.

கோவில் பணத்தைப் பார்ப்பன அர்ச்சகர்கள் கொள்ளையடிப்பது, நகைகளைத் திருடுவதும்கூட அந்நாளில் இருந்திருக்கிறது.

திருநாவக்குன்றமுடையராயனார் கோவில் அர்ச்சகர்கள் கோயில் பணத்தையும், நகையையும் திருடி எடுத்துச் சென்றுவிட்டனர் என்பதை ARE 1907 பகுதி 11 பத்தி 27இல் காணலாம்.

கல்கி பொன்னியின் செல்வன் என்னும் தம் நூலில் ஆதித்த கரிகாலன் கொலையை மய்யமாக வைத்து கதையைப் புனைந்தவர், ஆதித்த கரிகாலனைக் கொன்றவர் யார் என்று வினா எழுப்பினாரேயன்றி, அதைச் செய்தவர்கள் நான்கு பார்ப்பனர்கள், பாண்டியர் தூண்டுதல் காரணம் என்பதைப் பதிவு செய்யாமல் விட்டுவிட்டார்.

எனவேதான் இன்று வாழும் 90 வயதுடைய வரலாற்றுப் பேராசிரியர் என். சுப்பிரமணியன் நம் ஆசிரியர் தமிழர் தலைவர் மதிப்பைப் பெற்ற பேராசிரியர் (அவரும் பார்ப்பனர்தான்) இவ்வாறு மறைத்ததை வரலாற்றியலும் முரணானது உண்மையைத் தலைகீழாக்கிய மாபெரும் புரட்டு முறைகேடான முடிவு என்று கூறுகிறார்.

நீலகண்டசாஸ்திரி சிறு பிழை செய்துவிட்டார் என்று கூறலாமா? சிறு பிழையா இது? உண்மை குழிதோண்டி புதைக்கப்பட அல்லவா செய்யப்பட்டுள்ளது?

Posted by மங்களமுருகேசன் at 00:57 icon18_edit_allbkg.gif

http://mangalamuruge...og-post_12.html

Link to comment
Share on other sites

பயனுள்ள வரலாற்றுத் தொகுப்பு . பகிர்வுக்கு மிக்க நன்றிகள் நாரதர் .

Link to comment
Share on other sites

ஆரியப் பண்பாட்டைப் புகுத்திய பல்லவ மன்னர்கள்

தமிழ்நாட்டில் சங்க காலத்திலேயே ஆரியப் பண்பாடு நுழைந்துவிட்டது என்றபோதிலும் ஜாதிமுறை, ஆரியத் திருமணமுறை, ஆரியர் கலை பரவிடவில்லை. ஆனால் ஏறத்தாழ கி.பி 250 லிருந்து கி.பி.900 வரை ஆட்சி செய்த பல்லவப்பேரரசர்கள் ஆரியப் பண்பாட்டின் கர்த்தாக்களாக விளங்கினர் என்பதற்குக் கல்வெட்டுகளும், செப்பேடுகளும் தகுந்த ஆதாரமாக விளங்குகின்றன.

mahabalipuram-temple-01.jpg

பல்லவப் பேரரசின் தொடக்ககால மன்னர்கள் அளித்துக் கிடைத்துள்ள செப்பேடுகள் மூன்றுதான். அம்மூன்று செப்பேடுகளும்கூடத் தமிழில் எழுதப்பட்ட செப்பேடுகள் அல்ல. பிராகிருத மொழியில் அமைந்தவை. இதனாலேயே வரலாற்று ஆசிரியர்கள் இந்த முற்காலப் பல்லவர்களை முதல் பல்லவ மன்னர்களைப் பிராகிருதப் பல்லவர்கள் என்றழைக்கும் மரபு ஏற்பட்டுள்ளது.

இந்தப் பல்லவர்கள் அளித்த செப்பேடுகளுக்கு மயிதவோலுச் சேப்பேடு, ஹீரஹடஹள்ளிச் செப்பேடு, குணபதேயம் செப்பேடு ஆகும் மயிதவோலுச் செப்பேட்டையும், ஹீரஹடஹள்ளிச் செப்பேட்டையும் வழங்கியவர் பல்லவப் பேரரசரின் முதல்வராகக் கருதப்படும் சிம்மவர்மனின் மகன் சிவஸ்கந்தவர்மன்.

