Jump to content

எம்.ஜி.ஆரும் இந்திரா காந்தியும் இருந்திருந்தால் இப்போது ஈழத்தில் வாழ்ந்திருப்போம்!


Recommended Posts

First Published : 29 Apr 2012 12:00:00 AM IST

Last Updated :

Untitled-1.jpg

இன்னும் உயிருடன் இருக்கின்றன மருதாணி மரங்கள்

மற்றும் சில பூவரச மரங்கள்

பாதி நிழலை வைத்திருக்கிறது மருத மரம்

சாம்பல் சுவடுகளின் மேலாய்

புதிய கூடாரம் நாட்டப்பட்டிருக்கிறது

வானத்தின் காயம் ஆறிவிடும் என்று

அம்மா நம்புவதைப்போல

மீண்டும் வீடு வளரும் என்று தங்கை நம்புகிறாள்

காணி நிலத்தில் மீண்டும் பாடல்கள் முளைக்கின்றன

-தீபச்செல்வன்

கவிஞர். தீபச்செல்வன் ( 1983 ) ஈழத்தின் வன்னிப் பிரதேசத்தில் பிறந்தவர். போரின் பூமிக்குள்ளேயே வளர்ந்து வாழ்ந்து வருபவர். 2005ஆம் ஆண்டில் முதல் கவிதை பிரசுரமானது. கண்முன்னால் நடந்த கொடூரங்களை எல்லாம் இந்த உலகிற்கு சாட்சியமாகச் சொல்லிவிட வேண்டும் என்ற துடிப்பில் , இவரது எழுத்துக்கள் மிகக் குறுகிய காலத்தில் நான்கு கவிதை தொகுப்புகள் , இரண்டு கட்டுரைத் தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. சமீபத்தில் "பெருநிலம்' என்ற பெயரில் வெளிவந்துள்ள இவரது கவிதை தொகுப்பு, உலக அளவிலான கவிதைகளுடன் ஒப்பிடத் தகுந்தவை. தீபச்செல்வனுக்கு கவிதை என்பது வெறும் எழுத்தல்ல; ஆயுதம்.

கவிதையை உங்கள் ஆயுதமாக எப்படித்தேர்ந்தெடுத்தீர்கள்?

எப்பொழுதும் அழிக்கப்படக்கூடிய தேசத்தில் எப்பொழுதும் அழிக்கப்படக்கூடிய சனங்களில் ஒருவனாக வாழும்பொழுது எங்கள் போராட்டத்தையும் கனவையும் பதிவு செய்யும் ஓர் ஆயுதமாகத்தான் கவிதையைத் தேர்ந்தெடுத்தேன். போருக்குள் கடந்து வந்த துயர வழிகளின் தடங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். இயல்பிலேயே கவிதை எழுதும் ஈடுபாடு இருந்தது. எனது நிலத்தில் போரும் அழிவும் தொடர்ந்து நிகழ்ந்த பொழுது அந்த பாதிப்பைக் குறித்து எழுத உந்தப்பட்டிருக்கிறேன்.

கவிதையை உண்மை சார்ந்த ஆவணப்

பதிவாக ஆக்க வேண்டும் என எது உங்களைத் தூண்டியது?

அழியப் போகிறோம் என்கிற பொழுது விட்டுச் செல்ல நினைத்தே கவிதைகளை எழுதியிருக்கிறேன். எங்களுடைய போராட்டமும் அதற்கெதிரான போர் நடவடிக்கைகளும் ஏற்படுத்திய பாதிப்பு கவிதை என்ற வடிவத்தின் வழியாக உண்மையை ஆவணப்படுத்தத் தூண்டியது. வாழ்வுக்கான எங்கள் மக்களது போராட்டத்தை உலகம் புரிந்து கொள்ளாத நிலையும் சிங்கள அரசுகளினால் அழிக்கப்படும் நிலையும் இருந்தது. கொடும் போரால் எல்லாம் சிதைக்கப்படும் நிலையில் போராட்டத்தையும் அதற்குள் வாழ்ந்த காலத்தையும் அதன் முழுமையான உண்மைத் தன்மைகளுடன் ஆவணப்படுத்த வேண்டும் என்கிற உணர்வு எனக்கு ஏற்பட்டிருந்தது.

எப்பொழுதுமே சராசரி ஈழத்து குடிமகனாக நின்றே எங்கள்அரசியலையும் எங்கள் மக்களின் வாழ்வையும் கவிதைகளாக எழுதுகிறேன். அழிக்கப்படும் என்னுடையஇனத்தின் துயரத்தை உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் எழுதுகிறேன்.

எங்களுடைய கவிதைகளையும் வலியையும் மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்; ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான் எழுதுகிறேன்.

