Jump to content

திருமணத்தில் நடனமாடிய பெண்களுக்கு மரணதண்டனை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

pak-290512-150.jpg

பாகிஸ்தானில் திருமணத்தின் போது நடனமாடிய, நான்கு பெண்கள் உட்பட ஆறு பேருக்கு, கிராம பஞ்சாயத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கைபர் - பக்துன்க்வா மாகாணத்தில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்கு அரசை விட கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்குத் தான் செல்வாக்கு அதிகம்.

இங்குள்ள கோகிஸ்தான் மாவட்டத்தில் பண்டோ பைதார் கிராமத்தில், இரண்டு மாதங்களுக்கு முன் திருமண நிகழ்ச்சி நடந்தது. கிராமிய பாடல்கள் இசைக்க, திருமணத்துக்கு வந்த சில பெண்களும், ஆண்களும் நடனமாடினர். இவர்கள் நடனமாடிய காட்சிகள் எல்லாம் வீடியோவில் பதிவாகியிருந்தன.

இந்த திருமண வீடியோவை, சீர்தய் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் சமீபத்தில் பார்த்தனர். தங்கள் கிராம பெண்கள் பக்கத்து கிராமத்தில் நடந்த விழாவில் நடனமாடிய காட்சிகளை கண்டு கொதித்தனர். நமது வழக்கப்படி ஆணும் பெண்ணும் சேர்ந்து நடனமாடுவது பெரிய குற்றம் எனக் கூறி பஞ்சாயத்தை கூட்டினர்.

நடனமாடிய நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்களை கொல்லும் படி உத்தரவிட்டுள்ளனர். இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு, 40 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளனர்.

இதன் படி நான்கு பெண்களும் வீட்டிலிருந்து அழைத்து வரப்பட்டு, ஒரு இடத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தியை கேள்விப்பட்ட இரண்டு ஆண்களும் தப்பி விட்டனர். நடனமாடியவர்களுக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தண்டனை நிறைவேற்றப்படலாம் என்பதால், அவர்களின் உறவினர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர்.

இதையடுத்து கோகிஸ்தான் மாவட்ட போலீஸ் அதிகாரி அப்துல் மஜித், சீர்தய் கிராமத்துக்கு சென்று, அங்குள்ள கிராம பெரியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நான்கு பெண்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.co...&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

pak-290512-150.jpg

இந்த திருமண வீடியோவை, சீர்தய் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் சமீபத்தில் பார்த்தனர். தங்கள் கிராம பெண்கள் பக்கத்து கிராமத்தில் நடந்த விழாவில் நடனமாடிய காட்சிகளை கண்டு கொதித்தனர். நமது வழக்கப்படி ஆணும் பெண்ணும் சேர்ந்து நடனமாடுவது பெரிய குற்றம் எனக் கூறி பஞ்சாயத்தை கூட்டினர்.

நடனமாடிய நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்களை கொல்லும் படி உத்தரவிட்டுள்ளனர். இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு, 40 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளனர்.

இந்த பஞ்சாயத்து தலைவர்களுக்கு, அந்தப் பெண்கள் தங்களுடன் நடனமாடவில்லை என்ற, வயித்தெரிச்சலால்.... மரண தண்டனை விதித்துள்ளார்கள்.

நாட்டாண்மை... தீர்ப்பை மாத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பஞ்சாயத்து தலைவர்களுக்கு, அந்தப் பெண்கள் தங்களுடன் நடனமாடவில்லை என்ற, வயித்தெரிச்சலால்.... மரண தண்டனை விதித்துள்ளார்கள்.

நாட்டாண்மை... தீர்ப்பை மாத்து.

அவர்கள் பஞ்சாயத்து தலைவர்களுக்குடன் ஆடி இருந்தால் மனைவிகளாக்கி இருப்பார் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் பஞ்சாயத்து தலைவர்களுக்குடன் ஆடி இருந்தால் மனைவிகளாக்கி இருப்பார் :D

தன்ரை ஊரிலை, ஆடாமல்... வெளியூர் போய் ஆடினது தான்... நாட்டாண்மைக்கு கோவம் போலை.....

