Jump to content

சிங்களத்திற்கு பணிந்து போகுமாறு தந்தை செல்வாவிடம் பெரியார் சொன்னாராம்: நாம் தமிழர் கட்சியின் புதிய கண்டுபிடிப்பு


Recommended Posts

  • Replies 165
  • Created
  • Last Reply

[media=]

தமிழ்நாடு தமிழருக்கே_கொளத்தூர் மணி

திராவிடருக்கு அல்ல

Link to comment
Share on other sites

தமிழ் நாடு தமிழருக்கே என்பது தான் பெரியாரின் கோரிக்கை என்பதை பலதடவை எழுதியாகிவிட்டது.

ஒரே விடயத்தை மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டு இருக்க முடியாது.

யார் தமிழர் என்பதில் தான் பிரச்சினை இருக்கிறது.

வைகோ சுபவீ எல்லாரும் தமிழர் அல்ல என்றால் , தமிழ் நாட்டிலோ அல்லது ஈழத்திலோ ஒருவரும் தமிழ்ராக இருக்க முடியாது.

தமிழர் என்பதற்க்கு எதாவது இரத்தப் பரிசோதனை இருக்கிறாதா என்பதை ` நாம் தமிழரும் ` சீமானும்` இங்கு எழுதும் `இந்து மத` வெறியரும், மனு நீதியாளரும் தான் தெளிவு படுத்த வேண்டும்.

மேலே இணைதுள்ள காணொளிகள், எழுதிய கருத்துக்கள் என்பவற்றைக் கவனமாக கேட்டு,வாசித்த பின் கருதுக்களை எழுதவும்.

இல்லாவிட்டால் எல்லோருக்குமே நேரம் விரயமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் தமிழுக்கு முன்னுரிமை அளிக்கலாம் என முயல்கின்றார். அதில் என்ன தவறு இருக்கமுடியும். திராவிடம் தமிழுக்கு எதிரியில்லை என்கின்றனர். நல்லது. ஆனால் நேரடியாகத் தமிழுக்கு இவர்கள் முன்னுரிமை கொடுக்கும்போது ஏன் சீமான் மீது போர் தொடுக்கின்றீர்கள்.

பெரியாரைப் பின்னுக்கும் அவர் தள்ளியதாக இல்லை. அவர் சொன்ன இரண்டு விடயங்கள் தான் இவர்களுக்குப் பிரச்சனை. மேடைகளில் வள்ளுவனும்இ தேசியத் தலைவரின் படம் மட்டுமே தான் இருக்க வேண்டும் என்றது. இரண்டாவது தமிழ்த் தேசியவழியில் பயணிப்பது என்பது. இது எவ்வகையில் தவறாக முடியும்?

இவர்களுக்குத் தமிழ் மீதோ, தமிழ்த் தேசம் பற்றியோ கவலையில்லை. இவர்கள் காப்பாற்ற முயல்வது பெரியாரை மட்டும் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் தமிழர் கட்சி - Naam Tamilar

தமிழக அரசியல் இதழுக்கு மறுப்பு: செந்தமிழன் சீமான் அறிக்கை

06.06.2012 தேதியிட்ட தமிழக அரசியல் இதழில் “சீமானுக்கு எதிராக திரளும் கருப்புச் சட்டைகள்” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் கட்டுரையில், என்னிடம் பேட்டி எடுத்து, நான் கூறியதாக வெளியாகியுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவையாகும். அந்த செய்திக்... கட்டுரையை வெளியிட்ட கணேஷ் குமார் என்பவர் என்னிடம் எந்த ஒரு பேட்டியையும் எடுக்காமல், நான் கூறியதாக வெளியிட்டுள்ள தகவல்கள் பொறுப்பற்றவை, இதழியல் நெறிமுறைகளுக்கு புறம்பானவை.

