Jump to content

25 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் டெசோ- என்ன சாதிக்கப் போகிறார் கருணாநிதி?


Recommended Posts

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஈழத் தமிழர் ஆதவாளர்கள் அமைப்பு எனும் டெசோவை உயிர்ப்பித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

அவர் தலைமையில், இன்று நடந்த அந்த அமைப்பின் முதல் கூட்டத்தில் தனி தமிழ் ஈழம் அமைக்க ஐ.நா. சபை பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதாவது முந்தா நாள் அறிவித்து, இன்று தொடங்கிவிட்டார் கருணாநிதி இந்த அமைப்பை. ஆனால் டெசோவுக்கு முன்பு கிடைத்த ஏகோபித்த ஆதரவு இந்த முறை அவருக்குக் கிடைக்கவில்லை. மாறாக கடும் விமர்சனங்களே எழுந்துள்ளன.

டெசோ மூலம் என்ன சாதிக்க முடியும் கருணாநிதியால்?

டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு கடந்த 1985ம் ஆண்டு மே 13ம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டது. கருணாநிதியைத் தலைவராகவும், கி.வீரமணி, பழ. நெடுமாறன் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டு அப்போது அது அமைந்தது. இந்த அமைப்பின் முக்கிய கோரிக்கையாக வடக்கு கிழக்கு இலங்கைப் பகுதிகளை இணைத்து தமிழ் ஈழ நாடு அமைக்க வேண்டும் என்பதே.

டெசோ அமைப்பின் சார்பில் மதுரையில் பிரமாண்ட மாநாட்டையும் கருணாநிதி நடத்தினார்.அதில் வாஜ்பாய் உள்ளிட்ட அகில இந்தியத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

அன்றைக்கு ஆளும் கட்சியாக இருந்த எம்ஜிஆரின் அதிமுக கூட இதைக் கண்டு கொள்ளவில்லை. கருணாநிதிக்கு ஏகாபித்த ஆதரவு இருந்தது.

இந்த டெசோவின் முழுமையான நோக்கமே தனி ஈழம்தான் என்று பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் தனி ஈழம் வந்தால் அது பிரபாகரன் தலைமையில்தான் என்ற ஒரு நிலை அன்றே உருவாகிவிட்டது. அதைத்தான் எம்ஜிஆர் நேரடியாகக் கூறிவந்தார்.

ஆனால் பிரபாகரனோ கருணாநிதியின் ஈழ ஆதரவு கோஷங்களின் பின்னணியில் உள்ள வெற்று அரசியல் புரிந்ததால், டெசோ விவகாரங்களில் பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை. டெசோ மாநாட்டுக்குக் கூட அவர் திலகர் என்பவரைத்தான் அனுப்பினார்.

இந்தப் பின்னணியில்தான் டெசோவை கலைத்துவிட்டதாக பின்னர் கருணாநிதி அறிவித்தார். தனி ஈழம் வேண்டும் என ஆரம்பிக்கப்பட்ட டெசோ, அந்த நோக்கம் நிறைவேறும் முன்பே கலைக்கப்பட்டது. இப்போது மீண்டும் டெசோ தொடங்கப்பட்டுள்ளதாக அறிவித்து முதல் கூட்டத்தையும் கருணாநிதி நடத்தியுள்ளார். இதன் மூலம் அவர் என்ன சாதிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்றைக்கு முழுக்க முழுக்க அவருக்கு எதிரான சூழலே ஈழ அரசியல் களத்தில் நிலவுகிறது. கருணாநிதியின் வார்த்தைகள் நம்பகத்தன்மை அற்றவையாகப் பார்க்கப்படுகின்றன. காரணம், சர்வ பலமிக்க முதல்வராக அவர் பதவியில் இருந்த போது தனிஈழம் வேண்டும் என்பதை அவர் சொல்லத் தவறினார். பிரணாப் முகர்ஜிக்கு இணையாக இலங்கையின இறையாண்மை பற்றி கவலைப்பட்டார்.

விமானங்களிலிருந்து குண்டுமழை பொழிவது நிறுத்தப்பட்டாலும், பீரங்கிக் குண்டு வீச்சும், துப்பாக்கிச் சூடுகளும் தொடர்வதாக அவரது புகழ்பெற்ற 3 மணி நேர உண்ணாவிரதத்தின் போது தகவல் சொல்லப்பட, ‘மழைவிட்டும் தூவானம் விடவில்லை’ என கொடூரமான உவமையைச் சொன்னதை யாரும் இன்னும் மறக்கவில்லை.

