Jump to content

அன்னையர் தின நினைவாக!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Mother-and-Child.jpg

எனது சின்னஞ் சிறிய முகம்,

உனது முகம் பார்க்கும் கண்ணாடியென,

உற்றுப் பார்த்த படியிருப்பாய்!

உன் முகத்தின் இளமைக் காலப் புன்னகை,

இன்னும் நினைவிருக்கின்றது!

உனது அணைப்பின் இதமும்,

இதயத் துடிப்புக்களின் ஓசையும்,,

இன்னும் கேட்கின்றது!

மொட்டை வழித்த போது,

முதற் பல் தோன்றியபோது,

முழங்கால் மடித்துத் தவழ்ந்த போது,

முதன் முதலாய் நடந்த போது.....

எல்லா முதல்களிலும் ,

அருகிலிருந்து பூரித்தாய்!

நிலாக் காட்டி,

நீ ஊட்டிய பால் சோறு,

இன்னும் இனிக்கின்றது!,

நான் சிரிக்கையில் சிரித்து,

நான் அழுகையில் அழுது,

உனக்கென்று,ஏதுமின்றி,

உணர்ச்சியில்லா ஜடமானாய்!

எங்கோ அனுப்பி வைத்தாய்!

எத்தனை போராட்டங்கள்?

எத்தனை இடம்பெயர்வுகள்?

ஆயிரம் ஆனையிறவுகள்

அக்கினி வளையங்கள்!

அத்தனையும் தாண்டினாய்!

காலங்கள் கடந்தும்,

கோபம் வரவில்லையுனக்கு!

தேடி வந்த போது,

ஓடி வந்து கட்டியனைத்தாய்!

அதே இதயத்துடிப்பின் ஒலி!

அதே அணைப்பின் இதம்!

எதிலுமே மாற்றமில்லை!

எவ்வாறு உன்னால் முடிகின்றது?

எனக்கு ஒரு ஆசை!

இன்னொரு பிறவி நானேடுத்தால்,

தாயாக நானும்,

சேயாக நீயும் வரவேண்டும்!

Link to comment
Share on other sites

தாய்க்கு ஈடு இணை ஏதுமில்லை.

தெளிவான நடையில் சோகம் கவ்வச் சொல்லியுள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண் கண்ட தெய்வம் அம்மா, அம்மா என்றாலே அன்புதானே, அஹா ..... அருமை வரிகள்.

நன்றி புங்கையூரான்.

Link to comment
Share on other sites

அம்மா என்றாலே அன்பு, அரவணைப்பு , தியாகம் என்ற அர்த்தத்தை தந்த பெருமை அம்மாக்கு மட்டுமே. அந்த அன்னையின் அருமையாய் அருமையாக கூறிய உங்களிற்கு எனது நன்றிகளும் பாராட்டுக்களும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சைத் தொட்டது....கண்கள் பனிக்கின்றன....எழுதி முடிக்கமுயடியாத உறவல்லவா அம்மா....நன்றி புங்கை அண்ணா கவிதைக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புங்கையூரான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு பிறவி நானேடுத்தால்,

தாயாக நானும்,

சேயாக நீயும் வரவேண்டும்! .............

......உள்ளம் தொடும் வரிகள்.

உங்கள் அம்மா இதை வாசிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

Mother-and-Child.jpg

எனது சின்னஞ் சிறிய முகம்,

உனது முகம் பார்க்கும் கண்ணாடியென,

உற்றுப் பார்த்த படியிருப்பாய்!

உன் முகத்தின் இளமைக் காலப் புன்னகை,

இன்னும் நினைவிருக்கின்றது!

உனது அணைப்பின் இதமும்,

இதயத் துடிப்புக்களின் ஓசையும்,,

இன்னும் கேட்கின்றது!

மொட்டை வழித்த போது,

முதற் பல் தோன்றியபோது,

முழங்கால் மடித்துத் தவழ்ந்த போது,

முதன் முதலாய் நடந்த போது.....

எல்லா முதல்களிலும் ,

அருகிலிருந்து பூரித்தாய்!

நிலாக் காட்டி,

நீ ஊட்டிய பால் சோறு,

இன்னும் இனிக்கின்றது!,

நான் சிரிக்கையில் சிரித்து,

நான் அழுகையில் அழுது,

உனக்கென்று,ஏதுமின்றி,

உணர்ச்சியில்லா ஜடமானாய்!

எங்கோ அனுப்பி வைத்தாய்!

எத்தனை போராட்டங்கள்?

எத்தனை இடம்பெயர்வுகள்?

ஆயிரம் ஆணையிறவுகள்!!

அக்கினி வளையங்கள்!

அத்தனையும் தாண்டினாய்!

