Jump to content

ரசிகனே.. என் அருகில் வா..


Recommended Posts

ரசிகனே.. என் அருகில் வா.. - இளையராஜா

முதலில் காது ஒலிப்பான் முக்கியம்.. :D ரசிகனே என்னருகில் வா என்று இளையராஜா பாடும்போது அருகில் வரவேண்டாமா? :rolleyes:

ஒரு இறுவட்டு வாங்கியபோது இந்தப் பாட்டும் இருந்தது. பழைய பாட்டுத்தான்.. ஆனால் இப்போது வருவது எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டுவிடும்போல் இருக்கிறது.. :D அன்றைய ஒலிப்பதிவின் தரம் மிகக் குறைவானது.. இன்று உள்ள தரம் போல் இருந்திருந்தால்.. unsure.gif

பாடல் காரில் ரிப்பீட் மோடில் சில நாட்களாக இருக்கு.. :D

இந்தப்படம் வெளியாகவில்லை.. படம் மணிப்பூர் மாமியாராம்.. :wub: ஆரம்ப காலத்தில் இளையராஜாவின் பாடல்களுக்கு இருந்த சிறு எதிர்ப்பும் பாடலில் வருகிறது.. unsure.gif

பாடல்களின் வரிகளை நான் பொதுவில் அவதானிப்பதில்லை.. பின்னணியில் இசை கோர்க்கப்பட்டிருக்கும் விதம் மட்டுமே என் காதில் விழும்.. ஆனால் இந்தப் பாடலில் சரணங்கள் கவனிக்க வைக்கின்றன.. இளையராஜா ரசிகனான என்னை நோக்கிப் பாடுவது போல் இருக்கு.. :lol:

பாடல்:

சரணம் 1:

இதயமே நீ ஒரு மலர்..

உள்ளூர என்னென்ன வாசம்..

இனிமைகள் உன் நகைப்பிலே

இளமைகள் உன் அணைப்பிலே..

காணாத ஆனந்தம் ஊற்றாக ஆரம்பம்..

காலம் யாவும் இன்பம்.. இன்பம்..

சரணம் 2:

ஸ்வரங்களில் ஒரு அதிசயம்..

சொன்னாலும் கேட்டாலும் இன்பம்..

அலையிலும் ஒரு ஸ்ருதி வரும்..

அசைவிலும் ஒரு ஜதி வரும்..

ஆறோடும் நீரோட்டம்.. அங்கேயும் ஓர் ராகம்..

கேட்கும் யாவும்.. நாதம்.. கீதம்..

சரணம் 3:

ஆணும், பெண்ணுமாக முதல் இரண்டு சரணங்களும் பாடிய பின், இந்தச் சரணத்தில் ஆண்குரல் மட்டுமே வருகிறது.. biggrin.gif

தெரிந்ததை நான் கொடுக்கிறேன்..

தெம்மாங்கு ராகங்கள் சேர்த்து..

தெரிந்ததை நான் கொடுக்கிறேன்..

தெம்மாங்கு ராகங்கள் சேர்த்து..

இதயங்கள் சில எதிர்க்கலாம்..

எதிர்ப்பவர் அதை ரசிக்கலாம்.. :D

இதயங்கள் சில எதிர்க்கலாம்..

எதிர்ப்பவர் அதை ரசிக்கலாம்..

நாம் காணும் உள்ளங்கள் நல்வாழ்த்துச் சொல்லுங்கள்..

நாளும் நாளும்.. இன்பம் இன்பம்..