நாம் தமிழர் கட்சி வெளியிட்ட ஆவணம் குறித்து தமிழக அரசியல் இதழில் இருந்து ஒருவரும் என்னோடு பேசவில்லை. அப்படியிருக்க, நான் சொல்லாததை சொன்னதாக அடைப்புக் குறிகள் போட்டு கூறியிருப்பது விசமத்தனமான செயலாகும். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உண்மைக்குப் புறம்பான இப்படியொரு செய்தியை வெளியிட்டுருப்பதற்கு உள்நோக்கம் உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

தந்தை பெரியாரின் சமூகப் பங்களிப்பை நாம் தமிழர் கட்சி பெருமையாக பரப்புரை செய்துவருகிறது. உண்மை இவ்வாறிக்க, தமிழின உரிமை இழப்பிற்கு பெரியாரே முதற்காரணம் என்று நான் கூறியதாக தமிழக அரசியல் இதழில் குறிப்பிட்டிருப்பது மோதலை உண்டாக்கும் உள்நோக்கம் கொண்டது என்பது மட்டுமின்றி, நாம் தமிழர் கட்சியின் பெருமையை திட்டமிட்டு சீர்குலைக்கும் செயலாகும்.

எனது இந்த மறுப்பை தமிழக அரசியல் இதழில் வெளியிடுமாறு இதழாசிரியரைக் கேட்டுக்கொள்கிறேன்.

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

Link to comment
Share on other sites

நாம் தமிழர் கட்சியின் அறிக்கையில் இருக்கும் எவை எவை தவறானவை என்று ஏற்கனவே எழுதியாயிற்று.

மேலும் சீமான் தெளிவாக தனது நிலைப்பாட்டை பெரியார் தொடர்பாக எழுதி உள்ளார்.

இடையில் சிலர் வந்து சீமானும், நாம் தமிழரும் சொல்லாத விடயங்களை குறிப்பாக பெரியாரை அவதூறு செய்யும் விதத்தில் எழுதினார்கள்.

இங்கே இவர்கள் தான் சீமானையும், நாம் தமிழரையும் தமது வழக்கமான பெரியார் மீதான காழ்ப்புணர்விற்காக , அவதூறான வகையில் பயன் படுத்தி இருந்தார்கள்.

இப்போது திருப்பி வந்து வந்து வேறு எதோ உளறிக் கொட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

இவர்கள் எழுதியவற்றை மீண்டும் படித்து விட்டு வருவது நல்லது.

// உண்மைக்குப் புறம்பான இப்படியொரு செய்தியை வெளியிட்டுருப்பதற்கு உள்நோக்கம் உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது./ேண்

இதனைத் தான் நாம் சீமானுக்கும் நாம் தமிழருக்கும் சொல்லிக் கொண்டுள்ளோம்.

உங்களது சில பிழையான பார்வைகள், சிலரால் வேண்டுமென்றே , உட் பகையை வளர்க்கப் பயன் படுத்தப்படுகின்றன.

இதில் இந்து மத வாதா சக்திகள், திராவிட திர்ப்புச் சக்திகள், இந்திய தேசிய சக்திகள் என தமிழரின் விரோதமான சக்திகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சதி நடவடிக்கையில் இறங்கி உள்ளன.இதற்க்கு ` நாம் தமிழரின்` அறிக்கை முரணான செய்திகளைச் சொல்லி களம் அமைத்து இருக்கிறது.

Link to comment
Share on other sites

சீமான் தமிழுக்கு முன்னுரிமை அளிக்கலாம் என முயல்கின்றார். அதில் என்ன தவறு இருக்கமுடியும். திராவிடம் தமிழுக்கு எதிரியில்லை என்கின்றனர். நல்லது. ஆனால் நேரடியாகத் தமிழுக்கு இவர்கள் முன்னுரிமை கொடுக்கும்போது ஏன் சீமான் மீது போர் தொடுக்கின்றீர்கள்.

பெரியாரைப் பின்னுக்கும் அவர் தள்ளியதாக இல்லை. அவர் சொன்ன இரண்டு விடயங்கள் தான் இவர்களுக்குப் பிரச்சனை. மேடைகளில் வள்ளுவனும்இ தேசியத் தலைவரின் படம் மட்டுமே தான் இருக்க வேண்டும் என்றது. இரண்டாவது தமிழ்த் தேசியவழியில் பயணிப்பது என்பது. இது எவ்வகையில் தவறாக முடியும்?

