Jump to content

காதலைச் சொல்லிவிட்டான்..!


Recommended Posts

காதலைச் சொல்லிவிட்டான்..!

அவன் தன் காதலை ஒருவழியாகச் சொல்லிவிட்டான். :rolleyes: காதலியோ ஆரம்பத்தில் குழம்பித்தான் போனாள். அவனைப் பிடிக்கும் என்றாலும் அவனின் சிறு குறைகளை நினைக்கும்போது தடுமாற்றமாகவும் இருந்தது.

அவள் மீதிருந்த அதீத காதலால் அவள் யாரிடம் பேசினாலும் சந்தேகப்படுவது இவன் வழக்கம். அது உண்மையிலேயே அவளின் குணத்தில் ஏற்பட்ட சந்தேகம் அல்ல. எங்கே அவள் தன்னை விட்டு விலகும் சந்தர்ப்பம் வாய்த்துவிடுமோ என்கிற பயத்தினால் வந்த பரிதவிப்பு.. :(

"கல்யாணத்துக்குப் பிறகும் சந்தேகப்பட்டீங்கன்னா??!" :unsure:

"சத்தியமா சொல்லுறன்.. இனிமேல் நான் அப்பிடி நடந்துகொள்ள மாட்டன்.. என்னை நம்பு.." :(

சில நிமிடங்கள் அமைதியில் கழிகின்றன. இதழோரத்தில் ஓரத்தில் ஒரு புன்னகையைப் பதிலாகத் தந்துவிட்டுச் செல்கிறாள். :rolleyes:

காதலியிடம் சென்றுவிட்டான்.. ஆனால் காதலில் வென்றுவிட்டானா? :unsure: அவன் மனதில் குழப்பங்கள். இன்பமும், துன்பமும் மாறி மாறி வருவதுபோன்ற உணர்வு.. ஒரு நிலையில் நிற்க முடியவில்லை..

அவளோ ஒரு பட்டாம்பூச்சி.. :wub: வெள்ளந்தியாக மற்றவர்களிடம் அதிகம் சிரித்துப் பேசுவாள்.. இவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை..

காதலன்.. காதலி.. இந்த இருவரின் வெவ்வேறான மன உணர்வுகளையும் இசையால் சொல்ல முடியுமா? :unsure:

இப்போது காட்சியைக் காணுங்களேன்.. :rolleyes:

(பாடல் அலசல் தொடரும்.) :D

Link to comment
Share on other sites

இப்பொழுது இசைக்கு வருவோம்.. :rolleyes:

மேற்கத்தைய இசை முறையில் Chords எனும் ஒரு நுட்பம் உண்டு. வீணை, புல்லாங்குழல், வயலின் போன்றவற்றில் ஒரு கணத்தில் ஒரு சுரம்தான் வெளிப்படும். ஆனால் பியானோ, கிட்டார் போன்றவற்றில் ஒரு பொழுதில் மூன்று அல்லது நான்கு சுரங்களைச் சேர்த்து வாசிக்கலாம். இதற்கு கோர்ட்ஸ் என்று பெயர்.

கோர்ட்சில் பல பிரிவுகள் உண்டு.. ராகங்களுக்கேற்ப அவற்றின் சுரங்கள் வேறுபடும். இரண்டு பெரும் பிரிவுகள் இந்த நுட்பத்தில் உள்ளன.

  1. மேஜர் கோர்ட்ஸ்
  2. மைனர் கோர்ட்ஸ்

மேஜர் பெரும்பாலும் மகிழ்ச்சியான, உற்சாகமான உணர்வுகளைக் கொடுக்கக்கூடியது. மைனர் எதிர்மறையானது. இவை விதிகளல்ல. ஆனால் இவற்றின் பொதுவான தன்மைகள் இவ்வாறு காணப்படும்.

இந்தப்பாடலில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் நாதம்..

Scale: A B C D E F G

Chords: A மைனர், C மேஜர், D மைனர், G மேஜர்..

