Jump to content

வணக்கம் யாழ் நண்பர்களே


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

http://leo-malar.blogspot.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

""கடவுள் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று""..

வணக்கம் வாருங்கள் லியோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுள் நினைத்ததுண்டா?

நன்றிகள் பல வாத்தியார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதை படித்தேன்...அழகாக இருக்கிறது...யாழ்கள உறவுகளுக்காக இங்கே பதிவிடுகிறேன் நண்பரே...தொடர்ந்து யாழில் எழுதுங்கள்..வாழ்த்துக்கள்...

என்னவளுக்கு !

என்னவளுக்கு !

இன்று

தொழிலாளர் /உழைப்பாளர் தினம்

இன்றுதான்

உன் பிறந்த தினமும்

"எட்டு மணி நேர வேலை "என்று

தொடங்கி ரஷ்ய புரட்சியே வெடித்தது

என்னவளே !

எந்த புரட்சியும் இல்லாமல்

இன்னும்

இரு எட்டு மணி நேர வேலை செய்கிறாய்

ஒற்றையாய்

ஒரு தசாப்தம்

குடும்ப சுமை உன்மீது

இரட்டையாய் ஒன்றானோம்

புலம் பெயர்ந்து

விரும்பா/எதிர்பாரா புலம்பெயர்வு

எனக்கு எல்லாமே போனஸ் தான்

நீயும் எனக்காய் மாறிப்போனாய்

குழந்தைகளுக்காய்

புதிய மண்ணில்

மீண்டுமொரு போராடியவாழ்வு

அத்திவாரத்திலிருந்து

அலைகளில் அசைந்தவாழ்வு

சுனாமியாய் அடித்து ஓய்ந்தது

உயிரால் வரைந்த ஓவியம்

உலகால் கலைந்த சீவியம்

மனிதர்களுக்கு கடின வாழ்வு

பச்சோந்திகளுக்கு இலகு வாழ்வு

மரம் வேரோடு தீப்பற்ற

குருவிகளின் கூடு தொலைந்தது

வேரற்ற மண்ணில்

வேதனையோடு மீள கட்டும் கூடு

குருவிகளுக்கானதா?

சோகங்களை

இயன்றவரை மறைத்து

அமைதியாய் அசைவோம்

காயம் ஏற்று மயிரிழையில்

உயிர் தப்பியவள் நீ

மயிரிழையே

எம் வாழ்வை உயிர்ப்பிக்கிறது

தொடர்ந்தும்

அன்பால் எமை கரை

இயல்பாய் கவிதை வரை

உன்னை வாழ்த்த

நானொன்றும் வேறல்ல

நானும் நீதான்

லியோ

http://leo-malar.blogspot.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க நன்றிகள் நண்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய நல் வரவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் லியோ உங்கள் வரவு நல்வரவாகட்டும்

மிக்க நன்றி அபிசேகா

வணக்கம் லியோ, வாங்க

மிக்க நன்றி

இனிய நல் வரவு

மிக்க நன்றி

என்னை வரவேற்கும் அனைவருக்கும்

என் பாசத்துடனான நன்றிகள்

Link to comment
Share on other sites

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க நன்றி ஆரமுதன்

மிக்க நன்றி ஆராவமுதன் ,

தங்கள் பெயரை ஆரமுதன் என்று நினைத்தேன்

ஏனெனில் எனக்கு ஆரமுதன் என்ற நண்பன் இருந்தான்

அன்புடன்

லியோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் மண்ணுக்கு ,

என் மக்களுக்கு ,

என்று விடுதலையோ

அன்று

என் ஆத்மா சிறகடிக்கும்

அதுவரை சிறையிருக்கும்

-லியோ-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் லியோ. உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க நன்றி தமிழ் சிறி

அன்புடன் லியோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் , மிக்க நன்றி

அன்புடன் லியோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று யாழ்ப்பாணத்தில் குறைந்தது இருவருக்கு

ஒருஅரச பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

வன்னியில் குறைந்தது ஒருவருக்கு ஒரு அரச படை

நிறுத்தப்பட்டுள்ளது.வன்னியில் பிறக்கும் ஒவ்வொரு

பிள்ளையை நோக்கியும் குறைந்தது ஒரு துப்பாக்கி

நீட்டப்படுகிறது.கிழக்கின் நிலைமையிலும் எந்த

மாற்றங்களும் இல்லை.வடக்கின் ஆளுநர் செம்மனிப்படுகொலை

உள்ளீடாய் கொலைகளுடன் சம்மந்தப்பட்ட ஒரு

இராணுவ அதிகாரி,கிழக்கில் கொலைகளில்

கை கழுவும் கடற்படை அதிகாரி.இங்கு நடப்பது இராணுவ ஆட்சி அற்று வேறு என்ன?

இவை போதாதென்று எலும்புத்துண்டுக்காய் அலையும்

அடிவருடிகளும் அவர் பரிவாரங்களும் வேறு.

எங்கள் போராட்டத்தை இந்தியாவுடன் சர்வதேசமும்

சேர்ந்து அழித்தது. ஐந்தில் ஒரு மக்கள் கொலை

செய்யப்பட்டுவிட்டார்கள்.ஐந்தில் இரு மக்கள்

புலம்பெயரப்படுத்தப்பட்டுவிட்டார்கள்.