இவர்களுக்குத் தமிழ் மீதோ, தமிழ்த் தேசம் பற்றியோ கவலையில்லை. இவர்கள் காப்பாற்ற முயல்வது பெரியாரை மட்டும் தான்

அதே தான், தூயவன் திராவிடம் என்பது தமிழ் நாட்டிலும் தற்போது ஈழத்திழும் தமிழனின் அடையாளத்தை அழிக்கப் பாவிக்கும் ஒரு கருவி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை திசை திருப்ப பாவிக்கப்படும் ஒரு நுட்பம், எந்த சந்தர்ப்பத்தில் ஆவது புலிக்ளோ அல்லது மற்றைய போராளி குழுக்களோ ராமசாமியையும், திராவிடத்தையும் முன்னிலைப்படுத்தியதில்லை இன்னும் சொல்லப்போனால் ஈழத்தமிழன் வராற்றிலேயே இது நடந்தது இல்லை. அப்படி இருக்கும் போது நாம் கேட்க வேண்டிய கேள்விகள்1. ஏன் எம்முடன் சம்பந்தம் இல்லாத ஒரு பைத்தியக்கார கொள்கை ஒன்று எம்மீது திணிக்கப்படுகிறது2.இதை பின்னனியில் நின்று ஊக்குவிப்பவர்கள் யார்?3.இவர்களது குறிக்கோள் என்ன ?4.தமிழன் சிங்களவனுக்கு எதிராக தமிழ் ஈழம் வேண்டும் என் போராடும் போது ஏன் இது திராவிடம் எதிர் ஆரியமாக்கப்பட்டு திராவிடம் தான் இறுதிக் குறிகோள் என்ற மாயை ஏற்படுத்தப்படுகிறது ?5.திராவிட்த்தை பின்பற்றினால் ஈழம் வரும் என்று யாராவது கூறினார்களா?

Link to comment
Share on other sites

இதில் இந்து மத வாதா சக்திகள், திராவிட திர்ப்புச் சக்திகள், இந்திய தேசிய சக்திகள் என தமிழரின் விரோதமான சக்திகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சதி நடவடிக்கையில் இறங்கி உள்ளன.இதற்க்கு ` நாம் தமிழரின்` அறிக்கை முரணான செய்திகளைச் சொல்லி களம் அமைத்து இருக்கிறது.

இந்து மதவாதமோ, உங்களுக்கு தமிழன் கிறிஸ்த்தவ மதம் பின்பற்றினால் ஒரு பிரச்சனையும் வராது, இஸ்லாம் மதத்தை பின்பற்றினால் ஒரு பிரச்சனையும் வராது, ஆனால் இந்து மதத்தை பின்பற்றினால் மட்டும் கோபம் பொத்திக் கொண்டு வந்து விடும், இந்து மதம் தமிழனுக்குச் சொந்தமானது இல்லையாம், அப்படி என்றால் கிறிஸ்த்தவமும், இஸ்லாமும் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எப்பவாவது கேட்டது உண்டா, கோயிலுக்கு கல் எறிந்த பகுத்தறிவு வித்துவானகள் எப்பவ்வவது தேவலயத்துக்கோ அல்லது மசூதிகோ கல்லு எறிந்தது உண்டா?

Link to comment
Share on other sites

திராவிடம் என்பதுக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம் எண்டு திராவிடர்கள் தெளிவு படுத்தினால் சந்தோசம்...

இவர்கள் திராவிடர்கள் எண்று குறிக்கும் எந்த மக்களின் மொழியில் இருந்து திராவிட் எனும் சொல்வந்தது எண்றாவது தெளிவுபடுத்தினால் கூட மகிழ்ச்சி...

இண்டைக்கு லண்டனுக்குள் வந்திருக்கும் மகிந்த ராஜபக்ஸ்ச திராவிடனா ஆரியனா...???

