Jump to content

??????????? ......................


Recommended Posts

பொய்மையும் கயமையும்

கூடிக் கொக்கரிக்க ,

ஒட்டிய வயிறும்

பஞ்சடைத்த கண்களும்,

உங்களை நோக்கியே .............

நீங்கள் சொல்கின்ற

ஒரு இசங்களும் என்செவியில்

எட்டவேயில்லை .

நீங்கள் உல்லாசமாய்

உங்கிருக்க ,

குடும்பமாய் உறுமினோம் .

ஊழிக்காற்றில் உக்கியே போனோம் .

எச்சங்களாய் நாங்கள்

அங்கொன்றும் இங்கொன்றுமாக ,

இருப்பதற்கு வக்கற்றவர்களாக

இரைப்பையை நிரப்ப

கருப்பையை விற்கவே துணிந்தோம் .

முன்பு நான் உறுமிய புலி .

இன்று நான் சருகு புலி .

உங்கள் உல்லாசத்தில்

ஒருதுளி சருகுபுலிகளுக்கு வந்தால் ,

நாங்கள் கருப்பையையும் விக்கமாட்டோம் ......

எங்களை நாங்கள் எரிக்கவும் மாட்டோம் ...........

Link to comment
Share on other sites

பொய்மையும் கயமையும்

கூடிக் கொக்கரிக்க ,

ஒட்டிய வயிறும்

பஞ்சடைத்த கண்களும்,

உங்களை நோக்கியே .............

நீங்கள் சொல்கின்ற

ஒரு இசங்களும் என்செவியில்

எட்டவேயில்லை .

நீங்கள் உல்லாசமாய்

உங்கிருக்க ,

குடும்பமாய் உறுமினோம் .

ஊழிக்காற்றில் உக்கியே போனோம் .

எச்சங்களாய் நாங்கள்

அங்கொன்றும் இங்கொன்றுமாக ,

இருப்பதற்கு வக்கற்றவர்களாக

இரைப்பையை நிரப்ப

கருப்பையை விற்கவே துணிந்தோம் .

உங்கள் உல்லாசத்தில்

ஒருதுளி வந்தால் ,

நாங்கள் கருப்பையையும் விக்கமாட்டோம் ......

எங்களை நாங்கள் எரிக்கவும் மாட்டோம் ...........

நியங்களை சொல்லும் வரிகள்...

எங்கோ ஒரு மூலையில் ஓடி ஒளிந்துகிடக்கும் மனச்சாட்சியை..

வெளியால் இழுத்து வருகின்றது!

நன்றி கோ! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் உல்லாசமாய்

உங்கிருக்க ,

குடும்பமாய் உறுமினோம் உங்கள் உல்லாசத்தில்

ஒருதுளி சருகுபுலிகளுக்கு வந்தால் ,

நாங்கள் கருப்பையையும் விக்கமாட்டோம் ......

எங்களை நாங்கள் எரிக்கவும் மாட்டோம் ...........

புலம்பெய்ர்ந்தவர்கள் எல்லோரும் உல்லாசவாழ்க்கைவாழ்கின்றனர் என்ற பொதுவான கருத்தை முதலில் மாற்ற வேண்டும்.மற்றும்படி உங்கள் எழுத்துக்கள் உண்மையானவை

Link to comment
Share on other sites

புலம்பெய்ர்ந்தவர்கள் எல்லோரும் உல்லாசவாழ்க்கைவாழ்கின்றனர் என்ற பொதுவான கருத்தை முதலில் மாற்ற வேண்டும்.மற்றும்படி உங்கள் எழுத்துக்கள் உண்மையானவை

உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் வாத்தியார் . உல்லாச வாழ்வு நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது , நான் சொன்ன மக்களுடன் ஒப்பிடும் பொழுது . புலத்துக் கோயில் திருவிழாக்களும் , கல்யாண , பிறந்தநாள் வைபவங்களும் , ஹெலியிலும் , லூனோ கார் , பல்லக்கில் பெடிச்சியை இறக்கிய சமத்தியச் சடங்குகளையும் எந்தவகையில் சேர்ப்பது ??????????? மனச்சாட்சி இருந்தால் சொல்லுங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் வாத்தியார் . உல்லாச வாழ்வு நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது , நான் சொன்ன மக்களுடன் ஒப்பிடும் பொழுது . புலத்துக் கோயில் திருவிழாக்களும்  ,  கல்யாண , பிறந்தநாள் வைபவங்களும் ,  ஹெலியிலும் , லூனோ கார் , பல்லக்கில் பெடிச்சியை இறக்கிய சமத்தியச் சடங்குகளையும் எந்தவகையில் சேர்ப்பது ??????????? மனச்சாட்சி இருந்தால் சொல்லுங்கள் .