தனித்தமிழ்ப்பெயருடைய சேர, சோழ, பாண்டியர்களுக்குப்பின் தமிழல்லாத வர்மன் (வர்மா) என்று முடியும் தமிழேயல்லாத பெயர் கொண்டவர்கள் இந்தப் பல்லவர்கள். நந்திவர்மன் என்பவன் பெயரில் மட்டும் நந்தி என்ற தமிழ்ச்சொல் இடம் பெற்றிருக்கும்.

நம் தமிழ் மன்னர்கள் வெளியிட்ட செப்பேடுகள் எல்லாம் தமிழ் மண்ணின் இடப் பெயர்கள் இடம் பெற்றிருக்கும் வேள்விக்குடி, சின்னமனூர், கரந்தை எனக் காணலாம். இந்தப் பல்லவர் செப்பேடுகளில் ஊர் பெயரே மயிதவோலு, ஹீரஹடஹள்ளி, மஞ்சிக்கல்லு, குணபதேயம் என்று எல்லாம் தமிழல்லாத ஊர்ப் பெயர்கள். பல்லவப் பேரரசின் முதல்வராகப் போற்றப்படும் சிம்மவர்களின் காலத்துப் பல்லவராட்சி ஆந்திரம், கருநாடகத்தின் ஒரு பகுதி, தமிழ்நாட்டில் தொண்டமண்டலம் ஆகியவற்றை உள்ளடக்கி அமைந்திருந்தது எனலாம்.

மயிதவோலுச் செப்பேடு

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த குண்டூர் மாவட்ட நாசராவ் பேட்டைக்குப் பன்னிரண்டு கல் கிழக்கில் உள்ள கிராமம் மயிதவோலு. அந்த ஊரில் கிடைத்ததாலேயே அப்பெயர். பல்லவ குலத்தின் முதற் செப்பேடு இது என்பர். மெல்லிய எட்டு ஏடுகள் கொண்ட தொகுதி இது. இவற்றை இணைத்திருக்கும் வளையத்தின் முகப்பில் நந்தியின் உருவம் உள்ளது. பிராகிருத மொழியில் இருபத்தெட்டு வரிகளில் அமைந்துள்ளது. இச்செப்பேட்டில் தமிழ் ஏதும் கிடையாது. கொண்டமுடிச் செப்பேடு எனப்படும் பிராகிருதச் செப்பேட்டின் எழுத்தை ஒத்துள்ளது.

பல்லவ மன்னவரான சிவஸ்கந்தவர்மன் இளவரசராக இருந்தபோது பிரம்மதேயமாக அதாவது பார்ப்பனனுக்கு தானமாக வழங்கிய தானத்தைப் பதிவு செய்திருக்கும் ஏடு இது. ஆம்! பார்ப்பானுக்குத்தான் தானம். அதற்குப் பெயர் பிரம்மதேயம். இம்மயிதவோலுச் செப்பேடு தான்யகேடம் எனும் இடத்து அரசு அலுவலருக்கு இத்தானம் குறித்து அளித்த ஆணையாகும்.

சிவஸ்கந்தவர்மன் யாருக்குத் தானமாகக் கொடுத்திருக்கிறார் பாருங்கள். எதற்குக் கொடுத்திருக்கிறான் பாருங்கள். தன்னுடைய வெற்றிக்கு, அறம், ஆயுள், வலிமை ஆகியவை பெருகிடக் கொடுத்திருக்கிறான். அதற்காக ஆந்திரத்திலிருந்த விரிபுரம் எனும் ஊரைக் கொடுத்திருக்கிறான் அவ்வாறு கொடுத்தது பூர்வகோடி ஆர்யன் கோநந்தி ஆர்யன் என்ற இரண்டு பார்ப்பனர்களுக்கு. எப்போது கொடுத்தானாம்? வேனிற்காலத்தில் ஆறாம்பட்சத்துப் பஞ்சமி நாளில் மன்னரே நீரை ஊற்றி அநாவது தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறான்.

பார்ப்பனியத்தின் செல்வாக்கைப் பல்லவமன்னன் எப்படி எல்லாம் செய்கிறான் பாருங்கள்.

தானமாகக் கொடுத்த விரிபுரம் கிராமத்திற்குப் பிரமதேயத்திற்கான அனைத்து விலக்குகளும் அளித்திருப்பதை இந்தப் பட்டயம் தான்யகேட அதிகாரிக்கு இந்தப் பட்டயம் அறிவிக்கிறது. அதாவது இக்கால அரசு ஆணை (G.O) போல. வேறுபாடு செப்பேட்டில் அளிக்கப்படுகிறது.