ஆரோ... குறுக்காலை போவார், 2 மாதத்துக்குப் பிறகு.. அந்த வீடியோவை நாட்டாண்மைக்கு காட்டிப் போட்டாங்கள். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்ரை ஊரிலை, ஆடாமல்... வெளியூர் போய் ஆடினது தான்... நாட்டாண்மைக்கு கோவம் போலை.....

ஆரோ... குறுக்காலை போவார், 2 மாதத்துக்குப் பிறகு.. அந்த வீடியோவை நாட்டாண்மைக்கு காட்டிப் போட்டாங்கள். :icon_idea:

அதுதான் முகத்தை துணியினால் மூடி உள்ளார்களே எப்படி அடையாளம் கண்டார்கள் ? :rolleyes::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் முகத்தை துணியினால் மூடி உள்ளார்களே எப்படி அடையாளம் கண்டார்கள் ? :rolleyes::D

சிந்திக்க வேண்டிய, மில்லியன் டொலர் கேள்வி தமிழரசு :rolleyes: .

ஆரோ... அப்பாவிக்கு, மரணதண்டனை கிடைக்கப் போகுதோ... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நடனமாடிய பெண்களின் கொலை குறித்து விசாரிக்க பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

Supreme-Court-of-Pakistan-8612-150.jpg

திருமணத்தின் போது நடனமாடிய, நான்கு பெண்கள் கொல்லப்பட்டது உண்மையா என்பது குறித்து, விசாரிக்கும்படி பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானின் கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்கு அரசை விட, கிராம ஊராட்சி தலைவர்களுக்குத் தான் செல்வாக்கு அதிகம்.

இங்குள்ள கோகிஸ்தான் மாவட்டத்தில் பண்டோ பைதார் கிராமத்தில், இரண்டு மாதங்களுக்கு முன் திருமண நிகழ்ச்சி நடந்தது. கிராமிய பாடல்கள் இசைக்க, திருமணத்துக்கு வந்த சில பெண்களும், ஆண்களும் நடனமாடினர். இவர்கள் நடனமாடிய காட்சிகள் எல்லாம் வீடியோவில் பதிவாகியிருந்தன.

இந்த திருமண வீடியோவை, சீர்தய் கிராம ஊராட்சி தலைவர்கள் சமீபத்தில் பார்த்தனர். தங்கள் கிராம பெண்கள் பக்கத்து கிராமத்தில் நடந்த விழாவில் நடனமாடிய காட்சிகளை கொண்டு கோபமடைந்தனர். நமது வழக்கப்படி, ஆணும், பெண்ணும் சேர்ந்து நடனமாடுவது பெரிய குற்றம் எனக் கூறி, பஞ்சாயத்தை கூட்டினர். நடனமாடிய நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்களை கொல்லும்படி உத்தரவிட்டுள்ளனர். இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு, 40 பேர் கொண்ட குழுவை அமைத்தனர்.

இதன்படி, நான்கு பெண்களும் வீட்டிலிருந்து அழைத்து வரப்பட்டு, ஒரு இடத்தில் கட்டி வைக்கப்பட்டனர். இந்த செய்தியை கேள்விப்பட்ட இரண்டு ஆண்களும் தப்பி விட்டனர். இதற்கிடையே நான்கு பெண்களும், ஜிசார் அலிட்ரே என்ற கிராமத்தில் கொல்லப்பட்டு விட்டதாக செய்தி வெளியாயின. இந்த சம்பவம் நடந்தது உண்மை தானா என்பது குறித்து, உடனடியாக விசாரணை நடத்தும்படி, போலீசாருக்கும், அரசுக்கும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர். மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் வேறொரு இடத்தில் தரையிறங்கியதால், பெண்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் கிராமத்துக்கு உடனடியாக செல்ல முடியவில்லை என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=61434&category=WorldNews&language=tamil

Link to comment
Share on other sites

வரலாறுகளில் கி.மு 2000 ஆண்டுகளுக்கு முன் கூட இப்படியான சம்பவங்கள் நடந்ததாக நான் கேள்விப்படவில்லை ...................

என்ன கோதாரி இது ................... :icon_mrgreen::icon_idea:

Link to comment
Share on other sites

பெண்கள் மீதான, இந்தச் சமூகத்தினது அடக்கு முறை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்தான்.