சரி புலம்பெயர்ந்தவர்களில் ஒரு சிலர் நீங்கள் கூறுவதுபோல் செய்தாலும்அப்படியான நிகழ்வுகள் ஈழத்தில் நடைபெறுவதில்லையா?அல்லது முள்ளிவாய்க்காலின் பின்னர் நடைபெறவில்லையா?நல்லூர்க்கந்தன் ஆலயத்திலும் தான் விமானத்தில் பூமழை பொழிந்தார்கள்.அதை என்னவென்று சொல்வது.ஈழத்திலே எத்தனை கோவில்களில் உல்லாசமாகத் திருவிழாக்கள்நடைபெறவில்லை?யாழில் நடக்கும் உல்லாசக் கூத்துக்களைவிடப் புலம்பெயர்ந்தவர்கள்செய்வது குறைவானதாகவே எனக்குப் படுகின்றதுஎல்லாவற்றுக்கும் புலம்பெயர்ந்தவர்களைக் குறைகூறுவதைஒருபோதும் நான் ஏற்றுகொள்ளப்போவதில்லை.

Link to comment
Share on other sites

சரி புலம்பெயர்ந்தவர்களில் ஒரு சிலர் நீங்கள் கூறுவதுபோல் செய்தாலும்அப்படியான நிகழ்வுகள் ஈழத்தில் நடைபெறுவதில்லையா?அல்லது முள்ளிவாய்க்காலின் பின்னர் நடைபெறவில்லையா?நல்லூர்க்கந்தன் ஆலயத்திலும் தான் விமானத்தில் பூமழை பொழிந்தார்கள்.அதை என்னவென்று சொல்வது.ஈழத்திலே எத்தனை கோவில்களில் உல்லாசமாகத் திருவிழாக்கள்நடைபெறவில்லை?யாழில் நடக்கும் உல்லாசக் கூத்துக்களைவிடப் புலம்பெயர்ந்தவர்கள்செய்வது குறைவானதாகவே எனக்குப் படுகின்றதுஎல்லாவற்றுக்கும் புலம்பெயர்ந்தவர்களைக் குறைகூறுவதைஒருபோதும் நான் ஏற்றுகொள்ளப்போவதில்லை.

வாத்தியாரின் கருத்தை நான் வழிமொழிகிறேன்..!

Link to comment
Share on other sites

வாத்தியாரின் கருத்தை நான் வழிமொழிகிறேன்..!

உங்களுக்கு என்று சொந்தக் கருத்து எதுவும் இல்லையா இசைக்கலைஞன் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு யாருக்குமே மனச் சாட்சி இல்லை....தவறுகளுக்கு நொண்டி நியாயம் கற்பிப்பதிலையே காலம் கழிகிறது... :(

Link to comment
Share on other sites

கவிதைக்கு நன்றி ,

மனச்சாட்சி இல்லாவிட்டாலும் மன்னிக்கலாம் ,அவர்களை எங்களின் பொய்மைகளால் நிர்க்கதி ஆக்கியதை மன்னிக்கமுடியாது.

இந்த நாடகம் மேடை ஏறி பலவருடங்கள் அதை விளங்காமல் இருந்தவர்களில் தான் பிழை சொல்வேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி புலம்பெயர்ந்தவர்களில் ஒரு சிலர் நீங்கள் கூறுவதுபோல் செய்தாலும்அப்படியான நிகழ்வுகள் ஈழத்தில் நடைபெறுவதில்லையா?அல்லது முள்ளிவாய்க்காலின் பின்னர் நடைபெறவில்லையா?நல்லூர்க்கந்தன் ஆலயத்திலும் தான் விமானத்தில் பூமழை பொழிந்தார்கள்.அதை என்னவென்று சொல்வது.ஈழத்திலே எத்தனை கோவில்களில் உல்லாசமாகத் திருவிழாக்கள்நடைபெறவில்லை?யாழில் நடக்கும் உல்லாசக் கூத்துக்களைவிடப் புலம்பெயர்ந்தவர்கள்செய்வது குறைவானதாகவே எனக்குப் படுகின்றது

எல்லாவற்றுக்கும் புலம்பெயர்ந்தவர்களைக் குறைகூறுவதைஒருபோதும் நான் ஏற்றுகொள்ளப்போவதில்லை.

