Jump to content

அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் பற்றிய விவரணம் -வீடியோ


Recommended Posts

இணைப்புக்கு நன்றி கோமகன்.

இவரது கணீர் குரலும், தமிழ் உச்சரிப்பும், பாடல்வரிகளை நினைவில் நிறுத்தி பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியை நடாத்திய திறமையும் ஆச்சரியப்படவைக்கும் விஷயம்.

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி கோமகன்.

இவரது கணீர் குரலும், தமிழ் உச்சரிப்பும், பாடல்வரிகளை நினைவில் நிறுத்தி பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியை நடாத்திய திறமையும் ஆச்சரியப்படவைக்கும் விஷயம்.

இவரில் விமர்சனங்கள் இருந்தாலும் , காலத்தால் அழிக்கமுடியாத அரும்பெரும் பொக்கிசமாக எம்மிடையே வாழ்கின்றார் . மிக்க நன்றிகள் ஈஸ் உங்கள் கருத்துக்களுக்கு .

Link to comment
Share on other sites

இவரில் விமர்சனங்கள் இருந்தாலும் , காலத்தால் அழிக்கமுடியாத அரும்பெரும் பொக்கிசமாக எம்மிடையே வாழ்கின்றார் . மிக்க நன்றிகள் ஈஸ் உங்கள் கருத்துக்களுக்கு .

யாரில் தான் விமர்சனங்கள் இல்லை? நல்லவற்றை எடுத்து கூடாததை விட்டு விடுவோமே!

Link to comment
Share on other sites

யாரில் தான் விமர்சனங்கள் இல்லை? நல்லவற்றை எடுத்து கூடாததை விட்டு விடுவோமே!

நானும் உங்கள் பக்கம் தான் ஈஸ் .

Link to comment
Share on other sites

இவர் தமிழரை திருமணம் செய்ததால் அரசினால் நாட்டை விட்டு வெளியேற வற்புறுத்தப்பட்டார் என்று கேள்விப்பட்டேன்.இக்கூற்று உண்மையா??

Link to comment
Share on other sites

இவர் தமிழரை திருமணம் செய்ததால் அரசினால் நாட்டை விட்டு வெளியேற வற்புறுத்தப்பட்டார் என்று கேள்விப்பட்டேன்.இக்கூற்று உண்மையா??

அப்துல் ஹமீட் ஓர் இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்தவர் . இவர் விசாலாட்சி என்ற பிராமணப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார் .. விசாலாட்சி ஹமீத் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் வேலைசெய்து கொண்டிருந்தார் . ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஏற்பட்ட தமிழ்சேவைப் பணிப்பாளர் நியமனத்தில் அருந்ததி சிறீ ரங்கனாதன் , வீ என் மதியழகன் தலமையில் ஏற்பட்ட உள் அரசியல் வேலைகளால் மனமுடைந்தவர் , நாட்டை விட்டே வெளியேறினார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரால் எந்த பிரயோசனமும் இல்லை ஈழ தமிழனுக்கு , எங்களின் நியாயமான போராட்டத்தை இவர் என்றுமே ஆதரித்ததாக நான் அறியவில்லை

இவரின் உழைப்புக்கு தமிழ் துணை போகின்றது ஆனால் இவர் தமிழனுக்கு உதவியதாக அறியவில்லை

மொத்தத்தில் இவர் ஒரு சுயநலவாதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரால் எந்த பிரயோசனமும் இல்லை ஈழ தமிழனுக்கு , எங்களின் நியாயமான போராட்டத்தை இவர் என்றுமே ஆதரித்ததாக நான் அறியவில்லை

இவரின் உழைப்புக்கு தமிழ் துணை போகின்றது ஆனால் இவர் தமிழனுக்கு உதவியதாக அறியவில்லை

மொத்தத்தில் இவர் ஒரு சுயநலவாதி

ஆனால் இவர் ரொம்பவும் இலாவகரமாக எமது பிரச்சினையை தவிர்த்து விடுவார்.