லண்டனைச் சுற்றியுள்ள புறநகர்களில் வாழும், இந்தப் சமூகப் பெண்களினது சுதந்திரத்தை மத்திய லண்டனில் வந்து பார்த்தால் தெரியும். :D

அடிப்படைவாதிகள் சுயமாகவே தூக்குப் போட்டுக் கொள்வார்கள்.

Link to comment
Share on other sites

சுபிறிம் கோட் டூப் விடாமல் வழக்கை விசாரிக்க வேண்டும். இதில் பொலிஸ் தேவை இல்லை. பஞ்சாயத்து தலைவர் கோட்டில் வந்து பதில் சொல்லவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் மீதான, இந்தச் சமூகத்தினது அடக்கு முறை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்தான்.

லண்டனைச் சுற்றியுள்ள புறநகர்களில் வாழும், இந்தப் சமூகப் பெண்களினது சுதந்திரத்தை மத்திய லண்டனில் வந்து பார்த்தால் தெரியும். :D

அடிப்படைவாதிகள் சுயமாகவே தூக்குப் போட்டுக் கொள்வார்கள்.

மிகவும் உண்மை, தப்பிலி!

பிறிக் லேனில, கொஞ்சக் காலம் வேலை செய்திருக்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கட பெண்கள் மீதான அடக்குமுறை பற்றி யாருமே அதிகம் அக்கறை செய்யுறதில்ல. எல்லாம் அல்காவின் பெயரால்.. நடந்துகிட்டு இருக்குது..! ஈழத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வரும் முஸ்லீம் பெண்களும் இப்ப எல்லாம் உடலை முற்றாக மூடினம். ஊரில வெறும் மொக்காடு போட்டவை இங்க ஈரானிய ஸ்ரைலில்..???! வரவர ஒரு மார்க்கமாத்தான் போய்க்கிட்டிருக்குது... இந்த வர்க்கம்..! :lol::D

பெண்கள் மீதான, இந்தச் சமூகத்தினது அடக்கு முறை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்தான்.

லண்டனைச் சுற்றியுள்ள புறநகர்களில் வாழும், இந்தப் சமூகப் பெண்களினது சுதந்திரத்தை மத்திய லண்டனில் வந்து பார்த்தால் தெரியும். :D

அடிப்படைவாதிகள் சுயமாகவே தூக்குப் போட்டுக் கொள்வார்கள்.

அதில் தான் எத்தனை அழகு. அதையேன் மறைப்பான் என்று அவை நினைக்கிறதில.. என்ன தப்பு தப்பிலி அண்ணா..! அழகை வெளிக்காட்டுவது அவங்கட சுதந்திரம்..! அதை எல்லை மீறாமல்.. ரசிப்பது மனிதர்களின் சுதந்திரம்..! அதையேன் அல்லாகு.. வந்து எல்லாம் தனக்கு மட்டும் தான்.. என்று தட்டிப்பறிக்கனும்..! :lol::D

Link to comment
Share on other sites

பிறிக் லேனில, கொஞ்சக் காலம் வேலை செய்திருக்கிறேன்!

உங்கட கற்பைக் காப்பாற்றக் கூடியதாக இருந்ததா புங்கையூரான்? :rolleyes::D

Link to comment
Share on other sites

இந்து சமயத்தில் கணவன் இறந்தால் உடன் கட்டை ஏறுவதில் இருந்து, மொட்டை அடித்து, வெள்ளைச் சேலை கட்டுவது வரை போன நூற்றாண்டு வரை இருந்த பழக்கம். இன்றும் பின் தங்கிய இந்திய வட மாநில கிராமங்களில் நடந்து வரும் ஒன்று. எல்லா சமயங்களுக்கும் முன் தோன்றிய இந்து சமயத்தில் இருந்த பழக்க வழக்கங்களை (காலத்தால் மூத்த) முற்றாக அகற்றவே பல ஆயிரம் ஆண்டுகள் தேவையென்றால் வயதில் இளைய இஸ்லாம் சமயத்தில் இருக்கும் இப்படியான விடயங்கள் அகலவும் பல்லாயிரம் ஆண்டு வாழ்வு வேண்டும். இன்று கனடாவில் முஸ்லிம் பெண்களின் கல்வியறிவும், கலாச்சார விடுதலையும் பெரும் அளவில் இருக்கு. அதே போல், பின் தங்கிய முஸ்லிம் இடங்களிலும் இந்த மாற்றம் வரும். அரபு நாடுகளிம் முன்னேறிய டுபாய், பஹ்றைன், குவைத் போன்ற நாடுகளே பல வழிகளில் கலாச்சார முன்னேற்றம் அடையும் போது மற்றவர்களும் மாறுவர்; ஒரு சில ஆயிரம் வருடங்களின் பின்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட கற்பைக் காப்பாற்றக் கூடியதாக இருந்ததா புங்கையூரான்? :rolleyes::D