பாடலின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மேஜர், மைனர் என்று வருவது இன்னும் சிறப்பு.. :rolleyes:

பல்லவி இவ்வாறு ஆரம்பிக்கிறது..

உறவெனும் புதியவானில்

பறந்ததே இதய மோகம்

ஓடும் அலை என மனம் போகும்..

கனவிலும்.. நினைவிலும்..

புதுசுகம்..

நீலத்தில் உள்ளது சோகம் இழையோடும் பகுதி.. Aமைனர் Dமைனர் உபயோகிக்கப்படுகிறது.. பச்சையில் உள்ள பகுதியில் ஒரு வெளிச்சம் அல்லது உற்சாகம் பிறக்கிறது.. இதில் G மேஜருக்கு வந்து C மேஜரில் முடிக்கிறார் இசையமைப்பாளர்.. :wub:

(தொடரும்..)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை நான் சும்மா பாட்டுக் கேட்பதோடு சரி இசையை பற்றி ஒரு அறிவும் கிடையாது :D ...உங்கள் பதிவு நல்லாயிருக்குது தொடருங்கோ

Link to comment
Share on other sites

உங்கள் கருத்துக்கும், ஊக்கத்துக்கும் நன்றிகள் ரதி.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இசையைப்பற்றி அதிகம் தெரியாது.

இருந்தாலும் இது இசையை ரசிப்பவர்களுக்கும்

அதனுடன் தொடர்புடையவர்களுக்கும்

உதவியாக இருக்கும் என நினைக்கின்றேன்.

வித்தியாசமான பதிவாக இருப்பதால்

நானும் தொடர்ந்து வாசிப்பேன் இசை

தொடருங்கள்

Link to comment
Share on other sites

பல்லவி முடிந்ததும் 1:37 இல் இருந்து இசை தொடங்குகிறது. A மைனரில் கிட்டார் மீட்டலுடன் (Strumming) ஆரம்பிக்கும் இசையில் சிறிது சோகரசம் தெரிகிறது.. :rolleyes: ஆனால் சோகம், மகிழ்ச்சி இரண்டையும் கலந்து தரவேண்டுமல்லவா.. யாரும் வேறுபாட்டை அறிய முன்னர், 2:00 நேரக்கணக்கில் வயலின் இசையைப் புகுத்தி 2:04 நேரக்கணக்கில் மேஜர் வந்துவிடுகிறது.. :D மகிழ்ச்சியான ஒரு இசை வெளிப்படும் இடம் இது.. :rolleyes: இது அப்படியே மகிழ்ச்சியான மனநிலையுடன் சரணத்துக்குள் செல்கிறது..

சரணம்

பார்வை ஒவ்வொன்றும் கூறும்

பொன்காவியம்

பாவை என்கின்ற கோலம்

பெண் ஓவியம்..

மாலைவரும்போதிலே

நாளும் உந்தன் தோளிலே

கனவிலாடும்..

நினைவு யாவும்..

கனவிலாடும்..

நினைவு யாவும்..

இனிய பாவம்..

இளையராஜாவின் ஆரம்பகாலப் பாடல்களில் அனுசுரங்களின் பாவனை அதிகமாக இருக்கும்.. ரசிகர்கள் எதிர்பாராத நேரத்தில் இவற்றைப் புகுத்திவிடுவார்.. அனுசுரம் என்பது பாடலின் ராகத்தில் உள்ளடங்காத ஒரு சுரத்தைப் பாவித்தல் ஆகும்.. :rolleyes:

முதல் சரணத்தில் பொன்காவியம், பெண் வியம் என்று பாடும்போது கவனியுங்கள்.. சிவப்பினால் காட்டப்பட்டுள்ள இடங்களில் வருவது அனுசுரம்.. ராகத்தில் இல்லாத G# சுரத்தை இவ்விடங்களில் பாவிக்கின்றார்.. :rolleyes: அது ஒரு மாறுபட்ட சுவையைக் கொடுக்கின்றது..

(தொடரும்..)

