Jump to content

அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் பற்றிய விவரணம் -வீடியோ


Recommended Posts

இணைப்புக்கு நன்றி கோமகன்.

இவரது கணீர் குரலும், தமிழ் உச்சரிப்பும், பாடல்வரிகளை நினைவில் நிறுத்தி பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியை நடாத்திய திறமையும் ஆச்சரியப்படவைக்கும் விஷயம்.

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி கோமகன்.

இவரது கணீர் குரலும், தமிழ் உச்சரிப்பும், பாடல்வரிகளை நினைவில் நிறுத்தி பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியை நடாத்திய திறமையும் ஆச்சரியப்படவைக்கும் விஷயம்.

இவரில் விமர்சனங்கள் இருந்தாலும் , காலத்தால் அழிக்கமுடியாத அரும்பெரும் பொக்கிசமாக எம்மிடையே வாழ்கின்றார் . மிக்க நன்றிகள் ஈஸ் உங்கள் கருத்துக்களுக்கு .

Link to comment
Share on other sites

இவரில் விமர்சனங்கள் இருந்தாலும் , காலத்தால் அழிக்கமுடியாத அரும்பெரும் பொக்கிசமாக எம்மிடையே வாழ்கின்றார் . மிக்க நன்றிகள் ஈஸ் உங்கள் கருத்துக்களுக்கு .

யாரில் தான் விமர்சனங்கள் இல்லை? நல்லவற்றை எடுத்து கூடாததை விட்டு விடுவோமே!

Link to comment
Share on other sites

யாரில் தான் விமர்சனங்கள் இல்லை? நல்லவற்றை எடுத்து கூடாததை விட்டு விடுவோமே!

நானும் உங்கள் பக்கம் தான் ஈஸ் .

Link to comment
Share on other sites

இவர் தமிழரை திருமணம் செய்ததால் அரசினால் நாட்டை விட்டு வெளியேற வற்புறுத்தப்பட்டார் என்று கேள்விப்பட்டேன்.இக்கூற்று உண்மையா??

Link to comment
Share on other sites

இவர் தமிழரை திருமணம் செய்ததால் அரசினால் நாட்டை விட்டு வெளியேற வற்புறுத்தப்பட்டார் என்று கேள்விப்பட்டேன்.இக்கூற்று உண்மையா??

அப்துல் ஹமீட் ஓர் இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்தவர் . இவர் விசாலாட்சி என்ற பிராமணப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார் .. விசாலாட்சி ஹமீத் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் வேலைசெய்து கொண்டிருந்தார் . ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஏற்பட்ட தமிழ்சேவைப் பணிப்பாளர் நியமனத்தில் அருந்ததி சிறீ ரங்கனாதன் , வீ என் மதியழகன் தலமையில் ஏற்பட்ட உள் அரசியல் வேலைகளால் மனமுடைந்தவர் , நாட்டை விட்டே வெளியேறினார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரால் எந்த பிரயோசனமும் இல்லை ஈழ தமிழனுக்கு , எங்களின் நியாயமான போராட்டத்தை இவர் என்றுமே ஆதரித்ததாக நான் அறியவில்லை

இவரின் உழைப்புக்கு தமிழ் துணை போகின்றது ஆனால் இவர் தமிழனுக்கு உதவியதாக அறியவில்லை

மொத்தத்தில் இவர் ஒரு சுயநலவாதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரால் எந்த பிரயோசனமும் இல்லை ஈழ தமிழனுக்கு , எங்களின் நியாயமான போராட்டத்தை இவர் என்றுமே ஆதரித்ததாக நான் அறியவில்லை

இவரின் உழைப்புக்கு தமிழ் துணை போகின்றது ஆனால் இவர் தமிழனுக்கு உதவியதாக அறியவில்லை

மொத்தத்தில் இவர் ஒரு சுயநலவாதி

ஆனால் இவர் ரொம்பவும் இலாவகரமாக எமது பிரச்சினையை தவிர்த்து விடுவார்.

