Jump to content

எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

10-fenugreek-seeds.jpg

கோடைகாலம் ஆரம்பித்த நிலையில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. அப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால். இதற்கு இன்னொரு குணமும் இருக்கிறது. அது எப்படியென்றால் வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும் என்பதாகும். இதனை சாப்பிடுவதால் ஜிம் செல்லாமல், உடலை வருத்தி உடற்பயிற்சியை செய்யாமல் எளிதாக எடையை குறைக்கலாம்.

வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலொரி குறைவாகவும் உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்த கொதிப்பு மற்றும் உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

மேலும் வெந்தயத்தில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால், எடை அதிகரிக்க வழி இல்லை மற்றும் உடலில் கலொரி குறைவாக இருந்தாலும் எடை அதிகரிக்காது.

எப்படியெல்லாம் சாப்பிடலாம்

இரவில் ஒரு ஸ்பூன் வெந்தய விதையை நீரில் ஊற வைத்து, காலையில் சுடு தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுப்பொருளை வெளியேற்றுவதோடு, உடல் எடையையும் குறைக்கும்.

வெந்தய விதையை சாதாரண தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைப்பதோடு, ஜீரண சக்தியும் கூடும்.

வெந்தய விதையை பொன்னிறமாக வறுத்து அதை பொடியாக்கி, காற்று புகாத ஒரு டப்பாவில் வைத்து, உண்ணும் உணவில் கலந்து சாப்பிடலாம்.

வெறும் வயிற்றில் டீ யுடன் வெந்தயப் பொடியைக் கலந்து சாப்பிடலாம். இதனால் அடிக்கடி பசி ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும்.

எனவே வெந்தயத்தை சாப்பிடுங்க!! எடையை குறையுங்க!!

http://tamil.boldsky.com/health/diet-fitness/2012/have-fenugreek-seeds-weight-loss-001130.html

Link to comment
Share on other sites

நிச்சயமாக பலருக்கு பயன்படும். இபோது தான் பலர் கிணற்று தவளை நிலையில் இருந்து மெல்ல மெல்ல வெளியே பொது விடயங்களில் கவனம் செலுத்துவது தெரிகின்றது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

எச்சரிக்கை.... வெந்தயம் ஆண்மை குறைபாட்டையும் ஏற்படுத்தவல்லது. ஒவ்வொரு நாளும் காலையில் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து காலையில் குடித்து வந்தால் ஆறு மாசத்தில் பற்றற்ற சாமியாராகி விடலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எச்சரிக்கை.... வெந்தயம் ஆண்மை குறைபாட்டையும் ஏற்படுத்தவல்லது. ஒவ்வொரு நாளும் காலையில் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து காலையில் குடித்து வந்தால் ஆறு மாசத்தில் பற்றற்ற சாமியாராகி விடலாம்

நாம் அன்றாடம் சமையலில் பாவி க்கும் ஒரு திரவியம் வெந்தயம். வாச னைக்காகவும், சுவைக்காகவும் இதை பொதுவாகப் பயன்படுத்துவ துண்டு. இது நிறைய மருத்துவ குண ங்களை தன்னகத்தே கொண்ட ஒருவகை மூலி கை.

தெற்காசிய நாட்டவர்களே இதை அதி கம் பயன்படுத்துகின் றனர். ஆனால் விஞ்ஞானிகள் இதைப் பற்றிய இன்னொரு முக்கியத் தகவலை கண்டுபிடித்து வெளியிட்டுள்ளனர். இது பாலி யல் உந்து சக்தியை அளிக்கக் கூடியது என்பதுதான் அந்தப் புதிய கண்டுபிடிப்பு.

ஆண்கள் இதை அதிகம் எடுத்துக் கொள்வதால் தமது இய ல்பான பா லியல் சக்தியை குறைந்த பட்சம் இன்னும் கால்வாசியால் அதிக ரித்துக் கொள்ள முடியும். 25 வயது க்கும் 52 வயதுக்கும் இடைப்பட்ட அறுபது ஆரோக்கியமான நபர்கள் மத்தியில் இது சம்பந்தமான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இவர்களுக்கு ஆறு வார ங்களுக்கு தொடர்ந்து தினசரி இரு தடவை வெந்தயம் வழங்கப்ப ட்டது. மூன்று வாரங்களு க்குப் பின்னர் ஆறு வா ரம் வரையான காலப் பகுதியில் இவர்களின் பாலியல் உணர்வுகள் பரி சோதிக்கப்பட்டன.

அப்போது இவர்களில் 28 வீதமானவர்களிடையே 16.1வீதம் முதல் 20.6 வீதம்வரை வீரிய உணர்வு மேலோங்கி இருந்தது அவதானிக்கப்பட்டது.இதே காலப் பகுதியில் இன்னொரு பிரிவினருக்கு பாலியல் சம்பந்தமான மாத்திரைகளும் வழங்கி அவர் களும் அவதானிக்க ப்பட்டனர்.

அனால் அவர்களில் எந்த முன் னேற்றமும் தெரியவில்லை. வெந் தய விதை மற்றும் கீரை ஆகிய இரண்டுமே மிகச் சிறந்த வை. இந்திய உணவுகளில் இவை பெருமளவு பன்படுத்தப்படுகின் றன. வெந்தயத்தில் saponins என ப்படும் மூலப்பொருள் கலந்துள் ளது.