Link to comment
Share on other sites

இசையை இரசிப்பன் இசை! ஆனால் என்னுடைய இசைப்பயணம் என்று ஒன்று இருந்தது. அந்தப் பயணம் என் பள்ளிக்கூட மேசையைவிட்டு வந்த நாளோடயே முடிஞ்சு போச்சு... :(:lol: :lol: :lol: :lol:

#தாளம் போட்டு ரொம்ப நாளாச்சு - அது ஒரு கனாக்காலம்# :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை நான் சும்மா பாட்டுக் கேட்பதோடு சரி இசையை பற்றி ஒரு அறிவும் கிடையாது :D ...உங்கள் பதிவு நல்லாயிருக்குது தொடருங்கோ

தங்கச்சி மாதிரி நானும் பத்தோடை பதினொண்டு :):D

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி எழுதுங்கள் இசை அண்ணா. நீங்களும் கிட்டார் வாசிப்பவர் எண்டு இப்பத்தான் ஞாபகம் வந்திச்சு. நானும் Accoustic வாசிக்கிறனான், ஆனால் இப்ப கிட்டாரைத் தொட்டு கன காலம். ஊரிலே சும்மா லோக்கல் கிட்டார்கள் தான் இருந்தது. இங்க வந்து ஒரு Yamaha, ஓர் Gibson எண்டு வாங்கி வச்சிருக்கிறன். நான் விட்ட பிழை, ஒருநாளும் முறைப்படி கிட்டார் படிக்கவில்லை. எப்பவுமே ear music தான்.

Link to comment
Share on other sites

அருமையான ஆய்வு. இந்தப்படமும் பாடல்களும் மிகப் பிடித்தமானவை. இந்தப் பாட்டு வித்தியாசமானது என்று ஒரு உணர்வு. ஆனால் இதற்குப் பின்னால் இவ்வளவு விளையாட்டு இருக்கிறது என்று தெரியாது.

இசையில் நல்ல ஆர்வம். இசைக்கருவிகள் பழகச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 'ட்ரம்ஸ்' கொஞ்சக் காலம் பழகியிருக்கிறேன். '

'கிட்டார்' ஒன்று வாங்கிப் பத்திரமாக பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். :D

Link to comment
Share on other sites

கருத்துக்களுக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள் வாத்தியார், கவிதை, குமாரசாமி அண்ணா, தும்பளையான், தப்பிலி.. :D

தும்ஸ், தப்பிலி.. வாங்கி வச்சிருந்தால் மட்டும் காணாது.. :D அப்பப்ப தட்டியும் பார்க்க வேணும்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இசையைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லை.

காதுக்கு இனிமையாக... இருந்தால், கேட்பதுடன் சரி00008986.gif.

இசைகலைஞனின் பதிவுகள் மூலம் ஏதாவது பயன் கிடைக்கும் என நம்புகின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனவிலாடும்..

நினைவு யாவும்..

இனிய பாவம்..

(தொடரும்..)

இந்தவரிகள் எங்களில் பலருக்குப்புரிவதில்லை தொடருங்கள் உங்கள் இசைப்பயணத்தை இசை

Link to comment
Share on other sites

3:18 நேரக்கணக்கில் ஆரம்பிக்கும் கிட்டார் இசை மைனர் வடிவில் சோகரசத்துடன் 3:32 வரை சென்று புல்லாங்குழல் இசையுடன் மகிழ்ச்சிக்குரியதாக (மேஜர்) மாறுகிறது.. :rolleyes: 3:49 இல் நுழையும் ஒற்றை வயலின் இசை சோகத்தைக் கொண்டுவந்து 4:01 வரை இசையை நகர்த்திச் செல்கிறது..