ஒரு வகையில் பார்த்தால் எமக்கு உபத்திரவம் கொடுப்பதில்லை. அதுவும் நல்லதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை டிசைன் சில்க்ஸ்.. சங்கு மார்கு கைலிகள் .. பவர் சோப்பு.. எல்லாம் இவரின்ட குரலில் விற்பனை ஆனவை.. கொழும்பு வானோலி வர்த்தக சேவை 1900களில்

Link to comment
Share on other sites

இவரால் எந்த பிரயோசனமும் இல்லை ஈழ தமிழனுக்கு , எங்களின் நியாயமான போராட்டத்தை இவர் என்றுமே ஆதரித்ததாக நான் அறியவில்லை

இவரின் உழைப்புக்கு தமிழ் துணை போகின்றது ஆனால் இவர் தமிழனுக்கு உதவியதாக அறியவில்லை

மொத்தத்தில் இவர் ஒரு சுயநலவாதி

அதிகாரமட்டத்தில் இருந்தவர்கள் எல்லோரும் சுயநலவாதிகள் என்றால் தமிழர்கள் எல்லோருமே சுயநலவாதிகளாகின்றனர் . அன்றைய காலகட்டத்தில் பெரும் பதவிகள் யாவுமே தமிழர்கள்தான் அலங்கரித்தார்கள் . ஒருவகையில் தமிழுக்கும் தேசியத்திற்கும் அதிகாரமட்டத்தில் இருந்த தமிழர்கள் உதவியுள்ளார்கள் . உதாரணமாக அப்போதய கொழும்பு மேயராக இருந்த கணேசலிங்கம் பலவழிகளில் தேசியத்திற்கு உதவியுள்ளார். இவ்வாறான உதவிகள் பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை . எதையும் பறைதட்டிதான் செய்யவேண்டும் என்ற அவசியமில்லையே தமிழரசு . உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் .

***********எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டுள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் தமிழ் உச்சரிப்பை இன்றும் அன்றும் கண்டு

வியந்தவன். ஆங்கில வாடை இல்லாமல்

தமிழைப் பேசும் ஒரு அறிவிப்பாளர் மட்டுமல்ல

மிகத் திறமைவாய்ந்த ஒரு கலைஞர்.

Link to comment
Share on other sites

ஆனால் இவர் ரொம்பவும் இலாவகரமாக எமது பிரச்சினையை தவிர்த்து விடுவார்.

ஒரு வகையில் பார்த்தால் எமக்கு உபத்திரவம் கொடுப்பதில்லை. அதுவும் நல்லதே.

ஆம் உண்மை ...............சிலவருடங்களிற்கு முன் மாவீரர் தின நிகழ்விற்கு முதல் கிழமை இவர் உட்பட சில தமிழ் நாட்டுக்கலஞ்சர்களையும் இங்கே ஓர் வர்த்தகர் இசை நிகழ்ச்சிக்காக அழைத்திருந்தார் ..................மாவீரர் தினம் அன்று அனைத்து தமிழ் நாட்டு கலைஞ்சர்களும் மாவீரர் நிகழ்விற்கு வந்திருந்தனர் இவரைத்தவிர ,,,,,,,,,,,,,,,,,,,

இவர் அங்கே ஒய்வேடுத்திக்கொண்டார் ......தமிழ்நாட்டு கலைஞ்சர்கள் அனைனரும் என்னையும் சந்தித்தனர் [நானும் ஓர் கலைஞ்சனாக அந்த புனித மேடையில் தோன்றியதனால்] எனது

கேள்வி

என்னவென்றால் தமிழ் மேல் பற்றுள்ளவர் தமிழ் பாண்டித்தியம் கொண்டவர் தமிழே உயிர் என்று வாழ்பவர் என்றெல்லாம்

அழைக்கப்படுபவர்

ஏன் இப்படி நடந்தார் என்பதே........????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கே எஸ் ராஜாவின் மரணத்தின் பின்னர் தான் இந்தியாவிற்கு போனவர் என யாரோ சொல்லிச்சினம் உண்மையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோமகன், ரதி,

கோ,

நான் அறிந்த வகையில் அப்புதுல் கமிதினது சேவைக்காலம் மற்றையவர்களுடன் ஒப்பிடும் போது குறைவு என்றுதான் நினைக்கிறன்..அவர் வெளியே பிரபல்யமாக இருந்தாலும் நிர்வாக நிலையில் ஒரு இளையவாராக இருந்தார் ஒன்று ஒருவர் சொன்ன ஞாபகம்.- என்னுடன் கதைத்தவர் சொன்னவர்- பகிடியாகவே அல்லது கால்புனர்வாகவோ தெரியவில்ல, அப்துல் கமிதுவும் - "மழையில் மலை பெய்கிறது" என்றுதானாம் ரேடியோ சிலோனுக்கு வந்தவர். :)