Link to comment
Share on other sites

இந்து மதவாதமோ, உங்களுக்கு தமிழன் கிறிஸ்த்தவ மதம் பின்பற்றினால் ஒரு பிரச்சனையும் வராது, இஸ்லாம் மதத்தை பின்பற்றினால் ஒரு பிரச்சனையும் வராது, ஆனால் இந்து மதத்தை பின்பற்றினால் மட்டும் கோபம் பொத்திக் கொண்டு வந்து விடும், இந்து மதம் தமிழனுக்குச் சொந்தமானது இல்லையாம், அப்படி என்றால் கிறிஸ்த்தவமும், இஸ்லாமும் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எப்பவாவது கேட்டது உண்டா, கோயிலுக்கு கல் எறிந்த பகுத்தறிவு வித்துவானகள் எப்பவ்வவது தேவலயத்துக்கோ அல்லது மசூதிகோ கல்லு எறிந்தது உண்டா?

மதங்கள் மனிதன் உருவாக்கியவை. இதில் இந்து மதம் ஆரியரினால் உருவாக்கப்பட்டது.ஆரியரே சாதிய கட்டுமானத்தை வகுத்தனர். கிரிதுவ மதமோ இசுலாமிய மதமோ வேறு எந்த மததிலோ சாதியக் கட்டுமானம் வகுக்கப்படவில்லை. அதனாலையே சாதியதைத் தாக்கினால் உங்களுக்கு இந்து மதத்தை தாக்குவதாக உணருகிறீர்கள். இந்தியாவிற்க்குள் வந்த இந்து மதம் கிரிதுவ மதம் இசுலாமிய மதம் எல்லாம் வெளியில் இருந்து வந்தவையே.இந்தியாவிற்க்குள் உருவாகிய சமண,பவுத்த , சைவ ,உலகாயித முதலிய அழிந்து போன மதங்களும் உண்டு.

கோவிலுகு யார் கல்லெறிந்தார்கள்? சிதம்பரத்தில் பார்ப்பனர் அல்லாத ஒதூவார் பாடுவதற்க்கும், சாதியில் குறைந்த மக்கள் கோவில் சென்று வழி படுவதற்க்கும் போராடியவர் பெரியார்.பெரியாரே கோவில்களுக்கு தர்மகர்த்தாவாக இருந்தவர். ஒருவருக்கு கடவுள் நம்பிக்கை இருப்பது இல்லாது இருப்பது ஒரு புறம் இருக்கட்டும், ஒருவனை தாழ்த்தும் ஒரு மதத்தை ,பிறப்பால் தன்னை உயர்த்திக் கொள்ளும் கேவலத்தை மாற்ற வேண்டமா?

இவ்வாறு மத்தைச் சீர்படுதினால் தானே மத மாற்றங்களைத் தடுக்க முடியும்?

அதைக் கூடச் செய்யாமல் , அசுததை சுத்தப்படுத்தாமல் , வெறுமனே பெரியாரை கிழ்மைப் படுத்துவதால் எதனையுமே நீங்கள் சாதிக்கப் போவதில்லை.

Link to comment
Share on other sites

மேலே இருக்கும் காணொளிகளில் திராவிடம் என்றால் என்ன என்பதையும் ,திராவிட் என்ற சொல்லின் தோற்றம் பற்றியும், அது ஏன் பாவிக்கப்படுகிறது என்பது பற்றியும் குளத்தூர் மணி அவர்கள் விளக்கி உள்ளார் அதனைக் கேட்டு விட்டு , அதில் எதாவது சந்தேகங்கள் விளக்கங்கள் தேவை என்றால் கேட்கலாம்.

இங்கே எவர் மீதும் எதுவும் திணைக்கப்படவில்லை. சிலர் தமது தெளிவின்மையாலும், தமது அறிவிலித் தனத்தாலும், எழுதப்படும் கருதுக்களை வாசித்து உள்வாங்காமலும், மேலுள்ள காணொளியைப் பார்க்காமலும் எழுதினால் , அ ஆவென்ன என சொல்வதற்கோ எழுதுவதற்கோ எனக்கு நேரமில்லை.