அவங்களோட எப்ப பார்த்தாலும், ஒரு மசாலா மணமும் கூட இருக்கும்!

அண்டைக்கு, அதால தான், நம்ம கற்புத் தப்பியது! :D

Link to comment
Share on other sites

அவங்களோட எப்ப பார்த்தாலும், ஒரு மசாலா மணமும் கூட இருக்கும்!

அண்டைக்கு, அதால தான், நம்ம கற்புத் தப்பியது! :D

யாழ் புலனாய்வுத்துறை அறிக்கை: :rolleyes:

  • ஊரில் கள உறுப்பினர் காதலுக்கு இவர் சைவசமயப் பாடம் எடுத்தவர். :D
  • லண்டனில் பிறிக் லேனில் வேலை செய்தவர்.. இப்போது அவுஸில் இருக்கிறார். :lol:
  • புங்கையூரான் என்பதால் புங்குடுதீவு.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் புலனாய்வுத்துறை அறிக்கை: :rolleyes:

  • ஊரில் கள உறுப்பினர் காதலுக்கு இவர் சைவசமயப் பாடம் எடுத்தவர். :D
  • லண்டனில் பிறிக் லேனில் வேலை செய்தவர்.. இப்போது அவுஸில் இருக்கிறார். :lol:
  • புங்கையூரான் என்பதால் புங்குடுதீவு.. :icon_mrgreen:

புலனாய்வுத்துறையின் மேலதிக அறிக்கை.

யாழ் இந்துக் கல்லூரியின் விடுதியில்... தங்கிப் படிக்கும் போது, லைஃபோய் சவர்காரம் போட்டு குளித்தவர். :D:lol::icon_idea:

Link to comment
Share on other sites

புலனாய்வுத்துறையின் மேலதிக அறிக்கை.

யாழ் இந்துக் கல்லூரியின் விடுதியில்... தங்கிப் படிக்கும் போது, லைஃபோய் சவர்காரம் போட்டு குளித்தவர். :D:lol::icon_idea:

ஓ.. இந்த அநியாயம் வேறை நடந்திருக்கா??!! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.. இந்த அநியாயம் வேறை நடந்திருக்கா??!! :lol:

ஏம்பா... இசை,

குளிக்கும் போது, சவர்க்காரம் போடுவது.. அநியாயமா? :D

Link to comment
Share on other sites

ஏம்பா... இசை,

குளிக்கும் போது, சவர்க்காரம் போடுவது.. அநியாயமா? :D

அந்த சவர்க்காரம் கல்லுமாதிரி இருக்கும்.. :rolleyes: எங்கள் வீட்டு வளர்ப்புப் பிராணிக்குப் போட்ட ஞாபகம்.. :lol: அதுதான் ஒரு அதிர்ச்சி.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சவர்க்காரம் கல்லுமாதிரி இருக்கும்.. :rolleyes: எங்கள் வீட்டு வளர்ப்புப் பிராணிக்குப் போட்ட ஞாபகம்.. :lol: அதுதான் ஒரு அதிர்ச்சி.. :icon_mrgreen:

அடப்பாவி,

புங்கை வந்து, நம்மளுக்கு மொங்கப் போறார். :rolleyes::D

Link to comment
Share on other sites

அண்ணன் கற்பித்தது சைவம் - மனமோ

மசாலா தடவிய அசைவம்

உடம்புக்கு 'சன்லைட்'

