Jump to content

கணவரிடம் கடந்த காதல் வாழ்க்கையை சொல்லலாமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கணவரிடம் கடந்த காதல் வாழ்க்கையை சொல்லலாமா?

24-couple6-300.jpg

பெண்கள் அனைவரும் தாங்கள் காதலித்தவரையே திருமணம் செய்து கொள்வதில்லை. ஒரு சில குடும்ப சூழ்நிலைகளால் காதலித்தவரை மணக்க முடியாமல் போகிறது. அப்படி இருக்கும் போது, அவர்கள் வீட்டில் பார்த்து மணம் முடிக்கும் கணவருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

ஆனால் கல்யாணத்திற்குப் பின்னர் தங்களது கணவரிடம் தங்களின் கடந்த, கசந்த காலத்தை கூறலாமா, வேண்டாமா என தங்களுக்குள் பெரிய அளவில் மனப்போராட்டமே நடத்துவார்கள்.

சொன்னால் பிரச்சனை வருமா? நாம் சொல்லாமல் வேறு யாராவது சொல்லி தெரிந்துவிட்டால், வாழ்க்கை கேள்வி குறியாகிவிடுமே! என்று ஒரு தெளிவான முடிவு தெரியாமல் குற்ற உணர்வுடன் வாழ்க்கையை தொடர வேண்டியிருக்கும். அவர்களுக்கு சரியான ஆலோசனை கூற அருகில் யாரும் இல்லாததால், குற்ற உணர்வோடு மனப்போராட்டத்தோடு வாழ்வார்கள்.

ஆண்கள் தங்கள் கடந்த காதல் வாழ்க்கையை ஈஸியாக சொல்லிவிடுவார்கள். அதைப் பெண்கள் பெரிய விஷயமாக கொண்டால் வாழ்க்கை தான் கேள்விக் குறியாகிவிடும். அதையே பெண்கள் கூறினால், அதனை ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆண்களுக்கு அத்தகைய மனப்பக்குவம் இல்லை. ஏனென்றால் அதற்கு நமது சமூகம் தான் காரணம்.

ஒரு ஆண் எத்தனை திருமணம் செய்தாலும் அவர்களின் மதிப்பு குறைவதில்லை. ஆனால் பெண்கள் அப்படியில்லை. காதல் செய்துவிட்டால் அவளை சமூகம் தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கும்.

ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி, தங்களது கடந்த காலத்தை ஒளிவுமறைவின்றி பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதே ஆரோக்கியமானது. இதை இரண்டு பேருமே பரந்த மனதுடன் ஏற்றுக் கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டியது அவசியம். அதுதான் இருவருக்கும் எதிரில் காத்துள்ள நீண்ட நெடிய வாழ்க்கைப் பயணத்தை இனிமையாக்க உதவும்.

மேலும் தங்களது திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கை குறித்து வேறு யாராவது 'நலம் விரும்பிகள்' மாறி மாறிப் போட்டுக் கொடுத்து வாழ்க்கையைக் கெடுக்க வாய்ப்பில்லாமலும் தடுக்க முடியும். கணவனானாலும் சரி, மனைவியானாலும் சரி தங்களது கடந்த காலத்தை பகிர்ந்து கொள்ளும் போது அதை பக்குவமாக அதே சமயம் நேர்மையாக தெரிவித்துக் கொள்வது நல்லது.

கணவனும் சரி, மனைவியும் சரி, கடந்த காலத்தை பரந்த மனதுடன் உற்று நோக்கி அவர்களுடைய நேர்மையான மனதை அஸ்திவாரமாக கொண்டு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். ஏனென்றால் கடந்த காலத்தை விட நிகழ்காலம் முக்கியமானது. அதை விட எதிர்காலம் ரொம்ப முக்கியமானது.

http://tamil.boldsky.com/relationship/2012/05/should-wife-tell-her-husband-about-her-romantic-past-001201.html

டிஸ்கி:

திருமணத்திற்கு முன் ஒழுக்கமாக இருக்கிற ஆண்களுக்கு அவன் தண்ணி அடிக்கிறான் இல்லை அது வேற... நான் சொல்லுவது கற்பு விசயத்தில் ஒழுங்காக இருக்கிறானா அதற்கேற்றாற்போல கற்பான பொண்ணு இருக்க வேணும்.. கட்டா காலி மாதிரி திரிவதற்கு எல்லாம் இங்க இனிசியல் போட முடியாது.. கூடாது.... அ

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply

பெண்ணா ஆணானோ திருமணத்தின் முன் கடந்த காலத்தைப் பற்றிக் கூறுவது மிக நல்லது. பாதுகாப்பானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவவுக்கு தாலிகட்டமுதல்....என்ரை வண்டவாளம் தேடாவளையங்கள் எல்லாத்தையும் ஒரேயடியாய் வெளியிலை எடுத்துவிட்டன்.....அவவும் தன்ரை பங்குக்கு அமுக்கிவைச்சதை சொன்னா.......பிரச்சனை முடிஞ்சுது.நானும் ஐ லவ் யூ....அவவும் ஐ லவ் யூ :wub:

ஒரு விசயத்தை பொத்திபொத்தி வைச்சால் வாழ்க்கை முழுக்க நிம்மதியில்லை.இது என்ரை சொந்த அனுபவம். :icon_idea:

நல்லதொரு சமூக சிந்தனையுள்ள தலைப்பை இணைத்த புரட்சியருக்கு நன்றிகள். :)

Link to comment
Share on other sites

நானும் சொல்லலாம் என்றுதான் நினைத்தேன்.. :unsure::blink:

ஆனால் சொல்லுறதுக்குத்தான் ஒண்டும் இருக்கேல்லையே..