ஒரு வகையில் பார்த்தால் எமக்கு உபத்திரவம் கொடுப்பதில்லை. அதுவும் நல்லதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை டிசைன் சில்க்ஸ்.. சங்கு மார்கு கைலிகள் .. பவர் சோப்பு.. எல்லாம் இவரின்ட குரலில் விற்பனை ஆனவை.. கொழும்பு வானோலி வர்த்தக சேவை 1900களில்

Link to comment
Share on other sites

இவரால் எந்த பிரயோசனமும் இல்லை ஈழ தமிழனுக்கு , எங்களின் நியாயமான போராட்டத்தை இவர் என்றுமே ஆதரித்ததாக நான் அறியவில்லை

இவரின் உழைப்புக்கு தமிழ் துணை போகின்றது ஆனால் இவர் தமிழனுக்கு உதவியதாக அறியவில்லை

மொத்தத்தில் இவர் ஒரு சுயநலவாதி

அதிகாரமட்டத்தில் இருந்தவர்கள் எல்லோரும் சுயநலவாதிகள் என்றால் தமிழர்கள் எல்லோருமே சுயநலவாதிகளாகின்றனர் . அன்றைய காலகட்டத்தில் பெரும் பதவிகள் யாவுமே தமிழர்கள்தான் அலங்கரித்தார்கள் . ஒருவகையில் தமிழுக்கும் தேசியத்திற்கும் அதிகாரமட்டத்தில் இருந்த தமிழர்கள் உதவியுள்ளார்கள் . உதாரணமாக அப்போதய கொழும்பு மேயராக இருந்த கணேசலிங்கம் பலவழிகளில் தேசியத்திற்கு உதவியுள்ளார். இவ்வாறான உதவிகள் பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை . எதையும் பறைதட்டிதான் செய்யவேண்டும் என்ற அவசியமில்லையே தமிழரசு . உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் .

***********எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டுள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் தமிழ் உச்சரிப்பை இன்றும் அன்றும் கண்டு

வியந்தவன். ஆங்கில வாடை இல்லாமல்

தமிழைப் பேசும் ஒரு அறிவிப்பாளர் மட்டுமல்ல

மிகத் திறமைவாய்ந்த ஒரு கலைஞர்.

Link to comment
Share on other sites

ஆனால் இவர் ரொம்பவும் இலாவகரமாக எமது பிரச்சினையை தவிர்த்து விடுவார்.

ஒரு வகையில் பார்த்தால் எமக்கு உபத்திரவம் கொடுப்பதில்லை. அதுவும் நல்லதே.

ஆம் உண்மை ...............சிலவருடங்களிற்கு முன் மாவீரர் தின நிகழ்விற்கு முதல் கிழமை இவர் உட்பட சில தமிழ் நாட்டுக்கலஞ்சர்களையும் இங்கே ஓர் வர்த்தகர் இசை நிகழ்ச்சிக்காக அழைத்திருந்தார் ..................மாவீரர் தினம் அன்று அனைத்து தமிழ் நாட்டு கலைஞ்சர்களும் மாவீரர் நிகழ்விற்கு வந்திருந்தனர் இவரைத்தவிர ,,,,,,,,,,,,,,,,,,,

இவர் அங்கே ஒய்வேடுத்திக்கொண்டார் ......தமிழ்நாட்டு கலைஞ்சர்கள் அனைனரும் என்னையும் சந்தித்தனர் [நானும் ஓர் கலைஞ்சனாக அந்த புனித மேடையில் தோன்றியதனால்] எனது

கேள்வி

என்னவென்றால் தமிழ் மேல் பற்றுள்ளவர் தமிழ் பாண்டித்தியம் கொண்டவர் தமிழே உயிர் என்று வாழ்பவர் என்றெல்லாம்

அழைக்கப்படுபவர்

ஏன் இப்படி நடந்தார் என்பதே........????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கே எஸ் ராஜாவின் மரணத்தின் பின்னர் தான் இந்தியாவிற்கு போனவர் என யாரோ சொல்லிச்சினம் உண்மையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோமகன், ரதி,

கோ,

நான் அறிந்த வகையில் அப்புதுல் கமிதினது சேவைக்காலம் மற்றையவர்களுடன் ஒப்பிடும் போது குறைவு என்றுதான் நினைக்கிறன்..அவர் வெளியே பிரபல்யமாக இருந்தாலும் நிர்வாக நிலையில் ஒரு இளையவாராக இருந்தார் ஒன்று ஒருவர் சொன்ன ஞாபகம்.- என்னுடன் கதைத்தவர் சொன்னவர்- பகிடியாகவே அல்லது கால்புனர்வாகவோ தெரியவில்ல, அப்துல் கமிதுவும் - "மழையில் மலை பெய்கிறது" என்றுதானாம் ரேடியோ சிலோனுக்கு வந்தவர். :)

