Jump to content

இரண்டுங்கெட்டான்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடுத்தர இனம் - என்ன செய்யும்?

மா.பா. குருசாமி

ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியும் மேன்மையும் அந்தச் சமுதாயத்திலுள்ள பல்வேறு வகையான மக்களின் செயல்பாட்டிலும் பங்களிப்பிலும் இருக்கின்றன. இதனை அறிய சமுதாயத்திலுள்ள மக்களை ஏதாவதொரு அடிப்படையில் பகுத்தும் பிரித்தும் ஆராய்வது நீண்ட நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகின்றது.

மனித நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதில் பல்வேறு காரணிகள் பங்கு பெறுகின்றன. அவற்றில் முதன்மையானதாகவும், ஆற்றலுடையதாகவும் பொருளாதாரக் காரணி இருப்பதால், அதன் அடிப்படையில் மக்களின் செயல்பாட்டை ஆராய்வது பயனுடையதாக இருக்கும்.

மக்களை மேல் நிலை, இடை நிலை, கீழ் நிலை என்று பொருளாதார அடிப்படையில் பகுக்கின்றபொழுது, இந்த அளவுகோல் நாட்டிற்கு நாடு, காலத்திற்குக் காலம் மாறுவதை நாம் மறந்துவிட முடியாது. இப்படி மக்களைப் பிரிக்கச் சரியான வரையறையும், தெளிவான புள்ளி விவரங்களும் நம்மிடம் இல்லை. இருந்தாலும் சில அடிப்படை உண்மைகளை உணர, அறிய இந்தப் பகுப்புத் தேவை.

இன்றைய சூழலில் நமது நாட்டில் மேல்தட்டு மக்களாக யாரைக் கருதலாம்? இலட்சக்கணக்கில் மாத வருவாயும், கோடிக்கணக்கில் சொத்துகளும் வைத்திருப்பவர்கள் மேல்தட்டு மக்கள் என்றால் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே இப்பிரிவில் அடங்குவர். இவர்களை உயர் - மேல் மட்டத்தினர் என்று கருதலாம். பொதுவாக, சொந்தமாகத் தொழில் செய்து அல்லது உயர் பதவியிலிருந்து, மாதம் ஐம்பதினாயிரத்திற்கு மேல் வருவாய் பெற்று இலட்சக்கணக்கில் சொத்துகள் வைத்திருக்கும் குடும்பத்தினரை மேல் மட்டத்தினராகக் கருதினால், மொத்தத்தில் சுமார் 20 சதவிகிதம் பேர் இப்பிரிவில் வரலாம். இது ஓர் ஊகம் தான்.

இதற்கு அடுத்த நிலையிலுள்ள நடுத்தர இன மக்களின் மேல் வரம்பையும் அடித்தள நிலையையும் வரையறுப்பது, இன்னும் சிக்கலான பணியாகும். பொதுவாக ஒரு குடும்பத்தில் சராசரி ஓராளுக்கு மாத வருவாய் இரண்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை பெறுபவர்களை நடுத்தர இனத்தவரென்றால், இவர்களையும் சுமார் ஐயாயிரம் வருவாய்க்கு மேல் பெறுபவர்களை மேல்மட்ட நடுத்தர மக்களென்றும், அதற்குக் கீழ் வருவாய் பெறுபவர்களை கீழ்நிலை நடுத்தர மக்களென்றும் பகுக்கலாம். இவர்கள் ஒருவேளை மொத்தத்தில் ஏறத்தாழ 40 சதவிகிதம் இருக்கலாம்.

மீதி 40 சதவிகிதத்தினரை அடிநிலை மக்கள் என்றால், இவர்களில் 25 சதவிகிதத்தினர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள். 15 சதவிகிதத்தினர் அடிப்படைத் தேவைகள் ஓரளவு கிடைக்க வாழ்பவர்கள். இந்த அடிநிலை மக்களிடம் அரசியலில் கட்சி ஈடுபாடு இருக்கின்றது. இன்றைய நிலையில் இவர்கள் தான் `வாக்கு வங்கிகளாக'ச் செயல்படுகின்றனர். இவர்கள் கிராமங்களிலும், நகரக் குடிசைப் பகுதிகளிலும் வாழ்பவர்கள்.

மொத்தத்தில் 40 சதவிகிதமாக இருக்கும் நடுத்தர மக்களில் பெரும்பாலானவர்கள் நகரங்களில் வாழ்பவர்கள். இவர்கள் படித்தவர்கள். அரசுப் பணிகளில், தனியார் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள். வணிகர்கள், டாக்டர்கள், வழக்குரைஞர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் இந்தப் பிரிவில் அடங்குவார்கள். இவர்கள் நல்ல உழைப்பாளர்களாக இருப்பார்கள்.

நடுத்தர மக்களிடம் வாழ்க்கை விழிப்புணர்வு இருக்கும். இவர்களில் கீழ் மட்டத்திலிருந்து முன்னேறி வந்தவர்கள், மேலும் முனைப்போடு மேலே வர முயல்வார்கள். நடுத்தர மக்களில் உயர்நிலையில் இருப்பவர்கள் மேல் மட்டத்திற்கு வர பல்வேறு வழிகளை மேற்கொள்வார்கள்.