மேலும் பதில் சொன்னவற்றிகு திருபித் திருப்பி பதில் சொல்லிக் கொண்டும் இருக்க முடியாது.

நியாயமான கேள்விகளுகும் சந்தேகங்களுக்கும் மட்டுமே பதில் தரப்படும்.

அவதூறுகளை எழுதுபவர்கள் தமக்குள் இருக்கும் அழுக்குகளைக் கொட்டி விட்டுப் போங்கள்.உங்களால் கருத்தியல் ரீதியாக எதனையும் சொல்ல முடியாது என்னும் இயலாமையைக் காட்டி விட்டுச் செல்லுங்கள்.

இதை நான் ஆமோதிக்கின்றேன். பார்ப்பனியம் என்பதுபோன்று திராவிடம் ஒரு சித்தாந்தமாக எனக்குப் பட்டதில்லை. திராவிடத்தை ஆதிக்க எதிர்ப்பு சக்திகளுக்கு ஆதரவாகப் பாவிக்கமுயன்றால், திராவிடக் கட்சித் தலைமைகளின் மேட்டுக்குடித்தனத்திற்கு எதிராகத்தான் முதலில் பாவிக்கவேண்டும்!

நிச்சயமாக திராவிடக் கட்சிகள் என்று சொல்லிக் கொண்டு இயங்கும் வியாபாரிகளுக்கு எதிராகப் பாவிக்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் முரண்பாடு இல்லை.இதனைத் தான் நாங்கள் வலியுறுதுகின்றோம்.

Link to comment
Share on other sites

நாம் தமிழர் கட்சி இணையத் தள பாசறை சார்பாக வெளியிடப்படும் அறிவிப்பு.

இணையத்தளம் என்கிற மாபெரும் கட்டற்ற வெளி சமீப காலத்தில் மாபெரும் விவாத களமாக திகழ்கிறது. எவ்வித கட்டுப்பாடும், ஒழுங்கமைவும் இல்லாமல் வெளியிடப்படுகின்ற பல்வேறு விதமான தவறான கருத்துக்களின் காரணமாக தேவையில்லாத கருத்துக் குழப்பங்களும், திரிப்புகளும் ஏற்பட்டு விடுகின்றன.மேலும் பல்வேறு புனைப்பெயர்களில் தமிழினத்திற்கும் நம் அமைப்பிற்கும்... எதிராக இருப்பவர்களும் ,இயங்குபவர்களும் பல விவாதங்களில் ஊடுருவி நம் அமைப்பிற்கு ஆதரவாக எழுதுவது போல எழுதி தங்களுடைய தவறான கருத்துக்களை நம் அமைப்புத் தோழர்களின் கருத்துக்கள் போல வெளியிடுகிறார்கள் என அறிகிறோம். இதனால் தவறான புரிதல்கள் பல ஏற்பட்டு விடுகின்றன. குறிப்பாக திராவிடம் – தமிழ்த்தேசியம் கருத்தியல் முரண் குறித்து எழும் விவாதங்களில் தவறான நபர்கள் சிலரால் தந்தை பெரியார் குறித்து வெளியிடப்படும் சில கருத்துக்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கவனாக இருக்கின்றன. அவைகளுக்கும் எம் அமைப்பினை சார்ந்தவர்களுக்கும், எம் அமைப்பிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என இதன் மூலம் அறிவிக்கிறோம். இது போன்ற சதிச்செயல்கள் குறித்து நம் அமைப்பினை சார்ந்தவர்கள் கவனமாகவும், விழிப்புணர்வோடும் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். அறிவுலக ஆசான் தந்தை பெரியாரை நாம் தமிழர் கட்சி தனது வழிகாட்டியாக அறிவித்து இருக்கிறது. சமூகத்தளத்தில் அவர் ஆற்றிய அளப்பரிய பணிகளை கட்சி தன் ஆன்மாவில் ஏந்தி களத்தில் நிற்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் அறிவித்து இருக்கிறார்கள். எனவே இணையத்தளங்களில் இயங்கும் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் தனது உண்மையான விவரங்களுடன் இயங்கும்படி கேட்டுக் கொள்கிறோம். மேலும் போலிப் பெயர்களில் இயங்கும் போலிகள் குறித்து மிக கவனமாகவும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும் எனவும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. நம் கட்சியின் சார்பாக கட்சியின் அதிகாரப்பூர்வ பொறுப்பாளர்கள் தவிர மற்றவர்களால் வெளியிடப்படும் கருத்துக்கள் எவையும் கட்சியின் கருத்துக்கள் அல்ல என்பதையும், அவைகளுக்கும் கட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதையும் இதன் மூலம் அறிவிக்கிறோம்.