பிறகு அது வயலின் இசைத்தொகுப்பாகி 2:05 4:05 நேரக்கணக்கில் பியானோவின் இசைச் செருகலுடன் மகிழுணர்வுக்குள்(Euphoria) ரசிகர்களைக் கொண்டு செல்வதைக் கவனியுங்கள்.. :D ஏனென்றால் சரணத்தின் ஆரம்பம் மேஜரில் இருக்கவேண்டும் என்பதால்.. :D

இறுதிப்பல்லவியை (உறவெனும்) எஸ்.பி.பி. பாடுகிறார்.

உறவெனும் புதிய வானில்

பறந்ததே இதய மோகம்..

ஓடும் அலை என மனம் போகும்..

கனவிலும் நினைவிலும் புதுசுகம்..

"என மனம்" என்கிற வார்த்தைகளில் அவர் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கவனியுங்கள்.. ஜானகி அவர்கள் பாடியதைவிட வித்தியாசமாக இருக்கும்.. :rolleyes: காதலன் கெஞ்சுவதுபோல இருக்கு.. :D

பாடலின் பெரும்பாலான பகுதிகளில் தாளவாத்தியம் எதுவும் உபயோகிக்கப்படவில்லை.. :rolleyes: ஆனால் அதை உணர்ந்துகொள்வது கடினம். பேஸ் கிட்டாரை உபயோகித்து தாளம் மாதிரி செய்துவிட்டிருக்கிறார்.. இது மிகவும் சிக்கலான ஒரு உத்தி.. சரியான நோட்ஸ் கொடுக்கவில்லை என்றால் பாடலின் மூட் கெடுவதுடன் தாளமில்லாததுபோன்ற ஒரு நிலையும் தோன்றிவிடும்.. :rolleyes:

ஒரு பாடலை சூழ்நிலைக்கேற்ப இசையமைப்பது என்பது பெரிய வித்தை.. பாடலின் மெட்டு நன்றாக இருந்தால் பாடல் 50% மட்டுமே பூர்த்தியாகும். மிகுதியைக் கொண்டு நகர்த்துவது பின்னணி இசைதான்.. சந்திரபோஸ், சங்கர் கணேஷ் போன்றவர்கள் மெட்டை நன்கு அமைத்தாலும் பின்னணி இசையில் அக்கறை செலுத்தாமையால் அதிகம் பாடல்கள் நிலைபெறவில்லை.

(நிறைந்தது.)

கேள்வி-பதில்:

இந்தப் பாடலில் வரும் மோகன் கதாபாத்திரம் யாழ்களத்தில் யாராக இருக்கும்? :D

Reason for Editing: நேரக்கணக்கில் ஏற்பட்டிருந்த பிழை சரிசெய்யப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

மிகவும் சுவாரசியமானதும் பயனுள்ளதுமான பதிவு. மிக்க நன்றி. தொடருங்கள் இதுபோன்ற பதிவுகளை.

சில பாடல்கள் ஏனென்று தெரியாமல் அதிகம் பிடித்துப்போய்விடுகின்றன. ஞாபகங்கள், சந்தர்ப்பஙகள் போன்றனவும் இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், எமது கடந்த கால அனுபவங்கள், மற்றும் எந்தச் சூழ்நிலையில் முதலில் அந்தப் பாடலில் நாம் லயித்தோம் என்பதில் தான் எமது அப்பாடல் பற்றிய உணர்வுகள் அனைத்தும் அமைகின்றனவா, அல்லது ஒவ்வொரு மனிதனிற்கு அவனது தன்மை சார்ந்து ஒவ்வொரு ராகங்களில் ஈர்ப்பு உண்டாகுமா? 'உனது நண்பரைக் காட்டு உன்னைப் பற்றிக் கூறுகிறேன்' என்ற பழைய வசனம் போல 'பிடித்த ராகத்தைச் சொல்லு உன்னைப் பற்றிக் கூறுகிறேன்' என்ற இருக்க முடியுமா?