ரதி,

உண்மையில் KS ராஜா இற்கும் BH கமிதுக்கும் இடையில் தொழில் ரீதியான போட்டிதான் இருந்தது என்று சொல்லுவார்கள். அப்படி பார்த்தல், ஒருவர் இல்லாமல் போனபிறகு மற்றவர் நாட்டை விட்டு வெளியேறினார் என்பது பொருத்தமில்லாமல் உள்ளது.

Link to comment
Share on other sites

இவரால் எந்த பிரயோசனமும் இல்லை ஈழ தமிழனுக்கு , எங்களின் நியாயமான போராட்டத்தை இவர் என்றுமே ஆதரித்ததாக நான் அறியவில்லை

இவரின் உழைப்புக்கு தமிழ் துணை போகின்றது ஆனால் இவர் தமிழனுக்கு உதவியதாக அறியவில்லை

மொத்தத்தில் இவர் ஒரு சுயநலவாதி

நீங்களும் இலங்கையில் தரயிறங்கியதும் I am A Sri Lankan என்று தான் சொல்லிகொண்டு போவீர்களே தவிர நான் தமிழ் ஈழ தமிழன் என்றா சொல்லிகொண்டு போவீங்கள்? அங்கே வாழவேண்டும் என்றால் சிலதுகளை அடக்கி தான் வாசிக்கணும் கண்டியளோ? இனத்துவேசம் கொண்டு முஸ்லிம்களை அடித்துவிரட்டிவிட்டு பின் அவர்கள் எமக்கு உதவவில்லை என்று கேட்பது வேடிக்கையாக இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் இலங்கையில் தரயிறங்கியதும் I am A Sri Lankan என்று தான் சொல்லிகொண்டு போவீர்களே தவிர நான் தமிழ் ஈழ தமிழன் என்றா சொல்லிகொண்டு போவீங்கள்? அங்கே வாழவேண்டும் என்றால் சிலதுகளை அடக்கி தான் வாசிக்கணும் கண்டியளோ? இனத்துவேசம் கொண்டு முஸ்லிம்களை அடித்துவிரட்டிவிட்டு பின் அவர்கள் எமக்கு உதவவில்லை என்று கேட்பது வேடிக்கையாக இல்லையா?

விடிவெள்ளி,

நிச்சயமாக நான் I am Sri lankan என்று பெருமையாக சொல்லிக்கொண்டு போகமாட்டேன், அதே நேரம் ஈழ தமிழன் என்று மார்தட்டி கூறாட்டிலிம் மனதுக்குள் நினைத்துக்கொண்டு போவேன் எனக்கு அதுதான் பெருமையும் கூட Sri lankan என்று நினைக்க முடியவில்லை ஏனெனில் அவர்கள் செய்த கொடுமை அப்படி ...... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனத்துவேசம் கொண்டு முஸ்லிம்களை அடித்துவிரட்டிவிட்டு பின் அவர்கள் எமக்கு உதவவில்லை என்று கேட்பது வேடிக்கையாக இல்லையா?

ஆமாம், இல்லாதுபோனால் ஓடிவந்து உதவி விடுவார்கள் யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் முஸ்லிம்கள் என்ன உதவி தமிழருக்கு செய்திருக்கின்றார்கள் ????

இவர்களுக்கு புலிகள் மேல் கோபம் என்றால் இப்போது அவர்கள் இல்லை என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் கூறுகின்றது ஏன் என்னும் தமிழர்களின் பிரச்சனைக்கு இவர்கள் சேர்ந்து குரல் கொடுக்கவில்லை ?????

Link to comment
Share on other sites

புலிகளும் தமிழரும் ஒன்று தானே. எமக்கு மற்றவர் மேல் உள்ள கோபம் ஆறாதது போல அவர்களுக்கும் இருக்கலாம். அவர்கள் உதவத் தேவையில்லை. எம்மை நாமே காப்பாற்றவும், எம்மக்களுக்கு நாமே உதவவும் முன் வரவேண்டும்.