ரதி,

உண்மையில் KS ராஜா இற்கும் BH கமிதுக்கும் இடையில் தொழில் ரீதியான போட்டிதான் இருந்தது என்று சொல்லுவார்கள். அப்படி பார்த்தல், ஒருவர் இல்லாமல் போனபிறகு மற்றவர் நாட்டை விட்டு வெளியேறினார் என்பது பொருத்தமில்லாமல் உள்ளது.

Link to comment
Share on other sites

இவரால் எந்த பிரயோசனமும் இல்லை ஈழ தமிழனுக்கு , எங்களின் நியாயமான போராட்டத்தை இவர் என்றுமே ஆதரித்ததாக நான் அறியவில்லை

இவரின் உழைப்புக்கு தமிழ் துணை போகின்றது ஆனால் இவர் தமிழனுக்கு உதவியதாக அறியவில்லை

மொத்தத்தில் இவர் ஒரு சுயநலவாதி

நீங்களும் இலங்கையில் தரயிறங்கியதும் I am A Sri Lankan என்று தான் சொல்லிகொண்டு போவீர்களே தவிர நான் தமிழ் ஈழ தமிழன் என்றா சொல்லிகொண்டு போவீங்கள்? அங்கே வாழவேண்டும் என்றால் சிலதுகளை அடக்கி தான் வாசிக்கணும் கண்டியளோ? இனத்துவேசம் கொண்டு முஸ்லிம்களை அடித்துவிரட்டிவிட்டு பின் அவர்கள் எமக்கு உதவவில்லை என்று கேட்பது வேடிக்கையாக இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் இலங்கையில் தரயிறங்கியதும் I am A Sri Lankan என்று தான் சொல்லிகொண்டு போவீர்களே தவிர நான் தமிழ் ஈழ தமிழன் என்றா சொல்லிகொண்டு போவீங்கள்? அங்கே வாழவேண்டும் என்றால் சிலதுகளை அடக்கி தான் வாசிக்கணும் கண்டியளோ? இனத்துவேசம் கொண்டு முஸ்லிம்களை அடித்துவிரட்டிவிட்டு பின் அவர்கள் எமக்கு உதவவில்லை என்று கேட்பது வேடிக்கையாக இல்லையா?

விடிவெள்ளி,

நிச்சயமாக நான் I am Sri lankan என்று பெருமையாக சொல்லிக்கொண்டு போகமாட்டேன், அதே நேரம் ஈழ தமிழன் என்று மார்தட்டி கூறாட்டிலிம் மனதுக்குள் நினைத்துக்கொண்டு போவேன் எனக்கு அதுதான் பெருமையும் கூட Sri lankan என்று நினைக்க முடியவில்லை ஏனெனில் அவர்கள் செய்த கொடுமை அப்படி ...... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனத்துவேசம் கொண்டு முஸ்லிம்களை அடித்துவிரட்டிவிட்டு பின் அவர்கள் எமக்கு உதவவில்லை என்று கேட்பது வேடிக்கையாக இல்லையா?

ஆமாம், இல்லாதுபோனால் ஓடிவந்து உதவி விடுவார்கள் யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் முஸ்லிம்கள் என்ன உதவி தமிழருக்கு செய்திருக்கின்றார்கள் ????

இவர்களுக்கு புலிகள் மேல் கோபம் என்றால் இப்போது அவர்கள் இல்லை என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் கூறுகின்றது ஏன் என்னும் தமிழர்களின் பிரச்சனைக்கு இவர்கள் சேர்ந்து குரல் கொடுக்கவில்லை ?????

Link to comment
Share on other sites

புலிகளும் தமிழரும் ஒன்று தானே. எமக்கு மற்றவர் மேல் உள்ள கோபம் ஆறாதது போல அவர்களுக்கும் இருக்கலாம். அவர்கள் உதவத் தேவையில்லை. எம்மை நாமே காப்பாற்றவும், எம்மக்களுக்கு நாமே உதவவும் முன் வரவேண்டும்.