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் சொல்லலாம் என்றுதான் நினைத்தேன்.. :unsure::blink:

ஆனால் சொல்லுறதுக்குத்தான் ஒண்டும் இருக்கேல்லையே..

:lol:

நீங்கள் Spoiler க்கை quote பண்ணினதால நாங்கள் ஒண்டும் இருக்கேல்லையெண்டு நம்ப மாட்டோம். :lol:

Link to comment
Share on other sites

நீங்கள் Spoiler க்கை quote பண்ணினதால நாங்கள் ஒண்டும் இருக்கேல்லையெண்டு நம்ப மாட்டோம். :lol:

குலைக்கிற நாய் கடிக்காதப்பா.. :D நம்புங்கோ.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் சொல்லலாம் என்றுதான் நினைத்தேன்.. :unsure::blink:

எதையெண்டு சொல்லுறது :( ? சொல்ல வெளிக்கிட்டால் உலகப்படத்தை வைச்செல்லே சொல்லோணும் :lol::D

Link to comment
Share on other sites

எதையெண்டு சொல்லுறது :( ? சொல்ல வெளிக்கிட்டால் உலகப்படத்தை வைச்செல்லே சொல்லோணும் :lol::D

:lol: :lol: :lol:

அது தான் நீங்க குலைக்கிறதே இல்லையே... :lol: :lol: :D

இளநீர் குடிச்சவங்கள் இருக்க கோம்பை நக்கின என்னை வதைக்கிறது நல்லாயில்லை.. சொல்லிப்போட்டன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதையெண்டு சொல்லுறது :( ? சொல்ல வெளிக்கிட்டால் உலகப்படத்தை வைச்செல்லே சொல்லோணும் :lol::D

:D:lol:

Link to comment
Share on other sites

:lol: :lol: :lol:

இளநீர் குடிச்சவங்கள் இருக்க கோம்பை நக்கின என்னை வதைக்கிறது நல்லாயில்லை.. சொல்லிப்போட்டன். :lol:

என்ன இப்பிடிச் சொல்லிப் போட்டீங்கள்? :D காலில சின்ன விரல் இருந்தாலும் அதிலும் நகம் வளரத் தானே செய்யுது? ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய கதைகளைச் சொல்லுவதால், மூன்றாம் தரப்புப் பாதிக்கப் படும் என்னும் நிலை இருக்குமெனில், பேசாமல் விடுவதே நல்லது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எவ்வளத்தை எழுதலாம்....ம்ம்ம்

எல்லாருமே கதையளோடை தான் திரியிறியள் போல இருக்கு......நான் றொம்ப அப்பாவியா இருந்திட்டேனோ...... :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில எங்காவது ஆண்கள் காப்பகம்

இருக்கோ எண்டு தேடிப்பாத்தன்.

கிடைக்கவில்லை அதனால் நான் சொல்லேல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருமே கதையளோடை தான் திரியிறியள் போல இருக்கு......நான் றொம்ப அப்பாவியா இருந்திட்டேனோ...... :rolleyes: :rolleyes:

அதே! சபேஸ்!!! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவரிடம் கடந்த காதல் வாழ்க்கையை சொல்லலாமா?

24-couple6-300.jpg

கணவரிடம், கடந்த கால வாழ்க்கையை.... கட்டாயம் சொல்ல வேண்டும்.

மனைவியிடம், கடந்த கால வாழ்க்கையை.... சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது மனைவிக்கு என் கடந்த காலம் முழுவதும் தெரியும்

அதனால் எவரும் எதைச்சொன்னாலும் ஆமா எனக்கு அது தெரியும் என்பாள்.

(நான் மனிதனாக இருந்ததுவரை தான் சொல்லியுள்ளேன். என்னை மீறி ஒரு மிருகம் புகுந்து விளையாடியதற்கு நான் பொறுப்பல்ல. அவற்றை சொல்லவே இல்லை.) :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(நான் மனிதனாக இருந்ததுவரை தான் சொல்லியுள்ளேன். என்னை மீறி ஒரு மிருகம் புகுந்து விளையாடியதற்கு நான் பொறுப்பல்ல. அவற்றை சொல்லவே இல்லை.) :D

விசுகு, உங்களை ஆரும் பாலியல் வல்லுறவு செய்து விட்டார்களா :o ?

அதை, எங்களுக்கு சொல்லலாம் தானே.... :D

Link to comment
Share on other sites

விசுகு, உங்களை ஆரும் பாலியல் வல்லுறவு செய்து விட்டார்களா :o ?