மூன்றாவது சரணத்திற்கு முந்திய இசையில், குரலின் சுரம் மாறும் இடத்தில் கிட்டாரின் சுரத்தையும் மாற்றாமல் பிந்தி மாற்றுவது இளையராஜாவின் தனி முத்திரை.. :rolleyes: நேரக்கணக்கு 3:32 இல் குரலின் சுரம் மாறுவதையும், கிட்டாரின் சுரம் இரண்டு வினாடிகள் கழித்து 3:34 இல் அந்த இடத்திற்கு வந்து சேர்வதையும் கவனியுங்கள்.. புல்லரிக்கச்செய்யும் இத்தகைய நொடிகளைத்தான் ஆங்கிலத்தில் Goosebump என்று சொல்வார்கள்.. :lol:

நீங்களும் கேட்டு ரசிக்கலாமே.. :D

Link to comment
Share on other sites

இசைக்கலைஞன்,

ஒரு விளையாட்டாக இருக்கட்டும், ஆராய்ச்சியாக இருக்கட்டும், இசையாகட்டும் இலக்கியமாகட்டும் சாதாரண ஒரு நாளாந்த காட்சியாகட்டும், ஏதாயினும் அதன் நுணுக்கங்களை உணரும் அறிவு பார்வையாளனிற்கு இருக்கும்போதே அதன் உன்னதம் உச்சத்தில் உணரப்படும் என்பதற்கு உங்ளின் இந்தப் பதிவும் ஒரு உதாரணம். இசை எனக்குள் என்ன உணர்வினை உருவாக்குகின்றதோ அந்த உணர்வை மட்டுமே எனக்கு ரசிக்கத்தெரியும். அதைத் தவிர இசையின் அடிப்படைகள் கூடச் சற்றும் தெரியாது. அந்த வகையில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 3:32 நேரத்தில் நிகழும் மாற்றம் எல்லாம் இவ்வாறு யாராவது சுட்டிக்காட்டாது போயின் நிச்சயம் என்போன்றவர்களால் இலகுவில் அனுபவிக்க முடியாது. சுட்டிக்காட்டப்படும் போது எம்மாலும் ரசிக்க முடிகிறது. தொடருங்கள் இது போன்ற பதிவுகளை.

அண்மையில் ஒரு செய்தி படித்தேன். எத்தனை சிக்கலான இசைக்கோர்வையாக இருப்பினும் எமது மூளை அதனை எளிமையான வடிவமாகச் சுருக்கியே உணர்த்துமாம். ரெக்னோ, பொப் போன்றவை 80 வீதம் வரை எமது மூளையால் சுருக்கப்பட்டு உணர்த்தப்படக்கூடியனவாம். பேற்றோவன் போன்றவர்களின் நுணுக்கமான படைப்புக்களை அதிகபட்சம் நாற்பது வீதம் வரை தான் மூளையால் எளிமையாக்கி உணர்த்த முடியுமாம். எவ்வளவிற்கெவ்வளவு ஒரு இசை சுருக்கப்படக்கூடியதாக இருக்கின்றதோ அவ்வளவிற்கவ்வளவு அது அதிகபட்சம் மக்களால் கொண்டாடப்படுமாம். இது பற்றிய உங்கள் பார்வை எவ்வாறு இருக்கின்றது?

நீங்கள் இசையை முறையாகக் கற்றீர்களா? ஏதாவது இசை உபகரணம் வாசிபவரா?

நன்றி

Link to comment
Share on other sites

பெரிதாகப் பெயரெடுக்காத நல்ல பாடல். அதே காலகட்டத்தில் வந்த இளையராஜாவின் பாடல்களின் பாணியிலிருந்து வேறுபட்டதாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன். ஏனென்று தெரியவில்லை.