Link to comment
Share on other sites

ஆம் உண்மை ...............சிலவருடங்களிற்கு முன் மாவீரர் தின நிகழ்விற்கு முதல் கிழமை இவர் உட்பட சில தமிழ் நாட்டுக்கலஞ்சர்களையும் இங்கே ஓர் வர்த்தகர் இசை நிகழ்ச்சிக்காக அழைத்திருந்தார் ..................மாவீரர் தினம் அன்று அனைத்து தமிழ் நாட்டு கலைஞ்சர்களும் மாவீரர் நிகழ்விற்கு வந்திருந்தனர் இவரைத்தவிர ,,,,,,,,,,,,,,,,,,,

இவர் அங்கே ஒய்வேடுத்திக்கொண்டார் ......தமிழ்நாட்டு கலைஞ்சர்கள் அனைனரும் என்னையும் சந்தித்தனர் [நானும் ஓர் கலைஞ்சனாக அந்த புனித மேடையில் தோன்றியதனால்] எனது

கேள்வி

என்னவென்றால் தமிழ் மேல் பற்றுள்ளவர் தமிழ் பாண்டித்தியம் கொண்டவர் தமிழே உயிர் என்று வாழ்பவர் என்றெல்லாம்

அழைக்கப்படுபவர்

ஏன் இப்படி நடந்தார் என்பதே........????

உங்கள் கேள்வி சிறுபிள்ளைத்தனமாக இருக்கின்றது தமிழ்சூரியன் . மாவீரர்தினத்தில் கலந்துகொண்டுதான் அப்துல்ஹமீட் தமிழ்பற்றாளர் என்று நிரூபிக்கவேண்டுமா ? பிழை சொல்வதானால் எப்படியும் சொல்லலாம் . ஒர் இஸ்லாமியன் என்பதற்காகவும் , அரசியலை தன்அருகே வைத்திருக்காத ஒரு கலைஞனை , சுயநலவாதி என்றும் , துரோகி என்றும் சித்தரிக்க முயலுவது எமது குறுகியமனப்பான்மையைத் தான் காட்டுகின்றது . இதைத்தான் மணிவாசகனும் தனது மொழியில் சொல்லுகின்றார் .

Link to comment
Share on other sites

ஆம் உண்மை ...............சிலவருடங்களிற்கு முன் மாவீரர் தின நிகழ்விற்கு முதல் கிழமை இவர் உட்பட சில தமிழ் நாட்டுக்கலஞ்சர்களையும் இங்கே ஓர் வர்த்தகர் இசை நிகழ்ச்சிக்காக அழைத்திருந்தார் ..................மாவீரர் தினம் அன்று அனைத்து தமிழ் நாட்டு கலைஞ்சர்களும் மாவீரர் நிகழ்விற்கு வந்திருந்தனர் இவரைத்தவிர ,,,,,,,,,,,,,,,,,,,

இவர் அங்கே ஒய்வேடுத்திக்கொண்டார் ......தமிழ்நாட்டு கலைஞ்சர்கள் அனைனரும் என்னையும் சந்தித்தனர் [நானும் ஓர் கலைஞ்சனாக அந்த புனித மேடையில் தோன்றியதனால்] எனது

கேள்வி

என்னவென்றால் தமிழ் மேல் பற்றுள்ளவர் தமிழ் பாண்டித்தியம் கொண்டவர் தமிழே உயிர் என்று வாழ்பவர் என்றெல்லாம்

அழைக்கப்படுபவர்

ஏன் இப்படி நடந்தார் என்பதே........????

இப்படித்தான் நித்தி கனகரத்தினமும் வேறொரு திரியில் துரோகி ஆக்கப்பட்டுள்ளார். கலைஞன் என்றால் கட்டாயம் அரசியல் கலப்பு இருக்க வேண்டுமா என்ன??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இவர் ரொம்பவும் இலாவகரமாக எமது பிரச்சினையை தவிர்த்து விடுவார்.

ஒரு வகையில் பார்த்தால் எமக்கு உபத்திரவம் கொடுப்பதில்லை. அதுவும் நல்லதே.

இப்படித்தான் நித்தி கனகரத்தினமும் வேறொரு திரியில் துரோகி ஆக்கப்பட்டுள்ளார். கலைஞன் என்றால் கட்டாயம் அரசியல் கலப்பு இருக்க வேண்டுமா என்ன??