பல இடங்களில், அலுவலகங்களில், சங்கங்களில், அமைப்புகளில் நடுத்தர மக்கள் தான் இலைமறைகாயாக பெருஞ்சக்தியாக விளங்குவார்கள். இவர்கள் `மூளையர்கள்' என்பதால் மறைமுகமாக காரியத்தைச் சாதித்துக் கொள்வார்கள்.

பேராசிரியர் க.ப. அறவாணன் தமிழர்களை அப்பாவித் தமிழர்கள், பாவித் தமிழர்கள் என்று பிரிப்பார். இந்தப் பாவித் தமிழர்கள் நடுத்தரப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

சமுதாயத்தில் இலஞ்சம், வரதட்சணை, மதுப்பழக்கம், ஆடம்பரம், நுகர்வுக் கலாசாரம், கடன் கலாசாரம் ஆகியவற்றை வளர்ப்பவர்கள் இவர்களே. சாதிச் சங்கங்கள், மதக் கட்சிகள், அரசியல் குழப்பங்கள் ஆகியவற்றில் உந்து சக்திகளாக இருப்பவர்கள் இவர்களே.

இந்த நடுத்தர மக்கள் தங்களிடமிருக்கும் தன்னலத்தை ஓரளவு விட்டுக் கொடுத்து, சமுதாய உணர்வோடு செயல்பட்டால் பெரிய மாற்றம் ஏற்படும். இவர்களிடமிருக்கும் பெருங்குறைதான் தனது குடும்பம், சுற்றம், சாதி, மதம் என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுழல்வதுதான். இவர்களிடம் இறை நம்பிக்கை இருக்கும். கொள்கை பேசுவார்கள். ஆனால், தேவை என்றால் மேலே இருப்பவர்களிடம் நல்ல பெயர் வாங்க, எவ்வளவு வேண்டுமானாலும் வளைந்து கொடுப்பார்கள். எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பார்கள். நன்றாக, வசதியாக வாழ மகிழ்ச்சியோடு அடிமைகளாக இருப்பார்கள்.

இன்றையச் சூழலில் நமது சமுதாயம் மாற வேண்டுமானால், முன்னேற வேண்டுமானால் இந்த நடுத்தர மக்கள் எழுச்சி பெற்றவர்களாக, சீர்திருத்தச் சிந்தனையாளர்களாகச் செயல்பட வேண்டும்.

நாம் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும்; துலங்கும்.

நாம் விடுதலைப் போரில் ஈடுபட்டபொழுது காந்தியடிகளின் பின்னால் சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர மக்கள். இவர்கள் சத்தியாக்கிரகிகளாக, நிர்மாணத் திட்ட ஊழியர்களாக, தொண்டர்களாகச் செயல்பட்டபொழுது மக்கள் சக்தி உருவானது. அன்று கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்ட ஆண்களும் பெண்களும் நடுத்தர மக்கள் அல்லவா?

விடுதலைக்குப் பின் நடந்திருக்கின்ற அரசியல் ஆட்சி மாற்றங்களை எண்ணிப் பாருங்கள். நடுத்தர மக்களால் மேல்மட்ட மக்களையும் கீழ்மட்ட மக்களையும் இணைக்க முடியும். இன்றுள்ள அரசியல் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வகுப்பைச் சார்ந்தவர்கள் என்பதை மறக்கவோ, மறுக்கவோ இயலாது.

இன்றுள்ள நமது நாட்டு குழப்பமான அரசியல், பொருளாதார சூழலில் எந்தப் புரட்சிகரமான மாற்றமும் ஏற்படாது. நமது நடுத்தர இனம், மக்களின் உணர்வுகளை மனமாற்றம் செய்துவிடும். சிக்கல்களைப் பட்டியலிடுவார்கள். தீர்வு காண மாட்டார்கள். இந்நிலை தொடர்ந்தால் வன்முறைகள் பெருகிக் கொண்டு போகும். நடுத்தர இனமும் அமைதியாக வாழ முடியாது.

நடுத்தர மக்களிடம் உண்மையான சமுதாய விழிப்புணர்வு தேவை. சாதி, சமயம் என்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளியில் வர வேண்டும். லஞ்சம், வரதட்சணை போன்றவற்றை ஒழிக்கவும் சுதேசி மனப்பான்மையோடு நமது நாட்டுப் பொருட்களைப் பயன்படுத்தவும் தங்கள் அளவில் தீமைக்குத் துணை போகாமல் இருக்கவும், தேர்தல் காலங்களில் நல்லவர்களுக்கு வாக்களிக்கவும் உள்ள உறுதியோடு செயல்பட்டால் ஒரு புதிய சமுதாயத்தை நம்மால் உருவாக்க முடியும்.

நம்மைச் சுற்றி சமுதாயச் சீர்கேடுகள் மலிந்திருக்க நாம் மட்டும் நிம்மதியாக வாழ முடியாது. சாக்கடை, தெருவின் நடுவில் ஓடுமானால் கொசுக்களிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியாது.

மதில்மேல் பூனையாய், இரண்டுங்கெட்டானாக நடுத்தர இனம் இருக்கக் கூடாது. இருக்கின்ற நிலையில் தெளிந்த அறிவோடு, உறுதியாக நாட்டு நலநோக்கில் நடுத்தர இனம் செயல்பட்டால், விரைவிலேயே நமது நாடு முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காணலாம்.

-தினமணி-

--------------------------------------------------------------------------------

http://www.thinakural.com/New%20web%20site...8/Article-2.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு ஆக்கம் பிரசுரித்தமைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.