Link to comment
Share on other sites

ஆம் உண்மை ...............சிலவருடங்களிற்கு முன் மாவீரர் தின நிகழ்விற்கு முதல் கிழமை இவர் உட்பட சில தமிழ் நாட்டுக்கலஞ்சர்களையும் இங்கே ஓர் வர்த்தகர் இசை நிகழ்ச்சிக்காக அழைத்திருந்தார் ..................மாவீரர் தினம் அன்று அனைத்து தமிழ் நாட்டு கலைஞ்சர்களும் மாவீரர் நிகழ்விற்கு வந்திருந்தனர் இவரைத்தவிர ,,,,,,,,,,,,,,,,,,,

இவர் அங்கே ஒய்வேடுத்திக்கொண்டார் ......தமிழ்நாட்டு கலைஞ்சர்கள் அனைனரும் என்னையும் சந்தித்தனர் [நானும் ஓர் கலைஞ்சனாக அந்த புனித மேடையில் தோன்றியதனால்] எனது

கேள்வி

என்னவென்றால் தமிழ் மேல் பற்றுள்ளவர் தமிழ் பாண்டித்தியம் கொண்டவர் தமிழே உயிர் என்று வாழ்பவர் என்றெல்லாம்

அழைக்கப்படுபவர்

ஏன் இப்படி நடந்தார் என்பதே........????

உங்கள் கேள்வி சிறுபிள்ளைத்தனமாக இருக்கின்றது தமிழ்சூரியன் . மாவீரர்தினத்தில் கலந்துகொண்டுதான் அப்துல்ஹமீட் தமிழ்பற்றாளர் என்று நிரூபிக்கவேண்டுமா ? பிழை சொல்வதானால் எப்படியும் சொல்லலாம் . ஒர் இஸ்லாமியன் என்பதற்காகவும் , அரசியலை தன்அருகே வைத்திருக்காத ஒரு கலைஞனை , சுயநலவாதி என்றும் , துரோகி என்றும் சித்தரிக்க முயலுவது எமது குறுகியமனப்பான்மையைத் தான் காட்டுகின்றது . இதைத்தான் மணிவாசகனும் தனது மொழியில் சொல்லுகின்றார் .

Link to comment
Share on other sites

ஆம் உண்மை ...............சிலவருடங்களிற்கு முன் மாவீரர் தின நிகழ்விற்கு முதல் கிழமை இவர் உட்பட சில தமிழ் நாட்டுக்கலஞ்சர்களையும் இங்கே ஓர் வர்த்தகர் இசை நிகழ்ச்சிக்காக அழைத்திருந்தார் ..................மாவீரர் தினம் அன்று அனைத்து தமிழ் நாட்டு கலைஞ்சர்களும் மாவீரர் நிகழ்விற்கு வந்திருந்தனர் இவரைத்தவிர ,,,,,,,,,,,,,,,,,,,

இவர் அங்கே ஒய்வேடுத்திக்கொண்டார் ......தமிழ்நாட்டு கலைஞ்சர்கள் அனைனரும் என்னையும் சந்தித்தனர் [நானும் ஓர் கலைஞ்சனாக அந்த புனித மேடையில் தோன்றியதனால்] எனது

கேள்வி

என்னவென்றால் தமிழ் மேல் பற்றுள்ளவர் தமிழ் பாண்டித்தியம் கொண்டவர் தமிழே உயிர் என்று வாழ்பவர் என்றெல்லாம்

அழைக்கப்படுபவர்

ஏன் இப்படி நடந்தார் என்பதே........????

இப்படித்தான் நித்தி கனகரத்தினமும் வேறொரு திரியில் துரோகி ஆக்கப்பட்டுள்ளார். கலைஞன் என்றால் கட்டாயம் அரசியல் கலப்பு இருக்க வேண்டுமா என்ன??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இவர் ரொம்பவும் இலாவகரமாக எமது பிரச்சினையை தவிர்த்து விடுவார்.

ஒரு வகையில் பார்த்தால் எமக்கு உபத்திரவம் கொடுப்பதில்லை. அதுவும் நல்லதே.

இப்படித்தான் நித்தி கனகரத்தினமும் வேறொரு திரியில் துரோகி ஆக்கப்பட்டுள்ளார். கலைஞன் என்றால் கட்டாயம் அரசியல் கலப்பு இருக்க வேண்டுமா என்ன??