மணி செந்தில்,

சே.பாக்கியராசன்,

பொறுப்பாளர்கள்.

நாம் தமிழர் கட்சி

இணையத்தள பாசறை.

முக நூலில் இருந்து.

Link to comment
Share on other sites

இதில் இந்து மதம் ஆரியரினால் உருவாக்கப்பட்டது.ஆரியரே சாதிய கட்டுமானத்தை வகுத்தனர். கிரிதுவ மதமோ இசுலாமிய மதமோ வேறு எந்த மததிலோ சாதியக் கட்டுமானம் வகுக்கப்படவில்லை. அதனாலையே சாதியதைத் தாக்கினால் உங்களுக்கு இந்து மதத்தை தாக்குவதாக உணருகிறீர்கள். இந்தியாவிற்க்குள் வந்த இந்து மதம் கிரிதுவ மதம் இசுலாமிய மதம் எல்லாம் வெளியில் இருந்து வந்தவையே.இந்தியாவிற்க்குள் உருவாகிய சமண,பவுத்த , சைவ ,உலகாயித முதலிய அழிந்து போன மதங்களும் உண்டு.

இது போன்ற முற்றிலும் தவறான கருத்தின் மூலம் போலித் திராவிடம் இயங்குகிறது!

தமிழ் கலாச்சாரம், பண்பாடுகள், வரலாறுகள் அழிக்கப்படுகின்றன!

போலித் திராவிட இயக்கங்களுக்கான பாரிய நிதியுதவி நீண்டகாலமாக இந்து (சைவ) அல்லாத மத அமைப்புக்களினால், இந்து (சைவ) மதத்தத்தை இழிவுபடுத்தும் வேலைகளுக்காக வழங்கப்பட்டது.

மதவாதத்தை எதிர்க்கும் போலித் திராவிடர்கள் தம்புள்ளை பள்ளிவாசல் விடயத்தில் சென்னை தூதரகத்தின் முன்னர் உடனடியாகவே ஆர்ப்பாட்டம் நடாத்தினர் என்பது தெரியாது என யாரும் நடிக்க முடியாது. செய்வதை செய்துவிட்டு ஒரு அறிக்கையை விட்டு ஏமாற்ற முயற்சிப்பதற்கு ஈழத் தமிழர் இரையாகக் கூடாது. ஆனால் இவர்கள் உருத்திரபுரம், கேதீஸ்வரம் கோவில்களில் சிங்களப் பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்பை கண்டுகொள்வதில்லை.

Link to comment
Share on other sites

நாம் தமிழர் கட்சியின் உள்ளே இசுலாமிய பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகமானால் - மீண்டுமொருமுறை ஈழத் தமிழர் பாரிய பின்னடைவுகளை சந்திக்க வேண்டி வரலாம்.

ஈழத் தமிழர் சார்பான நிலையை வைத்து தமிழகத்தில் இசுலாமிய இயக்கங்கள் தம்மை வளர்த்துக்கொள்ள முனைவதாக தகவல்கள் உள்ளன.

நாம் தமிழர் கட்சி ஈழத்தில் தமிழின விரோத இஸ்லாமிய வெறியர்களான மௌலவிகளை, ஹக்கீம், ரிஷாத் போன்ற தமிழின விரோதிகளை, சிங்கள போர்குற்றவாளிகளுக்கு ஆதரவாக - தமிழினப் படுகொலைகள் இல்லையென ஆர்ப்பாட்டங்கள் செய்த இஸ்லாமிய வெறியர் கும்பலுக்கு எதிராக, சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக நின்ற பாகிஸ்தான் முதலான இஸ்லாமிய நாடுகளுக்கெதிராக தொடர் (நீண்டகால) போராட்டங்களை நடாத்தட்டும் (ஓரிரு அறிக்கைகள் அல்ல). அப்போது அவர்களின் இஸ்லாம் சாராத, திராவிட முகமூடி அணியாத தன்மை புலப்படும்.