எமது மண்ணில் கொலைகளும்,தற்கொலைகளும்

காணாமல்போதல்களும் ,வெள்ளை வான் கடத்தல்களும்

கலாச்சார சீரழிவும் மலிந்து கிடக்கிறது.இராணுவ

ஆட்சியை ஜனநாயக ஆட்சியாய் சர்வதேசம்

ஏற்பதுபோல் காட்டுவது வெந்த புண்ணில்

வேல் பாய்ச்சுகிறது.

அமைச்சர்கள் அங்கீகாரம் பெற்ற

கொலையாளிகளாய்.எந்த நேரமும் எதுவும்

நடக்கலாம்.பௌத்த பிக்குகளின் நடத்தைகள்

எந்தவிதத்திலும் புத்தபகவானுடன் தொடர்புபடவில்லை.

இலங்கை எனும் நாட்டில் புத்தபகவானின் கொள்கைகளை

காப்பாற்ற சர்வதேசம் தலையிடவேண்டும்.சிறுபான்மையினருக்கு

மத சுதந்திரம் உள்ளீடாய் அனைத்து சுதந்திரமும் சர்வதேச

துணையுடன் காவுகொள்ளப்பட்டுள்ளது.

இலங்கைத்தமிழர் ஜனநாய வழியில் தமது

தனித்து வாழும் உரிமையை உலகுக்குஎல்லா வழிகளிலும்

வெளிச்சமாய் ஒப்புவித்துள்ளனர்.ஐ.நா வின்

மனிதாபிமானம் இதுவரை எமை தொடவில்லை.

எமது வாழும் உரிமையை மீட்டுத்தரவில்லை.

எமது இழப்பு போதாதென்று இன்னும்ஐ.நா பார்த்திருக்கிறதா?

ஒரு இனத்தின் அழிவு உலகக்கண்ணுக்கு முன்னால் நடக்கிறதே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடிகின்ற வேளையொன்றின்

பூவாக வேண்டும்

மடிகின்ற போதுதனில்

ஈழம் மலர்ந்திருக்க வேண்டும்

-லியோ-

Link to comment
Share on other sites

வணக்கம் வாங்கோ, உங்கள் வரவு நல்வரவாகட்டும்! :)

உங்கள் எழுத்துக்களை வாசிக்க கஸ்டமாயிருக்கு :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க நன்றி அலைமகள்

லியோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகோதரனே !

இன்று

உன் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்

ஒன்றாய் வளர்ந்தோம்

ஓரணியில் விளையாடினோம்

கால அழைப்பை ஏற்று

இன விடுதலைக்காய் உழைத்தோம்

உனக்கும் எனக்கும்

ஏழு வயது இடைவெளி -ஆனால்

ஒரே நாளில் பிறந்தோம்

எங்கு நின்றாலும்

நம் பிறந்த நாளில்

உன்னை நினைப்பேன்

நீயும் அப்படித்தான்

ஒரு குழந்தையின் மனநிலை கருதி

நீண்ட நாள் காத்திருந்த இலக்கு

கையிற்கு எட்டியபோதும்

கைவிட்டு வந்தவன் நீ

மீண்டும் சென்று வென்றுவந்த

செயலில் வாழ்ந்த வீரன் நீ

உனது தாக்குதல்கள்

எங்கும் பேசப்பட

நீயோ

ஏதும் அறியாதவனாய் நகர்வாய்

வீரனே

உனக்கு ஞாபகம் இருக்கிறதா?

நான் உன் வீடு வந்து திரும்பும் போது

நீதான் என்னை

சைக்கிளில் ஏற்றிவந்து

பஸ்ஸில் நான் ஏறும்வரை

காவல் நிற்பாய்

எனது உருவம் தெரியும்வரை

கை அசைப்பாய்

முள்ளிவாய்க்காலில்

கூப்பிடு தூரத்தில் நான் நிற்க

ஏன் எனக்கு கை அசைக்காமல் போனாய்?

உன் தாய்

நீ வருவாய் என்று

காத்திருக்கிறாளேடா!

என்னடா சொல்ல ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Paco Rabanne 1Million அட நம்ம தங்க பிஸ்கட். பயல் பிரமாதம் அடிச்சு தூக்குவான். கொஞ்சம் spicy and warm ஆக இருப்பதால் எல்லா இடத்திலும் செட் ஆகமாட்டான். இவனுக்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. மயிரிழையில் தப்பினேன் இல்லையென்றால் பயல் எண்ட வேலைக்கு உலை வச்சிருப்பான்.     நமது favourites 1. Bleu de chanel  2. Dior Sauvage 3. Giorgio Armani acqua di gio (கிளாசிக்) ஒரு காலத்தில் பிரமாதம் நாள் கணக்கில் சட்டையில் மணம் இருக்கும் ஆனால் இப்போ வருவது அந்தளவுக்கு தரமாக இல்லை அதனால் Profondo வுக்கு மாறிவிட்டேன் பொருள் டக்கர். இதெல்லாம் ஒவ்வொரு நாளும் விசிற கட்டுப்படியாகாது என்பதால் சாதாரண பாவனைக்கு Davidoff Coldwater Intense ,Cyrus Writer and Nautica Blue.   Gucci Envy கேள்விப்பட்டிருக்கிறேன் பாவிக்க கொடுத்துவைத்திருக்கவில்லை.      
    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.