வாத்தியாரின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்..!

Link to comment
Share on other sites

உங்களுக்கு என்று சொந்தக் கருத்து எதுவும் இல்லையா இசைக்கலைஞன் ?

இல்லை.. இந்தத் திரியில்.. :D

Link to comment
Share on other sites

வாத்தியாரின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்..!

Jalra.GIF

Link to comment
Share on other sites

சரி புலம்பெயர்ந்தவர்களில் ஒரு சிலர் நீங்கள் கூறுவதுபோல் செய்தாலும்அப்படியான நிகழ்வுகள் ஈழத்தில் நடைபெறுவதில்லையா?அல்லது முள்ளிவாய்க்காலின் பின்னர் நடைபெறவில்லையா?நல்லூர்க்கந்தன் ஆலயத்திலும் தான் விமானத்தில் பூமழை பொழிந்தார்கள்.அதை என்னவென்று சொல்வது.ஈழத்திலே எத்தனை கோவில்களில் உல்லாசமாகத் திருவிழாக்கள்நடைபெறவில்லை?யாழில் நடக்கும் உல்லாசக் கூத்துக்களைவிடப் புலம்பெயர்ந்தவர்கள்செய்வது குறைவானதாகவே எனக்குப் படுகின்றதுஎல்லாவற்றுக்கும் புலம்பெயர்ந்தவர்களைக் குறைகூறுவதைஒருபோதும் நான் ஏற்றுகொள்ளப்போவதில்லை.

கருத்தைக் கருத்தால் மோதிய உங்கள் நேர்மைக்குத் தலைவணங்குகின்றேன் வாத்தியார் . மேலதிக கருத்துக்கள் கூற விரும்பவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தைக் கருத்தால் மோதிய உங்கள் நேர்மைக்குத் தலைவணங்குகின்றேன்

வாத்தியார் . மேலதிக கருத்துக்கள் கூற விரும்பவில்லை .

இது உண்மையென்றால் எங்களது பதிலும் அதை ஆதரித்துத்தானே. அப்படியாயின் அதற்கும் இதுவே பதிலாக வந்திருக்கணும் கோ.

புலத்தில் இருந்து கொண்டு புலம் பெயர்ந்தோர் எல்லோரும் தவறானவர்கள் என்று சொல்வதும் புலம் பெயர்ந்தோர் எல்லோரும் தாயகத்தை மறந்தவர்கள் என்பதும் உண்மைக்கு மாறானது.

மற்றும்படி

நீங்கள் எழுதிய ஆடம்பரச்செலவுககள் ஊரிலும் அதிலும் புலம்பெயர்ந்தவர் வியர்வையில் நடக்கின்றன. மற்றும்படி இப்படியான ஆடம்பரச்செலவுகளுக்கு நானும் எதிரானவன். அதேநேரம் அவர்களது பொருளாதார வளர்ச்சி கண்டு மகிழ்பவன். அத்துடன் அவர்கள் தாயகத்துக்கு செய்யாமலில்லை.

Link to comment
Share on other sites

இது உண்மையென்றால் எங்களது பதிலும் அதை ஆதரித்துத்தானே. அப்படியாயின் அதற்கும் இதுவே பதிலாக வந்திருக்கணும் கோ.

புலத்தில் இருந்து கொண்டு புலம் பெயர்ந்தோர் எல்லோரும் தவறானவர்கள் என்று சொல்வதும் புலம் பெயர்ந்தோர் எல்லோரும் தாயகத்தை மறந்தவர்கள் என்பதும் உண்மைக்கு மாறானது.

மற்றும்படி

நீங்கள் எழுதிய ஆடம்பரச்செலவுககள் ஊரிலும் அதிலும் புலம்பெயர்ந்தவர் வியர்வையில் நடக்கின்றன. மற்றும்படி இப்படியான ஆடம்பரச்செலவுகளுக்கு நானும் எதிரானவன். அதேநேரம் அவர்களது பொருளாதார வளர்ச்சி கண்டு மகிழ்பவன். அத்துடன் அவர்கள் தாயகத்துக்கு செய்யாமலில்லை.

வாத்தியார் தனது கருத்தை துணிவாக நேர்மையாகக் கருத்துகளத்தில் பதிந்தார் . ஆனால் , நீங்கள்???????? ஏன் ??

Link to comment
Share on other sites

முன்பு நான் உறுமிய புலி .

இன்று நான் சருகு புலி .