இதைத்தான் முதலிலேயே நான் இப்படிக்குறிப்பிட்டேன் நுணாவிலான்

அதேநேரம் அதையும் மீறி எமக்காக உழைத்த K.S. RAJAH அவர்கள் எவ்வாறு இறந்தார் என்பதையும் நினைவுகூறுகின்றேன்.

Link to comment
Share on other sites

உங்கள் கேள்வி சிறுபிள்ளைத்தனமாக இருக்கின்றது தமிழ்சூரியன் . மாவீரர்தினத்தில் கலந்துகொண்டுதான் அப்துல்ஹமீட் தமிழ்பற்றாளர் என்று நிரூபிக்கவேண்டுமா ? பிழை சொல்வதானால் எப்படியும் சொல்லலாம் . ஒர் இஸ்லாமியன் என்பதற்காகவும் , அரசியலை தன்அருகே வைத்திருக்காத ஒரு கலைஞனை , சுயநலவாதி என்றும் , துரோகி என்றும் சித்தரிக்க முயலுவது எமது குறுகியமனப்பான்மையைத் தான் காட்டுகின்றது . இதைத்தான் மணிவாசகனும் தனது மொழியில் சொல்லுகின்றார்

.

வணக்கம் கோமகன் அண்ணா நான் கலைஞ்சர் திரு அப்துல் ஹமிட் அவர்களை துரோகி என்றோ சுயநலவாதி என்றோ இங்கு குறிப்பிடவில்லை .எனது ஆதங்கம் என்னவென்றால் தமிழீழ தமிழனாக பிறந்து விட்ட அல்லது தமிழனாக பிறந்துவிட்ட அனைவருக்கும் இந்தப்போராட்டத்தில் ஒரு பங்கு இருக்கவேண்டும் ,அவரவர் திறமைக்கு ,தகுதிக்கு ஏற்றவாறு அந்த பங்கு அமையவேண்டும்.அந்தவகையில் திரு அப்துல் ஹமீத் போல் நான் ஓர் சிறந்த ,பிரபல்யமான கலஞ்சனாக இல்லாவிட்டாலும் எனக்கு இறைவன் தந்த அந்த சிறிய திறமையை என் இன விடுதலைக்கு ஏதோ ஒரு வகையில் பயன் படுத்தி வருகிறேன். இந்த சூழ்நிலையில் ஓர் படைப்பாளி எப்படி இருக்கவேண்டும் என்பதையும் நான் உணர்ந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறேன்,இதே போல் ஒவ்வொரு கலைஞ்சனும் இருக்க வேண்டும் என்பதே எனது அவா .....இந்த எனது அவா தவறா ,சரியா என்பது அவரவர் சிந்தனைக்கு உட்பட்ட விடயம்.அது பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.ஆனால் திரு அப்துல் ஹமீத் ஒரு தமிழனா .முஸ்லிமா என்பதற்கப்பால் .தமிழ் கலை உலகிலேயே அவரது பணியும் அவரது வளர்ச்சியுமுள்ளது. அப்படிப்பட்டவர் இப்படி ஏன் நடந்து கொண்டார் என்பதை நான் கேட்டது தவறா...............

Link to comment
Share on other sites

இப்படித்தான் நித்தி கனகரத்தினமும் வேறொரு திரியில் துரோகி ஆக்கப்பட்டுள்ளார். கலைஞன் என்றால் கட்டாயம் அரசியல் கலப்பு இருக்க வேண்டுமா என்ன??

febbaby.gif

வணக்கம் நுணாவிலான் அண்ணா [தம்பி]