உங்களிற்கு நேரமிருப்பின், இரு கேள்விகள்

1) பிரியா படப்பாடல்கள் (குறிப்பாக டாலிங் டாலிங் மற்றும் அக்கரைச்சீமை அழகினிலே) கேட்கும் போது, அது எங்கே எப்போ கேட்கிறேன் என்றில்லாமல் பின்வரும் சூழல் எனக்குள் விரிவதை அவதானித்திருக்கிறேன்: மப்பும் மந்தாரமுமான, கருமேகம் நிறைந்து சாதுவான தூறல் இருக்கின்ற ஒரு பொழுது. ஏதோ ஒரு மலர்--அதுவும் அதிகம் புழக்கத்தில் உள்ள பழகிப்போன மலரில்லாமல்-- சீமைக்கிளுவை (கிளுசரியா) போன்ற மலரின் வாசம் கமழ்வதாவும், மனிதர்கள் எல்லாம் ஏதோ ஒரு கிறங்கிய அல்லது சிருங்கார மனநிலையில் உலவுவது போன்றும் உணர்ந்துள்ளேன். மேற்படி பாடல்களில் இவ்வாறான சூழ்நிலைகளை உருவாக்கும் இசைக்கோர்வைகள் ஏதேனும் இருக்கின்றனவா? அல்லது, வெறுமனே இப்பாடல்கள் எனக்குள் புகுந்த கணத்தின் ஞாபங்கள் தான் இவையா?

2) அதுபோன்றே மூடுபனியினின் என் இனிய பொன்னிலாப் பாடலையும் நேரம் கிடைப்பின் உங்கள் பாணியில் பிரித்து மேய்ந்தீர்கள் ஆயின் என்னைப் போன்றவர்களிற்கு மகிழ்வளிக்கும்.

உங்கள் நேரத்திற்கு முற்கூட்டியே மனதார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

நன்றிகள் இசை அண்ணா இப்பிடியான ஒரு தொடரை /விவாதத்தை ஆரம்பித்து வைத்ததற்கு எங்களவர்கள் மத்தியில் இசை சம்பந்தமான ஆக்க பூர்வ விமர்சனம்களோ விவாதங்களோ இது வரை என் கண்ணில் படவே இல்லை ஆனால் தமிழக உறவுகளுக்கிடையில் எப்போது பார்த்தாலும் இளையராசா, ரஹ்மான் பற்றிய காரசாராமான விவாதங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கும் நான் நினைப்பது இவர்களுக்கு வேற வேலையே கிடையாதா எப்போது பார்த்தாலும் இளையராஜா ரஹ்மான் எண்பதுகளிலான பாடல்கள் என்று சண்டை பிடிச்சு கொண்டே இருக்கிறார்கள் என்று அவர்களிடயே விவாதம்கள் மிகபெரியளவில் நடப்பது ஒன்று இளையராஜா ரஹ்மான் பற்றியதாக இருக்கும் மற்றையது கிரிக்கெட் சினிமா இலக்கியம் இதை விட்டால் சாதி பிரச்சினைகள் ஆனால் அதிகமான கருத்தாடல்கள் இளையராஜா பற்றி தான் நடந்து இருக்கும் என நினைக்கிறேன் நீங்கள் தமிழகத்தில் அதிக காலம் தங்கி இருந்தது தான் உங்களின் இசை ஆர்வத்தில் அதிக தாக்கம் செலுத்தி இருக்கும் என நம்புகிறேன் JAFFNA இல் இருக்கும் போதே உங்களுக்கு இசையில் ஆர்வம் இருந்ததா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் வரவேற்கத்தக்க முயற்சி.... இடயில் கருத்து விட்டிருப்பதால், விட்டு, விட்டு வாசிக்க வேண்டி உள்ளது...ஒன்றாக தொகுத்து போடுங்கள்.

Link to comment
Share on other sites

இசை,

இந்தப் பாடலை முன்பு வந்த தரமான ஒலிநாடாவை பாவித்து Nakamichi dragon cassette deck இல் கேட்டிருக்கிறேன். முன்பு கேட்காத சில சத்தங்களுடன் மிகவும் தரமாக இருந்தது. அதில் கேட்ட எல்லா இளையராஜாவின் பாடல்களும் நன்றாக இருந்தன. அவருடைய பாடல்களில் இடையிடையே சில வாத்தியங்களை மெல்லிய சத்தத்துடன் குறைந்த நேரத்திற்குப் பாவிப்பார். அது தரம் குறைந்த cassette deck இல் துல்லியமாக கேட்காது.