அதை, எங்களுக்கு சொல்லலாம் தானே.... :D

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, உங்களை ஆரும் பாலியல் வல்லுறவு செய்து விட்டார்களா :o ?

அதை, எங்களுக்கு சொல்லலாம் தானே.... :D

இதற்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா?

நம்மையெல்லாம் வல்லுறவு செய்யவே முடியாதப்பா.

(நாம தான் எப்பவும் எதற்கும் ரெடியாச்சே. பின்னர் எதற்கு பலாக்காரம்??? :lol::D :D )

குறிப்பு : என்னை மீறி எனக்குள் புகுந்த ஒரு மிருகம் (காமம்) விளையாடியதற்கு நான் பொறுப்பல்ல. அவற்றை சொல்லவே இல்லை.) :D

என்று வரணும்.

Link to comment
Share on other sites

பிரச்சனைகளை சொல்வது நல்லது. ஆனால் எல்லா கணவரும் கேட்டுவிட்டு நல்லபடி நடப்பார்கள் என்று இல்லை. :unsure:

ஆரம்பத்தில் நல்லபடி நடக்கும் சிலர் பின்னர் சண்டை என்று வரும்போது தாம் எப்படி இருந்தார்களோ இல்லையோ மனைவியை குத்திக்காட்டி கதைப்பார்கள், அல்லது அடிப்பார்கள் அல்லது மற்றவர்கள் முன் கேவலப்படுத்துவார்கள். :wub:

இவை எல்லாம் பின்னொரு நாளில் நடக்கலாம் என்பதையும் அப்பெண் எதிர்பார்க்க வேண்டும். அவற்றை தாங்கும் சக்தியையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். :rolleyes:

ஆனால் எடுத்ததுக்கும் சந்தேகப்படும் ஆண்களை திருமணம் செய்ய முன் இனங்கண்டால் அவர்களை தவிர்த்து ஓரளவு பொறுமைசாலியை திருமணம் செய்வது நல்லது. :icon_mrgreen:

அதேநேரம் தன காதலை சொல்வது குடும்பத்தினரை பெரிதளவில் பாதிக்குமெனின் சொல்லாமல் தவிர்க்கலாம். பெண்கள் முன் அனைத்து ஆண்களும் நல்லவர்களாகவே தெரிவார்கள். :wub: எனவே யார் நல்லவர்கள் என இனங்காண்பது கடினம். அதனையும் மீறி ஒரு அப்பாவி என இனங்கண்டால் அவரிடம் காதலை சொல்லாமல் தவிர்ப்பதை விட அவரையே திருமணம் செய்யாது தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் அவர் யாரையும் காதலிக்காத பெண்ணை எதிர்பார்த்திருப்பார். அவர் எதிர்பார்ப்பையும் வீணாக்க கூடாது. ஆனால் அப்படியானவரை திருமணம் செய்து விட்டீர்கள் என்றால் சொல்லாமல் இருப்பது நல்லது. சொல்லி அவர் மனம் வேதனைப்படுவதை விட பின்னொரு நாளில் தெரிந்து கொண்டு வேதனைப்படலாம். அதற்குள் உங்களுக்குள் புரிந்துணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள். :rolleyes:

Link to comment
Share on other sites

விசுகு, உங்களை ஆரும் பாலியல் வல்லுறவு செய்து விட்டார்களா :o ?

அதை, எங்களுக்கு சொல்லலாம் தானே.... :D

:lol: :lol:

இதற்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா?

நம்மையெல்லாம் வல்லுறவு செய்யவே முடியாதப்பா.

(நாம தான் எப்பவும் எதற்கும் ரெடியாச்சே. பின்னர் எதற்கு பலாக்காரம்??? :lol::D :D )

குறிப்பு : என்னை மீறி எனக்குள் புகுந்த ஒரு மிருகம் (காமம்) விளையாடியதற்கு நான் பொறுப்பல்ல. அவற்றை சொல்லவே இல்லை.) :D

என்று வரணும்.

விசுகு அண்ணா, அப்ப நீங்க யாரையோ பலகாரம் ச்சீ... பலாத்காரம் பண்ணி இருக்கிறீங்கள்?? :o:lol:

Link to comment
Share on other sites

எதையெண்டு சொல்லுறது :( ? சொல்ல வெளிக்கிட்டால் உலகப்படத்தை வைச்செல்லே சொல்லோணும் :lol::D

:lol::D

விசுகு, உங்களை ஆரும் பாலியல் வல்லுறவு செய்து விட்டார்களா :o ?

அதை, எங்களுக்கு சொல்லலாம் தானே.... :D

:D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: :lol:

விசுகு அண்ணா, அப்ப நீங்க யாரையோ பலகாரம் ச்சீ... பலாத்காரம் பண்ணி இருக்கிறீங்கள்?? :o:lol:

இல்லை ராசா

கிடைக்காத பொருளுக்கும்

மற்றவன் பொருளுக்கும் எப்பொழுதும் ஆசைப்பட்டதில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.