இன்றைய கூட்டத்துக்குப் பின் கருணாநிதி பேசுகையில், “சிங்களர்களை ஒருபோதும் நாம் நம்ப முடியாது. நம்ப வைத்துக் கழுத்தறுப்பவர்கள் அவர்கள். அவர்களின் உறுதிமொழியை நம்பித்தான் நான் கூட சென்னையில் உண்ணாவிரதம் இருந்ததை வாபஸ் பெற்றேன். ஆனால் அவர்கள் பொய்யான உறுதியமொழியை அளித்து விட்டு ஒட்டுமொத்தத் தமிழர்களையும் கொன்று குவித்தனர்.

இனியும் தமிழ் மக்களால் சிங்களர்களுடன் இணைந்து வாழ முடியாது. தமிழர்களுக்கென் தனி் நாடு, தமிழ் ஈழ நாடு அங்கே அமைந்தால் மட்டுமே தமிழ் இனம் அங்கு பிழைக்கும். எனவே இதை ஐ.நா. பொது வாக்கெடுப்பு மூலம் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இந்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,” என்றார்.

கருணாநிதியிடம் உள்ள பிரச்சினையும் இதுதானே. 2008-லிருந்து 2009 தொடக்கம் வரை ஈழப் போராட்டம் என்ற பெயரில் அனைவரையும் பலமாக உசுப்பேற்றி நம்ப வைத்துக் கழுத்தறுத்தார் என்பதுதானே இவர் மீதுள்ள குற்றச்சாட்டும். இவரை ராஜபக்சேவை நம்பச் சொன்னது யார்? அதையெல்லாம் தாண்டி உறுதியோடு நின்று மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்காமல் போனாதுதானே கருணாநிதி மீது தீராத பழியாக நிற்கிறது!

சொந்த அரசியல் காரணங்கள், தன் பிடியைவிட்டு நழுவும் தமிழகத்தை இழுத்து நிறுத்துததல் போன்ற காரணங்களுக்காகவே அவர் இத்தனை நாட்களும் இல்லாமல் இப்போது தனி ஈழக் கோரிக்கையை கையில் எடுத்திருக்கிறார் என்ற விமர்சனங்களை அவரே கூட புறக்கணிக்க முடியாது.

ஈழத்தில் போர் உக்கிரமடைந்து லட்சக்கணக்கில் அப்பாவி மக்கள் உயிரிழந்து கொண்டிருந்த நேரத்தில் ஒரே ஒரு வார்த்தை தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக கருணாநிதி பேசியிருந்தால் கூட, தமிழ் வரலாறு அவரைக் கொண்டாடி இருக்கும். போர் என்றால் அப்பாவி மக்கள் சாவது சகஜம் என ஜெயலலிதா ஒரு பக்கம் வேல் பாய்ச்ச, இன்னொரு பக்கம், முத்துக்குமாரின் உயிர்த்தியாகத்தைக் கொச்சைப் படுத்தியும், அதன் தொடர்ச்சியாக எழுந்த மாநிலம் தழுவிய அசாதாரண மாணவ எழுச்சியை பிரிட்டிஷாரை விட மிக மோசமாக கருணாநிதி அரசு கையாண்டதும்… இதோ நேற்றுதான் கண்முன் நடந்ததைப் போலுள்ளது.

இப்போது அவர் கையில் எடுத்துள்ள தனி ஈழ கோரிக்கை எத்தனை நாளைக்கு நிலைத்திருக்கும்? காங்கிரஸை விட்டு உண்மையிலேயே பிரிந்து வந்து, தனி ஈழத்துக்காக கடைசி மூச்சு வரைப்போராடப் போகிறாரா கருணாநிதி?

இந்தக் கேள்விக்கு உறுதியான விடையை அவர் தந்தாலும் அதை ஏற்கவிடாமல் தடுக்கிறது அவரது கடந்த கால அரசியல்.

தனித்த அரசியல் லாபங்களைப் புறக்கணித்து, இந்த இறுதிக் கட்ட ‘போரை’ அவர் இதயசுத்தியோடு முன்னெடுத்தால், டெசோ மீது நம்பிக்கைப் பிறக்கும். மாறாக 2014 மக்களவைத் தேர்தலுக்காகவும், மகன்களின் அரசியல் போரை திசை திருப்பவும்தான் இந்த டெசோ என்றால், கருணாநிதி தன் ஜெ எதிர்ப்பு அறிக்கைப் போரை மட்டும் தொடரலாம்

http://www.envazhi.com/teso-is-it-a-true-fight-or-another-drama-of-karunanithi/

Link to comment
Share on other sites

கொலைஞர் கருணாநிதியின் இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது!

தமிழினக் கொலைக்கு உறுதுணையாக நின்ற ஹிந்தியப் பயங்கரவாதி பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதி தேர்வுக்கு ஆதரிப்பதிலிருந்து கொலைஞர் கருணாநிதியின் சுயரூபம் மீண்டும் அம்பலமாகி விட்டது!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.