Link to comment
Share on other sites

கருத்துக்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள் தமிழ்சிறி, வாத்தியார்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதுதான் தற்செயலாக பார்த்தேன் இசை.

இசையில் ஆர்வமும் தெளிவுமுண்டு

கவனமாக வாசித்துவிட்டு எழுதுகின்றேன்

தொடருங்கள்

Link to comment
Share on other sites

மிகவும் சுவாரசியமானதும் பயனுள்ளதுமான பதிவு. மிக்க நன்றி. தொடருங்கள் இதுபோன்ற பதிவுகளை.

சில பாடல்கள் ஏனென்று தெரியாமல் அதிகம் பிடித்துப்போய்விடுகின்றன. ஞாபகங்கள், சந்தர்ப்பஙகள் போன்றனவும் இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், எமது கடந்த கால அனுபவங்கள், மற்றும் எந்தச் சூழ்நிலையில் முதலில் அந்தப் பாடலில் நாம் லயித்தோம் என்பதில் தான் எமது அப்பாடல் பற்றிய உணர்வுகள் அனைத்தும் அமைகின்றனவா, அல்லது ஒவ்வொரு மனிதனிற்கு அவனது தன்மை சார்ந்து ஒவ்வொரு ராகங்களில் ஈர்ப்பு உண்டாகுமா? 'உனது நண்பரைக் காட்டு உன்னைப் பற்றிக் கூறுகிறேன்' என்ற பழைய வசனம் போல 'பிடித்த ராகத்தைச் சொல்லு உன்னைப் பற்றிக் கூறுகிறேன்' என்ற இருக்க முடியுமா?

உங்களிற்கு நேரமிருப்பின், இரு கேள்விகள்

1) பிரியா படப்பாடல்கள் (குறிப்பாக டாலிங் டாலிங் மற்றும் அக்கரைச்சீமை அழகினிலே) கேட்கும் போது, அது எங்கே எப்போ கேட்கிறேன் என்றில்லாமல் பின்வரும் சூழல் எனக்குள் விரிவதை அவதானித்திருக்கிறேன்: மப்பும் மந்தாரமுமான, கருமேகம் நிறைந்து சாதுவான தூறல் இருக்கின்ற ஒரு பொழுது. ஏதோ ஒரு மலர்--அதுவும் அதிகம் புழக்கத்தில் உள்ள பழகிப்போன மலரில்லாமல்-- சீமைக்கிளுவை (கிளுசரியா) போன்ற மலரின் வாசம் கமழ்வதாவும், மனிதர்கள் எல்லாம் ஏதோ ஒரு கிறங்கிய அல்லது சிருங்கார மனநிலையில் உலவுவது போன்றும் உணர்ந்துள்ளேன். மேற்படி பாடல்களில் இவ்வாறான சூழ்நிலைகளை உருவாக்கும் இசைக்கோர்வைகள் ஏதேனும் இருக்கின்றனவா? அல்லது, வெறுமனே இப்பாடல்கள் எனக்குள் புகுந்த கணத்தின் ஞாபங்கள் தான் இவையா?

கருத்துக்கும், கேள்விக்கும் நன்றிகள் இன்னுமொருவன்..

நீங்கள் விவரித்த காட்சிகள் உங்கள் சிறுவயதில் அப்பாடல் உங்கள் மனதில் ரீங்காரமிடும்போது கண்ட காட்சிகளாக இருக்கலாம்.. இவ்வாறு எனக்கும் தோன்றுவதுண்டு.. அந்தப் பாடல்களை திரும்பவும் கேட்க ஆரம்பிக்கும்போது வேறு காட்சிகள் பதிவாகிவிடுகின்றன..

