-
Tell a friend
-
Topics
-
0
By உடையார்
தொடங்கப்பட்டது
-
Posts
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 08, தை 2015 மட்டக்களப்பில் தேர்தல் கண்காணிப்பு உத்தியோகத்தர்களை மிரட்டிய பிள்ளையான் மற்றும் கருணா கொலைக்குழுக்கள் மகிந்த அரசாங்கத்தினால் முன்னர் பதவியில் அமர்த்தப்பட்ட கிழக்கு மாகாண முதலமைச்சரும், இன்றைய மகிந்தவின் கிழக்கு மாகாண ஆலோசகரும், துணைராணுவக் கொலைக்குழுவொன்றினை நடத்துபவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் ஆயுததாரி பொது எதிரணியினரால் மட்டக்களப்பில் இடம்பெறும் தேர்தல்களைக் கண்காணிக்கவென நியமிக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு உத்தியோகத்தர்களை மிரட்டிவருவருவதாக முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சித்தாண்டிப் பகுதியில் தேர்தல் வாக்களிப்பு நிலையங்க்களில் கண்காணிப்பாளர்களாக நிறுத்தப்பட்ட பலர் பிள்ளையான் கொலைக்குழுவினரால கொலைப்பயமுருத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று தெரியவருகிறது. இதேவேளை அம்பாறை மாவட்டம், திருக்கோயில் பகுதியில் இயங்கிவரும் இன்னொரு கொலைக்குழுவான கருணா குழுவின் பிரதான ஆயுததாரி, "தேஷமான்ய" இனியபாரதி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதேச செயலகத்தின் உறுப்பினர் ப. விஜயராஜா என்பவரைக் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்தியிருக்கிறார். காயப்பட்ட உறுப்பினர் திருக்கோயில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. சித்தாண்டிப் பகுதியில் குறைந்தது 3 வாக்குச் சாவடிகளை சுற்றி பிள்ளையான் கொலைக்குழு ஆயுததாரிகள் வலம்வருவது அவதானிக்கப்பட்டிருப்பதுடன், அப்பகுதியில் பணியாற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தொடர்ச்சியாக இக்குழுவினரால மிரட்டப்பட்டுவருகின்றனர் என்றும் தெரியவருகிறது. இப்பகுதியில் தேர்தல் கண்காணிப்பாளராகச் செயற்பட்டுவரும் தவராசா ஜெயசிறியின் வீட்டிற்குச் சென்ற பிள்ளையான் கொலைக்குழு அவரது தங்கையை மிரட்டி, "உனது சகோதரன் தொடர்ந்தும் தேதல் கண்காணிப்பில் ஈடுபட்டால், பாரிய விளைவுகளைச் சந்திப்பீர்கள், உனது சமுர்தி வேலை இல்லாமல்ப்போவதோடு வேறு பல கடுமையான விளைவுகளும் ஏற்படும் " என்று மிரட்டிவிட்டுச் சென்றதாகத் தெரியவருகிறது. இதுவரையில் பிள்ளையான் கொலைக்குழுவினரால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 44 தேர்தல் வன்முறைகள் அரங்கேற்றப்படுள்ளதாக தேர்தல் கண்காணிப்பகம் முறையிட்டிருக்கிறது.
-
நம்ம லெவல் வேற லெவல்... இந்த பாக்கியம் ஒருத்தருக்கும் வராராது.