உடைக்கு 'மில்க்வைட்' ............ :D

Link to comment
Share on other sites

இந்து சமயத்தில் கணவன் இறந்தால் உடன் கட்டை ஏறுவதில் இருந்து, மொட்டை அடித்து, வெள்ளைச் சேலை கட்டுவது வரை போன நூற்றாண்டு வரை இருந்த பழக்கம். இன்றும் பின் தங்கிய இந்திய வட மாநில கிராமங்களில் நடந்து வரும் ஒன்று. எல்லா சமயங்களுக்கும் முன் தோன்றிய இந்து சமயத்தில் இருந்த பழக்க வழக்கங்களை (காலத்தால் மூத்த) முற்றாக அகற்றவே பல ஆயிரம் ஆண்டுகள் தேவையென்றால் வயதில் இளைய இஸ்லாம் சமயத்தில் இருக்கும் இப்படியான விடயங்கள் அகலவும் பல்லாயிரம் ஆண்டு வாழ்வு வேண்டும். இன்று கனடாவில் முஸ்லிம் பெண்களின் கல்வியறிவும், கலாச்சார விடுதலையும் பெரும் அளவில் இருக்கு. அதே போல், பின் தங்கிய முஸ்லிம் இடங்களிலும் இந்த மாற்றம் வரும். அரபு நாடுகளிம் முன்னேறிய டுபாய், பஹ்றைன், குவைத் போன்ற நாடுகளே பல வழிகளில் கலாச்சார முன்னேற்றம் அடையும் போது மற்றவர்களும் மாறுவர்; ஒரு சில ஆயிரம் வருடங்களின் பின்

சாத்தீ, கற்பை இழந்தவளாக கருதப்படவளை கல்லால் எறிந்து கொல்லும் வழக்கத்தின் கிளை. கணவனை இழந்தவளை தீக்குள் போடும் பழக்கம், தீர்ப்பை தெரிந்த மனச்சாட்சியான இந்துப் பெண்களுக்கு, உறவினருக்கு தம்மை தீக்குள் போடும் உபாதையை வைக்காமல் தாமே தீக்குள் புகும் பழக்கத்தை தந்தது. இதற்கும் காதலில் தோற்றால் (ஆணும், பெண்ணும்) தற்கொலை செய்யும் அநாதி பழக்கத்திற்கும் தொடர்பில்லை. ஸ்பாட்டாவில், நாளந்த வாழ்க்கையாக, பெண்களை தனி பள்ளிகளில் வைத்திருந்து, புஸ்டியானவர்களை கொண்டுவந்து உறவுகொள்ள வைத்து முழு சமுதாயத்தையே வெறும் வீரர்களாக்க முயன்றார்கள். அநாதியான, பெண்களை அடிமைகொள்ளும் மேற்கு நாட்டு பழக்கம், முகமதியத்திற்கு மட்டும் புதியது என்றும், காளியும் கொற்றவையும் அரசிகளாக இருந்த திராவிட பண்பாடுகளில் பெண்களை மொட்டை அடித்தார்கள் என்பதும் மேலைநாட்டு புத்தகங்களை படித்துவிட்டு அதை திரும்ப ஒப்புவிப்பதால் வருவது. கண்ணகி காலம் வரைக்கும் சங்கக்கதைகளில் சாத்தீ முட்டும் பழக்கம் இருந்ததாக தெரியவில்லை. கண்ணகி உயிரை தக்க வைத்துக்கொண்டு (யவணர்களிடமிருந்தாயிருக்கலாம்) கள்ளவியாபாரங்களைக்கற்றுகொண்ட மதுரை நகரை திருத்தி அமைத்தாள். கோவலனின் இறப்புக்கு பிறகு அவனை கணவனாக வரித்துக்கொண்ட மாதவி தனக்கு சாதீமூட்டவில்லை. மாறாக தன் மகள் மணிமேகலையை துறவியாகினாள்.