Link to comment
Share on other sites

திராவிட முகமூடி அணிந்த கொலைஞர் கருநாய்நிதி கும்பல் ஈழத்தமிழர்களை நீண்டகாலம் ஏமாற்றியது, திராவிட முகமூடி அணிந்த ஜெயலலிதாவும் ஒருகாலத்தில் ஈழத்தமிழர்களை ஏமாற்றியவரே (தற்போது பிராயச்சித்தமாக சில வேலைகளை செய்கிறார் - வரும் காலம் தான் உண்மைநிலையை உணர்த்தும்), திராவிட முகமூடி அணிந்த வீரமணியும் பலவருடங்கள் தடம் மாறினார்.

கொளத்தூர் மணி உட்பட இன்னும் பலரை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் - இங்கு அது அவசியமில்லை.

பெரும்பாலான திராவிட இயக்க முக்கியஸ்தர்களின் குடும்பத்தினரே கோவிலுக்குச் செல்பவர்கள், சமயச் சடங்குகளைச் செய்பவர்கள் (இது அவரவர் தனிப்பட்ட உரிமை - எனவே இதை ஒரு குறை என கூறமுடியாது).

திராவிட முகமூடி அணிந்த நெடுமாறன் ஈழத்தமிழரின் மேல் உண்மையான பாசம் வைத்துள்ளவர், நேர்மையானவர். இதை மறுக்க முடியாது. ஆனால் ஈழத்தமிழர் ஆதரவு மேடையில் பார்ப்பனிய எதிர்ப்பு என்ற போர்வையில் இந்து மதத்தை இழிவுபடுத்தவும் அவர் ஒரு போதும் தயங்கியதில்லை இதனால் அவர் செய்த நன்மைகளை விட ஏற்படுத்திய பாதகங்கள் பல பல மடங்கு (நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அயல் நாட்டில், தமிழ் நாட்டில் இந்து சமய நம்பிக்கை உடையவர்களே 80 % ஆனவர்கள்). அவர் இரண்டையும் ஒரே மேடையில் செய்யாது விட்டிருந்தால் ஈழத் தமிழருக்கு உளப்பூர்வமான ஆதரவை திரட்டியிருப்பார்.

வைகோ ஒருவரே ஈழத் தமிழர் பிரச்சினையில் முடிந்தவரை வேறெதுவையும் கலக்காமல், அவதானமாக, நிதானமாக - இன்றுவரை ஈழத்தமிழர் பிரச்சினையை கையாண்டு வருகிறார். அதானால் தான் அவரை டெல்லியிலும் மதிக்கிறார்கள். இன்னுமொரு மதிப்புக்குரியவர் கோவை ராமகிருஷ்ணன்.

எனவே திராவிடம் பேசுபவர்கள் - தமது போலி முகங்களை அகற்றி - எந்த மதவாதமும் (ஈசுலாமிய, கிறிஸ்தவ, இந்து ...) கலக்காமல் பேசட்டும். சாதியை, ஏற்றத்தாழ்வுகளை இல்லாது ஒழிக்கட்டும். சகல மதங்களும் இதையே போதிக்கின்றன. ஆனால் எல்லா மதத்தவரிடமும் சாதி, ஏற்றத்தாழ்வுகள் உண்டு என்ற உண்மையை மறைத்து ஈனப் பிழைப்பு நடாத்த முனைபவர்களை நாம் அடையாளம் காண வேண்டும்.

ஈழத்தமிழர் ஆதரவு விடயத்தில் - நெடுமாறன், சீமான் உட்பட பலரும் வைகோ, ராமகிருஷ்ணன் போன்றவர்களிடம் நிறையக் கற்க வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.