விலக்களிக்கப்பட்ட இந்த ஊருக்குள் படைவீரர்கள் நுழையக்கூடாது.

ஊருக்குள் வரும் அரசு அலுவலர் களுக்குச் சோறு, விறகு, தண்ணீர், கட்டில் தங்குமிடம் ஆகியவற்றை ஊரார் தரவேண்டியதில்லை.

அதிகாரிகளால் இவ்வூருக்கு எவ்விதச் சேதாரமும் ஏற்படக்கூடாது.

உப்பிற்காக இவ்வூரில் குழி தோண்டக்கூடாது. பார்ப்பனர்களுக்குச் சலுகைகள் இவை. இவ்வாறான சலுகைகள் ஏராளம்.

இந்த விலக்குகளைத் தர மறுக்கும் அரசு அலுவலர்களுக்கும், பிரம்மதேய ஊரில் உள்ளவர்களுக்கும், தொல்லை தரும் அதிகாரிகளுக்கும் அரசரே சரீர தண்டனை வழங்குவார் என்று செப்பேடு எச்சரிக்கிறது.

ஹீரஹடஹள்ளிச் செப்பேடு

இது செப்பேடு முதலாம் சிவஸ்கந்தவர்மன் மகாராஜாவாக ஆனதும் வழங்கிய செப்பேடு. மயிதவோலு இளவரசராய் இருந்த போது வழங்கியது. ஹீரஹடஹள்ளிச் செப்பேடு அவர் மகாராஜாவாக இருந்தபோது வழங்கியது.

அதில் பார்ப்பனருக்கு சில்லரேகக் கொடுங்கை ஊர், அவர்களுக்கு உரிய நிலப்பங்கு செப்பேட்டில் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ள. சிவஸ்கந்தவர்மனின் முன்னோரான பப்பசுவாமி என்பவரிடம் தானமாகப் பெற்ற அந்தணர்கள் எண்ணிக்கை இருபத்திரண்டு ஆகும். சில்லரேகக் கொடுங்கை என்ற தானம் கொடுத்த சாதாஹளி மாவட்டத்தில் (தமிழகத்தில் அல்ல) இருந்தது.

பார்ப்பனர்களுக்குத் தானமாக அளிக்கப்பட்ட பிரம்மதேயமான இத்தகு கிராமங்களுக்கு 18 வகை விலக்குகள் அளித்துள்ளனர். மயிதவோலுவில் இடம்பெறாத சலுகைகளான அதிகாரிகளுக்குப் பால், தயிர் தரவும் வேண்டாம்; காய்கறி, கீரை, மலர்கள் அளிக்கவேண்டாம்; கள் இறக்கக் கூடாது ஆகியன இடம்பெற்றுள்ளன.

பார்ப்பனர்களின் அக்கிரகாரம், பார்ப்பனச்சேரி எப்படி உருவாகிறது பாருங்கள். சில்லரேகக் கொடுங்கையில் தோட்ட நிலத்தைத் தானமாகப் பெற்ற பார்ப்பனர்கள் தாங்கள் வாழும் கிராமமான ஆபிட்டியில் நெல்லடிக்கும் களம் அமைத்துக்கொள்வதற்கென நிலம், குடியிருப்பு மனைக்கொத்தளி நிலமும் பெற்றனர். பாதிக்கூலி தந்தால் போதுமானது எனும் திட்டத்துடன் நான்கு கூலியாள்களையும் இப்பார்ப்பனருக்கு சிவஸ்கந்தவர்மன் கொடுத்திருக்கிறான். அது மட்டுமல்ல, இந்தப் பார்ப்பனர்களுக்கு ஆடை நெய்து தர வாய்ப்பாக தறிநெய்வோர் இரண்டுபேர் அளிக்கப்பட்டனர்.

இத்துடன் நிற்கவில்லை. தாம் அளித்த இந்தத் தானத்தை எதிர்கால அரசர்கள், அவர்களுடைய வாரிசுகள் வேறு மரபினராயினும் காத்துத் தரவேண்டும் என்று கைகூப்பி வேண்டியிருக்கிறான். அதாவது பார்ப்பனர்களுக்குக் கொடுத்ததைப்பாதுகாக்க வேண்டுமாம்

அவ்வாறு காத்துத் தராதவர், மனிதரில் களஉயராய் பஞ்சமாபாதகங்களின் தோஷத்தை அடைவார்கள் என்று சாபம் வேறு. இன்னும் இருக்கிறது.