தங்கள் சுய நலன்களுக்கு.அல்லது விருப்பு வெறுப்பு இவைகளுக்காகவோ இன்னொருவரை துரோகியாக்கும் படலம் நீங்கள் கூறியது போல் இப்போ நிறைய நடந்து கொண்டிருக்கிறது.உண்மை . நான் விடுதலைப்புலிகளுடன் ,அல்லது அவர்களின் செயற்பாடுகளுடன் பின்னிப்பினைந்தவன் என்று பொய் கூறுபவன் அல்ல .ஆனால் தமீழத்தில் வாழ்ந்த காலத்திலும் சரி,புலம்பெயர் மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கும் இக்காலத்திலும் சரி அவர்கள் காட்டிய வழியில் வாழ முயற்சிப்பவன்.அந்த வகையில் எழுந்தமானத்திற்கு யாரையும் துரோகி என்று இதுவரை நான் கருதேழுதியதுமில்லை [ சம்பந்தர்.................உட்பட] ஆனால் இந்த திரியில் திரு அப்துல் ஹமஈட்டிற்கு ஒரு கவ்ரவம் கொடுக்கப்படும் போது அந்த கவுரவம் தமிழர்களால் கொடுக்கப்படும் போது கொஞ்சம் சிந்தித்தே நான் அப்படி ஒரு கேள்வி கேட்டேன்.அவரது திறமயை நான் எப்போதும் மதிப்பவன் .அப்படி நான் மதிக்காவிட்டால் நான் தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதன் [கலைஞ்சன் ] என்ற வரையறைக்கு அப்பாற்பட்டவன்

Link to comment
Share on other sites

.

வணக்கம் கோமகன் அண்ணா நான் கலைஞ்சர் திரு அப்துல் ஹமிட் அவர்களை துரோகி என்றோ சுயநலவாதி என்றோ இங்கு குறிப்பிடவில்லை .எனது ஆதங்கம் என்னவென்றால் தமிழீழ தமிழனாக பிறந்து விட்ட அல்லது தமிழனாக பிறந்துவிட்ட அனைவருக்கும் இந்தப்போராட்டத்தில் ஒரு பங்கு இருக்கவேண்டும் ,அவரவர் திறமைக்கு ,தகுதிக்கு ஏற்றவாறு அந்த பங்கு அமையவேண்டும்.அந்தவகையில் திரு அப்துல் ஹமீத் போல் நான் ஓர் சிறந்த ,பிரபல்யமான கலஞ்சனாக இல்லாவிட்டாலும் எனக்கு இறைவன் தந்த அந்த சிறிய திறமையை என் இன விடுதலைக்கு ஏதோ ஒரு வகையில் பயன் படுத்தி வருகிறேன். இந்த சூழ்நிலையில் ஓர் படைப்பாளி எப்படி இருக்கவேண்டும் என்பதையும் நான் உணர்ந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறேன்,இதே போல் ஒவ்வொரு கலைஞ்சனும் இருக்க வேண்டும் என்பதே எனது அவா .....இந்த எனது அவா தவறா ,சரியா என்பது அவரவர் சிந்தனைக்கு உட்பட்ட விடயம்.அது பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.ஆனால் திரு அப்துல் ஹமீத் ஒரு தமிழனா .முஸ்லிமா என்பதற்கப்பால் .தமிழ் கலை உலகிலேயே அவரது பணியும் அவரது வளர்ச்சியுமுள்ளது. அப்படிப்பட்டவர் இப்படி ஏன் நடந்து கொண்டார் என்பதை நான் கேட்டது தவறா...............

இந்தப்பதிவிலே அப்துல்ஹமீட் ஐ சுயநலவாதி , மறைமுகத் துரோகி , என்ற பாணியிலான விமர்சனங்கள் வந்திருதன . அவற்றை உங்களுக்கு குவாட் செய்து நான் பதிலிட்டமைக்கு மனம் வருந்துகின்றேன் . அதேவேளையில் அவரிடம் இருதரப்புகளும் அரசியல் சார்பாகப் போய் நின்ற பொழுது தன்னை யாருமே அரசியல் சாயம் பூசி ஒரு குறுகிய வட்டத்திற்குள் தான் ( கலைஞன் ) இருக்க விரும்பவில்லை என்று சொல்லி அதில் விடாப்பிடியாக நின்றவர் . இதை நான் சொல்லக்காரணம் எனக்கு ஓரளவு அவரைத் தெரியும் . அதனாலேயே கள உறவு ஈஸ் இன் பின்னூட்டத்திற்கு விமர்சனங்கள் இருந்தாலும் பாராட்டப்படவேண்டிய கலைஞர் எனக் குறிப்பிட்டிருந்தேன் . எல்லோரும் எங்களைப்போல் இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பதும் எமது தவறு தானே தமிழ்சூரியன் . மீண்டும் தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டு உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கூறுகின்றேன் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.