காலங்கள் கடந்தும்,

கோபம் வரவில்லையுனக்கு!

தேடி வந்த போது,

ஓடி வந்து கட்டியனைத்தாய்!

அதே இதயத்துடிப்பின் ஒலி!

அதே அணைப்பின் இதம்!

எதிலுமே மாற்றமில்லை!

எவ்வாறு உன்னால் முடிகின்றது?

எனக்கு ஒரு ஆசை!

இன்னொரு பிறவி நானேடுத்தால்,

தாயாக நானும்,

சேயாக நீயும் வரவேண்டும்!

வார்த்தைகளை தேர்தெடுத்து கவிதையை கோர்த்துள்ளீர்கள் , அழகான கவிதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையை படித்து முடித்த போது...

விழிகளில் எட்டிப் பார்த்தது, கண்ணீர்.

இணைப்பிற்கு நன்றி, புங்கையூரான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய்க்கு ஈடு இணை ஏதுமில்லை.

தெளிவான நடையில் சோகம் கவ்வச் சொல்லியுள்ளீர்கள்.

உணர்வுகளில் நீடித்து வாழ்வது சோகம் மட்டுமே தப்பிலி!

தங்கள் கருத்துக்கு நன்றிகள்!!!

கண் கண்ட தெய்வம் அம்மா, அம்மா என்றாலே அன்புதானே, அஹா ..... அருமை வரிகள்.

நன்றி புங்கையூரான்.

நன்றிகள், சகோதரா!

அம்மா என்றாலே அன்பு, அரவணைப்பு , தியாகம் என்ற அர்த்தத்தை தந்த பெருமை அம்மாக்கு மட்டுமே. அந்த அன்னையின் அருமையாய் அருமையாக கூறிய உங்களிற்கு எனது நன்றிகளும் பாராட்டுக்களும்.

கருத்துக்கும் பாராட்டுகளுக்கும் நன்றிகள், கல்கி!

ஏன் இப்போது முன்பு போல், அடிக்கடி தலைகாட்டுவதில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான வரிகள் புங்கையூரன்.

கவிதைக்கு நன்றிகள்

கருத்துக்கு நன்றிகள், வாத்தியார்!

நெஞ்சைத் தொட்டது....கண்கள் பனிக்கின்றன....எழுதி முடிக்கமுயடியாத உறவல்லவா அம்மா....நன்றி புங்கை அண்ணா கவிதைக்கு

ஒரு பயணத்தால் திரும்பி வரும்போது, எல்லா உறவுகளும் உங்கள் கையைத்தான் பார்க்குமாம்!

தாயென்ற உறவு மட்டும், தன் பிள்ளையை முழுமையாகப் பார்க்குமாம்!

கையை மட்டுமல்ல!

கருத்துக்கு நன்றிகள், சுபேஸ்!

நன்றி புங்கையூரான்.

தங்கள் கருத்துக்கும், இணைப்புக்கும் நன்றிகள் குமாரசாமியண்ணை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு பிறவி நானேடுத்தால்,

தாயாக நானும்,

சேயாக நீயும் வரவேண்டும்! .............

......உள்ளம் தொடும் வரிகள்.

உங்கள் அம்மா இதை வாசிக்க வேண்டும்.

நிலாமதியக்கா, கருத்துக்கு நன்றிகள்!

தாயன்பைத் திருப்பிச் செலுத்துவதற்கு, எனக்குத் தெரிந்த ஒரே வழி இது தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொட்டை வழித்த போது,

முதற் பல் தோன்றியபோது,

முழங்கால் மடித்துத் தவழ்ந்த போது,

முதன் முதலாய் நடந்த போது.....

எல்லா முதல்களிலும் ,

அருகிலிருந்து பூரித்தாய்!

அன்னையின் நினைவினைச் சுமந்து அழகாய் எழுதியிருக்கிறீர்கள்.

அன்னையின் அன்புக்கு நிகரேது.

இன்னொரு பிறவி நானேடுத்தால்,

தாயாக நானும்,

சேயாக நீயும் வரவேண்டும்!

இன்னொரு பிறவி நானெடுத்தால்,

உங்கள் கவிதைகளை நான் படிக்கவேண்டும், ரசிக்கவேண்டும். :)

Link to comment
Share on other sites

  • 2 years later...

இன்னொரு பிறவி நானேடுத்தால்,
தாயாக நானும்,
சேயாக நீயும் வரவேண்டும்!

 

அத்தனை வரிகளும் உணர்வு ரீதியான வரிகள்

வாழ்த்துகள்    புங்கையூரான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாய்மையைப் போற்றும் கவி உள்ளத்தின் கவின் மிகு வரிகள். வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.