இது ஆண்களின் விந்து உற்பத்தி உட்பட பாலியல் ஹோர்மோன்களைப் பலப்படுத்தக் கூடி படுக்கை அறையை சூ டாக்க வெந்தயம் பெரி தும் கை கொடுக்கும் என்று இந் த ஆய்வை நடத்திய விஞ் ஞானிகள் தெரிவித்துள்ள னர்.

அவுஸ்திரேலியாவின் பிரி ஸ்பேன் நகர மருத்துவ பீட ஆய்வாளர்களே இந்த முடி வை அறிவித்துள்ளனர். பாலியல் குறைபாடு உள்ளவர்களுக்கு வெந்தயம் மூலம் தாங்கள் அளித்த சிகிச்சை சிறந்த பெறுபேறைத் தந்துள்ள தாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

http://vidhai2virutcham.wordpress.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில நிழலி சொன்னதும் கு.சா சொன்னதும் ஒரே கருத்துதான்.நிழலி வெந்தையம் சாப்பிட்டால் சாமியார் ஆகலாம் என்கிறார். :rolleyes: கு.சா பாலியல் உணர்வு கூடும் என்கிறார்.அப்ப இரண்டும் ஒன்டுதானே. :lol:

சி.கு வெந்தையம் சகல தமிழ்க்கடைகளிலும் கிடைக்கும். :D

Link to comment
Share on other sites

வெந்தயக் கீரை ஆண்மையச் சக்தியைக் கூட்டும் என்று வாசித்திருக்கிறேன். வெந்தயத்தின் தன்மை பற்றித் தெரியவில்லை.

இதில நிழலி சொன்னதும் கு.சா சொன்னதும் ஒரே கருத்துதான்.நிழலி வெந்தையம் சாப்பிட்டால் சாமியார் ஆகலாம் என்கிறார். :rolleyes: கு.சா பாலியல் உணர்வு கூடும் என்கிறார்.அப்ப இரண்டும் ஒன்டுதானே. :lol:

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில நிழலி சொன்னதும் கு.சா சொன்னதும் ஒரே கருத்துதான்.நிழலி வெந்தையம் சாப்பிட்டால் சாமியார் ஆகலாம் என்கிறார். :rolleyes: கு.சா பாலியல் உணர்வு கூடும் என்கிறார்.அப்ப இரண்டும் ஒன்டுதானே. :lol:

சி.கு வெந்தையம் சகல தமிழ்க்கடைகளிலும் கிடைக்கும். :D

:D :D

இனி... கிலோ கணக்கில் வெந்தயம் வாங்கி,

முதல் நாள் இரவே... தண்ணீரில் ஊற வைத்து குடிக்க வேண்டும்.smiley-drinking-beer.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D :D

இனி... கிலோ கணக்கில் வெந்தயம் வாங்கி,

முதல் நாள் இரவே... தண்ணீரில் ஊற வைத்து குடிக்க வேண்டும்.smiley-drinking-beer.gif

பார்த்து குடியுங்கோ அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நன்ஜாகுமாம் தமிழ்சிறி :lol:

:D

Link to comment
Share on other sites

வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் வெந்தயம் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவார்கள்..! :unsure: இதை தினமும் சாப்பிட்டால்.. எப்படி? :rolleyes:

Link to comment
Share on other sites

வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் வெந்தயம் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவார்கள்..! :unsure: இதை தினமும் சாப்பிட்டால்.. எப்படி? :rolleyes:

வயிற்றுப் போக்குக்கு பச்சை வெந்தயத்தை (ஊற வைக்காதது) வாய்க்குள் போட்டுட்டு தண்ணீருடன் சேர்த்து விழுங்குவது. வயிற்றுப் போக்குக்கு வெந்தயத்தை ஊறவைத்து குடித்தால் சிலவேளை நாள் முழுவதும் ரோய்லட்டுக்கை தான் இருக்க வேண்டிவரும் என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடுமையாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் தேனும் வெந்தயமும் கலந்து சாப்பிட்டு வந்தால் குணமடையும்.

Link to comment
Share on other sites

வயிறு வலி / உளைவு (வயிற்றுப்போக்கு அல்ல) உள்ளவர்கள் இரவில் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் குணமாகும்.

இதெல்லாம் சாதாரண வலிகளுக்குத்தான். தொடர்ச்சியாக வலி உள்ளவர்கள் உரிய மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.

Link to comment
Share on other sites

இனி வெந்தயம் தான் என்ட முக்கியமான டயட். உடம்பும் குறைஞ்ச மாதிரி ஆச்சு, ஆண்மையையும் கூட்டிய மாதிரி ஆச்சு. சஜீவன் அண்ணா, ஒரு பலட் பாசலில போட்டு விடுங்கோ :wub:

Link to comment
Share on other sites

வெந்தயம் சர்க்கரை அளவை குறைக்க கூடியது . குளிர்ச்சி தர கூடியது .

சர்க்கரையோ உடல் சூடோ அளவுக்கு மீறி குறைந்தால் தற்காலிக ஆண்மை குறைவுக்கு வாய்ப்புண்டு . ( எழுச்சியின்மை அல்லது நாட்டமின்மை ). மொக்கை ஆகும் அளவுக்கெல்லாம் எபெக்ட் இல்லை

ஆண்மைக்குறைவுக்கு மூல காரணமே அளவுக்கதிகமான கழிவுகளும் குப்பைகளும் மனதிலும் உடம்பிலும் சேருவதே . அதை கட்டு படுத்தினால் ஆண்மை விருத்தி பெறலாம் . அதனால் தான் சாமியார்கள் விருத்தி பெற்று வீதியெல்லாம் அலைகிறார்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.