உதாரணமாக, "ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்னில் வரைந்தாள்" என்கிற ஒரு பாடல்.. கனடாவுக்கு வந்து இந்தப் பாடலை பல வருடங்கள் கழித்துக் கேட்டிருந்தேன்.. அப்போது கொழும்பில் இருப்பதுபோன்ற உணர்வு வரும்.. ஆனால் அதை அடிக்கடி கேட்க ஆரம்பித்ததில் இருந்து காட்சி மாறிவிட்டது.. :D

வேலை கிடைக்காமல் பழைய காரில் அலைந்த நேரத்தில் இப்பாடல் காருக்குள் அடிக்கடி ஒலித்துக்கொண்டிருந்தது.. இப்போது இப்பாடலைக் கேட்கும்போது வேலை இல்லாமல் அலைந்த ஞாபகம் வந்து ஒரு Gloomy ஆக இருக்கும்.. :D

2) அதுபோன்றே மூடுபனியினின் என் இனிய பொன்னிலாப் பாடலையும் நேரம் கிடைப்பின் உங்கள் பாணியில் பிரித்து மேய்ந்தீர்கள் ஆயின் என்னைப் போன்றவர்களிற்கு மகிழ்வளிக்கும்.

உங்கள் நேரத்திற்கு முற்கூட்டியே மனதார்ந்த நன்றிகள்.

நிச்சயம் செய்கிறேன் இன்னுமொருவன்.. தங்கள் சித்தம்.. என் பாக்கியம்.. :D

Link to comment
Share on other sites

நன்றிகள் இசை அண்ணா இப்பிடியான ஒரு தொடரை /விவாதத்தை ஆரம்பித்து வைத்ததற்கு எங்களவர்கள் மத்தியில் இசை சம்பந்தமான ஆக்க பூர்வ விமர்சனம்களோ விவாதங்களோ இது வரை என் கண்ணில் படவே இல்லை ஆனால் தமிழக உறவுகளுக்கிடையில் எப்போது பார்த்தாலும் இளையராசா, ரஹ்மான் பற்றிய காரசாராமான விவாதங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கும் நான் நினைப்பது இவர்களுக்கு வேற வேலையே கிடையாதா எப்போது பார்த்தாலும் இளையராஜா ரஹ்மான் எண்பதுகளிலான பாடல்கள் என்று சண்டை பிடிச்சு கொண்டே இருக்கிறார்கள் என்று அவர்களிடயே விவாதம்கள் மிகபெரியளவில் நடப்பது ஒன்று இளையராஜா ரஹ்மான் பற்றியதாக இருக்கும் மற்றையது கிரிக்கெட் சினிமா இலக்கியம் இதை விட்டால் சாதி பிரச்சினைகள் ஆனால் அதிகமான கருத்தாடல்கள் இளையராஜா பற்றி தான் நடந்து இருக்கும் என நினைக்கிறேன் நீங்கள் தமிழகத்தில் அதிக காலம் தங்கி இருந்தது தான் உங்களின் இசை ஆர்வத்தில் அதிக தாக்கம் செலுத்தி இருக்கும் என நம்புகிறேன் JAFFNA இல் இருக்கும் போதே உங்களுக்கு இசையில் ஆர்வம் இருந்ததா?

நானும் இதை அவதானித்திருக்கிறேன் அபராஜிதன்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சாப்பாடு பிடிக்கும்.. :D அதைப் போலத்தானே இதுவும்..? :D

எனக்கு ஈழத்தில் இருந்த காலத்திலேயே இசை ஆர்வம் ஏற்பட்டுவிட்டது.. வரும் புதிய மாடல்களை ஒலிநாடாவில் பதிவு செய்துவிட்டுப் பிறகு தேய்ப்பதே எமது வேலை.. :D