இதைத்தான் முதலிலேயே நான் இப்படிக்குறிப்பிட்டேன் நுணாவிலான்

அதேநேரம் அதையும் மீறி எமக்காக உழைத்த K.S. RAJAH அவர்கள் எவ்வாறு இறந்தார் என்பதையும் நினைவுகூறுகின்றேன்.

Link to comment
Share on other sites

உங்கள் கேள்வி சிறுபிள்ளைத்தனமாக இருக்கின்றது தமிழ்சூரியன் . மாவீரர்தினத்தில் கலந்துகொண்டுதான் அப்துல்ஹமீட் தமிழ்பற்றாளர் என்று நிரூபிக்கவேண்டுமா ? பிழை சொல்வதானால் எப்படியும் சொல்லலாம் . ஒர் இஸ்லாமியன் என்பதற்காகவும் , அரசியலை தன்அருகே வைத்திருக்காத ஒரு கலைஞனை , சுயநலவாதி என்றும் , துரோகி என்றும் சித்தரிக்க முயலுவது எமது குறுகியமனப்பான்மையைத் தான் காட்டுகின்றது . இதைத்தான் மணிவாசகனும் தனது மொழியில் சொல்லுகின்றார்

.

வணக்கம் கோமகன் அண்ணா நான் கலைஞ்சர் திரு அப்துல் ஹமிட் அவர்களை துரோகி என்றோ சுயநலவாதி என்றோ இங்கு குறிப்பிடவில்லை .எனது ஆதங்கம் என்னவென்றால் தமிழீழ தமிழனாக பிறந்து விட்ட அல்லது தமிழனாக பிறந்துவிட்ட அனைவருக்கும் இந்தப்போராட்டத்தில் ஒரு பங்கு இருக்கவேண்டும் ,அவரவர் திறமைக்கு ,தகுதிக்கு ஏற்றவாறு அந்த பங்கு அமையவேண்டும்.அந்தவகையில் திரு அப்துல் ஹமீத் போல் நான் ஓர் சிறந்த ,பிரபல்யமான கலஞ்சனாக இல்லாவிட்டாலும் எனக்கு இறைவன் தந்த அந்த சிறிய திறமையை என் இன விடுதலைக்கு ஏதோ ஒரு வகையில் பயன் படுத்தி வருகிறேன். இந்த சூழ்நிலையில் ஓர் படைப்பாளி எப்படி இருக்கவேண்டும் என்பதையும் நான் உணர்ந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறேன்,இதே போல் ஒவ்வொரு கலைஞ்சனும் இருக்க வேண்டும் என்பதே எனது அவா .....இந்த எனது அவா தவறா ,சரியா என்பது அவரவர் சிந்தனைக்கு உட்பட்ட விடயம்.அது பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.ஆனால் திரு அப்துல் ஹமீத் ஒரு தமிழனா .முஸ்லிமா என்பதற்கப்பால் .தமிழ் கலை உலகிலேயே அவரது பணியும் அவரது வளர்ச்சியுமுள்ளது. அப்படிப்பட்டவர் இப்படி ஏன் நடந்து கொண்டார் என்பதை நான் கேட்டது தவறா...............

Link to comment
Share on other sites

இப்படித்தான் நித்தி கனகரத்தினமும் வேறொரு திரியில் துரோகி ஆக்கப்பட்டுள்ளார். கலைஞன் என்றால் கட்டாயம் அரசியல் கலப்பு இருக்க வேண்டுமா என்ன??

febbaby.gif

வணக்கம் நுணாவிலான் அண்ணா [தம்பி]