உங்கள் உல்லாசத்தில்

ஒருதுளி சருகுபுலிகளுக்கு வந்தால் ,

நாங்கள் கருப்பையையும் விக்கமாட்டோம் ......

எங்களை நாங்கள் எரிக்கவும் மாட்டோம் ...........

அண்மையில் தனது உயிரை மாய்த்துக்க்கொண்ட முன்னால் வி.புலி உறுப்பினரின் தற்கொலை போன்ற ஒன்றை மேலும் நடக்காமல் எம்மால் செய்ய முடியும்.மனம் வைக்க வேண்டும்.கோமகன் யதார்த்த பூர்வமான கவிதைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கருத்துக்களத்தில் வழமைதானே

ஒருவருடைய கருத்துக்கு விருப்பு வாக்கு போடுவதும் எம் கருத்தும் அதுவே என ஆதரித்து நேரத்தை மீதம் செய்வதும்.

இதில் எப்படி வந்தது சொந்தக்கருத்து இல்லையா என்பது?

சொந்தச்சரக்கு இல்லையா என்பதை அடிக்கடி பாவிக்கின்றீர்கள்....???:( :( :(

Link to comment
Share on other sites

இது கருத்துக்களத்தில் வழமைதானே

ஒருவருடைய கருத்துக்கு விருப்பு வாக்கு போடுவதும் எம் கருத்தும் அதுவே என ஆதரித்து நேரத்தை மீதம் செய்வதும்.

இதில் எப்படி வந்தது சொந்தக்கருத்து இல்லையா என்பது?

சொந்தச்சரக்கு இல்லையா என்பதை அடிக்கடி பாவிக்கின்றீர்கள்....???:( :( :(

pavina-bodum-espresso-8-cl.jpg

எங்கள் நட்பில் கைவைக்கமாட்டீர்கள் என நம்புகின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது அது அங்க அங்க இருக்கணும்

அதுதான் அழகு.

பெருமை.

நன்றி.

Link to comment
Share on other sites

சத்தியமாச் சொல்லுறன் அண்ணைமார் அக்காமார்.... என்ர மனச்சாட்சிக்கு தெரிந்து புலம்பெயர்ந்து வந்த நான் அங்க செத்து மடிஞ்ச சனத்துக்கோ அல்லது அதுக்கிள்ள கிடந்து தப்பிப் பிளைச்ச மிச்சச் சனங்களுக்கோ 'பெருசா ஒண்டும்' செய்து கிழிக்கேல. அதுக்காக வெட்கப்படுறன். சில வேளைகளில் என்னை நினைத்தால் எனக்கே கேவலமாய் இருக்கும். :(

உங்கட உங்கட மனச்சாட்சி என்ன சொல்லுது எண்டு அதிட்டதான் கேக்கோணும். :rolleyes:

Link to comment
Share on other sites

உங்கள் ஏக்கம் நியாயமானது. இன்று ஏக்கங்கள் மட்டுமே எமது வாழ்வாகிப் போய்விட்டது.. கவிதைக்கு நன்றிகள் கோமகன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு என்று சொந்தக் கருத்து எதுவும் இல்லையா இசைக்கலைஞன் ?

ஒருவருடைய கருத்துப் பலருடைய கருத்துக்களுடன் ஒருமித்துச் செல்வதும்

பலருடைய கருத்துக்களை ஒருவர் ஏற்றுக் கொள்வதும் கருத்துக்களத்தில்

புதிதல்லவே கோமகன்.

இப்படி எல்லோரும் கேள்வி கேட்க ஆரம்பித்தால் ஒவ்வொரு திரியும்

கிடப்பில் போய்விடும்

Link to comment
Share on other sites

ஒருவருடைய கருத்துப் பலருடைய கருத்துக்களுடன் ஒருமித்துச் செல்வதும்

பலருடைய கருத்துக்களை ஒருவர் ஏற்றுக் கொள்வதும் கருத்துக்களத்தில்

புதிதல்லவே கோமகன்.

இப்படி எல்லோரும் கேள்வி கேட்க ஆரம்பித்தால் ஒவ்வொரு திரியும்

கிடப்பில் போய்விடும்

மிக்க நன்றிகள் வாத்தியார் உங்கள் கருத்துக்களுக்கு .

Link to comment
Share on other sites

உங்கள் ஏக்கம் நியாயமானது. இன்று ஏக்கங்கள் மட்டுமே எமது வாழ்வாகிப் போய்விட்டது.. கவிதைக்கு நன்றிகள் கோமகன்.

மிக்க நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு கல்கி .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.