புத்தரின் அன்புமயமான வார்த்தைகள் சிங்கள ஆட்சியாளர்களிடமும் அங்குள்ள புத்தபிட்சுக்களிடமும் ஏன் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை? புத்தம் என்பது அங்கு என்ன?

ஈழத்தில் புத்தரின் பெயரால்தான் எங்கள் இனமும் நாடும்அழிக்கப்படுகிறது. காலம் காலமாக இதுவே நடக்கிறது. ஈழதேசத்தை பெüத்த சிங்கள தேசம் என்கிறார்கள் சிங்களஆட்சியாளர்கள். ஈழத்திற்கு எதிரான யுத்தத்தைதூண்டுபவர்களாகவும் ஆசி வழங்குபவர்களாகவும் புத்தபிக்குக்கள் உள்ளனர். சிங்கள ஆட்சியாளர்களும் சிங்களபிக்குகளும் புத்தரின் ஞானத்தைப் புரிந்து கொள்ளாமல்பெüத்தம், புத்தர் என்கிற படிமங்களைஇனவாதத்திற்காகவும் இன அழிப்பிற்காகவும் பயன்படுத்துகிறார்கள்.

தடுப்பு முகாம்களில் என்னவிதமான கொடுமைகளை தமிழ் மக்கள் எதிர்கொள்கிறார்கள்?

தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதே மிகப்பெரிய கொடுமைதான். அரசின் விளம்பரத்திற்காவும் அரசியலுக்காகவும் மிகக்கொடிய வாழ்வை எங்களது மக்கள் அனுபவிக்கிறார்கள். தடுப்பு முகாமின் வடிவமைப்பும் அதன் செயற்பாடுகளும் முழுக்க முழுக்க

சித்திரவதையை நோக்கமாக கொண்டது. அரசும் இராணுவமும் தடுப்பு முகாம்களை சொர்க்கபூமி என்கிறது. அங்கு வாழும் மக்களுக்குத்தான் அது எத்தகைய நரகம் என்று தெரியும். இந்த நூற்றாண்டின்,இன்றைய உலகில் மிகக் கொடிய சித்திரவதை முகாம்களாக அவை அமைக்கப்பட்டுள்ளன.

இப்போது தமிழர் பகுதிகளில் என்னதான் நடக்கிறது?

இப்பொழுது தமிழர் பகுதிகள் இராணுவத்தின் முகாம்களாலும் இராணுவத்தின் கட்டுப்பாடுகளாலும் புத்தர் சிலைகளாலும் வடிவமைக்கப்படுகின்றன. மீள்வாழ்க்கையின்றி பல்வேறு நெருக்கடிகள் மிகுந்த சூழலுக்குள் மக்கள் இருக்கிறார்கள். வன்னியில் மீள் குடியேறிய மக்கள் பலரும் அகதிக் கூடாரங்களில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வசித்தவர்கள். மக்களின் வாழ் நிலங்களில் குடியேறிய இராணுவம் நிலத்தை மறுக்கிறது. சிங்களக் குடியேற்றங்கள் சுதந்திரமாகச் செய்யப்படுகின்றன. முக்கியமாக ஈழத்தமிழர்களின் நிலங்களை அபகரிக்கும் செயல்பாடு மக்களைப் பெரும் தவிப்புக்குள்ளும் அபாயத்திற்குள்ளும் தள்ளியிருக்கின்றன.

தமிழகத் தமிழர்கள் பற்றி அங்குள்ள தமிழ் மக்கள் என்னவிதமாக நினைக்கிறார்கள்?

நமக்காக குரல் கொடுக்க உள்ள உறவுகள் என்ற வகையில் ஈழத் தமிழ் மக்கள் நம்பிக்கையோடு வாழ்வதற்கு தமிழக மக்களும் உந்துதல் அளிக்கின்றார்கள். தமிழக மக்கள் தொடர்பில் உணர்வுபூர்வமான ஒரு நெருக்கத்தை ஈழத்து மக்கள் உணருகிறார்கள். முள்ளிவாய்க்கால் போர் நடந்த காலத்தில் தமிழக மக்களின் ஈழ ஆதரவுப் போராட்டத்தையும் உணர்ச்சியையும் செயற்பாடாய் மாற்றக்கூடிய சர்வ சக்தி வாய்ந்த தலைவர் ஒருவர் வாய்க்கவில்லை என்பதே போரின் தோல்விக்குப் பெரிய காரணமாகி விட்டது. தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரும், இந்தியாவில் இந்திராகாந்தி அம்மையாரும் தலைவர்களாக இருந்திருந்தால் நாங்கள் இப்பொழுது விடுதலை பெற்ற ஈழத்தில் வாழ்ந்திருப்போம். ஈழத்து மக்கள் தாங்கள் இழந்தவற்றைப் பெறுவதில் தமிழ்நாட்டு உறவுகளின் உணர்வுப்பூர்வமான பங்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிறது.

புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் மக்கள் இனி என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்?

புலம்பெயர்ந்த ஈழ மக்கள் உணர்வுரீதியாகவும் போராட்டரீதியாகவும் ஈழத்து மக்களின் பலத்தை வெளிப்படுத்துகின்றவர்கள். இன்று முழுமையான அடக்குமுறைக்குள் நசிக்கப்படும் தாய்நிலத்து மக்களின் உணர்வை அவர்கள் பிரதிபலிக்கின்றார்கள். இலங்கைக்கு ஆதரவாக சிங்கள ஆட்கள் ஆர்பாட்டம் செய்கையில் இலங்கைக்கு எதிராக புலம்பெயர்ந்த ஈழ மக்களும் போராடுகிறார்கள். இவ்வாறுதான் ஈழ மக்களின் உணர்வை வெளிக்காட்ட முடிகிறது.

ஈழத் தமிழ் மக்களுக்கு இந்தியா செய்யவேண்டியது என்ன? சீனாவின் கைக்குள் இலங்கைசென்றுவிடும் என்ற இந்தியாவின் பயம் சரிதானா?

சீனாவின் கைக்குள் இலங்கை வசப்பட்டு விட்டது. இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவுக்கு துரோகம் இழைத்து விட்டார். எங்கள் மக்களை அழிக்க எங்கள் போராட்டத்தை சிதைக்க இலங்கைக்கு பெரிதும் உதவிய இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக சீனாவை இலங்கை அதிபர் அழைத்திருக்கிறார். எங்கள் தலைமீது ஊன்றப்பட்டுள்ள சீனாவின் கால்கள் இந்தியாவுக்கே அச்சுறுத்தலானது. இப்பொழுது இந்தியா எங்களைப் பாதுகாப்பதை விடவும் தன்னையே பாதுகாக்க வேண்டியிருக்கிறது.

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட ஐ.நா தீர்மானம் ஈழத் தமிழ்மக்களுக்கு நன்மையளிக்குமா?

இந்தத் தீர்மானம் நேரடியாக ஈழ மக்களுக்கு நன்மை அளிக்காது. தவிரவும் இலங்கை அரசாங்கம் எந்தத் தீர்மானங்களுக்கும் அசையப் போவதில்லை. இந்தத் தீர்மானத்தில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை அரசோ இன நல்லிணக்கத்தை முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிந்த கணத்திலேயே தொடங்கியதாகச் சொல்கிறது. ஈழத்தில் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பது உட்பட பல்வேறு அநீதிகளை மென்மையான முறையில் இந்தத் தீர்மானம் சுட்டி காட்டியிருக்கிறது. போர்க் குற்றங்களையும் இனப்படுகொலையையும் இழைத்த இலங்கை அரசின் இறுக்கமான ஆட்சியில் வாழும் ஈழத்து மக்களுக்கு ஐ.நா. தீர்மானம் சிறிய ஆறுதலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தீர்மானத்திற்கே இவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது என்பது உலகத்தின் முன் நிலைநாட்டப்பட்டிருக்கிறது. இலங்கை அரசின் இனப்படுகொலையையும் போர்க்குற்றத்தையும் தண்டிக்கத்தக்க தீர்மானத்தை உலகம் கொண்டு வருவதே பாதிக்கப்பட்ட ஈழ மக்களுக்கு நீதியை கொடுக்கும். கொடுக்க வேண்டும். இன்றில்லாவிட்டாலும் நாளை.

ஈழப்போராட்டத்தின் - ஈழத்து மக்களின் எதிர்காலம்என்ன?

இலங்கை அரசுகளின் அடக்குமுறைகளுக்கு எதிரான ஈழப்போராட்டத்தில் ஆயுதப் போராட்டம் சிதைக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த அடக்குமுறைகளுக்கும் உரிமைமீறல்களுக்கும் எதிராக ஈழமக்கள் போராடினார்களோ அந்த அடக்குமுறை இப்பொழுது இன்னும் அதிகரித்துவிட்டது. நாங்கள் வாழ வேண்டியிருக்கிறது. வாழ்வதற்காகப் போராட வேண்டியிருக்கிறது. ஈழம் எங்களின் தேசம். எங்களுக்கு எங்களுடைய வாழ்க்கை வேண்டும். விடுதலையும் வாழும் தேசமும் கிடைக்கும்வரை ஈழத்து மக்கள் போராட வேண்டிய நிர்பந்தத்திற்குள் தள்ளப்படுகிறார்கள். அதனால் ஈழப்போராட்டம் தாய்நிலத்தில் இப்பொழுதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

சந்திப்பு -பவுத்த அய்யனார்

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Kadhir&artid=589566&SectionID=146&MainSectionID=146&SEO&Title=%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D++%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D++%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.