Link to comment
Share on other sites

இசைக்கலைஞன்,

ஒரு விளையாட்டாக இருக்கட்டும், ஆராய்ச்சியாக இருக்கட்டும், இசையாகட்டும் இலக்கியமாகட்டும் சாதாரண ஒரு நாளாந்த காட்சியாகட்டும், ஏதாயினும் அதன் நுணுக்கங்களை உணரும் அறிவு பார்வையாளனிற்கு இருக்கும்போதே அதன் உன்னதம் உச்சத்தில் உணரப்படும் என்பதற்கு உங்ளின் இந்தப் பதிவும் ஒரு உதாரணம். இசை எனக்குள் என்ன உணர்வினை உருவாக்குகின்றதோ அந்த உணர்வை மட்டுமே எனக்கு ரசிக்கத்தெரியும். அதைத் தவிர இசையின் அடிப்படைகள் கூடச் சற்றும் தெரியாது. அந்த வகையில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 3:32 நேரத்தில் நிகழும் மாற்றம் எல்லாம் இவ்வாறு யாராவது சுட்டிக்காட்டாது போயின் நிச்சயம் என்போன்றவர்களால் இலகுவில் அனுபவிக்க முடியாது. சுட்டிக்காட்டப்படும் போது எம்மாலும் ரசிக்க முடிகிறது. தொடருங்கள் இது போன்ற பதிவுகளை.

உங்கள் கருத்திற்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள் இன்னுமொருவன்.. :D இதை முதலில் இளையராஜாவின் இனிய கானம் பகுதியில் சேர்க்க நினைத்தேன்.. பிறகு பத்தோடு பதினொன்றாகப் போய்விடுமே என்று அங்கு இணைக்கவில்லை.. :D

இதைப்போல பல நூறு பாடல்கள்.. ஒவ்வொன்றாக தனித்தனி திரியாக இணைக்கலாம் என்று இருக்கிறேன். உங்கள் ஆதரவு உள்ளதுதானே??!! :wub:

இசையமைப்பின் வெற்றியில் ஒருபெரும் பங்கு நான் உணர்ந்துகொண்ட வகையில், ரசிகன் எதிர்பார்க்கும் இடத்தில் அவன் எதிர்பார்க்கும் மெட்டோ அல்லது இசைக் கோர்வையோ வரக்கூடாது.. இந்தப் பாடலின் கிட்டார் இசையிலும் அதையே பயன்படுத்தியிருக்கிறார். 3:43 இல் இருந்து 3:45 வரை கூட அதே உத்திதான்.. :D

அண்மையில் ஒரு செய்தி படித்தேன். எத்தனை சிக்கலான இசைக்கோர்வையாக இருப்பினும் எமது மூளை அதனை எளிமையான வடிவமாகச் சுருக்கியே உணர்த்துமாம். ரெக்னோ, பொப் போன்றவை 80 வீதம் வரை எமது மூளையால் சுருக்கப்பட்டு உணர்த்தப்படக்கூடியனவாம். பேற்றோவன் போன்றவர்களின் நுணுக்கமான படைப்புக்களை அதிகபட்சம் நாற்பது வீதம் வரை தான் மூளையால் எளிமையாக்கி உணர்த்த முடியுமாம். எவ்வளவிற்கெவ்வளவு ஒரு இசை சுருக்கப்படக்கூடியதாக இருக்கின்றதோ அவ்வளவிற்கவ்வளவு அது அதிகபட்சம் மக்களால் கொண்டாடப்படுமாம். இது பற்றிய உங்கள் பார்வை எவ்வாறு இருக்கின்றது?

நீங்கள் இசையை முறையாகக் கற்றீர்களா? ஏதாவது இசை உபகரணம் வாசிபவரா?

நன்றி

நல்ல தகவல்கள்.. முதல்தரம் கேட்கும்போது சில பாடல்கள் எடுபடாமல் போவதற்கும், பிறகு கனகாலம் கழித்து அப்பாடல்கள் இனிமையாக இருப்பதற்கும் இந்த மூளையின் வேலைதான் காரணம் போல.. :unsure:

மேற்கத்தைய முறைப்படி இப்பாடலில் வரும் வாத்தியத்தைக் கற்று இருக்கிறேன்.. :D

பெரிதாகப் பெயரெடுக்காத நல்ல பாடல். அதே காலகட்டத்தில் வந்த இளையராஜாவின் பாடல்களின் பாணியிலிருந்து வேறுபட்டதாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன். ஏனென்று தெரியவில்லை.

கருத்துக்கு நன்றிகள் தப்பிலி.. :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.