இந்துசமயத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் படைடெடுப்புக்கள் மூலம் திணிக்கப்பட்டது. புத்தர் காலத்திற்கு முந்தைய நிர்வாண பெண்துறவிகளின் களிமன் சிலைகள் 2000 களில் கிளிநொச்சியில் கண்டு பிடிக்கப்பட்டது. இது இந்துசமயதிற்கு தலைமை தாங்கிய பெண் இனத்தின் அடிச்சுவடுகள் இவை. தனதத்தன், புனிதவதியை கண்டு பயந்து வீட்டை விட்டு சென்று மறைந்து வாழ்ந்ததும், புனித யோனை தீக்குள் போட்டு நாட்டை தூய்மை செய்ததும் இனங்களின் இயற்கையான நடத்தை. இது சமயங்கள் மீது போடப்படும் அநாவசிய பழி. யேசுவை கல்லெறிந்து ஒருபெண்ணை கொல்லும் படி நிர்ப்பந்தித்த போது அந்த மூடர்களிடமிருந்து எப்படி அந்த பெண்ணையும், தன்னையும் காத்து, மேலும் ஒரு படி மேலே சென்று அவர்களின் மனங்களையும் வென்றார் என்பது கிறிஸ்தவர்களுக்கு பள்ளிப்பாடம்.

மிக இளமையான சமையம் மிகச்சிறந்த நாகரீகத்தை உள்ளடக்கியிருக்க வேண்டும். மிக இளைய பகாய் சமயம் மற்றயவர்களின் தவறுகளைத் திருத்தமுயன்றதும் புத்தரும், மகாவீரரும் இந்துசமயத்தில், இடைக்கலத்தில், சிவனை விட ஆளுமை பெற்றிருந்த உருத்திரன், இந்திரன் போன்றோர்களால் திணிக்கபட்ட வேள்விகள், மடைகள்(feast), யாகங்களை எதிர்த்து, இந்துசமயத்தை மீட்டு, சிவனின் பாதைக்கு திரும்ப வைத்தார்கள் என்பதும் தான் உண்மைச்சரித்திரம். இதற்கு சமயம் முதியதாக இருக்க வேண்டும் என்பதல்ல தேவை. எந்தவகை ஆதிக்கம் உள்நுளைகிறது என்பதுதான் பிரதானம். ஆயிரம் வருடங்கள் காத்திராமல் தமிழ்நாடில் பெண்பள்ளி தொடங்கப்பட்டுவிட்டது

முகமதிய நாடுகளில்,பெண்களுக்கு, நாகரிக மேற்கத்திய கல்வி மறுக்கப்படுகிறது. ஆண்களுக்கு முகமதியகல்வி படிப்பிக்கபடுகிறது. சிறுமியாயிருந்த காக்கை பாடினியாள் சிறுவனாயிருந்த தொல்காப்பியனோடு, அருகருகில், ஒரேவகுப்பில் அமர்ந்திருந்து இருந்து கல்வி கற்ற மனநிலைக்கு அடிமைப்படுத்தபட்ட (உலகிலேயே முதல் பெண் பள்ளி வாசலைத்திறந்த) தமிழகமோ (உலகிலேயே முதல் மகளிர் படைகளை வைத்து நடத்திய) தமிழ் ஈழமோ இன்னும் வந்து சேரவில்லை. இந்த மனங்கள் மேலைநாட்டு ஆரியகல்வி மாயையை உண்மை என்று நம்பி மயங்கி போயுள்ளர்கள். போதனைகளில் மயங்குவதால் தன்னை யார் என்று உணரவும், தேறி உண்மை தெளியவும் தயங்குகிறார்கள். உலகத்திற்கு நாகரீகத்தை முதன்முதலில் கொண்டுவந்த இனம் சிந்தனை தெளிவில்லாமல் போலிகளை ஏற்பதை தவிர்க்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் கற்பித்தது சைவம் - மனமோ

மசாலா தடவிய அசைவம்

உடம்புக்கு 'சன்லைட்'

உடைக்கு 'மில்க்வைட்' ............ :D

:D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் கற்பித்தது சைவம் - மனமோ

மசாலா தடவிய அசைவம்

உடம்புக்கு 'சன்லைட்'

உடைக்கு 'மில்க்வைட்' ............ :D

எங்கடை பொடியளும் அடுக்குவசனம் எடுத்து விடுறாங்கள்...ராஜேந்தர் ...ம் பண்ணியில் பண்ணிப்பாருமன். :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.