Jump to content

நாசா தொழில்நுட்பத்தில் இமெயில் அனுப்ப!


Recommended Posts

இமெயில் வாசகங்களை தப்பித்தவறி கூட வேறு யாரும் பார்த்து விடகூடாது என நினைப்பவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று தெரியவில்லை.ஆனால் இப்படி நினைப்பவர்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் இமெயில்களை அனுப்ப உதவும் ரகசியமான இமெயில் சேவைகள் நிறையவே இருக்கின்றன.

சென்ட் இன்க் தளமும் இதே ரகத்தை சேர்ந்தது தான்.இமெயில்களின் உள்ளடக்கத்தை அதாவது அதில் உள்ள வாசகல் அல்லது விவரங்களை அதற்குறியவர் மட்டும் அல்லால் ஒருவரும் பார்க்க முடியாத வகையில் அதனை மூடி அதாவது என்கிரிப்ட் செய்து அனுப்பி வைக்க வழி செய்கிறது இந்த தளம்.

ஏற்கனவே உள்ள பிரைவ்நோட் போன்ற ரகசிய இமெயில் சேவை போலவே தான் இந்த தளமும் செயல்ப‌டுகிறது என்றாலும் இந்த சேவையில் உள்ள முக்கிய வேறுபாடு அனுப்புகிறவர் மற்றும் பெறுபவர் இருவருக்குமே இதில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே இதனை பயன்படுத்த முடியும்.

ஆனால் ஒன்று இந்த சேவையை பயன்படுத்துவது கொஞ்சம் பெருமைக்குறியது.காரணம் ரகசிய செய்திகளை அனுப்ப அமெரிக்க விண்வெளி ஆய்வு கழகமான நாசா பின்பற்றும் அதே தொழிநுட்பத்தை தானும் பயன்படுத்துவதாக இந்த தளம் தெரிவிக்கிறது.

எனவே நாசா தொழில்நுட்பத்தில் மெயில் அனுப்புவதாக நீங்களும் பெருமிதம் கொள்ளலாம்.

அதே போல மற்ற ரகசிய மெயில் சேவைகளில் இல்லாத கூடுதல் அம்சங்கள் இதில் உள்ளன.உதாரணத்திற்கு ரகசிய மெயிலை நீங்கள் உங்களுக்கே நகல் அனுப்பி கொள்ளலாம்.அந்த் மெயில் படிக்கப்பட்டவுடன் அது வாசிக்கப்பட்டு விட்டது என்ற விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.குறிப்பிட்ட அந்த மெயில் எப்போது காணாமல் போக வேண்டும் என்றும் குறிப்பிடலாம்.அந்த நேரத்தில் இமெயில் வாசகங்கள் அழிக்கப்பட்டு விடும்.

மேலும் வழக்கமான மெயிலை போல இணைப்புகளையும் சேர்த்து அனுப்பலாம்.

இதே போலவே கீ வால்ட் தளமும் ரகசிய மெயில் அனுப்ப உதவுகிறது.சென்ட் இன்க் தளம் நாசா தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது என்றால் இது கிர்டிட் கார்டு நிறுவனங்கள் தங்கள் தகவல்களை பாதுகாப்பாக கையாள பயன்படுத்தும் முறையை பயன்படுத்துவதாக சொல்கிறது.

ஆனால் இதன் வடிவமைப்பு அளிமையாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது.தவிர வழக்கமான இமெயிலை நம்பாமல் ஏன் இப்படி பாதுகாப்பாக இமெயிலை அனுப்பி வைக்க வேண்டும் என்னும் கேள்விக்கும் விரிவாக பதில் அளிக்கிறது.

இன்னும் நிறைய ரகசிய இமெயில் தளங்கள் இருக்கின்றன.

இணையதள முகவரி;1.https://www.sendinc.com/

2.https://keyvault.net/

———-

ரகசியமான செய்திகளை அனுப்ப ஒரு இணையதளம்.;http://cybersimman.wordpress.com/2012/02/02/email-14/

——-

இமெயிலுக்கு நிரந்ததர முகமுடி.;http://cybersimman.wordpress.com/2011/08/27/email-12/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?  
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.