தங்கள் சுய நலன்களுக்கு.அல்லது விருப்பு வெறுப்பு இவைகளுக்காகவோ இன்னொருவரை துரோகியாக்கும் படலம் நீங்கள் கூறியது போல் இப்போ நிறைய நடந்து கொண்டிருக்கிறது.உண்மை . நான் விடுதலைப்புலிகளுடன் ,அல்லது அவர்களின் செயற்பாடுகளுடன் பின்னிப்பினைந்தவன் என்று பொய் கூறுபவன் அல்ல .ஆனால் தமீழத்தில் வாழ்ந்த காலத்திலும் சரி,புலம்பெயர் மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கும் இக்காலத்திலும் சரி அவர்கள் காட்டிய வழியில் வாழ முயற்சிப்பவன்.அந்த வகையில் எழுந்தமானத்திற்கு யாரையும் துரோகி என்று இதுவரை நான் கருதேழுதியதுமில்லை [ சம்பந்தர்.................உட்பட] ஆனால் இந்த திரியில் திரு அப்துல் ஹமஈட்டிற்கு ஒரு கவ்ரவம் கொடுக்கப்படும் போது அந்த கவுரவம் தமிழர்களால் கொடுக்கப்படும் போது கொஞ்சம் சிந்தித்தே நான் அப்படி ஒரு கேள்வி கேட்டேன்.அவரது திறமயை நான் எப்போதும் மதிப்பவன் .அப்படி நான் மதிக்காவிட்டால் நான் தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதன் [கலைஞ்சன் ] என்ற வரையறைக்கு அப்பாற்பட்டவன்

Link to comment
Share on other sites

.

வணக்கம் கோமகன் அண்ணா நான் கலைஞ்சர் திரு அப்துல் ஹமிட் அவர்களை துரோகி என்றோ சுயநலவாதி என்றோ இங்கு குறிப்பிடவில்லை .எனது ஆதங்கம் என்னவென்றால் தமிழீழ தமிழனாக பிறந்து விட்ட அல்லது தமிழனாக பிறந்துவிட்ட அனைவருக்கும் இந்தப்போராட்டத்தில் ஒரு பங்கு இருக்கவேண்டும் ,அவரவர் திறமைக்கு ,தகுதிக்கு ஏற்றவாறு அந்த பங்கு அமையவேண்டும்.அந்தவகையில் திரு அப்துல் ஹமீத் போல் நான் ஓர் சிறந்த ,பிரபல்யமான கலஞ்சனாக இல்லாவிட்டாலும் எனக்கு இறைவன் தந்த அந்த சிறிய திறமையை என் இன விடுதலைக்கு ஏதோ ஒரு வகையில் பயன் படுத்தி வருகிறேன். இந்த சூழ்நிலையில் ஓர் படைப்பாளி எப்படி இருக்கவேண்டும் என்பதையும் நான் உணர்ந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறேன்,இதே போல் ஒவ்வொரு கலைஞ்சனும் இருக்க வேண்டும் என்பதே எனது அவா .....இந்த எனது அவா தவறா ,சரியா என்பது அவரவர் சிந்தனைக்கு உட்பட்ட விடயம்.அது பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.ஆனால் திரு அப்துல் ஹமீத் ஒரு தமிழனா .முஸ்லிமா என்பதற்கப்பால் .தமிழ் கலை உலகிலேயே அவரது பணியும் அவரது வளர்ச்சியுமுள்ளது. அப்படிப்பட்டவர் இப்படி ஏன் நடந்து கொண்டார் என்பதை நான் கேட்டது தவறா...............

இந்தப்பதிவிலே அப்துல்ஹமீட் ஐ சுயநலவாதி , மறைமுகத் துரோகி , என்ற பாணியிலான விமர்சனங்கள் வந்திருதன . அவற்றை உங்களுக்கு குவாட் செய்து நான் பதிலிட்டமைக்கு மனம் வருந்துகின்றேன் . அதேவேளையில் அவரிடம் இருதரப்புகளும் அரசியல் சார்பாகப் போய் நின்ற பொழுது தன்னை யாருமே அரசியல் சாயம் பூசி ஒரு குறுகிய வட்டத்திற்குள் தான் ( கலைஞன் ) இருக்க விரும்பவில்லை என்று சொல்லி அதில் விடாப்பிடியாக நின்றவர் . இதை நான் சொல்லக்காரணம் எனக்கு ஓரளவு அவரைத் தெரியும் . அதனாலேயே கள உறவு ஈஸ் இன் பின்னூட்டத்திற்கு விமர்சனங்கள் இருந்தாலும் பாராட்டப்படவேண்டிய கலைஞர் எனக் குறிப்பிட்டிருந்தேன் . எல்லோரும் எங்களைப்போல் இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பதும் எமது தவறு தானே தமிழ்சூரியன் . மீண்டும் தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டு உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கூறுகின்றேன் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.