இந்தப் பட்டயத்தை எழுதியவன் அரசரின் அந்தரங்கச் செயலாளரான பட்டி சம்மன் என்ற பார்ப்பான் ஆவான்.

இவ்வாறு பார்ப்பனர்க்குத் தானம் கொடுத்ததே மன்னனின் மூடநம்பிக்கைகதான். இந்தப் பட்டயம் சிவஸ்கந்தவர்மனின் எட்டாம் ஆட்சியாண்டில் மழைக்காலத்தில் ஆறாம் பட்சத்தின் பஞ்சமி நாளில் வழங்கப்பட்டது. என்றும் கூறப்பட்டுள்ளது.

சிவஸ்கந்தவர்மனின் ஆட்சி. நூறாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்க வேண்டும் என்றும் சந்திரன், நட்சத்திரங்கள், சூரியன் உள்ள காலம்வரை நிலைத்திருக்க வேண்டும் என்று மன்னரே வழங்கியபட்டயம். ஆணத்தி யாக இருந்து நிறைவேற்றிய பட்டயம் அதாவது முன்னின்று வழங்கிய இது.

செப்பேட்டில் யாரேனும் ஒருவன்தான் அரசனுக்குப் பிரியமானவன் என்ற மதத்தால் (ஆணவத்தால்) இந்த தர்மத்துக்குக் கொடுமையோ தீமையோ செய்தாலும், தொல்லை அளித்தாலும் அவனை நாம் நிச்சயம் தடுப்போம் என்று எச்சரிக்கைகள் வேறு.

பார்ப்பனியத்துக்கு ஏன் இந்த உயர்வு என்று பொங்கிய பகுத்தறிவாளர்கள் அன்றும் இருந்திருக்கின்றனர் போலும்.

யார் ஆட்சி வந்தாலும் பார்ப்பனியம் சாதித்துக் கொள்கிறதே என்று வருந்தியவர்கள் அன்றும் இருந்திருக்கிறார்கள். அன்றும் பெரிய இடத்துத் தொடர்புள்ள துணிவில் தவறு செய்யும் போக்குகளும் இருந்துள்ளன. எப்படியோ பார்ப்பனியம் தன் ஆதிக்கக் கொடியை நாட்டி ஆள்வோரை மயக்கி விடுகிறது என்று தோன்றுகிறது.

இவ்வாறு தொடக்ககாலப் பல்லவர்களால் வழங்கப்பட்ட மூன்று பிராகிருதச் செப்பேடுகளும் அரச மரபினர் அறிந்த தானங்களுக்கான ஆவணங்களாகும்.

பல்லவர் செப்பேடுகள் முப்பது எனும் நூலில் இந்தச் செப்பேடுகளின் பிராகிருத மொழி வாசகங்களையும், தமிழ் மொழி பெயர்ப்புக் குறித்தும் காணலாம்.

பல்லவர்களுக்குப் பின் வந்த சோழர்களும் இதே போல் பார்ப்பனியத்தை ஆதரித்தனர். அதனால்தான் தமிழன் இராஜராஜன் தான் கட்டிய கோயிலுக்கு வடநாட்டில் இருந்து ஈசான சிவாச்சாரியாரை அழைத்துக் குடமுழுக்குச் செய்தான். அவன் மகன் ராஜேந்திர சோழனும் பார்ப்பனீயத்தைத் தோள் கொடுத்து உயர்த்-தினான் என்பது பகுத்தறிவாளர் காணும் குறைபாடு.

- தமிழகத்தில் ஆரியப் பண்பாட்டைப் புகுத்திய

பல்லவ மன்னர்கள்,செப்பேடுகள் கூறும் உண்மைகள்

என்னும் தலைப்பில் எழுதி,

விடுதலை ஞாயிறு மலரில் (30-10-2010)வெளிவந்த கட்டுரை

http://mangalamurugesan.blogspot.in/2010/10/blog-post_30.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் கொடும்பாளுர் வேளார்கள் என்றவோர் கருத்துமுள்ளது. ஆய்வுகள் இன்றுவரை உறுதியான முடிவுகளைத் தரவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.