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 26, மார்கழி 2014 மகிந்தவுக்கான ஆதரவுப் பிரச்சாரக் கூட்டத்தில் கேள்விகேட்ட இளைஞனைத் தாக்கிய பிள்ளையான். களுதாவளையில் இடம்பெற்ற மகிந்தவுக்கான ஆதரவுப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய கிழக்கு மாகாண முன்னாள் முதலைமைச்சரும், துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை கேள்விக்கேட்டதற்காக இளைஞர் ஒருவர் அவ்விடத்திலேயே பிள்ளையானினாலும், அவரது ஆயுததாரிகளாலும் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். "தமிழினத்தை அழித்த இனக்கொலையாளி மகிந்தவைப்பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும், அதில் உங்களின் பங்குபற்றியும் கூறுங்கள்" என்று களுதாவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட 23 வயது இளைஞர், மகிந்தவைப் போற்றித் துதிபாடிக்கொண்டிருந்த பிள்ளையானை நோக்கிக் கேட்டதற்காவே அவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார் என்று தெரியவருகிறது. தாக்கப்பட்ட இளைஞரான அந்தோணிப்பிள்ளை அற்புதராசா கடுமையான காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவினுள் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசகராகச் செயற்பட்டுவரும் பிள்ளையான் மகிந்தவுக்குச் சார்பான பிரச்சாரக் கூட்டங்களை தனது ஆயுதக் குழுவினதும் பொலீஸாரினதும் பிசன்னத்தோடு நடத்திவருகிறார். ஆவ்வாறானதொரு பிரச்சாரக் கூட்டத்திலேயே மகிந்தவிற்கு ஆதரவாகப் பேசிக்கொண்டிருந்த பிள்ளையானை நோக்கி அவரது படுகொலைகள்கள், கடத்தல்கள் தொடர்பாகக் கெள்வியொன்றினை அந்தோணிப்பிள்ளை அற்புதராசா என்னும் இளைஞர் பலர் முன்னிலையில் கேட்டிருக்கிறார். அவ்விளைஞன் கேள்விகேட்டு அமருமுன்னமே, தனது சகாவான பிரசாந்தனை பார்த்து, "அவனைப் பிடியுங்கள்" என்று கூறிய பிள்ளையானும், அவரது சகாக்களும் அந்த இளைஞரை மேடையின் அருகில் வைத்துத்க் கடுமையாக தாக்கியிருக்கிறர்கள். மக்கள் திகைத்துப்போய் பார்த்திருக்க, பிள்ளையானுக்குக் காவலாக நின்ற பொலீஸார் வேடிக்கை பார்க்க அந்த இளைஞன் துணைராணுவக் கொலைக்குழுவினரால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். இது இவ்வாறிருக்க, மகிந்த கிழக்கு மாகாண ஆலோசகரும், துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான பிள்ளையான் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவு அலுவலகம் ஒன்றிற்குத் தீவைத்திருக்கிறார். ஏறாவூர் பொலீஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின்படி, சந்திவெளியில் அமைந்திருந்த மைத்திரிபால சிறிசேனவின் ஆதாரவு அலுவலகத்திற்கு உந்துருளிகளில் வந்த பிள்ளையான் கொலைக்குழுவினர் அவ்வலுவலகத்தின்மீது பெற்றோல்க் குண்டுகளை எறிந்து தீமூட்டியதாக அயலவர்கள் தெரிவித்திருக்கின்றனர். தீவைக்குமுன்னர், அலுவலகத்தினுள் நுழைந்த பிள்ளையான் கொலைக்குழுவினர் உள்ளிருந்த தளபாடங்களை அடித்து நொறுக்கியிருக்கின்றனர். மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் பெய்த கடும் மழையினாலும், தொடர்ச்சியான வெள்ளப்பெருக்கினாலும் அல்லற்பட்டு வரும் மக்களுக்கான நிவாரணங்களைத் தடுத்து நிறுத்தியிருக்கும் மகிந்தவின் ஆலோசகர் பிள்ளையான், மகிந்தவுக்கு வாக்களித்தால் ஒழிய நிவாரணங்களை தாம் வழங்கப்போவதில்லையென்று பகிரங்கமாக மக்களுக்குத் தெரிவித்துவருகிறார் என்று பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் முறையிட்டுள்ளனர். 2010 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கடுமையான வெள்ளப்பெருக்கினைச் சந்தித்திருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப் பிரதேசத்தின் சுமார் 150,000 மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதோடு, 60,000 ஏக்கர்கள் விவசாய நிலமும் முற்றாக அழிக்கப்பட்டிருக்கிறதென்பதும் குறிப்பிடத் தக்கது. புலிகளுக்கும், தமிழ்த் தேசியத்திற்கும் ஆதரவான நிலைப்பாடுடைய இம்மக்களின் அவலங்களில் அரசியல் செய்யும் துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவனான பிள்ளையான் மக்களின் அவலங்களை தனது எஜமானர்களின் வெற்றிக்குத் தூண்டிலாகப் பாவிப்பதாக இம்மக்கள் விசனப்படுகிறார்கள்.
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.