தென்றல் வந்து என்னைத்தொடும் என்கிற பாடல் வந்து அப்போது பிரபலம்.. பாடல் ஆரம்ப இசையுடன் தொடங்கும்.. அதில் வரும் தாளச் சத்தம் பாடல் தொடங்குவதற்கு முன் சில வினாடிகள் நிறுவிடும் (வயலின் இசை ஒலிக்கும்போது..) அந்தத் தாளத்தை அப்படியே வயலினுக்குள்ளும் தொடர்ந்தால் பிசகில்லாமல் சேர்கிறதே என்று ஆராய்ச்சி பண்ணிய அனுபவமும் உள்ளது.. :lol:

மிகவும் வரவேற்கத்தக்க முயற்சி.... இடயில் கருத்து விட்டிருப்பதால், விட்டு, விட்டு வாசிக்க வேண்டி உள்ளது...ஒன்றாக தொகுத்து போடுங்கள்.

இந்தமுறை கோட்டை விட்டுவிட்டேன்.. :D வரும் திரிகளில் அவ்வாறே செய்கிறேன் வன்னி.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள்..! :)

Link to comment
Share on other sites

இசை,

இந்தப் பாடலை முன்பு வந்த தரமான ஒலிநாடாவை பாவித்து Nakamichi dragon cassette deck இல் கேட்டிருக்கிறேன். முன்பு கேட்காத சில சத்தங்களுடன் மிகவும் தரமாக இருந்தது. அதில் கேட்ட எல்லா இளையராஜாவின் பாடல்களும் நன்றாக இருந்தன. அவருடைய பாடல்களில் இடையிடையே சில வாத்தியங்களை மெல்லிய சத்தத்துடன் குறைந்த நேரத்திற்குப் பாவிப்பார். அது தரம் குறைந்த cassette deck இல் துல்லியமாக கேட்காது.

நாக்கமுக்கா தெரியும்.. :unsure: அதென்ன நாக்கமிச்சி? :lol:

முன்பு ஒலிப்பதிவின் தரம் சரியாக இல்லாததால் பல பாடல்கள் வீணாகவே போய்விட்டன.. அவற்றை மீள உருவாக்கினாலும் பழையதுபோல் வராது.. வயலின், புல்லாங்குழல் இசையில் இருவர் ஒரே சுரத்தை வாசித்தாலும் தனிநபர் பக்குவம் தெரியும்.. கீபோர்ட் போன்றவற்றி C என்கிற கட்டையை யார் வாசித்தாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.. :D

தற்போதுதான் தற்செயலாக பார்த்தேன் இசை.

இசையில் ஆர்வமும் தெளிவுமுண்டு

கவனமாக வாசித்துவிட்டு எழுதுகின்றேன்

தொடருங்கள்

ஆறுதலாகப் பதிவிடுங்கள் விசுகு அண்ணா..

Link to comment
Share on other sites

நாக்கமுக்கா தெரியும்.. :unsure: அதென்ன நாக்கமிச்சி? :lol:

'நாகம்மா ஆச்சியில்' :D பாடலைக் கேட்டு விட்டு, நானும் ஒன்று வாங்க முயன்றேன். பழையதே சரியான விலை. :(

இது உலகத் தரம் வாய்ந்த கருவி.

http://www.ebay.com/itm/NAKAMICHI-DRAGON-AUTO-REVERSE-CASSETTE-DECK-/300660464039?pt=LH_DefaultDomain_0&hash=item4600c299a7

Link to comment
Share on other sites

யாரோடும் ஒத்து ஊதுவதோடு சரி.

பாகவதர் காலம் தொட்டு விஜயபிரகாஸ் வரை பல சினிமா பாட்டுக்கள் என்ன படம், யார் பாடியது,ஓரளவு வரிகள் கூட மனப்பாடம். ஆனால் இசை பற்றி ,

சூப்பர் சிங்கர் பார்க்க தொடங்கியபின் தான் சங்கதி போன்ற சொற்களே கேள்விப்பட்டது .அவ்வளவு ஞானம் .

தொடர்ந்து எழுதுங்கள் நாங்களும் கொஞ்சம் அறிந்துகொள்ளுவம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.